என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிக்கை"

    • இதில் இந்தியா 62.6 மதிப்பெண் பெற்றுள்ளது.
    • சில சர்வாதிகார போக்கு நிலவும் நாடுகள் கூட பேச்சு சுதந்திரத்தில் இந்தியாவை விட நல்ல நிலையில் உள்ளன.

    பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் குறித்து 33 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா 24வது இடத்தைப் பிடித்துள்ளது . அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் 'Future Free Speech' என்னும் அமைப்பு பேச்சு சுதந்திரம் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் இந்தியா 62.6 மதிப்பெண் பெற்றுள்ளது.

    பட்டியலில் நார்வே (87.9), டென்மார்க் (87.0), ஹங்கேரி (85.5) ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. ஹங்கேரி (85.5) மற்றும் வெனிசுலா (81.8) போன்ற சில சர்வாதிகார போக்கு நிலவும் நாடுகள் கூட பேச்சு சுதந்திரத்தில் இந்தியாவை  விட நல்ல நிலையில் முன்னிலையில் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

    மேலும் அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகளில் மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அரசின் கொள்கைகளை விமர்சிப்பது குறித்த பேச்சு சுதந்திரம் உலக சராசரியைக் காட்டிலும் இந்தியாவில் குறைவாகவே உள்ளது. தனிப்பட்ட பேச்சு, ஊடகம் மற்றும் இணையம் தொடர்பான தணிக்கை ஆகியவை இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

    • மதுரை வரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
    • மதுரை விமான நிலையத்திற்கு நாளை (29-ந் தேதி) மாலை 5 மணிக்கு வருகிறார்.

    அவனியாபுரம்

    பசும்பொன் முத்துராம லிங்க தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு மதுரை விமான நிலையத்தில் சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்றும், இதில் தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும், வடக்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான பி.மூர்த்தி, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 30-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை, மாமன்னர் மருது சகோதரர்களின் ஜெயந்தி விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு நாளை (29-ந் தேதி) மாலை 5 மணிக்கு வருகிறார்.

    இந்த சிறப்பு மிக்க விழாக்களில் பங்கேற்க வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் இருவண்ண கொடியினை கையில் ஏந்தி வரவேற்பு கொடுக்கும் வகையில் மதுரை வடக்கு மாவட்டம், மதுரை மாநகர் மாவட்டம் மற்றும் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க.வினர் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக்கழக, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பா ளர்கள், துணை அமைப்பா ளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி செயலாளர்கள், கழக முன்னோடிகள், கழகத்தி னர் என பெரும்பாலானோர் பங்கேற்று வரவேற்பு நிகழ்ச்சியினை சிறப்பிக்கு மாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் 25-ந்தேதி நடக்கிறது.
    • அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்கு மாறு வேண்டுகிறோம்.


    உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது குறித்து மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கோ. தளபதி எம்.எல்.ஏ. பேசினார். அருகில் நிர்வாகிகள் பொன்.முத்துராமலிங்கம், குழந்தைவேலு, வேலுச்சாமி, ஜெயராம், அக்ரி.கணேசன், ஒச்சுபாலு, தனசெல்வம் உள்ளனர்.

    ..........................

    மதுரை

    மதுரையில் வருகிற 29-ந் தேதி தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.

    இதுகுறித்து மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்-அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளாம் இளைஞர் எழுச்சி தினத்தை முன்னிட்டு பிரமாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

    இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    இந்த விழாவை தென் மாவட்டமே வியக்கும் வகையில் சிறப்பாக நடத்துவது குறித்து ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு பாண்டி கோவில் பின்புறம், மதுரை சுற்றுச்சாலையில் அமைந்துள்ள துவாரகா பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    இதில் மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, பேரூர் செயலாளர்கள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊரா ட்சிக்கழக செயலாளர்கள், தொண்டர்கள் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்கு மாறு வேண்டுகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.
    • இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க தமிழ கத்தில் கடந்த 1½ ஆண்டு காலமாக பொதுமக்களை பல்வேறு வகைகளில் வாட்டி வதைக்கும் தி.மு.க. அரசு சமீபத்தில் சொத்து வரி உயர்வு, ஆவின் பால் விலை உயர்வு, மின்கட்டணம் உயர்வு என்பது போன்ற அத்தியாவசிய தேவைகளின் வரிகளை, விலைகளை அதிக அளவில் உயர்த்தி பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது.

    இந்த கட்டண உயர்வு களை திரும்ப பெற்றிட வலியுறுத்தி மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை முனிச்சாலை சந்திப்பில் (தினமணி தியேட்டர்) நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பகுதி, வட்ட நிர்வாகிகள், முன்னோடிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக பங்கேற்று மக்கள் விரோத தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்ட அன்புடன் வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பெரியார்-எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு அ.தி.ம.மு.க. சார்பில் மரியாதை வருகிற 24-ந்தேதி நினைவு தினம் செலுத்தப்படுகிறது.
    • அதைப் போல தமிழகம் முழுவதும் கட்சி சார்பில் பெரியார், எம்.ஜி.ஆர். ஆகியோரின் நினைவு தினத்தை கடைபிடித்திட வேண்டுகிறேன்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

    பகுத்தறிவு பகலவன், ஈரோட்டு வேங்கை மூட நம்பிக்கை எனும் முடைநாற்றத்தை அடியோடு ஒழித்த தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினமும், ஏழைகளின் ஒளி விளக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு தினமும் வருகிற 24-ந்தேதி அனுஷ்டிக்கப்படுகிறது.

    இந்த இருபெரும் தலைவர்களுக்கு வீர வணக்கமும், புகழ் அஞ்சலியும் அ.தி.ம.மு.க. சார்பில் கடைப்பிடிக்கப்படும், அவைத்தலைவர் தாஜுதீன் தலைமையில், துணைப்பொது ச்செயலாளர்கள் நெல்லை முத்துக்குமார், ஈரோடு செந்தில் குமார் ஆகியோர்கள் முன்னிலையில் கழகப் பொதுச்செயலாளாராகிய நானும், கழக தலைமை நிலையச் செயலாளர் முரளி ஆகியோர் சென்னையில் உள்ள பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் நினைவு அஞ்சலி செலுத்துவார்கள். பின்பு கொளத்தூரில் முதன்மைச் செயலாளர் அகரம் சீனிவாசன் ஏற்பாடு செய்துள்ள அன்னதான நிகழ்ச்சி நடத்தப்படும்,

    பின்னர் பொருளாளர் பி.கே.மாரி ஏற்பாடு செய்துள்ள அன்னதான நிகழ்ச்சி சென்னை பூக்கடை பஜாரில் பகல் 12மணிக்கு நடத்தப்படும், அதன் பின்பு சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.ம.மு.க. சார்பில் புகழ் அஞ்சலி செலுத்தப்படும்,

    இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன், அதைப் போல தமிழகம் முழுவதும் கட்சி சார்பில் பெரியார், எம்.ஜி.ஆர். ஆகியோரின் நினைவு தினத்தை கடைபிடித்திட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ரூ.11,274 கோடி கடன் ஆற்றல் உள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இது 2022-23-ம் ஆண்டை விட 44.16 சதவீதம் அதிகமாகும்.

    நாமக்கல்:

    நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடன் திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டு பேசியதாவது,

    தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி, நாமக்கல் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து, அதன் மூலம் ரூ.11,274 கோடி கடன் ஆற்றல் உள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இது 2022-23-ம் ஆண்டை விட 44.16 சதவீதம் அதிகமாகும்.

    விவசாயத்தில் நீண்ட கால கடன் அளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை திட்டம் விளக்குகிறது. அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்திற்கு 2023-24-ம் ஆண்டு பயிர் கடன் ரூ.4961.95 கோடி, விவசாய முதலீட்டு கடன் ரூ.1238.07 கோடி, விவசாய கட்டமைப்பு கடன் ரூ.115.34 கோடி, இதர விவசாய கடன்கள் ரூ.136.90 கோடி, விவசாயத்துக்கான கடன் மொத்த மதிப்பீடு ரூ.6452.27 கோடியாகவும், சிறுகுறு நடுத்தர தொழில் கடன் ரூ.3657.75 கோடி, ஏற்றுமதி கல்வி மற்றும் கடன் வசதிக்கான கடன் மதிப்பீடு ரூ.294.79 கோடி ஆகும்.

    அடிப்படை கட்டுமான வசதிக்கான கடன் ரூ.66 கோடி ஆகும். மகளிர் சுய உதவி குழு மற்றும் கூட்டு பொறுப்பு குழுக்கான கடன் ரூ.757.80 கோடி என அனைத்து துறைகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.11,274 கோடி கடன் ஆற்றல் உள்ளது என மதிப்பீடு செய்து அதற்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற கடன் வசதிகள் விவசாயத்தில் அடிப் படை கட்டுமான வசதிகளை பெருக்கி விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்ற உதவும்.

    வேளாண்மையில் எந்திரமயமாக்கல் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும். வங்கிகள் இது போன்ற முதலீடுகளுக்கு துணையாக இருக்க வேண்டும். அனைத்து வங்கிகளும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடன் அளவில் முறையாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அப்போது, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி செயலாளர் ரமேஷ், முன்னாடி வங்கி மேலாளர் சதீஷ்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • கவர்னர் தமிழகம் என்று குறிப்பிட்டதில் தவறில்லை என பா.ஜ.க. ராம. சீனிவாசன் அறிக்கை வெளியிட்டார்.
    • இதில் திராவிடம் என்ற தேவையற்ற இனவாதத்தை தி.மு.க. தான் கலப்படம் செய்து வருகிறது.

    மதுரை

    தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் ராம. சீனிவாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்பது பொருத்தமானது என்று கவர்னர் ரவி சொன்னதை வைத்து, தி.மு.க. வினரால் பெரிய கருத்து மோதல் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்தத் தருணத்தில் நான் சில கருத்துக்களை முன் வைக்க விரும்புகிறேன். முதலில் தமிழ்நாடு என்ற வார்த்தை, இலக்கி யங்களில் இல்லை. தொல்காப் பியத்தில் தமிழ்நாட்டின் வட எல்லையாக இமயமலையும், தென் எல்லையாக கடலும் சொல்லப்பட்டுள்ளது.

    இந்தியாவின் முதல் தேசிய கவியான பாரதியார் முதன்முதலில் தமிழ்நாடு என்று குறிப்பிட்டார். 'கல்வி சிறந்த தமிழ்நாடு, உயர் கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்ற பாடல் வரிகளை தமிழுக்கு அறிமுகப் படுத்தியவர் பாரதிதான். அதற்கு முன்னதாக இந்த வார்த்தை எங்கும் இல்லை.

    நாம் அன்றாடம் பாடும் தமிழ்தாய் வாழ்த்தில் கூட, தமிழ்நாடு என்று இல்லை. 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்றுதான் வரிகள் உள்ளன. 1950-ம் ஆண்டுக்கு முன்பு இந்தப் பகுதி, சென்னை மாகாணம் என்று தான் அழைக்கப்பட்டது. தமிழ்நாடு என்பதே அண்மைக்கால கருத்தாக்கம்தான்.

    முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா வில் பேசும்போது, 'ஏ தாழ்ந்த தமிழகமே' என்று தான் குறிப்பிட்டார். இதே தலைப்பில் அண்ணா சொற்பொழிவு புத்தகமாகவும் வந்துள்ளது. கருணாநிதியும் எழுத்துக் களில் ஆயிரக்கணக்கான இடங்களில் தமிழக என்கிற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். ஆனால் இதையே ஒரு கவர்னர் சொல்லும் போது அவர்கள் பொங்கி எழுகிறார்கள்.

    அண்ணா தாழ்ந்த தமிழ கமே என்று சொல்லும் போது வராத கோபம், கவர்னர் தமிழகம் என்று சொல்லும் போது ஏன் வருகிறது? கவர்னர் என்ன பேசி னாலும் எதிர்ப்பது என்பது தான், ஆளுங்கட்சியின் வழக்கமாக உள்ளது. சட்டமன்றத்தில் கவர்னர் பேசும்போது உரையின் நிறைவாக ஜெய்ஹிந்த் என்றும், ஜெய் தமிழ்நாடு என்றும் சொல்லி ஒரு புதிய மரபை தோற்றுவித்தவர்.

    ஆகவே தமிழ்நாடு என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியது, தமிழுக்கு என்று ஒரு மாநிலத்தை உருவாக்கியது, தமிழகம் என்றும் அழைக்கலாம் என்று புரிய வைப்பது தேசியவாதிகள் தான்.

    இதில் திராவிடம் என்ற தேவையற்ற இனவாதத்தை தி.மு.க. தான் கலப்படம் செய்து வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா வருகிற 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.
    • தொண்டர்கள், கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.அசோக்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா வருகிற 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    அன்றைய தினம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்பாக கொண்டாடிட வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    எனவே கட்சியின் இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், சார்பு அமைப்பு நிர்வாகிகள், கிளை கழக பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், தொண்டர்கள், கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை நினைவு நாளையொட்டி அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க அ.தி.மு.க.வினர் திரளாக வர வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மேலான ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை நெல்பேட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவசிலைக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    இந்தநிகழ்ச்சியில் இந்நாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு அண்ணாவுக்கு புகழஞ்சலி செலுத்த அன்புடன் வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வு குறித்து அறிக்கை வெளியிடுவேன் என ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.
    • மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன், அய்யப்பன் எம்.எல்.ஏ., உள்பட பலர் உடனிருந்தனர்.

    மதுரை

    மதுரை விமான நிலையத்திற்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வருகை தந்தார். அவரிடம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வு படிவம் குறித்து நிருபர்கள் கேட்டனர்.

    இதற்கு பதில் அளிக்க மறுத்த ஓ.பி.எஸ். மாலை 3 மணிக்கு மேல் இதுகுறித்து அறிக்கை வெளியிடுவேன் என்று தெரிவித்தார்.

    மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன், அய்யப்பன் எம்.எல்.ஏ., முருகேசன், மாநில இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன், வி.கே.எஸ்.மாரிசாமி, பி.எஸ்.கண்ணன், பேரவை குணசேகரன், சோலை இளவரசன், ராமநாதன், ஆட்டோ கருப்பையா, அர்ஜுன், கிரி உள்பட பலர் உடனிருந்தனர்.

    • நாளை மதுரைக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமி 51 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடியேற்றுகிறார்.
    • ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை

    அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    1½ கோடி தொண்டர் களின் எண்ணத்தை நனவாக்கும் வகையில், கழக பொதுக்குழு உறுப்பினர் களால் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுத லோடு அ.தி.மு.க சிறப்பாக பணியாற்றி வருகிறது. அம்மா வழியில் சட்ட போராட்டம் நடத்தி, துரோகிகளின், விரோதி களின் சதி செயல்களை முறியடித்து, புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வெற்றி யின் சின்னமான இரட்டை இலையை மீட்டெடுத்து உள்ளார்.

    அ.தி.மு.க.விற்கு மாபெரும் வெற்றி வரலாறு படைக்கும் வகையிலும், இரட்டை இலை சின்னம் கிடைத்ததை கொண்டாடும் வகையிலும் நாளை (10-ந்தேதி) மதியம் 1 மணிக்கு இடைக்கால பொதுச் செய லாளர் எடப்பாடி பழனி சாமி, தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில், திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள, கூத்தியார் கூண்டு பகுதியில் 51 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தில் கழக கொடியினை ஏற்றி வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா (நான்) தலைமை தாங்குகிறேன். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ராஜ் சத்யன் ஆகியோர் வரவேற்புரையாற்று கிறார்கள். பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் நன்றி கூறுகிறார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில், மேளதாளம் முழங்க, தாரை தப்பட்டை எதிரொலிக்க, பெண்கள் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    வரவேற்பு நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் மட்டுமல்லாது, பொது மக்களும் பங்கேற்கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருச்சி மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும் என மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி அறிக்கை விடுத்துள்ளார்
    • தமிழக முதல்வர் மு.க.ஸ்டா–லின் தன்னுடைய 70-வது பிறந்த நாளான நாளை சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலை–ஞர் அரங்கில் தி.மு.கழகத்தினர் அனைவரின் வாழ்த்து–களை ஏற்றுக் கொள்கிறார்.

    திருச்சி:

    திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. செயலா–ளர் க.வைர–மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப–தாவது:-தி.மு.க. தலைவரும், திராவிட மாடல் ஆட்சி நடத்தி இந்தியாவிற்கே வழி–காட்டியாக திகழும் திராவிட நாயகனும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டா–லின் தன்னுடைய 70-வது பிறந்த நாளான மார்ச் 1-ந்தேதி புதன்கிழமை அன்று சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலை–ஞர் அரங்கில் தி.மு.கழகத்தினர் அனைவரின் வாழ்த்து–களை ஏற்றுக் கொள்கிறார்.

    அன்று மாலை அகில இந்திய அளவிலான அனைத் துக்கட்சி தலைவர் கள் கலந்து கொள்ளும் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடை–பெறவிருக்கின்றது. இவ்விரு நிகழ்ச்சிகளிலும் திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட, மாநகர, அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை கழக, நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநி–திகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள், சட்ட மன்ற உறுப்பினர்கள்,

    மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், செயல் வீரர்கள் உள்ளிட்ட அனை–வரும் பெருந் தி–ரளாக கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.மேலும், தலைவரின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு நமது மாவட்டம் முழுவதும் மாவட்ட, மாநகர அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக் கழகத்தின் சார்பில் கழக கொடி கம்பங்களை புதுப் பித்தும் இருவண்ண கொடியேற்றியும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மார்ச் மாதம் முழுவதும் சிறப்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து எழுச்சியுடன் தலை–வர் அவர்களின் பிறந்த நாள் விழாவினை கொண் டாட வேண்டுமென கேட் டுக்கொள்கின்றோம்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


    ×