என் மலர்
நீங்கள் தேடியது "அதிகரிப்பு"
- தற்போது அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் சேலம் மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது.
- 40 முதல் 60 டன்னாக இருந்த வெங்காயம் வரத்து , தற்போது 100 டன்னாக அதிகரித்துள்ளது.
அன்னதானப்பட்டி:
சேலம் மார்க்கெட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா மாநிலம் கர்னூல், கர்நாடகா மாநிலம் தரிக்கெர, சித்ரதுர்கா உள்ளிட்ட இடங்களிலிருந்து வெங்காய மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
தற்போது அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் விளைச்சல் அதிகமாக இருப்பதால் சேலம் மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. சேலம் கடைவீதி ,ஆற்றோரம் தெரு, ஆனந்தா காய் மார்க்கெட், பால் மார்க்கெட் பகுதிகளில் கடந்த மாதம் தினமும் 40 முதல் 60 டன்னாக இருந்த வெங்காயம் வரத்து , தற்போது 100 டன்னாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பெரிய வெங்காயம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
தற்போது பெரிய வெங்கா யத்தில் சிறிய அளவு 1 கிலோ ரூ.25-30 எனவும், பெரிய அளவு ரூ.35-40 எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சின்ன வெங்காயம் விளைச்சல் குறைந்துள்ளதால் அதன் விலை அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.15-20 வரை விற்பனை ஆன தற்போது ரூ.40-60 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது என வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.
- மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் வட கிழக்கு பருவ மழையால் ஓரளவு மழை பொழிவு பெறும் பகுதியாக உள்ளது.
- மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
உடுமலை:
தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவ மழையானது தற்போது தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒரே நாளில் நீர் மட்டம் 2 அடி உயர்ந்து 83 அடியாக உள்ளது.
மழை மறைவு பகுதியாக உள்ள திருப்பூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை 630 மி.மீ முதல் 680 மி.மீட்டராகும். மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழையின் மூலம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகள் சாரல் மழை மூலம் சற்று அதிக மழை பொழிவு பெற்று வரும் பகுதியாகவும், மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் வட கிழக்கு பருவ மழையால் ஓரளவு மழை பொழிவு பெறும் பகுதியாக உள்ளது.
இதன் காரணமாக ஒரே சீரான மழை பொழிவு இரு பருவ மழையின் போதும் கிடைக்காத ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் உள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் அதிக மழை பெறும் பகுதிகளில் இருந்து வரும் ஆறுகளை நம்பி அமைந்துள்ள அணைகளில் இருந்து கால்வாய் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பாசனம் பெற்று வருகிறது. இதற்கு பிஏபி, எல்பிபி பாசனங்கள் எடுத்துக் காட்டாக உள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர் ,கரூர் மாவட்டத்தில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற்று வருகிறது. அணையின் மொத்த நீர் தேங்கும் உயரம் 90 அடியாகவும், கொள்ளளவு 4 டிஎம்சி.யாகவும் உள்ளது. மேலும் பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 83அடியை தாண்டியுள்ளது. அணைக்கு 2078 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. ஒரேநாளில் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. இதனால் பாசனப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- கடும் குளிர் காலநிலையிலும் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
- சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
அன்னதானப்பட்டி:
சேலம் பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
கடந்த மாதம் ரூ.1200 வரை என விற்கப்பட்டு வந்த மல்லி இன்று கிலோவுக்கு ரூ.600 வரை விலை குறைந்து ரூ.600 என விற்கப்பட்டு வருகிறது. அதே போல ரூ.600 க்கு விற்ற முல்லை ரூ.200வரை விலை குறைந்து இன்று ரூ.400 என விற்கப்படுகிறது. மற்ற ரக பூக்களின் விலையும் கணிசமாக சரிந்துள்ளது.
சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (1 கிலோவுக்கு) வருமாறு :-
மல்லிகை- ரூ.600, முல்லை- ரூ.400, ஜாதி மல்லி- ரூ.280, காக்கட்டான்- ரூ.200, கலர் காக்கட்டான் - ரூ.200, சி.நந்தியா வட்டம் - ரூ.180, சம்மங்கி- ரூ.15, சாதா சம்மங்கி- ரூ.30, அரளி- ரூ.150, வெள்ளை அரளி- ரூ.150, மஞ்சள் அரளி- ரூ.150, செவ்வரளி- ரூ.180, ஐ.செவ்வரளி- ரூ.180, நந்தியா வட்டம்- ரூ.180. தற்போது ஐப்பசி மாத நிலவரப்படி குளிர் காலநிலை நிலவுகிறது.
வருகிற கார்த்திகை, மார்கழி மாதங்களில் கடும் குளிர் காலநிலை நிலவும். அதற்கடுத்து தை மாதம் பொங்கல் பண்டிகை வரை பூக்கள் விற்பனை சீசன் நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.
- அணை நிரப்பப்பட்டு பாசனத்திற்காகவும் மற்றும் குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
- திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
உடுமலை:
உடுமலை அருகே திருமூர்த்தி அணை மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணைக்கு சர்க்கார் பதியிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் காண்டூர் கால்வாய் வழியாக 43 கிலோமீட்டர் பயணித்து திருமூர்த்தி அணையை வந்தடைகிறது. இதன் மூலம் அணை நிரப்பப்பட்டு பாசனத்திற்காகவும் மற்றும் குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது. திருமூர்த்தி அணைக்கு மேல் பகுதியில் திருமூர்த்தி மலை மீது பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த அருவியில் நீர்வரத்து இருக்கும் .பருவமழை காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை யின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதோடு அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலை சுற்றிலும் ஓடும் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். தற்போது திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- கார்த்திகை மாத அமாவாசையொட்டி சேலத்தில் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
- கோவில்கள், வீடுகளில் பூஜைக்காக அதிகளவில் பயன்படுத்துவதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
அன்னதானப்பட்டி:
சேலம் பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இன்று கார்த்திகை மாத அமாவாசையையொட்டி கோவில்களுக்கும், வீடுகளில் சாமிக்கு பூஜைகள் செய்து படைக்கவும் பூக்கள் அதிகளவில் மக்கள் வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக சேலத்தில் உள்ள பூ , மார்க்கெட்டுகளில் அதிகாலை முதலே பூக்கள் விற்பனை களை கட்டியது.
சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (1 கிலோ கணக்கில்):-
மல்லிகை - ரூ.1000, முல்லை - ரூ500, ஜாதி மல்லிகை - ரூ.280, காக்கட்டான் - ரூ.280, கலர் காக்கட்டான் - ரூ.240, சி.நந்தியா வட்டம் - ரூ.80, சம்மங்கி - ரூ.50, சாதா சம்மங்கி - ரூ.50, அரளி - ரூ.220, வெள்ளை அரளி - ரூ.220, மஞ்சள் அரளி - ரூ.220, செவ்வரளி - ரூ.240, ஐ.செவ்வரளி - ரூ.240, நந்தியா வட்டம் - ரூ.80, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து வருகிற வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமையில் விற்பனை நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- பெருஞ்சாணி அணை மீண்டும் திறப்பு
- திற்பரப்பு அருவியில் சிறுவர்கள் உற்சாக குளியல்
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நகர் பகுதிகளில் மழை ஓய்ந்திரு ந்தாலும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
நேற்று திருவட்டார், அருமனை பகுதிகளில் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சுருளகோடு பகுதியில் 25 மில்லி மீட்டரும் பெருஞ் சாணி அணைப் பகுதியில் 22.4 மில்லி மீட்டரும், புத்தன் அணை பகுதியில் 20.8 மில்லி மீட்டரும் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது. பேச்சிப்பாறை அணைப் பகுதியில் 4.8, கன்னிமாரில் 4.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
இந்த மழையின் காரண மாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.பேச்சிப்பாறை அணைக்கு 821 கனஅடி நீரும், பெருஞ்சாணி அணைக்கு 243 கனஅடி நீரும், சிற்றாறு-1 அணைக்கு 157 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது.
இதனை கருத்தில் கொண்டு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்ப டுவது நேற்று நிறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் இன்று அணையில் இருந்து மீணடும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
- கடந்த ஜூலை மாதம் இந்த கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- இந்த கோவிலில் மாவட்ட இந்து அறநிலையத்துறை சார்பாக தினமும் மதியம் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முக்கியமான கோவில்களில் திருவட்டார் ஆதிகேசவ பெரு மாள் கோவில் ஒன்றாகும்.
கடந்த ஜூலை மாதம் இந்த கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு தினமும் கேராளவில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தினமும் வருகை தருகிறார்கள். இதனால் காலை, மாலை வேளைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. நேற்று விடுமுறை நாளையொட்டி பக்தர்கள் காலையில் இருந்தே வருகை தந்தார்கள். தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு சென்றுவிட்டு வரும்போது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். பக்தர்கள் ஒற்றை கால்மண்டபத்தில் நின்று சாமி தரிசனம் செய்கிறார்கள்.
இந்த கோவிலில் மாவட்ட இந்து அறநிலையத்துறை சார்பாக தினமும் மதியம் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் வருவதால் அன்னதானத்தை சுமார் 300 நபர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
- 1 கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்கப்பட்டது.
- முல்லை கிலோ ரூ.2000, கனகாம்பரம் ரூ.1500, ஜாதிப்பூ ரூ.1500-க்கு விற்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான கடைகள் உள்ளன. இந்த சந்தைக்கு தமிழகத்தின் திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக பூக்கள் கொண்டுவரப்படும்.
இதே போல் இங்கிருந்தும் வெளி மாவட்டங்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படும். பூக்களின் விலை அவ்வப்போது ஏற்றம் இறக்கத்துடன் காணப்படும்.
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருவதாலும், அவ்வப்போது மழை பெய்து வருவதாலும் பூக்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக மல்லிகை பூக்களின் மொட்டுக்கள் கடும் பனியால் செடியிலேயே கருகி உள்ளது. பூக்களின் விளைச்சல் பாதிப்பால் தஞ்சை பூச்சந்தைக்கு பூக்களின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. இதனால் அவற்றின் விலையும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 1 கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்கப்பட்டது. இன்று இரண்டு மடங்கு அதிகரித்து கிலோ ரூ.2000 வரை விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல் முல்லை கிலோ ரூ.2000, கனகாம்பரம் ரூ.1500, ஜாதிப்பூ ரூ.1500-க்கு விற்கப்பட்டது.
இது குறித்து வியாபாரி சந்திரசேகரன் கூறும்போது, தற்போது கடும் பனி நிலவி வருவதால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. மேலும் நாளை வளர்பிறை முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகம் உள்ளது . இதன் காரணமாக விலை அதிகரித்துள்ளது என்றார்.
- தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 14ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகை சீசன் சமயத்தில் வெல்லத்தின் தேவை அதிகரித்து வரும்.
- சேலம் மாவட்டத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 டன் வரை வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
அன்னதானப்பட்டி:
சபரிமலை சீசன் மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி சேலத்தில் வெல்லம் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்தில் ஓமலூர், காமலாபுரம், நாலுகால்பாலம், டேனிஷ்பேட்டை, கருப்பூர், வெள்ளாளப்பட்டி, தேக்கம்பட்டி, பேளூர், தும்பல், உள்ளிட்ட பகுதிகளில் 130–-க்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை அதன் விவசாயிகள் சேலம் அன்னதானப்பட்டி, மூலப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள வண்டிக்காரன் நகர் பகுதியில் கரும்பு வெல்லம் உற்பத்தி விவசாயிகள் சங்கத்தில் பொது ஏலத்தில் விட்டு வருகிறார்கள். இங்கு ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் ஏலம் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் சபரிமலை கோவில் சீசன் கடந்த மாதம் 16- ம் தேதி தொடங்கியது. அய்யப்ப சாமிக்கு அரவணை, அப்பம், பாயாசம், பஞ்சாமிர்தம், பானகம் போன்ற பிரசாதங்கள் நிவேதிக்கப்படுகிறது. இதனால் வெல்லத்தில் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் சேலம் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் வெல்லம் உற்பத்தி வழக்கத்தைவிட 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
மேலும் தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 14ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகை சீசன் சமயத்தில் வெல்லத்தின் தேவை அதிகரித்து வரும். இதனால் உற்பத்தியாளர்கள் வெல்லம் உற்பத்தியை அதிகரித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் உற்பத்தியாகி இங்கு வரும் வெல்லத்தை சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை, திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஏலம் மூலம் வாங்கிச் செல்கின்றனர்.
சேலம் மாவட்டத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 டன் வரை வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் மார்க்கெட்டுக்கு வழக்கமாக 60 முதல் 70 டன் வரை வெல்லம் விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக 80 முதல் 100 டன் வரை வெல்லம் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது.
நேற்றைய விலை நிலவரப்படி 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் குண்டு வெல்லம் ரூ.1230 முதல் ரூ.1290 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனையில் ஒரு கிலோ வெல்லம் ரூ.41- ரூ.43 என விற்கப்படுகிறது. கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருப்பதால் கடந்த மாதத்தை விட இந்த மாதத்தில் 30 முதல் 40 சதவீதம் வரை வெல்லம் விற்பனை அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகை சீசன் வரை விற்பனை மும்முரமாக நடைபெறும். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.
- தமிழ்நாட்டில் முதன்முதலாகச் சேலம் பகுதியில் தான் மரவள்ளிக் கிழங்குச் சாகுபடி செய்யப்பட்டது.
- மரவள்ளிக்–கிழங்குகள் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் விளைவிக்கப்படும் மரவள்ளிக்கிழங்குகள் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சேகோ ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அன்னதானப்பட்டி:
சேலம் மாவட்டத்துக்கும் மரவள்ளிக் கிழங்குக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. தமிழ்நாட்டில் முதன்முதலாகச் சேலம் பகுதியில் தான் மரவள்ளிக் கிழங்குச் சாகுபடி செய்யப்பட்டது.
மரவள்ளிக்கிழங்கைப் பதப்படுத்தி ஜவ்வரிசி, கோந்து, ப்ரக்டோஸ் சாறு போன்றவற்றைத் தயாரிக்கிற தொழிற்சாலைகளில் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.
தமிழகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ண கிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மரவள்ளிக்–கிழங்குகள் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் விளைவிக்கப்படும் மரவள்ளிக்கிழங்குகள் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சேகோ ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அங்கு மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, ஸ்டார்ச் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நடப்பாண்டு 2 பருவமழையும் நல்ல முறையில் பெய்து, கை கொடுத்துள்ளது. இதனால் கடந்தாண்டை விட இந்தாண்டு மரவள்ளிக்கிழங்கு விளைச்சல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 10 லட்சம் ஏக்கருக்கு மேல், மரவள்ளிக்–கிழங்குகள் பயிர் செய்யப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி நடக்கும். இது ஓராண்டு கால பயிராகும். பொதுவாக மரவள்ளிக்கிழங்கு விளைச்சலுக்கு பெரிய அளவில் தண்ணீர் தேவைப்படாது. 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்டினால் போதும். ஒரு ஏக்கருக்கு 5 டன் வரை விளைச்சல் கிடைக்கும்.
தற்சமயம் அறுவடை செய்யப்பட்ட மரவள்ளிக்–கிழங்குகளை விவசாயிகள் சேகோ ஆலைகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். நடப்பாண்டில் பருவமழை நன்றாக கை கொடுத்துள்ளதால் மரவள்ளிக்கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்தாண்டை விட இந்தாண்டு 20 சதவீதம் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதே சமயம், கடந்த சில ஆண்டுகளாக மரவள்ளிக்கு உரிய விலை கிடைப்பதில்லை. சேகோ ஆலை அதிபர்கள் சிண்டிகேட் அமைத்து விலை நிர்ணயம் செய்து வருகின்றனர்.
இதனால் இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண, மரவள்ளிக்கிழங்குக்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்கின்றனர் விவசாயிகள். மேலும் கப்பகிழங்கு (மரவள்ளி), கட்டஞ்சாயா (தேயிலை சுடுநீர்) ஆகியன கேரளா மக்கள் விரும்பி உண்ணும் பண்டமாகும். தமிழக மரவள்ளிக்கிழங்கு சுவை காரணமாக கேரளாவுக்கு தொடர்ந்து அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து 25 சதவீதம் கிழங்குகள் கேரளாவுக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் காரணமாக விற்பனையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
- மதுரை கோட்ட ரெயில்வே வருமானம் 80 சதவீதம் அதிகரித்துள்ளது.
- மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
மதுரை ரெயில்வே கோட்டத்தின் மொத்த வருமானம் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை 80.67 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் பயணிகள் வருமானம் ரூ.280.80 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு 78 சதவீதம் அதிகரித்து ரூ.502.05 கோடி வருமானம் ஈட்டப் பட்டுள்ளது. அதேபோல கடந்த ஆண்டு ரூ.191.44 கோடியாக இருந்த சரக்கு போக்குவரத்து வருமானம் 27 சதவீதம் அதிகரித்து, நடப்பாண்டில் ரூ.242.60 கோடியாக உயர்ந்துள்ளது.
மதுரை கோட்ட ரெயில்களில் கடந்த ஆண்டு 9.2 மில்லியன் பேர் பயணம் செய்தனர். இந்த ஆண்டு அதன் எண்ணிக்கை 24.1 மில்லியனாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு பயணச்சீட்டு இன்றி பயணம் செய்தவர்களிடம் ரூ.654.41 லட்சம் வசூலிக்கப்பட்டது. நடப்பாண்டில் பயணச்சீட்டு இல்லாத, டிக்கெட் இன்றி வர்த்தக சரக்குகள் கொண்டு சென்ற, ரெயிலில் புகை பிடித்த, ரெயில் நிலையத்தை அசுத்தப்படுத்தி யவர்களிடம் இருந்து ரூ.834.12 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரெயில்களில் 21 ஆயிரத்து 358 டன் சரக்குகளும், சரக்கு ரெயில்களில் 2.20 மில்லியன் டன் சரக்குகளும் கையாளப்பட்டு உள்ளன.
மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
- சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருமணங்கள் நடைபெற்றது. இதனால் பூக்கள் விற்பனை இன்று அமோகமாக நடைபெற்றது.
- சேலம் பூ சந்தையில் இருந்து தினமும் சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள், பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பூக்கள் வாங்கி செல்கின்றனர்.
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.உ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இதைத்தவிர பழைய பஸ் நிலையத்தை யொட்டி மேலும் ஒரு பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுகளுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், காடையாம்பட்டி, மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இதைத்தவிர தரும புரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும், பெங்களூருவில் இருந்தும் பூக்கள் கொண்டு வரப்படுகிறது.
சேலம் பூ சந்தையில் இருந்து தினமும் சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள், பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பூக்கள் வாங்கி செல்கின்றனர்.
இந்த நிைலயில் தை மாதத்தில் திருவிழாக்கள், பல்வேறு சுப நிகழ்ச்சிகள், திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் வருகிற 5-ந்தேதி தைப்பூசம் பண்டிகை தினமாகும். இதனால் பூக்கள் தேவை அதிகரித்துள்ளது.
இதனிடையே இன்று சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருமணங்கள் நடைபெற்றது. இதனால் பூக்கள் விற்பனை இன்று அமோகமாக நடைபெற்றது.
இன்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்கப்பட்டது. இதுபோல் ஜாதி மல்லிகை ரூ.800-க்கும், காக்கட்டான் ரூ.320-க்கும், கலர் காக்காட்டான் ரூ.320, மலை காக்கட்டான் - ரூ.240, சாதா சம்பங்கி ரூ.80, உயர் ரக சம்பங்கி ரூ.50, அரளி -ரூ.70, வெள்ளை அரளி ரூ.70, மஞ்சள் அரளி- ரூ.70, செவ்வரளி ரூ.140, ஐ.செவ்வரளி-ரூ.100, நந்தியாவட்டம் ரூ.150, சி.நந்தியாவட்டம் ரூ.400, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டது.