என் மலர்
நீங்கள் தேடியது "நாகர்கோவில்"
- முட்டை வழங்குவது தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
- அரை மணிநேர தாமத்திற்கு பிறகு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு பல்வேறு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களில் பயணிகளின் வசதிக்காக உணவு தயாரித்து வழங்கும் பெட்டிகள் (பேண்டரி கார்) இணைக்கப்பட்டு இருக்கும்.
இந்த பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள், ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளிடம் ஆர்டர் பெற்று உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர்.
இதேபோல் ரெயில்களில் ஏ.சி. பெட்டியில் பயணம் செய்பவர்களுக்கு உதவ ஊழியர்களும் பணியில் உள்ளனர். இவர்கள் கம்பளி, போர்வை ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.
நேற்று கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகருக்கு மாலை 5.25 மணிக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதில் பணியில் இருந்த உணவக ஊழியர் ஒருவருக்கும், ஏ.சி. பெட்டியில் பணியாற்றும் ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அவர்கள் பயணிகளை பற்றி கவலைப்படாமல் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் ரெயில் 5.40 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கும் சில பயணிகள் ரெயிலில் ஏறினர். அப்போதும் ஊழி யர்கள் மோதல் நின்ற பாடில்லை. இதனை மற்ற ரெயில்வே பணியாளர்கள் யாரும் கண்டு கொள்ள வில்லை.
தொடர்ந்து நாகர்கோவில் சந்திப்பு நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்டது. ஆனால் சில வினாடிகளில் அந்த ரெயில் நடுவழியில் நின்றது. சந்திப்பு ரெயில் நிலையத்துக்கும், ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட் பகுதிக்கும் இடையே ரெயில் நின்றதால், ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினரும், ரெயில்வே போலீசாரும் விரைந்து சென்று ரெயில் நின்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது ஓடும் ரெயிலில் மோதலில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ஆதரவாக அவர்கள் பணிபுரியும் பிரிவைச் சேர்ந்த மேலும் 2 பேர் வந்ததும், அவர்கள் ஒருவருக்கொருவர் கை கலப்பில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டதாலும் ரெயிலில் பயணம் செய்தவர்களில் சிலர், அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் ரெயில் நின்றது தெரியவந்தது.
இது தொடர்பாக மோதலில் ஈடுபட்ட ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முட்டை வழங்குவது தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஏ.சி. பெட்டியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் திப்ரூ கரை சேர்ந்த தீப் கோகாய் (வயது28), அயன் கோகாய் (28) மற்றும் உணவக பிரிவில் பணியாற்றும் மேற்கு வஙகாளத்தை சேர்ந்த தபான் மொண்டல் (30), பீகாரை சேர்ந்த கைப் (20) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் பின்னர் கைதான 4 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.
இந்த சம்பவம் காரணமாக சுமார் அரை மணிநேர தாமத்திற்கு பிறகு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது. ரெயிலில் பணி யாற்றிய ஊழியர்கள் மோதல் காரணமாக நடு வழியில் ரெயில் நிறுத்தப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
+2
- புத்தன்அணை திட்டம் செயல்பாட்டிற்கு வரும் போது தினமும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- மேயர் மகேஷ் தகவல்
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநக ராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் இன்று மாநகராட்சி கூட்டரங்கில் நடந்தது.
கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆணையர் ஆனந்த்மோகன், மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார் மற்றும் அதிகாரிகள் முன்னி லை வகித்தனர். கூட்டத்தில் மண்டல தலைவர்கள் ஜவகர், முத்துராமன், செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சி லர்கள் ஸ்ரீலிஜா,அக்சயா கண்ணன், டி.ஆர். செல்வம், ரமேஷ், அய்யப்பன், நவீன் குமார், அனிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கவுன்சிலர் கள் கூறியதாவது:-
ஒழுங்கினசேரி சந்திப்பு முதல் கோட்டார் போலீஸ் நிலையம் வரை உள்ள அவ்வை சண்முகம் சாலையில் உள் சாலையில் இருபுறமும் உள்ள கழிவு நீர் ஓடையை தூர்வாரி நடை மேடை அமைத்து இருபுறமும் தடுப்பு வேலி அமைக்க வேண்டும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் பல இடங்களில் மின் விளக்குகள் எரிய வில்லை. சரி செய்ய பல முறை கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்கவில்லை.
நாகர்கோவில் மாநக ராட்சி பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரி கட்டுவதில் விலக்கு அளிக்க வேண்டும்.50-வது வார்டுக்கு உட்பட்ட முகிலன்விளை பகுதியில் ஆய்வு பணிகள் மேற்கொள் ளப்பட்ட பிறகும் கழிவுநீர் ஓடை சீரமைக்கப்பட வில்லை. அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள திட்டங்களை செயல்படுத்த கவுன்சிலர்களை ஒருங்கி ணைத்து கமிட்டி அமைக் கப்பட்டுள்ளது. அந்த கமிட்டி இதுவரை கூட்டப் படவில்லை.
மாநகராட்சி கவுன்சிலுக்கு புதிய சட்டம் இயற்ற அதிகா ரம் இருக்கிறது. அதை பயன்படுத்தி ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் தங்க ளது வார்டுகளில் ரூ.50 ஆயிரம் அளவிலான சின்ன சின்ன வேலைகள் செய்ய அதிகாரம் சட்டத்தை இயற்ற வேண்டும். வேலைகள் செய்து முடித்த பிறகு அதற்கான பில்லை வழங்க வேண்டும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள 52 வார்டு களிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
சவேரியார் ஆலயத்தில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடைக்காக தோண் டப்பட்டு மூடப் பட்டுள்ள மூடிகள் சாலை யின் மட்டத்தை விட மேல் உள்ளது. இதனால் விபத்துக்கள் அந்த பகுதியில் அடிக்கடி நடந்து வருகிறது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெங்கம் புதூர் ஆளுர் பேரூராட்சிகள் நாகர்கோவில் மாநக ராட்சியுடன் இணைக் கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் தற்போது தண்ணீர் கட்டணம் மாநகராட்சி யுடன் ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது. அதை மறுபரிசீலனை செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு கூறினார்கள்.
இதற்கு பதில் அளித்து மேயர் மகேஷ் கூறுகையில், நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ஒவ்வொரு வார்டாக ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தூய்மை பணிகள் மேற்கொண்டு வருகிறோம். இதைத் தொடர்ந்து அனைத்து பணிகளும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகர்கோவில் மாநகரப் பகுதிக்கு வருகிற 2-ந் தேதி அமைச்சர் நேரு வருகை தர உள்ளார். அவரிடம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு அதிக நிதி ஒதுக்குவது தொடர்பாக கவுன்சிலர் அனைவரும் ஒன்றிணைந்து மனு அதிக நிதி பெற வேண்டும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் 4 மண்டல அலுவலகங்களை திறக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இன்னும் ஒரு மாத காலத்திற்குள் மண்டல அலுவலகம் திறக்கப்படும். ஏற்கனவே இரண்டு இடங்களை ஆய்வு செய்துள்ளோம்.
மேலும் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு மண்டல அலுவலகத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம். மற்றொரு இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அதன் பிறகு அனைத்து கமிட்டி களையும் கூட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் மேல் குற்றம் சாட்டும் போது ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்ட கூடாது. ஆதாரத்துடன் குற்றச்சாட்டினால் அந்த அதிகாரி மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
புத்தன்அணை திட்டம் செயல்பாட்டிற்கு வரும் போது தினமும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
தொடர்ந்து மேயர் மகேஷ் பேசுகையில், நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள அனைத்து தெரு விளக்குகளும் மாற்றப்பட்டு எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட உள்ளன. இதற்காக ரூ.14 கோடியே 34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
- கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது
- கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான சுமார் 47 கடற்கரை கிராமங்களை இணைக்கும் வகையில் சாலை மற்றும் பாலங்கள் அமைக்கப்பட வேண்டும்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தின் போது பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு அதிகாரிகள் அந்தந்த துறைகளின் சார்பில் பதிலளித்திருந்தனர்.
கூட்டத்தில் மீனவர்கள் பேசியதாவது:-
கடலோர கிராமங்களில் உள்ளாட்சி வார்டுகளை ஒழுங்குப்படுத்தி வாக்காளர் எண்ணிக்கையை முறைப் படுத்த வேண்டும், கன்னியாகுமரி ஆரோக்கிய புரம் முதல் நீரோடி வரையிலான சுமார் 47 கடற்கரை கிராமங்களை இணைக்கும் வகையில் சாலை மற்றும் பாலங்கள் அமைக்கப்பட வேண்டும்.
குளச்சல் முதல் மண்டைக்காடுபுதூர் வரை உள்ள ஏ.வி.எம். சானலை தூர்வார வேண் டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவ டிக்கையும் எடுக்கப்ப டாமல், ஏற்கனவே அளித்த பதில்களையே அதிகாரிகள் வந்து கூறுகி றார்கள்.
பெரிய காடு மீன வர் கிராமத்தில் போடப் பட்டுள்ள தூண்டில் வளைவை சீரமைத்து 100 மீட்டர் நீளத்திற்கு நீட்டித்து தர வேண்டும். பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மிடாலம் கடற்கரை பகுதிகளை மிடாலம் ஊராட்சியுடன் இணைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அதிகாரிகள் பேசி யதாவது:-
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 47 கடற்கரை கிராமங்களை இணைக்கும் வகையில் புதிய சாலை மற்றும் பாலங்கள் அமைத்திடும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கான டெண்டர் ஏற்கனவே இரண்டு மூன்று முறை போடப்பட்டு இன்னும் ஒப்பந்த முடிவு செய்யப்படாமல் இருக்கிறது. விரைவில் இந்த ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமிருந்து எந்த ஒரு முறையான உத்தரவும் இன்னும் வரவில்லை. அவ்வாறு உத்தரவு வரப்பெற்றால் வாக்காளர் பட்டியல் மற்றும் வார்டுகளை ஒழுங்குபடுத்தும் பணிகள் நடைபெறும் .
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
- கோட்டார் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்தனர்
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடந்து செல்லும் நபர்களிடம் செல்போன் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்ட னர். மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோட்டார் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசா ரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.
பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த சையத் அலி (வயது 23) என்பது தெரியவந்தது. இவர் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செல்போன் திருடியதை ஒப்பு கொண்டார். போலீசார் அவரிடம் இருந்து 10 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர் கோவில் ஜெயிலில் அடைத்தனர்.
- நாகர்கோவில் மாநகராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட இடங்களில் மேயர் மகேஷ் அதிகாரிகளுடன் ஆய்வு
- நாகர்கோவில் மாநகராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் சாலை சீரமைப்பு பணியை தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட நடுக்காட்டு இசக்கி அம்மன் கோவில் தெரு, பார்வதிபுரம், நெசவாளர் காலனி உள்ளிட்ட இடங்களில் மேயர் மகேஷ் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வீடுகளில் இருந்து கழிவு நீர் முறையாக வெளியேற்றப்பட வேண்டும். தெருக்களில் குப்பைகளை கொட்ட கூடாது என்று மேயர் வலியுறுத்தினார். மேலும், மோசமான சாலைகள், தெருக்கள் சீரமைக்க தேவையான மதிப்பீடுகள் தயார் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் நாகர்கோவில் மாநகராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட கிருஷ்ணன் கோவில் சன்னதி தெருவில் ரூ.11 லட்சம் செலவில் பேவர் பிளாக் சாலை சீரமைப்பு பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார் .
பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறுகையில்:-
நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தூய்மைப்பணி மேற்கொண்டு வருகிறோம்.வார்டுகளில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. வருகிற 2-ந்தேதி நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு குமரி மாவட்டம் வருகிறார் .அவரிடம் நாகர்கோவில் மாநகராட்சியில் மேற் கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறி நிதி கேட்கப்படும்.குடிநீர் பிரச்சனை உட்பட அடிப்படை பிரச்சி னைகளை தீர்க்கவும் நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
நகர் நல அலுவலர் ராம்குமார், மண்டல தலைவர் செல்வகுமார், கவுன்சிலர்கள் கவுசிக் , ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர் ஷேக் மீரான், மாநகர துணை செயலாளர் வேல் முருகன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எம்.ஜே.ராஜன், வட்ட செய லாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அறிவியல் மனப்பான்மை உருவாக வேண்டும்.
- நிகழ்ச்சி ஏற்பாடுகளை கார்மல் அறிவியல் கழகம் செய்திருந்தது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. பள்ளி தாளாளரும் இல்ல அதிபருமான ஜெரோம் ஆசி வழங்கினார்.
முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெரோம் சேவியர் விழாவில் பங்கேற்று பேசுகையில், அறிவியல் மனப்பான்மை உருவாக வேண்டும். மாணவர்கள் படிக்கும் பருவத்திலேயே படைப்பாற்றல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
தலைமை ஆசிரியர் மரிய பாஸ்டின், உதவி தலைமை ஆசிரியர் ஜேசு நேசம், கூடுதல் உதவி தலைமை ஆசிரியர்கள் ஜெரோம், ஜான் உபால்டு, அமல்ராஜ், ஆசிரியர் அலுவலகச் செய லர் பபிலன், அறிவியல் கழகத் தலைவர் பாபு சைமன் ராஜ் மற்றும் ஆசிரியர்கள் பினுமோன், டைட்டஸ் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மாணவர்களுடைய அறிவியல் படைப்புகளை வெளிப்படுத்தக்கூடிய கண்காட்சியை ஜெரோம் சேவியர் தொடங்கி வைக்க, திருச்சிலுவைக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் செபஸ்டின் அம்மாள், லெஸ்லி பாத்திமா, ஜெரோம் கல்லூரி பேராசிரியர் ரதி ஆகியோர் மாணவர்களின் படைப்புகளை மதிப்பீடு செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கார்மல் அறிவியல் கழகம் செய்திருந்தது.
- திற்பரப்பில் குளிக்க தடை நீடிப்பு
- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
நாகர்கோவில்:
வடகிழக்கு பருவமழை நாளை முதல் தீவிரமடையும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்த நிலையில் மாவட் டம் முழுவதும் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.இதனால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அசம்பு ரோடு கோட்டார் சாலைகளில் சாக்கடை நீருடன் மழை நீரும் ஆறாக ஓடியது.
கொட்டாரம், மயிலாடி, சாமிதோப்பு, தக்கலை, ஆரல்வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. நாகர்கோவிலில் அதிகபட்ச மாக 19.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருங் சாணி, சிற்றார் அணை பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணை களின் நீர்மட் டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். அணைக்கு வரக்கூடிய தண்ணீருக் கேற்ப அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
பேச்சிப்பாறை அணை யில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. இதனால் குழித்துறை ஆறு, கோதை ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியை தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது. இதையடுத்து திற்பரப்பு அருவியில் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமையான இன்று அருவியல் குளிப்ப தற்கு ஏராளமான சுற்று லாப் பயணிகள் வந்தி ருந்தனர். அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட தையடுத்து அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பேச்சிபாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 42.29 அடியாக உள்ளது. அணைக்கு 897 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 383 கனஅடி தண்ணீர் மதகுகள் வழியா கவும் 2014 கனஅடி தண்ணீர் உபரிநீராகவும் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.50 அடியாக உள்ளது. அணைக்கு 479 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 800 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.
சிற்றார்-1 அணை நீர்மட்டம் 12.33 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 12.43 அடியாகவும் உள்ளது.
4 அணைகளின் நீர்மட்ட மும் நிரம்பி வருவதையடுத்து நான்கு அணைகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பொய்கை அணை நீர்மட் டம் 16.10 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 38.30 அடியாகவும், முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.40 அடியாகவும் உள்ளது.
- மாவட்டம் முழுவதும் 5 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்க திட்டம்
- குமரி மாவட்டத்தில் 1982-ம் ஆண்டு நடைபெற்ற மண்டைக்காடு கலவரத்திற்கு பின்னர் நீதிபதி வேணுகோபால் கமிஷன் அமைக்கப்பட்டது
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 1982-ம் ஆண்டு நடைபெற்ற மண்டைக்காடு கலவரத்திற்கு பின்னர் அமைக்கப்பட்ட நீதிபதி வேணுகோபால் கமிஷன் பரிந்துரைகளின் படி புதிதாக ஆலயங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
ஆனால் தற்போது அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று நடந்தது.
நாகர்கோவில் நாகராஜா கோவில் முன்பு நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், நிர்வாகிகள் கண்ணன், சுப்பிரமணியன், பிரவீன், சுரேஷ் பாபு, தியாகராஜன், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டம் முழுவதும் 5 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்க திட்டமிடப்பட்டிருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தகவல்
- நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள ஓய்.ஆர் மஹாலில் மாலை 5 மணிக்கு நடக்கிறது
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 51-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் முன்னாள் அமைச்சரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான நாஞ்சில் வின்சென்ட்டு-க்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் விருது வழங்கும் விழா நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள ஓய்.ஆர் மஹாலில் நாளை(1-ந்தேதி) மாலை 5 மணிக்கு நடக்கிறது.
விழாவிற்கு குமரி கிழக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் சேவியர்ம னோகரன் தலைமை தாங்குகிறார்.
மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன் வரவேற்று பேசுகிறார். மாவட்ட கழக இணைச் செயலாளர் சாந்தினிபகவதியப்பன், மாவட்ட கழக துணைச் செயலாளர் பார்வதி, மாவட்ட கழகப் பொருளா ளர் திலக், கிழக்கு பகுதி கழகச் செயலாளர் ஜெய கோபால், தெற்கு பகுதி கழகச் செயலாளர் முரு கேஷ்வரன், மேற்கு பகுதி கழகச் செயலாளர் ஜெவின் விசு, மாமன்ற உறுப்பினர் கோபால சுப்பிரமணியம்,
சேகர், ஸ்ரீலிஜா, அனிலாசுகுமாரன், கிழக்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கழக அமைப்புச் செயலாளரும்,
முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் சிறப்புரையாற்றுகிறார்.
அமைப்புச் செய லாளர்கள் சின்னத்துரை, சுதா பரமசிவன், தலைமைக் கழகப் பேச்சாளர் சுப்பையா பாண்டியன், கழக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் கிருஷ்ணதாஸ், கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் சிவசெல்வராஜன், கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளரும்,
மாவட்ட கவுன்சிலருமான பரமேஸ்வரன், குமரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஜாண்தங்கம், குமரி மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் சிவ.குற்றாலம் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.
விழாவில் முன்னாள் அமைச்சரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான நாஞ்சில் வின்சென்டுக்கு எம்.ஜி.ஆர் விருதினை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வழங்குகிறார்.
இதனைத் தொடர்ந்து நாஞ்சில் எம்.வின்சென்ட் ஏற்புரையாற்றுகிறார். மாமன்ற உறுப்பினர் அக்சயா கண்ணன் நன்றி கூறுகிறார்.
இவ்விழாவில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், கழக செயல் வீரர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் கேட்டு கொண்டுள்ளார்.
- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
- பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் படிக்கட்டில் பயணம் செய்கின்றனர்.
கன்னியாகுமரி:
தக்கலை-நாகர்கோவில் வழித்தடத்தில் காலை, மாலை வேளைகளில் அதிக பயணிகள் கூட்டம் அரசு பேருந்துகளில் நிரம்பி வழிகிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் படிக் கட்டில் பயணம் செய்கின்றனர். அரசு பேருந்துகளை ஓட்டுநர்கள் எந்த பேருந்து நிறுத்தத்திலும் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. பேருந்து ஸ்டாப்புக்கு முன்னரோ, பின்னரோ இறக்கி விட்டு மட்டும் செல்கின்றனர்.
இதனால் யாரும் ஏறவும் முடியாது.இதில் அரசு பேருந்து ஓட்டுனர்களை குறை கூறி எந்த பயனும் இல்லை, ஏனென்றால் பேருந்தில் நிற்க கூட இடமில்லாத நிலை உள்ளது. இலவச பேருந்து சேவை வரவேற்பு பெற்றுள்ளது. ஆனால் கிராமங்களிலிருந்து நகரத்திற்கு செல்லும் இலவச பேருந்தை பெண்கள் அதிகம் பயன்படுத்துவதால், முக்கிய பணிகளுக்கு, பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், இலவச பேருந்தில் ஏற முடியாத நிலை உள்ளது. மார்த்தாண்டத்திலிருந்தே பேருந்தில், நாகர்கோவில் வருபவர்களும் பல இன்னலுக்கு உள்ளாவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே காலை-மாலை வேளைகளில், குறிப்பாக திங்கள் முதல் வெள்ளி வரை கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென்று பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அமைச்சர் மனோதங்கராஜ் பங்கேற்பு
- குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாள் இன்று.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளான இன்று வேப்பமூட்டில் உள்ளமார்ஷல் நேசமணி சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அரவிந்த், மேயர் மகேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த், பிரின்ஸ் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகராட்சி மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, செயற்குழு உறுப்பினர் சதாசிவம், நேசமணியின் பேரன் ரஞ்சித்அப்பலோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மனோதங்கராஜ் பரிசு வழங்கினார்.
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்புள்ள மார்ஷல் நேசமணி சிலைக்கு குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கழக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர் பச்சைமால், மாவட்ட அவைத் தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட கவுன்சிலர் நீலபெருமாள், ஒன்றிய செயலாளர் ஜெசீம், மாநகராட்சி கவுன்சிலர் அக்ஷயா கண்ணன், நிர்வாகிகள் சுகுமாரன், சந்துரு, ஜெயகோபால், முருகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி.உதயம், பிரின்ஸ் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளை சீரமைக்க ரூ.30 கோடி நிதி வந்துள்ளது.
- கிராமசபை கூட்டத்தில் மேயர் மகேஷ் தகவல்
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட குருசடி பகுதியில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மேயர் மகேஷ் கலந்து கொண்டு கூட்டத்தில் பங்கேற்ற மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக மேயரிடம் வழங்கினர். இதில் அதிக பட்சமாக ஓய்வூதியம், விதவை பென்சன், நிவாரணம், சாலை பணிகள், ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் இடம் பெற்றிருந்தன.
கூட்டத்தில் மேயர் மகேஷ் பேசியதாவது:-
மக்களின் குறைகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று அறியும் வகையில் இந்த கிராம சபை கூட்டம் தமிழக அரசு நடத்தி வரு கிறது. நாகர்கோவில் மாந கராட்சிக்குட்பட்ட 33-வது வார்டில் நடைபெறும் இந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கிராம சபை கூட்டம் என்பது காசு கொடுத்து கூடும் கூட்டமல்ல. மக்களின் நிறை, குறைகளை கேட்டு அறிந்து நடவடிக்கைகளை கொடுக்கும் கூட்டமாகும்.
நாகர்கோவில் மாந கராட்சிக்குட்பட்ட சாலை களை சீரமைக்க ரூ.30 கோடி நிதி வந்துள்ளது. அதில் ஒரு வார்டுக்கு குறைந்தபட்சம் ரூ.50 லட்சம் வீதம் ஒதுக்கீடு செய்யப்படும். வார்டுகள் வாரியாக அதிகாரிகளுடன் நான் நேரில் சென்று குறை களை கேட்டு வருகிறேன்.
ஆக்கிரமிப்பு தான் இந்த மாவட்டத்தின் பெரிய தலைவலியாக உள்ளது. மாநகர பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் எந்தவித பாரபட்சமின்றி நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வீடுகளில் இருந்து வழங்கப்படும் குப்பைகளை மக்கள் தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். ஒரு நாளுக்கு 111 டன் குப்பைகள் மாநகாில் சேகரிக்கப்படுகிறது. அதில் வெறும் 30 டன் குப்பைகள் மட்டுமே தரம்பிரிக்கப்படுகிறது என்பது வேதனை அளிக்கிறது.
கழிவு மற்றும் குப்பை களை சாலையோரம் வீசக் கூடாது. ஆண் குழந்தைகள் இருந்தால் ஓய்வூதயம் பெற மனு அளிக்க வேண்டாம். கோவில் நிலத்தில் வரி கட்டுவதற்கு கோவில் நிர்வாகம் ஒப்புதல் வழங்க வேண்டும். சுயஉதவி குழுக்களுக்கு கடன் மற்றும் நிவாரணம் அளிப்பதில் தமிழக அரசு முதன்மையாக உள்ளது. மக்களாகிய நீங்கள் அளித்துள்ள ஒவ்வொரு மனுக்கள் மீது சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் மாநகரை முன்மாதிரியான மாந கராட்சியாக மாற்ற வேண்டும். இதற்கு பொது மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி ஆணை யாளர் ஆனந்த மோகன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம், சுதாகர், லீனஸ்ராஜ், கென்னடி, சேக் மீரான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.