என் மலர்
நீங்கள் தேடியது "சாவு"
- கோவில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த டிரைவர் உயிரிழந்தார்
- புல் செடி கொடிககளை அகற்றும் போது சம்பவம்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள செம்பட்டிவிடுதி எஸ்.மேலப்பட்டியை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 52). லாரி டிரைவர். இவர் அப்பகுதியில் உள்ள ஸ்ரீ பொந்து மாரியம்மன் கோயில் கோபுரத்தில் உள்ள ஆல மரக்கன்று மற்றும் புல் செடி கொடிககளை அகற்றும் பணியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் ரெங்கசாமியை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து செம்பட்டி விடுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகிறார்.
- சேலம் சூரமங்கலம் ஜாகிர் அம்மாபாளையம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் எலி மருந்து சாப்பிட்ட மெக்கானிக் பாலியானர்.
- இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் ஜாகிர் அம்மாபாளையம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 54). ஜேசிபி மெக்கானிக்கான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி எலி மருந்தை சாப்பிட்ட குமார், மயங்கி விழுந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குமார், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்
- ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் செட்டிக்குளம் கே.பி. ரோடு பகுதியை சேர்ந்தவர் அருண் பிரகாஷ் (வயது 52).
இவர் நாகர்கோவில் செட்டிகுளத்தில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். நேற்று இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நாகர்கோவில் பறக்கிங்கால் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் ஒருவர் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இது பற்றி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்து கிடந்தது யார்? என்பது பற்றி நாகர்கோவில் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்து கிடந்தது அருண் பிரகாஷ் என்பது தெரியவந்தது.
அவரது மகன் மற்றும் குடும்பத்தினர் தண்டவாளத்தில் கிடந்த உடலை அடையாளம் காட்டி இறந்தது அருண் பிரகாஷ் தான் என்பதை உறுதி செய்தனர். அருண் பிரகாஷ்,ரெயில் மோதி இறந்தாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அவர் பறக்கங்கின் கால் பகுதிக்கு சென்றது ஏன்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரது செல்போன் அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிராமம் மந்திவளவு பகுதியில் விஷம் குடித்து நெசவு தொழிலாளி பலியானர்.
- இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை சாப்பிட்டார்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிராமம் மந்திவளவு பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் கதிர்வேல் (வயது 22). இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு வீட்டில் நெசவு தொழில் செய்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை சாப்பிட்டார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றி தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்
- மகன் வீட்டிலேயே தங்கி வசித்துவந்தார்
பெரம்பலூர்
பெரம்பலூரை அடுத்த எசனை தெற்குத்தெருவை சேர்ந்தவர் சுப்பையா(வயது 70). இவரது மனைவி சின்னம்மாள் இறந்துவிட்டதால், தனது மகன் செல்வகுமாரின் வீட்டிலேயே தங்கி வசித்துவந்தார். இந்த நிலையில் சுப்பையா சம்பவத்தன்று இரவு வீடுதிரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் காட்டுமாரியம்மன் கோவில் அருகே உள்ள சுந்தரம் என்பவருக்கு சொந்தமான வயல்காட்டில் உள்ள கிணற்று மேட்டில் சுப்பையாவின் காலணிகள் இருந்ததை, நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செல்வகுமாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து அவர் உடனே பெரம்பலூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், சுப்பையா கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது.
- மருத்துவமனை வளாகத்தில் மூதாட்டி இறந்து கிடந்தார்
- எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை
திருச்சி:
திருச்சி அரசு பொது மருத்துவமனையில் உள்ள பழைய தீவிர சிகிச்சை பிரிவு வார்டு அருகே அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கி கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மருத்துவமனை ஊழியர்கள் அவரை மீட்டு சோதனை செய்த போது அவர் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பூ வியாபாரி உயிரிழந்தார்
- காவிரி படித்துறைக்கு குளிக்க சென்றார்
திருச்சி:
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் துவாரகன் (வயது 65) பூ வியாபாரி. இவர் திருவரங்கம் பூ மார்க்கெட்டில் மொத்தமாக வாங்கி வியாபாரம் செய்வது வழக்கம். அது போல் இன்று காலை திருவரங்கம் பூ மார்க்கெட்டிற்கு வந்து பூ வாங்கினார். பூக்களை வாங்கிவிட்டு அம்மா மண்டபம் ரோடு மேல வீரேஸ்வரம் படித்துறை பகுதிக்கு வந்தார். இன்று கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி என்பதால் குளித்துவிட்டு வியாபாரத்துக்கு செல்லலாம் என்று எண்ணி படித்துறைக்கு குளிக்க வந்தார். அப்போது படித்துறையில் விழுந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விஷ செடியை அரைத்து குடித்த பெண் உயிரிழந்தார்.
- வயிற்று வலியினால் அவதியுற்று வந்ததாக கூறப்படுகிறது
அரியலூர்
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள நாகமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் காசிநாதன். இவரது மனைவி செந்தமிழ்செல்வி(வயது 57). இவர் கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியினால் அவதியுற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வயிற்று வலிக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று காலை செந்தமிழ்செல்விக்கு வயிற்றுவலி அதிகரிக்கவே தனது வீட்டிற்கு அருகில் இருந்த விஷசெடியை அரைத்து குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் செந்தமிழ்செல்வியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு செந்தமிழ்செல்வியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் காசிநாதன் அளித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்."
- லாரி டிரைவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
- உடலை மீட்டு போலீசார் விசாரணை
கரூர்:
நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை இந்திராகாலனியை சேர்ந்தவர் கணேசன், (வயது 55). லாரி டிரைவர். சம்பவத்தன்று இரவு இவர், காரைக்குடியில் இருந்து தைல மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு, சின்னரெட்டிப் பட்டியில் உள்ள தமிழ்நாடு காகித ஆலையில் தைலமரக்கட்டைகளை இறக்கிவிட்டு, அதிகாலையில் க ாகித ஆலைக்கு வெளியே வந்தார். பின்னர் லாரியை சாலையோரம் ஒரு இடத்தில் லாரியை நிறுத்திவிட்டு உறங்கிவிட்டார்.
இதையடுத்து மற்றொரு டிரைவரான ஜெயராஜ் என்பவர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். அப்போது லாரியின் உள்பகுதியில் கணேசன் மர்மமான முைறயில் இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயராஜ், இது குறித்து தோகைமலை போலீசில்
புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மயங்கி விழுந்த ஊழியர் உயிரிழந்தார்
- பணிபுரிந்து கொண்டிருந்த போது சம்பவம்
கரூர்:
சேலம் மாவட்டம், சின்ன திருப்பதி கலிங்கா சாலையை சேர்ந்த நடேசன் மகன் ரமேஷ் குமார் (வயது 42) இவர், கரூர் ஆண்டாங்கோவிலில் உள்ள, தனியார் கம்ப்யூட்டர் நிறு வனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் ரமேஷ் குமார், தான் வேலை செய்து வந்த நிறுவ னத்தில் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ரமேஷ் குமாரின் மனைவி ஜெனிக் பிரேம் குமாரி கொடுத்த புகாரின் படி, கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண் என்ஜினியர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்
- கர்ப்பமாக இருந்தார்
திருச்சி
திருச்சி கே.கே. நகர் அம்மன் நகரை சேர்ந்தவர் பிரதீப் ராஜ். இவரது மனைவி சந்தியா (வயது 23). என்ஜினியர். இவருடைய கணவர் பிரதீப் ராஜ் பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சந்தியா அருகில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது சந்தியாவிற்குமயக்கம் வந்துள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சந்தியாவை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் சந்தியா கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.மேலும் உடல் நிலைக்கு வேறு எந்பாதிப்பும் இல்லை என்றும் கூறினார். இந்த நிலையில் கே கே நகர் அம்மன் நகரில் உள்ள வீட்டில் தனியாக இருந்த சந்தியாவிற்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது .இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்ற சந்தியா திடீரென இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து சந்தியாவின் தந்தை வெள்ளைச்சாமி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் மர்ம சாவு என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- நெஞ்சு வலி காரணமாக அவர் உயிர் இழந்தார்
கன்னியாகுமரி:
இரணியல் அருகே கண்டன்விளையில் உள்ள ஒரு ஆலயத்தில் பிரார்த்த னைக்காக பலரும் வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார்.
அவர் தீடிரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து சமூக வலை தளங்களில் தகவல் பரவியது. இதற்கிடையில் சம்பவம் குறித்து இரணியல் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்தவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த செல்வதாஸ் (வயது 50) என்பதும் நெஞ்சு வலி காரணமாக அவர் உயிர் இழந்தார் என்பதும் தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.