என் மலர்
நீங்கள் தேடியது "பொருட்கள்"
- ஓய்வறையில் தூய்மை பணியாளர்களின் வாழ்வதாரம் மேம்படுத்தல் எந்திரம், கூடை பின்னும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
- சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வெண்ணீர் போடும் மின்சார எந்திரம் உள்ளிட்டவை அறையில் வைக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
தூய்மை பணியாளரு–க்கென ஓய்வறை வழங்க வேண்டும் என தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு கேட்டுக் கொண்டார்.
அந்த அறிவிப்பை அடுத்து நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ் ஆலோசனைபடி தூய்மை பணியாளர்களுக்கு புதிய ஓய்வறை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த ஓய்வறையை கலெக்டர் அருண்தம்புராஜ் திறந்து வைப்பதற்காக வருைா தந்தார்.
திடீரென அவர் அருகில் நின்ற தலைஞாயிறு பேருராட்சி தூய்மை பணியாளர் மாரிமுத்துவைவை அழைத்து கட்டிடத்தை திறக்க வைத்தார் .கட்டிடத்தை திறந்த மாரிமுத்து ஆனந்த கண்ணீர்விட்டார்.
ஓய்வறையை உடனடியாக கட்டிக்கொடுத்த தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் குகனை பாராட்டி கலெக்டர் அருண்தம்புராஜ் சால்வை அணிவித்தார்.
அந்த ஓய்வறையில் தூய்மை பணியாளர்களின் வாழ்வதாரம் மேம்படதையல் இயந்திரம், கூடை பின்னும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும்உணவு உண்பதற்கான டைனிங் டேபிள், கேரம் போர்டு, தாயங்கட்டை, பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் முதலுதவி பெட்டி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வெண்ணீர் போடும் மின்சார இயந்திரம் உள்ளிட்டவை அந்த அறையில் வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேருராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையன், துணைத்தலைவர் கதிரவன், பேருராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் பேருராட்சி தலைவர்கள் சாந்தி சுப்பிரமணியன், ராஜேந்திரன் மற்றும் துப்பரவு பணியாளர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
கலெக்டரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்தது.
- அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
- பள்ளியில் தேவையான விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் உள்ள கிராமங்களில் குடியரசு தினம், சுதந்திர தினம், மே தினம் ,காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சித் தினத்தன்றும் கிராம சபை கூட்டத்தை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கிடையில் கிராம சபை கூட்டம் போல நகர்ப்புற உள்ளாட்சிகளான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் வார்டு தோறும் அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் வார்டு கமிட்டி அமைக்கப்பட்டு பொதுமக்கள் பங்களிப்புடன் பகுதி சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியது.
அதன்படி உள்ளாட்சி தினமான இன்று தமிழகத்தில் முதல் முறையாக பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.
மேலும் முதல் முறையாக தஞ்சை, கும்பகோணம் என 2 மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் என இரண்டு நகராட்சிகள் மற்றும் வல்லம், சுவாமிமலை உள்பட14 பேரூராட்சிகளிலும் முதல் முறையாக பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.
தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் இந்த பகுதி சபை கூட்டங்கள் நடந்தன. தஞ்சை மாநகராட்சி வார்டு எண் 1 பள்ளியக்ரகாரம் பகுதியில் பகுதி சபா கூட்டம் மாமன்ற உறுப்பினர் செந்தமிழ் செல்வன் தலைமையில் நடைபெற்றது.
துரை. சந்திரசேகரன் எம் .எல் .ஏ, மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கலந்து கொண்டு வரவேற்றார்.
கூட்டத்தில் 1 வார்டு 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு நடந்தன. பொதுமக்கள் சேர்ந்து ராமானுஜம் என்பவரை கமிட்டி உறுப்பினராக தேர்ந்தெடுத்தனர்.
கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசிய விவரம் வருமாறு:- சிங்கப்பெருமாள் கோவில் அருகே வேகத்தடையும். பள்ளி அக்ரஹாரம் பகுதியில் உடற்பயிற்சி கூடமும்.
நவீன கழிப்பிடமும்,சேதமடைந்த ரேஷன் கடையை சீரமைத்தும். அங்கன்வாடிக்கு புதிய கட்டிடமும் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றி தர வலியுறுத்தி பேசினர்.
ஆசிரியர் ஒருவர் பேசும்போது, நகராட்சி பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து உணவருந்தும் கூடத்தின் மேற்கூரையை சீரமைக்க வேண்டும். போதிய அளவில் உடற்பயிற்சி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றார்.
அப்போது 6-ம் வகுப்பு மாணவி ஒருவர் பேசும்போது:-
நான் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறேன். எங்கள் பள்ளியில் குடிநீர், கழிவறை வசதி செய்ய வேண்டும். பள்ளியில் தேவையான விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டும் என்று பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.மாணவியின் பேச்சை அனைவரும் ரசித்தனர்.
பொதுமக்களின் கோரிக்கைகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கரந்தை பகுதி செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் தஞ்சை மாநகராட்சி 25-வது வார்டு உட்பட்ட பகுதியான கீழ ராஜவீதி மணிகர்ணிகேஸ்வரர் கோவிலில் நடந்த பகுதி சபை கூட்டத்துக்கு கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.
இதில் பொதுமக்கள் தங்களது வார்டு சம்பந்த கோரிக்கைகள் குறித்து பேசினர்.
- உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர்களுக்கு நெப்டிம் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர்களால் விளக்கி கூறப்பட்டது.
- முடிவில் முதன்மை செயல் அலுவலர் சிந்துஜா நன்றி கூறினார்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்பு மற்றும் வேளாண் வணிக துறையின் இலால்குடி தென்றல் கூட்டுப்பண்ணை சார்பாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு நெப்டிம் மூலமாக இரண்டு நாள் வேளாண் விளைபொருட்கள் மதிப்பு கூட்டுதல் பயிற்சி மற்றும் கண்டுணர் சுற்றுலா பயிற்சி தஞ்சாவூர் தேசிய உணவு கழக உணவு பதன தொழில் நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர் சிவகாமி, தொழில்நுட்ப உதவி பேராசிரியர் ஹேமா, தொழில்நுட்ப வல்லுநர் ராஜ்குமார், உதவி பேராசிரியர் ஆனந்தகுமார் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.
இப்பயிற்சியில் நெல், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள்,சிறுதானிய பயிர்கள், வாழை, இதர தோட்டக்கலை பயிர்கள் ஆகியவற்றின் மதிப்பு கூட்டுதல் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு தொழில்நுட்பங்கள் சிப்பமிடுதல், பிராண்டிங் மற்றும் வணிக தொடர்புகள் ஏற்படுத்தி கொடுத்தல் ஆகியவை இலால்குடி தென்றல் கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனர்களுக்கு நெப்டிம் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர்களால் விளக்கி கூறப்பட்டது.
இதில் இலால்குடி உதவி வேளாண் அலுவலர் சிவசக்தி, மண்டல ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் மற்றும் இலால்குடி தென்றல் கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் மற்றும் உழவர் ஆர்வலர் குழு தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முதன்மை செயல் அலுவலர் சிந்துஜா நன்றி கூறினார்.
- காலாவதியான பொருட்களை கண்டறிந்து அழிக்க வேண்டும்
- பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை
கன்னியாகுமரி:
கண்ணணூர் ஊராட்சிக்குட்பட்ட வீராலிகாட்டு விளை பகுதியில் நேற்று மாலை மறைவான பகுதியில் ஒரு டெம்போவில் பேக்கரி பொருட்களை ரோட்டோரம் கொட்டி வைத்துவிட்டு மின்னல் வேகத்தில் டெம்போ சென்றது.
சிறிது நேரத்தில் அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் ரோட்டோரம் சாக்லெட், பிஸ்கட் மற்றும் குளிர்பானங்களை கொட்டி இருந்ததை கண்டு பெட்டி பெட்டியாக வீட்டுக்கு எடுத்து சென்றனர். இது அந்த பகுதி முழுவதும் பரவியது. உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வந்த பார்த்தனர். அனைத்து பொருள்களும் காலாவதி யானவை என தெரிய வந்தது.
உடனே அந்த பகுதி மக்கள் கண்ணணூர் ஊராட்சி மன்ற தலைவர் ரெஜினி விஜிலாபாய் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.
இதற்கிடையில் மீண்டும் அதே இடத்திற்கு மற்றொரு டெம்போ காலா வதியான பேக்கரி பொருள் களை கொட்ட வந்தது. உடனே ஊராட்சி மன்ற தலை வரும், வார்டு உறுப்பி னர்கள் ஜெயா அனிதா, மற்றும் ஊர்மக்க ளும் சேர்ந்து வாகனத்தை சிறை பிடித்தார்கள்.
உடனே திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கும், உணவு, பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும், கிராம நிர்வாக அதிகாரி களுக்கும், சுகாதார துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.
அவர் கள் வந்து பார்த்து ஆய்வு செய்து போது வேர்க்கிளம்பி பகுதியை சேர்ந்த பேக்கரி கடையில் உள்ள காலாவதியான பொருள்கள் என்று தெரிய வந்தது. உடனே கடை யின் உரிமையாளர் வர வழைக்கப்பட்டனர்.
கண்ணனூர் ஊராட்சி மன்றம் சார்பாக இரண்டு டெம்போக்களுக்கும் அபராதமாக ரூ.2100 விதிக்கப்பட்டது. அந்த பணம் உடனே பேக்கரி கடை உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கப்பட்டது.
தீவிர விசாரணைக்கு பிறகு அந்த கடை உரிமை யாளரிடம் காலாவதியான பொருள்கள் அனைத்தும் அழிக்க வேண்டும் என்று எழுத்து பூர்மாக அதிகாரிகள் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.
சுமார் 3, 4 ஆண்டுகளாக ஒரு பேக்கரி கடையில் இவ்வளவு காலாவதியான பொருட் களை எப்படி பாது காத்து வைத்தார்கள் என்பது குறித்து உடனே மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே மாதிரி மாவட்டம் முழுவதும் உள்ள பேக்கரி கடைகளிலும் உள்ள பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும். காலாவதியான பொருட்களை கண்டறிந்து அழிக்கவேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.
- கழிவு நீர்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
- பழைய டயர்கள் கொசு உற்பத்தியாகும் பொருட்களை வைத்து கொள்ளக் கூடாது.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியம் அக்க ரைவட்டம் ஊராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத் துறையுடன் இணைந்து அக்கரைவட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர், கண்ணையன் தலைமையில், அதம்பை சுகாதார ஆய்வாளர், எஸ், ராமநாதன் மற்றும் குழுவினர் இணைந்து ஊராட்சியில் இயந்திரம் மூலம் கொசு மருந்து 6 வார்டுகள் முற்றிலும் அடிக்கப்பட்டு கொசு ஒழிப்பு நடவடிக்கை, மற்றும் வீடுகளில் ஆங்காங்கே கழிவு நீர்களை உடனடியாக அகற்ற வேண்டும் வீட்டின் அருகே பழைய டயர்கள் கொசு உற்பத்தி ஆகும் பொருட்களை வைத்துக் கொள்ளக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- 6 கவுண்டர்களில் கல்லாவில் இருந்த பணம் திருட்டு.
- இரண்டாவது தளத்தில் உள்ள லிப்ட் வழியாக உள்ளே சென்று பணம் திருட்டு.
பேராவூரணி:
பேராவூரணி அரசு மருத்துவமனை எதிரில் தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் நள்ளிரவில் இங்கு வந்த மர்ம நபர்கள் மாடி வழியாக இறங்கி கடையில் உள்ள பொருட்களை திருடி உள்ளனர். மேலும், 6 கவுண்டர்களில் கல்லாவில் இருந்த ரொக்க பணம் ரூ.1 லட்சம் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த பேராவூரணி இன்ஸ்பெக்டர் செல்வி சம்பவ இடத்திற்கு சென்று கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது இரண்டாவது தளத்தில் உள்ள லிப்ட் வழியாக உள்ளே சென்று பணம் திருடி சென்றது தெரியவந்தது.
முகத்தை துணியால் மூடிய நிலையில் திருடிய நபர் பச்சை கலர் டி சர்ட் மற்றும் கருப்பு கலர் டிராயர் அணிந்து இருந்தார்.
இது பற்றி மன்சூர் அலி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- விளையாட்டு உபகரணங்கள், எழுது பொருட்கள் உள்பட பல்வேறு கல்வி உபகரணங்கள் வழங்கல்.
- பாட்டு போட்டி, பேச்சு போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசு.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த மேலநம்மங்குறிச்சி ஊராட்சி ஒன்றியதொடக்க ப்பள்ளியில் முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகள் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அனைவரையும் தலைமையாசிரியர் மகாதேவன் வரவேற்றார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளைய ராஜா நேரு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து சிறப்புரையாற்றினார்.
விழாவில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மேரி, கிராம கமிட்டி உறுப்பினர்கள், இல்லம் தேடி தன்னார்வலர்கள், பெற்றோர்கள், சத்துணவு ஊழியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திருமுகம் நேரு படத்தை பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
அப்போது மேலநம்ம ங்குறிச்சி கிராம கமிட்டி உறுப்பினர்கள் பள்ளிக்கு தேவையான பீரோ, மேசை, நாற்காலி, மின்விசிறி, விளையாட்டு உபகரணங்கள், எழுது பொருட்கள் என சுமார் 25 ஆயிரம் மதிப்புள்ள பல்வேறு உபகரண பொருட்களை பள்ளிக்கு வழங்கினார். மேலும், பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகளும் வழங்கப்ப ட்டது.
தொடர்ந்து,பாட்டு போட்டி, பேச்சு போட்டி களில் பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு குலுக்கல் முறையில் விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. முடிவில் ஆசிரியர் கார்த்திக் நன்றி கூறினார்.
- ஒவ்வொரு பொருளுக்கும், பில்லுக்கும் வரி செலுத்த வேண்டிய கட்டாயம்.
- தமிழகத்தில் வணிக வரித்துறையில் புதிதாக பறக்கும் படை.
திருப்பூர்:
வணிக வரித்துறை சார்பில் பறக்கும் படை அமைத்துள்ளதால் தொழில் துறையினர் அச்சத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர். ஒரு தொழிற்சாலையில் இருந்து வேறு தொழிற்சாலைக்கு ஜாப் ஒர்க் செய்ய பொருட்கள் எடுத்துச் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி., நடைமுறை அமல்படுத்திய பின், ஒவ்வொரு பொருளுக்கும், பில்லுக்கும் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தொழில் நிறுவனங்களில், வணிக வரித்துறையினரின் நேரடி சோதனை முறை முற்றுப்பெற்றது.
ஜி.எஸ்.டி., வரி விதிப்பால் பில் இல்லாமல் வணிகம் இல்லை என்ற நிலை உருவானது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட இம்முறையால் வரி விதிப்பில் இருந்த பல்வேறு சிக்கல்கள் தீர்வுக்கு வந்தன. இச்சூழலில், தமிழகத்தில் வணிக வரித்துறையில் புதிதாக பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
இப்படையினரால் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சோதனையிட்டு, அபராதம் விதிக்க முடியும். குறைந்தபட்சம் ஒவ்வொரு மாதமும், 339 சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்படையை வழிநடத்த, ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு இணை கமிஷனர் அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதியதாக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையால், தொழில்துறையினர் மிரட்சியில் உள்ளனர். ஏனெனில், பொருட்களை தொழிற்சாலைக்கு வெளியே எடுத்துச் செல்ல ஜி.எஸ்.டி., பில் தேவை. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல இ வே பில் தேவை. அவ்வாறு பில் இல்லாமல் பொருட்களை எடுத்துச் சென்றால், கடுமையாக அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதம் விதிப்பால் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் வைத்திருப்போர் பெரும் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.
சிறிய தவறுக்கும் பெரும் அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த, 15 நாட்களில் பல லட்சம் ரூபாய் அபராதமாகவும், முன் வரியாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருப்பூர், ேகாவை தொழில்துறையினர் அதிருப்தியில் உள்ளனர்.
- சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
- வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.24 லட்சத்து 33 ஆயிரத்து 682-க்கு ஏலம் போனது.
பரமத்தி வேலூர்:
சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் எள், நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
இதில் பரமத்திவேலூர் மற்றும் கரூர் ஒன்றிய பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில்16.85 குவிண்டால் எடை கொண்ட 4 ஆயிரத்து 636 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 28.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.22.49-க்கும், சராசரி விலையாக ரூ.27.35-க்கும் என மொத்தம் ரூ.40ஆயிரத்து 947-க்கு விற்பனையானது.
தேங்காய் பருப்பு
அதேபோல் 238.13 குவிண்டால் எடை கொண்ட 500 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.89.36-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.84.70-க்கும், சராசரி விலையாக ரூ.88.60-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 84.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.75-க்கும், சராசரி விலையாக ரூ. 80.86-க்கும் என மொத்தம் ரூ.19 லட்சத்து 82 ஆயிரத்து 146-க்கு விற்பனையானது.
எள்
மேலும் 3.76 குவின்டால் எடை கொண்ட 5 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ. 96.99-க்கும், குறைந்த விலையாக ரூ.94.09-க்கும், சராசரி விலையாக ரூ.95.88-க்கும் என ரூ.36 ஆயிரத்துக்கு விற்பனையானது.
நிலக்கடலை காய்
அதேபோல் 130 மூட்டை நிக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.82.56-க்கும், குறைந்த விலையாக ரூ.71.69-க்கும், சராசரி விலையாக ரூ.78.36-க்கும் என ரூ.3 லட்சத்து 74 ஆயிரத்து 586-க்கு விற்பனை ஆனது.
சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.24 லட்சத்து 33 ஆயிரத்து 682-க்கு ஏலம் போனது.
- போலீசில் புகார்
- போலீஸ் தடய அறிவியல் நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் பக்கம் உள்ள மகாராஜபுரம் கீழஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராதா. இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று இருந்தார். இதை பயன்படுத்தி அவரது வீட்டை யாரோ சிலர் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் வீட்டிலிருந்து பணம் மற்றும் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ள னர்.
இது குறித்து அவர் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் தடய அறிவியல் நிபுணர்களும் அங்கு வர வழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகை களை பதிவு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான பொருட்கள் வாங்க முன்கூட்டியே திட்டம்.
- பொருட்கள் மற்றும் செலவின தொகையை எமிஸில் பதிவு செய்ய வேண்டும்.
சீர்காழி:
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு பள்ளி மானியம் அனுப்பப ட்டுள்ளது. கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள சுமார் 94 பள்ளிகளுக்கு மானியம் விடுவிக்கபட்டுள்ளது.
இந்த மானிய தொகையை பள்ளியின் வளர்ச்சிக்கு செலவு செய்தல் சார்ந்த கூட்டம் கொள்ளிடம் வட்டார வளமையத்தில் நடைபெற்றது. இக்கூட்ட த்திற்க்கு ஆசிரியர் பயிற்றுநர் ஐசக் ஞானராஜ் வரவேற்புரை ஆற்றினர். வட்டார வளமைய மேற்பா ர்வையாளர் ஞானபுகழேந்தி தலைமை யேற்று பேசும் பொழுது,
இந்த ஆண்டு புதியதாக தொடங்கப்பட்டுள்ள வங்கி கணக்கினை தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் இணைந்து பராமரிக்கபடவேண்டும்.
அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான பொருட்கள் வாங்க முன்கூட்டியே திட்டமிட பட்டு பள்ளி மேலாண்மை குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தரமான பொருட்களை வழங்க வேண்டும்.
'வழங்கப்பட்டுள்ள மொத்த தொகையில் 10 சதவீதத்தை கழிவறை சுத்தம் செய்யவும் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யவும் பயன்படு த்தி கொள்ளலாம். பள்ளி மானியத்தில் வாங்க ப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் செலவின தொ கையை எமிஸில் பதிவு செய்ய வேண்டும் என்றார்.
இப்பயிற்சியின்கருத்தா ளர்களாக மாவட்ட தணிக்கையாளர் மோகன், வட்டார தணிக்கையாளர்கள் ராஜீவ்காந்தி சிவனேசன் ஆகியோர் ஈடுபட்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் கவிதா நன்றி கூறினார்.
- பள்ளியில் உடைந்த பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே கட்டிடத்தில் குவித்து வைக்கபட்டுள்ளது.
- பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறுகாட்டுத்துறையில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களின் குழந்தைகள் இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் முழுவதும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது.
இதனால் பள்ளியில் உடைந்த பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே கட்டிடத்தில் குவித்து வைக்கபட்டுள்ளது. இந்நிலையில், கடந்த
2017-ம் ஆண்டுபேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்காக பல்நோக்கு சேவை மையம் கட்டப்பட்டது. இக்கட்டிடத்தில், தற்போது வகுப்பறைகள் இயங்கி வருகின்றன.
பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கலெக்டர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆறுகாட்டுத்துறை கிராம பஞ்சாயத்தார்கள் சார்பில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மாணவர்களின் நலன் கருதி அரசு பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.