என் மலர்
நீங்கள் தேடியது "அரசு"
- சேலம் மாவட்டம் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலை விழா தொடங்கியது.
- 2 நாட்கள் நடைபெறும் இந்த தனித்திறன் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் திறமைகள் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட கல்வித்துறை மூலம் முதல்வரின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலை விழா தொடங்கியது. சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் தங்கவேல் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன் வரவேற்றார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சக்திவேல், மேலாண்மை குழு தலைவர் ரமேஷ் குமார், மேலாண்மை குழு கல்வியாளர் பால கிருஷ்ணன் மற்றும் உறுப்பி னர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களின் தனித்தி றனை ஊக்குவித்தனர்.
மாணவர்கள் கிராமிய பாடல்கள், ஓவியம், நாடகம், நாட்டியம், பறையடித்தல், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர். 2 நாட்கள் நடைபெறும் இந்த தனித்திறன் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் திறமைகள் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட கல்வித்துறை மூலம் முதல்வரின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது.
- திருச்செங்கோடு செல்வதற்காக காவேரி ஆர்.எஸ். பஸ் ஸ்டாப்பில் இருந்து நேற்று பெண் பயணிகள் ஏறினர்.
- இதை அடுத்து அந்த பெண் பயணிகளை திட்டியபடியே டிரைவரும், கண்டக்டரும் நடுவழியில் பஸ்சில் இருந்து இறக்கி விட்டனர்.
நாமக்கல்:
ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையம் பேப்பர் மில், காவேரி ஆர்.எஸ், ஆயக்காட்டூர் கார்னர், ஓட பள்ளி, கொக்கராயன் பேட்டை வழியே அரசு டவுன் பஸ் திருச்செங்கோடு வரை செல்கிறது. இந்த பஸ்சில் திருச்செங்கோடு செல்வதற்காக காவேரி ஆர்.எஸ். பஸ் ஸ்டாப்பில் இருந்து நேற்று பெண் பயணிகள் ஏறினர்.
பேப்பர் மில் காலனி ரோட்டில் செல்லாமல் ஓட பள்ளி ரோட்டில் பஸ் சென்றது. இதனை கவனித்த திருச்செங்கோடு செல்லும் பெண்கள் சிலர், பஸ் வேறு பாதையில் செல்வதால், பஸ்சை நிறுத்துமாறு சத்தமிட்டனர். ஆனால் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் கண்டக்டரை திட்டினார்.
அப்போது அந்த பெண்கள், நாங்கள் திருச்செங்கோடு செல்ல வேண்டும், ஆனால் பஸ் நேராக செல்கிறது என்றனர். இதை அடுத்து அந்த பெண் பயணிகளை திட்டியபடியே டிரைவரும், கண்டக்டரும் நடுவழியில் பஸ்சில் இருந்து இறக்கி விட்டனர். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக அரசு பெண்களுக்காக இலவச பஸ்களை இயக்குகிறது. ஆனால் சில கண்டக்டர்கள் அவர்களை மதிக்காமல் நடுவழியில் கீழே இறக்கி விடுவது வேதனையாக இருப்பதாக பெண் பயணிகள் தெரிவித்தனர்.
- நாமக்கல் நள்ளிபாளையம் பகுதிைய சேர்ந்த பொறியாளர் வினோத் (31) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30-ந்தேதி திருமணம் நடை பெற்றது. கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு ெகாடுமைபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
- இதனால் மனவேதனை அடைந்த வசுமதி திருச்செங்கோட்டில் உள்ள பெற்றோர் வீட்டில் கடந்த 30-தேதி வீட்டில்தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி. காலனியை சேர்ந்தவர் அத்தியப்பன் (வயது 55). இவரது மூத்த மகள் வசுமதி (23). என்ஜினீயர்.
இவருக்கும், நாமக்கல் நள்ளிபாளையம் பகுதிைய சேர்ந்த பொறியாளர் வினோத் (31) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30-ந்தேதி திருமணம் நடை பெற்றது.இந்த நிலையில் வசுமதியிடம் கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு ெகாடுமைபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இதனால் மனவேதனை அடைந்த வசுமதி திருச்செங்கோட்டில் உள்ள
பெற்றோர் வீட்டில் கடந்த
30-தேதி வீட்டில்தூ க்குப்போட்டு தற்கொ லைக்கு முயன்றார்.
சேலம் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு அவ ருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 9-ந்தேதி சிகிச்சை பலனின்றி வசுமதி பரிதாப மாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் திருச்செங்கோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி, கணவர் வினோத் ,மாமனார் சுப்பிரமணி, மாமியார் அமுதா, வினோத்தின் சகோதரி காவியா உள்பட 4 பேர் மீது வரதட்சணை கொடுமை , தற்ெகாலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்ததும் 4 பேரும் தலைமறைவாகினர்.
உடலை வாங்க மறுப்பு
இதனிடையே அவர்கள் 4 பேரையும் கைது செய்தால் மட்டுமே வசுமதியின் உடலை வாங்குவோம் என கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள், சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு உடலை வாங்க மறுத்து கடந்த 9-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பலமுறை சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை.இதனை தொடர்ந்து திருச்செங்கோடு டவுன் போலீசார் நேற்று மல்ல சமுத்திரம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த வசுமதியின் கணவர் வினோத்தை அதிரடியாக கைது ெசய்தனர். அவரிடம் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.இருப்பி
னும் இன்று 4-வது நாளாக
உடலை வாங்க மறுத்து வசுமதியில் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள
னர். மாமனார் சுப்பிரமணி, மாமியார் அமுதா, வினோத்தின் சகோ தரி காவியா ஆகியோரை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என கூறி வருகின்றனர். போலீசார் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.இதனால் 4-வது நாளாக வசுமதியின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது .
- தீயணைக்கும் படையினர் மீட்டனர்
- மண்ணுளி பாம்பு வகையை சேர்ந்தது.
கன்னியாகுமரி:
இந்தியாவின் தென்கோடி முனையானகன்னியா குமரிக்கு வரும் ஜனாதிபதி, பிரதமர், பல மாநில முதல்வர்கள், கவர்னர்கள், மத்திய-மாநில அமைச்சர் கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமு கர்கள் தங்கும் அரசு விருந்தினர் மாளிகை உள்ளது. பொதுப்பணி துறையின் கட்டிட பிரிவு கட்டுப்பாட்டில் இந்த அரசு விருந்தினர் மாளிகை உள்ளது.
இந்த அரசு விருந்தினர் மாளிகை முறையான பராமரிப்பு இல்லாமல், புதர்கள் நிறைந்தும், சுற்று சுவர்கள் இடிந்தும், ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் செடி, கொடிகள் வளர்ந்தும், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டும் குப்பை கிடங்காகவும், இரவு வேளைகளில் சமூக விரோதிகளுக்கு மது அருத்தும் கூடாரமாகவும் மாறியுள்ள பரிதாப நிலையில் காணப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் இந்த அரசு சுற்றுலா மாளிகையில் உள்ள முக்கிய கட்டிடத்தில் பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து அங்குள்ள ஊழியர்கள் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் ஆரோக்கியதாஸ் தலைமையில்தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து வந்து அந்த பாம்பை லாவக மாகபிடித்தனர். அந்த பாம்பு சுமார் 3 அடி நீளம் கொண்டதாக இருந்தது. மண்ணுளி பாம்பு வகையை சேர்ந்தது.
பின்னர் தீயணைக்கும் படையினர் அந்தப் பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த விஷ பாம்பை பாது காப்பான காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர்.
- டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் நடந்தது
- கொரோனா வார்டுகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்
நாகர்கோவில்:
சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் உருவாகி உள்ள கொரோனா பி.எப்.7 வைரஸ் பரவல் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொடர்பான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மருத்துவக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது. அடுத்த 6 மாதத்துக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை முன்கூட்டியே வாங்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா வார்டுகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் போன்ற வழிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் இன்று கொரோனா ஒத்திகை நிலை பயிற்சி நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் இன்று கொரோனா ஒத்திகை நிலை பயிற்சி நடந்தது. டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் கொரோனா வார்டுகள் ஆய்வு செய்யப்பட்டன. நோயாளிகள் வந்தால் சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. மருத்துவமனை கண்காணிப்பாளர் அருள் பிரகாஷ் மற்றும் டாக்டர்கள் இதில் பங்கேற்றனர்.
- 2 வாலிபர்கள் தப்பி ஓட்டம்
- தனிப்படை போலீசார் வாலிபர்களை பிடிக்க நடவடிக்கை
கன்னியாகுமரி:
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு மிடாலத்திற்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் ராபின்சன் ஓட்டினார்.
இரணியல் அருகே மட விளாகம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது 2 வாலிபர்கள் பஸ்ஸை தடுத்து நிறுத்தி னார்கள். திடீரென அவர்கள் அந்த பகுதியில் கிடந்த கற்களை எடுத்து பஸ்ஸின் மீது வீசினார்கள்.
இதில் பஸ்ஸின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதையடுத்து அந்த வாலி பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து டிரைவர் ராபின்சன் இரணியல் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் தனிஷ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முதல் கட்ட விசாரணை யில் குடிபோதையில் வாலிபர்கள் பஸ் மீது கல்வீசி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களைப் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் வாலிபர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
போலீசார் தேடுவதை அறிந்த அந்த வாலிபர்கள் தலைமறைவாகி விட்டனர்.
- கல் வீச்சில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமானது.
- போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
கன்னியாகுமரி:
நாகர்கோவிலில் இருந்து மிடாலத்துக்கு 31-ந் தேதி இரவு அரசு பஸ் புறப்பட்டுச் சென்றது. அந்த பஸ்சை ஆணையடி பகுதியைச் சேர்ந்த சுபாஷ் ஓட்டிச் சென்றார். கண்டக்டராக ஐரேனிபுரம் ஜஸ்டின் பணியாற்றினார்.
இந்த பஸ், இரணியல் அருகே உள்ள மடவிளாகம் பகுதியில் சென்ற போது, இருளில் மறைந்திருந்த 2 பேர் பஸ் மீது கல் வீசி தாக்கினர். இந்த எதிர்பாராத தாக்குதலால் அதிர்ச்சியடைந்த டிரைவர் சுபாஷ் உடனடியாக பஸ்சை நிறுத்தினார்.
ஆனால் கல் வீச்சில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமானது. டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் பஸ்சை விட்டு இறங்கி வருவதற்குள் கல் வீசிய மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
சம்பவம் குறித்து இரணியல் போலீசில், பஸ் டிரைவர் சுபாஷ் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில் 2 பேர் மது போதையில் தள்ளாடிச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. எனவே அவர்கள் தான் பஸ் மீது கல் வீசியிருக்கலாம் என போலீசார் கருதினர். அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் வில்லுக்குறி சடையப்பனார் தெருவை சேர்ந்த கார்த்திக் (வயது 29) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது நண்பரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
- மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நடைபெற்றது.
- அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டு பொதுமக்கள் பயன்பெற வேண்டும்.
நாகர்கோவில்:
தமிழக அரசு துறைகளின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரு கிறது.இந்த திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புகைப்படக் கண் காட்சி நடத்தப்படுகிறது.
அதன்படி தக்கலை ஒன்றியம், திக்கணங்கோடு பகுதியில் அரசின் சாத னைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன் பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்படக் கண் காட்சி நடைபெற்றது.
இதுகுறித்து கலெக்டர் அரவிந்த் கூறுகையில், ஏழை, எளிய, கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சி நடக்கிறது.
அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டு அனைத்துத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் பெற்று பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சேலம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள வங்கி அருகே 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடந்த 13-ந் தேதி மயங்கிய நிலையில் கிடந்தார். மூதாட்டியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
- மூதாட்டி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம்:
சேலம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள வங்கி அருகே 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடந்த 13-ந் தேதி மயங்கிய நிலையில் கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசிலும் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டி யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மூதாட்டி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல் நேற்று காலை சேலம் கோட்டை மைதானம் அருகே உள்ள பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன், செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து போன மூதாட்டி மற்றும் முதியவர் இவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பரமத்திவேலூரை அடுத்துள்ள படமுடிபாளை யம் குழந்தைகள் மையத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- ஆய்வின்போது குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறைகள், குழந்தைகளின் கற்றல் திறன், குழந்தைகளுக்கு வழங்கும் உணவு , மற்றும் இணை உணவின் தரம் ஆகியவை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பரமத்திவேலுார்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள படமுடிபாளை யம் குழந்தைகள் மையத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறைகள், குழந்தைகளின் கற்றல் திறன், குழந்தைகளுக்கு வழங்கும் உணவு , மற்றும் இணை உணவின் தரம் ஆகியவை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து பரமத்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சத்துணவு மையத்தில் நேரில் பார்வையிட்டு சத்துணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாணவிகளுக்கு தினசரி வழங்கப்பட வேண்டிய உணவுப் பட்டியல் படி வழங்கப்படுகிறதா, சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். மேலும் மாணவிகளுக்கு மதிய உணவினை அமைச்சர் கீதா ஜீவன் பரிமாறினார். பின்னர் அமைச்சருடன் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் ஸ்ரேயாசிங், சமூகநல அலுவலர் கீதா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ், குழந்தைகள் நலக்குழு தலைவர் சதீஷ்பாபு, வட்டாட்சியர் உட்பட அரசு அலுவலர்களும், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்தில், ஒன்றிய செயலாளர்கள் தன்ராசு, சண்முகம், மாவட்ட துணைச் செயலாளர் அன்பழ கன், பரமத்தி பேரூராட்சி தலைவர் மணி, பேரூர் கழக செயலாளர்கள் ரமேஷ் பாபு, முருகன், கருணாநிதி, பெருமாள் என்கிற முருகவேல், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
- சேலம் கோட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட தில் 8 நாட்களில் 1.11 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.
சேலம்:
சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 1900 பஸ்கள் இயக்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அதன்படி பொங்கல் பண்டிகையொட்டி சேலம் கோட்டத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மதுரை, கோவை, கடலூர், வேலூர், திருச்சி உள்பட பல இடங்களுக்கு 500 சிறப்பு பஸ்கள் கடந்த 12-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை இயக்கப்பட்டது.
சேலம் கோட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட தில் 8 நாட்களில் 1.11 கோடி
பேர் பயணம் செய்துள்ள தாகவும், 2 கோடி கூடுதல் வருமானம் கிடைத்து உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் இடையே இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
- சென்னிமலை போலீசார் விரைந்து வந்து அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
சென்னிமலை:
சென்னிமலையில் இருந்து ஈரோட்டுக்கு தினமும் அரசு நகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் தனியார் பஸ்களும் பெரும் அளவில் இயக்கப் பட்டு வருகிறது.
இந்த நிலையில் கால அட்டவணையை பின்பற்றா மல் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுவதாக தனியார் பஸ் டிரைவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு தனியார் பஸ் சென்றது. அந்த பஸ் வழக்கம்போல் சென்னிமலை பஸ் நிலை யத்துக்கு வந்தது. அந்த பஸ் கண்டக்டர் அங்கு பயணி களை ஏற்றி கொண்டிருந்தார்.
அப்போது அதே நேர த்தில் சென்னிமலை பஸ் நிலையத்தில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது.
இதையடுத்து அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் தனியார் பஸ்சை வழிமறித்து ஏன் முன் கூட்டியே செல்கிறீர்கள் என டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது அந்த தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் அரசு பஸ் டிரைவரிடம் நீங்கள் தான் ஒவ்வொரு முறையும் காலை, மாலையில் முன்கூட்டியே செல்கிறீர்கள் என்றும், உங்கள் பஸ்சின் கால அட்டவணையை கொடுங்கள் என்றும் கேட்டனர்.
இதனால் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் இடையே இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது இரு பஸ்களிலும் இருந்த பயணிகள் பஸ்சை விட்டு இறங்கி வாக்குவாதத்தை வேடிக்கை பார்த்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் விரைந்து வந்து அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து 2 பஸ்களும் 15 நிமிடங்கள் தாமதமாக சென்னிமலை பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
இதுபோன்ற நேர பிரச்சனை காரணமாக சென்னிமலை பஸ் நிலையத்தில் அடிக்கடி அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் இடையே மோதல் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.