என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேட்டி"

    • பாராளுமன்ற கூட்டு குழு ஆய்வு செய்ய வலியறுத்தல்
    • கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி

    ஆலங்குடி, 

    புதுக்கோட்டை மாவ ட்டம் கொத்தக்கோட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியா ளர்களிடம், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசும்போது, தி.மு.க. தலைமை மற்றும் கூட்டணி கட்சிகள் மீது மக்கள் வைத்த நம்பிக்கையின் எதிரொலியாக ஈரோடு இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி எதிர்பார்த்ததுதான் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்று முன்பே கூறியிருந்தேன்.2021 ஆம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மு.க.ஸ்டா லின் முதல்-அமைச்சரான பிறகு நடைபெற்ற முதல் இடைத்தேர்தல் என்பதால் அனைத்து அமைச்சர்களும் தங்கள் கட்சியின் பலத்தை நிரூபிக்க தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் இடைத்தேர்தலுக்கென்று ஒரு இலக்கணம் உள்ளது. அதானியின் பங்கு சரிவினால் பொதுத்துறை நிறுவனங்களான வங்கிகள் மற்றும் எல்ஐசி நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. எனவே இது குறித்து கூட்டு பாராளுமன்ற குழு அமைத்து அதானியின் கணக்கு வழக்குகளை சரி பார்த்து விசாரணை செய்ய வேண்டும் என்றார்.

    • பொதுத்தேர்வில் ஆப்செண்ட் ஆனவர்களுக்கு உடனடியாக மறுதேர்வு நடத்தப்படும்
    • அமைச்சர் உதயநிதி திட்டவட்டம்

    பெரம்பலூர்,

    தமிழகத்தில் பிளஸ் 2 தமிழ் பாடத்தேர்வினை எழுதாத மாணவ, மாணவிகளுக்காக மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள குன்னம் பஸ்ஸ்டாப் புதிய கட்டடம் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினரின் உற்பத்தி பொருட்கள் விற்பனை அரங்குகளையும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.தொடர்ந்து குன்னம் எம்எல்ஏ அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள போட்டித் தேர்வுக்கான நூலகத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து, அங்கிருந்த குறிப்பேட்டில் தான் கலைஞர் படிப்பகத்தை திறந்து வைத்தது பெருமை, மகிழ்ச்சி என்றும், அமைச்சர் சிவசங்கரின் பணி தொடர வாழ்த்துக்கள் எனவும் எழுதி கையெழுத்திட்டார்.பின்னர் அமைச்சர் உதயநிதி நிருபர்களிடம் கூறுகையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது வருகிறது. இதில் தமிழ் பாடத்தேர்வில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொள்ளவில்லை. தமிழக அரசு தொடர்ந்து கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில் பள்ளிகல்வித்துறை அமைச்சரிடம் பேசி மீண்டும் மறுத்தேர்வு நடத்தி தேர்வெழுத வாய்ப்பளிக்கப்படும். அதற்கான நடவடிக்கையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மேற்கொள்வார்திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால் பத்தாண்டுகளாக அதிமுக அரசு பெரம்பலூரில் அரசு மருத்துவ கல்லூரியை அமைக்காமல் அதை கிடப்பில் போட்டுவிட்டது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகி மருத்துவ கல்லூரி அமைக்கும் பணிகள் தொடங்கும். பெரம்பலூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தில் சிந்தடிக் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.பேட்டியின்போது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர்.

    • ரஜினி கட்சி ஆரம்பிக்காததால், அண்ணாமலை பாஜகவில் சேர்ந்தார்
    • சசிகலா தைரியமானவர் என்று நான் கூறியதை வாபஸ் வாங்கி கொள்கிறேன்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை ஆலங்குடி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாடா குழுமத்தின் சார்பில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு மருத்துவ உப கரணங்களை வழங்கி எம்பி கார்த்திக் சிதம்பரம், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது,பிளஸ் டூ மற்றும் பிளஸ் ஒன் பொதுத் தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு வரவில்லை என்பது அதிர்ச்சிகரமான தகவலாக உள்ளது. இது குறித்த உண்மை தன்மையை அறிய அமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை ஆய்வு நடத்த வேண்டும்.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி கொடுத்தால் நான் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சித்தாந்த ரீதியாக பாஜகவில் சேரவில்லை. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப்படாததால் அண்ணாமலை பாஜகவில் சேர்ந்தார்மாநிலத்தில் இருக்கும் மருத்துவக் கல்லூரிக்குமத்திய தேர்வு ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்வி நியாயமான கேள்வி நீதிமன்றத்தி ன் மூலமாக இதற்கு தீர்வு காணலாம் என்று தமிழக அரசு நம்புகிறதுசசிகலா தைரியமானவர் என்று நான் கூறி இருந்தேன் ஆனால் அதை தற்போது நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் அவர் தைரிய மாக அரசியலுக்கு வரவில்லை அதிமுக விவகாரத்தில் எடப்பாடி கையில் அனைத்து வந்துவிட்டது இரட்டை இலையை நான் குறைத்து மதிப்பிடவில்லைஅதிமுகவிற்கு என்று வலுவான கட்டமைப்பு உள்ளது. ஆனால் அதிமுக, பாஜகவோடு இருக்கும் வரை தொடர்ந்து மக்கள் இரண்டு கட்சிகளுமே புறக்கணித்து கொண்டே தான் இருப்பார்கள்தேசிய அளவில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்தால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளது முற்றிலும் உண்மை.அமலாக்கத்துறை என்பது எதிர்க்கட்சிகளை அச்சு றுத்துவதற்கும் பயமுறுத்துவதற்கும் தான் தற்போது பயன்படுத்தப்ப ட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

    • போதை பொருட்கள் விற்பனை குறைந்துள்ளது
    • விஜிலென்ஸ் கமிட்டி அமைத்து தொடர்ந்து கண்காணிப்பு

    திருச்சி, 

    திருச்சி மண்டலத்தி ற்குட்பட்ட காவல் துறையில் பணி செய்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணி செய்து வருபவர்களின் குடும்பத்தார் களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் வளாகத்தில் இன்று நடந்தது.இதில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், திருச்சி சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் மற்றும் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலி சூப்பரண்டுகள் கலந்து கொண்டனர்பின்னர் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் நிருப ர்களிடம் கூறும்போது;-தமிழக சட்டம் ஒழுங்கு காவல் துறை தலைமை இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் சீருடை பணியாளர்களின் குடும்பத்தார் மற்றும் குழந்தைகளுக்கான வேலை வாய்ப்பு முகாமை இன்று துவங்கி வைத்துள்ளோம்.600 பேர் இந்த முகாமில் கலந்து கலந்து கொண்டு ள்ளார்கள். அவர்களை வேலைக்கு தேர்வு செய்ய 100 தனியார் கம்பெனி அதிகாரிகள் வந்திரு க்கிறார்கள். இதன் மூலம் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்கி ன்றோம்.போதைப் பொருட்கள் விற்பனைதிருச்சி மத்திய மண்டல பகுதிகளில் உள்ள பள்ளி - கல்லூரிகளை சுற்றி உள்ள பகுதிகளில் தற்போது போதை பொருட்கள் விற்பனை முற்றிலும் குறைந்துள்ளது. மேலும் பள்ளி கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்துவிஜிலென்ஸ் கமிட்டி உருவாக்கி காவல்து றையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தடையை மீறி மது பாட்டில்கள் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக குண்டாசில் கைது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு மாவட்டத்தில் 96 பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
    • பெற்றோர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் 28 பள்ளிகளில் 2,649 மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப் பட்டு வருகிறது. திங்கட் கிழமை கோதுமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார்,

    செவ்வாய்க்கிழமை சேமியா காய்கறி கிச்சடி, புதன்கிழ மை வெண்பொங்கல் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை அரிசி உப்புமா காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை சோள காய்கறி கிச்சடி ரவா கேசரி போன்றவை வழங்கப் பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று முதல் கூடுதலாக 32 பள்ளிகளில் 5,793 மாணவ- மாணவிகளுக்கு இந்த காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் தாளவாடி மலைப்பகுதியில் 32 பள்ளிகளில் 738 மாணவ-மாணவிகள் பயனைந்து வருகின்றனர். மொத்தமாக ஈரோடு மாவட்டத்தில் 96 பள்ளிகளை சேர்ந்த 9,180 மாணவ -மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

    இன்று காலை ஆசிரியர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அமைச்சர் சு.முத்துசாமி விரிவுபடுத்தப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பல குழந்தைகள் காலையில் உணவருந்தாமல் பள்ளிக்கு வருகின்றனர். இது பல விளைவுகளை ஏற்படுத்தும். காலை உணவை கொடுத்து அனுப்பும் அளவிற்கு பல குடும்பங்கள் பணிச்சுமையின் காரணமாக முடியாமல் போகின்றன.

    இதனால் குழந்தைகள் பள்ளிக்கு வராத நிலை உள்ளது. அவர்களது உடல்நிலை இதையெல்லாம் மனதில் வைத்து சில இடங்களில் முதல்-அமைச்சர் கவனத்திற்கு வந்தது. நேரடியாகவும் அவர் பார்த்தார்.

    குழந்தைகளின் உடல் நிலை பாதுகாக்கவும் அவர்களின் குடும்பத்தாருக்கு சுமையை குறைப்பதற்காகவும் மாணவ-மாணவிகள் பள்ளியில் வருவதை அதிகரிப்ப தற்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்- அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    ஈரோடு மாவட்டத்தில் மொத்தமாக 2-ம் கட்டமாக இன்று இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அத்தனை பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

    மாநகராட்சி எல்லைக்குள் இருக்கின்ற மாநகராட்சி அரசு பள்ளிகளில் இந்த திட்டம் 32 பள்ளிகளில் கூடுதலாக தொடங்கப்ப ட்டுள்ளது.

    அதில் 5 ஆயிரத்து 793 மாணவ மாணவிகள் பயன் பெறுவார்கள். இந்த வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு குடும்பத்திற்கும் குழந்தை கள் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டு வதாக அமைந்திருக்கிறது.

    வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு தமிழ்நாட்டில் இந்த திட்டம் செயல்படு த்தப்பட்டு வருகிறது.

    மற்ற மாநிலங்களை சேர்ந்த முதல்-அமைச்சர் களும் இந்த திட்டம் பாராட்டும் அளவிற்கு அமைந்துள்ளது. பெற்றோ ர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.

    மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் நல்ல வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார்.

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சில பிரச்சனைகள் இருக்கின்றன. அவ ர்களுக்கு கை கொடுக்க வேண்டியது அரசின் கடமை என்ற காரண த்தினால் 6 முதல் 12 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உய ர்கல்வி வருகின்றபோது மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்ப தற்கான உதவித்தொகை திட்டத்தை முதல் - அமைச்சர் மாணவிகளுக்கு மட்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

    காலை உணவு திட்டம், ஆயிரம் ரூபாய் திட்டம் இதையெல்லாம் பார்க்கும் போது பள்ளிகளில் சேர்கி ன்ற மாணவர்களின் எண்ணிக்கை அரசு பள்ளி களின் படிப்பு, கல்லூரிக ளில் சேர்கின்ற மா ணவிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்து இருக்கின்றது.

    இந்த திட்டம் நல்ல நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டி ருக்கிறது. மற்ற மாநிலங்க ளோடு தமிழ்நாடு போட்டி யிட்டு அதிகமான மாண வர்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். போன்ற சிவில் தேர்வுகளை வெற்றி பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது.

    இப்படி பல திட்டங்கள் மாணவர்களை நோக்கி கொண்டு வரப்ப ட்டுள்ளன. மகளிர்க்கான உரிமை தொகை ஒரு கோடி குடும்பத்திற்கு கிடைக்கும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்து இருக்கின்றார்.

    அதில் என்ன குறைபாடுகள் இருந்தாலும் அதை சரி செய்ய முதல்-அமைச்சர் தயாராக இருக்கின்றார். சேதமடைந்த அரசு பள்ளிகள் கட்டிடங்களை சீரமைக்க கணக்கெடுத்து வருகின்றோம்.

    அத்திக்கடவு -அவிநாசி திட்டம் 106.8 கிலோமீட்டர் நீளத்திற்கு முழுமையாக சோதனை நடத்தப்பட்டது. 83 கிளைகள் இருக்கின்றன. 1045 குளங்களுக்கு இணைப்பு வழங்கப்ப ட்டுள்ளது.

    அதற்கான சோதனை நடந்து வருகிறது. இந்த பணிகள் நடந்து வரும்போது தேதி விரைவில் அறிவிக்க ப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமநாதபுரத்தில் பா.ஜனதாவை வலுப்படுத்துவோம் என்று மாவட்ட தலைவர் தரணி முருகேசன் பேட்டியளித்துள்ளார்.
    • பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளால் இந்தியா வல்லரசு நாடாக திகழ்ந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா புதிய தலைவராக தரணி முருகேசன் பொறுப் பேற்றுக் கொண்டார்.

    ராமநாதபுரம் மாவட்ட முன்னோடி இயற்கை வேளாண் விவசாயியும், தரணி வேளாண் ஆராய்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் தலைவரும், மாவட்ட பா.ஜனதா பொருளாளருமான தரணி முருகேசனை ராமநாதபுரம் புதிய மாவட்ட தலைவராக மாநில தலைவர் அண்ணா மலை நியமித்தார். இதனை தொடர்ந்து நிர்வாகிகள் தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தரணி முருகேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளால் இந்தியா வல்லரசு நாடாக திகழ்ந்து வருகிறது. மத்தியில் மட்டுமின்றி பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகி றது. அகில இந்திய அளவி லும் அசைக்க முடியாத சக்தியாக பா.ஜனதா விளங்கி வருகிறது.

    அதேபோல தமிழகத்தில் மாநில தலைவர் அண்ணா மலையின் செயலாற்றல் காரணமாக பா.ஜனதா எழுச்சியுடன் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது.மாநிலத்தின் கடைக்கோடி கிராமத்திலும் தாமரை சின்னமும், பா.ஜனதா கொடியும் சென்றடைந்து உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத் தில் பா.ஜனதா சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதி, ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி மற்றும் மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த உள்ளாட்சி அமைப்புகளையும் கைப்பற்ற கூடிய அள விற்கு எங்களின் கட்சிப் பணியும், செயல்பாடும் அமையும்.

    அனைத்து சமுதாய மக்களின் ஆதரவைவும் பெறுவதற்கு தீவிரமாக பணியாற்றுவோம். மூத்த நிர்வாகிகள், முன்னோடி களின் ஆலோசனையும் பெற்று அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியை வளர்ச்சி பாதை நோக்கி கொண்டு செல்வோம்.

    எந்த தேர்தல் நடை பெற்றாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பா.ஜனதா வெற்றி பெறும் அளவிற்கு கட்சியை வலுப்படுத்து வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொம்மன், பெள்ளியை பிரதமர் டெல்லிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
    • பிரதமரிடம் எங்கள் பகுதிக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை கேட்டுள்ளோம் என்றனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு இன்று பிரதமர் மோடி வந்தார்.

    அவர் அங்கு ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் இடம் பெற்ற பாகன் தம்பதியான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பாராட்டினர்.

    பின்னர் சிறிது நேரம் அவர்களுடன் கலந்துரையாடினார். பிரதமரிடம் தாங்கள் பேசியதும், பிரதமர் தங்களிடம் என்ன பேசினார் என்பது குறித்து பெள்ளி கூறியதாவது:-

    பிரதமர் நேரில் வந்து எங்களை சந்தித்ததே பெரும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. அவர் எங்களை நேரில் வந்து சந்திப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    பிரதமர் காப்பகத்திற்குள் காரில் வந்ததும், காரை விட்டு இறங்கி நேராக எங்களை நோக்கி வந்தார்.

    வந்ததும், எங்கள் இருவரின் கைகளையும் பற்றி உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என்று கூறினார்.

    பின்னர் எங்களிடம், ரகு, பொம்மி யானையை எப்படி வளர்த்தீர்கள். யானைகள் உங்களிடம் எப்படி பழகியது. எவ்வாறு உங்களுடன் இணைந்து பழக தொடங்கியது என பல்வேறு தகவல்களை கேட்டு எங்களுடன் உரையாடினார்.

    அதற்கு நாங்கள், இந்த 2 குட்டி யானைகளையும் எங்களது பிள்ளை போல் பாவித்து வளர்த்ததாக தெரிவிக்கவே, அதை கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டார்.

    மேலும் நீங்கள் வளர்த்தது போல யாரும் யானைகளை இப்படி பராமரித்தது இல்லை. கேரள, கர்நாடகாவில் கூட இது போன்று யாரும் பராமரித்தது இல்லை.

    அந்த ஆவணப்படத்தில் நீங்கள் யானை குட்டிகளை பராமரிப்பதற்கு பட்ட கஷ்டங்களை தெரிவித்தது, அதற்காக நீங்கள் செய்த தியாகங்களை எல்லாம் அதில் பார்த்தேன். அதை பார்த்தவும் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதனால் தான் நான் உங்களை சந்திக்க வந்ததாக தெரிவித்தார்.

    பிரதமர் படத்தை முழுவதுமாக பார்த்து விட்டு எங்களுடன் உரையாடியது பெருமையாக இருந்தது.

    அத்துடன் எங்கள் இருவரையும் பிரதமர் டெல்லிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். ஆனால் நாங்கள் மறுப்பு தெரிவித்தோம். அதற்கு அவர் நீங்கள் கட்டாயம் டெல்லி வர வேண்டும் என்றார்.

    ரகு, பொம்மி யானைகளுடன் நீங்கள் இன்னமும் தொடர்பில் இருக்கிறீர்களா? என கேட்டார். நாங்கள் இன்னமும் தொடர்பில் இருக்கிறோம் என்றோம்.

    நாங்கள் பிரதமரிடம் எங்கள் பகுதிக்கு சாலை வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை கேட்டுள்ளோம். அவரும் மாவட்ட கலெக்டரை சந்தித்து நீங்கள் மனு அளியுங்கள். நான் அவரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க சொல்கிறேன் என உறுதியளித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருநாவுக்கரசர் எம்.பி. வலியுறுத்தல்
    • திருச்சி அரிஸ்டோ பாலப்பணிகள் நிறைவுற்றதை ஆய்வு செய்தார்

    திருச்சி,

    ராணுவ நில விவகாரத்தால் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் பணிகள் நடைபெற்று வரும் அரிஸ்டோ மேம்பால பணிகளை இன்று திருநாவுக்கரசர் எம்பி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது ;-7 ,8 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்த இந்த அரிஸ்டோ மேம்பால பணிகள் தற்போது ஏறக்குறைய நிறைவு பெறும் நிலையில் உள்ளது.இதற்கு ஒத்துழைப்பு தந்த மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவ இடத்துக்கு மாற்று இடம் தந்த தமிழக முதலமைச்சர், திட்டம் நிறைவேற முயற்சி மேற்கொண்ட அமைச்சர்கள் கே.என். நேரு,அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.தற்போது இந்த பாலத்தில் வர்ணம் பூசுதல் மற்றும் மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. இன்னும் பத்து நாட்களில் இந்த பணிகள் நிறைவடையும். அதன் பின்னர் கலந்தாலோசித்து விரைவில் ஒரு தேதி குறிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும்.ஆன்லைன் சூதாட்டத்தால் பல பேர் தற்கொலை செய்தனர்.இப்போது அவர்களின் உயிரை காப்பாற்ற வகையில் மசோதா சட்டமாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைத்த தீர்மானத்தில் கையெழுத்திட்ட கவர்னருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.கவர்னர் நல்ல சட்டம் தெரிந்த நபராக இருக்கின்ற காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மசோதாக்களுக்கும் அவர் கையெழுத்திட வேண்டும்.கவர்னர் என்பவர் மத்திய மாநில அரசுகளுக்கு பாலமாக இருக்க வேண்டுமே தவிர அதற்கு தடையாக இருக்கக் கூடாது.சில தீர்மானங்கள் காலாவதியாகி விட்டதாக எப்படி சொல்ல முடியும்.பெரும்பான்மை மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் எடுக்கும் முடிவுகளை நிறைவேற்ற கவர்னர் ஒத்துழைக்க வேண்டும்.

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த 2 ஆண்டுகளிலும் எந்த வேலைகளும் நடக்கவில்லை.
    • கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    கோவை,

    அ.தி.மு.க சார்பில் கோவை குனியமுத்தூர், இடையர்பாளையம், சுகுணாபுரம், சுண்டக்காமுத்தூர், மதுக்கரை ஆகிய இடங்களில் நீர்-மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு நீர்-மோர் பந்தலை திறந்து வைத்ததுடன், பொதுமக்களுக்கு தர்ப்பூசணி, இளநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

    குனியமுத்தூரில் நீர்-மோர் பந்தலை திறந்து வைத்ததுடன், அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, நீர்-மோர் பந்தல் அருகே அம்பேத்கரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த உருவப்படத்துக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருப ர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர்-மோர் பந்தல் திறக்கப்பட்டு உள்ளது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த 2 ஆண்டுகளிலும் எந்த வேலைகளும் நடக்கவில்லை.

    கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் கனவு திட்டமான அவினாசி-அத்திக்கடவு திட்டம், மேம்பாலங்கள் அமைப்பது, சாலைகள் போடுவது போன்ற அனைத்து திட்டங்களுமே மெதுவாக நடந்து வருகிறது.

    மேலும் கோவைக்கு புதிதாக எந்த திட்டங்களும் கொண்டு வரவில்லை. எனவே கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    நாங்கள் ஆட்சியில் இருந்த போது கொரோனா காலத்தில் எல்லா இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் இப்போது எந்த ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட வில்லை.

    சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் மக்களின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து எடுத்து கூறிகிறார். அவை எல்லாம் வெளியே தெரிவது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.1,312 கோடி முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மின்சார வாரியத்திற்கு சேமித்துள்ளது
    • இந்த கோடைகாலத்தை சமாளிக்க கூடுதலான மின்சாரம் இருக்கிறது

    கரூர்,

    மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கரூர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கி வருகிறோம். இரு தினங்களுக்கு முன்பு 400 மில்லியன் யூனிட் ஒரே நாளில் மின்நுகர்வு பயன்பாடு வந்துள்ளது.ஒரு நாள் பயன்பாடாக ஏறத்தாழ 40 கோடி யூனிட்டை மக்கள் பயன்படுத்தி உள்ளனர். எந்தவித தடையும் இல்லாமல் சீரான மின்வினியோகம் வழங்கப்பட்டுள்ளது. ஒருநாளில் அதிகபட்ச மின்நுகர்வு இதுதான். இந்த மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் முதலில் இருந்துதான் காற்றாலையின் உற்பத்தியை எதிர்பார்க்கிறோம். வழக்கமாக அடுத்த மாதம் தான் காற்றாலை உற்பத்தி தொடங்கும். கடந்த காலங்களில் தேவைக்கேற்ப மின்சாரம் எக்ஸ்சேஞ்சில் வெளிச்சந்தையில் வாங்குவார்கள். தற்போது அது தவிர்க்கப்பட்டு மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கு எவ்வளவு மின்சாரம் கூடுதலாக தேவைப்படும் என்பதை கணக்கிடப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி அதற்கான டெண்டர் விடப்பட்டு ஒரு யூனிட் ரூ.8.50 என விலை நிர்ணயம் செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டெண்டர் விடாமல் எக்ஸ்சேஞ்சில் வாங்கினால் ஒரு யூனிட் ரூ.12-க்கு தான் வாங்கி இருக்க வேண்டும். இதன்மூலம் இந்த கோடை காலத்திற்கு மட்டும் ரூ.1,312 கோடி முதல்-அமைச்சரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மின்சார வாரியத்திற்கு சேமிக்கப்பட்டு இருக்கிறது. மின்வாரியம் தொடர்பான புகார்கள் இருந்தால் மின்னகத்திற்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டால் அதற்கான குறைகள் உடனுக்குடன் களையப்படும். தமிழகத்தில் இப்போது வரை சீரான மின்வினியோகம் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கோடைகாலத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாமல், சீரான மின்வினியோகம் வழங்குவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே எந்தவித பயமும், அச்சமும் தேவையில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததன் காரணமாக இந்த கோடைகாலத்தை சமாளிக்க கூடுதலான மின்சாரம் இருக்கிறது. எனவே மின்தேவை இன்னும் அதிகரித்தாலும் கூட அதை சமாளிப்பதற்கும் மின்சார வாரியம் தயாராக உள்ளது. அதனால் கோடைகாலத்தில் மின்சார தட்டுப்பாடு இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

    • விநாயகர் சதுர்த்தியன்று சந்திரமுகி-2 வெளியாகும்.
    • மதுரையில் நடிகர் ராகவாலாரன்ஸ் பேட்டியளித்தார்.

    மதுரை

    ராகவா லாரன்ஸ் நடிப்பில் ருத்ரன் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

    இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் மதுரை செல்லூர் திரை யரங்கில் ரசிகர்க ளுடன் அமர்ந்து ருத்ரன் படத்தைப் பார்த்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    அம்மா பாசம் என்பதால் ருத்ரன் படத்தில் நடித்தேன். குடும்பம், குடும்பமாக ருத்ரன் பார்க்க வருகிறார்கள். இதனை மாஸ் படமாக்கி வசூலை கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி.

    "செல்போனுக்கு கொடுக்கும் மரியாதை கூட, தாய்க்கு தருவதில்லை" என்று நான் இந்த படத்தில் பேசிய வசனம், ரசிகர்க ளிடம் பெரிய அளவில் சென்று சேர்ந்துள்ளது. படத்தை பார்த்துவிட்டு நிறைய தாய்மார்கள் செல்போனில் கூப்பிட்டு பாராட்டுகின்றனர். நான் குடும்பத்தோடு அதிகம் இணக்கமாக இருப்பவன். என் திரையுலக வெற்றிக்கு குடும்ப படங்களே காரணம்.

    இப்போது நல்ல படத்திற்கு கூட விமர்சனம் வருகிறது. விமர்சனம் என்பது தனிநபர் விமர்ச னமாக இருக்கக்கூடாது. எடுக்கும் படத்தை நன்றாக எடுக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்பு வார்கள். அதில் சிறுதவறு ஏற்பட்டால் அது குற்றமாகாது. எவ்வளவு விமர்சனம் செய்தாலும், இந்த படம் தியேட்டரில் வசூலை குவிக்கிறது. அவர்களின் விமர்சனத்திற்கு இதுவே பதிலடியாகும்.

    நல்ல கதை வந்தால், மதுரையை பற்றிய படம் எடுப்பேன். 'சந்திரமுகி-2' பணி கிட்டத்தட்ட முடிந்து விட்டது. 3 பாடல், ஒரு சண்டை மட்டுமே பாக்கி உள்ளது. ஜிகர்தண்டாவும் முடிந்து விட்டது.

    காஞ்சனா-2 படத்திற்கு கதை எழுதி வருகிறேன். பெரிய இடைவெளி இல்லாமல், இனி தொடர்ந்து படங்களில் நடிப்பேன். 'சந்திரமுகி-2' விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டதி.மு.க. செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
    • திகழ்ந்துவரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை யில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    கள்ளக்குறச்சி:

    கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டதி.மு.க. செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய துணைக்கண்டத்தின் சிறப்புமிகு மாநிலமாக தமிழகத்தை தலை நிமிர்த்தி மற்ற முதல்வர்களுக்கு எல்லாம் உதாரணமாக திகழ்ந்துவரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை யில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி சம சீராக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் என்ற அடிப்படையில் ஆட்சி நடத்தி வரும் முதல மைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் ஓரணியில் நின்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன் காரணமாகவே தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்பாடு ஆகியவை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதனை நடுநிலையாளர்களும் ஒத்துக்கொள்வார்கள். அதேசமயம் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாட்டு மக்கள் கொடுத்து வரும் ஆதரவு அவர் செல்லும் இடங்களில் எல்லாம் காணப்படும் வரவேற்பு குறிப்பாக இளைஞர்களிடையே காணப்படும் எழுச்சி இவற்றைக் கண்டு எதிர்க்கட்சியினர் பொறாமை கொண்டு சேர்க்கை வாரி தூற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சியினரின் பொய் பிரச்சாரம் தமிழக மக்களிடையே எடுபடவில்லை. மாறாக எள்ளி நகையாடும் அளவிற்கு எதிர்க்கட்சி களின் செயல்பாடு களை விமர்சித்து வருகின்றனர். ஒவ்வொரு துறையிலும் தீட்டப்படும் திட்டமானது மாநிலத்தின் வளர்ச்சி அதன் மூலம் தமிழக மக்களின் பொருளாதார மேம்பாடு என்ற ஒரே நோக்குடன் செயல்படுத்தி வருவதால் இன்னும்2 ஆண்டுகளில் தமிழகம் அபரீத வளர்ச்சி பெறும். அந்த அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தீவிர கவனம் செலுத்தி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் மாவட்ட மக்களின் நல வாழ்வு மேம்பாட்டுக்கும் கேட்கும் அனைத்து திட்டங்களையும் மற்றும் நிதி உதவிகளையும் வழங்கி வருவதுடன் மாவட்டத்தின் வளர்ச்சிக்கான தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நியமித்து வளர்ச்சி பணியை துரிதப்படுத்தி வருகிறார். மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான எ.வ.வேலு தனது சொந்த மாவட்டமான திருவண்ணாமலை விட கள்ளக்குறிச்சி மாவட்ட த்தின் வளர்ச்சிக்கு அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகிறார். கொள்கிறேன்.இவ்வாறு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.கூறினார்.

    ×