என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளியல்"

    • அம்மன்நகர் பகு தியில் செல்லும் ஓடையின் குறுக்கே மழை நீரை சேமிக்க வைக்கும் வகையில் ஒரிரு மாதங்களுக்கு முன்பு ரூ 15 லட்சத்தில் தடுப்பணை கடப்பட்டது.
    • தொடர்ந்து மழை பெய்தத தால் ஓடையின் வழியாக தடுப்பணை நீர்தேக்கம் பகுதிக்கு மழை நீர் வந்து சேர்ந்தது. தற்போது முழு மையாக நிரம்பி விட்டது.

    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் அருகே வெப்படை அடுத்த சவுதா புரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அம்மன்நகர் பகு தியில் செல்லும் ஓடையின் குறுக்கே மழை நீரை சேமிக்க வைக்கும் வகையில் ஒரிரு மாதங்களுக்கு முன்பு ரூ 15 லட்சத்தில் தடுப்பணை கடப்பட்டது.

    கடந்த சில வாரமாக தொடர்ந்து மழை பெய்தத தால் ஓடையின் வழியாக தடுப்பணை நீர்தேக்கம் பகுதிக்கு மழை நீர் வந்து சேர்ந்தது. தற்போது முழு மையாக நிரம்பி விட்டது. நிரம்பி தடுப்பணை நீர் தேக்கத்தை பார்த்தால் கடல் போல காணப்படுகிறது. கொடிவேரி போல தடுப்பணை வழியாக தண்ணீர் செல்கிறது.

    கடந்த சில நாட்களாக தொடர் விடுமுறை என்ப தால், சுற்று வட்டாரத்தைv சேர்ந்த ஏராளமான பொது மக்கள், சிறுவர்கள தடுப்ப ணையில் உற்சாகமாக குளித்தனர். தற்போது இந்த தடுப்பணை நீர் தேக்கம், அந்த பகுதியின் பொழுது போக்கு இடமாக மாறியுள்ளது.

    • சீரான வெப்பநிலை இருக்க வேண்டியது அவசியமாகும்.
    • கதகதப்பாக இருக்குமாறு குழந்தைகளை படுக்க வைக்க வேண்டும்.

    பெண்களின் கர்ப்ப காலம் என்பது 37 வாரங்கள் கொண்டதாகும். இந்த காலம் முழுவதுமாக பூர்த்தியடைந்து பிரசவிக்கப்படும் குழந்தைகள், சீரான உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தோடு பிறக்கிறார்கள். ஆனால் பிரசவ தேதிக்கு சில மாதங்கள் முன்பாகவே பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு சில ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும். அவற்றை தடுக்க அந்த குழந்தைகளுக்கு முறையான பராமரிப்பு வழங்குவது முக்கியமானதாகும்.

    குறைமாதத்தில் பிறந்த குழந்தையை மட்டுமில்லாமல், பிரசவித்த தாயின் ஆரோக்கியத்திலும் போதுமான கவனம் செலுத்த வேண்டும். குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தகுந்த பாதுகாப்பும். உரிய சிகிச்சையும் வழங்கப்படும். வீட்டிற்கு வந்த பின்பு அந்த குழந்தைகளை முறையாக கவனித்துக்கொள்வதற்கான சில வழிகள்.

     சீரான வெப்பநிலை:

    குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் இருக்கும் அறையில், சீரான வெப்பநிலை இருக்க வேண்டியது அவசியமாகும். இதன் காரணமாகவே மருத்துவமனைகளில் குழந்தைகளை இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கின்றனர். எனவே வீட்டிற்கு வந்த பின்னும், குழந்தைக்கு சீரான வெப்பநிலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம், குழந்தைகளின் வளர்ச்சியும், ஆரோக்கியமும் சீராக இருக்கும்.

    வீட்டில். துணிகளை அடுக்கடுக்காக விரித்து அதன்மேல் கதகதப்பாக இருக்குமாறு குழந்தைகளை படுக்க வைக்க வேண்டும். முடிந்தவரை, கனமான போர்வைகளை தவிர்த்து காட்டன் புடவைகளை தேர்வு செய்யுங்கள். தெர்மாமீட்டர் கொண்டு, குழந்தையின் உடல் வெப்பநிலையை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். குழந்தையின் உடல் வெப்பநிலை 36.5 முதல் 37.4 டிகிரி செல்சியஸ் வரையும், அறையின் வெப்பநிலை 20 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்க வேண்டும்.

     சீரான தூக்கம்:

    பிறந்த குழந்தைகளுக்கு சீரான தூக்கம் அவசியமானது. அதிலும், குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு எவ்வித தொந்தரவும் இன்றி சீராக உறங்க தேவையான சூழலை ஏற்படுத்தி தர வேண்டும். அவர்களை படுக்க வைக்கும் அறையில், சீரான வெப்பநிலையும், மங்கலான வெளிச்சமும் இருக்க வேண்டும். மற்ற குழந்தைகளை விட இவர்களுக்கு இரவு நேரத்தில் பசி அதிகமாக இருக்கும். எனவே, அடிக்கடி பாலூட்ட வேண்டும்.

     குளியல்:

    குறைமாத குழந்தைகளை குளிக்க வைக்கும்போது உபயோகிக்கும் தண்ணீர், சோப்பு, லோஷன் ஆகிய அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். தண்ணிரின் வெப்பநிலை குறைந்தபட்சம் 100 டிகிரி பாரன் ஹீட்டாக இருக்க வேண்டும். குழந்தையின் தலையை சுத்தம் செய்ய, தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு எந்த ரசாயனம் நிறைந்த பொருட்களையும் பயன்படுத்தக்கூடாது.

    குழந்தையின் எடை 2.5 கிலோ அளவுக்கு வரும் வரை கடற்பாசி கொண்டு குளிக்க வைக்கலாம். குழந்தை பிறந்த ஒரு மாதம் வரை கடைகளில் கிடைக்கும் லோஷன் பவுடர், எண்ணெய் உட்பட எந்த பொருளையும் பயன்படுத்தாமல் தவிர்ப்பது சிறந்தது.

    பயணத்தை தவிர்க்கவும்:

    குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சுற்றுச் சூழல் காரணமாக எளிதில் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களின் நுரையீரல் வளர்ச்சி குறைவாக இருக்கும் என்பதால், காற்று மாசு காரணமாக எளிதில் மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்படலாம். எனவே, குறைந்தபட்சம் ஓராண்டு வரை பயணங்களை தவிர்ப்பது சிறந்தது.

    • தினமும் யானை மங்களத்தை பிரத்யேக குளியல் தொட்டிக்கு அழைத்து சென்று குளிக்க வைத்து வருகிறார்.
    • பக்தர்கள் யானையின் இந்த குதூகலமான குளியலை கண்டு மனம் நெகிழ்ந்து உற்சாகம் அடைந்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் மாசிமக தீர்த்தவாரி தலங்களில் சிறப்பு வாய்ந்த தலமாகும். மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் யானை ஒன்று உள்ளது. இந்த யானைக்கு மங்களம் என பெயர் சூட்டி உள்ளனர். இந்த யானை கடந்த 1982-ம் ஆண்டு காஞ்சி மகா பெரியவரால் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த யானைக்கு 58 வயதாகிறது.

    வயது அதிகமாவதை போல யானையின் சுட்டித்தனமும் அதிகரித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் யானை மங்களத்துக்கு சளி தொந்தரவு உள்ளது. இதனால் யானை தமிழக அரசின் சிறப்பு புத்துணர்வு முகாமிற்கு செல்வதில்லை. சிறப்பு புத்துணர்வு முகாமில் வழங்கப்படும் உணவு, மூலிகை மருந்துகள், உடற்பயிற்சிகள் கோவில் வளாகத்திலேயே யானைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    வெயில் சுட்டெரித்து வருவதால், பாகன் அசோக்குமார் தினமும் யானை மங்களத்தை பிரத்யேக குளியல் தொட்டிக்கு அழைத்து சென்று குளிக்க வைத்து வருகிறார். அதன்படி, வழக்கம்போல் யானை மங்களம் குளியல் தொட்டிக்கு அழைத்து வரப்பட்டது. தொட்டியில் இறங்கிய யானை மங்களம் சுமார் ஒரு மணிநேரம், துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சியும், இதனை வேடிக்கை பார்த்த பக்தர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஆனந்த குளியல் போட்டது.

    கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் யானையின் இந்த குதூகலமான குளியலை கண்டு மனம் நெகிழ்ந்து உற்சாகம் அடைந்தனர்.

    மேலும், சிலர் இதனை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • வெயில் காலத்தில் வறுத்து சாப்பிடும் உணவுகளை தவிர்க்கலாம்.
    • பழச்சாறுகளை எடுத்து கொள்வது வியர்க்குரு பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும்.

    கோடைக்காலத்தில் பெரும்பாலானோர் பாதிக்கப்படுவது வியர்க்குரு பிரச்சனையில் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பிரச்சனை உள்ளது. வியர்குரு அதிகாமாக வருவதற்கு காரணம் என்னவென்றால் வியர்வை காரணமாக வரும் பாக்டீரியல் கிருமியின் அதிகப்படியான உற்பத்தி தான் இந்த வியர்குரு வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

    இந்த வியர்குருவில் இருந்து நாம் தப்பிக்க வேண்டுமானால் தினமும் மூன்று நேரம் குளியல் என்ற நடைமுறையை இந்த காலத்தில் கொண்டு வரவேண்டும். இவ்வாறு மூன்று வேலை குளிக்கும் போதும் நமது உடலில் வியர்வையால் ஏற்படும் பாக்டீரியாவில் இருந்து விடுபடலாம்.

    அதையும் தாண்டி உங்களுக்கு வியர்குரு வந்தால் நல்ல ஆன்டி பாக்டீரியல் பவுடரையும் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு மிகவும் லேசான காட்டன் உடைகளை பயன்படுத்துதல் நல்லது.

    அதிக படியான இந்த வெயில் காலத்தில் வறுத்து சாப்பிடும் உணவுகளை தவிர்க்கலாம். அதிக கார உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் வியர்வை பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

    அதிகப்படியான பழம், பழச்சாறுகளை எடுத்து கொள்வது வியர்குரு பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும்.

    • ஒரு மனிதனைக் கழுவ 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது.
    • சரி, இது உடலை மட்டும்தான் சுத்தம் செய்கிறதா என்றால், இல்லை.

    இன்றைய காலகட்டத்தில் குளிப்பதே பெரும்பாடாக உள்ளதாக ஜென் Z தலைமுறையினர் நொந்துகொள்கின்றனர். அனைத்து பிரச்சனைக்கும் தீர்வை வைத்திருக்கும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தற்போது ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான் மனிதர்களைக் குளிப்பாட்டும் நவீன ஹியூமன் வாஷிங் மெஷின்.

    ஜப்பானின் ஒசாகாவைச் சேர்ந்த ஷவர்ஹெட் நிறுவனமான சயின்ஸ் கோ. நிறுவனம் இந்த நவீன வாஷிங் மெஷினை கண்டுபிடித்து 'மிராய் நிங்கன் சென்டகுகி' என்று பெயர்வைத்துள்ளது. இதற்கு எதிர்காலத்தின் மனித வாஷிங் மெஷின் என்பது பொருளாகும்.

     

    இந்த சலவை எந்திரம் ஒரு மனிதனைக் கழுவ 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. நீங்கள் அதன் பிளாசிக் நாற்காலி மீது ஏறியதும் மெஷினில் பாதியளவு வெதுவெதுப்பான நீர் நிரம்பும். பின்னர் மெஷினில் இருந்து நீர் குமிழிகளாக வெடிக்கிறது.

    இது உங்கள் தோலில் இருந்து அழுக்குகளை நீக்குகிறது. நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியில் உள்ள மின் உணரிகள், உங்களின் உடலின் உயிரியல் தகவல்களைச் சேகரித்து நீங்கள் பொருத்தமான வெப்பநிலையில் கழுவப்படுவதை உறுதிசெய்யும்.

    இதில் பிளாஸ்டிக் 'மசாஜ் பந்துகள்' அடங்கும். சரி, இது உடலை மட்டும்தான் சுத்தம் செய்கிறதா என்றால் இல்லை. இது உங்கள் மனதையும் அமைதிப்படுத்துகிறது.

     

    மெஷினில் உள்ள செயற்கை நுண்ணறிவு ஏஐ [AI] சென்சார் உங்களின் சேகரிக்கப்பட்ட உடலின் உயிரியல் தகவல்களை ஆராய்ந்து உங்கள் மனதை அமைதிப்படுத்தும் காட்சி மற்றும் ஒலி அடங்கிய வீடியோவை நாற்காலி முன் ஒளிபரப்புகிறது. விளைவு, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் விரைவான குளியல்.

    இந்த அதிநவீன மனித வாஷிங் மெஷின் ஒசாகா கன்சாய் எக்ஸ்போவில் விரைவில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. அங்கு 1,000 விருந்தினர்கள் இந்த குளியலை முயற்சிக்க உள்ளனர்.

    • இயற்கை சிகிச்சை முறைகளில் மிக முக்கியமானது நீராவி குளியல்.
    • காலங்காலமாக, நம் பாரம்பரிய பழக்க வழக்கத்தில் எண்ணெய் குளியல் முறை உள்ளது.

    இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகளில் எண்ணற்ற பலன்கள் உள்ளன. நீர், நெருப்பு, பூமி, ஆகாயம், காற்று ஆகிய பஞ்ச பூதங்களின் சக்தியை கொண்டு இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்தவகையில் நீராவி குளியல் மற்றும் எண்ணெய் குளியலின் நன்மைகள், அதன் சிகிச்சை முறைகள் பற்றி காண்போம்.

    இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை பிரிவு டாக்டர் கல்யாணி கூறியதாவது:

    "இயற்கை சிகிச்சை முறைகளில் மிக முக்கியமானது நீராவி குளியல். இந்த நீராவி குளியல் சிகிச்சை எடுப்பதால் உடலின் தேவையற்ற கழிவுகளான யூரியா, யூரிக் அமிலம் போன்றவை வியர்வையின் வழியாக வெளியேறும். அதனால் உடல் சோர்வு நீங்குவதுடன், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். அதுமட்டுமின்றி உடலில் உள்ள அனைத்து மூட்டு மற்றும் எலும்புகளுக்கும் நெகிழ்வுத்தன்மையும் கிடைக்கும்.

    நீராவி குளியல் உடல் பருமனை குறைக்க உதவும். உடல் வலியை நீக்கும். இதுதவிர வாதநோய், தோல் வியாதிகள், ஆஸ்துமா போன்ற நோய்களை குணமாக்க உதவும். சர்க்கரை, உயர்ரத்த அழுத்த நோயாளிகள் டாக்டரின் ஆலோசனைப்படி மட்டுமே நீராவி குளியல் சிகிச்சை பெறவேண்டும். கர்ப்பிணிகளும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் டாக்டர் அனுமதி பெற்று இந்த சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும்.

    முந்தைய காலத்தில், நீராவி குளியல் எடுப்பவரை கயிற்று கட்டிலின் மேல் அமர வைப்பார்கள். அதன்பிறகு போர்வையால் அவரை போர்த்தி விடுவார்கள். அதற்கு முன்பே, ஒரு சட்டியில் தண்ணீரை ஊற்றி, நொச்சி இலையை போட்டு மூடி அதை நன்கு கொதிக்க வைத்து தயார்நிலையில் வைத்திருப்பார்கள். அதன்பிறகு அந்த சட்டியை கயிற்று கட்டிலின் கீழ் வைத்து சட்டியின் மூடியை அகற்றி விடுவார்கள். அந்த சட்டியில் இருந்து நீராவி கயிற்று கட்டிலின் வழியே போர்வைக்குள் போகும். சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து போர்வையை நீக்கினால் போதும். நீராவி குளியல் எடுப்பவருக்கு நன்கு வியர்த்து உடலின் கழிவுகள் வெளியேறி விடும்.

    தற்போது நவீன முறையில் எளிதாக நீராவி குளியல் சிகிச்சை எடுக்கலாம். இதற்கென நவீன எந்திரம் உள்ளது. அந்த நவீன எந்திரத்தில் உள்ள நாற்காலியில் நீராவி குளியல் சிகிச்சை எடுப்பவரை அமர வைக்க வேண்டும். அவரின் தலை வெளியே தெரியும்படி அந்த நாற்காலியை உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ சரி செய்து கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு அந்த எந்திரத்தில் மூலிகை தைலம் அல்லது நொச்சி தைலம், யூக்கலிப்டஸ் தைலம் இவற்றில் ஏதாவது ஒன்றை ஊற்றி எந்திரத்தை இயக்கி விடலாம். அதிலிருந்து வரும் நீராவி உடல் முழுவதும் நன்கு பரவும். அப்போது உடலில் இருந்து வெளியேறும் வியர்வையின் மூலம் கழிவுகள் வெளியேறும். பொதுவாக நீராவி குளியலின் பலனை 8 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பெறலாம்.

    காலங்காலமாக, நம் பாரம்பரிய பழக்க வழக்கத்தில் எண்ணெய் குளியல் முறை உள்ளது. இதுவே இன்றளவில் 'ஆயில் மசாஜ்' என்று அழைக்கப்படுகிறது. தொடர்ந்து எண்ணெய் குளியலை எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். பொதுவாக வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. அதனால் உடலின் வெப்பநிலை சமச்சீராக இருக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

    ஆயில் மசாஜ்க்கு பதிலாக 'பார்சியல் மசாஜ்' என்பதையும் மேற்கொள்ளலாம். இதன்படி கை, கால், முகம், வயிறு, முதுகு, நெஞ்சுப்பகுதி என உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யலாம். இதுதவிர பழைய முறைப்படி உச்சி முதல் பாதம் வரை முழு உடல் எண்ணெய் குளியல் முறையையும் மேற்கொள்ளலாம்.

    எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவைகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம். இதில் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது அதிக பலன் தரும். சிலருக்கு இது ஒத்துக்கொள்ளாது. எண்ணெய் குளியலில் அறிவியல் பூர்வமாக தற்போது நிறைய முறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. எண்ணெய் தேய்த்து உடலின் தசைகளை தட்டுவதால், உடலில் ரத்த ஓட்டம் சீராகும். தோல் சுரப்பிகளின் பணி சீராக நடக்கும். உடலின் கொழுப்பு குறையும். உடலில் வலி நீங்கும். நன்கு தூக்கம் வரும். முகத்திற்கு பொலிவு கிடைக்கும். வயிற்றின் கழிவுகள் நீங்கும். செரிமான சக்தி அதிகரிக்கும்" என்றார், அவர்.

    • பிறந்த குழந்தையின் சருமம் மிக மென்மையாக இருக்கும்.
    • ஒவ்வொரு குழந்தையின் சருமமும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.

    குழந்தைகளைக் குளிப்பாட்ட நிச்சயம் நலங்குமாவு பயன்படுத்தக்கூடாது. நலங்குமாவில் சேர்க்கப்படுகிற பொருள்கள் யாருக்கு, எந்தவித ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று சொல்வதற்கில்லை.

    பிறந்த குழந்தையின் சருமம் மிக மென்மையாக இருக்கும். ஒவ்வொரு குழந்தையின் சருமமும் ஒவ்வொருவிதமாக இருக்கும். சில குழந்தைகள் அலர்ஜி தன்மையோடு பிறப்பார்கள். குழந்தையின் சருமம் ஓரளவு முதிர்ச்சியடையும்வரை அந்த ஒவ்வாமை தொடரும். ஒரு கட்டத்துக்குப் பிறகுதான் அது சரியாகும்.

    ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருளை அதற்குள் குழந்தையின் சருமத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டாமே.... குறிப்பாக மஞ்சள்... இது குழந்தையின் சருமத்துக்கு பெரிய ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இப்படி நலங்கு மாவில் சேர்க்கப்படுகிற ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வாமை தன்மை இருந்தால் அது குழந்தையின் சருமத்தை பாதிக்கக்கூடும் என்பதால்தான் நலங்குமாவு வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

    • அடிக்கடியோ குளித்தால் சரும செல்கள் எளிதில் பாதிக்கப்படலாம்.
    • ஒரு நாளைக்கு ஒருமுறை குளிப்பது சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும்.

    தினமும் குளிப்பது நல்ல பழக்கம். அது சருமத்திற்கும் நன்மை பயக்கும். ஆனால் சிலர் ஒரு நாளைக்கு பல முறை குளிப்பார்கள். அப்படி உடல் சுத்தத்தை பராமரிப்பது ஆரோக்கியமான பழக்கம் என்றாலும் அது சருமத்திற்கு பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் உடலில் சென்சிட்டிவ் எனப்படும் அதிக உணர் திறன் கொண்ட பகுதிகளில் சருமமும் ஒன்றாகும். ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறையோ, அடிக்கடியோ குளித்தால் சரும செல்கள் எளிதில் பாதிக்கப்படலாம். வாரத்திற்கு 7 முறைக்கு மேல் குளிப்பதும் ஒவ்வொரு முறையும் சோப் அல்லது கிளென்சர் பயன்படுத்துவதும் சருமத்தில் படர்ந்திருக்கும் இயற்கை எண்ணெய் தன்மையை அகற்றி பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்தும். சரும தொற்றுக்கும் வழிவகுத்துவிடும்.

    பாக்டீரியா, கிருமிகள் மற்றும் வறட்சி போன்றவை தாக்காமல் இருக்க சருமத்தில் இயற்கையாகவே பாதுகாப்பு அடுக்கு உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு நாளைக்கு ஒருமுறை குளிப்பது சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும். இறந்த செல்களை நீக்குவதற்கு வித்திடும். ஆனால் ஒரு நாளில் அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

    அப்படி குளிக்கும்போது ஒவ்வொரு முறையும் சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதாவது சருமம் வறட்சி அடைவது, சரும எரிச்சல், சரும தொற்று போன்ற பாதிப்புகள் உண்டாகும். அதிக நேரம் குளிப்பதன் காரணமாக ஒவ்வாமை, நோய்த்தொற்று கூட ஏற்படலாம். அடிக்கடி குளிக்கும் செயல்முறையின்போது உடலை அதிகமாக சுத்தம் செய்தால், சருமத்தை பாதுகாப்பதற்காக ஆன்டிபாடிகளாக செயல்படும் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் உடலில் இருந்து நீங்கிவிடும். மேலும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகளை அதிகம் பயன்படுத்துவது, சரும நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். நல்ல நுண்ணுயிரிகளை உடலில் இருந்து அகற்றிவிடும்.

    • குளிர்ந்த நீர் கலோரிகளை விரைவாக எரிக்கும் தன்மையும் கொண்டது.
    • நீச்சல் வீரர்களுக்கு இதய கோளாறுகள் ஏற்படும் அபாயமும் குறைவு.

    ஆண்கள் குளிர்ந்த நீரில் குளித்தால் உடலில் உள்ள கொழுப்பு எரிக்கப்படும், நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளாவதையும் தடுக்கும் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் சர்க்கம்போலர் ஹெல்த் பத்திரிகையில் 104 ஆய்வுகளின் பகுப்பாய்வு இடம் பெற்றுள்ளது. அதில் குளிர்ந்த நீரில் நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவது உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    குளிர்ந்த நீர் பல்வேறு சுகாதார நன்மைகளை கொண்டிருப்பது அறிவியல் பூர்வமாகவும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குளிர்ந்த நீரில் நீச்சல் அடிக்கும்போது நீரின் சுழற்சி வெளிப்பாடும், உடல் அசைவும் ஒருங்கே அமையப்பெறுகிறது. அந்த சமயத்தில் சருமத்தின் மேற்பரப்பில் உள்ள ரத்த நாளங்களை கட்டுப்படுத்துகிறது. சரும திசுக்களில் ரத்தம் ஆழமாக வேரூன்றி செல்வதால் ரத்த ஓட்டமும் மேம்படுகிறது.

    விளையாட்டு வீரர்கள் போட்டி அல்லது பயிற்சிக்கு பிறகு தசைகளில் வலியை எதிர்கொள்வார்கள். சோர்வும் எட்டிப்பார்க்கும். அந்த சமயத்தில் குளிர்ந்த நீரில் நீராடுவது உடல் வலியை குறைக்கவும் உதவும். தசைகளை தளர்வடைய செய்து சோர்வையும் போக்கும். குளிர்ந்த நீர் கலோரிகளை விரைவாக எரிக்கும் தன்மையும் கொண்டது.

    நீச்சல் வீரர்களுக்கு இதய கோளாறுகள் ஏற்படும் அபாயமும் குறைவு. குளிர் காலங்களில் பயிற்சி மேற்கொள்ளும் நீச்சல் வீரர்களின் உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரித்திருப்பதும், நீச்சல் வீரர்கள் அல்லாதவர்களின் உடலில் இன்சுலின் செறிவுகள் குறைந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதே வேளையில் பனிக்கட்டிகள் சூழ்ந்த கடும் குளிர் நீரில் நீராடுவது ஆபத்தானது. அதிக குளிர்ச்சி உடல் வெப்ப நிலையை குறைத்துவிடும். இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகளை மோசமாக்கிவிடும்.

    உடலில் அதிக அளவு கொழுப்பு சேர்வது இதய நோய், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். உடலில் கொழுப்பின் அளவை குறைக்க சிரமப்படுபவர்கள் குளிர்ந்த நீரில் நீராட முயற்சிக்கலாம்.

    • மதியம் 3 மணி அளவில் ஊருக்கு அருகில் உள்ள அய்யனார் ஆற்றில் குளித்து கொண்டிருந்தார்.
    • அவரை பரிேசாதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    திருவாரூர்

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே மேலகண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மகன் சிவா. கூலித்தொழிலாளி.

    இவருக்கும், திருத்துறைப்பூண்டி தாலுகா ஓவரூரை சேர்ந்த ரகுபதி மகள் சுகந்திக்கும்(வயது22) கடந்த 23-6-2022 அன்று திருமணம் நடைபெற்றது.

    நேற்று மதியம் 3 மணி அளவில் சுகந்தி ஊருக்கு அருகில் உள்ள அய்யனார் ஆற்றில் குளித்து கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென நிலைதடுமாறி தண்ணீரில் மூழ்கினார்.

    இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சுகந்தியை மீட்டு மன்னார்குடி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிேசாதனை செய்த டாக்டர்கள் சுகந்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி 3 மாதமே ஆன நிலையில் ஆற்றில் மூழ்கி புதுப்பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
    • குளிக்கும்போது சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும்.

    தினமும் குளிப்பது நல்ல பழக்கம். அது சருமத்திற்கும் நன்மை பயக்கும். ஆனால் சிலர் ஒரு நாளைக்கு பல முறை குளிப்பார்கள். அப்படி உடல் சுத்தத்தை பராமரிப்பது ஆரோக்கியமான பழக்கம் என்றாலும் அது சருமத்திற்கு பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் உடலில் சென்சிட்டிவ் எனப்படும் அதிக உணர் திறன் கொண்ட பகுதிகளில் சருமமும் ஒன்றாகும். ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறையோ, அடிக்கடியோ குளித்தால் சரும செல்கள் எளிதில் பாதிக்கப்படலாம். வாரத்திற்கு 7 முறைக்கு மேல் குளிப்பதும் ஒவ்வொரு முறையும் சோப் அல்லது கிளென்சர் பயன்படுத்துவதும் சருமத்தில் படர்ந்திருக்கும் இயற்கை எண்ணெய் தன்மையை அகற்றி பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்தும். சரும தொற்றுக்கும் வழிவகுத்துவிடும்.

    எத்தனை முறை குளிக்கலாம்?

    வாரத்திற்கு 10 முறை குளிப்பது தவறில்லை. ஆனால் ஏற்கனவே சரும பிரச்சினை கொண்டிருப்பவர்கள் வாரத்திற்கு 5 முறைக்கு மேல் குளிப்பது தீங்கு விளைவிக்கும் என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. சருமத்தின் தன்மையை பரிசோதித்துவிட்டு மருத்துவரிடம் எத்தனை தடவை குளிப்பது பொருத்தமானது என்று ஆலோசனை கேட்கலாம்.

    அதிகமாக குளித்தால் சருமத்திற்கு என்ன பாதிப்பு நேரும்?

    பாக்டீரியா, கிருமிகள் மற்றும் வறட்சி போன்றவை தாக்காமல் இருக்க சருமத்தில் இயற்கையாகவே பாதுகாப்பு அடுக்கு உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு நாளைக்கு ஒருமுறை குளிப்பது சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும். இறந்த செல்களை நீக்குவதற்கு வித்திடும். ஆனால் ஒரு நாளில் அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

    அப்படி குளிக்கும்போது ஒவ்வொரு முறையும் சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதாவது சருமம் வறட்சி அடைவது, சரும எரிச்சல், சரும தொற்று போன்ற பாதிப்புகள் உண்டாகும். அதிக நேரம் குளிப்பதன் காரணமாக ஒவ்வாமை, நோய்த்தொற்று கூட ஏற்படலாம். அடிக்கடி குளிக்கும் செயல்முறையின்போது உடலை அதிகமாக சுத்தம் செய்தால், சருமத்தை பாதுகாப்பதற்காக ஆன்டிபாடிகளாக செயல்படும் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் உடலில் இருந்து நீங்கிவிடும். மேலும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகளை அதிகம் பயன்படுத் துவது, சரும நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். நல்ல நுண்ணுயிரிகளை உடலில் இருந்து அகற்றிவிடும்.

    குளிக்கும் நேரத்தை குறையுங்கள்

    ஒன்றுக்கு மேற்பட்ட தடவை குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தால், குளிக்கும் நேரத்தை குறையுங்கள். உதாரணமாக, தினமும் 10 நிமிடங்கள் குளித்தால், அதை 5 நிமிடங்களாக குறையுங்கள். எவ்வளவு குறைவாக சருமத்தில் தண்ணீர் படிகிறதோ அவ்வளவு குறைவாக சரும பிரச்சினைகள் ஏற்படும்.

    சூடான நீரை தவிருங்கள்:

    அதிகமாக குளித்தால், சுடுநீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுடுநீர் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி, சருமத்தை வறண்டு போகச் செய்து விடும். வெதுவெதுப்பான அல்லது சாதாரண நீரை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். அதிலும் குளிர்ந்த நீரை பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஏனெனில் குளிர்ந்த நீர் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சரும வறட்சி, அரிப்பு, வீக்கம் போன்ற பாதிப்புகளை குறைக்கும். சரும துளைகள் திறப்பதை தடுக்கும். கூடுமானவரை15 நிமிடங் களுக்கு மேல் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

    மென்மையான குளியல் சோப்பைப் பயன் படுத்துங்கள்:

    குளிப்பதற்கு பயன்படுத்தும் சோப் உள்ளிட்டவை ரசாயன கலப்பு அதிகம் அல்லாமல் இயற்கை தயாரிப்புகளாக இருப்பது நல்லது. இரண்டாவது முறை குளிக்க விரும்பினால் சோப்பை தவிர்த்துவிட்டு தண்ணீரில் அப்படியே குளிப்பதுதான் நல்லது. சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க மென்மையான அல்லது பால் கலந்த ஈரப்பதமூட்டும் சோப்பை பயன்படுத்தலாம். இது அதிகப்படியான குளியலால் ஏற்படக்கூடிய தோல் பிரச்சினைகளை குறைக்கும்.

    உடலை உலர வையுங்கள்:

    குளித்து முடித்ததும் உடலை உலர்வடைய செய்வதற்கு டவலை கொண்டு அழுத்தமாக தேய்க்கக்கூடாது. அது சருமத்தில் உராய்வை, எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். உடலில் இருக்கும் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றி விடும். டவலை கொண்டு மென்மையாக துடைப்பதுதான் சரியானது. உடலில் படிந்திருக்கும் அதிகப்படியான நீரை அகற்றும் விதத்தில்தான் துடைக்க வேண்டும். குளித்து முடித்ததும் 'பாத் ரோப்' எனப்படும் மென்மையான உடையை அணிவது நல்லது. சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் இருக்க வேண்டுமெனில், மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது அவசியமானது.

    • தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
    • தண்ணீரில் அமர்ந்தபடி, போதையில் என்ஜாய் செய்ய ஆரம்பித்தார்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக, வளிமண்டல மேற்கு திசை காற்று வேக மாறுபாட்டின் காரணமாக ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது.

    உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.ஏரிப்பாளையம்,தளி சாலை உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். இந்த நிலையில் நேற்று மாலை தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.அப்போது தாராபுரம் பேருந்து நிலையம் முன்பாக உள்ள மதுபானக் கடையில் இருந்து மது அருந்திய நிலையில் வெளியே வந்த "மதுப்பிரியர்" ஒருவர்,மழை பெய்வதை பார்த்தவுடன் சுமார் 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே அருவி போல் கொட்டிக் கொண்டிருந்த தண்ணீரில் அமர்ந்தபடி, போதையில் என்ஜாய் செய்ய ஆரம்பித்தார்.

    தொடர்ந்து அவர் சிறிது நேரம் அமர்ந்தபடி நடன ஆக்சன்களை செய்தபடி மழையில் நனைந்தபடி இருந்ததை,அங்கிருந்த ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

    ×