என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அக்னிபாத்"

    • அக்னிபாத் திட்டத்தின் கீழ், இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு இந்திய ராணுவத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்படுகிறார்கள்.
    • நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களில் 25 சதவீதம் பேருக்கு மட்டுமே நிரந்தர பணி வழங்கப்படும்.

    கார்கில் போரின் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று [ஜூலை 26] கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மத்திய பாஜக அரசு கொண்டுவந்த ராணுவ ஆட்சேர்ப்பு திட்டமான அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்ற அக்னி வீரர்களுக்கு தங்களது மாநில அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்குவதாக பாஜக ஆளும் 5 மாநிலங்கள் அறிவித்துள்ளது. உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய 5 மாநில முதல்வர்கள் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ், இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு இந்திய ராணுவத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்படுகிறார்கள். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களில் 25 சதவீதம் பேருக்கு மட்டுமே நிரந்தர பணி வழங்கப்படும்.

     

    இந்த திட்டம் இளைஞர்களை பயன்படுத்திவிட்டு அவர்களை தூக்கியெறியும் வகையில் உள்ளது என்றும், முறையாக பயிற்சி கிடைக்காத அக்னிவீரர்களை, ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தும் சிக்கலும் இதில் உள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் இந்த திட்டம் தொடங்கப்பட்ட 2022 ஆம் ஆண்டிலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    சமீபத்தில் பாராளுமன்றத்தில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உயிரிழந்த அக்னி வீரர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், அக்னிபாத் திட்டத்தை ஆதரிக்கும் விதமாக பாஜக ஆளும் 5 மாநில முதல்வர்களும் இந்த முடிவை அறிவித்துள்ளனர்.

    அதன்படி மாநில அரசின் காவல்துறை மற்றும் மாநிலத்தின் ஆயுதக் காவல் படை [PAC] பணிகளில் ஓய்வுபெற்ற அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் அரியானாவில் ஆளும் பாஜக அரசு, மாநிலத்தின் காவல்துறை மற்றும் சிறைத்துறை பணிகளில் அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அக்னிபாத் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பயிற்சிக்கு வந்திருந்தனர்.
    • வழக்கம்போல் துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை வைத்து அக்னி வீரர்கள் பயிற்சி செய்தனர்.

    மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் பீரங்கி பயிற்சி மையம் [Artillery Centre] செயல்பட்டு வருகிறது. இங்கு ஐதராபாத்திலிருந்து அக்னிபாத் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பயிற்சிக்கு வந்திருந்தனர்.

     

    இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கம்போல் துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளை வைத்து அக்னி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத குண்டு வெடித்துள்ளது. இதில் கோஹில் விஸ்வராஜ் சிங் [20 வயது], சைபத் சித் [21 வயது] என்ற இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.

     

    உடனே அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டர். ஆனால் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் உயிரிழந்ததாக அறிவித்தனர். இதனையடுத்து விபத்து தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து தொடர்பான விரிவான விசாரணைக்கு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

    • அக்னிபாத் திட்டத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எதிர்ப்பு
    • இத்திட்டம் ஆயுதப் படைகளின் நீண்டகால பாரம்பரியங்கள் மற்றும் நெறிமுறைகளை சீர்குலைக்கிறது.

    புதுடெல்லி:

    அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் இன்று நடந்த போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது. இந்த திட்டத்தை எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

    இத்திட்டம் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியதாவது:-

    அக்னிபாத் திட்டம் சர்ச்சைக்குரியது. பல ஆபத்துகளை கொண்டுள்ளது. ஆயுதப் படைகளின் நீண்டகால பாரம்பரியங்கள் மற்றும் நெறிமுறைகளை சீர்குலைக்கிறது. இத்திட்டம் ராணுவ பயிற்சியை கேலி செய்வதாக தோன்றுகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட வீரர்களுக்கு நாட்டை பாதுகாக்க ஊக்கம் அளிக்கப்படும் என்பதற்கும், சிறந்த பயிற்சி அளிக்கப்படும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. இந்த திட்டத்தை கைவிடவேண்டும்.

    இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

    • வேலூர் காவல் பணி சேர்ப்பு பள்ளியில் 27ந்தேதி முதல் 29 வரை முகாம்.
    • இணைய தளம் வழியாக விண்ணப்பிப்போர் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பெண்கள் சேர்வது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் அந்தமான், நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் இருந்து இந்திய ராணுவத்திற்கு அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னி வீரர் பணியில் பெண்களை சேர்ப்பதற்கான ஆள் தேர்வு முகாம் வேலூரில் உள்ள காவல் பணிசேர்ப்பு பள்ளியில் வரும் 27ந்தேதி தொடங்கி 29ந்தேதிவரை நடைபெற உள்ளது.

    இணைய தளம் வழியாக விண்ணப்பிப்போர் மட்டுமே முகாமில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். நவம்பர் 1, 2022 முதல் அனுமதி அட்டைகள் இணைய வழியாக வழங்கப்படும். முகாமில் கலந்து கொள்வதற்கான தேதி அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும். நவம்பர் 1ந்தேதிககு பிறகு www.joinindianarmy.nic.in என்ற தளத்திலிருந்து விண்ணப்பதாரர் அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


    அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்பு நடைமுறை முழுவதும் நேர்மையானதாக வெளிப்படைத் தன்மையானதாக இருக்கும். முறைகேடுகளில் ஈடுபடுவதை விண்ணப்பதாரர்கள் தவிர்க்க வேண்டும். கடின உழைப்பு மற்றும் தயார்நிலை ஆகிய தகுதியின் அடிப்படையே உங்களுடைய தேர்வினை உறுதி செய்யும்.

    விண்ணப்பதாரர்கள் ஆட்கள் தேர்வு செய்வது தொடர்பான தங்களுடைய சந்தேகங்களை, சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தை 044-25674924 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • வ.உ.சி.யின் தற்சார்பு கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார்.
    • அப்துல் கலாம் கண்ட கனவுபடி, இந்தியா உலகிற்கே வழிகாட்டியாக திகழும்.

    'ஓலம்' சூழ்ச்சி, வீழ்ச்சி, எழுச்சி என்கிற தலைப்பிலான காணொளி வெளியீட்டு விழா சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஸ்ணவா கல்லூரியில் நேற்று நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட மத்திய செய்தி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் பேசியதாவது: 


    உலகின் தலை சிறந்த நாடாக இந்தியா உள்ளது. குறிப்பாக கடந்த 8 ஆண்டுகளில் இந்த நாடு அடைந்துள்ள வளர்ச்சியை அனைவரும் கண்கூடாக காண முடியும். ஆங்கிலேயர்களுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுதேசி கப்பலை இயக்கிவர் வ.உ. சிதம்பரனார்.

    அவரது தற்சார்பு கனவை இன்று பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி கொண்டு இருக்கிறார். நாடு 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில், வ உ சி யின் 150 ஆவது பிறந்த தினம் வருவது மேலும் சிறப்பு வாய்ந்தது. பிரதமர் விடுத்த அழைப்பின்படி, வரும் 13 முதல் 15 ஆம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும்.

    இது ஆங்கிலேயர்கள் தாக்குதலின்போது தேசிய கொடியை கீழே விழாமல் காத்த திருப்பூர் குமரனுக்கு செலுத்தும் மிகச் சிறந்த காணிக்கையாக இருக்கும். இளைஞர் மத்தியில் அக்னிபத் திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது, லட்சக்கணக்கான இளைஞர்கள் தாமாகவே முன்வந்து அக்னிபத் திட்டத்திற்கு பதிவு செய்து வருகின்றனர்.

    அப்துல் கலாம் கண்ட கனவுபடி, இந்தியா உலகிற்கே வழிகாட்டியாக திகழும். ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்புக்கு முன்பு எப்படி இந்தியர்கள் உலகுக்கே வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் இருந்தார்களோ, அதேபோல நாட்டின் 100-வது சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெறும் 2047-ம் ஆண்டு இந்தியா மீண்டும் உலக நாடுகளை வழிநடத்தும் வல்லமையை பெற்றிருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
    • இத்திட்டத்தை திரும்பப் பெறக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    புதுடெல்லி:

    அக்னிபாத் திட்டம் குறித்த பிரதமரின் புதிய ஆராய்ச்சியால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது என காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

    ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஓய்வு பெறுகிறார்கள். அதில் வெறும் 3,000 பேருக்குத்தான் அரசு வேலை கிடைக்கிறது. 4 வருடங்களுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் ஆயிரக்கணக்கான அக்னி வீரர்களின் எதிர்காலம் என்ன?

    பிரதமரின் இந்த புதிய ஆராய்ச்சியால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளன என தெரிவித்துள்ளார்.

    • அக்னிபாத் வீரர்களுக்கு எதிர்காலம் இருக்குமா? என வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பி உள்ளார்.
    • அதற்கு மத்திய பாதுகாப்பு இணை மந்திரி அஜய் பட் கொடுத்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

    மதுரை

    மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அக்னிபாத் இளைஞர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்பதை தெரிந்து கொள்ள விரும்பினேன். நாடாளுமன்றத்தில் 'முன்னாள் ராணுவத்தினருக்கு எத்தனை சதவீதம் மறு வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது? அரசு பணியிடங்களில் மறு வேலை வாய்ப்பு பெற்ற முன்னாள் ராணுவத்தினர் எத்தனை சதவீதம் உள்ளனர்?" என்று கேள்வி எழுப்பினேன்.

    அதற்கு மத்திய பாதுகாப்பு இணை மந்திரி அஜய் பட் கொடுத்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

    மத்திய அஞ்சல் சேவை, ஆயுதப் படையில் குரூப் "சி''- 10 சதவீதம், குரூப் டி-20 சதவீதம், மத்திய ஆயுதப் படையில் அசிஸ்டென்ட் கமாண்டன்ட் வரை நேரடி நியமனங்களில் 10 சதவீதம், மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகளில் குரூப் சி - 14.5 சதவீதம், குரூப் டி - 24.5 சதவீதம் என்ற அளவில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

    இதன் அடிப்படையில் 2014-ம் ஆண்டு - 2322 பேர், 2015-ல் 10,982 பேர், 2016-ல் 9086 பேர், 2017-ல் 5638 பேர், 2018-ல் 4175 பேர், 2019-ல் 2968 பேர், 2020-ல் 2584 பேர், 2021-ல் 2983 பேர் என்று முன்னாள் ராணுவத்தினர் பணி நியமனம் பெற்று உள்ளனர்.

    குறிப்பாக 2015, 2016 ஆகிய 2 ஆண்டுகளில் கிடைத்த வேலைவாய்ப்பு எண்ணிக்கையோடு, 2017 - 2021 ஆகிய 5 ஆண்டுகளின் விவரங்களை ஒப்பிடும் போது பெரும் சரிவு தென்படுகிறது. கடந்த 2015-களில் 10 ஆயிரத்தை தாண்டி இருந்த வேலை வாய்ப்புகள், 2019- 2021க்கு இடைப்பட்ட 3 ஆண்டுகளில் தலா 3 ஆயிரத்தை கூட தாண்டவில்லை.

    அரசு நிர்ணயித்த இடஒதுக்கீடு எவ்வளவு சதவீதம் நிரப்பப்பட்டு உள்ளது? என்று பார்த்தால், அந்த தகவல்கள் அதிர்ச்சியின் உச்சமாக உள்ளது.

    மத்திய சிவில் சேவைகள்-அஞ்சல் துறையில் குரூப் சி-1.39 சதவீதம், குரூப் டி-2.77 சதவீதம், மத்திய பொது நிறுவனங்களில் குரூப் சி-1.14 சதவீதம், குரூப் டி- 0.37 சதவீதம், பொதுத் துறை வங்கிகளில் குரூப் சி - 9.10 சதவீதம், குரூப் டி-21.34 சதவீதம், மத்திய ஆயுதப் படையில் குரூப் "ஏ"-2.20 சதவீதம், குரூப் "பி"-0.87 சதவீதம், குரூப் "சி"-0.47 சதவீதம், குரூப் "டி"-0.00 சதவீதம் என்று உள்ளது.

    அரசு வங்கிகள் தவிர மற்ற இடங்களில் முன்னாள் ராணுவத்தினரின் அதிகபட்ச சதவீதம் 3 கூட தாண்டவில்லை. ஜீரோ சதவீதமாக உள்ளது. ஏற்கெனவே உள்ள முன்னாள் ராணுவத்தினர் நிலை இப்படித்தான் உள்ளது. மறு வேலை வாய்ப்பு இல்லை.

    ராணுவப் பணியின் கடைசி ஊதியம், புதிய பணி நியமனத்தில் பாதுகாக்கப்படுவது இல்லை. 20 ஆண்டு ராணுவப்பணி முடித்து வந்தவர்களின் நிகழ்கால கதியே இது என்றால் 4 ஆண்டு ஒப்பந்த அக்னிபாத் வீரர்கள் எதிர்காலம்தான் என்ன?

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • அக்னிவீரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு மற்றும் உடல் திறன் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்
    • அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்

    புதுடெல்லி:

    சிஆர்பிஎப், பிஎஸ்எப் போன்ற மத்திய ஆயுதக் காவல் படைகளில், அக்னிவீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னிபாத் திட்டம் தொடர்பான கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் மாநிலங்களவையில் அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்தார்.

    'மத்திய ஆயுத காவல் படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் கான்ஸ்டபிள்கள் (பொதுப் பணி) மற்றும் ரைபிள்மேன் பதவிக்கான ஆட்சேர்ப்பில், முன்னாள் அக்னிவீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் தளர்வு மற்றும் உடல் திறன் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்' என்று மத்திய மந்திரி நித்யானந்த ராய் கூறினார்.

    ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் 17 மற்றும் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களை பணியமர்த்தும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு ஜூன் 14ம் தேதி வெளியிட்டது. 4 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் இந்த பணியாளர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். நான்கு ஆண்டு பதவிக்காலம் முடிந்த பிறகு, ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 25 சதவீதம் பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

    இந்த திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்திய நிலையில், மத்திய ஆயுத காவல் படை அல்லது துணை ராணுவத்தில் ஆட்சேர்ப்பின்போது, காலி பணியிடங்களில் அக்னிவீரர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்களை சேர்க்கும் பணிகளை முப்படைகளும் தொடங்கி உள்ளன.
    • அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேர 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. ஆனாலும் இந்த திட்டத்தை திரும்பப்பெற முடியாது என அரசு உறுதியாக தெரிவித்தது.

    அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முப்படைகளும் தொடங்கி உள்ளன. அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேர சுமார் 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் பற்றி பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனைக்குழு கூட்டம் வரும் 11ந் தேதி நடைபெற உள்ளது. இந்த குழுவில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தேசிய மாநாடு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சுதீப் பந்தோபாத்யாய் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினரிடம் அக்னிபாத் திட்டம் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் விளக்கம் அளிக்கிறார். அக்னிபாத் திட்டத்தில் வீரர்கள் சேர்ப்பு உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் குறித்து அவர் விளக்கம் அளிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் பாதுகாப்புத்துறை செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    • அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவம், கடற்படையில் சேர இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேர சுமார் 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

    புதுடெல்லி:

    முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை தேர்வு செய்யும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. 17½ வயது முதல் 21 வரையிலான இளைஞர்கள் இந்த திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பின்னர் இந்த வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டது.

    இந்தத் திட்டத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியபோதும், இந்தத் திட்டத்தை வாபஸ் பெறமுடியாது என மத்திய அரசு அறிவித்தது. அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் ஆள் எடுக்கும் பணிகளை விமானப்படை கடந்த மாதமே தொடங்கியது.

    இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேர சுமார் 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்திய கடற்படையில் முதல் முறையாக வீராங்கனைகள் சேர்க்கப்பட உள்ளனர். இவர்கள் போர்க் கப்பல்களில் பணியாற்ற உள்ளனர்.

    • அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரி தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் மீஞ்சூரில் துரை சந்திரசேகர் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய கோரி காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    பொன்னேரி:

    அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரி தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் மீஞ்சூரில் துரை சந்திரசேகர் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய கோரி காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் மாநில துணைத்தலைவர் டிஎல் சதாசிவ லிங்கம், நிர்வாகிகள், மீஞ்சூர்துரைவேல் பாண்டியன், பொன்னேரி கார்த்திகேயன் ஆரணி சுகுமாரன், ஐ என் டி யு சி தாமோதரன், மணவாளன், யுகேந்தர், வில்சன் உட்பட காங்கிரஸ் கட்சியினர் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

    • கூடங்குளத்தில் அணு உலைக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்கு எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது.
    • தமிழக அரசு சிறப்பு பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளைச் சீரமைக்க வேண்டும்.

    சென்னை:

    ம.தி.மு.க. உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெற்றது.

    வைகோ முன்னிலையில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழாவை சென்னையில், அண்ணா கலையரங்கில் நடத்துவது. ஜனாதிபதி தேர்தலில் நீண்ட நெடிய பாராளுமன்ற அனுபவமும், கொள்கை உறுதியும் மிக்க யஷ்வந்த் சின்காவுக்கு ம.தி.மு.க. ஆதரவு அளிப்பது. உறுப்பினர் சேர்ப்புப் பணியை வரும் ஜூலை 31-ந்தேதிக்குள் விரைந்து முடித்து, உறுப்பினர்படி வங்களை உரிய தொகையுடன் தலைமைக் கழகத்தில் சேர்த்திட வேண்டும்.

    காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து நிகழ்ச்சி நிரலில் மீண்டும் சேர்க்கப்பட்டால், அக்கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை துரிதப்படுத்த வேண்டும்.

    சங் பரிவாரங்களின் கனவான இந்துராஷ்டிரத்தின் காலாட்படையாக, காவிப்படையாக இந்திய ராணுவத்தை மாற்றும் முயற்சிக்கு இக்கூட்டம் கடும் கண்டனம் தெரி விப்பதுடன், 'அக்னி பாதை' திட்டத்தைக் கைவிட வலியுறுத்துகிறது.

    கூடங்குளத்தில் அணு உலைக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்கு எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது. மேலும் கூடங்குளத்தில் அமையும் 3-வது மற்றும் 4-வது அலகு அணுஉலைகளுக்கு மாசுக்கட்டுபாட்டு வாரியம் அளித்துள்ள அனுமதி யையும் நிறுத்தி வைக்க வேண்டும்.

    நூல் விலை உயர்வைத் தடுக்கத் தவறிய ஒன்றிய அரசுக்கு இக்கூட்டம் கண்ட னம் தெரிவிக்கிறது.

    தமிழக அரசு சிறப்புப் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளைச் சீரமைக்க வேண்டும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×