என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடிப்பு"

    • குமரி மாவட்டத்தில் 800 போலீசார் பாதுகாப்பு
    • ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் கடலோர காவல் படை போலீசார் கண்காணிப்பு பணி தீவிரம்

    நாகர்கோவில்:

    பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு பணியில் 800 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.ஆரல்வாய்மொழி, களியக்காவிளை, அஞ்சு கிராமம் சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இரவு நேரங்களிலும் இரண்டு ஷிப்டுகளாக பிரிக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், தக்கலை சப்வி-டிவிசன்க ளுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. லாட்ஜிகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். சந்தேகப்படும் படியாக நபர்கள் யாராவது தங்கி உள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. முக்கிய சந்திப்புகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவில்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் கடலோர காவல் படை போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இன்று காலை போலீசார் சோதனை மேற்கொண்டனர். வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டது.

    நாகர்கோவிலில் இருந்து வெளியூர்களுக்கு அனுப்பப்படும் பார்சல்களையும் போலீசார் சோதனை செய்தனர். பிளாட்பாரங்களில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். கன்னியாகுமரி, நாங்குநேரி, இரணியல், வள்ளியூர், குழித்துறை ரயில் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    • புதியபேருந்து நிலையம் கட்ட ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு
    • தற்காலிக பேருந்து நிலையம் குறித்த அறிவிப்பு இல்லை

    அரியலூர், 

    தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் அரியலூர் மாவட்டமும் ஒன்று. இருப்பினும் தமிழக அரசுக்கு கனிம வளங்களின் மூலமாகவும், விவசாய விளைபொருட்கள் மூலமாகவும் வருமானத்தை அள்ளித்தருகின்ற மாவட்டமாக திகழ்கிறது. சுண்ணாம்பு கற்களை கொண்ட பூமியான அரியலூரில் பிரபல சிமெண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு சிறப்புகளை கொண்ட அரியலூர் மாவட்டத்தில் 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு அரியலூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த நகராட்சியானது 7.62 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 30 ஆயிரம் மக்கள்தொகையை கொண்ட இந்த அரியலூர் நகராட்சிக்கு சொந்தமான சிவபெருமாள் நினைவு பஸ் நிலையம் கடந்த 1975-ம் ஆண்டு கட்டப்பட்டது.

    அதன் பிறகு 2 முறை விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த பஸ் நிலையம் கட்டப்பட்டு 47 ஆண்டுகள் ஆனதால் கட்டிடங்கள் இடிந்து விழ ஆரம்பித்தன. பழைய கட்டிடத்தை முழுமையாக இடித்துவிட்டு புதிய பஸ் நிலையம் கட்ட தமிழக அரசு ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கியது. இந்த பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

    பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை காலி செய்து தருமாறு நகராட்சி நிர்வாகம் பலமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும், நேரில் வந்து கூறியும் யாரும் கடைகளை காலி செய்யவில்லை. இந்நிலையில் புதிய பஸ் நிலையத்திற்கான கட்டுமான பணிகள் நேற்று தொடங்கின. இடிந்துவிடும் நிலையில் உள்ள சமுதாய கூடத்தை பொக்லைன் எந்திரத்தை கொண்டு இடிக்கும் பணி தொடங்கியது. தொடர்ந்து கட்டுமான பணிகளுக்காக இரும்பு கம்பிகள், சிமெண்டு மூட்டைகள் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டுள்ளன.ஆனால் தற்காலிக பஸ் நிலையம் எந்த இடத்தில் செயல்படும் என்று நகராட்சி நிர்வாகம் இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்கள், வேலைக்கு செல்வோர், மாணவ-மாணவிகள் தாங்கள் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் எங்கிருந்து செல்வது, பஸ்கள் எங்கு நிற்கும் என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். மேலும் பஸ் நிலையத்தை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் மீண்டும் இதே பஸ் நிலையத்திற்கே பஸ்கள் வந்து சென்றால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே விரைவில் தற்காலிக பஸ் நிலையம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும், புதிய பஸ் நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தற்கொலை முயற்சி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
    • திருச்சியில் அரசு பள்ளி விரிவாக்கத்திற்காக வீடு அகற்றம்

    ராம்ஜிநகர்,

    திருச்சி மாவட்டம் திண்டுக்கல் சாலையில் தீரன் நகரை அடுத்து பிராட்டியூர் அமைந்துள்ளது. இப்பகுதி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி பழனியம்மாள். கணவர் இறந்துவிட்ட நிலையில் பழனியம்மாள் இங்கு சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடிசை வீட்டில் வசித்து வந்தார். இதையடுத்து தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் பழனியம்மாள் என்பவருக்கு புதிதாக வீடு கட்டித்தரப்பட்டது.இவரது வீட்டையொட்டி மகாலட்சுமி என்பவருக்கு சொந்தமான காலி மனை ஒன்றும், அடுத்தடுத்து 3 கடைகளும் செயல்பட்டு வருகின்றன. அதன் அருகிலேயே பிராட்டியூர் அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. அதிக மாணவர் சேர்க்கை காரணமாக பள்ளியை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்காக அருகிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி பழனியம்மாளுக்கு சொந்தமான வீடு, மகாலட்சுமிக்கு சொந்தமான காலிமனை மற்றும் 3 கடைகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டது.ஆனால் பழனியம்மாள் தனது வீட்டை காலி செய்ய மறுத்துவந்தார். அதிகாரிகள் கூறியும் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து இன்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கோர்ட்டு ஆணையுடன் ஆக்கிரமிப்பை அகற்ற பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். அவர்கள் வீட்டை இடிக்க முற்பட்டபோது, பழனியம்மாள் பொக்லைன் எந்திரத்தின் முன்பாக அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.இதையடுத்து அதிகாரிகள் அவரையும், அவரது வக்கீலையும் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அதேபோல் மகாலட்சுமி என்பவரும் தனது காலிமனையை தர மறுத்து தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரிடமிருந்து மண்எண்ணை கேனை பறிமுதல் செய்த போலீசார் அவரையும் அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையே பழனியம்மாளின் வீடு இடிக்கப்பட்டது.உடனே அவரது உறவுக்கார பெண் ஒருவர் சற்று காலக்கெடு தரவேண்டும் என்றும், அதற்குள் வீட்டிற்குள் இருக்கும் பொருட்களை எடுத்துக்கொள்வதாகவும் கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொண்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய அனுமதி அளித்தனர். இதனால் பிராட்டியூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • வீடுகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை அகற்றாமல் இருந்தனர்.
    • காலி செய்யாமல் இருந்த 78 வீடுகளை ஜே.சி.பி. எந்திரத்துடன் அகற்றும் பணி இன்று தொடங்கியது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் நகரப் பகுதிக்குள் வேகவதி ஆறு பாய்கிறது. ஆற்றின் கரையோரத்தில் இரு புறங்களிலும் ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தன.

    இந்நிலையில் வேகவதி ஆற்றின் கரைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்ற போது அங்கு குடியிருந்த மக்களுக்கு கீழ்கதிர்பூர் பகுதியில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டது.

    ஆனால் வீடுகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை அகற்றாமல் இருந்தனர். இதனால் வேகவதி ஆறு தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்தது.

    இந்நிலையில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதையடுத்து வேகவதி ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணியை நீர்வளத் துறை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தாயார் குளம் பகுதியில் வேகவதி ஆற்றின் கரையோரம் அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு காலி செய்யாமல் இருந்த 78 வீடுகளை ஜே.சி.பி. எந்திரத்துடன் அகற்றும் பணி இன்று தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் வருவாய்த்து றையினரும் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணியை கண்காணித்து வருகிறார்கள். வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் முழுவதையும் அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சம்பவத்தன்று கிட்டுச்சாமி உறவினர்கள் 8 பேர் காம்பவுண்ட் சுவரை இடித்து அப்புறப்படுத்தினர்.
    • குன்னத்தூர் போலீசார் கிட்டு சாமி உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னத்தூர்:

    குன்னத்தூர் அருகே வலையபாளையத்தில் வசிப்பவர் வடிவேலு . இவருக்கும் அருகில் வசிக்கும் கிட்டுச்சாமி என்பவருக்கும் காம்பவுண்ட் சுவர் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று கிட்டுச்சாமி உறவினர்கள் 8 பேர் காம்பவுண்ட் சுவரை இடித்து அப்புறப்படுத்தினர். இது குறித்த புகாரின் பேரில் குன்னத்தூர் போலீசார் கிட்டு சாமி உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • பணிகள் முடியவுள்ள நிலையில் வருகிற 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • கோவிலை திறப்பதற்காக வந்த அர்ச்சகர்கள் யாகசாலை சேதமடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டையில் 100 வருடங்கள் பழமையான விநாயகர் கோவில் உள்ளது. இந்த சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் கடந்த சில மாதங்களாக கும்பாபிஷேக சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றன. அந்த பணிகள் முடியவுள்ள நிலையில் வருகிற 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் பணிகள் நடைபெறவில்லை.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து ஏற்கனவே கட்டப்பட்டிருந்த யாகசாலைகளை இடித்து சேதப்படுத்திவிட்டு சென்றனர். இன்று காலை கோவிலை திறப்பதற்காக வந்த அர்ச்சகர்கள் யாகசாலை சேதமடைந்தி ருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கட்டணம் கேட்டதால் ஜேசிபி டிரைவர் ஆத்திரம் அடைந்தார்.
    • புல்டோசர் மூலம் சுங்கச்சாவடியை தகர்க்கும் வீடியோ வைரலானது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் சுங்கச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. அங்கு வந்த புல்டோசர் சுங்கச்சாவடியைக் கடந்து செல்ல முற்பட்டது. அங்கிருந்த ஊழியர்கள் கட்டணம் செலுத்தும்படி டிரைவரிடம் கேட்டுள்ளனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த அந்த டிரைவர் திடீரென புல்டோசர் மூலம் சுங்கச்சாவடியை இடிக்கத் தொடங்கினார். இதனால் அங்கு செயல்பட்டு வந்த இரு கட்டணம் வசூலிக்கும் மையங்கள் தகர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போனில் பதிவுசெய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஹபூர் மாவட்ட போலீஸார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜேசிபி டிரைவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சமபவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நாமக்கல் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அதிரடி 10 சாயப்பட்டறை இடித்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையத்தில் மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிரடி நடவடிக்கையால் 10 சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டது.

    குமாரபாளையத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்திக்கு சாயம் போட 300-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகிறது. இதில் சில சாயபட்டறைகள் அனுமதி பெற்றும், பல பட்டறைகள் அனுமதி பெறாமலும் செயல்பட்டு வருகிறது. அனுமதி பெறாமலும், கழிவுநீரை காவிரியில் கலக்க விடும் பட்டறைகள் மீது அவ்வப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் பொக்லின் உதவியுடன் இடித்து வந்தனர். அனுமதி பெறாத சாயப்பட்டறைகள் செயல்படக்கூடாது என அறிவித்தும், தொடர்ந்து செயல்படுத்தி வருவதுடன் சாயக்கழிவு நீரை காவிரியில் கலக்க விடுகிறார்கள். இது சம்பந்தமாக பலரிடம் நேரில் எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து செயல்பட்டதால் மாசுக்கட்டுபாட்டு வாரிய மாவட்ட அலுவலர் மோகன், தாசில்தார் தமிழரசி தலைமையில் நடராஜா நகர், கம்பன் நகர், ஓலப்பாளையம், ஆனங்கூர் ரோடு, அரசு மேல்நிலைப்பள்ளி சாலை உள்ளிட்ட பகுதியில் பொக்லின் உதவியுடன் 10 சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டது.

    இதில் பறக்கும் படை அலுவலர் மணிவண்ணன், உதவி பொறியாளர்கள் வினோத்குமார், கிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×