என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் கீதாஜீவன்"

    • சத்துணவு திட்டத்தில் அழுகிய முட்டைகள் வழங்கப்படுவதாக பா.ஜ.க.வினர் தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள்.
    • இதுவரை 9 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    நெல்லை:

    கர்ப்பிணி பெண்களுக்கு அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நெல்லை மாவட்டம் மானூர் யூனியன் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார்.

    நிகழ்ச்சியில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் செல்வலட்சுமி அமிதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தின் முக்கியத்துவம் குறித்தும், ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுப்பதை குறித்தும் உணர்த்திடும் வகையில் அரசு சார்பில் இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது.

    குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் வளரும் விதமாக தமிழகம் முழுவதும் 36 லட்சம் அங்கன்வாடிகளில் முதல்-அமைச்சரின் ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுவரை 9 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் சத்தான உணவு வழங்க ஆலோசனை வழங்கப்பட்டு, அதனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    45 ஆயிரம் குழந்தைகளுக்கு இதயத்தில் ஓட்டை, காது செவித்திறன் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் உள்ளது. அவர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை மூலமாக உயர்தர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதை தாய்மார்களே அறிந்திடாத நிலையில் தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு தரமான ஊட்டச்சத்து மற்றும் உயர்தர சிகிச்சை வழங்கப்படுகிறது.

    சத்துணவு திட்டத்தில் அழுகிய முட்டைகள் வழங்கப்படுவதாக பா.ஜ.க.வினர் தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள். காலம் காலமாக, அழுகிய முட்டைகளை தண்ணீரில் போட்டு கண்டுபிடித்து அதனை திருப்பி அனுப்புவதற்காக தனியாக சேமித்து வைக்கப்படும். இந்த நடைமுறை 1996-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது.

    திருப்பி அனுப்ப வைக்கப்பட்டிருந்த முட்டைகளை போட்டோ எடுத்து பா.ஜ.க.வினர் அவதூறு பரப்பி வருகிறார்கள். இதுகுறித்து அவர்களுக்கு புரிதல் இல்லாமல் உள்ளது. தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் அங்கன்வாடிகளுக்கு அழுகிய முட்டை வழங்கப்படவில்லை.

    தமிழகத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்லை வரும் அமைச்சர் கீதாஜீவனுக்கு கருப்பு கொடி காட்டப் போவதாக மானூர் பா.ஜ.க.வினர் அறிவித்திருந்தனர்.
    • நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் தயா சங்கர் தலைமையிலான நிர்வாகிகள் 40-க்கும் மேற்பட்டோர் அந்த தனியார் மண்டபத்திற்குள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இதற்கிடையே, தூத்துக்குடியில் பா.ஜனதா மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு தாக்கப்பட்டதை கண்டித்தும், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அமைச்சர் கீதாஜீவன் அவதூறாக பேசியதாக கூறி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று நெல்லை வரும் அமைச்சர் கீதாஜீவனுக்கு கருப்பு கொடி காட்டப் போவதாக மானூர் பா.ஜ.க.வினர் அறிவித்திருந்தனர்.

    இதைத்தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மானூரை சேர்ந்த பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி மாவட்ட செயலாளர் முத்தையா, பிரசார குழு தலைவர் முருகேசன், ஒன்றிய செயலாளர் வெள்ளைத்துரை உள்ளிட்ட 4 பேரை மானூர் இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமையிலான போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இதை அறிந்த நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் தயா சங்கர் தலைமையிலான நிர்வாகிகள் 40-க்கும் மேற்பட்டோர் அந்த தனியார் மண்டபத்திற்குள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • விளாத்திகுளம் அருகே தி.மு.க.சார்பில் தெரு முனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
    • பஸ்களில் இலவச பயணம் மூலம் பெண்களுக்கு மாதம்ரூ.1200 வரை சேமிப்பு ஆகிறது என்று அமைச்சர் பேசினார்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தில், மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தெரு முனை பிரசார கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது:-

    மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி அளிக்கும் திட்டம் நாளை தொடங்கபட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மகளிர் தங்களது வாழ்வாதரத்தை பெருக்கி கொள்ள முடியும்.

    கிராம புற பகுதிக ளிலும் குடியிருப்பு இல்லாதவர்க ளுக்கும் குடியிருப்பு வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    ரூ.608 கோடி மதிப்பில் குடிநீர் திட்டம்

    விளாத்திகுளம் தொகுதி யில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் கூட்டு குடிநீர் திட்டம் கிடைக்கும் வகையில் ரூ.608 கோடி மதிப்பில் குடிநீர் திட்டம் கொண்டு வந்துள்ளார்.

    வண்டி பெட்ரோல் இல்லாமல் ஓடாது அதே போல் தான ஊட்டச்சத்து இல்லாத குழந்தையும் அறிவு வளர்ச்சியை எட்டமால் போய்விடுகிறது. சத்தான உணவுகளை பெண்கள் உட்கொள்ள வேண்டும்.

    கொரோனா காலத்தில் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் கிராம புறங்களில் உள்ளவர்கள் சத்தான உணவுகளை உட்கொள்வ தால் தான கொரோனா பாதிப்பு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை.

    பஸ்களில் இலவச பயணம் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ. 700 ரூ.1200 வரை சேமிப்பு ஆகிறது. தமிழ் படித்தவர்களுக்கு மட்டுமே தமிழகத்தில் வேலை வாய்ப்பு என்ற நிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி உள்ளார். தமிழகம் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் முதல்-அமைச்சர் செயல்பட்டு வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு தலைமை நிலைய பேச்சாளர் பசும்பொன்ரவிச்சந்திரன், ஒன்றிய அவைத் தலைவர் அருள்ராஜ், துணைச் செயலாளர்கள் காளிராஜ், சரவணச்செல்வி, தமிழ் வாணன், ஒன்றிய பொரு ளாளர் ராகவன், சங்கர்ராம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜன், ஆதிசங்கர், ராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் அன்னமகாராஜா, பச்சை பெருமாள், சுடலை முத்து, அய்யனார், முனி யம்மாள் முத்துகரும்புலி, ஒன்றிய குழு உறுப்பினர் செந்தூர்பாண்டியன், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஒன்றிய, கிளை செயலாளர்கள், பிற அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இ-சேவை மையத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
    • திறப்பு விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் டூவிபுரத்தில் செயல்பட்டு வருகிறது. அதில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இ-சேவை மையத்தை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் கலைச்செல்வி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்குமார், ஜெயக்கனி, துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செந்தில், அருண்சுந்தர், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், முத்துவேல், வைதேகி, ராஜதுரை, பட்சிராஜ், கந்தசாமி, சுயம்பு, வட்டச்செயலாளர்கள் செந்தில்குமார், பாலு, வன்னிராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, அற்புதராஜ், கருணா, மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. ஆட்சிக்கு எப்போதும் நீங்கள் துணையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.
    • விழாவில் 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தி.மு.க. மாநில துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வி.எம்.எஸ். நகரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு மாநகர தி.மு.க.துணைச் செயலாளரும், மாநகராட்சி பணிக்குழு தலைவருமான கீதாமுருகேசன் தலைமை தாங்கினார்.

    அவைத்தலைவர் அந்தோணி முத்துராஜா, செயலாளர் முருகன், ஞானக்கண், லெட்சுமி, பொருளாளர் செல்வகுமார், வட்ட பிரதிநிதிகள் மகேஸ்வரன், பாலமுருகன், ஆட்டோ குமார், படையப்பா, கிருஷ்ணன் பிள்ளை, நிர்வாகிகள் முத்துராஜ், முருகேசன், மாரியப்பன், கிருபை மணி, முத்துச்சாமி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் தையல் எந்திரம், அயர்ன் பாக்ஸ், சேலை, ஆட்டோ ஓட்டுநர்கள் 20 பேருக்கு சீருடை உள்பட 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் பேசியதாவது:-

    தமிழகத்தில் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் ஆட்சி நடைபெறுகிறது. தமிழக மக்கள் நல்ல உழைப்பாளிகள், கல்விதிறன் உள்ளவர்கள். இந்தியாவில் தொழில்துறையில் 24-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 3-வது இடத்தில் உள்ளது. தொலைநோக்கு திட்டத்தோடு முதல்வர் பணியாற்றி வருகிறார். ஊட்டச்சத்து குறைவை தடுக்கும் வகையில் காலையில் பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. அதன் மூலம் குழந்தைகளுக்கு கல்வித்திறன் அதிகரித்துள்ளது. வருகைப் பதிவேடும் கூடியுள்ளது.

    பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 40 சதவீதம் வழங்கப்படுகிறது. கல்லூரி படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித் தொகை வழங்கும் 'புதுமைப் பெண்' திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, வழங்கப்பட்டு வருகிறது.

    தி.மு.க. ஆட்சிக்கு எப்போதும் நீங்கள் துணை யாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேயர் ஜெகன் பெரிய சாமி பேசியதாவது:-

    1¾ வருடம் ஆட்சியில் இந்தியா திரும்பி பார்க்கும் வகையில் தமிழகம் முன்னேறியுள்ளது. எல்லா துறைகளிலும் 100 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.

    இந்த பகுதி மாநகராட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    விழாவில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ் மோகன் செல்வின், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, மாநகர துணைச் செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துராமன், மகளிரணி நிர்வாகள் ரேவதி, சந்தனமாரி, கவுன்சிலர்கள் ஜான்சிராணி, இசக்கிராஜா, மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, மகளிரணி துணை அமைப்பாளர் பார்வதி மற்றும் மணி, அல்பர்ட், பிரபாகர், வட்ட செயலாளர்கள் பாலு, ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட வர்களுக்கு பிரிட்ஜ், வாஷிங்மிஷின், எல்.இ.டி. டி.வி. வழங்கப்பட்டது.

    • அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.
    • வட மாநிலங்களில் இல்லாத பல சலுகைகள், திட்டங்கள் தமிழகத்தில் உள்ளன என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் பொங்கல் திருநாளை யொட்டி 30-வது வட்ட தி.மு.க. மற்றும் டூவிபுரம் இளைஞர் அணி சார்பில் 20-ம் ஆண்டு பொங்கல் விழா நிகழ்ச்சி டூவிபுரம் 10-வது தெருவில் நடைபெற்றது.

    அண்ணாநகர் பகுதி செயலாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் அதிஷ்டமணி, நிர்வாகிகள் ராஜ்மோகன், கார்த்திகேயன், அந்தோணிராஜ், அன்பழகன், நாராயணராஜ், சுப்பிரமணியன், கணேசன், சபேசன், சந்திரசேகர், தங்ககுமார், சீனிவாசன், செல்வராஜ், சின்ராஜ், அன்னராஜன், டேனியல், ஜெயராமன், ரவிக்குமார், சத்யநாராயணன், ராஜ்நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேக் உமர் வரவேற்றார்.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். பின்னர் அமைச்சர் கீதாஜிவன் பேசியதாவது:-

    இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பெரிய மாநிலம் தமிழ்நாடு. பொருளாதார வளர்ச்சி என பல முன்னேற்றப்பாதையில் சென்றுள்ளதை ஒன்றிய அரசே கூறியுள்ளது.

    அ.தி.மு.க.வில் 2 பேரும் தன்னை காப்பாற்றிக் கொள்வதில் தான் குறியாக உள்ளனர். தமிழ்மொழி, கலாசாரம் போன்ற பல்வேறு வளர்ச்சியடைந்துள்ள காரணத்தால் ஒன்றிய நமது அரசு நமக்கு கொடுக்க வேண்டிய நிதிகளை குறைத்து கொண்டே வருகிறது.

    நம்முடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாக திறமையால் அதையும் சமாளித்து பணியாற்றி வருகிறார். பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் லட்சிய வழியில் முதல்-அமைச்சர் பணியாற்றி கொண்டிருக்கிறார்.

    தமிழ்நாடு என்ற பிரச்சனையை சிலர் கிளப்பினார்கள். தமிழ்நாடு என்ற பெயர் வருவதற்கு 76 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த சங்கரலிங்க நாடார் தியாகத்தை நாம் போற்றுவோம்.

    வட மாநிலங்களில் இல்லாத பல சலுகைகள் திட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. திராவிட மாடல் ஆட்சிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் கனகராஜ், மாநில பேச்சாளர் சரத்பாலா, மாநகர அணி துணை அமைப்பாளர் சிவக்குமார் என்ற செல்வின், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், கவுன்சிலர் பொன்னப்பன், வட்டச் செயலாளர்கள் பொன்னுச்சாமி, பாலு மற்றும் கருணா, அல்பட், கிளிப்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டச்செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

    • 3 மாநகராட்சி பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு திட்டம் குறித்து அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆய்வின்போது கலெக்டர் செந்தில்ராஜ், கமிஷனர் தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் 1-ம் வகுப்பு முதல் 5-ம்வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியான ஜின் பேக்டரி ரோடு, சிவந்தாகுளம், தெற்கு புதுத்தெரு ஆகிய 3 மாநகராட்சி பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு திட்டம் குறித்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.

    இத்திட்டத்தில் 3 மாநகராட்சி பள்ளி களில் மொத்தம் 905 பள்ளி குழந்தைகள் பயன்பெறுகின்றனர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், கமிஷனர் தினேஷ்குமார், துணை ஆணையர் குமார், பொறுப்பு செயற்பொறியாளர் சரவணன், ஸ்மார்ட் திட்ட பொறியாளர் சந்திரமோகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, தாசில்தார் செல்வகுமார், கவுன்சிலர்கள் பொன்னப்பன், மும்தாஜ், பாப்பாத்தி, முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்குமார், பாலசுப்பிரமணியன் மற்றும் ஜீவன் ஜேக்கப் மணி, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, தலைமை ஆசிரியர்கள் பீரிடா, தங்கமணி, எமல்டா வெலன்சியா ஹெசியா, சுகாதார ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மகளிர் தின விழாவிற்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார்.
    • நரிக்குறவர்களின் குழந்தைகள் பள்ளி செல்லும் நிலை தற்போது உருவாகியுள்ளது என அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கீதா பள்ளியில் மாநகர தி.மு.க. மகளிர் அணி சார்பில் முதலாம் ஆண்டு மகளிர் தின விழா நடைபெற்றது.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார்.

    விழாவில் பேச்சு போட்டி, கேள்வி- பதில், அறிவுத்திறன் போட்டி, மியூசிக்கல் சேர், பலூன் உடைத்தல், உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு கள் வழங்கி பேசியதாவது:-

    கல்வி வேலைவாய்ப்பு களில் 30 சதவீதம் ஒதுக்கீடு, 8 மற்றும் பிளஸ்-2 வகுப்பு படித்தவர்களுக்கு திருமண உதவி, இப்போது பிளஸ்-2 வகுப்பிற்கு பின் கல்லூரி படிப்பை தொடர்வதற்கு புதுமைப்பெண் திட்டத்தில் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது கட்டமாக தொடங்கி வைத்துள்ளார்.

    இதனால் 2 ஆண்டு காலம் கல்லூரி படிப்பை ஓதுக்கி வைத்தவர்கள் 13 ஆயிரம் பேர் கல்லூரி படிப்பை தொடங்கியுள்ளனர். கிராமப் புறங்களை சார்ந்தவர்களும் வளர்ச்சியடையும் வகையில் வங்கியில் வாங்கியுள்ள மகளிர் சுயஉதவி கடன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நரிக் குறவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டதன் மூலம் அவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது.

    வாழ்க்கையில் தோல்வி வரத்தான் செய்யும். அதையும் கடந்து சாதனை படைக்க வேண்டும். ஜாதி, மதம், ஏழை- பணக்காரன் பாகுபாடு இல்லாமல் ஒன்றே குலம் ஓருவனே தேவன் என்ற கோட்பாடோடு பணியாற்றி நாம் பெற்ற ஆண், பெண் குழந்தைகளை பாரபட்சமின்றி நல்ல அறிவுரைகளை வழங்கி வளர்க்க வேண்டும். சத்தான உணவுகள் கொடுக்க வேண்டும் ஆடம்பரம் இல்லா மல் நாமும் அறிவுத்திறனை வளர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மகளிர் தொண்டரணி அமைப்பா ளர் உமாதேவி, மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, மாநகர துணைச் செயலாளர் பிரமிளா, கவுன்சிலர்கள் ஜான்சி ராணி, கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் தனலட்சுமி, முத்துமாரி, ம.தி.மு.க. கவுன்சிலர் ராமுஅம்மாள், இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் கவுன்சிலர் மும்தாஜ், மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் பார்வதி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணா தேவி, மகளிர் அணி நிர்வாகிகள் கவிதா தேவி, இந்திரா, பெல்லா, ரேவதி, சத்யா, கன்னிமரியாள், சந்தனமாரி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    • முதியோர் உதவித்தொகை பெறும் பெண்களுக்கு இந்த பணம் கிடைக்க வாய்ப்பு இல்லை.
    • லட்சக்கணக்கில், ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் பெண்கள் இந்த உதவித்தொகையை எதிர்பார்க்க மாட்டார்கள்.

    சென்னை:

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்த திட்டம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்த திட்டம் குறித்து முதலமைச்சரின் தலைமையில் அவரது நேரடி கட்டுப்பாட்டில் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இந்த அரசாணை வெளியாகும் போது யார்-யாருக்கு, எத்தனை பேருக்கு உரிமைத்தொகை கிடைக்கும் என்பது தெரியவரும்.

    ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால் எவ்வளவு பேருக்கு கிடைக்கும் என்று சிலர் கணக்கு எல்லாம் போட்டு பார்க்கிறார்கள். எப்போதும் ஒரு திட்டத்தை தொடங்கும்போது தோராயமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பின்னர் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். எனவே ரூ.7 ஆயிரம் கோடியை வைத்து இவ்வளவு பேருக்குதான் கிடைக்கும் என்று முடிவு செய்ய முடியாது.

    அரசாணை வெளியிட்ட பின்னர் ஒவ்வொருவரிடம் விண்ணப்பம் வாங்கி இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது தெளிவாக தெரியும். தேவை உள்ள இந்த ரூ.1,000 பணத்தால் பலன் பெறும் அனைத்து பெண்களும் இந்த திட்டத்தில் பயனடைவார்கள்.

    முதியோர் உதவித்தொகை பெறும் பெண்களுக்கு இந்த பணம் கிடைக்க வாய்ப்பு இல்லை. ஏனென்றால் அவர்கள் ஒரு திட்டத்தில் பயன் அடைந்து வருகிறார்கள்.

    நான் எனக்கு இந்த உரிமைத்தொகையை கேட்க முடியுமா?. அதுபோன்று பெரிய பெண் தொழில் அதிபர்கள் கேட்க மாட்டார்கள். லட்சக்கணக்கில், ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் பெண்கள் இந்த உதவித்தொகையை எதிர்பார்க்க மாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து. எனவே தகுதி உடைய பெண்களுக்கு இந்த உரிமைத்தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சர் கீதாஜீவனிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
    • கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றி தருவேன் என்று அமைச்சர் கீதாஜீவன் உறுதியளித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சரு மான கீதாஜீவன் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு ஏற்கனவே வாட்ச்அப் எண் கொடுக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்கள் பலர் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் உள்ளிட்ட அலுவலர்கள் அதன் குறைபாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கும் உடனுக்குடன் தெரிவித்து தீர்த்து வைக்கின்றனர்.

    இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல மாவட்டங் களை உள்ளடக்கிய ஆய்வு கூட்டம் நடத்தி மக்களின் கோரிக்கை மனுக்களை காகிதமாக எண்ணாமல் அவர்களின் வாழ்வா தாரத்தை முன்னேற்றும் ஆவணமாக கருதி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இந்நிலையில் மாநகராட்சி 38-வது வார்டுக்குட்பட்ட மீகா தெரு, ஜெயலானிதெரு, கோழி முடுக்கு சந்து, மற்றும் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டார்.

    அப்போது அவரிடம், வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

    அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஜெயலானி தெருவில் புதிய சாலை அமைக்க வேண்டும். கோழி முடுக்கு சந்து பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைத்து கொடுத்து கழிநீர் செல்வதற்கு கால்வாய் வசதிகள் முறையாக செய்து கொடுக்க வேண்டும். புதிய தார்சாலை மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் போது பழைய சாலையை தூர்வாரி, பழைய சாலை அளவுபடியே அமைக்க வேண்டும். என்று கோரிக்கை வைத்தனர். முழுமையாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உங்களது கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றி தருவேன் என்று உறுதியளித்தார்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர மருத்துவ அணி அமைப் பாளர் அருண்குமார், கவுன்சிலர் மும்தாஜ், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், வட்ட செயலாளர்கள் கங்கா ராஜேஷ், சுரேஷ், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், நாராயணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நாகராஜன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன், வட்ட பிரதிநிதி பாஸ்கர், இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, ஜெயராமன், கணேசன், திலகர், வைரமுத்து, மாரியப்பன், மற்றும் மணி, அரபி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திராவிட மாடல் ஆட்சியில் எல்லா நன்மைகளும் மக்களுக்கு கிடைக்கின்றன.
    • ஜூன் 3-ந் தேதிக்குள் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை முடிக்க வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ் தலைமையில், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சரு மான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தூத்துக்குடி தொகுதியில் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும். அதற்கு அனைவரும் தங்களது பகுதியில் வீடு, வீடாக சென்று தினமும் 1மணி நேரமாவது கட்சிக்கு உழைக்க வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் உறுப்பினர்களை சேர்க்க லாம்.

    தி.மு.க. ஆட்சி வந்த பின்பு முதல்-அமைச்சர் மீது நம்பிக்கை வைத்து பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்களும் பல்வேறு தரப்பினரும் முன் வைக்கின்றனர். செய்து கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் அதில் உள்ள குறைகளையும், கோரிக்கைகளையும் என்னிடமோ அல்லது மேயரி டமோ தெரியப்படுத்துங்கள்.

    திராவிட மாடல் ஆட்சியில் எல்லா நன்மைகளும் மக்களுக்கு கிடைக்கின்றன. சாதி, மதம் கிடையாது. சட்டமன்றத்தில் கவர்னர் தெரிவித்த கருத்துக்கு உடனே எதிர்ப்பு தெரிவித்து நம்முடைய உரிமையை முதல்-அமைச்சர் பாது காத்தார். மற்ற கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் கவர்னருக்கு கண்டனம் தெரிவித்தனர்.கொள்கை உணர்வோடு நாம் இருக்க வேண்டும்.

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஜூன் 3-ந் தேதிக்குள் நமது மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை முடித்துகொடுக்க வேண்டும். பூத் கமிட்டியை வரும் 15-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

    அதில் இளைஞர்கள் பெண்கள் இடம் பெற வேண்டும். வட்டச் செயலாளர்கள் வட்டப்பிரதி நிதிகள் தான் அந்த பகுதியில் தி.மு.க. வளர்ச்சிக்கு துணையாக இருந்து செயல் படக்கூடியவர்கள்.

    தி.மு.க.வில் 23 அணிகள் உள்ளன. அதற்கு தகுந்த நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து தரவேண்டும். அதை முறையாக தலைமை கழகம் அறிவிக்கும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவத்தை வழங்கினார்.

    கூட்டத்தில் தூத்துக்குடி தொகுதி பொறுப்பாளரும், மாநில நெசவாளர் அணி செயலாளருமான பெருமாள், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைசெயலாளர் புளோரன்ஸ், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜான் அலெக்சாண்டர், மாநகர துணை செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா, மாநில பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட அணி நிர்வாகிகள் மதியழகன், அந்தோணி ஸ்டாலின், அபிராமிநாதன், அன்பழகன், கஸ்தூரிதங்கம், மோகன் தாஸ் சாமுவேல், ஜெபசிங், பிரதீப், பிரபு, ஜேசையா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் செல்வக்குமார், சேர்மபாண்டி, சக்திவேல், செந்தில்குமார், மாநகர அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கயத்தாறு பேரூராட்சி பகுதியில் 100 நாள் வேலைத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
    • நீர் -மோர் பந்தல் திறப்பு விழா ஒன்றிய செயலாளர் சின்ன பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    கயத்தாறு:

    தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என அக்கட்சியின் தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். அதற்காக தொகுதி வாரியாக பொறுப் பாளர்கள் நியமிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடை பெற்று வருகிறது.

    அதன்படி தூத்துக்குடி தொகுதி பொறுப்பாளரும், மாநில நெசவாளர் அணி செயலாருமான சொ. பெருமாள் ஏற்பாட்டில் கயத்தாறு ஒன்றிய பா.ஜ.க. அமைப்பு சாரா தொழிற் பிரிவுதுணைத் தலைவர் மாரியப்பன், அ.தி.மு.க. வக்கீல் பிரிவு மாநகர் மாவட்ட அவை தலைவரும், நெல்லை முன்னாள் அரசு குற்றவியல் கூடுதல் வக்கீலும், கயத்தாறு முஸ்லிம் ஜமாத் தலைவருமான பீர்முகைதீன், தொழிலதிபர்கள் இளங்கோவன், சீனிவாசன், செல்வராஜ் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 200 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். தொடர்ந்து அனைவரையும் அமைச்சர் கீதாஜீவன் சால்லை அணிவித்து வரவேற்றார்.

    தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல் பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படுகிறது. கயத்தாறு பேரூராட்சி பகுதியில் 100 நாள் வேலைத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

    இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நடைபெற உள்ள பாராளு மன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் நாம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் தீவிர மாக பணியாற்ற வேண்டும்.

    நாம் அனைவரும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினினுக்கு பக்கபல மாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செய லாளர் ஆனந்த சேகரன், வடக்கு மாவட்ட விளை யாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வக்கீல் பால குருசாமி, ஒன்றிய செய லாளர் சின்ன பாண்டியன், பகுதி செயலாளர் ராம கிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி பிரபாகரன், சி.எஸ். ராஜா, மருத்துவ அணி அருண்குமார், முன்னாள் கவுன்சிலர் செந்தில் குமார் மற்றும் நிர்வாகிகள் கருணா, ஆல்பர்ட், மணி, ரவி உள்பட தி.மு.க.வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கயத்தாறு

    கயத்தாறில் பேரூராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் நீர் -மோர் பந்தல் திறப்பு விழா ஒன்றிய செய லாளர் சின்ன பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு துணை அமைப் பாளர் ராஜதுரை, பேரூராட்சிமன்ற கவுன் சிலர்கள் நயினார் பாண்டி யன், செல்வகுமார், ஆதி லட்சுமி அந்தோணி, தேவி கண்ணன் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் சந்தனமணி, சேக் தாவீது கட்சி பிரமுகர்கள் கொம்பையா பாண்டியன், ராஜாபுதுக்குடி சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×