என் மலர்
நீங்கள் தேடியது "அடிப்படை வசதி"
- கிராமத்திற்கு அமைக்கப்பட்ட சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
- பல ஆண்டுகளாக அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஊட்டி.
ஊட்டியில் கோடை சீசனையொட்டி நடைபெற்ற குதிரை பந்தயம் நிறைவு பெற்று உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது.
அப்போது வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இவர்களை மகிழ்விக்க கோடை விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கோடை விழாவைெயாட்டி கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, ஊட்டியில் மலர் மற்றும் ரோஜா கண்காட்சி, குன்னூரில் பழக்கண்காட்சி ஆகியவை நடைபெற்றது.
கோடை சீசனின் முக்கிய நிகழ்வான குதிரை பந்தயம், மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஊட்டியில் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி குதிரை பந்தயம் தொடங்கும். ஆனால் கடந்த ஆண்டு மழை காரணமாக பல்வேறு போட்டிகள் ரத்தானதால், இந்த ஆண்டுக்கான பந்தயம் முன்னதாகவே ஏப்ரல் மாதம் 1-ந் தேதி தொடங்கியது. தி நீல்கிரிஸ் 1000 மற்றும் 2000 கீன்னீஸ் உள்ளிட்ட பந்தயங்கள் மற்றும் முக்கிய பந்தயங்களில் ஒன்றான 'தி நீல்கிரிஸ் டெர்பி ஸ்டேக்ஸ்' கிரேட்-1 குதிரை பந்தயம் நடந்து முடிந்தது.
இதைத்தொடர்ந்து கடைசி குதிரை பந்தயம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த போட்டியில் குளோரியஸ் கிரேஸ் முதலிடம் பிடித்தது. பின்னர் ஜாக்கி உமேஷ் மற்றும் பயிற்சியாளர் செபஸ்டின் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக திரளான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் கலந்து கொண்டு குதிரை பந்தயத்தை கண்டு ரசித்தனர். மேலும் நேரில் வர முடியாதவர்கள் ஆன்லைன் மூலம் பந்தயத்தை பார்த்தனர். பந்தயம் நிறைவு பெற்றதால் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட குதிரைகள் வாகனங்கள் மூலம் மீண்டும் அங்கேயே கொண்டு செல்லப்படுகிறது.
- அவனியாபுரத்தில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் மறியல் செய்தனர்.
- அவனியாபுரம் 100-வது வார்டு ஜே.ஜே. நகர் பகுதியில் சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.
மதுரை
மதுரை மாநகராட்சி அவனியாபுரம் 100-வது வார்டு ஜே.ஜே. நகர் பகுதியில் சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதை செய்து தரக்கோரி பலமுறை அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காததால் விரக்தியடைந்த அந்த பகுதி பொதுமக்கள் இன்று 100-க்கும் மேற்பட்டோர் மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அரசு பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், கவுன்சிலர் முத்துலட்சுமி அய்யனார், மாநகராட்சி பொறியாளர் செல்வ விநாயகம் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை முறையாக நிறைவேற்றுவோம் என்று அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- அரியலூர் தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
- பஸ்கள் உரிய நேரத்தில், போதிய எண்ணிக்கைகளில் இயக்கப்படுவது குறித்தும், டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்தும் அவர்களிடம் கேட்டு அறிந்தார்.
அரியலூர்,
அரியலூர் நகராட்சியின் பஸ் நிலைய கட்டிடம் மிகவும் சிதிலமடைந்ததால் அதனை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய பஸ் நிலையம் கட்டும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி அரியலூர் புறவழிச்சாலையில் தற்போது தற்காலிக பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.இங்கு பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்பட்டுள்ளதா? என்பது குறித்து மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டார். மேலும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், பஸ்கள் உரிய நேரத்தில், போதிய எண்ணிக்கைகளில் இயக்கப்படுவது குறித்தும், டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்தும் அவர்களிடம் கேட்டு அறிந்தார்.பின்னர் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்தி தருமாறு நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை பார்வையிட்டு கல்லூரி நுழைவு வாயிலில் உள்ள மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளுக்கு கட்டப்பட்டுள்ள தற்காலிக கட்டிடங்களை விரைவாக அகற்றிடவும், கல்லூரிகளில் உள்ள முட்புதர்களை சுத்தம் செய்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, அரியலூர் நகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடைகளை பார்வையிட்டு பொருட்களின் இருப்பு விவரம், பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டதற்கான பதிவேடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். பின்னர், அரியலூர் நகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கூட்டுறவு மருந்தகத்தினை பார்வையிட்டு விற்பனை செய்யப்படும் மருந்து, மாத்திரைகளின் தரம் குறித்து சம்பந்தப்பட்ட பணியாளரிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளர் உத்தண்டி, அரியலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) தமயந்தி, வட்டாட்சியர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஆஷா அஜித் கூறினார்.
- பால சுப்பிரமணியன் (பள்ளத்தூர்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் மற்றும் பள்ளத்தூர் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது கானாடுகாத்தான் மற்றும் பள்ளத்தூர் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் கண்மாய்கள் மற்றும் ஊரணிகள் சீரமைப்பு பணிகள், புதிய சாலைப்பணிகள், வளமீட்பு பூங்காக்களில் இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் முறை உள்ளிட்டவைகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஆகியன தொடர்பாகவும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து பகுதியில் வசிக்கும் பொது மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கென மாவட்டத்தி லுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றி யங்கள் ஆகியவைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் துரிதமான பல்வேறு வளர்ச்சித்திட்ட பணி களுக்கான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறினார்.
தொடர்ந்து கானாடு காத்தான், பள்ளத்தூர் பேரூராட்சி பகுதிகளில் பல லட்சம் மதிப்பில் நடை பெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வை யிட்ட கலெக்டர் அதனை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது பேரூராட்சி தலைவர்கள் ராதிகா ராமச்சந்திரன் (கானாடு காத்தான்), சாந்தி சிவசங்கர் (பள்ளத்தூர்), உதவி செயற்பொறியாளர் ரெங்க ராஜ், உதவிப்பொறியாளர் அன்புச்செழியன், பேரூராட்சி செயல் அலுவ லர்கள் ரமேஷ்பாபு (கானாடு காத்தான்), பால சுப்பிரமணியன் (பள்ளத்தூர்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.
- மேயரிடம் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.
திருப்பரங்குன்றம்
மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட திருப்பரங்குன்றத் தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மண்டல தலைவர் சுவிதா விமல் தலைமை தாங்கினார். மேயர் இந்திராணி, ஆணையாளர் பிரவீன் குமார், துணை மேயர் நாகராஜன் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
கூட்டத்தில் 97-வது வார்டு கவுன்சிலர் சிவசக்தி ரமேஷ் தனது வார்டுக்கு உட்பட்ட கோட்டை அரசு ஆரம்ப பள்ளியில் குடிநீர் வசதி இல்லாமல் மாணவ- மாணவிகள் அவதிப்படு கின்றனர். எனவே குடிநீர் வசதியை நிறைவேற்ற வேண்டும். ஓம் சக்தி நகரில் கட்டப்பட்டு உள்ள பொதுக் கழிவறையை பயன்பாட்டு க்கு கொண்டு வர வேண்டு மென வலியு றுத்தி கோ ரிக்கை மனு அளித்தனர்.
94-வது வார்டு கவுன்சிலர் ஸ்வேதா சத்யன் திருநகர் பகுதியில் சாலை, தெரு விளக்கு, கழிவுநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். மேலும் வார்டில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு போதுமான கவச உடைகள், கையுறைகள் இல்லை. எனவே அதனை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
93-வது வார்டு பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கவுன்சிலர் ரவிச்சந்திரன் வலியுறுத்தினார். மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு இடங்க ளில் குடிநீர், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்களும் மனு அளித்தனர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட மேயர், கோரிக்கை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய அரசு அதிக நிதி ஒதுக்குகிறது.
- நவீன வசதிக ளுடன் கூடிய அரசு அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் ரூ244.20 லட்சம் மதிப்பில் மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலக புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு கலெக்டர் ஜெயசீலன் தலைைம தாங்கினார். சீனிவாசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு அடிக்கல் நட்டு புதிய கட்டிட பணிகளை தொடங்கி வைத்தனர்.
விழாவில் அமைச்சர்கள் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் தமிழ கத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு எளிதி லும், விரைவாகவும் சென்ற டைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நிர்வாக கட்டமைப்புகளை செயல் படுத்தி வருகிறார்கள்.
அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் பல்வேறு மேம் பாட்டு நிதி திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டப் பணிகளை செயல் படுத்தி வருகிறது. அதுமட்டு மல்லாமல் பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரமமின்றி பணிபுரிய வசதியாக வும் பல்வேறு நிதி திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து பல்வேறு துறைகளுக்கு நவீன வசதிக ளுடன் கூடிய அரசு அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக் குமார், சாத்தூர் கோட்டாட் சியர் சிவக்குமார், செயற்பொறியாளர் செல்வராஜன், விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுமதி ராஜசேகர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவ லர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
- அரசு பள்ளிகள் அடிப்படை வசதிகளின்றி செயல்படுகின்றன.
- முறையாக பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை
மதுரை மாநகராட்சிக்குட் பட்ட விளாங்குடி 20-வது வார்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் கழிப்பறை முழுவதுமாக சேதமடைந்துள்ளது. சுவற்றில் விரிசல் ஏற்பட்டு கீழே விழும் நிலையில் உள்ளது. பராமரிப்பின்றி தரை பெயர்ந்து காணப்படு கிறது. போதுமான தண்ணீர் வசதி இல்லாததால் கழிப்பறை பராமரிக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த கழிப்ப றையை பயன்படுத்தும் மாணவ, மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது.
மேலும் பள்ளி வளாகம் அருகே கால்நடைகள் கட்டுப்படுகின்றன. அவற்றின் கழிவுகள் அகற்றாமல் கேட் அருகிலேயே கிடக்கின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படா மல் உள்ளதாக கூறப்படு கிறது.
இந்த நிலையில் மாணவ-மாணவிகளின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டி, கழிப்பறைகள், பள்ளி வளாகத்தை சீரமைத்து தர வேண்டும் என்றும், முறையாக பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
- உசிலம்பட்டியில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
- தகவலறிந்து வந்த உசிலம்பட்டி நகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக் குட்பட்ட கருக்கட்டான்பட்டி ரோடு 13-வது வார்டு சின்னச்சாமி தெரு, ஜே.பி.ஆர். மகால் தெரு, வ.உ.சி தெரு உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் கடந்த 2005முதல் தற்போது வரை சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த பகுதியில் சாலை மற்றும் குடிநீர், கழிவு நீர், சாக்கடை, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க பலமுறை நகராட்சி நிர்வா கத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த உசிலம்பட்டி நகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பின்னர் சாலை, கழிவு நீர் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கை விடப்பட்டது.
- நிரவி, திரு.பட்டினம் தொகுதி விடுதலைச் சிறுத்தை கட்சி தொகுதி செயலாளர் அறிவித்துள்ளார்.
- மானாம்பேட்டை வடக்கு தெருவில் உள்ள சாலையை ஆய்வு செய்யுங்கள்.
புதுச்சேரி:
சாலை, தெருவிளக்கு, சுத்தமான தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டை, வரும் 20-ந் தேதி கலெக்ட ரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெறும். என, நிரவி, திரு.பட்டினம் தொகுதி விடுதலைச் சிறுத்தை கட்சி தொகுதி செயலாளர் அறிவித்துள்ளார். காரைக்காலை அடுத்த நிரவி-திரு.பட்டினம் தொகுதி விடுதலைச் சிறுத்தை கட்சி தொகுதி செயலாளர் கணல், இது குறித்து, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
நிரவி கொம்யூன் மானாம் பேட்டை கிராமத் தில் காலை 6 மணி முதல் 9 மணி வரை கொம்யூன் பஞ்சாயத்து சார்பாக வழங்கப்படுகிற தண்ணீரை, கலெக்டராகிய நீங்கள், சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளுடன் வந்து ஆய்வுக்கு உட்படுத்துங்கள். மானாம்பேட்டை வடக்கு தெருவில் உள்ள சாலையை ஆய்வு செய்யுங்கள். மானாம் பேட்டை வடக்கு தெரு இருளில் கிடக்கிறது.
எனவே, சாலை, தெரு விளக்கு, சுத்தமான தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல், ரேஷன் அட்டை, வாக்காளர் அடை யாள அட்டை, ஆதார் கார்டு ஆகியவைகளை 50 கிராமங்களில் இருந்து முதல் கட்டமாக 200 பேர், மேற்கண்ட அனைத்து அரசு ஆவணங்களையும், வரும் 20-ந் தேதி கலெக்ட ரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தவுள்ளோம். அதற்கு முன்னதாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறி உள்ளது
- கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட 23 -வது வார்டில் தேனருவி நகர் உள்ளது. இந்த நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் சாலை, மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி தரவில்லை என அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
தற்போது பெய்த மழையின் காரணமாக சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இந்த சாலை வழியாக செல்லும் போது கீழே விழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதிமக்கள் கூறுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்டவைகளை ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சுமார் 3 தலைமுறைகளாக காலம் காலமாக 150 க்கு மேற்பட்ட மலை கிராம இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
- அடிப்படை வசதிகள் இல்லாமல் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் நம்பி எதிர்நோக்கி காத்து கிடக்கின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் ஏரியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மலையனூர், மலையூர் காடு, எல்லம்மாள் காடு, மூல பெல்லூர், டேம் கொட்டாய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.
அதே போல் அரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மலை கிராமங்களான அரசநத்தம், கலசப்பாடி, உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்களும், பென்னாகரம் ஊராட்சியில் கோட்டூர் மலை, அலகட்டுமலை, ஏரிமலை, உள்ளிட்ட மலை கிராமங்களும், ஏரியூர் ஒன்றியத்தில் மலையனூர், மலையூர் காடு, எல்லம்மாள் காடு, உள்ளன. மூல பெல்லூர் டேம் கொட்டாய், உள்ளிட்ட மலை கிராமங்களும் இன்று வரை அடிப்படை வசதிகள் இல்லாமல் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் நம்பி எதிர்நோக்கி காத்து கிடக்கின்றனர்.
அதில் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுஞ்சல்நத்தம் பஞ்சாயத்தில் மூல பெல்லூர் டேம் கொட்டாய் பகுதியில் சுமார் 3 தலைமுறைகளாக காலம் காலமாக 150 க்கு மேற்பட்ட மலை கிராம இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் கால்நடைகள் வளர்ப்பது, விறகு வெட்டுவது, மலை தேன் சேகரிப்பது, சுண்டைக்காய், கிழங்கு வகைகள், கீரை வகைகள் சாகுபடி செய்து அன்றாடம் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் எளிய கிராம மக்களுக்கும் கிடைக்க கூடிய அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சாரம் வசதி உள்ளிட்ட வசதிகள் எதுவும் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் இந்த கிராமத்தை சுற்றி மலைகள் சூழ்ந்து காணப்படுவதால் விஷப்பூச்சிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காகவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல்நிலை சரியில்லை என்றாலும் கயிறு கட்டில் மற்றும் புடவையில் தொட்டில் கட்டி மருத்துவமனை தூக்கி செல்லும் அவல நிலையில் உள்ளனர்.
இதனால் உரிய நேரத்திற்குள் செல்ல முடியாமல் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
பெண்கள் பிரசவ காலங்களில் பெரும்பாலானவர் அரசு சுகாதார நிலையங்களை நாடிச் செல்லாமல் பழைய முறையில் மருத்துவச்சி பெண்களைக் கொண்டு பிரசவம் பார்த்து வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் கிராம மக்கள்.
மேலும் சரியான சாலை வசதி இல்லாததால் கரடு முரடான ஒருவழி பாதையில் செல்வதால் பள்ளி செல்லும் பள்ளி மாணவ மாணவியர் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாததால் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர்.
பாதியிலேயே பள்ளிக்கு செல்லாமல் நின்று விடுவதாகவும், இதனால் இப்பகுதி மாணவர்கள் பள்ளியை தொடர்ந்து படிக்க முடியாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் அவல நிலையும் ஏற்படுகிறது. இதனால் பெண் பிள்ளைகள் பூப்பெய்தவுடன் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மலை கிராம மக்கள் கூறுகையில்;-
படிப்பறிவு இல்லாததால் தங்களுடைய தேவைகளுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இத்தனை ஆண்டுகள் மலை குகைக்குள் இருப்பது போன்றே இருந்து வருகின்றோம். மேலும் எங்கள் குறைகளை தீர்க்க எந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. எங்கள் வீடுகளில் அருகே மின்சார கம்பங்கள் இருந்தும் மின் இணைப்பு கொடுப்பதற்கு அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். மின் விளக்குகள் இல்லாததால் நெருப்பு மூட்டி தீ வெளிச்சத்தில் வாழ்ந்து வருகிறோம்.
மத்திய மாநில அரசுகள் மலைவாழ் மக்களுக்கு என்று அடிப்படை தேவைகளுக்காக பல கோடி கணக்கில் நிதி ஒதுக்கினாலும் அது எங்கள் அடிப்படை தேவைக்குகூட வந்து சேர்வதில்லை. மேலும் தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க வரும் சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கு வரும் வேட்பாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறோம் என வாக்குறுதி அளிக்கின்றனர்.
ஆனால் தேர்தல் முடிந்தால் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. நாங்கள் கோரிக்கையுடன் சென்றாலும் அவர்களை சந்திக்க முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும் இது குறித்து ஏரியூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பழனிச்சாமி கூறும்போது: ஏரியூர் ஒன்றிய பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் அனைவருமே புறக்கணிக்கப்படுகிறார்கள் மலைவாழ் மக்கள் கேட்கும் நியாயமான கோரிக்கையான சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, இதையே எங்களால் செய்து கொடுக்க முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் நிதி பற்றாக்குறை என கூறி வருகிறது என்றார்.
சுதந்திரம் பெற்று காலங்கள் கடந்தாலும் மலை கிராம மக்களுக்கு இன்னமும் அடிப்படை வசதிகளுக்காக எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த மலைக்கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- சாலைவசதி, குடிநீர் வசதி கேட்டு இப்பகுதி மக்கள் பலவித போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- தேர்தல் சமயத்தில் மட்டும் வாக்குச் சேகரித்துவிட்டு பின்னர் கண்டு கொள்ளாமல் சென்று விடுவார்கள்.
கொடைக்கானல்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு இடங்களில் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவித்து வருவது அரசியல் கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொடைக்கானல் அருகில் உள்ள வெள்ளக்கவி கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதி என்பதே கிடையாது. குண்டும், குழியமான மலைச்சாலையில் ஆபத்தான முறையில் மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள் போன்ற மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர்களுக்கு டோலிகட்டி தூக்கிச் செல்லும் நிலை உள்ளது.
மேலும் குடிநீருக்காக பெண்கள் 3 கி.மீ. தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். சாலைவசதி, குடிநீர் வசதி கேட்டு இப்பகுதி மக்கள் பலவித போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில்,
எங்கள் கோரிக்கையை மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ ஊராட்சி தலைவர், யூனியன் தலைவர் என அனைவரிடமும் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை. தேர்தல் சமயத்தில் மட்டும் வாக்குச் சேகரித்துவிட்டு பின்னர் கண்டு கொள்ளாமல் சென்று விடுவார்கள். எனவே இந்த முறை கண்டிப்பாக புறக்கணிப்பு செய்ய உள்ளோம் என்றனர்.
இதேபோல் திண்டுக்கல் அருகே உள்ள குஜிலியம்பாறை குடகனாறு பாதுகாப்பு சங்கத்தினரும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். திண்டுக்கல், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக குடகனாறு உள்ளது. இதற்கு தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அறிக்கையை நீண்ட காலமாக வெளியிட அரசு மறுத்து வருகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.