என் மலர்
நீங்கள் தேடியது "Welfare assistance"
- முதியவர்களுக்கு புத்தாடை, இனிப்பு மற்றும் இரவு உணவு வழங்கும் விழா நடைபெற்றது.
- திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருப்பூர் :
விஜய் மக்கள் இயக்கத்தின் திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் சிவ ஷர்மிளா அறக்கட்டளை ஒருங்கிணைந்த வளாகத்தில் முதியவர்களுக்கு புத்தாடை, இனிப்பு மற்றும் இரவு உணவு வழங்கும் விழா நடைபெற்றது.
திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஆர். சுகுமார் தலைமையில் நடந்த இந்த விழாவில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜி.கே. சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட நிர்வாகிகள் அப்பாஸ், சதீஸ், லோகு, சிவா, அஸ்வின், மணி, பசபுகழ் மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் காளிமுத்து, போஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் மாவட்ட சப் - கலெக்டர் சுருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.
- முகாமில் 41 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் தொடர்பு நாள் முகாம் திருப்பூர் மாவட்ட சப் - கலெக்டர் சுருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.
பல்லடம் தாசில்தார் நந்தகோபால், வடுகபாளையம்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 41 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இதில் 24 மனுக்கள் உடனடியாக பரிசீலனை செய்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.17 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. நிகழ்ச்சியில் பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம், பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், வில்சன்,அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்டாக்டர் ராமசாமி, மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அம்பேத்குமார் எம்.எல்.ஏ.வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் பெருங்கடப்புத்தூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் மனுநீதி நாள் விழா நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் அனாமிகா, தெள்ளார் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் குமரன், ஒன்றிய குழு தலைவர் கமலாட்சி, வந்தவாசி தாசில்தார் முருகானந்தம், சமூக பாதுகாப்பு தாசில்தார் சுபாஷ் சந்தர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் பெருங்கடப்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி ஆதிகேசவன் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக வந்தவாசி அம்பேத்குமார் எம். எல். ஏ, கலந்துகொண்டு 418 பயனாளிகளுக்கு ரூ.43 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து பேசினார்.
விழாவில் உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) சுரேஷ்குமார், தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன் பாபு,பரணிதரன், தேசூர் வருவாய் ஆய்வாளர் ஜெயபிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் ஆசைத்தம்பி, சுகாதார ஆய்வாளர் கணேசன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, சுகாதா ரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட சார்பாக அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சிகளை பார்வையிட்டனர்.
- அனைத்து துறைகளை சார்ந்த ஒருங்கிணைந்த திட்ட முகாம், தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது.
- அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் நடைபெறும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும் தொடங்கி வைக்கப்பட்டது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், குத்தப்பாஞ்சான் ஊராட்சி, காளத்திமடம் கிராமத்தில், கலைஞரின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாமின் மூலமாக அனைத்து துறைகளை சார்ந்த ஒருங்கிணைந்த திட்ட முகாம், தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் முன்னிலை வகித்தார். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாமினை பற்றி, பொதுமக்களுக்கு திட்ட உரையினை விளக்கி பேசினார்.
மேலும் குத்தப்பாஞ்ச் சான் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் நடைபெறும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைத்து துறைகளின் மூலமாகவும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆகாஷ், யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் குத்தபாஞ் ளசான் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணிகுமார், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் அன்பு பசுபதிதேவி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுதா சின்னத்தம்பி, ஒப்பந்ததாரர் கணேஷ் பாண்டியன், அனைத்து துறை சார்ந்த அரசு அதிகாரிகள், அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் என பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
- சாத்தான்குளம் தேர்வுநிலை பேரூராட்சியில் ரூ. 98 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி-பகிர்மான குழாய்கள் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
- விழாவில் ஆதிதிராவிடர் மக்களுக்கு 57 பேருக்கு இணைய வழி இ-பட்டாக்களும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தேர்வுநிலை பேரூராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 98 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி-பகிர்மான குழாய்கள் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
நலத்திட்ட உதவிகள்
விழாவில் 235 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தார்.
தொடர்ந்து சமூகபாது காப்பு திட்டத்தின் கீழ் இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித ்தொகை, ஆதரவற்ற விதவை உதவிதொகை மற்றும் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவித் தேவை உள்ளிட்ட அரசு நலத் திட்டங்களை 77 பேருக்கு வழங்கினார்.
வீட்டுமனைப் பட்டா
அதேபோல வருவா ய்த்துறை சார்பாக பெரிய தாழை, படுக்கப்பத்து, கட்டாரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 101 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களும், ஆதிதிராவிடர் மக்களுக்கு 57 பேருக்கு இணைய வழி இ-பட்டாக்களும் கனிமொழி எம்.பி. வழங்கி பேசினார்.
விழாவில் திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாகின் அபூபக்கர், தாசில்தார் தங்கையா, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார், அரசு மகளிர் கல்லூரி முதல்வர் சின்னத்தாய், தி.மு.க. மாணவர் அணி துணைச் செயலாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம், முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வன், மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், முதலூர் பஞ்சாயத்து தலைவர் பொன்முருகேசன், ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெயபதி, மாவட்ட தி.மு.க. பிரதிநிதி அலெக்ஸ் புருட்டோ, ஆழ்வை ஒன்றிய செயலாளர் பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்ன தாக சாத்தான்குளம் பேரூராட்சி தலைவர் ரெஜினா ஸ்டெல்லாபாய் வரவே ற்றார். முடிவில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஜோசப் நன்றி கூறினார்.
- மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது
- நாளை மற்றும் 7-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்படுகிறது.
தூத்துக்குடி:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செய லாளர் ஜவகர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் நாளை மறுநாள் ( 7-ந் தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தூத்துக்குடி மத்திய மாவட்ட பகுதிகளில் நாளை மற்றும் 7-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்படுகிறது. நாளை புதுக்கோட்டை யில் மத்திய மாவட்டம் சார்பில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாப்படு கிறது. தொடர்ந்து மருத்துவ முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடப்படுகிறது. இதேபோல் கந்தவேல்புரத்தில் சிறுவர், சிறுமிகளுக்கான விளை யாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு ஏழை, எளி யோருக்கு நலத்திட்ட உதவி கள் வழங்கப்படும்.
கமல்ஹாசன் பிறந்த நாளான 7-ந் தேதி கிருஷ்ணராஜபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றப்பட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்படும்.
இதேபோல் மூன்றாம் மைல் பகுதியில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்குதல், லயன்ஸ் டவுன் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், 1-ம் கேட் காந்தி சிலை அருகே இனிப்புகள் வழங்குதல், தாளமுத்து நகரில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்குதல், வ.உ.சி. மார்க்கெட் அருகில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்படுகிறது.
எனவே மத்திய மாவட்ட மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பாக கட்சி தலைவர் கமல்ஹாசன் பிறந்தாளையொட்டி நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் மூலம் கடன்கள் வழங்கப்படுகிறது.
- 10 அல்லது 12-க்கு மேற்பட்டவர்கள் குழுவாக சேர்ந்து வங்கிகளுக்கு விண்ணப்பம் அளித்தால், கடன் வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கரடிவாவி ரங்கசாமிகவுண்டர் மண்டபத்தில், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறையின் சார்பில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 194 பயனாளிகளுக்கு ரூ.41 லட்சத்து 79 ஆயிரத்து 479 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வினீத் வழங்கினார். விழாவில் கலெக்டர் வினீத் பேசியதாவது:-
சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் மூலம் கடன்கள் வழங்கப்படுகிறது. 10 அல்லது 12-க்கு மேற்பட்டவர்கள் குழுவாக சேர்ந்து வங்கிகளுக்கு விண்ணப்பம் அளித்தால், கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் சுயஉதவிக்குழுக்கள் குறைவாக உள்ளதால், மேலும், சுய உதவிக்குழுக்கள் அதிகளவில் சேர்ந்து பயன்பெற வேண்டும். அந்த வகையில் கரடிவாவியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 62 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, 11 பேருக்கு ரூ.1.32 லட்சம் மதிப்பில் முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை, 5 பேருக்கு ரூ.21 ஆயிரத்து 250 மதிப்பில் கணினி புதிய குடும்ப மின்னணு அட்டை, 20 பேருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில், 5 பேருக்கு ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 207 மதிப்பீட்டில் இடுபொருட்கள், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் 15 பேருக்கு ரூ.2 லட்சத்து 66 ஆயிரத்து 452 மதிப்பீட்டில் வேளாண் உபகரணங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு துறையின் சார்பில், 3 பேருக்கு ரூ.75 ஆயரம் மதிப்பிலும், இலங்கை தமிழர் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 12 பேருக்கு ரூ.90 ஆயிரத்து 570 மதிப்பில் என மொத்தம் 194 பயனாளிகளுக்கு ரூ.41 லட்சத்து 79 ஆயிரத்து 479 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாயல்குடி அருகே 178 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- கடலாடி வட்டாட்சியர் மரகத மேரி வரவேற்றார்.
சாயல்குடி
சாயல்குடி அருகே எஸ். கீரந்தை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது இம் முகாமிற்கு பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல் தலைமை வகித்தார். கடலாடி வட்டாட்சியர் மரகத மேரி வரவேற்றார்.
சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கந்தசாமி, எஸ். கீரந்தை ஊராட்சிமன்ற தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 225 மனுக்கள் பெறப்பட்டு 178 பயனாளிகளுக்கு ரூ. 9 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பரமக்குடி சார் ஆட்சியர் வழங்கினார்.
இம்முகாமில் மாவட்ட வழங்கள் அலுவலர் மரகதநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அன்னம்மாள், வேளாண்மை இணை இயக்குனர் சரஸ்வதி, உதவி இயக்குனர் ஊராட்சிகள் பரமசிவன், பரமக்குடி துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் பிரதாப்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி மாவட்ட திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் விசுபாவதி, தோட்டக்கலை துறை இயக்குனர் நாகராஜன், கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்வேல் முருகன், கடலாடி ஒன்றிய ஆணையாளர் அண்ணாதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, கடலாடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன், துணை வட்டாட்சியர்கள் சாந்தி, தமிழ் மதி கடலாடி வட்ட வழங்கல் அலுவலர் ரங்கராஜ், சாயல்குடி வருவாய் ஆய்வாளர் சேகர் கிராம நிர்வாக அலுவலர்கள் வெள்ளைச்சாமி, மாரி ப்பாண்டியன், நவீன் குமார், அருண்குமார், ஜமால் முகம்மது உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ரூ.1.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- 73 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகா பாலகொலா விளையாட்டு மைதானத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். முகாமில் பொதுமக்களிடம் இருந்து 81 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் 73 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. பின்னர் கலெக்டர் அம்ரித் பேசும்போது கூறியதாவது:-
81 பேருக்கு வீட்டு மனைப்பட்டா நீலகிரியில் அனுபோக சான்று ஆண்டிற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது விவசாயிகளின் நலன் கருதி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கலாம் என மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பட்டா வழங்குவதற்கு சில வழிமுறைகள் உள்ளது. குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சிறப்பு திட்டம் மூலம் பட்டா வழங்கப்படுகிறது. பாலகொலாவில் மட்டும் 81 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 28 பேருக்கு முதியோர் உதவித்தொகை, தோட்டக்கலைத்துறை சார்பில் 12 பேருக்கு ரூ.1.60 லட்சம் மதிப்பில் தோட்டக்கலை சார்ந்த மானியத்துடன் கூடிய நுண்ணீர் தெளிப்பான் மற்றும் மின்சார பேட்டரி மூலம் இயங்கும் தெளிப்பான்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 81 பேருக்கு ரூ.56.70 லட்சம் செலவில் வீட்டுமனை பட்டா, மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 10 பேருக்கு ரூ.37.72 லட்சம் கடனுதவிகள் உள்பட மொத்தம் 213 பயனாளிகளுக்கு ரூ.1.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இதில் ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், மகளிர் திட்ட இயக்குனர் மகாவீர் சித்ரன், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலா மேரி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, ஊராட்சி உதவி இயக்குனர் சாம் சாந்தகுமார் பாலகொலா ஊராட்சி தலைவர் கலைசெல்வி , ஊராட்சி செயலர் கார்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
- ஆதரவற்ற 500 பேர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்குதல், இறகு பந்து போட்டிகள் உள்ளிட்ட 4,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
அதன்படி ராதாபுரம் தொகுதிக்கு திசையன்விளையிலும், நாங்குநேரி தொகுதிக்கு களக்காட்டிலும், அம்பாச முத்திரம் தொகுதிக்கு சேரன்மகாதேவியிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. மேலும் வருகிற 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை 32 இடங்களில் தி.மு.க. கொடியேற்றி இனிப்பு வழங்குதல். முதியோர் இல்லங்களில் மதிய உணவு, ரத்ததான முகாம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், பார்வையற்றோர் பள்ளியில் மதிய உணவு, ஆதரவற்ற 500 பேர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்குதல், இறகு பந்து போட்டிகள் உள்ளிட்ட 4,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகள் எனது தலைமையில் எம்.பி., மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் முன்னிலையில் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தி.மு.க. மீனவரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
- எல்லோருக்கும் உயர் படிப்புகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கலைஞர் ஆட்சியில் மாவட்டத் தோறும் மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்டது
தூத்துக்குடி:
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மீனவரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ் தலைமை தாங்கினார்.
கனிமொழி எம்.பி
மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், வட்டச்செயலாளர் டென்சிங், மாவட்ட மீனவரணி துணைச் செயலாளர் ராபர்ட், கவுன்சிலர்கள் ரெக்ஸிலின், பவாணி மார்ஷல், மெட்டில்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல் வரவேற்றார்.
இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு மீனவர் தினத்தையொட்டி நடைபெற்ற படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் தையல்மிஷின், சேலை உள்பட 800 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
நீட்தேர்வு
மொழியின் மூலம் மருத்துவர்கள் ஆக வேண்டிய மாணவ- மாணவர்களின் எதிர்காலம் நீட் தேர்வின் மூலம் தடைபடுகிறது. எல்லோருக்கும் உயர் படிப்புகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கலைஞர் ஆட்சியில் மாவட்டத் தோறும் மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்டது.தவறான கொள்கையை கடைபிடிக்கும் பா.ஜ.க.வை அனைவரும் புறக்கனிக்க வேண்டும். மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு தந்து விடக்கூடாது.
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் ஆழப்படுத்தப்பட்டுள்ளது. திரேஸ்புரம் படகு நிறுத்தும் இடம் விரிவாக்கம், திரேஸ்புரம் கடற்கரை திரேஸ்புரம் சாலை இனிகோநகர் கடற்கரை, ஆகிய பகுதிகளில் ஹை மாக்ஸ் லைட் அமைத்து மற்றும் உங்களது அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருகிறேன்.
மாணவிகளுக்கு
ரூ. 1000
அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் ரூ. 1000 வழங்கப்பட்டுள்ளது. எம்.பி நிதியை ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளது. உங்களோடு நின்று பணியாற்றும் இயக்கம் தி.மு.க. ஓன்றிய அரசோடு சேர்ந்து அ.தி.மு.க. மக்கள் விரோத பறிப்பு செயலில் ஈடுபட வருவார்கள். அதற்கு இடமளிக்க வேண்டாம். தமிழகத்தை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கவும் முதல்-அமைச்சரின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், ஒன்றிய அரசு 2-வது முறையாக பொறுப்பேற்ற பின் தமிழர்களையும் தமிழ் மொழியையும் அழிக்கும் வகையில் செயல்படுகிறது. ஓரேநாடு ஓரே மொழி என்பது சாத்தியப்படாது. நாம் தமிழ் பேசுகிறோம். உணவு கலச்சாரம் மாறுப்படுகிறது. மற்ற மொழிகளை பயன்படுத்தி தமிழ் மொழியை அழித்து வேலைவாய்ப்பை பறிக்கிறது. தமிழர்கள் நல்ல முறையில் படித்து உழைப்பின் மூலம் உலகம் முழுவதும் அவர்களது திறமையின் மூலம் வாழ்கின்றனர். சமஸ்கிருத மொழிக்கு ரூ. 640 கோடி ஓதுக்கீடு, தமிழ் மொழிக்கு ரூ. 70 கோடி ஓதுக்கீடு என ஒன்றிய அரசு வேறபாடு காட்டுகிறது என்றார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, மாநகராட்சி மண்டலததலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மாநகர துணைச்செயலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், பிரமிளா, பொருளாளர் அனந்தையா, பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், மேகநாதன், மீனவரணி நிர்வாகிகள் பெப்பின், ஜேசையா, மாதவடியான், அந்தோணிராஜ், சந்திரமோகன், ஸ்மைலன், ஜெனிபர், அண்டன் பொன்சேகா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருக இசக்கி நன்றி கூறினார்.
- தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட உள்ளது.
- 27-ந் தேதி ஆதரவற்றோர் இல்லம் மற்றும் பி அண்ட் டி முதியோர் இல்லங்களில் மதிய உணவு வழங்கப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட உள்ளது.
நாளை மறுநாள் (26-ந் தேதி) தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்பு பிரமாண்ட கேக் வெட்டி கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து மாநகர தி.மு.க. சார்பில் தூத்துக்குடி கலைஞர் அரங்கிலும், கோவில்பட்டி நகரம் சார்பில் வேலாயுதபுரத்திலும் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
27-ந் தேதி ஆதரவற்றோர் இல்லம் மற்றும் பி அண்ட் டி முதியோர் இல்லங்களில் மதிய உணவு வழங்கப்படுகிறது. தொடர்ந்து, 27-ந் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது. பின்னர் எட்டையபுரம் மனநல காப்பகம், நாகலா–புரம் முதியோர் இல்லங்களில் மதிய உணவு வழங்கப்படுகிறது.
28-ந் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கமோதிரம், பாண்டவர்மங்கலம், நாலாட்டின்புதூர் ஆகிய பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், விளாத்திகுளத்தில் மரக்கன்றுகள் நடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
29-ந் தேதி கயத்தாறு, செட்டிக்குறிச்சி, கழுகுமலை ஆகிய இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
30-ந் தேதி புதூர், குறுக்குசாலை ஆகிய பகுதிகளில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
தொடர்ந்து 28,29 மற்றும் 3-ந் தேதிகளில் பல்வேறு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.
தி.மு.க. வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.