என் மலர்
நீங்கள் தேடியது "Government College"
- கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அக்கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
- கடந்த சனிக்கிழமை பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் அரசு நடத்தி வரும் சேத் பூல் சந்த் பாக்லா முதுகலை கல்லூரியில் புவியியல் துறையின் தலைவராக (HOD) உள்ளவர் ரஜ்னீஷ் குமார் (59 வயது).
இவர் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அக்கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதை வீடியோ எடுத்தும் வந்துள்ளார். இதுதொடர்பாக நிர்வாகத்திடம் உள்விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் அவர் குற்றமற்றவர் என்று கூறிவிட்டது.
இதனையடுத்து கடந்த ஆண்டு தேசிய மகளிர் ஆணையம் (NCW), உயர் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் ரஜ்னீஷ் குமார் மீது பாதிக்கப்பட்டவர் பெயர் குறிப்பிடப்படாமல் பாலியல் புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரில், பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் ஆபாசமான நிலையில் இருப்பதைக் காட்டும் பல்வேறு புகைப்படங்களும் 59 வீடியோக்களும் ஆதாரமாக இணைக்கப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் 13 அன்று தான் அவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 64 (பாலியல் வன்கொடுமை), பிரிவு 68 (அதிகாரத்தில் உள்ள ஒருவரால் பாலியல் வல்லுறவு), மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 66 (சைபர் குற்றங்கள்) ஆகியவற்றின் கீழ் ரஜ்னீஸ் குமார் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த சனிக்கிழமை அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் காவல்துறை நடவடிக்கை எடுப்பதை அறிந்ததும், ரஜ்னீஷ் குமார் தலைமறைவானார்.
இந்நிலையில் மாணவிகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட புவியியல் பேராசிரியரை 72 மணி நேரத்திற்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.
- பல்வேறு புகைப்படங்களும் 59 வீடியோக்களும் ஆதாரமாக இணைக்கப்பட்டிருந்தன.
- பரீட்சையில் நல்ல கிரேட் தருவது, வேலை வாங்கி தருவது ஆகிய ஆசைகளை காட்டி பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் இந்த செயல்களில் 20 வருடமாக ஈடுபட்டு வந்தார்.
உத்தரப் பிரதேசத்தில் 59 வயதான கல்லூரி அரசுக்கல்லூரி பேராசிரியர் பல மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் அரசு நடத்தி வரும் சேத் பூல் சந்த் பாக்லா முதுகலை கல்லூரியில் புவியியல் துறையின் தலைவராக (HOD) ஆக உள்ளவர் ரஜ்னீஷ் குமார் (59 வயது).
இவர் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அக்கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதை வீடியோ எடுத்தும் வந்துள்ளார். இதுதொடர்பாக நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்படாத பின், உள்விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் அவர் குற்றமற்றவர் என்று கூறிவிட்டது.
இதனையடுத்து கடந்த ஆண்டு தேசிய மகளிர் ஆணையம் (NCW), உயர் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் ரஜ்னீஷ் குமார் மீது பாதிக்கப்பட்டவர் பெயர் குறிப்பிடப்படாமல் பாலியல் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
அந்தப் புகாரில், பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் ஆபாசமான நிலையில் இருப்பதைக் காட்டும் பல்வேறு புகைப்படங்களும் 59 வீடியோக்களும் ஆதாரமாக இணைக்கப்பட்டிருந்தன.

இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் 13 அன்று தான் அவர் மீது எப்ஐஆர் பதவு செய்யப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 64 (பாலியல் வன்கொடுமை), பிரிவு 68 (அதிகாரத்தில் உள்ள ஒருவரால் பாலியல் வல்லுறவு), மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 66 (சைபர் குற்றங்கள்) ஆகியவற்றின் கீழ் ரஜ்னீஸ் குமார் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த சனிக்கிழமை அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் காவல்துறை நடவடிக்கை எடுப்பதை அறிந்ததும், ரஜ்னீஷ் குமார் தலைமறைவாகியுள்ளார்.
மாணவிகளுக்கு பரீட்சையில் நல்ல கிரேட் தருவது, வேலை வாங்கி தருவது ஆகிய ஆசைகளை காட்டி பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் இந்த செயல்களில் 20 வருடங்களுக்கும் மேலாக ஈடுபட்டு வந்ததாக ஹத்ராஸ் மாவட்ட எஸ்பி சிரஞ்சீவி நாத் சின்ஹா தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் மகளிர் ஆணையத்தில் சமர்ப்பித்த படங்களில் 12, ரஜ்னீஷ் சின்ஹா, காலேஜின் டீன் ஆபீசில் வைத்தே மாணவிகளிடம் அத்துமீறுவதைக் காட்டுகிறது.
அதில் உள்ள மாணவிகளை அடையாளம் காண போலீசார் முயன்றனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். இதற்கிடையே தலைமறைவான பேராசிரியர் ரஜ்னீஷ் சின்ஹாவை தேடும் பணியில் ஹத்ராஸ் போலீஸ் ஈடுபட்டுள்ளது.

- கல்லூரியில் சுமார் 2600 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்.
- மாணவ, மாணவிகள் சுமார் 1500 பேர் வகுப்புகளை புறக்கணித்தும் கல்லூரி வளாகத்திற்கு அமர்ந்தும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலை :
உடுமலை எல்லை மற்றும் பிரிவு ரோடு பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியில் சுமார் 2600 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். கல்லூரியின் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு இறுதி ஆண்டு பயிலும் மாணவ மாணவிகள் நீண்ட நாட்களாக அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி கழிப்பிட வசதி உள்ளிட்டவற்றை நிறைவேற்றித் தருமாறு கல்லூரி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் கல்லூரி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் எனக் கூறி இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள் சுமார் 1500 பேர் வகுப்புகளை புறக்கணித்தும் கல்லூரி வளாகத்திற்கு அமர்ந்தும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஆதரவாக முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்தனர். இதனால் வகுப்புகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. மாணவர்கள் தரப்பில் கல்லூரி வளாகத்திற்குள் குடிநீர் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். மாணவர்களுக்கு ஐடி கார்டு வழங்க வேண்டும். அரசு வழங்கும் இலவச பஸ் பாஸ் உடனே வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாணவர்களின் புகார்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டாலும் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- தொட்டியத்தில் அரசு மகளிர் கல்லூரி அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்
- தொட்டியத்தை அடுத்த மேலக் காரைக்காட்டில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க இடம் ஆய்வு செய்யப்பட்டது
திருச்சி:
திருச்சி மாவட்டம் முசிறி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான காடுவெட்டி ந.தியாகராஜன் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தொட்டியம் பகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் பேசினார்.
அதன் தொடர்ச்சியாக தொட்டியத்தை அடுத்த மேலக் காரைக்காட்டில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க இடம் ஆய்வில் முசிறி சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான காடுவெட்டி ந.தியாகராஜன்,
கல்லூரி கல்வி இணை இயக்குநர் குணசேகரன் மற்றும் பொதுப்பணித்துறை சார்பாக துணை இயக்குனர் கார்த்திக் ஆகியோர் கல்லூரி அமைக்க இடம் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தொட்டியம் கிழக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாலா.ந.திருஞானம், தா.பேட்டை தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாப்பாபட்டி க.பெரியசாமி, தொட்டியம் ஒன்றிய சேர்மன் கிருஷ்ணவேணி,
தொட்டியம் நகர கழக செயலாளர் எம்.ஏ.ஆர்.விஜய்ஆனந்த், ஒன்றிய கவுன்சிலர்கள் எம்.புத்தூர் கோவிந்தராசு, எல்.ஆர்.எஸ். சுப்பிரமணி, கார்த்திகைப்பட்டி லோகநாதன், மேலக் காரைக்காடு திருப்பதி, மனோகரன் மற்றும் தொட்டியம் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- புள்ளியியல் துறையில் மாணவி தமிழரசி ஆகியோர் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
- துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் உட்பட அனைவரும் வாழ்த்தினர்.
உடுமலை :
பாரதியார் பல்கலைக்கழகத்தின் 2021-22ம் கல்வியாண்டின் தேர்வு முடிவுகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் 11 பேர் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அதன்படி இளநிலை பட்ட வகுப்புகளில் புள்ளியில் துறை மாணவி சசிரேகா முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதேபோல மாணவன் பிரவீன் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.
இதுதவிர மின் வணிகவியல் துறையில் பரமேஸ்வரி மூன்றாமிடம், நித்யா ஐந்தாமிடம், பொருளியல் துறையில் செல்வாம்பிகை 7-ம் இடம், சந்தியா 9-ம் இடம் பிடித்துள்ளனர்.தாவரவியல் துறையில் மாணவர் ஹக்கீம் 6-ம் இடம், மாணவி சத்யா 8-ம் இடம் பிடித்துள்ளனர்.
முதுநிலை பட்ட வகுப்புகளில் சுற்றுலாவியல் துறையில் மாணவி ஹெப்சிபா, புள்ளியியல் துறையில் மாணவி தமிழரசி ஆகியோர் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். வேதியியல் துறையில் மாணவன் முகம்மதுமுஸ்தாக் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
இவர்களை கல்லூரி முதல்வர் கல்யாணி, துறைத்தலைவர்கள் சிவகுமார், மலர்வண்ணன், கோகிலா, பூங்கோதை, உருமாண்டராஜ இளங்கோ, விஜய்ஆனந்த், பேராசிரியர்கள் உட்பட அனைவரும் வாழ்த்தினர்.
- செல்லூர் அரசு கல்லூரி உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார்.
- கல்லூரிகளில் இது போன்ற குறைகளை நீக்க முதலமைச்சரும் நிதி ஒதுக்கி உள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் செல்லூர் அரசு கல்லூரி உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் சட்டமன்றத்தில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ கேள்விக்கு அமைச்சர் பொன்முடி பதில்.
2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நடை பெற்று வருகிறது.
கூட்ட தொடரில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் எழுப்பிய கேள்வி பின்வருமாறு,
பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரியாக தொடங்கப்பட்டு, பின்னர் அரசு கலை அறிவியல் கல்லூரியாக மாற்றப்பட்ட, நாகப்பட்டினம் செல்லூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் மாணவர்கள் பெரும் இன்னலை சந்திக்கிறார்கள்.
சுற்றுச்சுவர், நடைபாதை, ஆய்வகம், நூலகம், கூட்ட அரங்கம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் ஒரு கட்டிடம் மட்டும் இருக்கிறது, வகுப்பறை நடக்கிறது.
எனவே அரசு உடனடியாக இதை பரிசீலித்து உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
அதுபோல அங்கு நிர்வாக செலவுகளுக்கு பல்கலைக்கழகத்தை சார்ந்திருப்பதா அரசை சார்ந்திருப்பதா என்ற குழப்பம் நீண்ட நாட்களாக நீடித்தது.
நிர்வாக செலவுகளுக்கு போதிய நிதி இல்லாமலும் அவர்கள் திண்டாடக்கூடிய சூழலை காண முடிகிறது.
அதையும் அரசு உடனடியாக கவனத்தில் எடுத்து உரிய தீர்வை தருமா என்று அமைச்சர் அவர்களை அறிய விரும்புகிறேன்.
இவ்வாறு எம்.எல்.ஏ கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, அரசு கலைக் கல்லூரிகளில் இது போன்ற குறைகள் உள்ளன. அவற்றை நிறைவேற்ற வேண்டுமென்று முதலமைச்சரும் நிதி ஒதுக்கி உள்ளார்.
எனவே ஆய்வகம், விடுதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.
- முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கூடுதல் வகுப்பறைகளை திறந்துவைத்தாா்.
- சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் பங்கேற்று வகுப்பறைகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
திருப்பூர் :
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரி ஆகியவற்றில் கூடுதல் வகுப்பறைகளை திறந்துவைத்தாா்.
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பில் சுமாா் 11 ஆயிரம் சதுர அடியில் 3 தளங்களை கொண்ட 10 வகுப்பறைகளும், எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ரூ.3 கோடியே 74 லட்சம் மதிப்பில் சுமாா் 24 ஆயிரம் சதுர அடியில் 5 தளங்களை கொண்ட 18 வகுப்பறைகள் திறந்துவைக்கப்பட்டன.முன்னதாக திருப்பூா் சிக்கண்ணா மற்றும் எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக்கல்லூரிகளில் நடைபெற்ற திறப்பு விழாவில் திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் பங்கேற்று வகுப்பறைகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
- சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் மவுன விரத போராட்டம் நடந்தது.
- போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.
சுரண்டை:
தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் மவுன விரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர் நலச்சங்க சுரண்டை கிளை தலைவர் கதிரேசன் தலைமை தாங்கினார். கவுரவ விரிவுரையாளர்கள் அண்ணாமலை, மாரிச்செல்வி, குழல் வாய்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவக்குமார் வரவேற்றார்.
போராட்டத்தில் தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றும் அனைத்து கவுரவ விரிவுரையாளர்களுக்கும் அரசாணை எண் 56-ன் கீழ் பணி வழங்க வேண்டும். பல்கலைக்கழக மானிய குழு நிர்ணயம் செய்த ஊதிய நிர்ணயத்தின்படி ஒவ்வொரு கவுரவ விரிவுரையாளர்களுக்கும் பணிக்காலம் முழுமைக்குமான நிலுவைத் தொகை வழங்க வேண்டும், மாநில தகுதி தேர்வு உடனடியாக நடத்த வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மவுன விரத போராட்டம் நடந்தது. இதில் கவுரவ விரிவுரையாளர்கள் முத்துலட்சுமி, பிரியா ராமவாணி, ஜெகானந்தஜோதி, முத்தரசி, சுபசங்கரி, அரிராம், விஜய் அமிர்தராஜ் உட்பட அனைத்து கௌரவ விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.
- சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் முதலாமாண்டு மாணவியின் தந்தை கணேஷ்பாண்டியன் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் உறுப்பினராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கல்லூரியின் பொறுப்பு முதல்வர் ஜமுனாராணி தலைமை தாங்கி வரவேற்றார். இதில் இந்த கல்வியாண்டில் அரசு மாணவிகளுக்கு அறிவித்துள்ள 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் செயல்படும் தொழில் நுட்ப படிப்புகள் குறித்தும், அரசு பள்ளியில் படித்த மாணவியருக்கு மாதந்தோறும் ரூ. 1000 தமிழக அரசு வழங்குகிறது என்ற தகவலும் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் முதலாமாண்டு மாணவியின் தந்தை கணேஷ்பாண்டியன் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் உறுப்பினராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் திசையன்விளையிலிருந்து மாணவிகளுக்கு கல்லூரிக்கு வந்து செல்ல இலவச பஸ் வசதி செய்து தரும்படி பெற்றோர்கள் மனு அளித்தனர். அந்த மனு போக்குவரத்து கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழகக் செயலர் பூங்கொடி நன்றி கூறினார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
- தமிழ் இணைய கல்விக்கழகம் சார்பில் சிவகங்கை அரசு கல்லூரியில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடந்தது.
- இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்று பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி அரங்கில் தமிழ் இணைய கல்விக்கழகம் சார்பில் தமிழ்க்கனவு நிகழ்ச்சி கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது:-
தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் பெருமையையும் எதிர்கால சந்ததியி னர்களாகிய நீங்கள் அறிந்து கொள்ளும் வகையில் சமூக விழிப்புணர்வையும் பொருளாதார முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழ் மரபும் அதன் நாகரீகம் குறித்தும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, பண்டைய கால தமிழர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்ததற்கான அடையாளங்களை வெளிக்கொணர்கின்ற வகையில் தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்கள் ஆகியவற்றை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கு பெற்றுள்ள மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி புத்தகமும், தமிழ் பெருமிதம் குறித்த குறிப்பேடும் இங்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு, பண்பாட்டிற்கும், எதிர்காலத்திற்கும் வழிகாட்டிடும் வகையில், அடிப்படையாகத் திகழும் இந்நிகழ்ச்சியின் மூலம் சிறந்த சொற்பொழி வாளர்கள் வாயிலாக எடுத்துரைக்கப்படும் கருத்துக்களை உள்வாங்கி, மாபெரும் தமிழ் கனவினை நனவாக்குகின்ற வகையில் மாணவர்கள் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தங்களை சார்ந்தவர்களும் எடுத்துரைத்து, பயன்பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நாகராஜன், சொற்பொழிவாளர்கள் ராஜா, யாழினி (மருத்துவர்), சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் துரையரசன் மற்றும் ஆசிரியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- அரசு கல்லூரிகளில் மே 9-ந்தேதி முதல் கிடைக்கும்.
- மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று தனியார் கல்லூரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பம் வினியோகம் வருகிற மே 1-ந் தேதி தொடங்குகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக்கல்லூரிகளில் மே 9-ந் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 8-ந்தேதி வெளியாகும் நிலையில் இந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று தனியார் கல்லூரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியான பிறகு உரிய மதிப்பெண் சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 633 தனியார் கல்லூரிகள் மற்றும் 163 அரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட உள்ளன.
- ஈரோடு மாவட்டத்திலேயே முதல் முறையாக பி.எஸ்.சி தாவரவியல் பாடப்பிரிவு புதிதாக தொடக்கப்பட்டுள்ளது.
- இந்த பாடப்பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் பாடப்பிரிவு 2023-2024-ம் கல்வி ஆண்டு முதல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் கடந்த 8-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற 2023-2024-ம் கல்வியாண்டு முதல் ஈரோடு மாவட்டத்திலேயே முதல் முறையாக இளங்கலை பி.எஸ்.சி தாவரவியல் பாடப்பிரிவு புதிதாக தொடக்கப்பட்டுள்ளது.
மேல்நிலை கல்வியில் (பிளஸ்-2) உயிரியல் அல்லது தாவரவியல் பயின்ற மாணவர்கள் இதற்கு தகுதியுடையவர்கள் ஆவர். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் கடந்த 8-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த பாடப்பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் வரும் 19-ந் தேதி ஆகும்.
மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை 9363462099 என்ற கல்லூரி கல்வி இயக்க அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
மேலும் சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இதற்கான உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரியில் செயல்படும் சேர்க்கை உதவி மையத்திற்கு நேரடியாக வந்திருந்து தங்களது சுய விவரங்களை தெரிவித்து விண்ணப்பித்து கொள்ளலாம்.
எனவே ஈரோடு, கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்த மேல்நிலை கல்வி முடித்த மாணவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பித்து சேர்க்கை பெற்று பயனடையுமாறு கல்லூரி முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.