என் மலர்
நீங்கள் தேடியது "ரஷிய உக்ரைன் போர்"
- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முழுமையாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயார்.
- போர் நிறுத்தத்தை பயன்படுத்தி உக்ரைன் ஆயுதங்களை குவிக்க கூடாது.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. உக்ரைனின் பெரும்பாலான இடங்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் ராணுவ உதவி வழங்கியன. இதனால் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்த தொடங்கியது. ரஷியா பல இடங்களில் பின்வாங்கியது. இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் உக்ரைன் பகுதிகளை ரஷியா ஆக்கிரமித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் 3 வருடங்களை தாண்டி சண்டை நடைபெற்று வருகிறது. சண்டை நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் உக்ரைன்- ரஷியா இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
30 நாட்கள் கொண்ட போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியா இடையே அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏறக்குறைய இரு நாடுகளும் சம்மதிக்கும் நிலையில்தான் உள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் தொலைபேசியில் பேசியிருப்பதாவது:-
உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு புதின் நிபந்தனை வைத்துள்ளார்.
அதில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முழுமையாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயார்.
உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை நிறுத்த வேண்டும்.
போர் நிறுத்தத்தை பயன்படுத்தி உக்ரைன் ஆயுதங்களை குவிக்க கூடாது.
ஒவ்வொரு புதன்கிழமையும் 175 உக்ரைன் ராணுவ கைதிகளை விடுவிக்கப்படும்.
உக்ரைன் மீதான தாக்குதலை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த ரஷிய அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.
- 7.5 கோடி மக்கள் கடுமையான வறுமையில் வாழ்கிறார்கள்
- 9 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கிறார்கள்
கொரோனா தொற்றுநோய், வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் ரஷிய- உக்ரைன் போர் ஆகியவற்றால் உலகின் பல நாடுகளில் 2020 முதல் தற்போது வரை சுமார் 16 கோடி பேர் வறுமைக்கு தள்ளப்பட்டிருப்பதாக ஐ.நா. சபை நேற்று தெரிவித்தது.
சுமார் ரூ.160-க்கும் குறைவான ஒருநாள் வருமானத்தில் வாழ்பவர்களை கடுமையான வறுமையில் இருப்பவர்கள் என்றும் ஒரு நாளைக்கு சுமார் 250-க்கும் குறைவான ஒருநாள் வருமானத்தில் வாழ்பவர்களை வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் என்றும் வரையறுக்கப்பட்டிருக்கிறது.
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP) எனும் அமைப்பினால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 2020- 2023 ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் 7.5 கோடி மக்கள் கடுமையான வறுமையிலும், 9 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழேயும் வாழ்கிறார்கள்.
ஏழைகள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2023-ல் அவர்களின் வருமானம் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்குக் கீழே சென்றிருக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளில் மக்களை வறுமைக்கு செல்லாத வகையில் பாதுகாப்பு வலைகளை உருவாக்குவதில் முதலீடு செய்துள்ள நாடுகள், மக்கள் வறுமையில் விழுவதை கணிசமான எண்ணிக்கையில் தடுத்துள்ளன.
ஆனால் மிகவும் கடன்பட்டுள்ள நாடுகளில் அந்நாடுகளின் கடனுக்கும், முறையற்ற சமூக செலவினங்கள் மற்றும் வறுமையின் அதிகரிப்பிற்கும் தொடர்பிருக்கிறது என்று ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம் (UNDP) எனும் அமைப்பின் தலைவர் அச்சிம் ஸ்டெய்னர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
பொருளாதார ரீதியாக போராடும் நாடுகள், கடனை திருப்பிச் செலுத்துவதை ஒரு இடைநிறுத்தம் செய்து சமூக வளர்ச்சி செலவினங்களுக்கும், பொருளாதார அதிர்ச்சிகளின் விளைவுகளை எதிர்ப்பதற்கும் செலவிடும்படி அந்த அறிக்கை வலியுறுத்துகிறது. சிக்கலான பிரச்சனையென்றாலும் தீர்வு எட்டும் தூரத்தில்தான் உள்ளது என அந்த அறிக்கை கூறுகிறது.
இரு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட மற்றொரு ஐ.நா அறிக்கையின்படி, சுமார் 330 கோடி பேர் (3.3 பில்லியன்); அதாவது (கிட்டத்தட்ட மொத்த மக்கள் தொகையில் பாதி), கல்வி மற்றும் சுகாதாரத்தை விட கடனுக்கான வட்டிக்கு அதிகமாகச் செலவழிக்கும் நாடுகளில் வாழ்கின்றனர்.
வளரும் நாடுகள் குறைந்த அளவிலான கடனைக் கொண்டிருந்தாலும், அதிக வட்டியை செலுத்துகின்றன.
புதிதாக ஏழ்மைக்கு தள்ளப்பட்டிருக்கும் 165 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதற்கான வருடாந்திர செலவு 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என இந்த அறிக்கை கூறுகிறது.
இந்த வார தொடக்கத்தில், சர்வதேச நிதி நிறுவனங்களை சீர்திருத்தம் செய்ய அழுத்தம் கொடுத்து வரும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், "நமது காலாவதியான உலகளாவிய நிதி அமைப்பு, அது உருவாக்கப்படும்போது இருந்த காலனித்துவ ஆதிக்க கொள்கைகளையே இன்றும் பிரதிபலிக்கிறது" எனத் தெரிவித்திருந்தார்.
- கடந்த 2022 மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவனம் ரஷியாவிலிருந்து வெளியேறியது
- ஐ-போன் மூலமாக ரஷியர்களை அமெரிக்கா உளவு பார்ப்பதாக ரஷியா கூறியது
உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை ஐபோன் மற்றும் ஐபேடு.
ரஷியாவிலும் ஐ-போன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ரஷியர்களில் பலரும் ஐ-போன் மற்றும் ஐ-பேடு சாதனங்களை மிகவும் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது.
உக்ரைன் ஆக்ரமிப்பை அடுத்து கடந்த 2022 மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவனம் ரஷியாவிலிருந்து வெளியேறியதுடன் விற்பனையையும் நிறுத்தியது. எனினும், வேறு நாடுகளிலிருந்து ரஷியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட ஐ-போன் 14 உள்பட பல மாடல்களை ரஷியர்கள் வாங்கி பயனபடுத்தி வந்தனர்.
அமெரிக்காவின் ஒரு உளவு நடவடிக்கையின் விளைவாக ரஷியாவினரால் பயன்படுத்தப்படும் பல ஆயிரக்கணக்கான ஆப்பிள் நிறுவன சாதனங்கள் பாதுகாப்பை இழந்து விட்டதாக ரஷியாவின் முக்கிய உள்நாட்டு பாதுகாப்பு சேவை அமைப்பான எஃப்.எஸ்.பி. (FSB) 2 மாதங்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்தது.
ஆப்பிள் நிறுவனமும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையும் இணைந்து இதனை செய்ததாக எஃப்.எஸ்.பி. தெரிவித்தது.
இதனையடுத்து ரஷிய டிஜிட்டல் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் ஒரு சுற்றறிக்கை அந்நாட்டு அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
"ஐபோன் மற்றும் ஐபேடு மூலமாக அமெரிக்கா, ரஷிய மக்களின் தகவல் தொடர்புகளை அறிந்து கொள்ளும் ஆபத்து இருக்கிறது. இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே ஐ-போன்கள் மற்றும் ஐ-பேடுகளை வேலை நோக்கங்களுக்காக ரஷிய அரசாங்க ஊழியர்கள் இனி பயன்படுத்தப்பட கூடாது. பணி பயன்பாடுகளுக்கான செயலிகளை உபயோகப்படுத்தவும், வேலை சம்பந்தமான மின்னஞ்சல் பரிமாற்றத்தை செய்யவும், ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளை பயன்படுத்த கூடாது. தனிப்பட்ட தேவைகளுக்காக ஐ-போன்களைப் பயன்படுத்தலாம்" என ரஷிய அரசாங்கத்தின் டிஜிட்டல் மேம்பாட்டுக்கான அமைச்சர் மக்சுட் ஷடேவ் (Maksut Shadaev) அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஆப்பிள் நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. ஆப்பிளுடன் இணைந்து இந்த உளவு வேலையில் ஈடுபட்டதாக FSB குற்றம் சாட்டிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமை இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.
- 18 மாதங்களாக நடைபெறும் போர் 540வது நாளை நெருங்கி இருக்கிறது
- இந்த நகரின் வழியாகத்தான் உக்ரைனை விட்டு வெளியேறும் அகதிகள் போலந்து செல்கின்றனர்
கடந்த பிப்ரவரி 2022ல் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது.
இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளுதவியுடனும், ராணுவ தளவாட உதவியுடனும் உக்ரைன் தீவிரமாக ரஷியாவுடன் போர் செய்து வருகிறது. 18 மாதங்களாக நடைபெறும் இந்த போர் 540வது நாளை நெருங்கி வரும் நிலையில், இரு தரப்பிலும் பொருட்சேதங்களும், உயிர்சேதங்களும் பலமாக இருக்கின்றன.
இந்நிலையில் உக்ரைனின் வடமேற்கு பகுதியில் உள்ள வோலின் (Volyn) மற்றும் மேற்கு பகுதியில் உள்ள ல்விவ் (Lviv) என 2 நகரங்கள் மீது ரஷியா வான்வழி தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த இரு நகரங்களும் நேட்டோ உறுப்பினரான போலந்து நாட்டிற்கும் உக்ரைனுக்குமான எல்லையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வடமேற்கிலுள்ள வோலின் பகுதியில் நடைபெற்ற தாக்குதல்களில் மூன்று பேர் உயிரிழந்திருக்கின்றனர். வோலின் பகுதியிலுள்ள லுட்ஸ்க் (Lutsk) பகுதியில் ஒரு தொழில் நிறுவன கட்டிடம் சேதமடைந்தது. பலர் தாக்குதலால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ல்விவ் பகுதியில் நடைபெற்ற தாக்குதல்களிலேயே பெரியதாக கருதப்படும் தற்போதைய தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர். இங்கு ரஷியாவால் ஏவப்பட்ட 6 ஏவுகணைகள் பல கட்டிடங்களை அழித்தன. இந்நகரத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தகர்க்கப்பட்டன. ஒரு மழலையர் விளையாட்டு மைதானம் சேதமானது.
ல்விவ் மீது ஜூலை 2023 வரை ரஷியா தாக்குதல்கள் எதுவும் நடத்தவில்லை. இந்நகரத்திலிருந்துதான் ரஷிய-உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்டு உக்ரைனை விட்டு வெளியேறும் அகதிகள் போலந்து நாட்டிற்கு செல்கின்றனர்.
இந்த இரு நகரங்கள் மட்டுமின்றி வேறு சில பகுதிகளிலும் வான்வழி தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளது. ரஷியா செலுத்திய 28 ஏவுகணைகளில் 16 ஏவுகணைகளை உக்ரைன் வானில் இடைமறித்து வீழ்த்தியுள்ளது.
- செர்னிஹிவ் நகரத்தில் நூற்றாண்டு கால பழமையான தேவாலயங்கள் உள்ளன
- இந்த தாக்குதலில் 6-வயது குழந்தை ஒன்றும் பலியாகி இருக்கிறது
கடந்த 2022 பிப்ரவரி மாதம் 22 அன்று, சிறப்பு ராணுவ நடவடிக்கை எனும் பெயரில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை கடுமையாக எதிர்த்து, ஆக்ரமிப்புக்கு பணிய மறுத்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளதவியுடனும், ராணுவ உதவியுடனும் உக்ரைன், ரஷியாவிற்கு எதிராக போரிட்டு வருகிறது.
இப்போரில் இரு நாடுகளிலும் கடும் உயிர்ச்சேதங்களும், கட்டிட சேதங்களும் ஏற்பட்டு வருகிறது. போர் 18 மாதங்களுக்கு மேலாக 540 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் கடல் டிரோன்கள் மூலம் பரஸ்பரம் தாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் ரஷியா மீண்டும் உக்ரைன் மீது ஒரு ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனின் தலைநகர் கீவிற்கு வடக்கில் 145 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செர்னிஹிவ் நகரம். இந்நகரம் இரு பக்கமும் அழகான மரங்கள் நிறைந்த சாலைகளுக்கும், நூற்றாண்டு கால பழமையான தேவாலயங்கள் புகழ் பெற்றது.
இந்நகரின் மத்தியில் உள்ள ஒரு சதுக்கத்தின் அருகே ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில், மத விடுமுறையை கொண்டாட அப்பகுதியில் உள்ள ஒரு சர்ச்சிற்கு சென்று கொண்டிருந்த மக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலியானவர்களில் 6-வயது குழந்தை ஒன்றும் அடங்கும். 90 பேர் காயமடைந்துள்ளனர். அவற்றில் 12 பேர் குழந்தைகள் மற்றும் 10 பேர் காவல் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
"ரஷியாவின் தாக்குதலில் அந்நகரில் அந்த சதுக்கம், ஒரு பாலிடெக்னிக் பல்கலைக்கழகம் மற்றும் கலையரங்கம் ஆகியவை சேதமடைந்துள்ளன" என சுவீடன் நாட்டிற்கு சென்றிருக்கும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி சமூக வலைதளத்தில் தெரிவித்தார்.
இப்போரினால் உலகளாவிய பொருளாதாரமும், உணவு தானிய வினியோகமும் பெருமளவில் வீழ்ச்சியடைந்து விட்டது. இதனால் போர் விரைவில் முடிவிற்கு வந்து அமைதி திரும்ப வேண்டும் என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- உள்ளூர்வாசிகள் இந்தியா ரஷியாவிற்கு துணை நிற்பதாக கருதுகின்றனர்
- கடைக்காரர்கள் இந்தியர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய மறுக்கின்றனர்
உக்ரைனிலுள்ள பல்கலைகழகங்களில் மருத்துவம், உயர் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு பட்டங்களுக்காக இந்திய மாணவர்களும், மாணவியர்களும் அங்கு சென்று, அங்கேயே தங்கி, படித்து, பட்டம் பெறுவது வழக்கம்.
கடந்த 2022ல் ரஷியாவிற்கும் உக்ரைனிற்கும் போர் தொடங்கி தற்போது வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
போர் தொடங்கிய சில நாட்களிலேயே, உக்ரைனில் வசித்து வந்த இந்தியர்களின் உயிரிழப்புகளை தடுக்க இந்திய அரசாங்கம் விரைவாக நடவடிக்கைகளை மேற்கொண்டது. அங்கிருந்து சுமார் 18,000 மாணவர்களும் மாணவியர்களும் இந்தியாவிற்கு அவசரமாக மீட்டு வரப்பட்டனர்.
அவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்தி இங்கு வரவேண்டி இருந்ததால், மருத்துவ கல்வியில் அவர்களுக்கு தடைபட்ட கல்வியை இந்தியாவில் உள்ள பல்கலைகழகங்களில் தொடர்ந்து படிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அவர்கள் நம்பினார்கள்.
ஆனால் மருத்துவ படிப்பில் தேசிய மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதல்களின்படி 2021 டிசம்பருக்கு பிறகு வெளிநாட்டில் பயிலும் மாணவர்கள், வேறு பல்கலைக்கழகத்திற்கு மாறி படிப்பை தொடர முடியாது.
இதனால், சுமார் 3400 மருத்துவ மாணவர்களும் மாணவியர்களும் தடைபெற்ற கல்வியை தொடர இந்த வருடம் ஜனவரி மாதம் உக்ரைனுக்கே மீண்டும் சென்று அங்கு படித்து வருகின்றனர்.
அங்கு நடைபெறும் போரினால் மின்சாரம், குடிநீர், உணவு மற்றும் போக்குவரத்து ஆகியவை சீரற்று இருக்கிறது. ஏவுகணைகளாலும் டிரோன் தாக்குதளாலும் உயிரிழக்கும் அபாயங்களையும் அவர்கள் எதிர்கொண்டு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் வேறொரு சிக்கலை அவர்கள் அனுபவிக்க தொடங்கியிருக்கிறார்கள்.
போரில், இந்தியா ரஷியாவிற்கோ, உக்ரைனுக்கோ ஆதரவு அளிக்காமல் நடுநிலை வகிக்கிறது. ஆனால், உக்ரைனில் வசிக்கும் அந்நாட்டு மக்கள் இந்தியா ரஷியாவிற்கு துணை நிற்பதாக கருதுகின்றனர்.
இது குறித்து அந்த மாணவர்கள் தெரிவித்ததாவது:
கடந்த இரு மாதங்களாகவே பல கடைக்காரர்கள் இந்தியர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய மறுக்கின்றனர். தங்கும் விடுதிகளில் ஊழியர்கள் கடுமையாக நடந்து கொள்கின்றனர். உள்ளூர்வாசிகள் கோபத்துடன் எங்களை திரும்பி போக சொல்கின்றனர். விலைவாசி கிட்டத்தட்ட இரு மடங்காகிவிட்டது. நாங்கள் இந்திய அரசாங்கத்திற்கு கடிதங்கள் எழுதுகிறோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் வருத்தத்துடன் கூறினார்கள்.
- பல நாடுகள் ரஷியாவின் மீது பொருளாதார தடைகளை விதித்திருக்கின்றன
- உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கையின் மீதே புதின் கவனம் செலுத்துகிறார் என ரஷியா கூறியுள்ளது
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை, சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் போரை அறிவித்து, அந்நாட்டை ஆக்ரமிக்கும் முயற்சியை துவங்கியது.
இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் உக்ரைன், ரஷியாவை எதிர்த்து தீவிரமாக போரிட்டு வருகிறது. 18 மாதங்களுக்கும் மேலாக இரு நாடுகளுக்கிடையே நடந்து வரும் போர் காரணமாக, இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதங்களும், கட்டிட சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
ரஷியாவின் ஆக்ரமிப்பை கண்டிக்கும் விதமாக அமெரிக்கா உட்பட பல நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்திருக்கிறது. இந்நிலையில் உலகின் 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவையின் கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு, இந்தியாவில் புது டெல்லியில் நடக்க இருக்கிறது.
அங்குள்ள பிரகதி மைதானில் உள்ள சர்வதேச கண்காட்சி-மாநாட்டு மையத்தின் பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நடக்க இருப்பதால், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உட்பட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர். ரஷியாவும் ஜி20 அமைப்பில் உறுப்பினர் என்பதால் புதின் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், "ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஜி20 உச்சி மாநாட்டிற்கு இந்தியாவிற்கு நேரில் வர போவதில்லை. உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கையின் மீதே அவரது முழு கவனமும் உள்ளது," என அந்நாட்டு அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அறிவித்தார்.
தனது நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்திருக்கும் நாடுகளின் தலைவர்களை நேரில் சந்திப்பதை தவிர்க்கவே அவர் இதில் கலந்து கொள்ள வேண்டாம் என முடிவெடுத்திருக்கலாம் என பன்னாட்டு அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
ரஷியாவின் தனியார் ராணுவ மற்றும் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் விமான விபத்தில் உயிரிழந்ததை அடுத்து தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சியும் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என ஒரு சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தென் ஆப்பிரிக்காவில் சமீபத்தில் முடிவடைந்த பிரிக்ஸ் மாநாட்டிலும் புதின் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- புதினுக்கு எதிராக எவ்ஜெனி ஒரு கிளர்ச்சியை தொடங்கினார்
- மூன்று தினங்களுக்கு முன்பு ஒரு விமான விபத்தில் எவ்ஜெனி உயிரிழந்தார்
உலகின் வல்லரசுகளின் ஒன்றான ரஷியாவின் அதிபர் விளாடிமிர் புதின் (70).
தனக்கு எதிரான போட்டியே இல்லாமல் பார்த்து கொள்வதில் வல்லவராகவும், எதிர்ப்போரை இரும்பு கரம் கொண்டு அடக்கும் சர்வாதிகாரியாகவும் இருப்பதால், ஆட்சிக்கு வந்து சுமார் 23 ஆண்டுகள் ஆகியும் தொடர்ந்து அவரே அதிபராக இருந்து வருகிறார்.
கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை சிறப்பு ராணுவ நடவடிக்கை எனும் பெயரில் ஆக்ரமித்தது. இதனை உக்ரைன் கடுமையாக எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் துணையுடன் போரிட்டு வருகிறது. ரஷிய-உக்ரைன் போர் 540 நாட்களை கடந்து இன்று வரை தொடர்து வருகிறது.
இந்த போரில் ரஷிய ராணுவத்திற்கு, அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு எனும் கூலிப்படையும் உதவி வந்தது.
கடந்த ஜூன் மாதம், எதிர்பாராத விதமாக வாக்னர் அமைப்பின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின், ரஷிய ராணுவத்திற்கு எதிராகவும், ரஷிய அதிபர் புதினுக்கு எதிராகவும் ஒரு கிளர்ச்சியை தொடங்கினார். இந்த கிளர்ச்சி பெரிதாகி விடாமல் திறமையாக புதின் தடுத்ததால், பிரிகோசின் பெலாரஸ் நாட்டில் தஞ்சம் புகுந்தார்.
இதற்கிடையே 3 நாட்களுக்கு முன்பு ரஷிய தலைநகர் மாஸ்கோவிற்கு வடமேற்கே உள்ள பகுதியில் ஒரு தனியார் ஜெட் விமானத்தில் எவ்ஜெனி பயணிக்கும் போது, அது விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்ததாக ரஷியா தெரிவித்தது.
இந்நிலையில் தற்போது உள்ள வாக்னர் குழு வீரர்களுக்கு புதின் ஒரு புது உத்தரவு போட்டிருக்கிறார். ரஷிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வலைதளமான கிரெம்ளின் தனது வலைதளத்தில் இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
இந்த அறிக்கையில், "ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு துணை நிற்கும் அனைவரும் ரஷியாவிற்கு மாறாத விசுவாசமுடன் உழைப்பதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். ரஷியாவின் தார்மீக மற்றும் நீதி சார்ந்த பாரம்பரியத்தை மேலும் வலுவாக்கும் வகையில் விசுவாசத்தை வெளிப்படுத்த வேண்டும். மூத்த அதிகாரிகளிடமிருந்து வரும் உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்," என்று தெரிவித்து இருக்கிறது.
இதன் மூலம் ரஷியாவில் உள்ள வாக்னர் மற்றும் பிற தனியார் ராணுவ அமைப்பினரை தன் கட்டுப்பாட்டிலேயே வைத்து கொள்ள புதின் முயல்கிறார் எனும் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- 2023 ஆகஸ்டில் எவ்ஜெனி பிரிகோசின் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார்
- 2022 பிப்ரவரி மாதமே அமெரிக்கா பயண கட்டுப்பாடுகளை வெளியிட்டு இருந்தது
கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை சிறப்பு ராணுவ நடவடிக்கை எனும் பெயரில் ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் ரஷியாவுடன் கடுமையாக போரிட்டு வருகிறது.
ரஷியாவிற்கு போரில் உதவி வந்த தனியார் ராணுவ அமைப்பும், கூலிப்படையுமான வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின், இந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷியாவிற்கு எதிராகவும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராகவும் கிளர்ச்சியில் இறங்கினார்.
சாமர்த்தியமாக இதனை புதின் எதிர்கொண்டு இந்த கிளர்ச்சியை அடக்கினார். இதனையடுத்து பிரிகோசின், தனது உயிருக்கு ஆபத்து வரலாம் என அஞ்சி, ரஷியாவின் அண்டை நாடான பெலாரசில் தஞ்சம் புகுந்தார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 23-ம் தேதி, வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் ஒரு விமான விபத்தில் உயிரிழந்ததாக ரஷியா அறிவித்தது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவியது.
அமெரிக்க அரசாங்கம், தனது குடிமக்கள் யாரேனும் பெலாரஸ் நாட்டில் இருந்தால் அவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டிருந்ததை குறிப்பிட்டு பேஸ்புக் மற்றும் எக்ஸ் (டுவிட்டர்) வலைதளங்களில், "பெலாரஸ் நாட்டை விட்டு தனது குடிமக்கள் வெளியேற வேண்டுமென அமெரிக்கா முதல்முறையாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அது வந்த இரு நாட்களில் பிரிகோசின் பலியானார். ஒரு வேளை பிரிகோசினிற்கு ஏற்படப்போகும் நிலை குறித்து அமெரிக்கா முன்னரே அறிந்திருக்கலாம்" என குறுஞ்செய்தியுடன் அந்த தகவல் பரவியது.
எவ்ஜெனி பிரிகோசின் மரணத்தில் ரஷியாவிற்கு பங்கு இருக்கலாம் என பலர் நம்பி வந்த நிலையில், இச்செய்தியின் மூலம், அமெரிக்காவிற்கு பிரிகோசின் மரணம் குறித்து முன்னரே தகவல் தெரிந்திருக்கும் என கருத்துக்களை பறிமாறி கொண்டனர்.
ஆய்வில் இந்த தகவல்கள் அனைத்தும் தவறு என நிரூபணமாகியுள்ளது.
2022 பிப்ரவரி மாதமே பெலாரஸ் நாட்டின் தலைநகர் மின்ஸ்க்கில் உள்ள அமெரிக்க தூதரகம் உலகெங்கிலும் உள்ள தனது குடிமக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அதில், "ரஷியா, பெலாரஸ் நாட்டின் எல்லைகளில் படைகளை குவித்து வருவதாலும், வெளிநாட்டினர் அங்கிருந்து வெளியேறுவது தடுக்கப்படும் ஆபத்து உள்ளதாலும், அமெரிக்கர்கள் பெலாரஸ் நாட்டிற்குள் வர வேண்டாம். பெலாரஸிலுள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்," என்று அமெரிக்கா உத்தரவிட்டிருந்தது.
இந்த பயண கட்டுப்பாடு குறித்த உத்தரவு மீண்டும் இந்த ஆண்டு ஏப்ரல் 12 மற்றும் ஜூலை 26 ஆகிய தேதிகளில் அமெரிக்காவால் புதுப்பிக்கப்பட்டது.
பிரிகோசின் இறப்பதற்கு 2 தினங்களுக்கு முன், பெலாரஸ்ஸின் அண்டை நாடான லிதுவேனியா, லிதுவேனியா-பெலாரஸ் எல்லைகளில் உள்ள பெலாரஸ் நோக்கி செல்லும் 2 முக்கிய வழிகளை மூடியது. இதனால் அமெரிக்காவின் பயண கட்டுப்பாடு மீண்டும் ஆகஸ்ட் 21 அன்று புதுப்பிக்கப்பட்டது.
ஆக, எவ்ஜெனி பிரிகோசின் இறப்பை முன்கூட்டியே அறிந்துதான் அமெரிக்கா பயண தடை விதித்தது எனும் செய்திகளில் உண்மை இல்லை.
- ட்வெர் பகுதிக்கு அருகே குசென்கினோ கிராமத்தில் விமானம் விபத்திற்குள்ளானது
- கிளர்ச்சியின் போது வாக்னர் குழு 7 ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தியது
கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்ததை அடுத்து, ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் அப்போது தொடங்கி தற்போது வரை நடக்கும் போரில் ரஷியாவிற்கு உதவியாக அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பும், கூலிப்படையுமான வாக்னர் குழு எனும் ஒரு அமைப்பும் பங்கேற்றது.
இதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின். ரஷியாவிற்கு உதவி வந்த பிரிகோசின் திடீரென இந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷியாவிற்கு எதிராகவும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராகவும் கிளர்ச்சியில் இறங்கினார். ஆனால், புதின் இக்கிளர்ச்சியை சாமர்த்தியமாக எதிர்கொண்டு பெரிதாகாமல் அடக்கினார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 23-ம் தேதி, வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் ரஷியாவின் மாஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி எம்ப்ரேயர் லெகசி 600 ஜெட் விமானத்தில், ட்வெர் பகுதிக்கு அருகே பயணம் செய்த போது, குசென்கினோ கிராமத்தில் அந்த விமானம் விபத்திற்குள்ளாகியது. அதில் பயணம் செய்த 10 பேருடன் அவரும் உயிரிழந்ததாக ரஷியா அறிவித்தது.
இதனையடுத்து சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வெளியானது. அதில் ஒரு விமானம் விபத்திற்குள்ளாகி தீப்பிடித்து கீழே விழும் காட்சியுடன் அது எவ்ஜெனி பயணம் செய்த விமானம் என குறுஞ்செய்தியும் வெளியிடப்பட்டு இருந்தது. இதனை உண்மையென நம்பி பலரும் இணையத்தில் இதனை பரவலாக்கினர்.
ஆனால், ஆய்வில் இந்த செய்தி உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.
இந்த வீடியோவில் காணப்படும் விமானம், ரஷிய விமான படையை சேர்ந்த ஏ.என்.-26 (AN-26) ரக விமானம் என்றும் அதை வாக்னர் குழு ஜூன் 24 அன்று சுட்டு வீழ்த்தும் காட்சிதான் வீடியோவில் உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. தனது கிளர்ச்சியின் போது வாக்னர் குழு 7 ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தியது. அதில் ஒன்று விழும் காட்சிதான் வீடியோவில் பரவலாக்கப்பட்டது.
ஜூன் மாதம் வீழ்த்தப்பட்ட இந்த விமானத்தின் காட்சிக்கும் ஆகஸ்ட் மாதம் பிரிகோசினை பலி வாங்கிய விபத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
- கடந்த வருடம் எலான் மஸ்க் டுவிட்டரை விலைக்கு வாங்கினார்
- அரசின் திட்டங்களில் மஸ்கின் நிழல் ஆதிக்கம் இருக்கிறது
அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரும் உலகின் நம்பர் 1 கோடீசுவரருமான எலான் மஸ்க், தனது பிரமாண்ட திட்டங்களுக்கும், அதிரடி முடிவுகளுக்கும் பெயர் பெற்றவர்.
மின்சார கார் தயாரிக்கும் டெஸ்லா, தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் விண்வெளியிலிருந்து இயங்கும் இணைய சேவைக்கான தனியார் விண்கலன்களான ஸ்டார்லிங்க் சேவை உட்பட பல்வேறு முக்கிய நிறுவனங்களை தொடங்கி நிர்வகித்து வரும் மஸ்க், கடந்த வருடம் உலகின் முன்னணி சமூக உரையாடல்களுக்கான வலைதளமான டுவிட்டரையும் சுமார் ரூ.37 ஆயிரம் கோடிக்கு ($44 பில்லியன்) வாங்கினார்.
"அரசின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் மஸ்க்கின் தாக்கம் இருக்கிறது. விண்வெளி ஆதிக்கம், உக்ரைன் போர், சமூக வலைதளம் கட்டுப்பாடுகள், மின்சார வாகனங்கள் குறித்த சட்டங்கள் உட்பட பல விஷயங்களில் அரசு வகுக்கும் திட்டங்களிலும், எடுக்கும் முடிவுகளிலும் மஸ்க் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துகிறார். உக்ரைன் போரில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் விண்கலன்கள் முக்கிய பங்காற்றியது. மஸ்க், டுவிட்டரை விலைக்கு வாங்கிய பிறகு தனக்கு உலக அரங்கில் மிகவும் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடனே அறிவித்தார்" என விவரித்து "எலான் மஸ்கின் நிழல் ஆதிக்கம்" என பெயரிட்ட ஒரு நீண்ட கட்டுரையில் அமெரிக்காவின் பிரபலமான "தி நியூயார்க்கர்" எனும் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், "எனது மகன் உயிருக்கு ஆபத்து வரலாம் என அச்சப்படுகிறேன்" என இக்கட்டுரையின் நோக்கத்தை விமர்சித்த எலான் மஸ்கின் தந்தை எர்ரால் மஸ்க் (77) இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
பாதுகாவலர்கள் புடைசூழ எலான் மஸ்க் அலுவலகத்தில் வலம் வருவதாக சில மாதங்களுக்கு முன் எக்ஸ் (முன்பு டுவிட்டர்) நிறுவன பணியாளர்கள் சிலர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- போரில் ரஷியாவை சீனா ஆதரிக்கிறது, ஆனால் அமெரிக்கா எதிர்க்கிறது
- போர் குறித்து ஜி20 நாடுகளுக்கிடையே தெளிவான கருத்தொற்றுமை ஏற்படவில்லை
அமெரிக்கா, ரஷியா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட 19 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்த ஜி20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புது டெல்லியில் இன்று காலை தொடங்கியது. ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் போரின் தாக்கம் ஜி20 கூட்டறிக்கை வெளியிடுவதில் பெரிதாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாநாட்டின் கடைசி நாளான நாளை, மாநாட்டின் முடிவில் அனைத்து உறுப்பினர் நாட்டு தலைவர்களின் ஒன்றிணைந்த கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்படுவது வழக்கம். உக்ரைன் போர் விவகாரத்தில் ஜி20 உறுப்பு நாடுகளில், ரஷியாவை சீனா ஆதரிக்கிறது. ஆனால் அமெரிக்கா, உக்ரைனை ஆதரித்து ரஷியாவிற்கு எதிரான நிலைபாட்டை எடுத்திருக்கிறது.
இதனால் நாளை படிக்கப்பட வேண்டிய தலைவர்களின் மாநாட்டு பிரகடன கூட்டறிக்கையில் உக்ரைன் குறித்த நிலைப்பாட்டை அறிவிக்கப்பட வேண்டியவை தெளிவில்லாமல் இருக்கிறது. ரஷிய உக்ரைன் போரை குறிப்பிடாமல் வெளியிடப்படும் எந்த பிரகடனத்திற்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் ஜி7 அமைப்பை சேர்ந்த நாடுகள் ஒப்புதல் அளிக்காது என தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த கட்டாயத்தினால், தலைவர்களுக்கான இந்த இறுதி கூட்டறிக்கையில் புதியதாக சில வாக்கியங்களை இந்தியா சேர்த்து அந்நாட்டு அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜி20 உச்சி மாநாட்டிற்கு முன்பு நடந்த எந்த முக்கிய சந்திப்புகளிலும், நிதி மற்றும் வெளியுறவுத்துறை உட்பட எந்த துறையிலும், உக்ரைன் போரினை குறிப்பிடும் எந்த சொற்றொடரையும் உள்ளடக்கிய ஆவணங்களுக்கும் சீனா மற்றும் ரஷியா ஒப்புதல் அளிக்க மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.