என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jamabandhi"

    • நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் நேற்று முதல் வருவாய் தீர்வாயம் என்று அழைக்கப்படும் ஜமாபந்தி தொடங்கியது.
    • இதில் பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதன் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரி களிடம் நடவடி க்கை எடுக்க அறிவுறுத்தினர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் நேற்று முதல் வருவாய் தீர்வாயம் என்று அழைக்கப்படும் ஜமாபந்தி தொடங்கியது.

    கோரிக்கை மனு

    இதில் பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதன் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரி களிடம் நடவடி க்கை எடுக்க அறிவுறுத்தினர்.

    நேற்று முதல் நாள் பாளை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனு க்களை பெற்றுக் கொண்ட நிலை யில் இன்று 2-வது நாளாக அங்கு நடந்த கூட்ட த்தில் கலெக்டர் பங்கேற்றார்.

    2-ம் நாள்

    2-ம் நாளான இன்று பாளை வட்டம் மேலப்பா ட்டம் குறு வட்டத்திற்குட்பட்ட அரியகுளம், திருத்து, கீழப்பாட்டம், கான்சாபுரம், மருதூர், கீழநத்தம், நடுவக்கு றிச்சி, சீவலப்பேரி, அவினா ப்பேரி உள்ளிட்ட கிராமங்க ளில் ஜமாபந்தி நடைபெற்றது.

    இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரி க்கை தொடர்பான மனுக்களை அளித்தனர். பாளை தாலுகா அலுவல கத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் தாசில்தார் சரவணன், உதவி இயக்கு னர்கள் வாசு தேவன், கிருஷ்ண குமார், வருவாய் ஆய்வாளர் ராஜசெல்வி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அடிப்படை வசதிகள் குறித்த 103 கோரிக்கை மனுக்களை கலெக்டர் சாருஸ்ரீயிடம் அளித்தனர்.
    • 18 கிராமங்களுக்கா வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில் பாலையூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட 18 கிராமங்களுக்கான 1432-ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு முதல் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நேற்று நடைபெற்றது.

    இதில் பாலையூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட பாலையூர், மானங்காத்தான் கோட்டகம், வெங்க த்தான்குடி, குறிச்சிமூலை-2, நாராயணபுரம் களப்பால், குறிச்சிமூலை-1, நருவளிகளப்பாள், தெற்கு நாணலூர், பெருவிடைமருதூர், குலமாணிக்கம், பெருகவாழ்ந்தான்-1, மண்ணுக்குமுண்டான், தேவதானம், பெருகவாழ்ந்தான்-2, செருகளத்தூர், சித்தமல்லி, நொச்சியூர், புத்தகரம் ஆகிய 18 கிராமங்களுக்கான தீர்வாயத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், பட்டா உட்பரிவு மாற்றம், அடிப்படை வசதிகள் குறித்த 103 கோரிக்கை மனுக்களை கலெக்டர் சாருஸ்ரீயிடம் அளித்தனர்.

    இதில் 2 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, 2 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டார்.

    இதில் முத்துப்பேட்டை தாசில்தார் மகேஷ்குமார், தனி தாசில்தார்கள் மலர்கொடி, சிவக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் வசுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் யசோதா உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகத்தில் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமையில் ஜமாபந்தி நடந்தது.
    • இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 86 மனுக்களை வழங்கினர்.

    பரமத்தி வேலூர்:

    பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகத்தில் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமையில் ஜமாபந்தி நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 86 மனுக்களை வழங்கினர். பொதுமக்கள் கொடுத்த 12 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுத்து ஜூன் 2-ந் தேதி ஜமாபந்தி முடிவதற்குள் தீர்வு வழங்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் வி.ஏ.ஓ.,க்களிடம் உள்ள கிராம புலப்பட தகவல் பதிவேடு கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் பயிரிடப்பட்ட பயிர்களில் விவரங்கள் அடங்கிய பதிவேடு, பட்டா மாறுதல் பதிவேடு, தடையணை பதிவேடு, பிறப்பு ,இறப்பு பதிவேடு, நிலவரி வசூல் பதிவேடு, கிராம அ பதிவேடு உள்ளிட்ட பல்வேறு வகையான பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

    இதில் தாசில்தார் கலைச்செல்வி வி.ஏ.ஓ.,க்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

    • அளவீடு, பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பித்தால், பல மாதங்கள் அலைகழிக்கின்றனர்.
    • முதியோர், விதவை உதவி தொகை பலருக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    உடுமலை :

    உடுமலையில் நடந்த ஜமாபந்தியில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழங்கிய மனுவில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில், கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்களில் பாதி பஸ்கள் இயக்கப்படுவதில்லை.சர்வே துறையில் அளவீடு, பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பித்தால், பல மாதங்கள் அலைகழிக்கின்றனர்.

    முதியோர், விதவை உதவி தொகை பலருக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உடுமலை தங்கம்மாள் ஓடை பகுதியில் கான்கிரீட் கரை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பருவ மழைக்கு முன் முடிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பா.ஜ.க., சார்பில் வழங்கிய மனுவில், கபூர்கான் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.இந்திய கம்யூனிஸ்டு சார்பில், கணக்கம்பாளையம், கணேசபுரம் பகுதியில் 20 ஆண்டுக்கும் மேலாக வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

    மேலும் சின்ன வீரம்பட்டி பகுதி நேர ரேஷன் கடையை முழு நேர கடையாக மாற்றவும், இந்திராநகரில் ஓட்டுச்சாவடி அமைக்க வேண்டும்.உடுமலை, சின்னவீரம்பட்டி, பெரியகோட்டை, அய்யம்பாளையம், மடத்துக்குளம் தாலுகா, தாந்தோணி, மைவாடி, ராஜாவூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த ஒரு ஆண்டாக மர்ம விலங்குகள் கடித்து நூற்றுக்கணக்கான ஆடு, மாடுகள் இறந்துள்ளன. பெருமளவு விவசாயிகள் பாதித்துள்ள நிலையில் இதற்கு தீர்வு காணவும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. 

    • அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் நடந்தது
    • மனு அளிக்க குவிந்த மக்கள்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் வருடாந்திர ஜமாபந்தி நடைப்பெற்று வருகிறது.

    வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமையிலும், அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீரா பென் காந்தி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற கூட்டத்தில் அணைக்கட்டு பிடிஓக்கள் சுதாகரன், சாந்தி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் முதலாவதாக அணைக்கட்டு, ஊசூர், பள்ளிகொண்டா, அகரம், ஒடுகத்தூர் ஆகிய 5 உட்கோட்டத்திற்க்கு தனிதனியாக நடைப்பெற்று வருகின்றது.

    3-வது நாளான நேற்று பள்ளிகொண்டா உட்கோட்டத்திற்க்கு உட்பட்ட மக்கள் தங்களின் குறைகளை மனு அளித்தனர்.

    இதில் நேற்று மட்டும் 115 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை அளிக்கும் பெரும்பாலான மக்கள் இலவச வீட்டுமனை பட்டா வேண்டி மனுக்களை அளித்து வருகின்றனர்.

    ஜமாபந்தி கூட்டத்தில் அளிக்கப்படும் மணுக்களின் மீது நிச்சயம் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையில் மக்கள் அணைக்கட்டு தாலுகா அலுவலகங்களில் குவிந்த வணணம் உள்ளனர்.

    • நேற்று கூடலூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட இனாம்கோவில்பட்டி, தென்மலை பாகம்-1, பாகம்-2, ஆகிய கிராமங்களில் மனுக்கள் பெறப்பட்டன.
    • குடிமைப்பொருள் வழங்கல்துறை மூலமாக ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்டு) 10 நபர்களுக்கும், மொத்தம் 35 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 83 ஆயிரம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி தாலுகாவில் சிவகிரி, வாசுதேவநல்லூர், கூடலூர் ஆகிய 3 வருவாய் குறுவட்ட பகுதிகள் உள்ளன. சிவகிரி தாலுகா அலுவலகத்தில் கடந்த 24-ந் தேதி தென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சங்கர நாராயணன் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது.

    முதல் நாளன்று வாசுதேவநல்லூர் வருவாய் குறுவட்டத்திற்கு உட்பட்ட கிராமங்கள் சுப்பிரமணியபுரம், சங்கனாபேரி, வாசு தேவநல்லூர், நாரணபுரம் பாகம்-1, பாகம்-2, திருமலாபுரம் ஆகிய கிராமங்களுக்கு சிவகிரி தாலுகா அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டன. 25-ந் தேதி(வியாழக்கிழமை) சிவகிரி வருவாய் குறுவட்டத்திற்கு உட்பட்ட விஸ்வநாதபேரி பாகம்-1, பாகம்-2, சிவகிரி பாகம்-1, பாகம்-2, ராயகிரி பாகம்-1, பாகம்-2, ராமநாத புரம் ஆகிய கிராமங்களில் மனுக்கள் பெறப்பட்டன. நேற்று கூடலூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட இனாம்கோவில்பட்டி, தென்மலை பாகம்-1, பாகம்-2, கூடலூர், நெல்கட்டும்செவல், பட்டக்குறிச்சி, அரியூர் ஆகிய கிராமங்களில் மனுக்கள் பெறப்பட்டன. பொது மக்களிடம் இருந்து ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், குடிநீர் இணைப்பு, கழிப்பிட வசதி போன்ற கோரிக்கைகள் அடங்கிய 253 மனுக்கள் பெறப்பட்டன.

    இதில் இயற்கை மரண உதவித்தொகை 9 பேருக்கும், விபத்து மரண உதவித் தொகையாக ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் மற்றும் முதியோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கிட ஆணையும் பிறப்பிக்கப்பட்டன. குடிமைப்பொருள் வழங்கல்துறை மூலமாக ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்டு) 10 நபர்களுக்கும், மொத்தம் 35 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 83 ஆயிரம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சிவகிரி தாசில்தார் ஆனந்த், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக தலைமை உதவி யாளர் செய்யது அலி பாத்திமா மில்லத், சிவகிரி தலைமை யிடத்து துணை தாசில்தார் சரவணன், மண்டல துணைத் தாசில்தார் வெங்கடசேகர், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுடலை மணி, குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார் சாந்தி, வருவாய் ஆய்வாளர்கள் கூடலூர் கோபாலகிருஷ்ணன், வாசு தேவநல்லூர் வள்ளி யம்மாள், சிவகிரி சரவணக்குமார், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் வீரசேகரன், ஜெயபிரகாஷ், சங்கரவடிவு, பாக்கியராஜ், உதவியாளர்கள் அழகுராஜா, வேல்முருகன், முனியாண்டி, முத்துசாமி, அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சங்கரநாராயணன் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் உரிய தகவல் அளிக்கப்படும் என கூறினார்

    • 15 வருவாய் ஆவண கணக்குகளை ஆய்வு
    • கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்

    சோளிங்கர் :

    சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் சோளிங்கர் உள்வட்டத்திற்குட்பட்ட சோளிங்கர், சோம சமுத்திரம், வெங்குப்பட்டு, பரவத்தூர் உள்ளிட்ட 15 வருவாய் கிராமங்களின் வருவாய் ஆவண கணக்குகளை ஆய்வு செய்தார். பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

    பொது மக்கள் அளித்த மனுக்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டது.

    சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள நீர்நிலை மற்றும் ஏரி நீர் பாசன கால்வாயை ஆக்கிரமித்து தனிநபர் கட்டியுள்ள கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து நக ராட்சி முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மற்றும் அரசு மருத்துவமனை அருகே ஏரி பாசன கால்வாயில் கட் டப்பட்டுள்ள பொதுப்பணித்துறை கட்டிடத்தை அகற்றி நீர் நிலை மற்றும் ஏரி பாசன கால்வாய்களை பாதுகாக்க வேண் டும் என காங்கிரஸ் நகர தலைவர் டி.கோபால் மனு அளித்தார்.

    கலெக்டர் அலுவலக பொதுமேலாளர் (நீதியியல்) விஜய குமார், தாசில்தார் ஆனந்தன், மண்டல துணை தாசில்தார் அருட்செல்வம், வருவாய் ஆய்வாளர் தமிழரசி, வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், கிராமநிர்வாக அலுவலர்கள் ராஜகோபால், சானு, கணேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நில அளவிற்காக வைக்கப் பட்டிருந்த நில அளவீடு சங்கிலியை மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் பார்வையிட்டு உறுதி செய்தார்.

    • கணவனை இழந்த பெண்ணுக்கு இயற்கை மரண உதவித்தொகை
    • சப்- கலெக்டர் வழங்கினார்

    நெமிலி,

    நெமிலி தாலுகா, நாகவேடு கிராமத்தில் வசித்து வரும் பன் னீர்செல்வம் என்பவரின் மனைவி உமா நெமிலி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் இயற்கை மரண உதவித்தொகை கேட்டு மனு கொடுத்தார்.

    அவரின் மனு பரிசீலிக்கபட்டு வருவாய் தீர்வாய அலுவலரும், சப்-கலெக்ட ருமான பாத்திமா இயற்கை மரண உதவித்தொகை ரூ.20 ஆயிரத்திற்கான ஆணையை வழங்கினார்.

    இதில் நெமிலி தாசில்தார் பாலசந்தர், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆனந்தன், மண்டல துணை தாசில்தார் பாஸ்கரன், தலை மையிடத்து தாசில்தார் பன்னீர்செல்வம், நாகவேடு கிராம நிர்வாக அலுவலர் சதிஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கை–கள் அடங்கிய மொத்தம் 308 பேர் மனு கொடுத்தனர்.
    • வட்ட வழஙகல் அலுவலர் செந்தில் பிரபு, வருவாய் ஆய்வாளர்கள் சரவணன், பாரதி, செல்வி, பொற்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தாராபுரம்:

    தாராபுரம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன் தலைமையில் கன்னிவாடி, தாராபுரம், மூலனூர், அலங்கியம் உள்ளிட்ட வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் கல்வி உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 308 பேர் மனு கொடுத்தனர். அதில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட ஒரு சில மனுக்களுக்கு மட்டும் உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது விசாரணை நடத்தி அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றபட உள்ளது.இந்த நிகழ்ச்சியின் போது தாராபுரம் தாசில்தார் ஜெகஜோதி, தலைமையிடத்து துணை தாசில்தார் பரமேஷ், மண்டல துணை தாசில்தார் மகேஸ்வரி, வட்ட வழங்கல் அலுவலர் செந்தில் பிரபு, வருவாய் ஆய்வாளர்கள் சரவணன், பாரதி, செல்வி, பொற்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 1432 -ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி வருகின்ற 6-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது.
    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 5, 12, 19 -ந்தேதி ஆகிய திங்கள் கிழமைகளில் நடைபெறாது என தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட த்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் 1432 -ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி வருகின்ற 6-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் தவிர்த்து மற்ற நாட்களில் வருவாய் தீர்வாய அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது. அதன்படி, மாவட்ட கலெக்டர் தலைமையில் கள்ளக்குறிச்சி வட்டத்தில் வருகிற 5-ந் தேதி முதல் 12 -ந் தேதி வரையிலும், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் உளுந்தூ ர்பேட்டை வட்டத்தில் 5 -ந் தேதி முதல் 19-ந் தேதி வரையிலும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் திருக்கோவிலூர் வட்டத்தில் 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையிலும், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையில் கல்வராய ன்மலை வட்டத்தில் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரையிலும், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா தலைமையில் சின்னசேலம் வட்டத்தில் 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரையிலும், திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் யோகஜோதி தலைமையில் சங்கராபுரம் வட்டத்தில் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறவுள்ளது.

    மேலும், 5-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவல கங்களில் வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் வருவாய்துறை தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். ஜமாபந்தி நடைபெறுவதால், மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 5, 12, 19 -ந்தேதி ஆகிய திங்கள் கிழமைகளில் நடைபெறாது என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • ரூ.63 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழக்கப்பட்டது
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் ஆண்டுக்கான ஜமாபந்தி நிறைவு விழா நேற்று நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். துணை தாசில்தார்கள் ரமேஷ், சுபிச்சந்தர், வாசுகி, வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர்கள் பலராமபாஸ்கர், மஞ்சுநாதன், சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தாசில்தார் விஜயகுமார் அனைவ ரையும் வரவேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு 25 நபர்களுக்கு ரூ. 63 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, அரசு வழக்கறிஞர்கள் எஸ்.விஜய குமார், கே.லோகநாதன், மருத்துவ அலுவலர் மாறன்பாபு, வேளாண்மை உதவி இயக்குனர் உமாசங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துரைசெல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாமிநாதன் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. வருவாய் தீர்வாய அலுவலரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருமான முரளி தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக சு.ரவி எம் எல் ஏ கலந்து கொண்டார். பெறப்பட்ட மனுக்ளை ஆய்வு செய்து அதில் தேர்வு செய்யப்பட்ட 222 பயனாளிகளுக்கு 91 லட்சத்து 32 ஆயிரத்து 71 ரூபாய் மதிப்பிலான ஒய்வுதியம், இலவச வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, எஸ்.டி.,சாதி சான்றிதழ், தையல் எந்திரம் உள்ளிட்ட நல திட்ட உதவிகளை வழங்கினார்.

    கூட்டத்தில் திமுகவை சேர்ந்த அரக்கோணம் ஒன்றிய குழு பெருந்தலைவர் நிர்மலா சவுந்தர், தாசில்தார்கள் சண்முகசுந்தரம், கந்திர் பாவை, வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரி, வருவாய் துறையினர் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×