என் மலர்
நீங்கள் தேடியது "High Court"
- பல அரசியல் கட்சியினர் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தியுள்ளனர்.
- பல இடங்களில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என வழக்கு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தார்.
மதுரை:
பழனியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி திவான் மைதீன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் வரும் ஞாயிற்றுக்கிழமை 16-ந்தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் பழனி மின்வாரிய அலுவலக சாலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி பழனி காவல் நிலையத்தில் விண்ணப்பித்திருந்தோம்.
தைப்பூசத்தை காரணம் காட்டி எங்களுக்கு அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்து உள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே காவல் நிலையத்தின் உத்தரவை ரத்து செய்து வரும் 16-ந்தேதி மாலை அதே இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி தனபால் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளோம், அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் பல அரசியல் கட்சியினர் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தியுள்ளனர். எங்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல என வாதிட்டார்.
அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்பு நிதி ஆஜராகி மனுதாரர் அனுமதி கேட்கும் இடம் அருகில் பெரியார் சிலை அமைந்துள்ளது. இவர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தற்போது பெரியாரை பற்றி அவதூறான கருத்துக்களை பேசி வருகிறார். இதனால் பல இடங்களில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என வழக்கு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தார்.
எனவே இந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்றும், தற்போது தைப்பூச விழா நடைபெறுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்றும், ஆகையால் இவர்கள் மாற்று இடமாக ஆயக்குடி பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்குவோம் என தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இதனை ஏற்க மறுத்தார். இதனை தொடர்ந்து நீதிபதி தற்போது தைப்பூச நிகழ்வு என்பது அங்கே நடைபெற்று வருகிறது. மேலும் பொதுக்கூட்டம் நடத்தும் இடம் அருகே 50 அடி தூரத்தில் பெரியார் சிலை இருப்பதால் அந்தப் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது.
வேறு இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனக் கூறிய நீதிபதி, மனுதாரர் தரப்பில் தகவல் கேட்டு தெரிவிக்க கூறி வழக்கு விசாரணை சிறிது நேரம் ஒத்தி வைத்தார்.
- ஏற்கனவே மதுரையில் இந்து முன்ணணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர்.
- இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அது குறித்த பிரச்சனை எழுப்புவது சரியல்ல.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில், பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட துணை தலைவர் யுவராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், முருக பெருமானுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்கா வைத்து இஸ்லாமியர்கள் சொந்தம் கொண்டாடுகின்றனர்.
இதை கண்டித்து சென்னையில் வேல் ஏந்தி ஊர்வலம் செல்ல அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், 'ஏற்கனவே திருப்பரகுன்றம் உரிமை குறித்து பிரிவியூ கவுன்சில் வரை சென்று சிக்கந்தர் தர்கா, கொடி மரம், மலைவழி பாதை, நெல்லித்தோப்பு இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அது குறித்த பிரச்சனை எழுப்புவது சரியல்ல.
பேரணிக்கு அனுமதி வழங்கினாலும் அது தேவையற்ற விரும்பதகாத பிரச்சனைகளை உருவாக்கும். ஏற்கனவே மதுரையில் இந்து முன்ணணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். மீண்டும் அதே பிரச்சனைக்காக சென்னையில் பேரணி நடத்துவதை நீதி மன்றம் ஊக்குவிக்க கூடாது' என்று வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு என்றும் தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்க பார்க்கிறீர்கள் என மனுதாரருக்கு கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி பிறப்பித்தார். அதில் மேல் ஏந்தி சென்னையில் ஊர்வலம் நடத்த மனுதாரருக்கு அனுமதி வழங்க முடியாது இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்பு அளித்தார்.
- கணவர் தொடர்ந்த சீராய்வு மனுவை நீதிமன்றம் விசாரித்தது.
- அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய தகுதியற்றவர்.
மனைவி ஒருத்தர் தன் கணவனை தாண்டி வேறொரு நபருடன் உடல் ரீதியிலான உறவில் இல்லாமல் காதலிப்பது கள்ளக்காதல் ஆகாது என மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிபதி ஜி.எஸ். அலுவாலியா, "கள்ளக்காதல் என்பது பாலியல் உடலுறவை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்" என்று தீர்ப்பளித்தார். தனது மனைவி வேறொருவரை காதலிப்பதால், அவளுக்கு ஜீவனாம்சம் பெற உரிமை இல்லை என்ற கணவரின் வாதத்தை நிராகரித்தார்.
இவ்வழக்கில் குடும்ப நீதிமன்றம் மனைவிக்கு இடைக்கால ஜீவனாம்சத் தொகையாக ரூ.4,000 வழங்க வேண்டும் என்று கணவருக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கணவர் தொடர்ந்த சீராய்வு மனுவை நீதிமன்றம் விசாரித்த போது நீதிபதி அலுவாலியா இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
"ஒரு மனைவி உடல் ரீதியான உறவுகள் இல்லாமல் வேறொருவர் மீது அன்பும் பாசமும் கொண்டிருந்தாலும், மனைவி கள்ளக்காதல் கொண்டிருக்கிறாள் என்று கூறுவதற்கு அதுவே போதுமானதாக இருக்க முடியாது" என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், "கணவரின் சொற்ப வருமானம் இடைக்கால ஜீவனாம்சத் தொகையை மறுக்க ஒரு அளவுகோலாக இருக்க முடியாது" என்றும் நீதிமன்றம் கூறியது. விண்ணப்பதாரர் தனது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய தகுதியற்றவர் என்பதை முழுமையாக அறிந்தே ஒரு பெண்ணை மணந்திருந்தால், அதற்கு அவரே பொறுப்பு.
ஆனால் அவர் ஒரு திறமையான நபராக இருந்தால், அவர் தனது மனைவியை பராமரிக்க அல்லது இடைக்கால ஜீவனாம்சத் தொகையை செலுத்த சம்பாதிக்க வேண்டும்.