என் மலர்
நீங்கள் தேடியது "Review Meeting"
- வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் இணைப்பதன் அவசியம் குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
- 100 சதவீத இலக்கினை எய்திடும் வகையில் பணியாற்றிட வேண்டும் என களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ தலைமையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பணி முன்னேற்ற ஆய்வு கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் இணைப்பதன் அவசியம் குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இது குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் இம்மாத இறுதிக்குள் 100 சதவீத இலக்கினை எய்திடும் வகையில் பணியாற்றிட வேண்டும் என களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, தாசில்தார் செல்வகுமார் மற்றும் தேர்தல் பணி தொடர்பான துறை சார்ந்த அலுவலர்கள், களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான ஆய்வு க்கூட்டம் நடைபெற்றது
- நவம்பர் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட ப்பட்டது.
ஊட்டி
நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023-ல் பெறப்பட்ட படிவங்கள் குறித்தும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான ஆய்வு க்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர், நிர்வாக இயக்குனர் மற்றும் வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான சிவசண்முகராஜா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான அம்ரித் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சிவசண்முகராஜா பேசியதாவது:-
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி உத்தரவிற்கிணங்க, 1.1.2023 தேதியினை தகுதி நாளாகக்கொண்டு கடந்த ஆண்டு நவம்பர் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட ப்பட்டது.
இச்சுருக்கமுறை திருத்தத்தில் புதிய வாக்காளர்களாக பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் தொடர்பாக பெறப்பட்ட படிவங்கள் குறித்தும் மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு முழுமையான இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் வாக்காளர் பதிவு அலுவலரும், வருவாய் கோட்டாட்சியர்களான துரைசாமி (ஊட்டி), பூஷணகுமார் (குன்னூர்), முகமது குதுதுல்லா (கூடலூர்), நகராட்சி ஆணையாளர்கள் காந்திராஜ் (ஊட்டி), திரு.கிருஷ்ணமூர்த்தி (குன்னூர்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனபிரியா, தேர்தல் தாசில்தார் புஷ்பா தேவி, உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், தாசில்தார்கள் ராஜசேகர் (ஊட்டி),காயத்ரி (கோத்தகிரி), நடேசன் (பந்தலூர்), சித்தராஜ் (கூடலூர்), இந்திரா (குந்தா) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தூத்துக்குடி மாநகராட்சி ஆய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
- மழைகாலத்திற்கு முன்பு பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்,பொதுமக்களும், வியாபாரிகளும், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்கும் படியும் மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக் கொண்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும்,நிலுவையில் உள்ள, தொடங்கப்பட உள்ள பணிகள் குறித்தும் மாநகராட்சி ஆய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் கமிஷனர் தினேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்
திட்டங்களைத் தொடங்கும் போது இருக்கும் ஆர்வம் அதனை நிறைவேற்றி முடிப்பது வரை தொடர்வதை உறுதிசெய்யவே ஆய்வுக் கூட்டங்கள் என்ற
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறித்தலின்படி நடைபெறும் இந்தக் கூட்டத்தின் மூலம் எந்த தொய்வும் இல்லாமல் பணிகளை விரைந்து முடிக்கவும், இடையூறுகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு மாநகராட்சி அதிகாரி களுக்கும், துறை சார்ந்த அனைத்து அலுவலர்களுக்கும், ஓப்பந்ததாரர்களிடமும் வலியுறித்தினார்,
கடந்த காலங்களை போல் அல்லாமல் இந்தாண்டு மழைநீரை தேங்க விடமாட்டோம். குறிப்பாக அதிக அளவில் பாதிக்கப்படும் பிரை யண்ட்நகர், சிதம்பரநகர், ரஹ்மத்நகர், ஸ்டேட் பேங்காலனி, அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்காத வகையில் வடிகால் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. மற்ற பகுதிகளிலும் முடிந்த அளவிற்கு மழைகாலத்திற்கு முன்பு பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்,பொதுமக்களும், வியாபாரிகளும், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்கும் படியும் மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக் கொண்டார்.
- வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடந்தது.
- பணியினை சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னே ற்றம் தொடர்பாக அனை த்துத் துறை அலுவலர்க ளுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் நடந்தது.
இதில் மாவட்ட கண்கா ணிப்பு அலுவலரும், ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆரா ய்ச்சித்துறை ஆணை யருமான ஜி.பிரகாஷ் கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசினார்.
தொடர்ந்து வேளா ண்மை, உழவர் நலத்துறை சார்பில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்,
சமத்துவபுர குடியிருப்புகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நமக்கு நாமே திட்டம், ஜல்ஜீவன் மிஷன், அம்ருத், தூய்மை பாரத இயக்கம், பாதாள சாக்கடை,
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நிலுவையில் உள்ள பட்டாக்கள், இ-சேவை மையம், பள்ளிக் கல்வித் துறை சார்பில் எண்ணும் எழுத்தும் இலக்கியம்,
பள்ளிக் கட்டிடங்களின் உட்கட்டமைப்பு வசதிகள்; மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவம், சிறப்பு திட்ட செயலாக்கம், நான் முதல்வன்,
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆரா ய்ச்சித் துறை ஆணை யருமான ஜி.பிரகாஷ் விரி வாக ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அவர் கோடை காலம் தொடங்க உள்ளதால் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மாவட்ட த்தின் அனைத்து பகுதிக ளிலும் தடுப்பு நடவ டிக்கைகளை முழுமையாக மேற்கொண்டு டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை முன்பே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசின் திட்ட ங்கள் அனைத்தும் அனை த்து தரப்பு மக்களுக்கும் முழுமையாக சென்றடையும் வகையில் தங்களது பணி யினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) பொன்மணி, கலெகக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீசன் (வளர்ச்சி), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார்,
துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) டாக்டர் சோம சுந்தரம், கீழ்பவானி வடிநில கோட்டம் செயற்பொ றியாளர் கண்ணன், மாநகர நல அலுவலர் பிரகாஷ்,
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பூங்கோதை உள்பட அனைத்து துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.
- தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் குழாய் ஆய்வாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
- கோடை காலத்தை சமாளிக்க தூத்துக்குடி மாநகராட்சி தயாராக இருக்க வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் குழாய் ஆய்வாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். கமிஷனர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உதவி செயற்பொறியாளர்கள் , துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பொது மக்களுக்கு சிரமமின்றி குடிநீர் கிடைக்க வேண்டும். கோடை காலங்களிலும் தொய்வின்றி குடிநீர் வழங்குவதற்காக தேவை யான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு வரும் நீரின் அளவையும், பொது மக்களுக்கு வழங்கப்படும் நீரின் அளவையும் தொடர்ந்து கண்காணித்து கோடை காலத்தை சமாளிக்க தூத்துக்குடி மாநகராட்சி தயாராக இருக்க வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.
தொடர்ந்து தூத்துக்குடி கலைஞர் டேங்க், பண்டாரம்பட்டி, மடத்தூர், சுப்பையா பூங்கா, வி.வி.டி. பூங்கா, குருஸ்புரம் மற்றும் ரூரல் (செயின்ட் மேரிஸ் காலனி) ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை மேயர் ஆய்வு செய்தார்.
இதில் ஆதிபராசக்தி நகர், பண்டாரம்பட்டி, மடத்தூர் மற்றும் ரூரல் பகுதிகளில் சில வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வரும் நீரின் அளவும் மிகவும் குறைவாக இருப்பதாக வந்த தகவலையடுத்து அப்பகுதி களை பார்வையிட்டு குடிநீர் சீராக வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.
5-வது வாா்டுக்குட்பட்ட அன்னை வேளாங்கன்னி நகா் பகுதியில் உள்ள தெருக்களுக்கு சீரான குடிநீா் கிடைக்கவில்லை என்ற மக்களின் புகாரைத் தொடர்ந்து அங்கும் சென்று ஆய்வு செய்தார். அப்போது நீர் செல்லும் குழாய் பாதையில் தடையாக கற்கள் இருந்ததை கண்டறிந்து அதனை அகற்ற உத்தரவிட்டு இனிமேல் சீரான குடிநீர் வழங்கப்படும் என்று மக்களிடம் உறுதி அளித்தார்.
மேயருடன் மண்டல தலைவர் நிர்மல்ராஜ் , மாநகராட்சி கவுன்சிலர் அந்தோணி மார்ஷலின், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ் பிரபாகரன் ஜாஸ்பர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் அந்தோணி சிவக்குமார், டேனி, மார்ஷல், துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- தென்காசி மாவட்டத்தில் 85 வங்கிகள் இல்லா கிராம பகுதிகள் அமைந்துள்ளது.
- கூடிய விரைவில் மக்கள் தொகை அடிப்படையில் புதிய வங்கி கிளைகள் திறக்க அறிவுறுத்தப்படுகிறது.
தென்காசி:
மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட அளவிலான அனைத்து வங்கியாளர் மீள் ஆய்வுக் கூட்டம் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு விருந்தினராக தென்காசி தனுஷ் குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தென்காசி பழனி நாடார், சங்கரன்கோவில் ராஜா, வாசுதேவநல்லூர் சதன் திருமலை குமார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட அளவிலான அனைத்து வங்கியாளர் மீள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் 85 வங்கிகள் இல்லா கிராம பகுதிகள் அமைந்துள்ளது. இதில் 232 குக் கிராமங்கள் உள்ளது. மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் 85 வங்கி இல்லா கிராம பகுதிகளில் அனைத்து வங்கிகளின் பி.சி. மற்றும் ஏ.டி.எம். மூலம் பண பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது.
மேலும் கூடிய விரைவில் மக்கள் தொகை அடிப்படை யில் புதிய வங்கி கிளைகள் திறக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மாவட்ட அளவில் மிகவும் பின்தங்கிய பகுதி களில் உள்ளவர்களுக்கு சிறப்பு கடன் வழங்கும் முகாம் மாதம் தோறும் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
நிகழ்ச்சியில் அனைத்து வங்கிகளில் நடைபெற்று வரும் கடன் வழங்குவது பற்றிய ஆய்வுக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஏற்பாடுகளை முன்னோடி வங்கி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து செய்திருந்தது.
- பிரதமர் மோடி தலைமையில் இன்று 7 கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
- கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள், எம்பிக்கள் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்றத்தின் 543 மக்களவை தொகுதிகளுக்கும் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெல்லப்போவது யார்? என்பதை முன்கூட்டியே கணிக்கும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.
தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ள நிலையில், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று 7 கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள், எம்பிக்கள் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், வெப்ப அலை பாதிப்பு தொடர்பாக, பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
அப்போது, நாட்டில் நிலவும் வெயிலின் தாக்கம் குறித்து, அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
மேலும், ரீமால் புயல் பாதிப்பு குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.