என் மலர்
நீங்கள் தேடியது "Maize"
- 750 ஏக்கர் பரப்பளவில் பருத்தி, உளுந்து, கம்பு ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது
- அதிகாலை நேரத்தில் விவசாயிகள் அயர்ந்து தூங்கிவிடும்போது ஏராளமான காட்டு விலங்குள் வந்து பயிர்களை சேதப்படுத்தி விடுகிறது
கயத்தாறு:
கயத்தாறு தாலுகா குருமலை பஞ்சாயத்துக்கு உட்பட்டது சுந்தரேஸ்வரன் கிராமம் ஆகும். இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காச்சோள பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
பயிர்கள் சேதம்
மேலும் பருத்தி, உளுந்து, கம்பு ஆகிய பயிர்கள் 750 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குருமலை வனத்துறை பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மான்களும், பன்றிகளும் இப்பகுதியில் இரவு நேரங்களில் தோட்டங்களுக்குள் புகுந்து விடுவதாகவும், அவை பயிர்களை சேதப்படுத்துவதாகவும் அப்பகுதி விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.
தினமும் 5 முதல் 10 ஏக்கர் வரை சேதம் செய்துள்ளதால் கடந்த ஒரு வார காலமாக இந்த பகுதி விவசாயிகள் தங்கள் குடும்பங்களுடன் தோட்டங்களுக்கு சென்று இரவு பகலாக விளக்குகளை வைத்துக்கொண்டு காவலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதிகாலை நேரத்தில் விவசாயிகள் அயர்ந்து தூங்கிவிடும்போது ஏராளமான காட்டு விலங்குள் வந்து பயிர்களை சேதப்படுத்தி விடுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வேதனை
இன்று காலை 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை அவை சேதப்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் தங்க நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு பணம் வாங்கியும் விவசாயம் செய்து வருகிறோம். ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம்.ஒரு ஏக்கருக்கு 30 குவிண்டால் மக்காச்சோளம் கிடைக்கும். அதற்கு விலையாக ரூ.60 ஆயிரம் பெறுவோம். ஆனால்
இந்த ஆண்டு அனைத்துமே பாழாகிவிட்டது. எனவே மாவட்ட நிர்வாகம், வனத்துறையினர் இங்கு வந்து சேதங்களை கணக்கீடு செய்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
- மக்காச்சோளம், ஏக்கருக்கு 45 மூட்டை வரை மகசூல் இருக்கும்.
குடிமங்கலம் :
உடுமலை பகுதிகளில் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில், பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசன நிலங்கள், அமராவதி பாசன நிலங்கள் மற்றும் மானாவாரி நிலங்களில் ஏறத்தாழ, 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை வழக்கமாக டிசம்பர் தொடங்கி மார்ச் வரை நீடிக்கும்.நடப்பாண்டும் பயிர் வளர்ச்சி மற்றும் கதிர் பிடிக்கும் பருவத்தில் பெய்த கன மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அதோடு படைப்புழு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகள் பாதித்துள்ளனர்.
தற்போது மழை குறைந்துள்ளதால் உடுமலை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் அறுவடை துவங்கியுள்ளது. வழக்கமாக மக்காச்சோளம், ஏக்கருக்கு 45 மூட்டை வரை மகசூல் இருக்கும்.படைப்புழு தாக்குதல், கன மழை காரணமாக தற்போது 25 குவிண்டால் மட்டுமே மகசூல் கிடைத்து வருகிறது. மகசூல் குறைந்துள்ள நிலையில் கூடுதல் விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில் குவிண்டால், 2,400 ரூபாய் வரை மட்டுமே விற்று வருகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது :- கடந்த ஆண்டு மக்காச்சோளம் குவிண்டால் 2,800 ரூபாய் வரை விற்றதால் நடப்பாண்டு மக்காச்சோளம் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.இதனால் சாகுபடி பரப்பு அதிகரித்தது.படைப்புழு தாக்குதல், கன மழை, இடு பொருட்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், சாகுபடி செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது.ஆனால் கொள்முதல் விலை கடந்த ஆண்டை விட தற்போது குறைந்துள்ளது. இதனால் மக்காச்சோளம் சாகுபடி விவசாயிகள் பாதித்துள்ளனர்.
எனவே குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயித்து அரசு கொள்முதல் செய்யவும், வியாபாரிகள் சிண்டிகேட் காரணமாக விலை குறைப்பை தவிர்க்கும் வகையில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் ஏல வசதி செய்து தர வேண்டும்.வேளாண் வணிகத்துறை வாயிலாக கோழி, மாட்டுத்தீவன உற்பத்தி நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி கூடுதல் விலைக்கு உள்ளூர் மக்காச்சோளம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
- மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலால் 30 முதல் 50 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
- 60-ம் நாள், தேவைப்பட்டால் தாக்குதல் இருக்கும் பட்சத்தில் மேற்காணும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றை சுழற்சி முறையில் மீண்டும் தெளிக்கலாம்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலால் 30 முதல் 50 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உரிய தருணத்தில் தேவையான பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு விவசாயிகள் பயனடையலாம்.
அமெரிக்கன் படைப்புழு, தாய் அந்துப் பூச்சிகள் உள்ளதா என கண்காணிக்க, விதைத்தவுடன் இனக்கவர்ச்சி பொறிகள் எக்டருக்கு 5 எண்கள் வீதம் வைத்து கண்காணித்து பொருளாதார சேத நிலைக்கு அதிகமாகும் போது கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.
பொருளாதார சேத நிலையினை கடந்து அதிகரிக்கும் பட்சத்தில் விதைத்த 15 முதல் 20 நாட்களில், அசாடிராக்டின் 1500 பிபிஎம் 50மி.லி / 10 லிட்டர் நீர், குளோரன்ட்ரனிலிப்ரோல் 18.5 சதவீதம் எஸ்.சி 4 மி.லி / 10 லிட்டர் நீர் (அல்லது) புளுபென்டமைடு 480 எஸ்.சி 4 மி.லி / 10லிட்டர் நீர் வீதம் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
மேலும், விதைத்த 40 முதல் 45 நாட்களில் தாக்குதல் தென்பட்டால் இமாமெக்டின் பென்சோயேட் 5 சதவீதம் எஸ்.ஜி – 4 கிராம் / 10 லிட்டர் நீர் அல்லது ஸ்பைன்டோரம் 11.7 சதவீதம் எஸ்.சி 5 மிலி / 10லிட்டர் நீர் அல்லது நாவாலூரான் 10- இ.சி 15 மிலி / 10லிட்டர் நீர் அல்லது மெட்டாரைசியம் அனிசோபிலியே 80 கிராம்/ லிட்டர் நீர் வீதம் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். 60-ம் நாள், தேவைப்பட்டால் தாக்குதல் இருக்கும் பட்சத்தில் மேற்காணும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றை சுழற்சி முறையில் மீண்டும் தெளிக்கலாம்.
இந்த தொழில்நுட்பங்கள் அனைத்தையும், விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்து கடைபிடித்து மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தி, மக்காச்சோள விளைச்சலில், அதிக மகசூல் பெற்று பயனடையலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- வழக்கமாக உடுமலை பகுதிகளில் டிசம்பர் தொடங்கி மார்ச் வரை மக்காச்சோளம் அறுவடை சீசன் காலமாகும்.
- மகசூல் குறைந்தாலும் ஓரளவு விலை கிடைத்து வந்ததால் விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர்.
மடத்துக்குளம்:
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக உள்ளது. பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசன நிலங்கள், அமராவதி பாசன நிலங்கள் மற்றும் பருவ மழைகள் திருப்தியாக பெய்ததால் இறவை மற்றும் மானாவாரி பாசன நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது.இப்பகுதிகளில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடை துவங்கியுள்ளது. வழக்கமாக உடுமலை பகுதிகளில் டிசம்பர் தொடங்கி மார்ச் வரை மக்காச்சோளம் அறுவடை சீசன் காலமாகும்.இப்பகுதிகளில் விளையும் மக்காச்சோளத்தை கோழி, மாட்டுத்தீவன உற்பத்தி நிறுவனங்கள் கொள்முதல் செய்து வருகின்றன.
நடப்பாண்டு உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை ஒரு குவிண்டால் 2,250 முதல் 2340 வரை விற்று வந்தது. மகசூல் குறைந்தாலும் ஓரளவு விலை கிடைத்து வந்ததால் விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர்.இந்நிலையில் வியாபாரிகள் மற்றும் கோழித்தீவன உற்பத்தி நிறுவனங்கள் சிண்டிகேட் காரணமாக கடந்த 10 நாட்களாக தினமும் 10 ரூபாய், 20 ரூபாய் என குறைக்கப்பட்டு குவிண்டால் 1,150 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
வெளி மாநில வரத்து வாய்ப்பில்லை. உள்ளூர் மக்காச்சோளம் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டிய சூழலில் திடீர் விலை சரிவு காரணமாக விவசாயிகள் மக்காச்சோளம் அறுவடையை குறைத்து கொண்டதோடு அறுவடை செய்ய மக்காச்சோளத்தையும் விற்பனை செய்யாமல் விலையை எதிர்பார்த்து இருப்பு வைக்க துவங்கினர்.இதனால் விற்பனைக்கு மக்காச்சோளம் வரத்து குறைந்த நிலையில் மீண்டும் குவிண்டாலுக்கு, 20 முதல் 30 ரூபாய் வரை உயர்ந்தது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மக்காச்சோளம் அறுவடை துவங்கி இரண்டு மாதம் வரை நிலையான விலை காணப்பட்டது. இந்நிலையில் வியாபாரிகள் சிண்டிகேட் காரணமாக விலை குறைக்கப்பட்டது.மக்காச்சோளத்திற்கு விதை, உரம், மருந்து என 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியுள்ள நிலையில் அறுவடைக்கு 8 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.வழக்கமாக ஏக்கருக்கு 40 குவிண்டால் மகசூல் கிடைத்து வந்த நிலையில் தற்போது 20 முதல் 22 குவிண்டால் மட்டுமே கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கும் நிலை உள்ளது. இதனால் விலையை எதிர்பார்த்து விவசாயிகள் இருப்பு வைக்க துவங்கியுள்ளனர். உரிய விலை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதிகாரிகள் கூறுகையில், மக்காச்சோளம் விலை குறைவு காரணமாக, விற்பனைக்கு வரத்து குறைந்தது. இதனால் மீண்டும் விலை உயரத்துவங்கியுள்ளது என்றனர்.
- குன்னம் அருகே அறுவடை செய்யப்பட்ட 100 மூட்டை மக்காச்சோளம் தீயில் எரிந்து நாசமானது
- பக்கத்தில் தட்டைகளுக்கு வைத்த தீ பரவியதால் விபரீதம்
குன்னம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மற்றும் வேப்பந் தட்டை தாலுகா பகுதிகளில் விவசாயிகள் பல்லாயிரக் கணக்கா ன ஏக்க–ரில் மக் காச்சோளம் பயி–ரிட்டுள்ள–னர். தற்போது அந்த பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 10 நாட்களாக அறுவடையில் விவசாயிகள் தீவிரமாக ஈடு–பட்டு வருகின்றனர்.இந்தநிலையில் பெரம்ப–லூர் மங்களம் கீழத்தெருவை சேர்ந்த ஆறுமுகம் (வயது 55) என்பவர் அந்த பகுதி–யில் 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தார்.
பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த மக்காச்சோளத்தை அறுவடை செய்து 100 மூட் டைகளில் கட்டி வயல்வெளி–யில் பாதுகாப்பாக வைத்தி–ருந்தார்.இதற்கிடையே நேற் றைய தினம் பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அறுவடைக்குப் பின் தோட்டத்தில் கிடந்த உதிரிகள் மற்றும் சோள தட்டைகளை தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் பலத்த காற்று வீசியது.இதில் எதிர்பாராத விதமாக அந்த தீ ஆறுமு–கத்தின் தோட்டத்தி–லும் பரவியுள்ளது.
உடனடியாக மங்களமேடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இருந்தபோதிலும் அறு–வடை செய்து 100 மூட்டை–களில் கட்டி வைத்திருந்த முத்துச்சோளம் முழுவதும் தீக்கிரையானது. இது தொடர்பாக ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பக் கத்து தோட்ட விவசாயி செந்தில்குமாரிடம் விசா–ரணை நடத்தி வருகிறார்.அறுவடை செய்து தோட் டத்தில் வைத்திருந்த 100 மூட்டை மக்காச்சோள பயிர் கள் தீயில் எரிந்து நாசமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட விவசாயி நஷ்டஈடு கோரியுள்ளார்.
- பருவமழையை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உடுமலை :
உடுமலை சுற்றுப்புற பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் திருமூர்த்தி, அமராவதி அணைகள், கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகள், பருவமழையை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் இருப்பு மற்றும் நீர்வரத்திற்கு ஏற்றவாறு நீண்ட, மத்திய, குறுகியகால பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்காச்சோளம் சாகுபடியில் ஈடுபட்டனர். தற்போது அதில் அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அறுவடை செய்ய ப்பட்ட மக்காச்சோளத்தை காயவைப்பதற்கு உலர்கள ங்கள் இல்லாததால் நான்கு வழி சாலையில் உலர்த்தி வருகின்றனர்.
- கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் பெய்த பருவமழையை பயன்படுத்தி ஏராளமான விவசாயிகள், 4 மாதங்களில் மகசூல் கொடுக்கும் குறுகிய கால தானியப் பயிரான மக்காச்சோளத்தை, ஏறக்குறைய 2,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிட்டுள்ளனர்.
- தற்போது 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ.2,100 முதல் ரூ.2,200 வரை விலை போகிறது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள், வானம் பார்த்த மானாவரி புஞ்செய் நிலங்களில் பருவமழையை பயன்படுத்தி, வறட்சியை தாங்கி வளர்ந்து மகசூல் கொடுக்கும் குறுகிய கால மானாவரி பயிரான மக்காச்சோளம் மற்றும் பருத்தி ஆகியவற்றை, ஆண்டு தோறும் விரும்பி பயிரிட்டு வருகின்றனர்.
வாழப்பாடி, பேளூர், அயோத்தியாப்பட்டணம், வேப்பிலைப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், தும்பல் பகுதியில் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் பெய்த பருவமழையை பயன்படுத்தி ஏராளமான விவசாயிகள், 4 மாதங்களில் மகசூல் கொடுக்கும் குறுகிய கால தானியப் பயிரான மக்காச்சோளத்தை, ஏறக்குறைய 2,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிட்டுள்ளனர்.
தற்போது மக்காச்சோள கதிர்கள் முதிர்ந்து அறுவடைக்கு தயாரானதால், கதிர்களை அறுவடை செய்து உதிர்த்து, உலர்த்தி பதப்படுத்தி சந்தைப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
பெரும்பாலான விவசாயிகள் ஒரே நேரத்தில் அறுவடை செய்வதால், கொள்முதல் செய்யும் வியாபாரிகளும், தனியார் நிறுவனங்களின் முகவர்களும் விலையை கட்டுக்குள் வைத்துள்ளனர்.
தற்போது 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ.2,100 முதல் ரூ.2,200 வரை விலை போகிறது. ஓரிரு வாரங்களில் மக்காச்சோள அறுவடை முடிவுக்கு வரும் என்பதால், தற்போது மக்காச்சோளத்தை அறுவடை செய்யும் விவசாயிகள் உடனே விற்பனை செய்யாமல், வெய்யிலில் உலர வைத்து பதப்படுத்தி, மார்ச் மாத இறுதிக்குள் மக்காச்சோளம் விலை ரூ.2,500 வரை உயரும் என்ற நம்பிக்கையில் இருப்பு வைத்து வருகின்றனர்.
இதுகுறித்து பொன்னாரம்பட்டியை சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறியதாவது:-
ஒரு ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடுவதற்கு, விதை கொள்முதல், ஏர் உழுதல், விதைத்தல், களைப்பறித்தல், உரமிடுதல், புழுக்களை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், அறுவடை செய்தல், கதிரடித்து உலர்த்தி பதப்படுத்தல் ஆகியவவற்றுக்கு ஏறக்குறைய ரூ. 30 ஆயிரம் வரை செலவாகிறது. 25 மூட்டையே மகசூல் கிடைக்கிறது.
வாழப்பாடி பகுதி விவசாயிகள் ஒரே நேரத்தில் மக்காச்சோளத்தை அறுவடை செய்து விற்பனை செய்வதால், வியாபாரிகளும், முகவர்களும் விலையை குறைத்து கொள்முதல் செய்கின்றனர். இதனால், 4 மாத உழைப்பிற்கு ரூ.20 ஆயிரம் கூட வருவாய் கிடைப்பதில்லை.
எனவே, அறுவடை செய்யும் மக்காச்சோளத்தை உடனே விற்பனை செய்யாமல் விலை உயர்வை எதிர்பார்த்து இருப்பு வைத்துள்ளோம். இந்த மாத இறுதிக்குள் விலை உயர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மக்காச்சோளம் மொத்தம் 19 ஆயிரம் கிலோ அளவில் இருந்தது.
- குவிண்டால் ஒன்று ரூ.2,211-க்கும் குறைந்தபட்சமாக ரூ.2,202-க்கும் விலை போனது.
தாராபுரம் :
தாராபுரம், அலங்கியம், தளவாண்பட்டிணம், சந்திராபுரம், கொங்கூர் பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை நடக்கிறது. மக்காச்சோளத்தை அறுவடை செய்த விவசாயிகள் அவற்றை காய வைத்து விற்பனை செய்கிறார்கள்.
அதன்படி அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். திருப்பூர், திண்டுக்கல், பழனி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளத்தை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வந்தனர். மக்காச்சோளம் மொத்தம் 19 ஆயிரம் கிலோ அளவில் இருந்தது. அதனை வாங்க மேற்கூறிய பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். அப்போது அதிகபட்சமாக குவிண்டால் ஒன்று ரூ.2,211-க்கும் குறைந்தபட்சமாக ரூ.2,202-க்கும் விலை போனது. அதன் மூலம் மொத்தமாக ரூ.4 லட்சத்து 23 ஆயிரத்துக்கு மக்காச்சோளம் ஏலம்போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் பெ.அருள்குமார் செய்திருந்தார்.
- படைப்புழு தாக்குதல் வேகமாக பரவி நூற்றுக்கணக்கான ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- 70 சதவீத விளைச்சல் பாதிக்கிறது.
உடுமலை :
உடுமலையில் பிரதான சாகுபடியான மக்காச்சோ ளத்தில் படைப்புழு தாக்கு தல் வேகமாக பரவி நூற்றுக்கணக்கான ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவை தாயகமாகக்கொண்டு பரவிய பால் ஆர்மி வார்ம் எனப்படும் படைப்புழுவால் கடந்த சில ஆண்டுகளாக உடுமலை பகுதியில் மக்கா ச்சோள சாகுபடி கடும் சேதத்தை சந்தித்து வரு கிறது. விவசாயிகளுக்கு 2018ல் அரசு நிவாரணம் வழங்கி யது. 2019ல் நோய்தடு ப்புக்கான மருந்து களும், வேளாண்துறை வாயிலாக மானியத்தில் வழங்கப்ப ட்டது.கடந்த 2 ஆண்டுகளாக மக்காச்சோள விவசா யிகளின் பிரச்னை யை தமிழக அரசு கண்டுகொ ள்ளவில்லை. உடுமலை வட்டாரத்தில் பல ஆயிரம் ஏக்கர் மக்காச்சோள சாகுபடி படைப்புழு தாக்குதலால் பாதிக்க ப்பட்டுள்ளது.பயிரின் வளர்ச்சி தருணத்தில் மட்டு மல்லாது, மக்காச்சோள கதிர்களையும் இப்புழுக்கள் உண்பதால், 70 சதவீத விளைச்சல் பாதிக்கிறது. எனவே மக்காச்சோளம் சாகுபடி செய்து பாதித்தவ ர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர்.
- வரி விதிப்பால் விவசாயிகள் நஷ்டப்படும் நிலை உள்ளது.
- உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோளம் 90 சதவீதம் கோழித் தீவனத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது.
பல்லடம்:
கோழி தீவனத்துக்குப் பயன்படுத்தும் மக்காச்சோளத்துக்கு 1சதவீத செஸ் வரியை ரத்து செய்ய அரசுக்கு உழவா் உழைப்பாளா் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் கே.செல்லமுத்து தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை, திருப்பூா், ஈரோடு மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பெரும்பான்மையாக மக்காச்சோளம் பயிரிட்டு வருகின்றனா். உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோளம் 90 சதவீதம் கோழித் தீவனத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மக்காச்சோளத்தை விற்பனை செய்யும்போது கோவை, திருப்பூா், ஈரோடு, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் 1சதவீதம் செஸ் வரி கட்ட கட்டாயப்படுத்தப்படுகிறது. வேறு எந்த மாவட்டத்திலும் இந்த வரி விதிப்பு இல்லை.
இந்த வரி விதிப்பால் விவசாயிகள் நஷ்டப்படும் நிலை உள்ளது. ஏற்கெனவே இடுபொருள்கள் விலை உயா்வாலும் கூலி உயா்வாலும் கஷ்டத்தில் மக்காச்சோளத்தை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மேலும் சிரமத்தையும் கஷ்டத்தையும் இந்த வரி விதிப்பு கொடுக்கிறது.
விவசாயிகளின் நலனில் மிகவும் அக்கறையோடு செயலாற்றி வரும் தாங்கள் விவசாயிகளுக்கும், கோழி வளா்ப்பு பண்ணையாளா்களுக்கும் உதவும் வகையில் மேற்கண்ட கோவை, திருப்பூா், ஈரோடு, தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் நடைமுறையில் உள்ள 1சதவீதம் செஸ் வரியை ரத்து செய்து உதவ வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.
- மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் இணை இயக்குனர் ஆலோசனை தெரிவித்துள்ளார்
- படைபுழுக்கள் இலையின் அடிப்பகுதியை சுரண்டித் தின்றுச் சேதத்தை விளைவிக்கும்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் மா. பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விவசாயிகள், மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வில்லையெனில் புழுவின் தாக்குதல் தீவிரமாகிப் பயிர்ச் சேதம் மற்றும் மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்திட கேட்டுகொள்ளப்படுகிறது.
படைபுழுக்கள் இலையின் அடிப்பகுதியை சுரண்டித் தின்றுச் சேதத்தை விளைவிக்கும். வளர்ந்த புழுக்கள் இலையுறையினுள் சென்றும் தண்டுப் பகுதிகளையும், மக்காச்சோளப் பயிரின் அடிப்பகுதியையும், நுனிப்பகுதியையும் தின்று சேதம் விளைவிக்கும். ஒரே தொகுப்பாக ஒரே சமயத்தில் மக்காச்சோ ளத்தை விதைப்பதன் மூலம் படைப்புழு தாக்குதலை குறைக்கலாம். உளுந்து மற்றும் பாசிப்பயறு போன்ற பயறுவகைப் பயிர்களை ஊடுபயிர் சாகுபடி செய்ய வேண்டும்.ஒரு ஏக்கருக்கு 10 எண்கள் பறவை தாங்கிகள் வைப்பதன் மூலம் விதைத்தது முதல் 30 நாட்கள் வரை மக்காச்சோள படைப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
படைப்புழுவின் தாக்குதல் அதிகரிக்கும்பொழுது 15 முதல் 20 நாட்களில், அசாடிராக்டின் ஒரு சதவீத இ.சி. 400 மி.லி. அளவு அல்லது இமாமெக்டின் பென்சோயெட் 5 எஸ்.ஜி. 80 கிராம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம். மக்காச்சோளப் பயிரானது 40-45 நாட்கள் வளர்ந்த நிலையில், ஸ்பெனிடோரம் 12 எஸ்.சி 100 மி.லி அல்லது நவ்லுரான் 10 இ.சி என்ற மருந்து 300 மி.லி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.மேலும் இப்பூச்சியின் தாக்குதல் 60 முதல் 65 நாட்கள் வளர்ந்த பயிரில் தென்பட்டால் புளுபென்டையமைடு 480 எஸ்.சி. 80 மி.லி. அல்லது குளோரோன்டிரிபுரோல் 18.5 எஸ்.சி. 80 மி.லி. ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
- பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலத்தில் மக்காச்சோ ளத்தை கரும்பு மற்றும் மஞ்சள் பயிரில் ஊடுபயிரா கவும், தனிப் பயிராகவும் பயிரிட்டு வருகின்றனர்.
- மக்காச்சோளம் கதிர் நன்றாக விளைந்ததும் கூலி ஆட்கள் மூலம் சோளக் கதிரை பறித்து நன்றாக உலரவைத்து எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கின்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பெருங்குறிச்சி, குப்பிரிக்கா பாளையம், சுள்ளிப்பாளை யம், சோளசிராமணி, குரும்பலமகாதேவி, கொத்த மங்கலம், சிறுநல்லிக்காவில், தி.கவுண்டம்பாளையம், கபிலக்குறிச்சி, வடகரை யாத்தூர், பெரிய சோளி பாளையம், இருக்கூர், ஆனங்கூர், அய்யம்பாளை யம், பிலிக்கல்பாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் விவசாயிகள் தங்க ளது நிலத்தில் மக்காச்சோ ளத்தை கரும்பு மற்றும் மஞ்சள் பயிரில் ஊடுபயிரா கவும், தனிப் பயிராகவும் பயிரிட்டு வருகின்றனர். மக்காச்சோளம் கதிர் நன்றாக விளைந்ததும் கூலி ஆட்கள் மூலம் சோளக் கதிரை பறித்து நன்றாக உலரவைத்து எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கின்றனர். பின்னர் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு மக்காச்சோளத்தை விற்பனை செய்து வருகின்ற னர். சில வியாபாரிகள் மக்காச் சோளக் கதிரை வாங்கி உள்ளூர் பகுதிக ளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
அதை வாங்கிய பொது மக்கள் சோளக்கதிரை உப்பு போட்டு வெகவைத்து சாப்பிடுகின்றனர். பல இடங்களில் மக்காச்சோ ளத்தை வாங்கி பாப்கான் தயாரித்து பாக்கெட்டுகளில் விற்பனை செய்து வருகின்ற னர். மக்காச் சோளத்தை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியா பாரிகள் வந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வாங்கி தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டுவரும் மக்காச்சோள மாவு தயாரிக்கும் அலைகளுக்கும், மாடு, கோழி தீவனம் தயாரிக்கும் மில்களுக்கும், அதேபோல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். இந்நிலை யில் கடந்த வாரங்களில் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.20-க்கு விற்பனையானது. இந்த வாரம் வரத்து குறை வால் ஒரு கிலோ மக்காச்சோ ளம் ரூ.23 வரை விற்பனை யானது. மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளதால் மக்காச்சோளம் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.