என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Strike"

    • நடப்பு ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்த விதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
    • கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

    சேலம்:

    தென்மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த சங்கத்தின் மூலம் மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் கிடங்குகளில் இருந்து 5 ஆயிரம் டேங்கர் லாரிகள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 6 மாநிலங்களில் உள்ள கியாஸ் சிலிண்டர்களில் நிரப்பும் பாட்டலிங் பிளாண்டுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

    இதற்கிடையே நடப்பு ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்த விதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளால் டேங்கர் லாரிகளை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு ள்ளதாக கூறி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று முன்தினம் காலை முதல் கால வரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.

    இதனால் எண்ணெய் நிறுவன கிடங்குகளில் இருந்து பாட்டிலிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் ஏற்றி செல்லப்படும் பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளன. இதனால் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருடன் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கோவையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்கிறது. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

    அதன் படி 3-வது நாளாக இன்றும் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பாட்டலிங் பிளாண்டுகளில் சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    மேலும் போராட்டம் தொடர்ந்தால் விரைவில் சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • தூத்துக்குடியில் 47 லாரிகள் ஓடவில்லை.
    • டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் எரிவாயு வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    தூத்துக்குடி:

    பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் தங்களிடம் ஒப்பந்தம் செய்து உள்ள எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கு புதிய ஒப்பந்தப்படி சில திருத்தங்களை கொண்டு வருகின்றன. அதே போன்று வாடகையையும் குறைத்து உள்ளன.

    இது போன்ற கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி தென்மாநிலங்களில் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.

    இதனை தொடர்ந்து எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் துறைமுகத்தில் இருந்து எரிவாயுவை நிரப்ப செல்லாமல் தூத்துக்குடியில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், கொச்சி துறைமுகத்தில் இருந்து எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் மூலம் தினமும் சுமார் 200 டன் எரிவாயு தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு கொண்டு வரப்படும்.

    அங்கிருந்து சிலிண்டர்களில் நிரப்பப்பட்டு தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படும். இதனால் தூத்துக்குடியில் 47 லாரிகள் ஓடவில்லை. தற்போது டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் எரிவாயு வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    • கியாஸ் தட்டுபாடு ஏற்படும்.
    • பாட்டலிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் ஏற்றி செல்லப்படும் பணிகள் பாதிப்பு.

    சேலம்:

    தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.

    மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணை நிறுவனங்களின் கிடங்குகளில் இருந்து 5 ஆயிரம் டேங்கர் லாரிகள் மூலம் லோடு ஏற்றி ஒப்பந்த அடிப்படையில் 6 மாநிலங்களில் உள்ள கியாஸ் பாட்டிலிங் பிளாண்டுகளுக்கு கியாசை எடுத்து வரும் பணியை சங்க உறுப்பினர்களின் லாரிகள் மேற்கொண்டு வருகின்றன.

    இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்த விதிகளில் 2 அச்சு லாரிகளை பயன்படுத்த கூடாது, 3 அச்சு லாரிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாற்று ஓட்டுனர் இல்லாத பட்சத்தில் ரூ.20 ஆயிரம் அபராதம் வதிக்கப்படும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த விதிமுறைகளால் டேங்கர் லாரிகளை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று காலை முதல் கால வரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.

    இதனால் எண்ணை நிறுவன கிடங்குகளில் இருந்து பாட்டலிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் ஏற்றி செல்லப்படும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இதனால் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து நேற்று டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தி னருடன் எண்ைண நிறுவன அதிகாரிகள் கோவையில் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என கியாஸ் டேங்கர் லாரி உரிமை யாளர்கள் அறிவித்து ள்ளனர். அதன் படி 2-வது நாளாக இன்றும் கியாஸ் டேங்கர் லாரி உரிமை யாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் .

    இது குறித்து தென் மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறிய தாவது-

    ஆயில் நிறுவன அதிகாரிகளுடனான பேச்சு வார்த்தையில் எந்த வித உடன்பாடும் ஏற்படாததால் தென் மண்டலத்தில் கியாஸ் டேங்கர் லாரிகள் போராட்டத்தில் ஈடுப ட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள கியாஸ் டேங்கர் லாரிகளும் இந்த போராட்டத்தில் ஈடு பட முன் வந்துள்ளன. ஆனாலும் இன்னும் ஒரு வாரங்களுக்கு கியாஸ் தட்டப்பாடு வராது. அதன் பின்னர் கியாஸ் தட்டுபாடு ஏற்படும்.

    தென் மண்டலத்தில் 5 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகள் ஓடினாலும், 3 ஷிப்டுகளாக அந்த லாரிகள் பிரிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 1500-க்கும் மேற்பட்ட லாரிகளில் கியாஸ் நிரப்பி பாட்டலிங் பிளாண்டுகளுக்கு கொண்டு வரப்படுவது வழக்கம்.

    அந்த பணிகள் முற்றிலும் தற்போது முடங்கி உள்ளதால் நாள் ஒன்றுக்கு 18 லட்சம் சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் பணி பாதிக்க ப்பட்டுள்ள நிலையில் 2 நாட்களில் மட்டும் 36 லட்சம் கியாஸ் சிலிண்டர்க ளில் கியாஸ் நிரப்பும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    ஒரு டேங்கர் லாரியில் 18 ஆயிரம் கிலோ கியாஸ் நிரப்பப்பட்டு கொண்டு செல்லப்படும். அதன் மூலம் 1200 சிலிண்டர்கள் நிரப்பபடும். கடந்த 2 நாட்களில் 3 ஆயிரம் டேங்கர் லாரிகள் இயங்காததால் 36 லட்சம் சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் பணி தடை ஏற்பட்டுள்ளது.

    இந்த வேலை நிறுத்தத்தால் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 200 கோடி ரூபாய் வீதம் 2 நாட்களில் 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோரிடம் எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக விரைவில் முறையிட உள்ளோம்.

    மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்றால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக இது வரை எந்த தகவலும் இல்லை.

    கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும். அதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினார். 

    • இன்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
    • கியாஸ் எடுத்து செல்லும் பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளது.

    தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

    லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமான சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ேராலியம் ஆகியவை மூலம் வீடுகள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு வினியோகத்தில் ஈடுபட்டுள்ளன.


    சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கியாசை சிலிண்டரில் நிரப்பும் பாட்டலிங் மையங்களுக்கு ஏற்றி செல்லும் பணியில் நாடு முழுவதும் 24 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் 2025-30-ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்த கட்டுப்பாடுகளை எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

    புதிய ஒப்பந்தத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகளை குறைவாக கேட்டு இருப்பதோடு 21 டன் எடை கொண்ட கியாஸ் மற்றும் 3 அச்சு லாரிகளுக்கு முன்னுரிமை என்கிற விதியை அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

    மேலும் 2 அச்சு லாரிகளை குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் , வாடகை நிர்ணயம் செய்வதில் பழைய முறையையே கடை பிடிக்க வேண்டும் என கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் எண்ணை நிறுவனங்கள் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கைகளை ஏற்பது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதற்கிடையே கடந்த 17-ந் தேதி எண்ணை நிறுவன அதிகாரிகளுடன் தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர் சந்தித்து சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதன்பிறகும் புதிய கட்டுப்பாடுகளில் பெரிய தளர்வு ஏதும் அறிவிக்கப்பட வில்லை. இதனால் விரக்தி அடைந்த கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

    அதன்படி தென் மண்டல அளவில் இயக்கப்படும் 6 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகளையும் ஆங்காங்கே நிறுத்தி இன்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    இதனால் கிடங்குகளில் இருந்து கியாஸ் சிலிண்டரில் கியாஸ் நிரப்பும் பிளாண்ட்களுக்கு கியாஸ் எடுத்து செல்லும் பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளது. இதனால் விரைவில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. உடனடியாக இதில் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இது குறித்து தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் செந்தில் கூறியதாவது-

    புதிய ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு கடந்த 1-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 2 அச்சு லாரிகள் புறக்கணிப்பு, கிளீனர் இல்லையென்றால் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை அபராதம், சிறிய விபத்து என்றாலும் 2 ஆண்டுகளுக்கு தடை என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் இடம் பெற்றிருந்தன.

    மேலும் 3 அச்சு லாரிகளுக்கு 25 சதவீதம், 2 அச்சு லாரிகளுக்கு 75 சதவீதம் தொழில் வாய்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது மட்டும் எங்களுக்கு சாதகமாக உள்ளது. புதிய டேங்கர் லாரிகளை மட்டும் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அதற்கு 60 லட்சம் வரை செலவாகும்.

    இதன் பாதிப்புகள் குறித்து எடுத்து கூறியும் கடந்த 24-ந் தேதி வரை விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை. புதிய ஒப்பந்தத்தால் நாங்கள் நிறைய இழப்புகளை சந்திக்க நேரிடும், இதனால் இன்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம்.

    இதனால் எண்ணை நிறுவனங்களின் தென் மண்டலத்திற்கு உட்பட்ட சென்னை, கொச்சி, பாலக்காடு, விசாகப்பட்டினம், மங்களூரு, எடியூர், சரளப்பள்ளி, தூத்துக்குடி உள்பட 10 இடங்களில் உள்ள கிடங்குகளில் இருந்து லாரியில் கியாஸ் எடுத்து செல்லும் பணியில் ஈடுபடும் 6 ஆயிரம் டேங்கர் லாரிகளும் இன்று காலை முதல் இயங்கவில்லை.

    இதில் தினசரி 1500 கியாஸ் டேங்கர் லாரிகளில் கியாஸ் எடுத்து செல்லும் பணிகள் முடங்கி உள்ளதால் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    புதிய ஒப்பந்த கட்டுப்பாடுகளை தளர்த்தும் வரை வேலை நிறுத்தம் தொடரும். இந்த வேலை நிறுத்தம் நாடு முழுவதும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    இதற்கிடையே இன்று மாலை மும்பையில் இருந்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் கோவைக்கு வருகிறார்கள். அவர்களுடன் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்துகிறோம், அதில் சுமூக முடிவு ஏற்பட்டால் போராட்டத்தை வாபஸ் பெறுவோம், போராட்டம் தொடர்ந்தால் ஒரு வாரத்திற்கு பிறகு கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும்.

    இந்த போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ரூ.37 கோடி வரை பணம் இருந்து இருக்கலாம் என்றும் மற்றொரு தகவல் வெளியானது.
    • மார்ச் 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவார்கள்

    டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் யஷ்வந்த் வர்மா. கடந்த 16ம் தேதி ஹோலி பண்டிகையின் போது இவரது வீட்டின் ஒரு அறையில் தீப்பிடித்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் அவரது வீட்டுக்கு சென்று தீயை அணைத்தனர்.

    இதையடுத்து தீ பரவிய இடங்களில் தீயணைப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது நீதிபதி வீட்டின் அருகே உள்ள ஒரு அறையில் பாதி எரிந்த நிலையில் 500 ருபாய் நோட்டுகள் ரூ.15 கோடி வரை பணம் இருந்ததாக தகவல் வெளியானது. எரிந்து நாசமாவதற்கு முன் ரூ.37 கோடி வரை பணம் இருந்து இருக்கலாம் என்றும் மற்றொரு தகவல் வெளியானது.

    இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியில் இருந்து தாற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டார்.

    தற்போது விசாரணை நடந்து வரும் நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மாவை மாற்ற சஞ்சீவ் கண்ணா தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

    தற்போது தில்லி உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள யஷ்வந்த் வர்மா ஏற்கெனெவே 2021 வரை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியவர் ஆவார்.

    தற்போதும் அவர் மீண்டும் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். வரும் மார்ச் 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவார்கள் என்று பார் குழு தலைவர் அனில் திவாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

    • கடந்த 2 நாட்களாக ரூ.70 கோடி வரை வருவாய் இழப்பு.
    • உற்பத்தி செய்யப்பட்ட காடா துணிகளும் தேக்கம் அடையும் அபாயம்

    நீலாம்பூர்:

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி மற்றும் தெக்கலூர் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறி தொழில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது.

    இந்த பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் மற்றும் 10 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் உள்ளன. இந்த தொழில் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாவும் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்தநிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றுமுன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வேலை நிறுத்தத்தை முன்னிட்டு விசைத்தறி கூடங்கள் அனைத்து மூடப்பட்டு அந்த பகுதியே தொழிலாளர்கள் இன்றி வெறிச்சோடியது. கடந்த 2 நாட்களாக ரூ.70 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இன்று 3-வது நாளாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த வேலை நிறுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி செய்யப்பட்ட காடா துணிகளும் தேக்கம் அடையும் அபாயம் உருவாகியுள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசு உடனடியாக தலையிட்டு விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்தால் ஜவுளி உற்பத்தி மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    • புதுவை பெரிய மார்க்கெட் பகுதியில் வெளிமாநில மீன்களை கொண்டு வந்து விற்க 9 ஏஜென்சிகளை மீன்வளத்துறை அனுமதித்ததாக தெரிகிறது.
    • தேங்காய்த்திட்டு துறைமுகத்தை பூட்டி வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை பெரிய மார்க்கெட் பகுதியில் வெளிமாநில மீன்களை கொண்டு வந்து விற்க 9 ஏஜென்சிகளை மீன்வளத்துறை அனுமதித்ததாக தெரிகிறது.

    புதுவையில் 18 மீனவ பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் பிடிக்கும் மீன்கள் புதுவை பெரிய மார்க்கெட், சின்னகடை, முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், வீராம்பட்டினம் போன்ற சிறிய மார்க்கெட்டில் விற்பனை செய்வது வழக்கம்.

    சமீபகாலமாக புதுவையில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து 9 ஏஜென்சி மூலம் மீன்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனை எதிர்த்து விசைப்படகு உரிமையாளர்கள் தேங்காய்த்திட்டு துறைமுகத்தை பூட்டி வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.

    படகுகளை துறைமுகத்தில் நிறுத்தி விட்டு வெளிமாநில மீன்கள் வரத்தை நிறுத்தும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என எச்சரித்துள்ளனர்.மேலும் 9 ஏஜென்சிகள் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு மீன்களை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ள மீன்வளத்துறைக்கு மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    வெளிமாநிலத்தில் இருந்து மீன் வருவதை நிறுத்தும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

    • வங்கி ஊழியர்கள் பிரச்சினைகளில் வங்கி நிர்வாகங்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கின்றன.
    • இந்த வேலைநிறுத்தம் தவிர்க்க முடியாதது.

    அவுரங்காபாத்

    அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் தேவிதாஸ் துல்ஜபுர்கார் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் வங்கி நிர்வாகங்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கின்றன. இருதரப்பும் கலந்து முடிவு எடுக்கும் வழக்கத்தை கைவிட்டு விட்டன.

    இருதரப்பு தீர்வு தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் மீறி வருகின்றன. மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை பிறப்பிக்கும் உத்தரவுகளையும் வங்கி நிர்வாகங்கள் கடைபிடிப்பது இல்லை. நிர்வாகம்-பணியாளர் உறவை அலட்சியப்படுத்துகின்றன.

    பேங்க் ஆப் மகாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா, பெடரல் வங்கி, சோனாலி வங்கி, கத்தோலிக் சிரியன் வங்கி, கனரா வங்கி ஆகிய வங்கிகளின் நிர்வாகங்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், வங்கி ஊழியர்களிடையே பரவலாக கலக்கம் ஏற்பட்டுள்ளது.

    ஆகவே, அனைத்து வங்கிகளிலும் உள்ள அகில இந்திய வங்கி பணியாளர் சம்மேளனத்தின் உறுப்பினர்கள், வருகிற 19-ந் தேதி ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். இந்த வேலைநிறுத்தம் தவிர்க்க முடியாதது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரியலூர் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பணி நிரந்தரம் செய்ய கோரி நடைபெறுகிறது.

    அரியலூர்:

    பணி நிரந்தரம் செய்யக் கோரி அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.

    தமிழகத்திலுள்ள அரசு கலைக் கல்லூரிகளில் கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், அவர்களைப் பணி நிரந்தரம் செய்யும் அரசாணை கடந்த 2019 - இல் வெளியானது. ஆனால் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. பலர் ஓய்வுப் பெற்றுவிட்டனர்.

    இந்நிலையில், பணிநிரந்தரம் செய்ய கோரி நவ.10 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு அரசு கல்லூரி கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்தது.

    அதன்படி அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்கள் 54 பேர், தங்களது பணியை புறக்கணித்து கல்லூரி அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். இவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மாணவ, மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்தனர்.

    இதுகுறித்து கௌரவ விரிவுரையாளர்கள் தெரிவித்தது:

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக கடந்த 25 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறோம். எங்களை பணிநிரந்தரம் செய்வோம் என கூறிவந்த அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகள், இன்று அரசாணை எண் 246,247, 248 மூலம் எங்களை வெளியேற்றும் பணியை செய்ய முன்வந்துள்ளது. இந்த அரசாணைகளை காரணம் ஏதும் கூறாமல் உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    ராஜஸ்தான், ஒடிசா, குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வதாக அம்மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளார்கள். அது போல் தமிழகத்திலும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றனர்.

    • கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
    • வகுப்புகளுக்கு செல்லாமல் பணி புறக்கணிப்பு

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்களாக 28 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 24 பேர் நேற்று காலை கல்லூரியில் வகுப்புகளுக்கு செல்லாமல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், அரசாணை எண் 246, 247 மற்றும் 248 ஆகியவற்றை திரும்பப்பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் காலை முதல் வகுப்பறைக்கு செல்லாமல் கல்லூரி வளாகத்தின் உள்ளேயே ஒரே இடத்தில் அமர்ந்து பணி புறக்கணிப்பு செய்தனர்.

    • நூற்பாலை ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்
    • அதிகாரிகளின் பேச்சுவார்தையில் சமரசம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் கூட்டுறவு நூற்பாலை இயங்கி வருகிறது. இவ்வாலையில் நிரந்தர பணியாளர்கள் 72 பேரும், ஒப்பந்த தொழிலாளர்கள் 300க்கு மேற்பட்டோரும் பணியாற்றி வருகின்றனர். ஆலையிலிருந்து மாதந்தோறும் சுமார் 200 டன் நூல் நூற்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 16ம் தேதி முதல் ஆலை நிர்வாகம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் நிர்வாகத்தினர், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நாள் ஊதியம் ரூ 420 ஐ பாதியாக குறைத்து வழங்க முடிவு செய்துள்ளனர். மேலும் நாள் ஊதியம் போன்று அல்லாமல் வேலையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். இதனால் ஆந்திரமடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று வேலையை நிறுத்திவிட்டு ஆலை முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆலையை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது, ஏற்கனவே பழைய முறைப்படி ஊதியம் வழங்க வேண்டும் எனக் கூறி கோஷங்களை எழுப்பினர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் பாலகிருஷ்ணன்,ஆலை நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் தொழிலாளர்க ளோடு பேச்சுவார்த்தை நடத்தி உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெறும் வரை மீண்டும் பழைய முறையே நடைமுறையில் இருக்கும் என தெரிவித்தனர். அதிகாரிகளின் உறுதியளிப்பைத் தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

    • குடிநீர் கேட்டு பெண்கள் திடீர் சாலை மறியல் நடைபெற்றது
    • புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால்

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கூலாச்சிக்கொல்லை தெற்கு கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப் பகுதிக்கு கடந்த சில மாதங்களாகவே குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இது தொடர்பாக இப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் வினியோகம் செய்யப்பட்ட குடிநீர் கலங்களாக வந்துள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் அதிகாரிகளை அணுகியுள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இது நாள் வரை எடுக்காததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் உடனடியாக அனைவரும் ஒன்று சேர்ந்து ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் அவர்கள் காலி குடங்களுடன் கொத்தமங்கலம் பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தால் வாகனங்கள் போக்குவரத்து இன்றி இருபுறமும் அணிவகுத்து நின்றன. இத்தகவல் அறிந்த கீரமங்கலம் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது திருவரங்குளம் ஆணையர் வரும் வரை போராட்டம் தொடரும் என்று மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

    ×