என் மலர்
நீங்கள் தேடியது "அறுவடை"
- அறுவடை பணிகளை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.
- மழை காரணமாக பல இடங்களில் நெல் கொள்முதல் பணிகள் நடைபெறவில்லை.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் தொடர்ந்து காலை முதல் மாலை வரை பரவலாக மழை பெய்தது பாபநாசம் தாலுகாவில் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன.
தற்போது பெய்த மழையால் நெற் கதிர்கள் வயலில் சாய்ந்து அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் கூறியதாவது:-
பாபநாசம் சுற்றுப்பகுதி களில் பெய்த கனமழை காரணமாக வயலில் மழைநீர் தேங்கி நிற்பதால் நெல்மணிகள் உதிர்ந்து பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சம்பா நெற்பயிர் அறுவடை பணிகளை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.சில பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் மழையின் காரணமாக சாய்ந்து விழுந்து பாதிக்கப்பட்டுள்ளன.
மழை நீடித்தால் நெற்பயிர்கள் பெருமளவு பாதிப்பு ஏற்படுவதாகும். இதனிடையே பாபநாசம் தாலுகாவில் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு நிலவுவதாகவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில் மழை காரணமாக பல இடங்களில் நெல் கொள்முதல் பணிகள் நடைபெறவில்லை.
கொள்முதல் நிலைய ங்களில் விவசாயிகள் தாங்கள்கொண்டு சென்ற நெல்லை கொள்முதல் செய்ய முடியாமல்தார்ப்பாய் கொண்டு மூடி
வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
- அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை.
- வேருடன் பயிர் சாய்ந்ததால் கட்டினாலும் மீண்டும் சாய்ந்து அழுகக்கூடிய நிலை ஏற்படும்.
தஞ்சாவூா்:
தஞ்சை மாவட்டம் திருவை யாறு, அந்தணர்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது . தொடர்ந்து பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கரில் உள்ள நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சாய்ந்த நெற்பயிர்களை தூக்கி நிமிர்த்தி கட்டி காப்பாற்றும் பணியில் விவசாயிகள் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருந்த போதிலும் வேருடன் பயிர் சாய்ந்ததால் கட்டினாலும் பிரயோஜனப்படாமல் மீண்டும் சாய்ந்து அழுகக்கூடிய நிலை ஏற்படும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
எனவே துறை அதிகாரிகள் பாதிப்படைந்த பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு உரிய நிவாரண தொகை கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- பேராவூரணி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது.
- திடீரென பெய்த பருவம் தவறிய மழையால் அப்பகுதியில் உள்ள வயல்களில் நெற்பயிர் தரையில் சாய்ந்து விழுந்து விட்டது.
பேராவூரணி:
தஞ்சை மாவட்டம், பேராவூரணி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் வயலில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது.
பேராவூரணி அருகே மாவடுகுறிச்சி மேற்கு செங்கமங்கலம் செல்லும் பகுதியில் சுமார் 50 ஏக்கர் வயல்களில் நெற்பயிர் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது.
இந்நிலையில் திடீரென பெய்த பருவம் தவறிய மழையால் அப்பகுதியில் உள்ள வயல்களில் நெற்பயிர் தரையில் சாய்ந்து விழுந்து விட்டது. தண்ணீரில் மூழ்கிய நிலையில் பயிற்கள் சேதமடைந்தது.
இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையுடன் உள்ளனர். அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்
கரூர் அமராவதி மற்றும் காவிரியாற்று பகுதிகளில் கோரைப்புல் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை சாகுபடி செய்து விட்டால் குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் வரை, 6 மாதங்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். பாய் உற்பத்திக்காக கரூர் நெரூர் பகுதியில் அறுவடை செய்த கோரையை பதப்படுத்தும் பணியில் தொழிலாளி ஒருவர் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.
- மக்காச்சோள பயிர்விளைச்சல் போட்டியில் கிருஷ்ணசாமி என்ற விவசாயி முதல் இடத்தை பிடித்தார்.
- 50 சதவிகித மானியத்தில் பண்ணை கருவிகளை வாங்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
கயத்தாறு:
கயத்தாறு வட்டார பகுதியில் வேளாண்மை துறை மூலம் நடைபெற்ற மாவட்ட விவசாயிகளுக்கான மக்காச்சோள பயிர்விளைச்சல் போட்டியில் சவலாப்பேரியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்ற விவசாயி கலந்து கொண்டு முதல் இடத்தை பிடித்தார். இவருக்கு பாராட்டு மற்றும் பரிசு வழங்கப்பட்டது.மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் மக்காச்சோளப் பயிர்கள் அறுவடையை தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் ஜென்கின்பிரபாகர் மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாச்சியார்அம்மாள், கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜ் மற்றும் கயத்தாறு வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது கயத்தார் வட்டாரத்தில் 50 சதவிகித மானியத்தில் கடப்பாரை, மண்சட்டி, கலை கொத்தி, பண்ணருவாள், மண்வெட்டி ஆகிய பண்ணை கருவிகளை விவசாயிகள் வாங்கி பயனடையுமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை, வேளாண்மை விரிவாக்க மையங்களில் உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி பயனடைய வேண்டி வேளாண்மை உதவி இயக்குனர்சுரேஷ் வட்டார பகுதியில் உள்ள விவசாயிகளை கேட்டுக்கொண்டார்.
- இடைத்தரகர்கள் இன்றி தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
- பெல்ட் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,880.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தனியார் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், வேளாண் சார்ந்த அலுவலர்கள், தனியார் அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் ஒருங்கிணைந்த முத்தரப்பு கூட்டம் நடத்தப்பட்டு வாடகை முறைப்படுத்தப்பட்டு பெல்ட் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணிநேரத்திற்கு ரூ. 2 ஆயிரத்து 450 மற்றும் டயர் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1,750 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நிர்ணயம் செய்யப்பட்ட வாடகை தொகைக்கு மிகாமல் தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்கள் எந்திரங்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். ஒரு சில இடங்களில் இடைத்தரகர்கள் அதிகமான வாடகை வசூவிப்பதாக புகார் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வேளாண்மை பொறியியல் துறை மூலம் அரசு மான்யத்தில் வழங்கப்பட்ட அறுவடை எந்திரங்கள் மற்றும் மாவட்டத்தில் இருப்பில் உள்ள தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்கள் பட்டியல் (மாவட்ட வட்டார வாரியாக உரிமையாளர் பெயர், முகவரி, எந்திர வகை மற்றும் செல்போன் எண்னுடன்) தற்போது உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் செல்போன் மூலம் உழவன் செயலியில் பதிவு செய்து, இடைத்தரகர்கள் இன்றி தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு நிர்ணயம் செய்யப்பட்ட வாடகை தொகைகு மிகாமல் செலுத்தி பயன்பெறலாம்.
மேலும், வேளாண்மை பொறியியல் துறை அறுவடை இயந்திரங்களுக்கு பெல்ட் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,880 எனவும் டயர் எடப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1160 எனவும் அரசால் நிர்ணயம் செய்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இதனை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறலாம்.
ேமலும், நிர்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு கூடுதலாக அறுவடை எந்திர உரிமையாளர்கள் கோரினால் வட்டாட்சியர்கள் வேளாண் அல்லது வேளாண்மைப் பொறியியல் துறை நாகப்பட்டினம் செயற்பொறியாளர் தொலைபேசி எண். 94420 49591, உதவி செயற்பொறியாளர் தொலைபேசி எண் 94432 77456 உதவிப் பொறியாளர் (வே.பொ), தொலைபேசி எண் 94452 40064) ஆகியோறை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பாசன வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது.
- 60 சதவீத சம்பா அறுவடை பணிகள் நிறைவு.
பாபநாசம்:
டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு மேட்டூர் ஆணை முன்கூட்டியே திறக்கப்பட்டது.
பொதுப்பணித்துறையின் மூலம் முக்கிய பாசன வடிகால் வாய்க்கால்கள் தூர்வார பட்டது. தட்டுப்பா டின்றி தேவையான விதைகள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டது.
போன்ற காரணங்களால் டெல்டா மாவட்டம் முழுவதும் சம்பா, தாளடி, சாகுபடி பணிகள் மிக சிறப்பாக நடைபெற்றது.
பாபநாசம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சமீபத்தில் பருவம் தவறி பெய்த மழைக்கு பிறகு தற்போது சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இதுவரை சுமார் 60 சதவிகிதம் அளவிற்கு சம்பா அறுவடை பணிகள் நிறைவு பெற்று உள்ளது.
இம்மாத இறுதிக்குள் சம்பா அறுவடை பணிகள் முடிவு நிலை எட்டும் என எதிர்பார்க்க படுகிறது.
- அறுவடையான வைக்கோல்கள் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
- தீயணைப்பு துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
சுவாமிமலை:
கும்பகோணம், பாப நாசம், திருவிடைமருதூர் பகுதிகளில் தற்பொழுது சம்பா பருவ நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அறுவடையான வைக்கோல்கள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப ப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கும்பகோணம் அருகே திருப்புரம்பியம் என்ற இடத்தில் இருந்து நேற்று இரவு 165 வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல்லுக்கு கைலாசம் என்பவர் லாரியை ஓட்டி சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக லாரி கொந்தகை அருகே சாலையில் உள்ள மின் கம்பியில் உரசி உள்ளது .இதில் வைக்கோலும், லாரியும் எரிந்து முற்றி லும் சேதமானது.
அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை. தீ விபத்து தொடர்பாக தகவல் கிடைத்ததும் கும்பகோணத்தில் இருந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
சேதத்தின் மதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது.
- கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது
- வாய்க்கால் பாசனத்தில் அமோகம்
கரூர்,
கிருஷ்ணராயபுரத்தை அடுத்த கோவக் குளம் கிராம பகுதியில், நெல் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோவக்குளம், பிச்சம்பட்டி கிராம பகுதிகளில் விவசாயிகள் பரவலாக நெல் சாகுபடி செய்தனர். இப்பகுதியில் நெல் விளைச்சல் அடைந்து, தற்போது அறுவடை பணிகளில்விவ சாயிகள் தொடங்கியுள்ளனர். இந்த நல் வயல்கள் கட்டளை வாய்க்காலில் இருந்து பாசனம் பெறுகின்றன. இப்பகுதியில் நெல் விளைச்சல் அடைந்து தற்போது அறுவடை பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். கூலி ஆட்கள் பற்றாக் குறை காரணமாக நெல் அறுவடை இயந்திரம் அறுவடை பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
- கிருஷ்ணராயபுரத்தில் பரவலாக உளுந்து சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது
- கிலோ ரூ.70க்கு விற்பனையால் விவசாயிகளுக்கு வருமானம் கிடைத்துள்ளது
கரூர்,
புனவாசிப்பட்டி கிராமத்தில் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து அறுவடை பணி நடந்தது. கிருஷ்ணராயபுரம் அருகே, புனவாசிப் பட்டி, கொம்பாடிப்பட்டி, நரசிங்கபுரம், மத்திப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக உளுந்து சாகுபடி செய்துள்ளனர். தற்போது கிணற்று நீர் பாசன முறையில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டது.இதில் உளுந்து பயிர்கள் செழிப்பாக வளர்ந்து, அறுவடைக்கு தயாராகின. இதையடுத்து அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. உளுந்து கிலோ 70 ரூபாய்க்கு விற்ப னையாகிறது. இதன் மூலம் விவசாயி களுக்கு ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது.
- எந்திரம் மூலம் அறுவடை செய்வதற்கு ஏதுவாக கோ 17 என்ற ரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.
- பருத்தி விதைச்சான்று நடைமுறைகள் மற்றும் அங்கக்சான்று எவ்வாறு செய்ய வேண்டும்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டாரம் சிமிலி கிராமத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் மாநில அளவிலான பருத்தி பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தான பயிற்சி நடைபெற்றது.
வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் வரவேற்புரை ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து பயிற்சியின் பருத்தி சாகுபடி தொழில்நுட்ப கையேட்டை வெளியீட்டும் பருத்தி இடுபொருள் கண்காட்சியை துவக்கி வைத்து திருவாருர் மாவட்ட இணை இயக்குனர் லெட்சுமிகாந்தன் பேசுகையில்:-
பருத்தி நமது மாவட்டத்தில் முதன்மை பணப்பயிராக பயிரிடப்படுகிறது.
இயந்திரம் மூலம் அறுவடை செய்வதற்கு ஏதுவாக கோ 17 என்ற ரகத்தினை புதிதாக கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ரகம் மற்றும் இயந்திரம் மூலம் அறுவடை போன்ற தொழில் நுட்பங்கள் பயன்பாட்டிற்கு வரும் பொழுது விவசாயிகளுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும் என்றார்.
வேளாண்மை துணை இயக்குனர் (மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்) ஏழுமலை பருத்தி சாகுபடி செய்யக்கூடிய வயல்களில் அதற்கு முன்னதாக மண் மாதிரி சேகரம் மற்றும் நீர் மாதிரி சேகரம் எவ்வாறு செய்தல் வேண்டும் என விரிவாக எடுத்துரைத்தார்.
வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) விஜயலட்சுமி பயிற்சி அளிக்கையில் பருத்திப்பயிரில் மண் பரிசோதனைக்கு ஏற்ப தலை மணி மற்றும் சாம்பல் சத்துக்களை இடவேண்டும் என்றும், உர அளவு, உரம் இடுதல் மற்றும் உர மேலாண்மை போன்ற தொழில்நுட்ப கருத்துகளை விளக்கமாக எடுத்துரைத்தார்.
வேளாண்மை உதவி இயக்குனர் (பயிர் காப்பீடு) ஹேமா ஹப்சிபா நிர்மலா பேசுகையில்,பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியாக வருகிற 31-ந் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக காப்பீடு செய்யும்படி கேட்டுக் கொண்டார் .மேலும் ஜெயப்பிரகாஷ் வேளாண்மை உதவி இயக்குனர் (விதை சான்று) பருத்தி விதைச்சான்று நடைமுறைகள் மற்றும் அங்கக்சான்று எவ்வாறு செய்ய வேண்டும் என்கின்ற தொழில்நுட்ப கருத்துகளை எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் இணை பேராசிரியர் அருள்செல்வி, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்த்தில் ஸ்பிரேயர் பருத்தி நுன்னுட்டம், தார்ப்பாய் போன்ற பருத்திக்குத் தேவையான இடுபொருட்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இப்பபயிற்சி முகாமில் சிமிலி ஊராட்சி மன்ற தலைவர் சிவசுப்பிரமணியன், வேளாண்மை அலுவலர் வெங்கடேஸ்வரன், துணை வேளாண்மை அலுவலர் ரவி, உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- மகசூல் குறைந்துள்ளதால் கடலையை அறுவடை செய்ய கூலி வழங்க முடியாமல் விவசாயிகள் வேதனை.
- கூடுதல் ரகங்களில் விதைகடலை மானிய விலையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டிணம் மாவட்டத்தின் கடலோர பகுதிகளான, புதுப்பள்ளி, காமேஸ்வரம், தாண்டவமூர்த்திகாடு, பூவைத் தேடி, விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000 ஏக்கரில் வேர்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 105 நாட்கள் பயிரான இது, வருடத்திற்கு 3 முறை பயிர் செய்யப்படுகின்றது. தற்போது, பயிர் செய்யப்பட்ட வேர்கடலை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.இந்த நிலையில் பருவம் தவறிய கனமழை பெய்ததால் நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழையின் காரணமாக கடலையின் வேர்ப்பகுதியில் தண்ணீர் தேங்கி அழுகி கடலையின் உற்பத்தி குறைந்துள்ளது. ஒரு செடிக்கு 15 முதல் 20 கடலை பருப்புகள் இருந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு லாபம் தரக் கூடியதாக இருக்கும். ஆனால் தற்போது 4 அல்லது 3 என்ற அளவில் உள்ளது. மேலும் ஒரு ஏக்கருக்கு 10000 ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு மகசூல் குறைந்து உள்ளதால் கடலையை அறுவடை செய்ய கூலி வழங்க முடியாமல் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் மேலும் நிலக்கடலையை கூடுதல் ரகங்களில் விதைகடலை மானிய விலையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் நிலக்கடலைக்கு உரிய விலை இல்லை எனவும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.