search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓ பன்னீர்செல்வம்"

    • முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தினார்.
    • அப்போது பேசிய அவர், முத்துராமலிங்க தேவருக்கு அ.தி.மு.க. சார்பில்தான் வெள்ளிக்கவசம் வழங்கினேன் என்றார்.

    ராமநாதபுரம்:

    முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்நிலையில், பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்திய பின் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சமீபத்தில் தேவர் தங்ககசம் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் நான் தான். அதிமுக சார்பிலேயே வெள்ளிக்கவசத்தை வழங்கி உள்ளேன். வெள்ளிக்கவசம் 10.4 கிலோ எடை கொண்டது.

    ஒன்றரை கோடி தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை.
    • தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக, அரசு ஊழியர்களின் நண்பன் என்று சொல்லிக் கொண்டு அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் செயலை மேற்கொண்டு வருகிறது.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எந்த தேதியில் இருந்து அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதே தேதியில் இருந்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. ஆனால், தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக, அரசு ஊழியர்களின் நண்பன் என்று சொல்லிக் கொண்டு அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் செயலை மேற்கொண்டு வருகிறது. தற்போது, 01-07-2022 முதல் மேலும் 4 சதவீத அகவிலைப்படி உயர்வை, அதாவது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்து ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ள நிலையில், வழக்கம்போல் தி.மு.க. அரசு வாய்மூடி மவுனியாக உள்ளது.

    எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 4 சதவீத அகவிலைப்படி உயர்வை, அதாவது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக 01-07-2022 முதல் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், தொடர்ந்து காலம் தாழ்த்தி வழங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அ.தி.மு.க. என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி.
    • கட்சியை சிலர் கைப்பற்றும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் கோவை மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    இந்த கூட்டத்துக்கு கோவை செல்வராஜ் தலைமை வகித்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    அ.தி.மு.க.வில் சாமானிய தொண்டனும் கட்சி தலைமை பதவிக்கு வர வேண்டும் என்ற வகையில்தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சட்ட விதிகளை உருவாக்கினர்.

    ஆனால் தற்போதுள்ள நிர்வாகிகள் இதனை தங்கள் சுயநலத்துக்காக திருத்தி மாற்றியுள்ளனர். இதனை அ.தி.மு.க. நிர்வாகிகள் நன்கு புரிந்து வருகிறார்கள். புதிய சட்ட விதிகளை உருவாக்கியதால் மிட்டாமிராசுதார்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் மட்டுமே தலைமைப் பதவிக்கு வர முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை அ.தி.மு.க. தொண்டர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அ.தி.மு.க. என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. இந்த கட்சியை சிலர் கைப்பற்றும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.

    உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றுபட்டு இதனை மாற்றுவோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வகுத்த நேர் வழிப்பாதையில் செல்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உதயநிதி ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொள்கிறார்.
    • கள்ளக்குறச்சியில் தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

    பொது வாழ்க்கையில் மட்டுமல்ல குடும்ப வாழ்க்கையிலும் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். போல் இருக்க கூடாது என்ற ரீதியில் உதயநிதி ஸ்டாலின் பேசியது கலகலப்பை ஏற்படுத்தியது. உதயநிதி ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொள்கிறார்.

    அந்த வகையில் கள்ளக்குறச்சியில் தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது மணமக்களை வாழ்த்தி உதயநிதி ஸ்டாலின் பேசிய போது, "மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியதோடு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். போல் இருந்து விடாதீர்கள்" என்று உதாரணம் காட்டியது மண்டபத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

    • அ.தி.மு.க. தலைமையில் தான் பிரச்சனை என்கிற மாயத்தோற்றம் உருவாகி உள்ளது.
    • அ.தி.மு.க உடன் கூட்டணி வைக்க தயார் என்கிற டி.டி.வி தினகரனின் கருத்து நல்ல கருத்து இதை வரவேற்கிறோம்.

    திருச்சி:

    அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அரசு கொறடா துரை.கோவிந்தராஜன் தஞ்சையில் காலமானார். அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.

    விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வை பொறுத்தவரை எம்.ஜி.ஆர். தொண்டர்களுகாக இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். இதை நான் ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன். தொண்டர்களின் நலனுக்கான இந்த இயக்கத்தின் 50 ஆண்டு பரிணாம வளர்ச்சிதான் இப்போது இருக்கிறது.

    தொண்டர்களை எந்த நேரத்திலும் பிளவுப்படுத்தி பார்க்க முடியாத வகையில் தான் நிலைத்து நிற்கிறது. அ.தி.மு.க.வில் எந்தவித சிறுசேதமும் இல்லை, சிறு சிறு பிரச்சினைகள் இடையில் வரும் அது சரியாக போய்விடும். அனைத்து தொண்டர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

    அ.தி.மு.க. தலைமையில் தான் பிரச்சனை என்கிற மாயத்தோற்றம் உருவாகி உள்ளது. அது போக போக சரியாகி விடும். தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம்.

    அ.தி.மு.க. உடன் கூட்டணி வைக்க தயார் என்கிற டி.டி.வி.தினகரனின் கருத்து நல்ல கருத்து இதை வரவேற்கிறோம். வாய்ப்பு ஏற்பட்டால் அவரை சந்திப்பேன். தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் அண்ணன் தம்பி இயக்கம் தான் ஆனால் மாறுபட்ட பாதையில் பயணித்து கொண்டு இருக்கிறோம். எங்கள் பாதை எம்.ஜி.ஆர். காட்டி தந்த பாதை அதில் பயணிக்கிறோம்.

    அ.தி.மு.க. இடத்தை பா.ஜ.க. பிடிக்க பார்க்கிறது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அ.தி.மு.க.வின் ஒற்றுமையை பா.ஜ.க. குலைக்கவில்லை. அ.தி.மு.க.வை யாராலும் மிரட்ட முடியாது.

    அ.தி.மு.க. தொண்டர்களை யாராலும் பிளவுபடுத்தி பார்க்க முடியாது, அது நடக்காது. பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம்.

    எங்களை பொறுத்தவரை ஜனநாயக ரீதியில் இயக்கம் செயல்பட வேண்டும், வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். அதைதான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எந்த நோக்கத்திற்காக அ.தி.மு.க. சட்ட விதியை எம்.ஜி.ஆர் உருவாக்கினாரோ அதில் சின்ன மாசோ, பங்கமோ ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இந்த தர்ம யுத்தத்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. பற்றி பேசினால் தான் மக்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது.
    • தி.மு.க.வை பற்றி பேசினால் யாரும் கண்டு கொள்வதில்லை என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. சேலம் புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    பூத்துக்கு 25 பேர் வீதம் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 7500 பேர் நியமிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உறுப்பினரின் செயல்பாடு அ.தி.மு.க. ஆட்சி அமைக்க ஏதுவாக இருக்கும்.

    325 பூத்-ல் ஒரு ஓட்டு குறையும் என்றால் 325 ஓட்டு குறையும். ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியம். புதிதாக நமக்கு சாதகமானவர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். உண்மையாக பாடுபட வேண்டும். அது தான் நிரந்தரம் ஐஎஸ்ஐ என்று ஒரு முத்திரை நல்ல பொருள் என்று அர்த்தம் . அது போல் அ.தி.மு.க. என்றால் ஐஎஸ்ஐ முத்திரை மாதிரி இருக்க வேண்டும்.

    2500 பேர் பொதுக்குழுவில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி ஓ.பி.எஸ்-ஐ நீக்கினோம். உச்சநீதிமன்ற நீதிபதி பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளில் தலையிட முடியாது என்று கூறியுள்ளார்.

    சட்ட விதிகளின்படி 2500 உறுப்பினர்கள் சேர்ந்து முடிவு எடுத்தது. இதில் அவர்கள் இணைவதற்கு எந்த ஒரு வாய்ப்பும் கிடையவே கிடையாது. எம்.ஜி.ஆரால் ஏற்படுத்தப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு நடைபெற்றது. அதில் போடப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும். செல்லாத நோட்டை பற்றி ஏன் நான் பேச வேண்டும்.

    அ.தி.மு.க. பற்றி பேசினால் தான் மக்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது. தி.மு.க.வை பற்றி பேசினால் யாரும் கண்டு கொள்வதில்லை என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது

    திமுக ஆட்சி எப்போது போகும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். அரசு ஊழியர்கள் எப்பொழுதும் திமுகவுக்கு சாதகமாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் இப்பொழுது திமுக அரசை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

    சேலம் மாவட்டத்தில் நாம் கொண்டு வந்த திட்டத்தை தவிர வேறு திட்டம் ஏதாவது திமுக ஆட்சியில் கொண்டு வந்திருக்கிறார்களா?

    7.5% இடஒதுக்கீடு, மருத்துவமனை, தார் சாலைகள், மேம்பாலம், ஏழை பொதுமக்களுக்கு செய்யப்பட்ட உதவிகள் சேலம் மாவட்டத்தில் காலத்தால் அழியாதவை. அதனால் தான் சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை நாம் கைப்பற்றினோம். திமுக தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கலாம். ஆனால் சேலம் மாவட்டத்தில் ஆளுகின்ற கட்சி அதிமுக தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அ.தி.மு.க. நிர்வாக வசதியை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
    • கோ. சுரேஷ்பாபு-திருப்பத்தூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் (ஆம்பூர், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிகள்).

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. நிர்வாக வசதியை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

    இதன் அடிப்படையில், அ.தி.மு.க. திருப்பத்தூர் வடக்கு மற்றும் திருப்பத்தூர் தெற்கு மாவட்டக் கழக செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

    கோ. சுரேஷ்பாபு-திருப்பத்தூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் (ஆம்பூர், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிகள்). டைகர் என்.எஸ்.கே. இளங்கோவன்-திருப்பத்தூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் (திருப்பத்தூர், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிகள்). கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போராட்டக் களத்தில் உள்ள மருத்துவர்களை நேரில் சென்று சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
    • ஆதரவு தெரிவித்ததோடு நின்றுவிடாமல், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதத்தையும் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் தெரிவித்தார்.

    சென்னை:

    ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேர்தல் வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணான வகையில் சொத்து வரியை உயர்த்திய தி.மு.க. அரசு, மின்சார கட்டணத்தை உயர்த்திய தி.மு.க. அரசு பால் மற்றும் பால் பொருட்களின் விலையை உயர்த்திய தி.மு.க. அரசு, தற்போது அரசு மருத்துவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததோடு மட்டுமல்லாமல் அவர்களை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது.

    தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2019-ம் ஆண்டு காலவரையற்ற போராட்டம் நடத்தியபோது, சில மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் மேற்கொண்டனர்.

    அப்போது, போராட்டக் களத்தில் உள்ள மருத்துவர்களை நேரில் சென்று சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    ஆதரவு தெரிவித்ததோடு நின்றுவிடாமல், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதத்தையும் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் தெரிவித்தார்.

    அவர்களுடைய கோரிக்கையே முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில், 2009-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 354-ஐ அமல்படுத்த வேண்டும் என்பதுதான். இதைக்கூட தி.மு.க. அரசிற்கு நிறைவேற்ற மனமில்லை. மாறாக, பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

    போராட்டக் குழுவின் நிர்வாகிகள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. போராடுவது அவர்களது உரிமை, கடமை என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வீரவசனம் பேசிவிட்டு, முதல்-அமைச்சராக வந்தவுடன் போராடுபவர்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுவது நியாயமா என்பதை முதல்-அமைச்சர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    இதற்குப் பெயர்தான் "சொன்னதை செய்வோம்" என்பதா? தி.மு.க. அரசின் இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பும், இருப்பிடமும் பறிபோவதை ஒருநாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
    • தி.மு.க. அரசின் தோட்டத் தொழிலாளர் விரோதக் கொள்கைக்கு அ.தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கிக் கொண்டிருக்கும் டான்டீ நிறுவனத்தின் நிலத்தை பறித்து, அந்தப் பகுதி இயற்கை வனமாக மாற்றப்படும் என்று அமைச்சர் கூறுவது தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதற்குச் சமம். ஒரு வேளை அந்தப் பகுதி இயற்கை வனமாக மாற்றப்பட வேண்டுமென்றால், அங்குள்ள தொழிலாளர்களை வைத்தே அதை இயற்கை வனமாக மாற்றுவதும், அவர்களை அங்கேயே தங்க வைக்க வழிவகை செய்வதும் தான் பொருத்தமாக இருக்கும். இதைவிட்டு விட்டு தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புவது என்பது இயற்கை நியதிக்கு மாறானது. அவர்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

    தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பும், இருப்பிடமும் பறிபோவதை ஒருநாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களை வேலையை விட்டு அனுப்புவது என்பதும், இருப்பிடங்களை காலி செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவதும் அவர்களை நாடு கடத்துவதற்கு சமம். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தி.மு.க. அரசின் தோட்டத் தொழிலாளர் விரோதக் கொள்கைக்கு அ.தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, டான்டீ நிறுவனத்தின் 2,152 ஹெக்டேர் நிலத்தை வனத்துறைக்கு ஒப்படைக்கும்படி பிறப்பித்த ஆணையை உடனடியாக ரத்து செய்து, தேயிலைத்தோட்டக் கழகத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க ஆட்சியில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் வாக்காளர் முகவர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது,

    தமிழகத்தில் தி.மு.க ஆட்சி எப்படி இருக்கிறது என்பதற்கு தொடர்ந்து உயர்ந்துவரும் விலைவாசி உயர்வை வைத்தே மக்கள் தெரிந்து கொண்டு விட்டனர். ஆவின்பால் விலையை லிட்டருக்கு ரூ.12 வரை உயர்த்திவிட்டனர். மின்சார கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி போன்ற அனைத்தையும் உயர்த்திவிட்டனர்.

    தி.மு.கவுக்கு வாக்களித்த மக்களும், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் நல்லாட்சி நடக்கிறது என்று தி.மு.கவினர் கூறிவருகின்றனர். மழைநீரே இல்லை என்று அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனால் சென்னை மழைநீரில் தத்தளிக்கிறது. ஆனால் அ.தி.மு.க. 4ஆக உடைந்துவிட்டது. இவர்கள் ஒன்றுசேர்ந்தால்தான் வெற்றிபெற முடியும் என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.

    இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.கவின் 71 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மாவட்ட செயலாளர்கள் 70 பேர் உள்ளனர். 2500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர் உள்ளனர். தி.மு.க ஆட்சியின் அவலத்தை மக்கள் தற்போது நன்றாக உணர்ந்து உள்ளனர். எனவே பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    அடுத்த முதல்வராக எடப்பாடி பழனிசாமி வருவது உறுதி. இதற்காக அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று அவர் தெரித்தார். இந்த கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அபார வெற்றிபெறும். இந்த கூட்டணியில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோருக்கு இடமில்லை. அவர்கள் வருவதால் அ.தி.மு.கவுக்கு எந்த லாபமும் இல்லை. தி.மு.க ஆட்சியில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களை கைது செய்யும் போலீசாரை ஆளும்கட்சியினர் மிரட்டி வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பான சிறப்பு முகாம்களில் கட்சி நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளி, அபிராமி கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.ஜனதா தலைவர்கள் நிர்பந்திப்பது எடப்பாடி பழனிசாமிக்கு பிடிக்கவில்லை.
    • கடந்த வாரம் சென்னைக்கு வந்த மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திப்பதையும் தவிர்த்து விட்டார்.

    சென்னை:

    அ.தி.மு.க.-பாரதிய ஜனதா கூட்டணி நீடித்தாலும் இரு கட்சிகளிடையேயும் உரசலும், சலசலப்பும் தொடங்கி இருக்கிறது.

    2024 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணியை உருவாக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

    இதற்கு அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைய வேண்டும் என்று பா.ஜனதா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக டெல்லி மேலிட தலைவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு நிர்பந்தம் கொடுத்து வருகிறார்கள்.

    ஒற்றைத் தலைமை பிரச்சினை இன்னும் முடிவுக்கு வராததால் ஓ.பன்னீர் செல்வம் பா.ஜனதா தலைவர்களுடன் இருக்கும் நெருக்கத்தின் காரணமாக தன்னை அ.தி.மு.க.வில் இணைப்பதற்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

    ஆனால் அதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறி விட்டார்.

    மேலும் அ.தி.மு.க. என்றால் நான்தான். என்னிடம் தான் கட்சி ரீதியான தொடர்புகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி விட்டார். இதுபற்றி டெல்லி பா.ஜனதா தலைவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டது.

    அதன் பிறகும் பா.ஜனதா தலைவர்கள் நிர்பந்திப்பது எடப்பாடி பழனிசாமிக்கு பிடிக்கவில்லை. இதனால் கடந்த வாரம் சென்னைக்கு வந்த மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திப்பதையும் தவிர்த்து விட்டார்.

    இதுபற்றி எடப்பாடி பழனிசாமியிடம் கேட்ட போது, பா.ஜனதா ஒரு தேசிய கட்சி. அதன் தலைவர்கள் வரும் போதெல்லாம் சந்திக்க அவசியமில்லை. பிரதமர் மோடி வருகையின் போது எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் வரவேற்க சென்றேன் என்றார்.

    இந்த உரசல் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை இருந்தால் மட்டுமே தி.மு.க.வை எதிர்க்க முடியும். எங்களுக்கும் பா.ஜனதாவுக்கும் இடையே கூட்டணியில் எந்த சிக்கலும் இதுவரை இல்லை. தேவையில்லாமல் நெருக்கடி கொடுத்தால் கூட்டணிதான் உடையும்.

    எங்களை பொறுத்தவரை 2024 பாராளுமன்ற தேர்தல் ஒரு பொருட்டே இல்லை. எங்கள் குறிக்கோள் 2026 சட்டசபை தேர்தல்தான்.

    கழகம் இத்தனை ஆண்டுகளில் எவ்வளவோ ஏற்ற இறக்கங்களையும், சோதனைகளையும் சந்தித்து விட்டது. எனவே எத்தகைய நெருக்கடிகளையும் சந்திக்கும் வல்லமை கட்சிக்கு உண்டு.

    எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் வலிமையான தலைவராக இருக்கிறார். எத்தகைய சவால்களையும் அவர் சந்திப்பார் என்றார்கள்.

    கூட்டணியை பற்றி கவலை இல்லை என்பதற்காகத்தான் எடப்பாடி பழனிசாமி பா.ஜனதாவுக்கு இந்த அதிர்ச்சி வைத்தியத்தை அளித்துள்ளார். அடுத்து பா.ஜனதா தலைவர்களின் அணுகுமுறையை பொறுத்துதான் இந்த கூட்டணியின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்கிறார்கள்.

    • தமிழகம் முழுவதும் அ.தி.மு.க ஒன்றுபட்ட இயக்கமாக மாறவேண்டும் என தொண்டர்கள் விரும்பி வருகின்றனர்.
    • எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முட்டுகட்டையாக உள்ளனர்.

    பெரியகுளம்:

    அ.தி.மு.கவில் ஒற்றை தலைமை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் ஓ.பி.எஸ், சசிகலா, டி.டி.வி தினகரன் ஆகியோருக்கு இடமில்லை என உறுதியாக தெரிவித்துவிட்டார். இருந்தபோதும் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு மாவட்டங்களில் தனக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ள நிர்வாகிகளை மாவட்ட செயலாளர் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் நியமித்து வருகிறார்.

    இந்த நிர்வாகிகள் மூலம் விரைவில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றும், ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதனைதொடர்ந்து மாவட்டம் முழுவதும் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார். குறிப்பாக கொங்குமண்டலத்தில் உள்ள மாவட்ட நிர்வாகிகளை தனித்தனியாக தனது பண்ணை வீட்டில் சந்திக்க முடிவு செய்துள்ளார். அதன்படி இன்று திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளான ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சண்முகம், தாராபுரம் நகர செயலாளர் காமராஜ், மாவட்ட துணைச்செயலாளர் கனிஷ்கா சிவக்குமார் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் பெரியகுளத்திற்கு வந்தனர். அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க ஒன்றுபட்ட இயக்கமாக மாறவேண்டும் என தொண்டர்கள் விரும்பி வருகின்றனர். ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முட்டுகட்டையாக உள்ளனர். எனவே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் கட்சியை பலப்படுத்தி மீண்டும் அ.தி.மு.க ஆட்சியை அமைக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக மாவட்டந்தோறும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதனைதொடர்ந்து கட்சியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும்.

    தற்போது ஒற்றை தலைமை குறித்த வழக்கு விசாரணையில் உள்ளதால் அதன் முடிவை பொறுத்து எங்கள் தலைமையில் அ.தி.மு.க தொண்டர்களை ஒன்றிணைத்து தேர்தலை சந்தித்து வெற்றிபெறுவோம் என்றனர்.

    ×