என் மலர்
நீங்கள் தேடியது "Case"
- குடும்ப நல நீதிமன்ற வழக்கு என 700 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 520 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.
- தீர்வு காணப்பட்டவர்களுக்கு ரூ.8 கோடியே 59 லட்சத்து 96 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட சட்ட பணிகள் குழு சார்பில் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் சார்பில் (லோக் அதாலத்) நடை பெற்றது.
மாவட்ட நீதிபதி எம். இளங்கோவன் தலைமை தாங்கினார்.இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, வங்கி வாரா கடன் வழக்கு, காசோலை வழக்கு, நிலம் சம்பந்தப்பட்ட வழக்கு, குடும்ப நல நீதிமன்ற வழக்கு என 700 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 520 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.
தீர்வு காணப்பட்டவர்களுக்கு ரூ.8 கோடியே 59 லட்சத்து 96 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. இதில் மாவட்ட தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம், வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் நீதிபதி திருஞானசம்பந்தம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்வரி, கூடுதல் உரிமையியல் நீதிபதி சரண்யா செல்வம், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வாசுதேவன், வக்கீல்கள் சங்கத் தலைவர் ரமேஷ், செயலாளர் ஹரிகரன் வழக்கறிஞர் சங்கத் தலைவர் டி கார்த்திகேயன் செயலாளர் கார்த்திகேயன் அட்வகேட் சங்க தலைவர் ஜான், செயலாளர் துரை முருகன் அரசு வழக்கறிஞர்கள் பி. கார்த்திகேயன் சத்தியமூர்த்தி கலந்து கொண்டனர்.
- அவரது அண்ணன் குணசேகரன் என்பவர் ஆள்மாறாட்டம் செய்து ஆஜராகி வந்துள்ளார்.
- அசோக் வெளிநாடு சென்றுள்ளதும் அவருக்கு பதிலாக அண்ணன் குணசேகரன் ஆஜரானதும் தெரிய வந்தது.
சீர்காழி:
சீர்காழி அருகே திருமுல்லை வாசல் பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இந்த விபத்தில் மோட்டார்சைக்கி ளில் எதிரே வந்தவர் இறந்து விட்டார்.
இது தொடர்பாக சீர்காழி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக வழுதலைக்குடி பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவர் சீர்காழி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். ஆனால் அவருக்கு பதிலாக அவரது அண்ணன் குணசேகரன் (வயது 43) என்பவர் ஆள்மாறாட்டம் செய்து ஆஜராகி வந்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் வந்ததின் அடிப்படையில் ஆள் மாறாட்டம் செய்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வழுதலைக்குடி பகுதியை சேர்ந்த அசோக் வெளிநாடு சென்றுள்ளதும் அவருக்கு பதிலாக அண்ணன் குணசேகரன் நீதிமன்றத்தில் ஆஜரானதும் உண்மை என தெரிய வந்தது.
அதனை அடுத்து அண்ணன் குணசேகரனை கைது செய்து அதற்கு துணை போன வக்கீல் குமாஸ்தா திருஞானம் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இரவு 8 மணிக்கு மேல் பட்டாசு கடை வைத்து பட்டாசு விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- நீதிமன்ற உத்தரவை மீறி நேரம் கடந்து பட்டாசு வெடித்த 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தருமபுரி;
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பட்டாசு வெடிக்க கால நிர்ணயம் வகுத்து உத்தரவிட்டது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையும் ஒதுக்கப்பட்டது.
அதனை மீறி தருமபுரி மாவட்டத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதில் தருமபுரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தருமபுரி பஸ் நிலையம், ஆறுமுக ஆச்சாரி தெரு, முகமது அலி கிளப் ரோடு, தருமபுரி நான்கு ரோடு ஆகிய பகுதிகளில், பட்டாசு வெடித்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் தொப்பூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கோம்பை செல்லும் பாளையம்புதூர் ஜங்ஷன் செல்லும் வழியில் அதிக சத்தத்துடன் பட்டாசு வெடித்த ஒருவர் மீதும், மொரப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மொரப்பூர் ரெயில் நிலையம் செல்லும் வழியில் இரவு 8 மணிக்கு மேல் பட்டாசு கடை வைத்து பட்டாசு விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் பாப்பாரப்பட்டி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகிலும், பென்னாகரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பென்னாகரம் கடைவீதி பகுதியிலும், ஏரியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஏரியூர் நிப்பான் பெயிண்ட் கடை அருகிலும், நீதிமன்ற உத்தரவை மீறி நேரம் கடந்து பட்டாசு வெடித்த 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- தனது காலில் ஏற்பட்ட பாதிப்புக் காக ஆம்புலன்சில் சென்றதாக தெரிவித்தார்.
- அந்த பாதை வழியாக விழா நடக்கும் இடத்துக்கு அமைச்சர்கள் கூட வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
கேரள மாநிலம் திரிச்சூர் பூரம் திருவிழாவிற்கு பாஜக மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி ஆம்புலன்சில் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதை முதலில் மறுத்த அவர், பின்னர் தனது காலில் ஏற்பட்ட பாதிப்புக்காக ஆம்புலன்சில் சென்றதாக தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு தலைவர் திருச்சூர் கிழக்கு போலீசில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் சுரேஷ் கோபி மீது திருச்சூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்) திருச்சூர் பூரம் நிகழ்வின் போது நடிகர் சுரேஷ் கோபி ஆம்புலன்சை தவறாகப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஆம்புலன்ஸ்களுக்கான வழித்தடங்களும் முன்பே முடிவு செய்யப்பட்டிருந்தது. அந்த பாதை வழியாக விழா நடக்கும் இடத்துக்கு அமைச்சர்கள் கூட வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
ஆனால் இந்த விதிமுறைகளை சுரேஷ் கோபி மீறி வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டி, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- துபாயில் கலாவதி தனது பெயரில் ஒரு நிறுவனம் தொடங்க லைசன்ஸ் எடுக்க முயற்சித்தார்.
- பாதிக்கப்பட்ட கலாவதி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் முசிறி பார்வதிபுரம் அழகுபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கலாவதி (வயது 40) பெயர் மாற்றப்பட்டுள்ளது.
பிஎஸ்சி பட்டதாரியான இவருக்கு திருமணமாகி பின்னர் கடந்த 2012ல் விவாகரத்து ஆனது. இவர் வயலூர் பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்தார்.
அப்போது நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் இலங்கையை சேர்ந்த இளங்கோ என்கிற ஜானி என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது.
பின்னர் துபாயில் கலாவதி தனது பெயரில் ஒரு நிறுவனம் தொடங்க லைசன்ஸ் எடுக்க முயற்சித்தார். இதற்காக இளங்கோவை அழைத்து உள்ளார். கடந்த ஆகஸ்ட் 27, 28 ஆகிய இரண்டு நாட்கள் துபாயில் இருந்தார். அப்போது அவர் உடை மாற்றுவதையும் குளிப்பதையும் இளங்கோ வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அதை வைத்து இளங்கோ அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கலாவதி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அதில் நான் தற்போது ஈரோட்டை சேர்ந்த ஜீவா என்பவரை மறுமணம் செய்து முசிறியில் வசித்து வருகிறேன். என் கணவரை விட்டு பிரிந்து லண்டனுக்கு வந்து விட வேண்டும். இல்லாவிட்டால் எனது நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்திலும் நாம் தமிழர் குழுவிலும் பதிவேற்றம் செய்து விடுவேன் என இளங்கோ மிரட்டி வருகிறார்.
தற்போது லண்டனில் வசித்து வரும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். போலீசார் இளங்கோ மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாய் குட்டிகள் இரவு நேரங்களிலும் தொடர்ந்து குரைத்ததால் அப்பகுதியை சேர்ந்த 2 பெண்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
- 2 பேரும் 5 நாய்க்குட்டிகள் மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துள்ளனர்.
மீரட்:
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட்டின் கன்கர்கெடா பகுதியில் தெரு நாய் ஒன்று சமீபத்தில் 5 நாய் குட்டிகளை ஈன்றது.
இந்நிலையில் அந்த நாய் குட்டிகள் இரவு நேரங்களிலும் தொடர்ந்து குரைத்ததால் அப்பகுதியை சேர்ந்த ஷோபா, ஆர்த்தி என்ற 2 பெண்கள் ஆத்திரமடைந்துள்ளனர். சம்பவத்தன்று ஷோபா, ஆர்த்தி ஆகிய 2 பேரும் 5 நாய்க்குட்டிகள் மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துள்ளனர்.
இதுகுறித்து விலங்குகள் நல அமைப்பின் நிர்வாகியான அன்சுமாலி வசிஷ்த் அளித்த புகாரின் அடிப்படையில் ஷோபா, ஆர்த்தி ஆகியோர் மீது விலங்குகள் வகை தடுப்பு சட்டப்பிரிவு 325-ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஐகோர்ட், காமராஜ் கொலை வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்கும்படி மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
- ஆனந்த், கார்த்திக் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
மதுரை:
மறைந்த முன்னாள் மத்திய மந்திரி எழில்மலையின் மருமகனும், பிரபல வக்கீலுமாக இருந்தவர் காமராஜ். இவரை கடந்த 2014-ம் ஆண்டு சென்னை ஓட்டேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து ஒரு கும்பல் படுகொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து சென்னை கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்பனா, கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலரை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த கோர்ட்டு, காமராஜ் கொலை வழக்கை மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில், இந்த வழக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை விரைந்து விசாரணை நடத்தி உரிய தீர்ப்பு வழங்க வேண்டும் என கடந்த 2021 ஆம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த ஐகோர்ட், காமராஜ் கொலை வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்கும்படி மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு உத்தரவிட்டது. ஆனாலும் இதுவரை அந்த வழக்கு நிலுவையில் வைக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே 9 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள அந்த வழக்கை விசாரித்து முடிக்க கெடு விதிக்கும்படி கொலையுண்ட காமராஜின் சகோதரி மேரி தேன்மொழி, மதுரை ஐகோர்ட்டில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், காமராஜ் கொலை வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு விட்டது. இன்று (19-ந்தேதி) அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட முதன்மை நீதிபதி சிவ கடாட்சம் இந்த வழக்கில் கைதான கல்பனா என்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். ஆனந்த், கார்த்திக் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
- தாக்குதல் நடத்தப்பட்டு பெண் வருவாய் ஆய்வாளர் அனிதா செல்போன் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- வி.சி.க.வினர் 21 பேர் மீது சத்திரப்பட்டி போலீசார் 8 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை:
மதுரை வடக்கு தாலுகாவுக்கு உட்பட்ட கிழக்கு சட்டமன்ற தொகுதி வெளிச்சநத்தம் கிராமத்தில் கடந்த 7-ந்தேதி வி.சி.க. தலைவர் திருமாவளவன் கொடியேற்றுவதற்காக, ஏற்கனவே இருந்த 25 அடி உயர கொடி கம்பத்தை அகற்றிவிட்டு, அனுமதியின்றி கூடுதல் உயரமுள்ள 45 அடி உயர கொடிக்கம்பத்தை கட்சியினர் நிறுவியுள்ளனர்.
இதனை அகற்றுமாறு வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் அறிவுறுத்திய போது கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வருவாய்த்துறை அலுவலர்கள் ராஜேஷ் மற்றும் பரமசிவம், பழனியாண்டி ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு பெண் வருவாய் ஆய்வாளர் அனிதா செல்போன் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் வருவாய்த்துறை அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாக வி.சி.க.வினர் 21 பேர் மீது சத்திரப்பட்டி போலீசார் 8 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- போலி ஐ.டி. உருவாக்கிய மாணவரை பழி தீர்க்க திட்டமிட்டார்.
- நீதிபதியின் உத்தரவின் பேரில் அரியாங் குப்பம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் மாணவனை அடைத்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மூலக்குளம் அருகே உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 வகுப்பு படிக்கும் மாணவர்கள் இரு கோஷ்டிகளாக செயல்பட்டுள்ளனர். இதில் ஒரு தரப்பு மாணவன், மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்துள்ளார்.
இதையறிந்த மற்றொரு தரப்பினர் மாணவி பெயரில் போலி சமூகவலைதள ஐ.டி. உருவாக்கி, மாணவருக்கு மாணவி அனுப்புவதுபோல குறுஞ்செய்தி அனுப்பி வந்தனர். அந்த மாணவரும், தான் காதலிக்கும் மாணவி தான் குறுஞ்செய்தி அனுப்புவதாக நினைத்து மெசேஜ் மூலம் பேசி வந்தார்.
ஒரு கட்டத்தில், இனிமேல் என்னிடம் பேச வேண்டாம் என மாணவி போல அந்த தரப்பினர் மெசேஜ் செய்தனர். அப்போது தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த மாணவன் ஆவேச மடைந்தார். போலி ஐ.டி. உருவாக்கிய மாணவரை பழி தீர்க்க திட்டமிட்டார்.
நேற்று முன்தினம் வகுப்பறையில் அந்த மாணவனை கத்தியால் குத்தினார். அப்போது அவரது பையில் 6 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் தரப்பிலோ, பாதிக்கப்பட்ட மாணவர், பெற்றோர் தரப்பிலோ புகார் தரவில்லை. இருப்பினும் ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் பள்ளி நிர்வாகத்தின் அறிக்கையை பெற்று ஆயுதங்களால் தாக்குவது மற்றும், வெடிகுண்டு வைத்திருந்தல் என்ற 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார்.
மாணவரை கைது செய்து சிறுவர் நீதிமன்ற நீதிபதி ரமேஷ் முன்பு ஆஜர்படுத்தினார். நீதிபதியின் உத்தரவின் பேரில் அரியாங் குப்பம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் மாணவனை அடைத்தனர்.
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி அந்த பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினார். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேடடு நோட்டீஸ் அளித்துள்ளார்.