என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள்"

    • 7 மாவட்ட விவசாய சங்க நிர்வாகிகள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    • டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை.

    தஞ்சாவூர்:

    காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.

    தஞ்சை மாவட்ட தலைவர் செந்தில்குமார் வரவேற்றார்.

    மாநில பொதுச் செயலாளர்கள் சாமி. நடராஜன் , மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனிராஜன், சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை மதிவாணன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் சங்கர், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில நிர்வாகிகள் முஹம்மது அலி, சுப்பிரமணியன், பன்னீர்செல்வம், மாதவன், துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் வீர. மோகன் நன்றி கூறினார்.

    கூட்டத்தின் முடிவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூரில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்பட 7 மாவட்டங்களில் இருந்து விவசாய சங்க நிர்வாகிகள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாட்டிலே குறிப்பாக காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

    பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்கும் அறிவிப்பை வெளியிட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன.

    உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினார்.

    மேலும் பிரதமருக்கு கடிதம் எழுதினார். முதலமைச்சரின் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

    நேற்றைய தினம் டெல்டாவிலிருந்து நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை திரும்பப் பெறுவதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் டுவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டது.

    அதாவது வாக்குறுதி மட்டுமே கொடுத்துள்ளார்கள். ரத்து செய்வோம் என்கிற அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

    இதனை முழுமையாக நம்ப முடியாது. ஏனென்றால் டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கொடுத்துள்ள எழுத்துப்பூர்வ மான வாக்குறுதிகளை மத்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.

    அதுபோல் நிலக்கரி சுரங்கம் ரத்து என்கிற வாக்குறுதி ஆகி விடுமோ என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது. இதனால் மத்திய பா.ஜ.க.வின் வாக்குறுதிகளை நம்ப மாட்டோம்.

    எனவே இந்த மாத இறுதிக்குள் நிலக்கரி சுரங்கம் அமைப்பது ரத்து என்ற அறிவிப்பை அதிகாரபூர்வமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

    அப்படி இல்லை என்றால் மே மாதம் முதல் வாரத்தில் மீண்டும் காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தி மத்திய அரசுக்கு எதிரான வலுவான போராட்டங்களை முன்னெடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேன் எடுக்கும் முறை பற்றி விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
    • விவசாயிகள் குறைந்த செலவில் அதிகம் லாபம் பெற முடிகிறது என்று விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் கிராமத்தில் திருவாரூர் வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) விஜயலட்சுமி ஆணைப்படி, வட்டார குழு அமைப்பாளர் வேளாண்மை உதவி இயக்குனர் முத்துப்பேட்டை சாமிநாதன் உத்தரவின்படி தேனீ வளர்ப்பு செயல் விளக்கம் நடைபெற்றது.

    விவசாய ஆலோசனை குழு தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமை தாங்கினர். இதில் தேனீ பூச்சிகளோடு கலந்த பெட்டிகள் கூடுதலான பெட்டிகள், தேன் எடுக்கும் கருவிகள், மூலம் தேன் எடுக்கும் முறை பற்றியும் விவ சாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    மேலும் வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுரேஷ்குமார் கூறுகையில் தென்னை, வாழை, மாமரங்கள், பழ மரங்கள் காய்கறி செடிகள், பூச்செடிகள் போன்றவைகள் இருப்பதன் மூலம் தேனிகளால் மகரந்த சேர்க்கை நடைபெற்று அதன் மூலம் அதிகமாக மகசூல் பெற முடிகிறது அதுமட்டுமின்றி தேன் அதிகளவில் பெறவும் ஊட்டச்சத்து மிகுதியாக காணப்படுகிறது.

    இதனால் விவசாயிகள் இதனால் விவசாயிகள் குறைந்த செலவில் அதிகம் லாபம் பெற முடிகிறது என்று விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.

    மேலும் விவசாயிகள் கூறுகையில்:-

    தேனீ வளர்ப்பு குறித்து தொழில்நுட்ப செயல் விளக்கத்தின் போது இது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை முத்துப்பேட்டை வட்டார விவசாயிகளுக்கு அட்மா திட்ட தொழில்நுட்பங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றும் இடும்பாவனம் கிராம விவசாயிகள் கூறினர்.

    • பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது.
    • மழை காலங்களில் நெல்லை காயவைக்க முடியாமல் விவசாயிகளுக்கு பாதிப்பு நிலை ஏற்படுகிறது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், சாலியமங்களம் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 2500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.

    இங்கு குறுவை, சம்பா மற்றும் கோடை விவசாயம் என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

    இங்கு விளைவிக்ககூடிய நெல்லை உலர்த்த உலர் களம் வசதி இல்லைஅரசு கொள்முதல் நிலையத்தில் போதுமான இடவசதியோ அல்லது களம் வசதியோ இல்லாததால் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை அருகே உள்ள நெடுஞ்சாலையில் கொட்டி வைத்து தினசரி உலர்த்தி வருகின்றனர்.

    நெடுஞ்சாலையில் நெல் உலர்த்துவதால்வாகன போக்குவரத்துக்கு இடையூறாக ஏற்படுவதோடு, நெல் உலர்த்தும் பணியில் ஈடுபடும் தொழிளாளர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது.

    விவசாயிகளுக்கு நெல் உலர்த்த உலர் களம் அமைத்து தந்தால் பயன்உள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து சாலியமங்களம் பகுதியை சேர்ந்த விவசாயி கூறியதாவது:-

    சாலியமங்களம் பகுதியில் 2500 ஏக்கருக்கும் மேலாக விவசாய நிலங்கள் உள்ளன இங்கு விளைய கூடிய நெல்லை காயவைக்க உலர் களம் இல்லைஅரசு கொள்முதல் நிலையத்திலும் நெல்லை காயவைக்க இடவசதி இல்லைநெல்லை நன்கு காயவைத்து எடுத்துசென்றால்தான் அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யமுடியும் மழை காலங்களில் நெல்லை காயவைக்க முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை இருந்து வருகின்றனர்.

    அதனால விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நெடுஞ்சாலைகளில் கொட்டி காய வைக்க வேண்டி உள்ளது. வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தாலும் வேற வழியில்லை நெல்லை உலர்த்த அரசு களம் அமைத்து கொடுத்தால் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • விவசாயிகள் அனைவருக்கும் ஆடிப்பட்ட காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கப்பட்டது.
    • முடிவில் விவசாயி சம்பந்தம் நன்றி கூறினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு தோட்டக்க லைத்துறை அலுவலகத்தில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

    முகாமில் முன்னோடி விவசாயி வேதையன் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.

    இதில் துணை தோட்டக்கலை அலுவலர் செல்வராசு, தோட்டக்கலை துறையினர் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசினார்.

    நிகழ்ச்சியில் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஜெயக்குமார், தீபா, ராமஜெயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் விவசாயி சம்பந்தம் நன்றி கூறினார்.

    இதில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவருக்கும் ஆடிப்பட்ட காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கப்பட்டது.

    • பருவம் தவறிய மழையால் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது.
    • குத்தகை பாக்கி முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள வெண்டையம்பட்டியில் அமைந்துள்ள தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் விவசாயிகள் ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்து வருகின்றனர்.

    குத்தகையை இந்து சமய அறநிலை யத்துறைக்கு செலுத்தி வருகின்றனர்.

    இப்பகுதியில் உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மூலம் ஒருபோக சம்பா சாகுபடி மட்டுமே செய்யப்பட்டு வருகிறது.

    கடந்தாண்டு பருவம் தவறிய மழையால் சாகுபடி கடுமையாக பாதி க்கப்பட்டது.

    நடப்பாண்டும் இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை.

    இச்சூழலை கருத்தில் கொண்டு தற்போது குத்தகை பாக்கியை செலுத்த வலியுறுத்தி அனுப்ப ப்பட்டுள்ள அறிவிப்பு நோட்டீஸை திரும்பப் பெருவதோடு, குத்தகை பாக்கி முழுவதையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் காலங்காலமாக இக்கோவிலின் நிலங்களில் குடியிருந்து வருபவர்களுக்கு குடிமனை பட்டா வழங்கிட வலியுறுத்தியும் வெண்டை யம்பட்டி தான்தோ ன்றீஸ்வரர் கோவில் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தஞ்சை மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் முத்து. உத்திராபதி, மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முகில் ஆகியோர் பேசினர்.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அகரக்கொந்தகை ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • மானிய விலையில் 300 நபர்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் வட்டாரத்தில் 2023-24 ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அகரக்கொந்தகை ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இங்குள்ள விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலமாக 300 நபர்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதன்படி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழரசி பக்கிரிசாமி தலைமையில் உதவி தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் விவசாயிகளுக்கு மானிய விலையில் பழக்கன்றுகளை வழங்கினார்.

    இதில் ஊராட்சி செயலர் பிரேம் குமார்,வார்டு உறுப்பினர் கோவிந்தராஜன் மற்றும் பொதுமக்கள், விவாசயிகள் உடனிருந்தனர்.

    • விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நிவாரணம் வழங்க முன்வர வேண்டும்.
    • அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நிவாரணம் வழங்க முன்வர வேண்டும். கடந்த 2 தினங்களாக மாநிலத்தில் டெல்டா உள்ளிட்ட பல மாவட்டப் பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெல் உட்பட பலவகையான பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்துக்கு உட்படுகிறார்கள். எனவே தமிழக அரசு, மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய விளைப்பொருகளுக்கு நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரூ. 20,000 கொடுக்க முன்வர வேண்டும். மேலும் தொடர்ந்து மழை பெய்யும் என்ற செய்தியால் முன்னெச்சரிக்கை, முன்னேற்பாடு நடவடிக்கைகளில் தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 2024-2025-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • வருடாந்திர நிதியுதவியை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரம் அல்லது ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

    புதுடெல்லி:

    வருகிற 31-ந் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    2024-2025-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூட்டத்தொடரில் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுவார்.

    வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பட்ஜெட்டில் புதிய வரிகள் அதிகம் விதிக்கப்பட வாய்ப்பில்லை எனவும், தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    முக்கியமாக பெண்கள், ஏழைகள், விவசாயிகள் மற்றும் பழங்குடியினருக்கு பலன்கள் கிடைக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    அந்த வகையில் விவசாயிகளுக்கு வருமானத்தை பெருக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் பற்றிய அறிவிப்பு இடம் பெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு தற்போது ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் நிலம் வைத்திருக்கும் 11 கோடி விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.

    அவர்களுக்கு வருடாந்திர நிதியுதவியை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரம் அல்லது ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ரூ.8 ஆயிரமாக உயர்த்தப்பட்டால் தலா ரூ.2 ஆயிரம் வீதம் 4 தவணைகளாகவும், தலா ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்பட்டால் ரூ.3 ஆயிரம் 3 தவணைகளாக செலுத்தப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதுதவிர விவாசயிகள் தங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், அதிக உரம் மற்றும் இடுபொருள் விலைகளின் பாதிப்பில் இருந்து அவர்களை காப்பாற்றுவதாகவும், மானியத்தை உயர்த்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 15 தவணைகளில் 2.8 லட்சம் ரூபாய்க்கு மேல் அரசு வழங்கியுள்ளது.

    இந்த சூழலில் நிதியுதவியை உயர்த்துவதோடு அதனை பெறுவதற்கான தகுதியை தளர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். அரசுக்கும் ரூ.20 ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ×