என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 95115"

    ஒரே நாளில் 3 இடங்களில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் சிக்கினர் மற்றும் அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டார்கள்.
    மதுரை

    சிவகங்கை மாவட்டம் பாசியாபுரம், வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). இவர் நேற்று காலை மஸ்தான்பட்டி, மந்தை திடல் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அவரை 2 பேர்  வழிமறித்து, கத்திமுனையில் மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்றனர்.

    இதே போல் பசுமலை விநாயகர் நகர் இளங்கோ தெருவைச் சேர்ந்தவர் ராகவன் (53). இவர் நேற்று மாலை அந்த பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர்  கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.

    மேலும் பாலாஜி நகரைச் சேர்ந்த துரைராஜ் (66) என்பவர் நேற்று மதியம் தேவி நகர் மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில்  வந்த 2 பேர் கத்திமுனையில் துரைராஜ் வைத்திருந்த ரூ.1, 150 ரொக்கம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.

    மதுரை மாநகரில் ஒரே நாளில் 3 இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    எனவே இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர துணை கமிஷனர்கள் தங்கதுரை, ராஜசேகரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் அனுராதா (அண்ணா நகர்), ரவீந்திரன் (திருப்பரங்குன்றம்)  ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

    அவர்கள் சம்பவ இடங்களில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராக்களை கைப்பற்றி, அவற்றில் இடம் பெற்று இருந்த காட்சி தொகுப்புகளை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது மேற்கண்ட 3 சம்பவங்களிலும் ஒரே நபர்கள் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. 

    இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். அப்போது திருப்பரங்குன்றத்தில் பதுங்கி இருந்த 2 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து  போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். 

    இதில் அவர்கள் பழைய குயவர் பாளையத்தை சேர்ந்த மாரிச்செல்வம் (28), மேல அனுப்பானடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி, குட்டை ராஜேஷ் (25) என்பது தெரியவந்தது. அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.இதனைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    சேலம், வேலு நகரில் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடினர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி வேலு நகரில் பஸ் ஸ்டாப் அருகே மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு பூஜை முடித்த பின்பு வழக்கம்போல பூஜாரி கோவிலை பூட்டி சென்றார்.

    இந்த நிலையில் இன்று காலை கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்து. மேலும் அதில் இருந்த ரூ.15 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது. யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற அறிந்த கோயில் நிர்வாகிகள் சம்பவம் குறித்து அன்னதானபட்டி போலீசில் புகார் அப்படி சொன்னார்.அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.

    மேலும் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆத்தூர் அருகே கடைக்குள் புகுந்து செல்போன், மோட்டார்சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர் ஆசாமிகள் அட்காசம் செய்தனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையம் ராமர் கோவில் தெருவை சேர்ந்த கருப்பண்ணன் மகன் விக்னேஷ். இவர் செல்லியம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே முட்டை கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அவரது கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் பணிகளை முடித்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலையில் அவர்கள் அயர்ந்து தூங்கும்போது மர்மநபர் அங்கு வந்தார். அவர்

    கடைக்கு உள்ளே புகுந்து சாவியை எடுத்து கடைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளையும், செல்போனையும் நைசாக திருடி சென்றார்.

    இந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகினது.

    அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து ஆத்தூர் ஊரக போலீசார் இருசக்கர வாகனத்தை தேடிச்சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 9 மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் திருட்டு போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • வாலிபர் ஒருவர் மொட்டை லாவகரமாக திருடி மெதுவாக சாலையில் தள்ளி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    கோவை :

    கோவை மாநகரில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 12 மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் திருட்டு போனதாக புகார் வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மீண்டும் 9 மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் திருட்டு போனதாக வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வாகனங்களின் உரிமையாளர்கள் அந்ததந்த போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவித்தனர்.

    கோவை பெரியகடை வீதி, காட்டூர், சாய்பாபா காலனி, ராமநாதபுரம், பீளமேடு உள்பட பகுதிகளில் மோட்டார் சைக்கிள், மொபட் திருட்டு போய்யுள்ளது. இந்த நிலையில் பீளமேடு வி.கே. ரோடு பகுதிைய சேர்ந்த ஸ்ரீகாந்த் (45) என்பவர் தனது மொபட் திருட்டு போது குறித்து புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் வாலிபர் ஒருவர் மொட்டை லாவகரமாக திருடி மெதுவாக சாலையில் தள்ளி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அதில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கோவை மாநகரில் நேற்று முன்தினம் 12 மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் திருட்டு போன நிலையில் நேற்று மீண்டும் 9 வாகனங்கள் திருட்டு போன சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கோவையில் 2 நாட்களில் 21 புகார்கள் பதிவாகி உள்ளது. வாகனங்களை திருடும் கும்பல் கோவையில் முகாம் ஈட்டுள்ளனரா ? அவர்கள் யார் ? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கன்னியாகுமரி போலீசார் விவேகானந்தபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • கிறிஸ்தவ ஆலயம் மற்றும் கோவில்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் தலைமையில் போலீசார் நேற்று கன்னியாகுமரி விவேகானந்தபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அங்கு சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக் கிளில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீ சார் அவரை போலீஸ் நிலை யத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் சுசீந்திரம் அக்கரை பகுதியை சேர்ந்த திராஜ் (வயது 19) என்பதும், தற்போது தெற்கு குண்டலில் தங்கி இருந்து கிறிஸ்தவ ஆலயம் மற்றும் கோவில்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் அவர் 7 வழக்குகளில் சம்பந் தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து திராஜை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் நாகர்கோவிலில் உள்ள ஜெயிலில் அடைத்தனர்.

    • இடையன்கிணறு பகுதியை சோ்ந்தவா் சங்கா் (வயது 48). இவா் ௬௦ செம்மறியாடுகளை வளா்த்து வருகிறாா்.
    • காலை வந்து பாா்த்த போது, பட்டியில் ஆடுகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.

    குண்டடம் :

    தாராபுரம் தாலுகா குண்டடம் அடுத்துள்ள இடையன்கிணறு பகுதியை சோ்ந்தவா் சங்கா் (வயது 48). இவா் 60 செம்மறியாடுகளை வளா்த்து வருகிறாா். தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றாா். காலை வந்து பாா்த்த போது, பட்டியில் ஆடுகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. எண்ணிப் பாா்த்த போது 7 பெரிய செம்மறி ஆடுகளைக் காணவில்லை. மேலும் தோட்டத்தைச் சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்த நிலையில், கம்பி வேலியின் ஒரு இடத்தில் அறுத்து உள்ளே நுழைந்து ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

    திருடப்பட்ட ஆடுகளின் மதிப்பு ரூ.70 ஆயிரம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், குண்டடம் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் மர்மநபர்கள் ஆடுகளை திருடி வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கால்நடை வளர்ப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேலம் பி.எஸ்.என்.எல் ஆபீசில் ரூ.24 லட்சம் மதிப்பு கேபிள்கள் திருட்டாள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் காந்தி ரோடு பகுதியில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் துணை பொது மேலாளர் பாஸ்கரன் (வயது 57), அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், பி.எஸ்.என்.எல் அலுவலக வளாகத்தில் இருந்த ரூ.23,88,982 மதிப்புள்ள பழைய மற்றும் புதிய கேபிள்களை, இங்கு காவலாளிகளாக பணியாற்றிய செந்தில்குமார், ஜெயக்குமார், சேட்டு மற்றும் அருண்குமார் ஆகியோர் சேர்ந்து திருடியதாக ெதரிவித்து இருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கோவிலின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருட்டு.
    • தனிப்படை போலீசார் பதுங்கி இருந்த கொள்ளையர்களை மடக்கி பிடித்தனர்.

    வல்லம்:

    தஞ்சை மாவட்டம் வல்லம் - திருச்சி சாலையில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கோவில் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுவிட்டனர்.

    இதனையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவுப்படி, வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா தலைமையில் நதியா, வல்லம் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், தனிப்படை சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் சாமிநாதன், முதல்நிலை காவலர்கள் புவனேஷ், சிவக்குமார், இரண்டா–ம்நிலை காவலர்கள் வினோத்பாண்டின், ராஜதுரை, ரஞ்சித்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று தனிப்படை போலீஸார் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே பதுங்கி இருந்த 2 கொள்ளையர்களை சினிமா பாணியில் மடக்கி பிடித்தனர்.

    போலீஸார் விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள ஈச்சங்காடு பகுதியை சேர்ந்த சிவா (எ) சிவ பாலகணேஷ் மற்றும் திருச்சி திருவவெறும்பூரை சேர்ந்த நாகராஜ் என்பது தெரிய வந்தது.பின்னர் கொள்ளையர்கள் திருடிய கோவில் நகைகள் மற்றும் பணத்தை போலீஸார் மீட்டனர். இது குறித்து வல்லம் போலீஸார் பாலகணேஷ் (வயது 22), நாகராஜ் (வயது 21) இருவர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து பாநாசம் சிறையில் நேற்றிரவு அடைத்தனர்.

    மர்ம நபர்கள் திருடி சென்ற 19 ஆடுகளின் மதிப்பு சுமார் 60,000 என கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே சித்தலூர் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் மனைவி உமா மகேஸ்வரி (வயது 30) இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்து விட்டு வழக்கமாக வீட்டின் அருகில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டில் உறங்கினார். அதிகாலை எழுந்து பார்த்தபோது ஆடுகள் அடைக்கப்பட்டிருந்த பட்டி திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 8 ஆடுகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதேபோல் அருகில் உள்ள மற்றொருவர் பட்டியிலும் ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது. மர்ம நபர்கள் திருடி சென்ற 19 ஆடுகளின் மதிப்பு சுமார் 60,000 என கூறப்படுகிறது. இதுகுறித்து உமா மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள கீரம்பூரில் பொதுப்பணித்துறை சார்பில் ஐ.டி.ஐ வளாகம் கட்டப்பட்டு வருகிறது.
    • கட்டிட தொழிலாளர்கள் பணிக்கு வந்த போது அங்கு கட்டிட பணிக்காக‌ போடப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் மற்றும் கம்பிகளை வெட்டும் எந்திரம் ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள கீரம்பூரில் பொதுப்பணித்துறை சார்பில் ஐ.டி.ஐ வளாகம் கட்டப்பட்டு வருகிறது. வழக்கம் போல் கட்டிட பணியில் ஈடுபட்டு வரும் கட்டிட தொழிலாளர்கள் பணிக்கு வந்த போது அங்கு கட்டிட பணிக்காக‌ போடப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் மற்றும் கம்பிகளை வெட்டும் எந்திரம் ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது.

    இது குறித்து பொதுப்ப ணித்துறை காண்ட்ராக்டர் மாதேஸ்வரன் பரமத்தி போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து இரும்பு கம்பிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • சிகிச்சைக்கு வருகிறவர்கள் மற்றும் அவர்களை பார்க்க வருபவர்கள் மோட்டார் சைக்கிள் அடிக்கடி திருட்டு போவதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
    • சி.சி.டி.வி காட்சிகளுடன் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரிக்கு தஞ்சை மாவட்டம் மட்டுமல்லது திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் சிகிச்சைக்கு வருகிறவர்கள் மற்றும் அவர்களை பார்க்க வருபவர்கள் மோட்டார் சைக்கிள் அடிக்கடி திருட்டு போவதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

    இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் மற்றும் தஞ்சை வண்ணாரப்பேட்டை சேர்ந்த மதிவாணன் உள்பட 4 பேரின் மோட்டார் சைக்கிள்கள் ஒரே நாளில் திருட்டுப் போய் உள்ளது.

    இது குறித்த சி.சி.டி.வி காட்சிகளுடன் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏழை எளிய மக்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வரும்போது இது போன்று வாகனங்களை பறிகொடுத்து வருவதால் அவர்கள் மேலும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே உடனடியாக ராசா மிராசுதார் ஆஸ்பத்திரியில் மோட்டர் சைக்கிள்கள் உள்ளிட்ட வானங்கள் திருட்டு போவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×