என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 96649"

    மேலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவன் உள்பட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த வைரவன்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மகன் பெரியகருப்பன் (வயது 20) தேங்காய் பறிக்கும் தொழிலாளி.

    இவரும், வைரவன்பட்டியை சேர்ந்த தனசேகரன் என்பவர் மனைவி முத்துச்செல்வியும் ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் பெரியகருப்பனும் தனசேகரன் மனைவியும் நெருங்கி பழகி வந்ததாகவும், அவர்களுக்கிடையே தகாத உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பெரியகருப்பனுடன் தனது மனைவி தனியாக பேசி கொண்டிருப்பதை தனசேகரன் பார்த்து விட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக அவர் தனது நண்பர்கள் சிலரிடம் தெரிவித்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து நேற்று மாலை தனசேகரன் உள்ளிட்ட சிலர் பெரியகருப்பனை சந்தித்து அவருடன் தகராறு செய்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தனசேகரன் மற்றும் அவரது நண்பர்கள் பெரியகருப்பனை கடுமையாக தாக்கியுள்ளனர்.

    இதில் படுகாயமடைந்த பெரியகருப்பனை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி பெரியகருப்பனின் தந்தை மணிகண்டன் கொட்டாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பழனியப்பன், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கொலை செய்த தனசேகரன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கோவையில் கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது கள்ளக்காதலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    கோவை:

    சிவகங்கையை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவர் கோவை ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட்டில் தங்கி பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வினோத்குமாருக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமான 27 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. வினோத்குமார், அந்த பெண்ணின் கணவர் வேலைக்கு சென்றதும் அவரது வீட்டிற்கு சென்று இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து வந்தார்.

    இந்த விவகாரம் அரசல், புரசலாக அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. இதை கேட்டதும் அதிர்ச்சியான அவர், தனது மனைவியை கண்டித்தார். மேலும் அந்த வாலிபருடனான பழக்கத்தை கைவிடுமாறு கூறி அறிவுரைகளை வழங்கினார்.

    ஆனால் அதனை அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

    இந்த நிலையில் தங்களை பிரித்து விடுவார்கள் என்று நினைத்த அந்த பெண் சம்பவத்தன்று வினோத்குமாரை வீட்டிற்கு அழைத்தார்.

    அப்போது இளம்பெண், நம்மை இவர்கள் சேர்ந்து வாழவிடமாட்டார்கள். நாம் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்தனர்.

    அதன்படி 2 பேரும் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தனர். சிறிது நேரத்தில் 2 பேரும் மயங்கி விழுந்தனர். இதனை அக்கம்பக்கத்தினர் பார்த்து ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடியினரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வினோத்குமார் உயிரிழந்தார்.

    அவரது கள்ளக்காதலிக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதையடுத்து போலீசார் வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் அருகே கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொலை செய்தாரா என்ற கோணத்தில் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே நடுவீரப்பட்டு போலீஸ் சரகம் எஸ்.புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 47). விவசாயி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ராஜசேகர் திடீரென மாயமானார். இதுபற்றி விஜயலட்சுமி போலீசில் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. அந்த பகுதியில் உள்ள உறவினர்கள் விஜயலட்சுமியிடம் உனது கணவர் எங்கே என்று கேட்டதற்கு வெளியூர் சென்றுள்ளார் என பதில் கூறினார்.

    இதனிடையே ராஜசேகர் கொன்று புதைக்கப்பட்டதாக அந்த பகுதியில் பரவலாக தகவல் பரவியது. இது நடுவீரப்பட்டு போலீசாருக்கும் தெரியவரவே தகவல் அறிந்த போலீசார் எஸ்.புதுக்குப்பம் கிராமத்துக்கு விரைந்தனர். அப்போது விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தார்.

    அதோடு போலீசார் விஜயலட்சுமியின் வீடு மற்றும் நிலப்பகுதிகளை ஆய்வு செய்தனர். அங்கு சந்தேகத்துக்கு இடமான தடயங்கள் காணப்பட்டது. உடனே போலீசர் விஜயலட்சுமியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது. ராஜசேகரின் நண்பர் மோகன். இவர் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கும் விஜயலட்சுமிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த விபரம் ராஜசேகருக்கு தெரியவந்தது.

    உடனே அவர் தனது மனைவியை கண்டித்தார். எனவே விஜயலட்சுமி, கள்ளக்காதலன் மோகனுடன் சேர்ந்து ராஜசேகரை கொலை செய்து புதைத்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சந்தேகப்படும் இடத்தில் தோண்டுவதற்காக வருவாய் துறையினர் மற்றும் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. அங்கு தோண்டும் பணி நடந்து வருகிறது. அதன் பின்னர் என்ன நடந்தது? என முடிவு தெரியவரும். 
    கடலூர் அருகே கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி கைது செய்த போலீசார் கள்ளக்காதலனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே நடுவீரப்பட்டு போலீஸ் சரகம் எஸ்.புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 47). விவசாயி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ராஜசேகர் திடீரென மாயமானார். இதுபற்றி விஜயலட்சுமி போலீசில் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. அந்த பகுதியில் உள்ள உறவினர்கள் விஜயலட்சுமியிடம் உனது கணவர் எங்கே என்று கேட்டதற்கு வெளியூர் சென்றுள்ளார் என பதில் கூறினார்.

    இதுபற்றி குழந்தைகளும் அப்பா எங்கே என விஜயலட்சுமியிடம் அடிக்கடி கேட்டபோது, அவர் வெளியூர் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனை குழந்தைகளும் நம்பி உள்ளனர்.

    இதனிடையே ராஜசேகர் கொன்று புதைக்கப்பட்டதாக அந்த பகுதியில் பரவலாக தகவல் பரவியது. இது நடுவீரப்பட்டு போலீசாருக்கும் தெரியவரவே தகவல் அறிந்த போலீசார் எஸ்.புதுக்குப்பம் கிராமத்துக்கு விரைந்தனர். அப்போது விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தார்.

    உடனே விஜயலட்சுமியை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். போலீசாரின் பிடி இருகியதால் விஜயலட்சுமி கள்ளக்காதலன் மோகன் என்பவருடன் சேர்ந்து தனது கணவரை கொன்று புதைத்ததாக தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    உடனே போலீசார் விஜயலட்சுமியை அழைத்துக் கொண்டு அவரது வீட்டுக்கு சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. தகவல் அறிந்ததும் கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூரில் இருந்து மோப்பநாய் கூப்பர் வரவழைக்கப்பட்டது. வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து ராஜசேகரை கொன்று புதைத்த இடத்தை ஆட்கள் மூலம் தோண்டினர். அந்த இடம் கடினமான செம்மண் பகுதியாகும். எனவே தோண்டுவதற்கு சிரமம் ஏற்பட்டது. உடனடியாக பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு தோண்டப்பட்டது. சுமார் 8 அடி ஆழத்தில் ராஜசேகரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இந்த பணி நேற்று மாலை 5 மணிக்கு முடிந்தது. உடனே டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதுகுறித்து போலீசில் விஜயலட்சுமி கொடுத்துள்ள வாக்குமூலம் விபரம் வருமாறு:-

    எனது கணவர் ராஜசேகர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்வார். இது எனக்கு பிடிக்கவில்லை. இதனிடையே எங்களது கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தோம். இந்த விவகாரம் எனது கணவர் ராஜசேகருக்கு தெரியவந்தது. அவர் என்னை கண்டித்ததோடு கள்ளக்காதலன் மோகனுடன் பேசக்கூடாது என எச்சரித்தார்.

    இந்த விபரத்தை மோகனிடம் தெரிவித்தேன். உடனே அவரும் நானும் சேர்ந்து எனது கணவர் ராஜசேகரை கொலை செய்ய திட்டமிட்டோம். அதன்படி சம்பவத்தன்று எனது கணவர் ராஜசேகரை அடித்து கொன்று வீட்டு தோட்டத்தில் புதைத்தோம்.

    கொன்று புதைத்த இடம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக அந்த இடத்தில் வாழை மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வந்தோம். எனது கணவரின் உடல் வாழை மரத்துக்கு உரமாகியது. இதனால் துர்நாற்றம் வீசவில்லை. எனவே எந்தவித சந்தேகமும் யாருக்கும் ஏற்படவில்லை.

    உறவினர்கள் சந்தேகத்தின்படி போலீசில் தெரிவித்ததால் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

    தலைமறைவான கள்ளக்காதலன் மோகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 
    ஓட்டப்பிடாரம் அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வெள்ளாரம் கிராமத்தை சேர்ந்தவர் மயிலேறி (வயது40).

    இவர் தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

    அதேபகுதியை சேர்ந்தவர் மகராசி (வயது35). இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தபால் அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டராக பணி புரிந்து வந்தார். இவரது கணவர் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார்.

    மயிலேறிக்கும், மகராசிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

    இந்த தகவல் இருவரது உறவினர்களுக்கும் தெரியவந்தது. இதனால் அவர்கள் 2 பேரையும் கண்டித்துள்ளனர்.

    கடந்த ஆண்டு மகராசியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்காதல் காரணமாக மனைவியை கண்டித்த நிலையில் இந்த பிரச்சினை காரணமாகவே அவர் விஷம் குடித்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி மயிலேறி மற்றும் மகராசி திடீரென மாயமாகினர். இதை அறிந்த மயிலேறியின் மனைவி ஓட்டப்பிடாரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை வெள்ளாரம் கிராமத்திற்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் மயிலேறி- மகராசி ஆகியோர் இறந்த நிலையில் பிணமாக கிடந்தனர். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் முத்துராமன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது மயிலேறி- மகராசி ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

    அவர்களது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ இடத்தில் மயிலேறி, மகராசி ஆகியோர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் , எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நாங்களே காரணம். நாங்களே எங்களது முடிவை தேடிக்கொள்கிறோம். எங்கள் சாவுக்கு யாரையும் விசாரணை செய்ய வேண்டாம் என கூறப்பட்டிருந்தது.

    அதனை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தாராபுரம் அருகே உறவினர்கள் கண்டித்ததால் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூளவாடி எருக்கலாம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 47),தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன், மகளுக்கு திருமணமாகி விட்டது.

    அதேப்பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவரின் மனைவி மாரியம்மாள்(40). இவர்களுக்கும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடராஜ் மரணமடைந்தார். இந்தநிலையில் மணிகண்டனுக்கும், மாரியம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த உறவினர்கள் 2 பேரையும் எச்சரித்துள்ளனர். இருப்பினும் 2 பேரும் நெருங்கி பழகி வந்தனர்.உறவினர்களும் தொடர்ந்து கண்டித்து வந்தனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணிகண்டனும், மாரியம்மாளும் மாயமாகினர். அவர்களை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இந்தநிலையில் பொம்மநாயக்கன்பட்டி காற்றாலை பகுதியில் ஆணும், பெண்ணும் இறந்து கிடப்பதாக நேற்றிரவு குண்டடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்து கிடந்தது மாயமான மணிகண்டன், மாரியம்மாள் என்பது தெரியவந்தது. அவர்கள் இறந்து கிடந்த இடம் அருகே மதுபாட்டில் மற்றும் சாணி பவுடர் கிடந்தது. கள்ளக்காதலை உறவினர்கள் கண்டித்ததன் காரணமாக 2பேரும் மதுவில் சாணிபவுடரை கலந்து குடித்து தற்கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர்கள் கண்டித்ததால் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
    குள்ளனம்பட்டி அருகே வாலிபரை கத்தியால் குத்திய தாய் மற்றும் 2 மகள்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள குடைபாறைப்பட்டியை சேர்ந்த குமரேசன் மனைவி மனிஷா(25). குமரேசனை கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தது. அதன்பிறகு மனிஷா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். அப்போது குடைபாறைப்பட்டியை சேர்ந்த சர்தார்(25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இதனை மனிஷாவின் உறவினரான சூர்யா என்பவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சர்தார் தனது நண்பர்களான ரியாஸ், யோகராஜ், கவுதம் ஆகியோருடன் சேர்ந்து சூர்யாவை சரமாரியாக கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த சூர்யா திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் 7 பேர் மீது வழக்குபதிவு செய்து சர்தார், ரியாஸ், யோகராஜ், கவுதம் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த மனிஷா உள்பட 3 பேரை தேடி வந்தனர்.

    ஆனால் அவர்கள் எங்கு தங்கி உள்ளனர் என போலீசாரால் கண்டுபிடிக்க சவாலாக இருந்தது. ஏ.எஸ்.பி அருண்கபிலன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

    அப்போது அவர்கள் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளேயே தங்கியிருந்தது தெரியவந்தது. அவர்கள் பயன்படுத்திய செல்போன் மூலம் இது உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து வீட்டை திறந்து சோதனை செய்ய திண்டுக்கல் கோர்ட்டில் அனுமதி கடிதம் பெறப்பட்டது.

    இதனைதொடர்ந்து மகளிர் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி மற்றும் விக்டோரியா லூர்துமேரி, திலகா, வினோதா ஆகியோர் கொண்ட மகளிர் போலீசார் வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது வீட்டினுள் பதுங்கியிருந்த மனிஷா மற்றும் சீமாதேவியை ஊர் பொதுமக்கள் உதவியுடன் வெளியே கொண்டு வந்தனர். இவர்களை வெளியே அழைத்துவருவதை பார்த்த அவர்களது தாய் தமிழரசி மற்றொரு வீட்டில் இருந்து ஓடி வந்தார். இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பெண்ணின் கணவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் 19 வயது கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்த தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்துள்ளார்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் 40 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 22 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். கணவர் கூலி வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் இளம்பெண் மாணவரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் உல்லாசமாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது.

    இதனால் அவர் தனது மனைவியை கண்டித்தார். மேலும் 19 வயது கல்லூரி மாணவருடனான கள்ளக்காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினார். ஆனால் இளம்பெண் கள்ளக்காதலை தொடர்ந்து வந்தார்.இதன்காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மாயமாகி விட்டார். இதனையடுத்து அவரை அவரது கணவர் அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது இளம்பெண் 19 வயது கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. அவரது செல்போ னுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இது குறித்து பெண்ணின் கணவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் 19 வயது கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்த தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்த 40 வயது பெண்ணை தேடி வருகிறார்கள்.

    கள்ளக்காதலியை அடித்துக்கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
    விழுப்புரம்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு சாம்ராஜ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுவேதா (வயது 36). விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரை அடுத்த கல்லந்தல் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுபாஷ் என்கிற சுப்பிரமணி (52). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருக்கு கூலி வேலைக்கு சென்ற இடத்தில் இவருக்கும், சுவேதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. பின்னர் சுவேதாவை பெங்களூருவில் இருந்து கல்லந்தல் பகுதிக்கு அழைத்து வந்து அவருடன் சுபாஷ் குடும்பம் நடத்தி வந்தார்.

    இந்நிலையில் கடந்த 9.1.2020 அன்று இரவு 10 மணிக்கு சுபாசும், சுவேதாவும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது போதையில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் திட்டிக்கொண்டனர்.

    இதில் ஆத்திரமடைந்த சுபாஷ், அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து சுவேதாவை தலையில் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாசை கைது செய்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

    வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட சுபாசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட சுபாஷ், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    தேவிபட்டினம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள தாவுகாடு பகுதியைச் சேர்ந்தவர் கோகுலராஜ் (வயது24). இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு 5 மாத பெண் குழந்தை உள்ளது.

    கோகுலராஜின் பெரி யப்பா சுப்பிரமணி மகன் கோபாலகிருஷ்ணன் (24). இவர் அப்பகுதியில் பனை மட்டையில் இருந்து தும்பு உற்பத்தி செய்யும் தொழில் செய்து வந்தார். இவரிடம் கோகுலராஜ் வேலை செய்து வந்தார்.

    கோபாலகிருஷ்ண னுக்கும், கோகுலராஜின் மனைவி முத்துலட்சுமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கள்ளக்காதலர்கள் இருவரும் ஊரைவிட்டு வெளியேறி வெளியூர் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த கோகுலராஜ் மற்றும் குடும்பத்தினர் 2 பேரையும் தேடி கண்டுபிடித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    இருவரையும் கண்டித்த குடும்பத்தினர் மீண்டும் கோகுல ராஜூடன் முத்துலட்சுமியை சேர்த்து வைத்தனர். இதனால் கோபாலகிருஷ்ணன் மீது கோகுலராஜ் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

    நேற்று புதுவலசை பகுதியில் கோபால கிருஷ்ணன் சென்று கொண்டிருந்தார். அப்போது கோகுலராஜ் மற்றும் அவரது உறவினரான விஜயகுமார் உள்பட சிலர் வழிமறித்து கோபாலகிருஷ்ணனை அரிவாளால் வெட்டினார்கள்.

    இதைப்பார்த்த அவரது சகோதரி இசக்கியம்மாள் (32) தடுக்க முயன்றார். அப்போது அவரையும் அந்த கும்பல் வெட்டியது. கொலை கும்பல் பிடியில் இருந்து கோபாலகிருஷ்ணன் தப்ப முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

    இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த தேவிபட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது பிணத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அரிவாள் வெட்டில் காயமடைந்த இசக்கியம்மாள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த கொலையில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாகி விட்டனர். அந்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தேவி பட்டினம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவையில் இளம்பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    கோவை:

    கோவை சாய்பாபா காலனி சபாபதி வீதியைச் சேர்ந்தவர் அஸ்வதி (20). பி.கம். பட்டதாரி. திருமணம் ஆகவில்லை. இவரது தந்தை இறந்து விட்டார். தற்போது தாயாருடன் வசித்து வந்தார்.

    அஸ்வதி தடாகம் ரோட்டில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு பணியாற்றிய திருமணம் ஆன பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கும் அவர் சென்று வந்தார்.

    அப்போது அந்த பெண்ணின் கணவருடன் அஸ்வதிக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அவர்கள் கள்ளக்காதலர்களாகினர். இந்த விவகாரம் அந்த பெண்ணுக்கு தெரிந்து கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த பெண் கணவரை பிரிந்து சென்றார்.

    அதன்பிறகு அஸ்வதிக்கும், பெண்ணின் கணவருக்குமான நெருக்கம் அதிகரித்தது. அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.

    இந்தநிலையில் அஸ்வதி தனது வீட்டில் பிணமாக கிடந்தார். கழுத்தில் துணியால் இறுக்கப்பட்ட தடயங்கள் இருந்தன. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதுபற்றி அஸ்வதியின் உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அஸ்வதியுடன் தொடர்பில் இருந்த நபர் யார்? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். செல்போன் மூலம் அவரை போலீசார் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. செல்போன் டவரை சோதனை செய்தபோது அந்த நபர் ஊட்டியில் இருப்பது தெரியவந்தது.

    இதனால் அஸ்வதியுடன் ஏற்பட்ட மோதலில் அவரை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு அவர் தப்பிச் சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரை பிடித்தால் தான் அஸ்வதி எப்படி இறந்தார்? எதற்காக கொல்லப்பட்டார்? என்ற விவரம் தெரியவரும்.

    எனவே அந்த நபரின் மனைவி மற்றும் உறவினர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    கள்ளக்காதல் விவகாரத்தில் மருமகனை, மாமியார் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கழுதூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 27). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். வேல்முருகனுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.

    இதை தொடர்ந்து அவர் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். அதன் பின்னர் வேல்முருகனுக்கும் வேப்பூர் பகுதியை சேர்ந்த அவரது அக்கா மகள் பவித்ரா (20) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    திருமணத்துக்கு பின்னர் வேல்முருகன் அவரது மனைவியுடன் கழுதூர் பகுதியில் வசித்து வந்தார். பவித்ரா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து பவித்ரா பிரசவத்துக்கு வேப்பூர் பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றார்.

    சம்பவத்தன்று வேல்முருகன் தனது மனைவியை பார்ப்பதற்காக வேப்பூரில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார். அங்கு மனைவியை பார்த்துவிட்டு இரவு அங்கேயே தங்கினார்.

    இந்த நிலையில் வேல்முருகன் திடீரென இறந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த வேல்முருகனின் தாய் மலர்கொடி தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக வேப்பூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் வேல்முருகன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து வேல்முருகனின் மனைவி பவித்ரா மற்றும் மாமியார் குமுதாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் வேல்முருகனை கழுத்தை நெரித்து குமுதா கொலை செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசாரிடம் குமுதா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது தந்தைக்கு 2 மனைவிகள் அதில் முதல் மனைவிக்கு பிறந்தவள் நான். 2-வது மனைவிக்கு பிறந்தவர் தான் வேல்முருகன். எனக்கு திருமணமாகி நான் வேப்பூரில் வசித்துவந்தேன். எனது கணவர் ரவிச்சந்திரன் லாரி டிரைவர் என்பதால் அடிக்கடி வெளியூருக்கு சென்றுவிடுவார்.

    எனது வீட்டுக்கு வேல்முருகன் அடிக்கடி வந்து செல்வார். அப்போது எங்கள் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம். அக்காள், தம்பி உறவு என்பதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. இந்த நிலையில் சிங்கபூரில் வேலை கிடைத்து வேல்முருகன் அங்கு சென்றுவிட்டார்.

    இதைத்தொடர்ந்து வேல்முருகனுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆகிவிட்டால் எங்களது தொடர்பு பாதிக்கப்படும் என்பதால் எனது மகள் பவித்ராவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி வேல்முருகன் கூறினார்.

    இதையடுத்து வேல்முருகனுக்கு எனது மகளை திருமணம் செய்து வைத்தேன். திருமணத்துக்கு பின்பும் நாங்கள் இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்தோம்.

    எனது மகள் பவித்ரா பிரசவத்துக்காக எனது வீட்டுக்கு வந்திருந்தாள். சம்பவத்தன்று அவளை பார்ப்பதற்காக வேல்முருகன் மதுபோதையில் எனது வீட்டிற்கு வந்தார்.

    இரவு உணவு சாப்பிட்டு விட்டு எனது மகளும் வேல்முருகனும் ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்தனர். நான் மற்றொரு அறையில் படுத்திருந்தேன்.

    நள்ளிரவில் எனது அறைக்கு வந்த வேல்முருகன் என்னை உல்லாசத்துக்கு அழைத்தார். மகள் பக்கத்து அறையில் தூங்குவதால் அவர் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம் என கூறினேன். ஆனால் வேல்முருகன் என்னை வற்புறுத்தி உல்லாசத்தில் ஈடுபட முயன்றார். இதில் ஆத்திரமடைந்த நான் வேல்முருகனின் கழுத்தை நெரித்தேன் அதில் அவர் இறந்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த நான் வேல்முருகன் தற்கொலை செய்து கொண்டார் என்று மற்றவர்களை நம்பவைப்பதற்காக அவரது உடலை தூக்கில் தொங்க விட்டேன். பின்னர் எனது மகளிடம் சென்று உனது கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறினேன். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த எனது மகள் வேல்முருகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    பின்னர் வேல்முருகன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் நான் கூறியதை அவர்கள் நம்பவில்லை. இதுகுறித்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் விசாரணையில் நான் சிக்கிக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து குமுதாவை கைது செய்தனர். பின்னர் அவரை விருத்தாசலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    கள்ளக்காதல் விவகாரத்தில் மருமகனை, மாமியார் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×