என் மலர்
நீங்கள் தேடியது "தேரோட்டம்"
- கடந்த 14-ந்தேதி முதல் நாள் தேரோட்டம் நடந்தது
- தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடைபெற்று வந்தது.
பாலக்காடு அருகே கல்பாத்தி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சுவாமி கோவில், கணபதி கோவில், சாந்தபுரம் பிரசன்ன விநாயகர் கோவில் ஆகிய 3 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் தேர்த்திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் கடந்த 14-ந் தேதி முதல் நாள் தேரோட்டம் நடந்தது. நேற்று முன்தினம் 2-வது நாள் நாள் தேரோட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று 3-து நாள் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாலையில் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளினர்.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு தேரோட்டம் நடந்தது. விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சுவாமி கோவில், கணபதி கோவில், சாந்தபுரம் பிரசன்ன விநாயகர் கோவில் மற்றும் 2 கோவில்களை சேர்ந்த தேர்கள் பக்தர்கள் வெள்ளத்தில் அணிவகுத்து வந்தன. கோவிலை ஊற்றி தேரோட்டம் நடந்து, பின்னர் கல்பாத்தி கிராமத்தில் ஒரே இடத்தில் சங்கமம் ஆனது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- ஒருபுறம் ஆண்களும் மறுபுறம் பெண்களும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
- பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 6-ந்தேதி காலை பரணி தீபம் மாலை 6 மணிக்கு மாலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
தீபத் திருவிழாவையொட்டி தொடர்ந்து இரவு மாட வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் வீதி உலா நடந்து வருகிறது. நேற்று இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தீபத் திருவிழாவில் 7-வது நாளான இன்று பஞ்ச மூர்த்திகள் மகா தேரோட்டம் நடந்தது. காலை 6.45 மணிக்கு விநாயகர் தேர் புறப்பாடு நடைபெற்றது. ஒருபுறம் ஆண்களும் மறுபுறம் பெண்களும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து விநாயகர் தேர் நிலைக்கு வந்த பிறகு முருகர் தேரோட்டம் நடைபெற்றது. மதியம் 1.30 மணிக்கு மேல் அருணாசலேஸ்வரர் மகாதேரோட்டம் நடந்தது.
அதனைத் தொடர்ந்து பெண்களால் இழுக்கப்படும் அம்மன் தேரோட்டமும், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறுகிறது.
2 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். ரத வீதிகளில் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்துச் சென்றனர்.
ராஜகோபுரம் முன்பு ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இதனால் அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் பக்தர்கள் பரவசத்துடன் காணப்பட்டனர்.
கார்த்திகை தீபத்திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும் நாளன்று நேர்த்தி கடனாக கரும்பில் சேலையால் தொட்டில் கட்டி தங்கள் குழந்தையை சுமந்தபடி மாட வீதியை வலம் வருவார்கள். அதன்படி, இன்று ஏராளமான பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
தேரோட்ட த்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன.
- மாட விதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் தேர் நீந்தி வந்தது.
- இந்த தேர் பெண்களால் மட்டுமே இழுக்கப்படும்.
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா முன்னிட்டு நேற்று பஞ்ச மூர்த்திகள் தேர்த்திருவிழா நடைபெற்றது முதலில் விநாயகர் தேர் காலை 6 45க்கும் தொடங்கி 10 20க்கு நிலைக்கு வந்தன.
அதனைத் தொடர்ந்து முருகர் 10.35க்கும் தொடங்கி 2.50 மணிக்கு நிலைக்கு வந்த சேர்ந்தன. தொடர்ந்து அண்ணாமலையார் பெரிய தேர் மாலை 3. 47 க்கு தொடங்கியது பெரிய தேர் தொடங்கியது.
அப்போது அண்ணாமலையாருக்கு அரோகரா என்று விண்ணதிர கோஷம் மிட்டு பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுக்க தொடங்கினர்.
மாட விதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் தேர் நீந்தி வந்தது. பின்பு இரவு 11 42 மணிக்கு நிலைக்கு வந்து அடைந்தன இதனைத் தொடர்ந்து அம்மன் தேர் நள்ளிரவு ஒரு மணிக்கு தொடங்கியது. இந்த தேர் பெண்களால் மட்டுமே இழுக்கப்படும். இது தேர் மாட வீதியை உலா வந்து விடியற்காலை 4 மணிக்கு வந்து நிலைக்கு சேர்ந்தன. இதனுடன் சண்டிகேஸ்வரர் தேரும் வலம் வந்தது.
- பதினாறு மண்டபம் வளாகத்தில் "தேர்" நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
- வண்ண துணிகளால் அலங்காரம் செய்யப்பட்டு தேர் தயார்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறகூடிய பங்குனி பெருவிழாவில் கிரிவல பாதையில் மகா தேரோட்டம் நடைபெறும். இதற்காக கோவில் வாசல் முன்பு பெரிய தேர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தை மாதத்தில் தெப்பத் திருவிழா மற்றும் கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீப திருவிழாவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெறும்.
இதற்காக பதினாறு மண்டபம் வளாகத்தில் "தேர்" நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பதினாறுகால் மண்டப வளாகத்தில் இருந்து கீழ ரதவீதி, பெரிய ரதவீதி, மேலரதவீதி வழியாக தேர்வலம் வரும். அதில் ஏராளமான பக்தர்கள் தேரினை வடம்பிடித்து தரிசனம் செய்வார்கள். இத்தகைய நிகழ்வானது காலம், காலமாக தொன்றுதொட்டு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்தநிலையில் தற்போது திருக்கார்த்திகை தீப திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முத்தாய்ப்பாக வருகின்ற 6-ந்தேதி திருக்கார்த்திகை நாளாகும்.
ஆகவே கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றம் ரதவீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தையொட்டி பதினாறுகால் மண்டப வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள தேரின் மீது தண்ணீர் பீய்ச்சி சுத்தம் செய்யப்பட்டது. மேலும் வண்ண துணிகளால் அலங்காரம் செய்யப்பட்டு தேரோட்டத்திற்கு தேர் தயார்படுத்தப்பட்டுள்ளது. நாளை(செவ்வாய்கிழமை) காலையில் தேரோட்டம் நடக்கிறது.
- திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கார்த்திகை தேரோட்டம் நடந்தது.
- நவம்பர் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்-தெய்வானை.
திருப்பரங்குன்றம்
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கார்த்திகை மாதம் தோறும் கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த நவம்பர் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலை யில் தங்கமயில் , தங்க குதிரை , வெள்ளி பூதம், வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுப்பிரமணியசாமிக்கு நவரத்தினங்கள் பதித்த செங்கோல், சேவல் கொடி சாற்றி பட்டாபிஷேகம் நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான கார்த்திகை தேரோட்டம் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கட்டுப்பாடு களுடன் நடந்தது. கொரோனா பரவல் தடை நீக்கப்பட்ட பின் இன்று நடந்த கார்த்திகை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காலை 11.30 மணியளவில் முருகப்பெருமான்-தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்த ருளினர். அதனைத்தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. அரோகரா கோஷம் எழுப்ப பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருக்கார்த்திகையை முன்னிட்டு திருப்ப ரங்குன்றம், மதுரை திருமங்கலம், கள்ளிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக திருப்பரங்குன்றத்துக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
கார்த்திகை தீபத்திரு நாளான இன்று மாலை 6 மணி அளவில் கோவிலில் பாலதீபம் ஏற்றப்பட்டு அதன் பின் மலை மேல் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக திருவண்ணாமலை பகுதியில் இருந்து வல்லுனர் குழுவினர் திருப்பரங்குன்றம் வந்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
சரியாக மாலை 6 மணிக்கு மலை மேல் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவிலில் குவிந்தனர். மகாதீபம் ஏற்றப்பட்ட பின் வீடுகளில் தீபம் ஏற்றப்படும்.
தொடர்ந்து இரவு 8 மணிக்கு 16 கால் மண்டபம் பகுதியில் சொக்கப்பனை கொளுத்தப்படும். இரவு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை (7-ந் தேதி) தீர்த்த உற்சவம் நடைபெறுகிறது.
கார்த்திகை திருவிழாவை யொட்டி மலை மற்றும் ரத வீதிகளில் நூற்றுக்க ணக்கான போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு ள்ளனர்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
- தேர் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே திருநகரி கிராமத்தில் கல்யாண ரெங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. பஞ்ச நரசிம்மர்களின் யோக மற்றும் இரணிய நரசிம்மர்களுக்கு தனி சன்னதி இந்த கோவிலில் உள்ளது.
பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் கடந்த வாரம் கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைதொடர்ந்து முக்கிய திருவிழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. இதனையொட்டி கல்யாண ரெங்கநாத பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வார் பக்தர்களால் தேருக்கு எடுத்து வரப்பட்டனர். இதையடுத்து தீபாராதனை காட்டப்பட்டு, தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது.
இதில் கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், ஆய்வர் மதியழகன், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன், விழாகுழு செயலாளர் ரகுநாதன், ஒன்றிய கவுன்சிலர் நடராஜன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பின்னர் தேர் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவெண்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டகணேஷ் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
- சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
- மீனாட்சி அம்மன் எழுந்தருளிய சிறிய தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர்.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் சித்திரை மாதத்தில் நடக்கும் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் பிரசித்தி பெற்றது.
இதேபோன்று மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழாவும் சிறப்பு வாய்ந்தது.
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளப்பதை குறிக்கும் வகையில் அஷ்டமி சப்பரம் தேரோட்டம் நடத்தப் படுகிறது. அஷ்டமியான இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி சப்பர தேரோட்டம் நடைபெறுகிறது.
இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அதன் பின் காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பிரியாவிடையுடன் சொக்கநாதரும், சிறிய தேரில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர். பக்தர்கள் கோஷம் முழங்க 2 தேர்களையும் வடம் பிடித்து இழுத்து அஷ்டமி சப்பரத்தை தொடங்கி வைத்தனர்.
இதில் மீனாட்சி அம்மன் எழுந்தருளிய சிறிய தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். வழி நெடுகிலும் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதன் காரணமாக மதுரையில் விழாக்கோலம் பூண்டிருந்தது.
தேரோட்டத்தின் போது 2 தேர்களிலும் இருந்த சிவாச்சாரி யார்கள் பூஜை செய்த அரிசியை வழி நெடுகிலும் தூவிச்சென்றனர். அதனை பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு எடுத்தனர். இந்த அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக் கொண்டால் பசி என்னும் நோய் ஒழியும் நம்பிக்கை.
2 தேர்களும் கீழமாசி வீதியில் இருந்து புறப்பட்டு யானைக்கல், கீழவெளிவீதி, தெற்குவெளி வீதி, கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளி வீதி, குட்செட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக நிலையை அடைந்தது.
அஷ்டமி சப்பரத்தை முன்னிட்டு நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தன. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மேலத்தெருவில் உள்ள ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.
- கடந்த 23-ந் தேதி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மேள தாளங்கள் முழங்க, ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மேலத்தெருவில் உள்ள ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, கடந்த 23-ந் தேதி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மேள தாளங்கள் முழங்க, ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 24-ந் தேதி இரவு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், 25-ந் தேதி வடிசோறு நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று பொங்கல், மாவிளக்கு பூஜையும், அம்மன் திருத்தேரில் திருவீதி உலா பவனி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று மாலை பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கும் நிகழ்ச்சியும், 30-ந் தேதி மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருவிழாவில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பகவதி அம்மனை வழிபட்டனர்.
- தங்கத்தேரை ஏராளமான பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
- 10 நாட்கள் சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. கோவில் உள்ளே அதிகாலை 1.30 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முதலில் சொர்க்கவாசல் வழியாக சென்று வி.ஐ.பி. பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு காலை 6 மணியளவில் இலவச தரிசன பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து காலை தங்கத்தேரோட்டம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி-பூதேவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தங்கத்தேரை தேவஸ்தான பெண் ஊழியர்கள், ஏராளமான பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
பின்னர் திருமலையில் உள்ள அன்னமயபவனில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வைகுண்ட துவார தரிசனம் செய்ய அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வைகுண்ட துவார தரிசனத்துக்காக 10 நாட்கள் சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
ஸ்ரீவாணி டோக்கன்கள் நேரில் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசன பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் 9 இடங்களில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
இலவச தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் திருமலையை அடைந்து, அங்குள்ள தரிசன வரிசைக்கு சென்று விட வேண்டும். பக்தர்கள் தேவஸ்தானத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
பக்தர்கள் சிரமமின்றி வைகுண்டம் துவார தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகளும், ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களும் சேவை செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினா்ா.
- அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவிலில் ஆத்மநாத சுவாமி கோவில் திருவாதிரை தேரோட்டம் நடைபெற்றது
- திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர்
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோவிலில் மிக–வும் பழமை மற்றும் சிறப்பு வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான ஸ்ரீ ஆத்மநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு–தோறும் மார்கழி மாத திருவாதிரை திருவிழா வெகு விமரிசையாக நடை–பெறுவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டு மார்கழி மாத திரு–வாதிரை திருவிழா கடந்த கடந்த (டிசம்பர்) மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் மாணிக்கவாசகர் வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று திருவாதிரை திருத் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. விழாவினையொட்டி அலங்கரிக்கப்பட்ட திருத் தேரில் மாணிக்கவா–சகரை எழுந்தருள செய்த–னர். தேர் சக்கரத்தில் ஊர் முக்கியஸ்தர்கள் தேங்காய் உடைத்து தேர் வடத்தை தொட்டு தொடங்கி வைத்த–னர். இதையடுத்து ஆவுடை–யார்கோவில் மற்றும் சுற்றுவட்டார கிரா–மங்களை சேர்ந்த பல்லாயி–ரக்கணக்கான பக்தர்கள், ஆத்மநாதா, மாணிக்க–வாசகா என்று பக்தி கோஷம் எழுப்பி, தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் 4 ரத வீதிக–ளிலும் வலம் வந்து பின்பு தேரடியை அடைந்தது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ் குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீ–சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- 5-ம் திருநாளில் கருட தரிசனம் விமரிசையாக நடந்தது.
- மார்கழி திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகர்கோவில்:
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது. 3-ம் திருவிழா நாளில் இரவு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிர மணிய சுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் சுசீந்திரம் கோவிலுக்கு வந்ததும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
5-ம் திருநாளில் கருட தரிசனம் விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 7-ம் திருநாளான நேற்று இரவு கைலாச பர்வதம் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. இன்று காலை சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா நடந்தது.
9-ம் திருவிழா நாளான நாளை (5-ந் தேதி) தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கங்காளநாதர், பிட்சாடனராக திருவீதி உலா செல்கிறார். தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் மற்றும் விநாயகர் தேர்கள் இழுக்கப் படுகின்றன.
முன்னதாக 3 சாமிகளும் சிறப்பு அலங்காரத்துடன் தேர்களுக்கு எழுந்தருளு கின்றனர்.தொடர்ந்து தீபா ராதனை நடைபெற்றதும் தேர்கள் இழுக்கப்படு கின்றன. மாலையில் மண்டகப்படிக்கு தங்க பல்லக்கில் சுவாமி எழுந்தரு ளுகிறார்.
இரவு 12 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிர மணிய சுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் விடைபெறும் சப்தாவர்ண நிகழ்ச்சி நடக்கிறது. 10-ம் நாள் நிறைவு விழாவில் காலை 10 மணிக்கு ஆரூத்ரா தரிசனம், அஷ்டாபிஷேகம் நடக்கிறது. மாலையில் நடராஜர் வீதி உலா, இரவில் ஆராட்டு போன்றவை நடக்கிறது.
- இன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சி நடக்கிறது.
- நாளை அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், திருவாதிரை களி திருவிழாவும் நடக்கிறது.
குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் 10 நாட்கள் பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டுக்கான மார்கழி பெருந்திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இசை, பக்தி மெல்லிசை, சொல்லரங்கம், பரத நாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 3-ம் திருவிழா அன்று மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும், 5-ம் திருவிழா அன்று கருட தரிசன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
7-ம் திருவிழாவான நேற்று முன்தினம் கைலாசப்பர்வத வாகன நிகழ்ச்சியும், 8-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா வந்த போது பேரம்பலம் திருக்கோவில் முன்பு நடராஜ பெருமான் ஆனந்தத் திருநடனம் ஆடினார். இதனைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுசீந்திரத்தில் கூடினர்.
மார்கழி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 9-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று கங்காளநாதர் பிட்சாடனராக வீதி உலாவரும் நிகழ்ச்சியும், சுவாமியும் அம்பாளும், அறம் வளர்த்த நாயகியும், விநாயகரும் கோவிலில் இருந்து தட்டு வாகனங்களில் புறப்பட்டு தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
பெரிய தேரான சுவாமி தேரில் சுவாமியும் அம்பாளும், அம்மன் தேரில் அறம்வளர்த்த நாயகி அம்மனும், பிள்ளையார் தேரில் விநாயகரும் எழுந்தருளுவார்கள்.
அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வருவார்கள். நான்கு ரதி வீதிகள் வழியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக உலா வரும் தேர் பின்பு வெடி முழக்கத்துடன் நிலைக்கு வந்து சேரும். அதன் பின்னர் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. தேரோட்டத்தை காண குமரி மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் பக்தர்கள் சுசீந்திரத்திற்கு வருவார்கள்.
இன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சியும் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், திருவாதிரை களி திருவிழாவும் நடைபெறுகிறது.
விழாவையொட்டி குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபடுகிறார்கள். மேலும் சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர், கழிப்பிட வசதி மற்றும் துப்புரவு பணிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுசீந்திரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்துள்ளனர்.