என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாயம்"

    • ஒருவரை படகுடன் காணவில்லை, மற்றொருவர் நிலை தடுமாறி விழுந்தார்.
    • கப்பல் மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அக்கரைப் பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 57). இவர் நேற்று முன்தினம் இரவு தனக்கு சொந்தமான பைபர் படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார்.

    நேற்று கண்ணதாசன் கரை திரும்பி இருக்க வேண்டும், ஆனால், அவர் கரை திரும்பவில்லை. பைபர் படகுடன் மாயமாகி விட்டார். இதையடுத்து அக்கரைப்பேட்டையில் இருந்து 5 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மாயமான கண்ணதாசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், நீண்ட நேரம் தேடியும் அவர் கிடைக்க வில்லை.

    பின்னர், இதுகுறித்து மீன்வளத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மீன்வளத்துறையினர் இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், அவர்கள் கடலில் மாயமான கண்ணதாசனை கடற்படை கப்பல் மூலம் தேடி வருகின்றனர்.

    இதேபோல், நாகையை அடுத்துள்ள நாகூர் சம்பா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (52). இவர் கடந்த 14-ந்தேதி நாகை மீன்பிடி துறை முகத்தில் இருந்து விசைப்படகில் 11 மீனவர்களுடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார்.

    அப்போது ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மாணிக்கம் நிலை தடுமாறி கடலில் விழுந்துவிட்டார். இதனை கண்ட விசைப்படகில் இருந்த சக மீனவர்கள் மீன்வளத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைதொடர்ந்து, மீன்வளத்துறை தெரிவித்த தகவலின் பேரில் இந்திய கடற்படையினர் கடலில் தவறி விழுந்த மாணிக்கத்தை கப்பல் மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் அடுத்தடுத்து மாயமான சம்பவம் மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • நேற்று காலை வீட்டில் இருந்த ஆதித்யாவை திடீரென காணவில்லை.
    • பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இரணியல், அக்.27-

    வில்லுக்குறி மேலப்பள்ளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 47). இவரது மகள் ஆதித்யா (19). இவர் ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை வீட்டில் இருந்த ஆதித்யாவை திடீரென காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அவரது தாயார் மஞ்சு (44) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 7 பேர் மாயமாகினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருத்தங்கல் கண்ணகி காலனியைச் சேர்ந்தவர் மாடாத்தி அம்மாள். இவரது மகள் பிரியலட்சுமி (வயது 19). சிவகாசியில் உள்ள அரசு கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த இவர் சம்பவத்தன்று மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகனுடன் மாயம்

    சாத்தூர் வெங்கடாசல புரத்தைச் சேர்ந்தவர் வீரகுமார். இவரது மனைவி பிரியா (30). இவர்களுக்கு தர்ஜித் (5) என்ற மகன் உள்ளான். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா அணிந்திருந்த 5 ½ பவுன் நகை மாயமானது. இதுகுறித்து வீரகுமார் மனைவியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சரிவர பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் வீட்டில் இருந்த பிரியா தனது மகனுடன் மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய்-மகனை தேடி வருகின்றனர்.

    மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள தேக்கங்குளத்தைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி. இவரது மகன் நித்தின் (16). இவர் காரியாபட்டியில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். சம்பவத்தன்று நித்தின் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவி

    சாத்தூர் அருகே உள்ள கத்தாளம்பட்டியைச் சேர்ந்தவர் பத்திரகாளி. இவரது மகள் ராஜரா ஜேஸ்வரி. அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர் சம்பவத்தன்று மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி ரிசர்வ்லைனைச் சேர்ந்தவர் கதிரேஷ். எலக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லீமா (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அடிக்கடி மனைவி செல்போனில் பேசுவதை கதிரேஷ் கண்டித்துள்ளார். இந்த நிலையில் சம்ப வத்தன்று வீட்டில் இருந்த லீமா மாயமானார். சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சாத்தூர் முத்தண்டியா புரத்தைச் சேர்ந்தவர் மகாதேவன். இவரது மகன் ஈஸ்வரபாண்டி (17). தீபாவளி மறுநாள் வீட்டில் இருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. இது குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரித்து வரு கின்றனர்.

    • 2 குழந்தைகளின் தாய் மாயமானார்.
    • தோட்டத்துக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் காலனி தெருவை சேர்ந்த காசிலிங்கத்தின் மகன் வீரக்குமார்(வயது 28). இவரது மனைவி பிரியதர்ஷினி(வயது24). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளதாக தெரிகிறது. வீரக்குமார் திருப்பூரில் சாயப்பட்டறையில் வேலை செய்து வருகிறார். இதனால் பிரியதர்ஷினி, தனது குழந்தைகளுடன் உதயநத்தம் கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் தீபாவளிக்காக தனது ஊருக்கு வீரக்குமார் வந்தார்.

    இந்நிலையில் கடந்த 26-ந் தேதி காலை பிரியதர்ஷினி தோட்டத்துக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த வீரக்குமார், அவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிப் பார்த்துள்ளார். எங்கு தேடியும் பிரியதர்ஷினி கிடைக்கவில்லை. இது குறித்து வீரக்குமார் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.s

    • கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தாயார் வீட்டில் மகனுடன் வசித்து வந்தார்.
    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே நுள்ளிவிளையை அடுத்த மூலச்சன்விளையை சேர்ந்தவர் ராஜா (வயது 28). இவரது மனைவி சிந்து (25). இவர்களுக்கு ரெஜன் (2) என்ற மகன் உள்ளான்.

    கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிந்து வடக்கு நுள்ளிவிளையில் உள்ள அவரது தாயார் வீட்டில் மகனுடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 19-ந்தேதி தாய் வீட்டில் இருந்த சிந்துவை குழந்தையுடன் காணவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சிந்துவின் தாயார் ராணி இரணியல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிந்துவையும், அவரது மகனையும் தேடி வருகின்றனர்.

    • உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் அவர்கள் குறித்து எந்த வித தகவலும் இல்லை.
    • கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி போலீஸ் சரகம் கடியப்பட்ட ணம் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் ஆன்றனி மைக்கேல் (வயது 43). மீன்பிடித் தொழிலாளி. இவரது மனைவி சபின் சஜோனா (32). இவர்களுக்கு 14 மற்றும் 12 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.

    கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி சபின் சஜோனா தனது மகன்களுடன் வீட்டிலிருந்து மாயமானார். ஆன்றனி மைக்கேல் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் அவர்கள் குறித்து எந்த வித தகவலும் இல்லை.

    இச்சம்பவம் குறித்து ஆன்றனி மைக்கேல் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான 3 பேரை தேடி வருகின்றனர்.

    • வேலைக்கு சென்ற இளம் பெண் மாயமானார்
    • வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை

    கரூர்:

    தோகைமலை அருகே வடசேரி ஊராட்சி காவல்காரன்பட்டி கிழக்கு தெருவில் வசிப்பவர் சின்னையன் மற்றும் அண்ணக்கிளி தம்ப தியினரின் மகள் சவுந்தர்யா (வயது 24). இவர் திருச்சி இனாம்குளத்தூர் பகுதியில் உள்ள ஒரு பெயின்ட் கடையில் வேலை செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சவுந்தர்யா வேலைக்கு சென்று வருவதாக தனது பெற்றோர்களிடம் தெரிவித்து விட்டு சென்று உள்ளார். பின்னர் அன்று இரவு முழுவதும் சவுந்தர்யா வீட்டிற்கு வரவில்லை என்பதால் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி 

    • விஷ்வா (வயது 24). என்ஜினீயரிங் முடித்து வீட்டில் உள்ளார்.
    • தனது மகனை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார்.

    கடலூர் :

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் முத்துமாணிக்கம் நாடார் தெருவை சேர்ந்தவர் சேகர். அவரது மகன் விஷ்வா (வயது 24). என்ஜினீயரிங் முடித்து வீட்டில் உள்ளார். நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் நண்பர்களுடன் வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த சேகர் தனது மகனை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் விஷ்வா கிடைக்கவில்லை. இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீசில் சேகர் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விஷ்வா என்ன ஆனார் எங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நர்சிங் மாணவி மாயமானார்
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வாணத்திரியான்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் இளமதி. இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 19). இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டைவிட்டு வெளியே சென்ற பிரியதர்ஷினி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இதன்பேரில் மாயமான நர்சிங் மாணவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்."

    • கணவர் போலீசில் புகார்
    • குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண் மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி விஜி (வயது 33). இத்தம்பதிக்கு 6 மற்றும் ஒரு வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். விஜிக்கும், மாமியாருக்குமிடையே குடும்ப தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் வீட்டிலிருந்த விஜி மற்றும் 2 குழந்தைகளை கடந்த மாதம் 26-ந் தேதி முதல் காணவில்லை.விஜி குழந்தைகளுடன் மாயமானதாக கூறப்படுகிறது. அவரது கணவர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் விஜி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து முருகேசன் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண் மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர்.

    • அருணா கடலூரில் தனியார் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு பி.ஏ. தமிழ்படித்து வருகிறார்.
    • எங்கும் கிடைக்காததால் பாபுபண்ருட்டி போலீசில் புகார் செய்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை அணைக்கட்டு தெரு சேர்ந்தவர் பாபு கட்டிட தொழிலாளி.இவருக்கு மனைவி,ஒரு மகன், ஒரு மகள்உள்ளனர். இவரது மகள்அருணா (வயது 19). இவர் கடலூரில்த னியார் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு பி.ஏ. தமிழ்படித்து வருகிறார். நேற்று காலை வீட்டில் இருந்தவர் திடீரென்று காணாமல்போய்விட்டார். இவரை பலஇடங்களில்தேடிஎங்கும்கிடைக்காததால் பாபுபண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்(பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் வழக்கு பதிவு செய்துகாணாமல் போன கல்லூரி மாணவிஅருணாவை வலைவீசி தேடுகின்றனர்.

    • குளித்தலை அருகே சிறுமிகள் மாயம்
    • போலீசார் தேடி வருகின்றனர்

    கரூர்:

    குளித்தலையை அடுத்த, மணவாசி பஞ்சாயத்து கருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி மகள் ராஜலட்சுமி. கடந்த மாதம் 23-ந்தேதி முதல் இச்சிறுமியை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்காததால் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்படி மாயனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.

    இதேபோல், குளித்தலை, கடம்பர் கோவில், நமச்சிவாயம் நகரை சேர்ந்த செல்வராணி மகள் அசின், கடந்த மாதம் 13-ந்தேதி காணாமல் போனார். இதுகுறித்த புகாரின்பேரில் குளித்தலை போலீசார் விசாரித்து, மாயமான சிறுமியை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், கடந்த 3-ந்தேதி, கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சிறுமி அசின் மீண்டும் மாயமானார். செல்வராணி மீண்டும் அளித்த புகாரின் படி, குளித்தலை போலீசார் வழக்குப்ப திந்து, சிறுமியை தேடி வருகின்றனர்.

    ×