என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாயம்"

    • கணவர் கண்டித்ததால் இளம்பெண் மாயமானார்
    • இன்ஸ்டாகிராமில் வாலிபருடன் அரட்டை

    திருச்சி

    திருச்சி மாவட்டம் முசிறி மாணிக்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன் (வயது 25). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அபிநயா (19) என்பவரை கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு ஒரு குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் அபிநயாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு நண்பர் அறிமுகமாகி பழக்கமானார். இருவரும் மிகவும் நெருக்கமானார்கள். நீண்ட நேரம் அவரிடம் அபிநயா அரட்டை அடித்து வந்தார். இதனை அறிந்த ஸ்ரீதரன் மனைவியை கண்டித்தார். இந்த நிலையில் பால் வாங்குவதாக வெளியே புறப்பட்டு சென்ற அபிநயா திடீரென்று மாயமாகி விட்டார்.

    இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபருடன் அவர் ஓட்டம் பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக ஸ்ரீதரன் முசிறி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலைமறைவான பெண் மேலாளரை தேடும் பணி தீவிரம்
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வேப்பமூட்டில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று உள்ளது.

    இந்த நிறுவனத்தில் குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் தங்களது நகைகளை அடகு வைத்து பணம் வாங்கியுள்ளார்கள்.

    நகைகளை அடகு வைத்து பணம் வாங்கிய பொதுமக்கள் தங்களது நகைகளை மீட்க வரும்போது நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.இது தொடர்பாக அந்த வாடிக்கையாளர்கள் வங்கி மேல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் அந்த வங்கியில் பணிபுரிந்த மேலா ளர் கடந்த சில நாட்களாக பணிக்கு வரவில்லை. நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த அதிகாரிகள் வங்கியில் விசாரணை மேற்கொண்ட னர். அப்போது ரூ.30 லட்சம் மதிப்பிலான நகைகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி மேல் அதிகாரிகள் கோட்டாறு போலீசில் புகார் செய்தனர்.இன்று காலை கோட்டார் போலீசார் நிதி நிறுவனத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது நிதி நிறுவனத்தில் வேலை பார்த்த மேலாளர் கடந்த ஒரு வாரமாக வங்கிக்கு வராமல் தலைமறைவானதால் அவர் நகைகளை எடுத்துச் சென்று இருக்கலாம் என தெரிகிறது.அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    வாடிக்கையாளர்களி டமிருந்து பணத்தை பெற்றுக் கொண்டும் தங்களது கணக்கில் பணத்தை செலுத்தாமல் உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் செட்டிகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்நிலையில் கடந்த 5-ந் தேதி தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நீதுலால் திடீரென கைக்குழந்தையுடன் மாயமாகி உள்ளார்.
    • ஸ்டாலின் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டத்தை அடுத்த பாகோடு கோய்க்கா விளையை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 24).

    இவர் பாகோடு பட்ட விளையை சேர்ந்த நீதுலால் (22) என்பவரை செப்டம்பர் 2019-ல் திருமணம் செய்தார். இதை அடுத்து அவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உண்டு. இந்நிலையில் கடந்த 5-ந் தேதி தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நீதுலால் திடீரென கைக்குழந்தையுடன் மாயமாகி உள்ளார்.

    இதுகுறித்து ஸ்டாலின் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளக்காதல் மூலம் கர்ப்பிணியான பெண் குழந்தையுடன் மாயமானார்.
    • அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் விவேகானந்தர் புரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 36). இவரது மனைவி அழகு ராணி (25). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    கடந்த சில மாதங்களாக அழகு ராணி தூத்துக்குடியைச் சேர்ந்த பாண்டி என்பவருடன் பழகி வந்தார். இது குறித்து கணவர் கேட்டபோது தான் சகோதர முறையில் பழகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அழகு ராணி தனது கணவரிடம் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்கு தூத்துக்குடியைச் சேர்ந்த பாண்டி தான் காரணம் என கூறியுள்ளார். இதனால் மாரிமுத்து அதிர்ச்சி அடைந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த அழகு ராணி தனது 5 வயது மகளுடன் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாரிமுத்து அம்மாபட்டி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மனைவி மாயமான தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த பாண்டி மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் நிறுவன ஊழியர்-மூதாட்டி மாயமாகினர்.
    • இதுகுறித்து மகன் போஸ் கொடுத்த புகாரின் பேரில் விளக்குத்தூண் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை

    மதுரை பெத்தானியபுரம் பாத்திமா நகரை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது34). வெள்ளரிப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றினார். இவருக்கு திருமணமாகி மனைவி, 1 ஆண் குழந்தை உள்ளனர்.

    கடந்த 23-ந் தேதி தீபாவளியையொட்டி மாமனார் வீட்டிற்கு மனைவி, குழந்தைகளை அழைத்து சென்றார். அதன் பிறகு கடந்த 2-ந் தேதி முதல் அழகர்சாமியை காணவில்லை. அவரது செல்போனும் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து மனைவி பாண்டீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு காவல் நிலைய ஆய்வாளர் முகமது இத்ரிஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மூதாட்டி

    மதுரை சுவாமி சன்னதி, வடுக தட்டாரசந்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி கமலம் (75).

    கடந்த 7-ந் தேதி காலை வெளியே சென்ற மூதாட்டி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து மகன் போஸ் கொடுத்த புகாரின் பேரில் விளக்குத்தூண் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஒரு தனியார் கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
    • இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து மாயமான ரீனா சிங்கை தேடி வருகிறார்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே மாங்குழி என்ற இடத்தை சேர்ந்த வர் ரவிராஜ் (வயது48). இவரது மனைவி வளர்மதி (44). இவர்கள் மகள் ரீனாசிங்(19).

    வெள்ளி சந்தை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவம் அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த நகை பணத்தை எடுத்து கொண்டு ரீனாசிங் மாயம் ஆனதாக தெரிகிறது. இது குறித்து அவரது தாயார் வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து மாயமான ரீனா சிங்கை தேடி வருகிறார்.

    • கல்லூரி மாணவி மாயமானார்
    • ஹால்டிக்கெட் வாங்க சென்றவர்

    திருச்சி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கீழப்பட்டி மான்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகள் பிரபாவதி (வயது 18). இவர் திருச்சி ஈ.வி.ஆர் கல்லூரியில் பி.எஸ்.சி தாவரவியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 12-ந் தேதி கல்லூரிக்கு ஹால்டிக்கெட் வாங்க சென்ற பிரபாவதி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. உடனே இதுகுறித்து மாரிமுத்து கே.கே.நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிந்து மாயமான மாணவி பிரபாவதியை தேடி வருகிறார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் ஒரே ஆண்டில் காணாமல் போன 628 பேர் மாயமான 95 பேர் நிலைமை என்ன வென்று தெரியவில்லை.
    • அவர்கள் எங்குசென்றார்கள்? என்ன ஆனார்கள்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் அண்மைக்காலமாக பள்ளி- கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள், வயதானவர்கள் மாயமாகி வருவது தொடர் கதையாக உள்ளது.

    குடும்பத்தில் விரக்தி, காதல் தோல்வி, தொழில் நஷ்டம், தேர்வு பயம், தனிமை போன்ற பல்வேறு காரணங்களால் பெண்கள் உள்பட பலர் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். இது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நாள்தோறும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    குறிப்பாக இளம் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் மாயமாவது அதிக அளவில் நடந்து வருகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர கவனம் செலுத்தி போலீசார் விசா ரணை நடத்தினர்.

    கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் சிறுவர்-சிறுமி கள்,பெண்கள், மாணவிகள் என 628 பேர் மாயமாகி இருப்பதாக போலீஸ் நிலையத்தில் புகார்கள் வந்தன. இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக இதுவரை 533 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் வெளியூர் மற்றும் உறவினர்கள் மற்றும் பழக்கமான நபர்களின் வீடுகளில் இருந்ததை கண்டறிந்து மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.ஆனால் இதில் இன்னும் 95 பேர் நிலைமை என்ன வென்று தெரிய வில்லை. அவர்கள் எங்குசென்றா ர்கள்? என்ன ஆனார்கள்? என போலீ சார் தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் கூறுகையில், சமுதாயத்தில் தற்போது எல்லோருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் இருக்கின்றன. அதனை எதிர்கொள்ள முடியாமல் சிலர் குடும்பத்தை விட்டு செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே குடும்பத்தில் யாரேனும் இது போன்ற நிலைமையில் இருந்தால் உடனே அவர்களுக்கு தகுந்த கவுன்சிலிங் வழங்கி பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வகையில் அவர்கள் வாழ்க்கையை எதிர்நோக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என்றனர்.

    • பள்ளிக்கு வந்த மாணவி மாயமானதால் பரபரப்பு
    • பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருப்பதாக தகவல் வந்தது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவரது மகள் செந்துறை ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் வழக்கம் போல் காலை நேரம் பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளிக்கு வந்தவர் பள்ளியில் தனது புத்தகப் பையை வைத்துவிட்டு மாயமாகிவிட்டார். இந்த நிலையில் சந்தேகம் அடைந்த பெற்றோர் பள்ளியை தொடர்பு கொண்டு கேட்டபோது பள்ளிக்கு வந்த மாணவி புத்தக பையை பள்ளிகளில் விட்டுவிட்டு மாயமாகிவிட்டதாக தெரிவித்தனர். அதனைத் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து பள்ளியை முற்றுவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஆங்காங்கே உள்ள செக் போஸ்ட்கள் மற்றும் ரோந்து போலீசாரை முடிகிவிட்டார். மாயமான பள்ளி மாணவி கண்டுபிடிக்கும் பணியில் உறவினர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது அந்த மாணவி செந்துறை பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் பள்ளிக்கு தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த மாணவியை அவரது ஆட்டோவில் ஏற்றி வந்து பள்ளியில் ஒப்படைத்தனர். அப்போது அந்த மாணவியிடம் விசாரித்த போது தேர்வில் குறைவான மதிப்பெண் வாங்கியதால் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் திட்டுவார்கள் என்பதால் மாயமாகியதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து போலீசார் அந்த மாணவிக்கு அறிவுரை வழங்கி பெற்றோர்களிடம் அனுப்பி வைத்தனர். இதனால் செந்துறை பகுதியில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

    • 10-ம் வகுப்பு மாணவி மாயமானார்
    • வீட்டில் இருந்து வெளியே சென்றவர்

    திருச்சி:

    திருச்சி விமான நிலையம் பகுதியில் உள்ள பாண்டியன் தெருவில் வசித்து வருபவர் ஜமால் முஹம்மது (வயது58). அவரது மகள் மெஹராஜ் பானு (18) பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை ஜமால் முகமது விமான நிலைய காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் இருந்த தொழிலாளி மாயமானார்
    • வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை

    கரூர்

    கரூர் மாவட்டம், வேலாயுதம்பா ளையம், வேலுார் சாலையை சேர்ந் தவர் ரவி (வயது 52), கூலி தொழிலாளி. இவர் கடந்த 2ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது மனைவி மகேஸ்வரி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரவியை யாராவது கடத்தியிருப்பார்களா? அல்லது வேறு எங்கும் சென்றிருப்பாரா என  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண் திடீர் மாயமானார்
    • வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    திருச்சி:

    திருச்சி திருவானைக்காவல் ஜெ.ஜெ. நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி லதா (வயது 39 ). இவர் கடந்த 13-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து கணவர் ரமேஷ் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×