என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ஜ.க."

    • குப்பை கொட்டிய விவகாரத்தில் அருகில் இருந்தவர்கள் சுப்பிரமணியனை தாக்கியதாக கூறப்படுகிறது.
    • சுப்பிரமணியன் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் படுத்து உருண்டு, தர்ணா ஈடுபட்டார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் மேல செக்கடி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் பா.ஜ.க. வர்த்தக அணி நகர துணை தலைவராக உள்ளார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் இருந்தபோது அவரது வீட்டின் அருகே குப்பை கொட்டிய விவகாரம் தொடர்பாக அருகில் இருந்தவர்கள் சுப்பிரமணியனை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சிகிச்சைக்காக சுப்பிரமணியன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சுப்பிரமணியன் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் படுத்து உருண்டு, தர்ணா ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் பா.ஜ.க. நகர தலைவர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் விக்னேஷ், அந்தோணி ராஜ், சங்கர் உள்ளிட்ேடார் அங்கு திரண்டனர். இதைத்தொடர்ந்து சுப்பிரமணியன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

    • ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அதன்பின் ராமேசுவரம் சென்ற அவர் ராமநாத சுவாமி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்த மாவட்ட பா.ஜ.க. தலைவர் கதிரவன் தலைமையில் உயர்நீதிமன்ற வக்கீலும், கட்சி பிரமுகருமான சண்முகநாதன் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.

    குறிப்பாக கிராமங்கள் தோறும் சென்று பா.ஜ.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் மாவட்டத்தில் பா.ஜ.க. பொதுக்கூட்டங்கள், தெரு முனை பிரசாரம் உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகளை வக்கீல் சண்முகநாதன் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் ராமநாத புரம் மாவட்ட பா.ஜனதா சார்பில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினத்தை கட்சி மாவட்ட தலைவர் கதிரவன் தலைமையில் வக்கீல் எஸ்.சண்முகநாதன் ஏற்பாடுகள் செய்திருந்தார். இதற்காக பட்டணம் காத்தான் இ.சி.ஆர். சாலை அருகில் உள்ள பா.ஜனதா 100 அடி கொடிகம்பத்தின் அருகே வாஜ்பாய் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த விளை யாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவை சேர்ந்த அமர் பிரசாந்த் ரெட்டி கலந்து கொண்டு வாஜ்பாய் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    அதன்பின் ராமேசுவரம் சென்ற அவர் ராமநாத சுவாமி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். பின்னர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன்பிறகு அப்துல்கலாம் இல்லத்திற்கு சென்றார். அப்போது அப்துல்கலாமின் பேரன் சலீம் சால்வை அணிவித்து வரவேற்றார்.

    இந்த நிகழ்ச்சிகளில் பா.ஜ.க. மண்டபம் ஒன்றிய தலைவர் விக்ராந்த், மண்ட பம் ஒன்றிய செயலாளர் இளசு என்ற இளையராஜா, ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் சண்முகநாத சேதுபதி உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.=

    • தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே பா.ஜ.க. விவசாய அணி மாவட்ட தலைவர் வெற்றி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தருமபுரி:

    தமிழக அரசு ரேஷன் கடை அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் சேர்த்து வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

    இதனை கண்டித்து இன்று தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே பா.ஜ.க. விவசாய அணி மாவட்ட தலைவர் வெற்றி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் வெல்லம், கரும்பு, தேங்காய் உள்ளிட்டவைகளை சேர்த்து பொங்கல் தொகுப்பாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதே போல் கிருஷ்ணகிரியிலும் பா.ஜ.க. விவசாய அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    • உடுமலை நகர செயலாளர் கண்ணாயிரம் வரவேற்றார்.
    • முடிவில் உடுமலை விவசாய அணி தலைவர் அரவிந்த் நன்றி கூறினார்.

    உடுமலை:

    பொங்கல் பரிசுத்தொகுப்பில் தேங்காய் வழங்க கோரி உடுமலையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகில் திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் மௌன குருசாமி முன்னிலை வகித்தார் . உடுமலை நகர செயலாளர் கண்ணாயிரம் வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதீஸ்வரி கந்தசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்து பேசினர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தெய்வகுமார், குட்டியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உடுமலை விவசாய அணி தலைவர் அரவிந்த் நன்றி கூறினார்.

    • நடப்பு ஆண்டுக்கான வரியை செலுத்த மாா்ச் மாதம் வரையில் கால அவகாசம் உள்ளது.
    • அவகாசம் கொடுத்து சொத்து வரியை வசூலிக்க அதிகாரிகளை அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகராட்சிக்கு நிகழாண்டு செலுத்த வேண்டிய வரியை உடனடியாக செலுத்தக் கோரி அதிகாரிகள் வற்புறுத்துவதாக பா.ஜ.க. சாா்பில் மேயரிடம் புகாா் அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து மாநகராட்சி 1வது மண்டலம் சாமுண்டிபுரம் பகுதி பா.ஜ.க. சாா்பில் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாரிடம் அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் மாநகராட்சி பகுதி முழுவதும் வரி மறுசீராய்வில் வரி உயா்வை குறைக்க சொல்லி போராடிக் கொண்டிருக்கும் நிலையில், 1வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நிகழாண்டுக்கான சொத்து வரியை உடனடியாக செலுத்தக் கோரி அலுவலகங்களுக்கும், வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் அதிகாரிகள் வந்து வற்புறுத்துகின்றனா்.

    ஆனால் நடப்பு ஆண்டுக்கான வரியை செலுத்த மாா்ச் மாதம் வரையில் கால அவகாசம் உள்ளது. இந்த நிலையில், மாநகராட்சி உயா் அதிகாரிகள் குடிநீா்க் குழாய் இணைப்பை துண்டித்து தினசரி நிா்ணயிக்கப்பட்ட தொகையை வசூலிக்க வேண்டும் என்று கூறுவதாக வரி வசூலிப்பவா்கள் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துகின்றனா்.

    திருப்பூரில் பின்னலாடைத் தொழில் தற்போது நலிவடைந்த நிலையில் உள்ளதால் தொழிலாளா்கள் வருவாய் இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே, அவகாசம் கொடுத்து சொத்து வரியை வசூலிக்க அதிகாரிகளை அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி மகாலட்சுமி தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தென்காசி:

    தென்காசியில் பா.ஜ.க. மாவட்ட மகளிர் அணி செயற்குழு கூட்டம் மற்றும் பயிற்சி முகாம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட மகளிர் அணி தலைவி மகாலட்சுமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அனிதா செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வரவேற்றார்.

    இதில் மாநில மகளிர் அணி செயலாளர் மற்றும் பொதுச் செயலாளர் நெல்லையம்மாள், தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா, பொதுச்செயலாளர்கள் பாலகுருநாதன், ராமநாதன், பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவி வக்கீல் முத்துலட்சுமி, மாவட்ட செயலாளர் ராஜலட்சுமி, முத்துலட்சுமி, மாவட்டத் துணைத்தலைவர் ராஜா லெட்சுமி, மகளிர் அணி மாவட்ட செயலாளர் வளர்மதி, ராஜலெட்சுமி சுந்தராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், தென்காசி மாவட்ட அரசு மருத்துவ மனைகளில் பிரசவத்திற்கு வரும் தாய்மார்களிடம் மருந்து பற்றாக்குறை என கூறி வெளியில் இருந்து மருந்து வாங்கி வரக் கூறும் நிலையை அரசு போக்க வேண்டும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணா மலை தலைமையில் தென்காசி மாவட்டத்தில் பொதுக் கூட்டம் நடத்துவது எனவும், மாவட்ட மகளிர் அணி சார்பில் 5 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    • போக்குவரத்து இடையூறு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
    • குடிநீா் குழாய் பதிக்கும்போது ஏற்பட்ட குழாய் உடைப்பை சரிசெய்வதுடன், தோண்டப்பட்ட குழிகளையும் மூட வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட பகுதியில் குடிநீா் குழாய் பதிக்கும்போது ஏற்பட்ட குழாய் உடைப்பை சரி செய்யக்கோரி பா.ஜ,.க. சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

    திருப்பூா் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாரிடம், ராயபுரம் மண்டல் பா.ஜ.க. தலைவா் பூபதி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட 27 -வது வாா்டு சுப்புராயா் கவுண்டா் சாலையில் கணேசபுரம் 4 -வது வீதியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள் கடந்த 20 நாள்களுக்கு முன்பாக முடிவடைந்தன. இந்தப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் தற்போது வரையில் மூடப்படவில்லை. மேலும், குழாய்கள் முறையாக ஒட்டப்படாததால் தண்ணீா் கசிந்து சாலைகளில் வழிந்தோடுவதால் சேரும், சகதியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

    ஆகவே குடிநீா் குழாய் பதிக்கும்போது ஏற்பட்ட குழாய் உடைப்பை சரிசெய்வதுடன், தோண்டப்பட்ட குழிகளையும் மூட வேண்டும். அதே போல ராஜீவ் காந்தி நகா் 5 -வது வீதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்டுள்ள குழிகளையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மத்திய பட்ஜெட் குறித்த பா.ஜ.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
    • 10 வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சோழவந்தான்

    சோழவந்தானில் பா.ஜ.க. சார்பில் மத்திய பட்ஜெட் குறித்த தெருமுனை பிரசார கூட்டம் வட்ட பிள்ளையார் கோவில் முன்பு நடந்தது. மண்டல தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முத்துராமன், ரவிசந்திரன், ரங்கசாமி, முத்துசெல்வம், குமரேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.முன்னதாக நடந்த மண்டல கூட்டத்தில் கட்சி நிதி வழங்கப்பட்டது. நிர்வாகி ராஜாராம் நன்றி கூறினார்.

    இதேபோல் முள்ளிப்பள்ளம் கிராம சமுதாய கூடத்தில் பா.ஜ.க. வாடிப்பட்டி தெற்கு மண்டல செயற்குழு கூட்டம் தலைவர் அழகர்சாமி தலைமையில் நடந்தது. மண்டல பார்வையாளர்-மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி முன்னிலை வகித்தார். மண்டல பொதுச்செயலாளர் முத்துப்பாண்டி வரவேற்றார். மாவட்ட விவசாய அணி தலைவர் பூமிராஜன், மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் ராம்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட 10 வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • பி.பி.சி. ஆவணப்படத்தை தடுக்க முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இதனால் காவல் நிலையத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டனர்.

    அவனியாபுரம்

    வில்லாபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பி.பி.சி. ஆவண படத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் வெளியிட முயன்றனர். இதுகுறித்த தகவலின்பேரில் அந்த திருமண மண்டபத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சசிகுமார் தலைமையில் சோலை மணிகண்டன், ஜெயகணேஷ், கருப்பையா, மதன், தமிழ்செல்வி உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவனியாபுரம் காவல் நிலையத்தில் போலீசாருக்கும் கைதான பா.ஜ.க. நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவர் காளிதாஸ்ல, பிரசார பிரிவு நிர்வாகி சடாச்சரம், அவனி ஆனந்த், மூர்த்தி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதன் பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் விடுவித்தனர். இந்த சம்பவத்தில் மாவட்ட தலைவர் சசிகுமாரை, போலீசார் மற்றும் எதிர்தரப்பினர் தள்ளிவிட்டதாகவும் இதனால் அவர் காயமடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது.

    • செங்குளம் கரையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பனை உள்ளிட்ட மரங்களை வளர்க்க வேண்டும் என ஆனந்தன் பேசினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மத்தளம் பாறை ஜோஹோ மென்பொருள் நிறுவனத்திற்கு எதிரே அமைந்துள்ள செங்குளம் கரையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி மாவட்ட பா.ஜ.க. சார்பில் 500 பனை விதைகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு ஆனந்தன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    பின்பு பனை என்பது நம் மண்ணின் மரம் மட்டுமல்ல கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தின் முக்கியமான அங்கம்.பனை, முருங்கை, பலாமரம் உள்ளிட்ட மண்ணின் பாரம்பரிய மரங்களை பேணி வளர்க்க வேண்டும் என ஆனந்தன் பேசினார். மாவட்ட துணை தலைவர் பால்ராஜ், ஐடிவிங் மாவட்ட தலைவர் ரெங்கராஜன், தங்கமுதலாளி, சங்கரநாராயணன், காளிமுத்து, சுப்புராஜ்,மாரிக்கனி, குமார் ராஜ், முரளிதரன் மற்றும் ஐடிவிங் மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • பா.ஜ.க. சார்பில் வருகிற 19ந் தேதி ரேக்ளா பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டது.
    • அனுமதி மறுக்கப்பட்டதாக பல்லடம் டி.எஸ்.பி. மறுப்புக் கடிதம் அனுப்பியுள்ளார்.

    பல்லடம் :

    பா.ஜ.க. திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பல்லடம் அருகே உள்ள வாவிபாளையம் ஊராட்சி, குள்ளம்பாளையத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் வருகிற 19ந் தேதி, தமிழர்களின் பாரம்பரிய ரேக்ளா பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டது. இதனை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசின் அனைத்து வழிகாட்டு நடைமுறைகளையும் பின்பற்றி இந்த போட்டி நடத்தப்படும் என உறுதிமொழி அளித்து, பல்லடம் போலீசாரிடம் அனுமதிகேட்டு மனு கொடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் பொருத்தமில்லாத காரணங்களை கூறி போட்டி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாக பல்லடம் டி.எஸ்.பி. மறுப்புக் கடிதம் அனுப்பியுள்ளார்.அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ரேக்ளா பந்தயத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை பா.ஜ.க. கண்டிக்கிறது. இதற்காக சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெறுவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • அவனியாபுரத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • பா.ஜ.க. தலைவர் சசிகுமார் தலைமையில் மனு கொடுத்து போராட்டம் நடத்தினர்.

    அவனியாபுரம்,

    அவனியாபுரம்- திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள அம்பேத்கார் சிலையிடம் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சசிகுமார் தலைமையில் மனு கொடுத்து போராட்டம் நடத்தினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு ஆண்டுதோறும் பட்டியலின மக்களுக்கு வளர்ச்சி நிதி ஒதுக்கீடு செய்கிறது.அவ்வாறு ஒதுக்கப்படும் நிதியை தமிழக அரசு சரியாக பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புகிறது.

    இதை கண்டித்து இந்த சட்டத்தை இயற்றிய அம்பேத்காரிடம் மனு கொடுகிறோம். 2021-22 ஆண்டு மத்திய அரசு ரூ.2,418 கோடியும், 2022- 23-ம் ஆண்டில் ரூ.16.442 கோடியும் ஒதுக்கீடு செய்த பணத்தில் ரூ.10.446 கோடியை திருப்பி அனுப்பி உள்ளனர்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க.பட்டியலின நிர்வாகி முத்துமாரி, ஊடகப்பிரிவு தலைவர் காளிதாஸ், சடாச்சரம், அவனிஆனந்த், தமிழ்ச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×