என் மலர்
நீங்கள் தேடியது "Tanker truck"
- எல்பிஜி டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
- பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் எல்.பி.ஜி. டேங்கர் லாரி ஸ்டிரைக் தொடரும் என அறிவிக்கப்பட்டது.
நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு தென்மண்டல எல்.பி.ஜி.டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, உள்பட பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கிய இந்த சங்கத்தில் சுமார் 1500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக சுமார் 6 ஆயிரம் டேங்கர் லாரிகள் வாடகைக்கு இயக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இந்த லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் பழைய ஒப்பந்த காலம் முடிவடைகிறது. அடுத்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 2025-ம் ஆண்டு முதல் 2030-ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளை மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து இருந்தது.
அதில் பல்வேறு விதிமுறைகள் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பாதகமாக இருப்பதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக சங்க உறுப்பினர்களுடன் தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தி ஆலோசனை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சில விதிமுறைகளை தளர்த்துமாறு சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து விரைவில் உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இதனால், எல்பிஜி டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தொடர்ந்து, கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவையில் ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
ஆனால், எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் எல்.பி.ஜி. டேங்கர் லாரி ஸ்டிரைக் தொடரும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தென் மாநிலங்கள் முழுவதும் கடந்த 5 நாட்களாக நீடித்து வந்த எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றதால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
- நடப்பு ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்த விதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
- கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
சேலம்:
தென்மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த சங்கத்தின் மூலம் மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் கிடங்குகளில் இருந்து 5 ஆயிரம் டேங்கர் லாரிகள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 6 மாநிலங்களில் உள்ள கியாஸ் சிலிண்டர்களில் நிரப்பும் பாட்டலிங் பிளாண்டுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இதற்கிடையே நடப்பு ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்த விதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளால் டேங்கர் லாரிகளை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு ள்ளதாக கூறி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று முன்தினம் காலை முதல் கால வரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.
இதனால் எண்ணெய் நிறுவன கிடங்குகளில் இருந்து பாட்டிலிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் ஏற்றி செல்லப்படும் பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளன. இதனால் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருடன் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கோவையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்கிறது. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
அதன் படி 3-வது நாளாக இன்றும் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பாட்டலிங் பிளாண்டுகளில் சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் போராட்டம் தொடர்ந்தால் விரைவில் சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
- கியாஸ் தட்டுபாடு ஏற்படும்.
- பாட்டலிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் ஏற்றி செல்லப்படும் பணிகள் பாதிப்பு.
சேலம்:
தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.
மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணை நிறுவனங்களின் கிடங்குகளில் இருந்து 5 ஆயிரம் டேங்கர் லாரிகள் மூலம் லோடு ஏற்றி ஒப்பந்த அடிப்படையில் 6 மாநிலங்களில் உள்ள கியாஸ் பாட்டிலிங் பிளாண்டுகளுக்கு கியாசை எடுத்து வரும் பணியை சங்க உறுப்பினர்களின் லாரிகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்த விதிகளில் 2 அச்சு லாரிகளை பயன்படுத்த கூடாது, 3 அச்சு லாரிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாற்று ஓட்டுனர் இல்லாத பட்சத்தில் ரூ.20 ஆயிரம் அபராதம் வதிக்கப்படும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளால் டேங்கர் லாரிகளை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று காலை முதல் கால வரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.
இதனால் எண்ணை நிறுவன கிடங்குகளில் இருந்து பாட்டலிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் ஏற்றி செல்லப்படும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இதனால் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து நேற்று டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தி னருடன் எண்ைண நிறுவன அதிகாரிகள் கோவையில் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என கியாஸ் டேங்கர் லாரி உரிமை யாளர்கள் அறிவித்து ள்ளனர். அதன் படி 2-வது நாளாக இன்றும் கியாஸ் டேங்கர் லாரி உரிமை யாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் .
இது குறித்து தென் மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறிய தாவது-
ஆயில் நிறுவன அதிகாரிகளுடனான பேச்சு வார்த்தையில் எந்த வித உடன்பாடும் ஏற்படாததால் தென் மண்டலத்தில் கியாஸ் டேங்கர் லாரிகள் போராட்டத்தில் ஈடுப ட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள கியாஸ் டேங்கர் லாரிகளும் இந்த போராட்டத்தில் ஈடு பட முன் வந்துள்ளன. ஆனாலும் இன்னும் ஒரு வாரங்களுக்கு கியாஸ் தட்டப்பாடு வராது. அதன் பின்னர் கியாஸ் தட்டுபாடு ஏற்படும்.
தென் மண்டலத்தில் 5 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகள் ஓடினாலும், 3 ஷிப்டுகளாக அந்த லாரிகள் பிரிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 1500-க்கும் மேற்பட்ட லாரிகளில் கியாஸ் நிரப்பி பாட்டலிங் பிளாண்டுகளுக்கு கொண்டு வரப்படுவது வழக்கம்.
அந்த பணிகள் முற்றிலும் தற்போது முடங்கி உள்ளதால் நாள் ஒன்றுக்கு 18 லட்சம் சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் பணி பாதிக்க ப்பட்டுள்ள நிலையில் 2 நாட்களில் மட்டும் 36 லட்சம் கியாஸ் சிலிண்டர்க ளில் கியாஸ் நிரப்பும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஒரு டேங்கர் லாரியில் 18 ஆயிரம் கிலோ கியாஸ் நிரப்பப்பட்டு கொண்டு செல்லப்படும். அதன் மூலம் 1200 சிலிண்டர்கள் நிரப்பபடும். கடந்த 2 நாட்களில் 3 ஆயிரம் டேங்கர் லாரிகள் இயங்காததால் 36 லட்சம் சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் பணி தடை ஏற்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தத்தால் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 200 கோடி ரூபாய் வீதம் 2 நாட்களில் 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோரிடம் எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக விரைவில் முறையிட உள்ளோம்.
மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்றால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக இது வரை எந்த தகவலும் இல்லை.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும். அதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்.
- எதிர்பாராத விதமாக லாரி சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- இதில் லாரி டிரைவர் காயமின்றி தப்பினார்.
டி.என்.பாளையம்:
தென்காசி சங்கரன் கோவில் கூடிய குளம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சக்தி கணேசன் (35).
இவர் கோவை பீளமேடு பகுதியில் இருந்து டேங்கர் லாரியில் கழிவு ஆயில் (பர்னஸ் ஆயில்) ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் நஞ்சன் கூடு என்ற பகுதியில் உள்ள தனியார் கம்பெனிக்கு செல்ல அத்தாணி-சத்தியமங்கலம் சாலையில் டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூர் மேடு என்ற பகுதிக்கு இரவு வந்தார்.
அப்போது சாலையின் இடது புற ஓரத்தில் டேங்கர் லாரியை நிறுத்த மண் தரையில் இறக்கினார்.
அப்போது எதிர்பாராத விதமாக லாரி சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரி டிரைவர் காயமின்றி தப்பினார்.
- டேங்கரில் இருந்த சுமார் 200 பீர் பெட்டிகள் கலால் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
- பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் அருணாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது
பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கள்ளச்சாராய விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பலர் அம்மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்தி வந்த பெட்ரோலிய டேங்கர் லாரியை அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
பெட்ரோலிய டேங்கர் லாரியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்தி கொண்டு வரப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். லாரியின் ஓட்டுநர் தப்பித்து ஓடிய நிலையில் நாகாலாந்து மாநில பதிவு எண் கொண்ட டேங்கர்லாரியை போலீசார் கைப்பற்றினர்.
இந்துஸ்தான் பெட்ரோலிய டேங்கரில் இருந்த சுமார் 200 பீர் பெட்டிகள் கலால் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் அருணாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பீகாரில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளதால் அடிக்கடி சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் மாநிலத்திற்குள் கொண்டு வரப்படுகின்றன. சில சமயங்களில் ஆம்புலன்ஸ்களில் கூட மதுபாட்டில்கள் கொண்டு வந்த சம்பவங்களும் நடந்துள்ளன.
- சுமார் 10 மணி நேர போராட்டத்துக்கு பின் கியாஸ் டேங்கர் மாற்று வாகனத்தில் ஏற்றப்பட்டு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
- விபத்து தொடர்பாக ராதாகிருஷ்ணன் மீது கோவை மேற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை:
கொச்சியில் இருந்து கோவைக்கு சமையல் கியாஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி நேற்று அதிகாலை அவினாசி சாலை ரெயில்வே மேம்பாலத்தில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் டேங்கர் தனியாக விழுந்து அதில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக கோவை நகரில் பதட்டம் ஏற்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக நேற்று அந்த பகுதிகளில் உள்ள 35-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.
மேம்பாலத்தில் விழுந்த கியாஸ் டேங்கரை மீட்கும் பணி முழுவீச்சில் நடந்தது. சுமார் 10 மணி நேர போராட்டத்துக்கு பின் கியாஸ் டேங்கர் மாற்று வாகனத்தில் ஏற்றப்பட்டு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
விபத்துக்குள்ளான கியாஸ் டேங்கர் லாரியை தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சிவராமபேட்டையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்திருந்தது தெரியவந்தது. லாரி கவிழ்ந்ததும் அவர் கீழே குதித்து தப்பினார். அவருக்கு சிறு காயம் ஏற்பட்டது.
விபத்து தொடர்பாக ராதாகிருஷ்ணன் மீது கோவை மேற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், வேகமாக வாகனத்தை இயக்குதல், சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து டிரைவர் ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
வழக்கமாக கேரளாவில் இருந்து கியாஸ் ஏற்றி வரும் டேங்கர் லாரிகள் எல் அண்ட் டி புறவழிச்சாலை வழியாக அவினாசி சாலையை சென்றடைந்து, அங்கிருந்து சத்தி சாலையில் உள்ள கணபதிக்கு செல்லும். இந்த சாலை கனரக வாகனங்கள் செல்ல எளிதான பாதையாகும். ஆனால் எரிவாயு டேங்கர் லாரியை இயக்கி வந்த டிரைவர் உக்கடம், மரக்கடை வழியாக அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தை கடக்க முயன்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
- டேங்கர் லாரி மீது பஸ் மோதி விபத்து;10 பேர் காயமடைந்தனர்.
- சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாளையம்பட்டி
அருப்புக்கோட்டையில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு அரசு பஸ் சிவகங்கை நோக்கி சென்று கொண்டிருந்தது.அந்த பஸ்சை கிருஷ்ணன் (வயது52) என்பவர் ஓட்டி சென்றார். ஆத்திபட்டி அருகே பஸ் சென்றபோது பஸ்சின் முன்னால் பால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று சென்றது.
அப்போது டேங்கர் லாரியின் குறுக்கே திடீரென நாய் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நாய் மீது மோதாமல் இருப்பதற்காக டேங்கர் லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டுள்ளார்.லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் பஸ்சின் முன்பகுதி டேங்கர் லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. அதில் பயணம் செய்த ஜெயசெல்வி (வயது45), ஜெயந்தி (54), கிருஷ்ணன் (52), அருள்ராஜ் (54), முத்து (40), சரவணன் (43), முருகன் (32) உள்பட 20 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.