என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thirukkural"

    • தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.
    • கவிதை திறன் மூலம் புத்தகங்களும் எழுதி சாதனை படைத்துள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒருங்கிணைந்த வி.ஏ.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் உமாராணி (வயது 52). இவர் எஸ்.வி.நகரம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வரும் இவர், தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா விடுமுறையில் சிறு சிறு சாதனை முயற்சிகளை மேற்கொண்டார். தமிழ் வளர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அப்போது அவர் திருக்குறளில் உள்ள 1330 குறள்களை நாணயங்கள், வளையல், குடை, சோயா பீன்ஸ், அகல் விளக்கு, பாசிமணி உள்ளிட்ட பொருட்களில் எழுதி அதனை கவிதை திறன் மூலம் புத்தகங்களும் எழுதி சாதனை படைத்துள்ளார்.

    இது சம்பந்தமாக 'ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' உலக சாதனைக்கு அனுப்பப்பட்டது. இதனையொட்டி முத்தமிழ் அறிஞர் சங்கம், ஆரணி லயன்ஸ் சங்கம், சில்க் சிட்டி லயன்ஸ் சங்கம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் மூலமாக ஆசிரியை உமாராணி சாதனை விருதுகள் பெற்றுள்ளார்.

    இதையறிந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆசிரியை உமாராணியை அழைத்து திருக்குறள் சாதனையாளர் என பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆசிரியை உமாராணி கூறுகையில், ''திருக்குறளை தேசிய நூலாக அரசு அறிவிக்க வேண்டும், வாழ்க்கையின் அனைத்து நெறிமுறைகளும் திருக்குறளில் அடங்கியுள்ளது. அதனை பின்பற்றினாலே மனிதன் நல்ல மனிதனாக வாழ முடியும். எனது சாதனைப் பயணம் தொடரும்'' என்றார்.

    • 12-ம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • மாணவர்கள் திருக்குறளை கற்றுக்கொண்டு பல்வேறு போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    திருக்குறள் உலகப் பொதுமறை நூலாக போற்றப்படுகிறது.

    திருக்குறளை பள்ளி மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் புது முயற்சியாக தஞ்சாவூர் மேம்பாலம் பகுதியில் இயங்கி வரும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒலிபெருக்கி மூலம் திருக்குறள் கற்றுத் தரப்படுகிறது.

    இதன் பற்றிய விவரம் வருமாறு:-

    தஞ்சாவூர் மேம்பாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி மற்றும் முழுவதும் என பார்வைத்திறன் குறையுடைய மாணவ- மாணவியர்கள் என 1 முதல் 12 -ம் வகுப்பு வரை சுமார் 150 -க்கும் மேற்பட்டோர் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் பிரெய்லி எழுத்து கொண்டு கல்வி பயின்று வருகின்றனர்.

    இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அங்கேயே விடுதியில் தங்கி கல்வி பெற்று வருகின்றனர்.

    கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பள்ளியில் படிக்கும் மாணவ -மாணவியர்கள் அரசு பொதுத் தேர்வுகளில் 10 முதல் 12- ம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் பார்வைத் திறன் குறையுடைய மாணவர்களுக்கு சென்னை (பூந்தமல்லி), திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 3 இடங்களில் மட்டுமே இந்த சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது.

    தஞ்சையில் மட்டுமே ஆண், பெண் ஆகிய இருபாலரும் படிக்கும் வசதி உள்ளது.

    இந்நிலையில் இப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு திருக்குறளை கற்றுத் தரும் வகையில் புது முயற்சியாக ஒலிபெருக்கி வைத்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஒரு திருக்குறள் மற்றும் அதன் பொருள் ஆகியவை தானியங்கி கருவியின் மூலம் தினமும் ஒளிபரப்பப்படுகிறது.

    மேலும் அந்த திருக்குறளை உற்று நோக்கும் வகையில் முன்னதாக ஒரு மணி நேரம் முடிவடைந்ததும், அடுத்த ஒரு மணி நேரத்தில் அலாரம் அடிக்கப்பட்டு பின்னர் திருக்குறள் ஒலிபெருக்கி மூலம் கூறப்படுகிறது.

    இதன் மூலம் பார்வை திறன் குறையுடைய மாணவர்கள் அந்த அலாரத்தை கவனித்தும், பின்னர் திருக்குறளை மனதில் உள்வாங்கி அவற்றை கற்றுக் கொள்கின்றனர்.

    இதன் மூலம் மாணவ- மாணவிகள் திருக்குறளை கற்று கொண்டு பல்வேறு போட்டி தேர்வுகளிலும் பங்கு பெறுகின்றனர்.

    தாங்கள் படித்த பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் இணைந்து இந்த வசதியை செய்து கொடுத்துள்ளனர்.

    மேலும் இப்பள்ளியில் சிறப்பு அம்சமாக கணிணி பயன்பாடு பாடப்பிரிவு கணிணி வாய்ஸ் மூலம் கற்றுத் தரப்படுகிறது.

    இதுகுறித்து பள்ளி ஆசிரியை புவனேஸ்வரி கூறுகையில், பார்வைத் திறன் குறையுடைய மாணவர்கள் கடிகாரத்தை நேரில் பார்க்க முடியாததால், ஒரு மணி நேரத்திற்கு ஒரு மணி நேரம் அலாரம் அடித்து பின்னர் ஒலிபெருக்கி மூலம் திருக்குறள் ஒலிபரப்பப்பட்டு அதன் பொருளும் கூறப்படுகிறது.

    இதனால் மாணவர்கள் திருக்குறளை எளிதில் கற்றுக் கொள்ள முடிகிறது என்றார்.

    மற்ற மாணவர்களை போல் பார்வைத் திறன் குறையுடைய மாணவர்கள் திருக்குறளை கற்க புது முயற்சி எடுக்கும் பள்ளி ஆசிரியர்களை பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

    • 1330 திருக்குறள்களுக்கும், 1330 கதைகளை கொண்ட 7 அடி உயரத்தில் திருக்குறள் புத்தகம் தயாரிக்கப்பட்டது.
    • முடிவில் பல்கலைக்கழக இணை பேராசிரியர் இந்து நன்றி கூறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் இன்று 7 அடி உயரத்தில் திருக்குறள் புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    தமிழ் பல்கலைக்கழகம் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் அகழ் கலை இலக்கிய மன்றம் பெரம்பலூர் சார்பில் 1330 திருக்குறள்களுக்கும் 1330 கதைகளைக் கொண்ட 7 அடி உயரத்தில் திருக்குறள் புத்தகம் தயாரிக்கப்பட்டது.

    இந்த பிரம்மாண்ட புத்தகத்தை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் முன்னிலையில் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, சென்னை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அவ்வை. அருள் ஆகியோர் வெளியிட்டனர்.

    இந்த 7 அடி உயர திருக்குறள் புத்தகம் மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் தியாகராஜன், அகழ் கலை இலக்கிய மன்றம் நிறுவனர் வினோதினி, பல்கலைக்கழக வளர் தமிழ் புல முதன்மையர் குறிஞ்சி வேந்தன், பாண்டிச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் வெங்கடேசன், தொழில் அதிபர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பல்கலைக்கழக இணை பேராசிரியர் இந்து நன்றி கூறினார்.

    • அனைத்து வகுப்புகளுக்கும் திருக்குறள் பாடமாக்கப்பட்டுள்ளது.
    • தேர்வுகளில் திருக்குறள் வினாக்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

    மதுரை:

    மதுரையை சேர்ந்த ராம்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    2016-ம் ஆண்டு உயர்நீதிமன்றம் திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பால் அதிகாரங்களில் உள்ள திருக்குறள்களை 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் முழுமையாக பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் 2017-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டு 1050 திருக்குறள்களை 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் சேர்க்க அரசாணை வெளியிட்டது. ஆனால் இந்த உத்தரவு பெயரளவிலேயே உள்ளது.

    எனவே 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலின் 1050 திருக்குறள்களை இடம் பெறச்செய்ய உத்தரவிட வேண்டும். இது தேர்விலும் கேள்விகளாக இடம் பெற உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், அனைத்து வகுப்புகளுக்கும் திருக்குறள் பாடமாக்கப்பட்டுள்ளது. திருக்குறள், அதன் பொருள் விளக்கம் போன்ற அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளது. தேர்வுகளிலும் வினாக்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

    • குமரியில் படகு சவாரியை மேம்படுத்த 3 புதிய படகுகள் வாங்கப்படும்.
    • மாவட்டம் தோறும் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதன் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

    * குமரி முனையில் முப்பால் புலவர் வள்ளுவருக்கு முத்தமிழறிஞர் வைத்த சிலைக்கு வெள்ளி விழா. தமிழின் பெருமையை குறளின் அருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் மகிழ்ச்சியை அடைந்த நாள் இன்று.

    * வான் புகழ் வள்ளுவருக்கு வானுயர சிலை வைத்த மகிழ்ச்சி கலைஞருக்கு இருந்தது. வெள்ளிவிழா கொண்டாடிய பெருமை எனக்கு. அப்பா என்ன வைத்துவிட்டு போனார் எனக்கேட்போருக்கு தமிழகத்தின் குமரிமுனையில் உள்ள வள்ளுவர் சிலை பதில் சொல்லும்.

    * வள்ளுவர் சிலை வைத்து 25 ஆண்டுகள் ஆனதற்கு பெரிய விழா எடுக்க வேண்டும் என்பதை சொன்னதற்கு விமர்சனம் எழுந்தது. அமைத்ததற்கு எதற்கு விழா என சில அதிமேதாவிகள் கேள்வி எழுப்பினர்.

    * திருவள்ளுவர் தமிழகத்திற்கும், திருக்குறள் தமிழரின் பண்பாட்டுக்கும் அடையாளம் என்பதால் கொண்டாடுகிறோம். வள்ளுவரை கொண்டாடுவோம், கொண்டாடி கொண்டே இருப்போம்.

    * அய்யன் வள்ளுவர் சிலை வெள்ளி விழா, விவேகானந்தர் மண்டபத்துடன் இணைக்கும் கண்ணாடி பாலம் திறக்கப்பட்டுள்ளது.

    * தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழுக்கும் உழைத்து கொண்டே இருப்பது வாழ்நாள் கடமை.

    * ஆட்சிக்கு வரும் முன்னரே சட்டமன்றத்தில் வள்ளுவர் படம் திறக்க வைத்தவர் கலைஞர் கருணாநிதி. திருக்குறளாகவே வாழ்ந்தார் கலைஞர் கருணாநிதி.

    * நமது மதம் குறள் மதம் என்றும் நமது நெறி குறள் நெறி என்றும் பெரியார் சொன்னார்.

    *காமராஜர், மார்ஷல் நேசமணி, ஜி.யு.போப் பெயரில் படகுகள் வாங்கப்படும்.

    * குமரியில் படகு சவாரியை மேம்படுத்த 3 புதிய படகுகள் வாங்கப்படும்.

    *மாவட்டம் தோறும் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

    *கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

    * இனி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத கடைசி வாரம் திருக்குறள் வாரம் கொண்டாடப்படும் என்றார். 



    • நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
    • நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.

    2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.

    பட்ஜெட் உரையின்போது திருக்குறளை மேற்கோள் காட்டி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

    வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

    கோல்நோக்கி வாழுங்குழு

    என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிய அவர், உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது என்று பேசினார்.

    • நெல்லையில் மாணவ- மாணவிகளிடையே திருக்குறள் பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் நடக்க இருக்கிறது.
    • இடைநிலை,மேல்நிலை,கல்லூரி என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    நெல்லை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகளிடையே திருக்குறள் பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் நடக்க இருக்கிறது. நெல்லையில் 12 மையங்களில் போட்டிகள் நடக்கிறது.

    வருகிற 13 -ந் தேதி டவுன் பாரதியார் தெருவிலுள்ள லிட்டில் பிளவர் மெட்ரி பள்ளியில் நடைபெறுகிறது. இடைநிலை (6 - 8 ஆம் வகுப்புகள்), மேல்நிலை (9 -12 வகுப்புகள்), கல்லூரி என மூன்று பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கு பெற விரும்புவோர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 10-ந் தேதிக்குள் அனுப்ப கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    • திருக்குறளை உலகம் முழுவதும் கொண்டு செல்வது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம்
    • 196 நாடுகளின் பாடத்திட்டத்தில் திருக்குறளை வைக்க ஆவணம் செய்ய வேண்டும்

    கரூர் :

    உலகத்துக்கே கல்வி நூலாக திகழும் திருக்குறளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் சென்னை குறள் மலை சங்கம் மற்றும் கரூர் வள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியோடு இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    இது குறித்து கரூர் வள்ளுவர் கல்வி குழும தாளாளர் செங்குட்டுவன் கூறியதாவது:

    உலக பொதுமுறையாக விளங்கும் திருக்குறளை மலைக் கல் வெட்டில் பதித்து திருக்குறளைமாமலை உருவாக்குவதும், உலகத்து–க்கு முக்காலத்திற்கு பொருந்தும் வகையில் எழுத–ப்பட்டிருக்கும் திருக்குறளை யுனெஸ்கோ நிறுவனம் உலக நூலாக அங்கீகரிக்க வேண்டும் எனவும், திருக்குறள் ஒரு கல்வி நூலாக இருப்பதால் ஐக்கிய நாடுகளின் சபையின் உறுப்பு நாடுகளில் இருந்து 196 நாடுகளின் பாடத்திட்டத்தில் திருக்குறளை வைக்க ஆவணம் செய்ய வேண்டும் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க நோக்கங்களுடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    இதன் பயனாக கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இனிவரும் காலங்களில் பயிலும் மாணவர்கள், பேராசிரியர்கள் குரல் மலை சங்கம் நடத்தும் அனைத்துக் கூட்டங்கள், கருத்தரங்கள், மாநாடுகள் அனைத்திலும் பங்கேற்கும் வாய்ப்புகளை பெறுவதோடு குறல் மலை சங்கம் வெளிநாடுகளில் நடத்தும் மாநாடுகளில் பங்கேற்கும் வாய்ப்புகளையும் பெறுவார்கள்.

    முக்கியமாக இச்சங்கத்தின் உறுப்பினராகவும் வாய்ப்பையும் இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பெறுவார்கள். வள்ளுவர் கல்லூரியில் குறள் மலை சங்கத்தின் மூலம் நடத்தப்படும் கூட்டங்கள், கருத்தரங்குகள் மாநாடுகள் ஆகியவற்றை தலைமை ஏற்று நடத்துவதற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து மொழியியல் வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு சிறப்பிக்கப்படுவார்கள்.

    இதன் மூலம் மாணவர்கள் நேர்மையான வாழ்க்கை திறன் மேம்படுவதோடு, இனிவரும் சமுதாய வளர்ச்சிக்கு நேர்மையான சிந்தனை கொண்ட அற்புத மனிதரை உருவாக்கும் வாய்ப்பு இந்த ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்படும் என கூறினார்.

    • 8-ம் வகுப்பு மாணவன் பிரசாத் ஒரு நிமிடத்தில் 50 திருக்குறள் கூறி உலக சாதனை புரிந்த தற்காக அவருக்கு நினைவு பரிசும், கேடயமும் வழங்கி பாராட்டினர்.
    • பள்ளி முதல்வர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள எம்.எம். வித்யாஸ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா மற்றும் திருக்குறளில் உலக சாதனை புரிந்த பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்றது.

    பள்ளி முதல்வர் விஜயகுமார் தலைமை தாங்கினார். சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியர் ராஜசேகர், சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியை ஜான்சி ராணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தமிழ் குறித்தான சிறப்புகளை குறித்து சிறப்புரையாற்றினர்.

    விழாவில் 8-ம் வகுப்பு மாணவன் பிரசாத் ஒரு நிமிடத்தில் 50 திருக்குறள் கூறி உலக சாதனை புரிந்ததற்காக அவருக்கு நினைவு பரிசும், கேடயமும் வழங்கி பாராட்டினர். மேலும் விழாவில் நம்பிக்கை ஊட்டும் தமிழ் கவிதைகள், தமிழ் மொழியின் தொன்மை, மற்றும் மேன்மை, குறித்த வேடம் புனைந்த சிந்தனைக்குரிய உரையாடல் ஆகியவற்றை பள்ளி மாணவ, மாணவிகள் நிகழ்த்திக் காட்டினர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் தலைமையில் தமிழ் துறையுடன் இணைந்து அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும், செய்திருந்தனர்.

    கைத்தறி நெசவு மூலம் வடிவமைக்கப்பட்ட திருக்குறளை உலக தமிழ்மாநாட்டில் இடம்பெற செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    கரூர்:

    கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட கரூர் நகரமானது கைத்தறி நகரம் என்கிற சிறப்பு பெற்றதாகும். முன்பு கரூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு கைத்தறி தொழில் தான் கைகொடுத்தது என்றே சொல்லலாம். அந்த வகையில் அப்போது வீட்டுக்கு ஒரு தறியை வைத்து கொண்டு, ராட்டையில் நூல் நூற்று போர்வை, துண்டு, திரைச்சீலை, மெத்தை விரிப்பு உள்ளிட்டவற்றை நெசவு செய்து பிழைப்பு நடத்தினர்.

    ஆனால் தற்போது கைத்தறி நெசவுக்கு ஆட்கள் பற்றாக்குறை, நூல் உள்பட மூலதன பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்டவற்றால் கைத்தறிநெசவில் போதிய வருமானம் கிடைக்காமல் தொழில் நலிவடைந்து விட்டதால் பலரும் ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் உள்ளிட்டவற்றுக்கு வேலைக்கு சென்று விட்டனர். எனினும் கரூரில் கைத்தொழிலை விட்டு விடக்கூடாது என்கிற வைராக்கியத்தில் தொடர்ச்சியாக சிலர் கைத்தறி நெசவில் ஈடுபட்டு வருவதை காண முடிகிறது.

    இந்தநிலையில் பாரம்பரிய கைத்தறி தொழிலை மீட்டெடுத்து, அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்கிற முனைப்புடன் கரூர் வெங்கமேட்டை சேர்ந்த கைத்தறி நெசவாளர் கே.ஏ.சின்னுசாமி (வயது 73) கைத்தறி நெசவில் பல்வேறு புதுமைகளை புகுத்தினார். அதில் கைத்தறி மூலம் திருக்குறளை நெசவு செய்து துணியில் வடிவமைத்தார். 1,330 குறள்களையும் எழுதும் நோக்கில் செயல்பட்ட அவர், கடந்த ஆண்டு டிசம்பர் 13-ல் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவருக்கு அங்கம்மாள் (68) என்கிற மனைவியும், பாஸ்கர் (52), ரவி (49), சதாசிவம் ஆகிய 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இதில் குடும்ப வறுமை சூழல் உள்ளிட்டவற்றின் காரணமாக ஒரு மகளுக்கு மட்டும் தான் திருமணமாகியுள்ளது. மற்றவர்கள் சின்னுசாமியின் மறைவுக்கு பிறகு வறுமையில் வாடி வருகின்றனர். எனினும் தந்தை விட்டு சென்ற பணியை விட மனமில்லாமல் தொடர்ந்து வீட்டில் கைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து சின்னுசாமியின் மகன் பாஸ்கரிடம் கேட்டபோது கூறுகையில், நான் சிறுவனாக இருந்தபோதே குடும்பத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டம் ஏற்பட்டது. காமராஜர் ஆட்சியில் மதியஉணவு வழங்கியதால் 3-ம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் எனது தந்தைக்கு உதவியாக கைத்தொழிலில் ஈடுபட்டு அதனை கற்று கொண்டேன். தற்போது அவரது மறைவுக்கு பின்னரும் விடாப்பிடியாக கைத்தறி தொழிலை விட்டு விடாமல் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். எனது பிறந்த நாளின் போதே, எனது தந்தை மறைந்து விட்டது வேதனை குறியது என கூறினார்.

    எனினும், கைத்தறிக்கும், தமிழுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக துணியில் சின்னுசாமியால் வடிவமைக்கப்பட்ட திருக்குறளை வருகிற ஜூலை மாதம் சிகாகோவில் நடைபெறவுள்ள 10-வது உலகத் தமிழ் மாநாட்டில் இடம்பெற செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் நலிவடைந்து வரும் கைத்தறி தொழிலை மீட்கவும் அதன் புத்துணர்ச்சிக்கும் அரசு உதவி செய்ய வேண்டும். மேலும் கைத்தறியில் சாதனை படைத்தும் வறுமையில் வாடும் சின்னுசாமியின் குடும்பத்துக்கு உதவிக்கரம் நீட்ட அரசு முன்வர வேண்டும். அவர்களுக்கு உதவித்தொகை வழங்கி கைத்தறி தொழிலை தொடர்ச்சியாக மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

    அரசு அலுவலகங்களில் கைத்தறி நெசவுத் தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்ட உருவபடங்கள், லட்சினை, விளம்பர பலகைகள் உள்ளிட்டவற்றை வைக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு பள்ளிகளில் மாணவர்களின் கூடுதல் திறனை வளர்க்கும் பொருட்டு தொலைநோக்கு சிந்தனையுடன் கைத்தறி வகுப்புகள் அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டதை அவ்வளவு எளிதில் நாம் மறந்து விட முடியாது. இந்த கைத்தறி வகுப்புகள் பலரது வாழ்வுக்கு கைகொடுத்தது. அந்த நிலை தற்போது மாறிவிட்டது. எனவே மீண்டும் பள்ளிகளில் கைத்தறிநெசவு, கூடை பின்னுதல் உள்ளிட்ட கைத்தொழில் வகுப்புகளை நடத்த வேண்டும் என கரூர் கைத்தறி நெசவாளர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1330 திருக்குறளை மனப்பாடமாக ஒப்பித்த மாணவிக்கு ஆயுர்வேத கல்லூரியில் இடம் ஒதுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.#highcourt

    சென்னை:

    சென்னையை சேர்ந்த 16 வயது மாணவி யஸ் ஹேஷ்யதா. இவர் எல்.கே.ஜி.யில் படித்தபோது 1330 திருக்குறளை மனப்பாடமாக ஒப்பிவித்து சாதனை படைத்தவர்.

    அதற்காக அவருக்கு தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்றம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் 8-ம் வகுப்பு படித்தபோது உலக தமிழ் ஆராய்ச்சி மையம் சார்பில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்று சான்றிதழ் பெற்றார்.

    2011-ம் ஆண்டு தலைநகர் தமிழ்ச்சங்கம் சார்பில் ‘திருக்குறள் மாமணி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் 12-ம் வகுப்பை முடித்த யஸ் ஹேஷ்யதா 2018-19ம் கல்வியாண்டுக்கான ஆயுர்வேத படிப்புக்கு விண்ணப்பித்தார். அவர் 157.25 கட்- ஆப் மதிப்பெண் பெற்று இருந்தார்.

    ரேங்க் பட்டியலில் 1648 முதல் 1666 வரைக்குள் இருந்தார். ஆனால் 2018-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி கணக்குப்படி மாணவிக்கு 17 வயது முடிவடையாததால் அவரது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

    இதையடுத்து மாணவி தனக்கு கல்லூரியில் இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறும்போது, “மாணவி பல்வேறு விருதுகள் வாங்கிய திறமை வாய்ந்தவராக உள்ளார். சிறு வயதிலேயே மேதையாக திருக்குறளை ஒப்புவித்து சாதனை படைத்து இருக்கிறார்.

    ஆனால் ஆயுர்வேத கல்லூரி படிப்பு கலந்தாய்வில் 17 வயது பூர்த்தியாகாததை காரணம் காட்டி அவரது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவர் 157.25 கட்-ஆப் மார்க் பெற்று இருக்கிறார்.

    2016-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி திருத்தப்பட்ட அறிவிப்பு அடிப்படையில் விண்ணப்பித்து உள்ளார். இதில் மாணவி கலந்தாய்வில் பங்கேற்க தடை இருப்பதாக இந்த ஐகோர்ட்டுக்கு தெரிய வில்லை.

    கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஏ.குமார் அளித்த அறிக்கையில், மாணவி எடுத்த கட்-ஆப் மதிப்பெண்ணுக்கு சித்தா அரசு கல்லூரியில் இடம் கிடைக்காமல் போகலாம். ஆனால் தனியார் கல்லூரியில் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.

    கன்னியாகுமரியில் உள்ள மரியா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் இடம் காலியாக உள்ளது. அந்த கல்லூரியை பரிசீலனை செய்யலாம். அவரை கலந்தாய்வில் அனுமதித்து படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்று இருந்தால் கலந்தாய்வில் இடம் ஒதுக்க வேண்டும்” என்றார். #highcourt

    அரியலூர் அருகே வேத மந்திரங்களின்றி திருக்குறள் வாசித்து மத்திய அரசு ஊழியரின் திருமணம் நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழுரை சேர்ந்தவர் சக்திவேல். மத்திய அரசு ஊழியரான இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சத்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தமிழ்மொழி மேல் உள்ள பற்றுதல் காரணமாக தனது திருமணத்தை திருக்குறள்படி நடத்த சக்திவேல் முடிவு செய்தார். அது பற்றி மணமகள் வீட்டில் தெரிவித்த போது, முதலில் மறுப்பு தெரிவித்தனர். பின்னர் சக்திவேல் தனது நிலையில் உறுதியாக இருந்ததால், அவரது விருப்பத்திற்கு அனைவரும் சம்மதித்தனர். இதையடுத்து  தா.பழுரில் உள்ள திருமண மண்டபத்தில் வேத மந்திரங்களின்றி சக்திவேல் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது திருவள்ளுவர் உருவச்சிலை வைத்து, புலவர் மோகன் திருக்குறள் வாசித்து அதன் பொருள் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து மணமக்கள் உறுதிமொழி ஏற்றனர். இதையடுத்து மணமகன் சக்திவேல், மணமகள் சத்யாவுக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். தொடர்ந்து மணமக்கள் அரசு மற்றும் வேப்ப மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற, உறவினர்கள் ஆசீர்வாதம் செய்தனர். இந்த திருக்குறள் திருமணத்தை உறவினர்கள், பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு மகிழ்ந்தனர். திருமணத்தையொட்டி மண்டபம் முழுக்க இல்வாழ்க்கை, வாழ்க்கை துணை நலம்,மக்கட்பேறு, அன்புடமை ஆகிய 4 அதிகாரங்களில் உள்ள திருக்குறள் வரிகள் ஆங்காங்கே எழுதப்பட்டிருந்தன.

    திருக்குறள் திருமணம் செய்த சக்திவேலின் தந்தை நீலகண்டன் டீக்கடை வைத்துள்ளார். இவர் தனது பேச்சின் போது அடிக்கடி திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவார். இதனால் சக்திவேலுக்கு சிறுவயது முதலே திருக்குறள் மீதும், தமிழ்மொழி மீதும் தீராத பற்று ஏற்பட்டுள்ளது. அதன் விளைவால் திருக்குறள்படி தனது திருமணத்தை நடத்தியுள்ளார்.
    ×