என் மலர்
நீங்கள் தேடியது "ticket"
- வைகுந்த ஏகாதசி தரிசன டிக்கெட் கட்டணம் உயர்கிறது
- ஸ்ரீரங்கம் ெரங்கநாதர் கோவிலில்
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் ெரங்கநாதர் கோவில் வைகுந்த ஏகாதசி தரிசன டிக்கெட்கட்டணத்தை இந்து சமய அறநிலை துறை உயர்த்த முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக கோவில் அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, கடந்தாண்டு வைகுந்த ஏகாதசி விழாவின்போது கிளி மண்டபத்திலிருந்து தரிசனம் செய்ய ஒரு நபருக்கு ரூ. 500, சந்தன மண்டபத்தில் இருந்து ஊர்வலத்தை தரிசிக்க ரூ.3000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
நடப்பு ஆண்டில் சிறப்பு தரிசன கட்டணம் ரூ. 500 லிருந்து ரூ.1000 ஆகவும், ரூ.3000 கட்டணத்தை ரூ. 5000 ஆகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கு பின்னர் இப்போது தரிசன கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இந்தக் கட்டண உயர்வு தொடர்பாக கருத்து தெரிவிக்க பக்தர்களுக்கு நேற்றைய தினம் வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் யாரும் நேரடியாக வந்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆகவே திட்டமிட்டபடி கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், சலுகை அடிப்ப டையில் வழங்க ளப்படும் டிக்கெட்டை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பது இதன் மூலம் தடுக்கப்படும். அது மட்டுமல்லாமல் தற்போதைய சூழலில் இந்த கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 300 டிக்கெட்டுகள் சந்தன மண்டபத்தில் இருந்தும்,1000 டிக்கெட்டுகள் கிளி மண்டபத்தில் இருந்தும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு இன்னும் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. வி.ஐ.பி. தரிசனத்திற்கு அதிக நேரம் ஒதுக்குவதால் சாதாரண பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அனைவருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் எனவும் பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2019-க்கு பின்னர் கோவிட் கட்டுப்பாடுகள் இல்லாமல் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற இருக்கிறது.
- பரசு–ராமன் அக்ரஹாரம் பகுதி–யில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- சம்பவஇடத்திற்கு சென்ற போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை கரந்தை பரசுராமன் அக்ரஹாரம் பகுதியில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக மேற்கு போலீசாருக்குதகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
போலீசார் வருவதை பார்த்ததும் சீட்டு விளையா–டியவர்கள் தப்பி ஓட முயன்றனர்.
சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்கள் 5 பேரை மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், தஞ்சை வடக்கு வாசலை சேர்ந்த சசிகுமார் (வயது 40), ராஜேந்திரன் (41), பரிசுத்தம் நகரை சேர்ந்த சுப்ரமணியன் (58), விக்னேஷ் (27), ராகவேந்திரன் (40) என்பதும், பணம் வைத்து சீட்டு விளையா டியதும் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகுமார், ராகவேந்திரன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.
- விருதுநகரில் ரூ. 1 கோடி நகை சீட்டு மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- நகை கடையில் ஆடிட்டிங் நடைபெறுவதாகவும், அடுத்த மாதம் வந்து மொத்தமாக பணம் செலுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் சூலைக் கரையை சேர்ந்தவர் கருப்ப சாமி (வயது 36). இவருக்கு அருப்புக்கோட்டையை சேர்ந்த வாழவந்தான் என்பவரது அறிமுகம் கிடைத்தது. அவர் மூலமாக விருதுநகர் கச்சேரி ரோட்டில் உள்ள நகைக்கடையில் நகை சீட்டில் சேர்ந்துள்ளார். அந்த நகை கடையின் வரதராஜன், சுப்பிர மணியன், பாலவிக்னேஷ், பவுன்ராஜ் ஆகியோர் நிர்வாக பங்குதாரர்களாக உள்ளனர். கருப்பசாமி மற்றும் அவரது உறவினர்கள் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் முதல் பணம் கட்டி வந்துள்ளனர்.
இதற்கிடையே அதன் உரிமையாளர்களில் ஒருவரான சுப்பிரமணியன் என்பவர் தற்கொலை செய்து இறந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் நகை சீட்டு பணம் செலுத்துவதற்காக கருப்பசாமி கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையில் ஆடிட்டிங் நடைபெறுவதாகவும், அடுத்த மாதம் வந்து மொத்தமாக பணம் செலுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர்.
கருப்பசாமி அடுத்த மாதம் சென்று பார்த்தபோது, கடை பூட்டியிருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்து பார்த்ததும் கடை பல நாட்களாக பூட்டிக்கிடந்தது தெரியவந்தது. இதே நகை கடையின் உரிமையாளர்கள் மதுரையில் நடத்தி வரும் நிதி நிறுவனமும் மூடப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
இந்த நகை கடையில் கருப்பசாமி 3 கால் லட்சம் செலுத்தியுள்ளார். கருப்ப சாமிக்கு நகைக்கடையை அறிமுகம் செய்தார். வாழவந்தான் ரூ. 40 லட்சம் வரை செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் நகை சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வருவதாகவும், மொத்தமாக ரூ. 1 கோடிக்கும் மேல் நகை சீட்டு தொகை சேர்ந்திருக்கும் என்று கூறப்படுகிறது. நகைசீட்டில் சேர்ந்தவர்களுக்கு பணத்தை திருப்பித்தராமல் நகைக்கடை மூடப்பட்டுள்ளது.
இந்த மோசடி குறித்து கருப்பசாமி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் அவர்கள் வழக்குப்பதிவு செய்து பவுன்ராஜ், சுப்பிரமணியனின் மனைவி முத்துமாரி ஆகியோரை கைது செய்தனர். மேலும் வரதராஜன் உள்ளிட்ட மற்றவர்களை தேடி வருகின்றனர்.
- கடந்த 2022-ம் ஆண்டில் சேலம் ரெயில்வே கோட்டத்தில் முறைகேடாக ரெயில் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டதாக 73 வழக்குகள் ஆர்.பி.எப்.போலீசார் பதிவு செய்துள்ளனர்.
- இந்த 73 வழக்குகளிலும் முறைகேடாக கூடுதல் விலைக்கு ரெயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்த 75 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்:
சேலம் கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்கள் வழியாக தினமும் 150-க்கும் மேற்பட்ட ரெயில்கள் தினசரி சென்று வருகின்றன. இந்த ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு டிக்கெட் எடுத்து முறைகேடாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக சேலம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசுக்கு (ஆர்.பி.எப்) புகார் வந்தது. இதையடுத்து போலீசார், முறைகேடாக டிக்கெட் விற்பனையில் ஈடுப டும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி.யில் பல்வேறு பெயர்களில் கணக்குகளை வைத்துக்கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்து விற்பனை செய்பவர்களை பணபரிமாற்றத்தின் மூலம் கண்டறிந்து அவர்களை கண்காணித்து வருகின்றனர்.
75 பேர் கைது
அந்த வகையில் கடந்த 2022-ம் ஆண்டில் சேலம் ரெயில்வே கோட்டத்தில் முறைகேடாக ரெயில் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டதாக 73 வழக்குகள் ஆர்.பி.எப்.போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்த 73 வழக்குகளிலும் முறைகேடாக கூடுதல் விலைக்கு ரெயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்த 75 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்க
ளிடம் இருந்து ரூ.28 லட்சம்
மதிப்பிலான டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்த
னர். மேலும் டிக்கெட் முன்பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட கணினி உள்ளிட்ட மின்னணு எந்திரங்களையும் கைப்பற்றினர்.
ரூ.1 லட்சம் மதிப்பு
நடப்பாண்டில் கடந்த 2 மாதங்களில் மட்டும் சேலம் ரெயில்வே கோட்டத்தில் 4 வழக்குகள் பதிவு செய்ய ப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து போலி பெயரில் எடுக்கப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான ரெயில் டிக்கெட்டுகளை ஆர்.பி.எப். போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
- இயந்திரத்தில் ஸ்மார்ட் கார்டு, யுபிஐ செயலி மூலம் பயணச்சீட்டு பெறலாம்.
- ஆர்-வேலட் மூலம் பயணச்சீட்டு பெறுபவர்களுக்கு 3 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பல்வேறு ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. பயணச் சீட்டு பெறுவதற்காக தற்போது 99 தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் பல்வேறு ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ளன.
இந்நிலையில், கூடுதலாக 254 தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளன. இதில், சென்னை மண்டலத்தில் 96, திருச்சி மண்டலத்தில் 12, மதுரை மண்டலத்தில் 46, சேலம் மண்டலத்தில் 12 மற்றும் எஞ்சிய 88 இயந்திரங்கள் திருவனந்தபுரம் பாலக்காடு மண்டலத்தில் உள்ள ரயில் நிலையங்களில் நிறுவப்பட உள்ளன.
இந்த இயந்திரத்தில் ஸ்மார்ட் கார்டு, யுபிஐ செயலி மூலம் பயணச்சீட்டு பெறலாம். மேலும், மாதாந்திர மற்றும் காலாண்டு சீசன் டிக்கெட்டுகளை புதுப்பிக்கலாம். ஆர்-வேலட் மூலம் பயணச்சீட்டு பெறுபவர்களுக்கு 3 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலம், பயணச் சீட்டு பெறுவதற்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.
தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் இயந்திரத்தில் இடம் பெற்றுள்ளதால் பயணிகள் எளிதாகப் பயன்படுத்தலாம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இருப்பினும் ஏடிவிஎம் இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு கற்பிக்கப்பட்டால் மேலும் உதவியாக இருக்கும் என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- எப்படி வந்தது என்று பொதுமக்கள் கேள்வி
- போலியாக அச்சிடப்பட்டவையா என்று அதிர்ச்சி
ஜெயங்கொண்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் இயக்கப்படும் பேருந்துகளில் இயந்திரத்தின் மூலம் பயண சீட்டுகள் வழங்கப்பட்டாலும் 40% பேருந்துகளில் டிக்கெட் கிழித்தே வழங்கப்படுகிறது இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள விசாலாட்சி நகரில் அரசு பேருந்து கிழித்து வழங்கப்படும் பயண சீட்டு ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது சேலம் மற்றும் கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட பேருந்து பயண சீட்டுகள் ஒரே இடத்தில் குவிந்து கிடந்தன. 220 ரூபாய் பயண சீட்டிலிருந்து ஒரு ரூபாய் பயண சீட்டு வரை 300-க்கும் மேற்பட்ட பேருந்து பயண சீட்டுகள் ஒரே இடத்தில் குவிந்து கிடந்தது. அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பயண சீட்டுகள் ஒரே இடத்தில் எவ்வாறு கிடைக்கிறது என்பது மர்மமாக உள்ளது போக்குவரத்து கழகத்திலிருந்து டிக்கெட்டுகளை நடத்துனர்களுக்கு வழங்கும் போது டிக்கெட்டின் எண்கள் உள்ளிட்டவற்றை குறித்துக் கொண்டே நடத்துனருக்கு வழங்கப்படுகிறது மேலும் நடத்துனர்கள் இரவு நேரங்களில் கணக்கை ஒப்படைக்கும் போது டிக்கெட்டுகளின் எண்களின் அடிப்படையில் கணக்கை ஒப்படைக்க வேண்டும் எனவே அரசின் சார்பில் அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டாக இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என கூறும் சமூக ஆர்வலர்கள் பேருந்துகளில் வழங்குவதற்காக போலியாக டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு இவ்வாறு சிதறி கிடக்கின்றனவா என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பயண சீட்டுகள் ஒரே இடத்தில் குவிந்து கிடந்தது அப்பகுதி மக்களுடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- பயணி அபராதம் செலுத்தவில்லை என்றால், 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
- டிக்கெட் பெற்றும் பயணம் செய்ய முடியாமல் போனவர்களின் எண்ணிக்கை 1.65 கோடி ஆகும்.
புதுடெல்லி :
மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் சந்திரசேகர் குவார், ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்த பயணிகள் எண்ணிக்கை, அவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராத தொகை விவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டப்படி ரெயில்வேயிடம் கேட்டிருந்தார்.
அதற்கு ரெயில்வே தெரிவித்த தகவல்படி, 2022-23-ம் ஆண்டில் ரெயில்களில் டிக்கெட் இன்றி அல்லது தவறான டிக்கெட்டுடன் பயணித்த 3.60 கோடி பயணிகளிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 200 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்கள் எண்ணிக்கை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் ஒரு கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது.
2021-22-ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 2.70 கோடியாக இருந்தது. அப்போது ரூ.1,574 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டிருந்தது.
இந்த 2022-23-ம் ஆண்டில் டிக்கெட் இல்லாமல் பயணித்து பிடிபட்டவர்களின் எண்ணிக்கை, பல சிறிய நாடுகளின் மொத்த மக்கள்தொகையைவிடவும் அதிகம் என்பது ஒரு சுவாரசிய தகவல்.
ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து பிடிபடுபவர்கள், டிக்கெட்டுக்கான அசல் கட்டணத்துடன், குறைந்தபட்சம் ரூ.250 அபராதமாக செலுத்த வேண்டும்.
அந்த பயணி அதை செலுத்த மறுத்தாலோ, அவரிடம் பணம் இல்லாவிட்டாலோ வழக்கு பதிவு செய்யப்பட்டு மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர்படுத்தப்படுவார். அவர் அதிகபட்சமாக ரூ.1,000 வரை அபராதம் விதிப்பார். அந்த பயணி அப்போதும் அபராதம் செலுத்தவில்லை என்றால், 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
இதற்கிடையில், ரெயில்வேயின் தகவல்படி, 2022-23-ம் ஆண்டில் 2.7 கோடி பயணிகள் டிக்கெட் பெற்றிருந்ததும் காத்திருப்பு பட்டியலில் இருந்ததால் ரெயிலில் பயணம் செய்ய முடியவில்லை. இது முக்கிய வழித்தடங்களில் ரெயில் சேவை பற்றாக்குறையை காட்டுகிறது என பயணிகள் குறை தெரிவிக்கின்றனர்.
முந்தைய நிதியாண்டில் இவ்வாறு டிக்கெட் பெற்றும் பயணம் செய்ய முடியாமல் போனவர்களின் எண்ணிக்கை 1.65 கோடி ஆகும்.
- யு.டி.எஸ். செல்போன் செயலி தெற்கு ரெயில்வேயில் கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
- யு.டி.எஸ். செல்போன் செயலி பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது.
சென்னை :
ரெயில் பயணிகள் முன்பதிவில்லாத ரெயில் டிக்கெட்டை பெற, டிக்கெட் கவுண்ட்டரில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை இருந்து வந்தது. இதனால், பயணிகளின் நலன் கருதி எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யு.டி.எஸ். செல்போன் செயலி தெற்கு ரெயில்வேயில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. பயணிகள் தங்களது ஸ்மார்ட் போனில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, முன்பதிவில்லாத டிக்கெட்டை எடுத்துக்கொள்ள முடியும்.
இதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. ஆனாலும், முக்கிய ரெயில் நிலையங்களில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே, இந்த செயலியை பயன்படுத்தி, முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க முடியும். யு.டி.எஸ். செல்போன் செயலியிலும் சில ரெயில் நிலையங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதை கிராமப்புறங்களில் உள்ள ரெயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்த பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், தெற்கு ரெயில்வேயில் ஹால்ட் நிலையங்களில் யு.டி.எஸ். செல்போன் செயலியை பயன்படுத்தி, டிக்கெட் எடுக்கும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹால்ட் நிலையம் என்பது கிராமப்புறத்தில் உள்ள ரெயில் நிலையம் ஆகும். இதற்கு முன்பாக கிராமப்புற ரெயில் நிலையங்களில், டிக்கெட்டை பயணிகளுக்கு முகவர்கள் நேரடியாக வழங்குவார்கள். தற்போது, யு.டி.எஸ். செல்போன் செயலி மூலமாக பயணிகள் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
மேலும், இந்த செயலி மூலம் சீசன் டிக்கெட், நடைமேடை டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட் ஆகியவற்றையும் பெற்றுக்கொள்ளலாம்.
- சேலம் அம்மாப்பேட்டை மற்றும் ஆட்டையாம்பட்டி பகுதியில் முத்ரா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடைகள் செயல்பட்டு வந்தன.
- சேலம் பொரு ளாதார குற்றப்பிரிவு அலு வலகத்தில் புகார் கொடுக்க லாம் என போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை மற்றும் ஆட்டையாம்பட்டி பகுதியில் முத்ரா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த 2 கடைகளிலும் நகைகள் வாங்குவதற்கு சுலப மாத தவணை ரூ.500 முதல் ரூ.2 லட்சம் வரை கட்டும் திட்டம், பழசுக்கு புதுசு திட்டம் மற்றும் தங்க முன்பதிவு திட்டங்கள் இருப்பதாகவும், முதிர்வு காலங்கள் முடிந்தவுடன் தங்க நகைகள் திருப்பி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
புகார்
இந்த திட்டத்தில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மரப்பரை தென்னமரத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 52) என்பவர் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். ஆனால் முதிர்வு காலம் முடிந்த பிறகு முதலீடு ரூபாய், அல்லது அதற்கான தங்க நகை கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த விஜயகுமார் சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
தங்க நகை திட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந்தேதி எனது பெயரில் முதல் மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் 9 மாதங்கள் ரூ.90 ஆயிரம் முத்ரா ஜூவல்லர்ஸ் கடை உரிமையாளர் முருகவேல் கணக்கில் செலுத்தினேன். மேலும் 2 மாதம் ரூ.20 ஆயிரம் நேரடியாக கட்டினேன்.
மேலும் நான் திருச்செங்கோட்டில் வைத்திருந்த வீட்டு மனை நிலத்தை விற்று அந்த பணத்தை எஸ்.எம். கோல்டு ஸ்வர்ண விருட்ஷா தங்க முன்பதிவு திட்டத்தில் சேர்ந்து அதில் மாதம் மாதம் ரூ. 2 லட்சம் வீதம் 10 மாதங்களுக்கு ரூ. 20 லட்சம் கட்டினேன். தொடர்ந்து நெக்லஸ் செய்வதற்காக ரூ.10 லட்சம் கட்டினேன். ஆனால் முதலீடு செய்த பணத்தையும், நகையையும் திருப்பி தரவில்லை.
இதனால் விஜயகுமார் ஆட்டையாம்பட்டியில் முத்ரா நகைக்கடையில் சென்றபோது, அந்த நகைக்கடை பூட்டப்பட்டு இருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது கடை உரிமையாளர்கள் முருக வேல், அவரது மனைவி கலைவாணி இருவரும் உன்னைப்போல் பல பேர்க ளிடம் நகை சீட்டில் பணத்தை வாங்கி ஏமாற்றி விட்டு ஓடி விட்டார்கள் என கூறி னார்கள். இதனால் நான், முருகவேல் வசிக்கும் அம்மாப்பேட்டையில் உள்ள வீட்டிற்கு சென்றேன். அங்கும் அவர் வீடு பூட்டியிருந்தது.
பிறகு நான் தொலை பேசியில் அவர்களை தொடர்பு கொண்டபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு பல இடங்களில் தேடி பார்த்தபோது அவர்களை கண்டுபிடிக்க முடிய வில்லை. முருகவேல், கலை வாணி ஆகியோர் தலை மறைவாகி விட்டார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.
அதன்பேரில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், முத்ரா ஜூவல்லர்ஸ் நகைக்கடை உரிமையாளர்கள் முருக வேல் மற்றும் இவரது கலைவாணி ஆகியோர் மீது 120 (பி), 420 ஐ.பி.சி. மற்றும் டி.என்.பி.ஐ.டி. சட்ட பிரிவு 5 உள்ளிட்ட பிரிவுகளின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட பொது மக்கள் சம்பந்தப்பட்ட அனைத்து அசல் ஆவ ணங்கள், அடையாள அட்டையுடன் சேலம் பொரு ளாதார குற்றப்பிரிவு அலு வலகத்தில் புகார் கொடுக்க லாம் என போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.
- நெல்லை மாவட்டத்தில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக ரெயில்கள், பஸ்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.
- வால்வோ ஏ.சி. பஸ் டிக்கெட்டுகள் ரூ.4,460 வரை விற்பனையாகிறது.
நெல்லை:
தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறை முடி வடைந்து பெரும்பாலானோர் தங்கள் வசிக்கும் ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் இருந்தும் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக ரெயில்கள், பஸ்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.இதனால் இன்று சந்திப்பு ரெயில் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் டிக்கெட் தீர்ந்துவிட்டது.
வால்வோ ஏ.சி. பஸ் டிக்கெட்டுகள் சாதாரண நாட்களில் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இரு மடங்கு விலை உயர்வு ஏற்பட்டு ரூ.4,460 வரை விற்பனையாகிறது. இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட ஏ.சி. பஸ் டிக்கெட் விலை சாதாரண நாட்களில் ரூ.1,600 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.2,200 முதல் ரூ. 2500 வரை விற்பனை ஆகிறது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- காரைக்கால் - திருச்சி ரெயில் பயண நேரத்தை மாற்ற வேண்டும்.
- திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும்
தஞ்சாவூர்:
தஞ்சையில் ரெயில் பயணிகள் சங்க கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத் தலைவா் அய்யனாபுரம் நடராஜன் தலைமை வகித்தாா்.
செயலா் வக்கீல் ஜீவக்குமாா் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில், தஞ்சாவூா் ரெயில் நிலையத்தில் அம்ரிபாரத் திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் தஞ்சாவூா் ரெயில் நிலைய பின்பகுதி நுழைவு வாயில் அருகேயுள்ள பயணச் சீட்டு வழங்கும் மையத்தை 24 மணிநேரமும் செயல்பட வைத்து, அங்கு முன்பதிவு வசதியும் செய்து கொடுக்க வேண்டும்.
வண்டி எண் 06739 காரைக்கால் - திருச்சி ரெயில் மாலை 5.15 மணிக்கு தஞ்சாவூருக்கு வந்து புறப்படுகிறது.
அரசு ஊழியா்கள், வங்கி ஊழியா்கள், பணி முடிந்து மாலையில் வீடு திரும்ப வசதியாகவும், மாணவ, மாணவிகள் செல்ல வசதியாகவும் மாலை 6 மணிக்கு புறப்படும் வகையில் நேரத்தை மாற்ற வேண்டும்.
பயணிகளுக்கு பயன்படும் வகையில் வண்டி எண் 06646 திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரெயில் காலை 8 மணிக்கு தஞ்சாவூரில் இருந்து புறப்படும் விதமாக பயண நேரத்தை மாற்ற வேண்டும்.
திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு காலை 6.05 மணிக்கு பிறகு 11 மணிக்கு சோழன் விரைவு ரெயில்தான் உள்ளது.
இதற்கு இடைப்பட்ட நேரத்தில் ரெயில்கள் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் உறுப்பினா்கள் கண்ணன், திருமேனி, செல்லகணேஷ், உமா்முக்தாா், பைசல்அமகது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
- மெட்ரோ ரெயில் சேவைக்கு இருக்கும் வரவேற்பை விரிவாக்கம் செய்வதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
- பொது மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள சலுகையுடன் ஒரு நிபந்தனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் அதிநவீன போக்குவரத்து முறையாக அறிமுகமாகி இன்று அத்தியாவசிய போக்குவரத்து சேவையாக உருவெடுத்து இருக்கிறது சென்னை மெட்ரோ ரெயில். நகரின் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் துவங்கப்பட்டு, தற்போது நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதில் இருந்தே, மெட்ரோ ரெயில் சேவைக்கு இருக்கும் வரவேற்பை புரிந்து கொள்ள முடியும்.
சென்னை மெட்ரோ ரெயிலில் தினசரி பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பொது மக்களுக்கு அவ்வப்போது சலுகைகளும் அறிவிக்கப்படுகின்றன.
அந்த வகையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி ஒரு நாள் மட்டும் ரூ.5 கட்டணத்தில் பொது மக்கள் பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.
ஆனால், அதற்கு ஒரு நிபந்தனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாடிக் க்யூஆர், பேடிஎம், வாட்ஸ்அப் மற்றும் போன்பே மூலம் பெறும் டிக்கெட்டுகளுக்கு மட்டும் இந்த சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.