என் மலர்
நீங்கள் தேடியது "Tomatoes"
- விவசாயிகள் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
- ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்ச ந்தை செயல்படுகிறது. வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.
நேற்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.10, கத்தரிக்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, பெரிய வெங்காயம் ரூ.20, சின்ன வெங்காயம் ரூ. 30, உருளைக்கிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.40, புடலங்காய் ரூ.50, முட்டை கோஸ் ரூ.25, பீன்ஸ் ரூ.120, கேரட் ரூ.40, பாவற்காய் ரூ.60,வெண்டை க்காய் ரூ.60, இஞ்சி ரூ.100, அவரைக்காய் ரூ.80, நேரோ காய் ரூ. 30, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.
- ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.
- பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளகோவில் :
வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது, வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.
நேற்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.15, கத்தரிக்காய் ரூ.60, பீர்க்கங்காய் ரூ.60. பெரிய வெங்காயம் ரூ.20 சின்ன வெங்காயம் ரூ. 40. உருளைக்கிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.40, புடலை காய் ரூ.40, முட்டை கோஸ் ரூ.20, பீன்ஸ் ரூ.120, கேரட் ரூ.40, பாவற்காய் ரூ.60,வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.120, அவரைக்காய் ரூ.100, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.
- கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தக்காளி விலை சரிந்து, 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
- திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தை, தென்னம்பாளையம் தினசரி மார்க்கெட்டுக்கும் தக்காளி வரத்து பாதியாக குறைந்துள்ளது.
திருப்பூர்:
தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விரைவில் ஒரு கிலோ விலை 100 ரூபாயை எட்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
ஒரே நேரத்தில் உள்ளூர், வெளிமாநில வரத்து என இரண்டும் குறைந்ததால் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தை, தென்னம்பாளையம் தினசரி மார்க்கெட்டுக்கும் தக்காளி வரத்து பாதியாக குறைந்துள்ளது. தெற்கு உழவர் சந்தைக்கு வழக்கமாக 35 முதல் 38 டன் தக்காளி வரும் நிலையில் தற்போது 25 முதல் 30 டன் தக்காளி மட்டுமே வருகிறது.
வடக்கு உழவர்சந்தைக்கு 8 டன் வரும் நிலையில், 4 டன் தக்காளி வருவதே அரிதாகியுள்ளது. திருப்பூருக்கான தக்காளி வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் 26 கிலோ தக்காளி டிப்பர் 2,000 ரூபாய்க்கும், 14 கிலோ சிறிய டிப்பர் 1,000 ரூபாய்க்கும் விற்றது. மொத்த விலையில் தக்காளி 70 முதல் 80 ரூபாய்க்கும், சில்லறை விலையில் கிலோ 80 முதல் 85 ரூபாய்க்கும் தக்காளி விற்றது. இதனால் மளிகை கடைகளில் 250 கிராம் தக்காளி 20 முதல் 30 ரூபாய், கிலோ 90 ரூபாய் என விற்கப்படுகிறது.
தக்காளி விலை திடீர் உயர்வு குறித்து உழவர் சந்தை அலுவலர்கள் கூறியதாவது:-
கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தக்காளி விலை சரிந்து, 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது. செலவு அதிகரித்து வரும் சூழலில் நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என எண்ணிய விவசாயிகள் பலர் தக்காளி பயிரிடுவதை குறைத்தனர். இதனால் வரத்து குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது என்றனர்.
- தக்காளி விலை உயர்வு வரும் நாட்களிலும் நீடிக்கும் என்று தெரிகிறது.
- மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தக்காளி விலை குறைவு தான்.
போரூர்:
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இன்று கிலோ ரூ.120-க்கு தக்காளி விற்கப்பட்டது. தொடர்ந்து உச்சத்தில் இருந்து வரும் தக்காளி விலையால் பொதுமக்கள் கவலை அடைந்து உள்ளனர்.
சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் தக்காளி வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வு என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவரை தக்காளி வரத்து இன்னும் சீராக வில்லை. இதனால் தக்காளி விலை உயர்வு வரும் நாட்களிலும் நீடிக்கும் என்று தெரிகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.110-க்கு விற்கப்படுகிறது. வெளிமார்க்கெட் மற்றும் சில்லறை கடைகளில் ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலையை தொடர்ந்து தற்போது காய்கறி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து உள்ளது. காய்கறிகள் விலை கிலோ ரூ.50-க்கும் கீழ் இருந்த நிலையில் அனைத்து காய்கறிகளின் விலையும் தற்போது எகிறியுள்ளது.
கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு இன்று 400 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்திருந்தன. மொத்த மர்க்கெட்டில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ120-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.70-க்கும், ஊட்டி கேரட் ரூ.70-க்கும், சின்ன வெங்காயம் ரூ.120-க்கும் விற்பனை ஆனது.
பச்சை மிளகாய் ரூ.110-க்கும், உஜாலா கத்தரிக்காய்-ரூ.60-க்கும், முருங்கைக்காய் ரூ.60,வெண்டைக்காய் -ரூ.40, இஞ்சி ஒரு கிலோ ரூ.210-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் காய்கறிகள் விலை தாறுமாறாக அதிகரித்து பீன்ஸ் ஒரு கிலோ ரூ.140வரையிலும், இஞ்சி ஒரு கிலோ ரூ.250-க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.150வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் பெங்களூர் தக்காளி விலையும் உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத்தரசிகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
தக்காளி விலை உயர்வு குறித்து மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது:-
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து மட்டுமே தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.7-க்கு விற்கப்பட்டது. ஆனால் அதையும் வாங்கி செல்ல ஆள் இல்லாமல் பல இடங்களில் விவசாயிகள் தக்காளியை குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டது.
தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் தமிழகத்தில் நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தியை விவசாயிகள் பலர் நிறுத்தி விட்டனர். ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தற்போது பெய்த மழையால் அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி செடிகள் கடுமையாக சேதமடைந்து வீணாகிவிட்டது. இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டு தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தக்காளி விலை குறைவு தான்.
இன்று கோயம்பேடு சந்தையில் ஒரு பெட்டி தக்காளி ரூ1200-க்கு விற்கப்படுகிறது. அதே சமயம் தக்காளி உற்பத்தி நடந்து வரும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநி லத்தில் ஒரு பெட்டி தக்காளி (14கிலோ) ரூ1600-க்கு விற்கப்படுகிறது. எனவே இந்த விலை உயர்வு தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- விலை உயர்வால் தக்காளி வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்கின்றனர்.
- பெரும்பாலான ஓட்டல்களில் இட்லி, தோசைக்கு தக்காளி சட்னியை வைப்பதை தவிர்த்துள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகள் விலை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தக்காளியின் வரத்து குறைவால் விலை அதிகரித்த நிலையில், வாங்க பொதுமக்கள் தக்காளி வாங்க தயாராக இல்லை. இதனால் மாலை நேரத்தில் குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக ஒரு கிலோ தக்காளி ரூ.90 முதல் ரூ.120-க்கு விற்பனை செய்யப் பட்டது. நேற்று காலை ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விற்றது. இதன் காரணமாக மக்கள் தக்காளியை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.
இதனால் தக்காளிகள் விற்பனை ஆகாமல் அதிக அளவில் குவித்து வைத்தி ருந்தனர். பழங்கள் அழுகும் நிலைக்கு சென்றதும் மாலையில் ரூ.100-க்கு விற்றனர். தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்கள் தெரிவித்தனர்.
தக்காளி விலை உயர்வால் பெரும்பாலான ஓட்டல்களில் இட்லி, தோசைக்கு தக்காளி சட்னியை வைப்பதை தவிர்த்துள்ளனர்.
+2
- நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் பெரும்பாலான காய்கறிகளின் விலை ரூ.100-ஐ கடந்து விற்பனையானது.
- மிளகாய் நேற்றைய விலையில் இருந்து குறைந்து கிலோ ரூ.90-க்கு விற்பனையானது.
நெல்லை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் பெரும்பாலான காய்கறிகளின் விலை ரூ.100-ஐ கடந்து விற்பனையானது. உள்ளூர்களில் இருந்து காய்கறிகள் வராத தால், வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து காய்கறிகள் இறக்குமதி செய்வதால் ஏற்படும் செலவு தான் காய்கறிகளின் விலையேற்றத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்டது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று மொத்த மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 முதல் ரூ.135 வரை விற்பனையானது. இதனால் வியாபாாரிகள் அதனை கடைகளுக்கு வாங்கி சென்று சில்லறை விற்பனையாக கிலோ ரூ.150 வரை விற்றனர். மேலும் மிளகாய் கிலோ ரூ.100 வரையிலும், பீன்ஸ் ரூ.120-க்கும் விற்பனையான நிலையில் இன்று அவற்றின் விலையும் சற்று குறைந்துள்ளது. இன்று கிலோ ரூ.90-க்கு விற்கப்பட்டது.
இன்றைய நிலவரப்படி டவுன் நயினார்குளம் மார்க்கெட்டில் ஒரு கிலோ மிளகாய் நேற்றைய விலையில் இருந்து குறைந்து ரூ.90-க்கு விற்பனையானது. பீன்ஸ் விலையும் ரூ.80 முதல் ரூ.100 என்ற நிலையில் விற்கப்பட்டது. பாவூர்சத்திரம் மார்க்கெட்டி லும் காய்கறிகள் வரத்து இருந்ததால் அங்கும் விலை சற்று குறைய தொடங்கி உள்ளது.
இதுகுறித்து நயினார்குளம் மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் வியாபாரி கணேசன் கூறுகையில், பாவூர்சத்திரம், மானூர் களக்குடி, உக்கிரன்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தற்போது தக்காளி வர ஆரம்பித்துள்ளது. இதனால் இனி தக்காளியின் விலை சற்று குறைய தொடங்கும் என்று நம்பலாம்.
அதே நேரத்தில் உடுமலைப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் தக்காளி வரத்து அதிகமாகவே உள்ளது. எனவே இன்று காய்கறிகள் விலை சற்று குறைந்துள்ளது. கேரட்-ரூ.70, முட்டை கோஸ்-28, பீட்ரூட்-50, அவரை-70, உருளை-25, கத்தரி-45 என்ற விலையில் விற்பனையாகிறது என்றார்.
மார்க்கெட் வியாபாரி அழகேசன் கூறுகையில், அவரைக்காய் ஒட்டன்சத்திரம், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சற்று அதிகமாக வர ஆரம்பித்துள்ளது. நேற்று மிளகாய் ரூ.100-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று குறைந்துள்ளது.
அதே நேரம் உருட்டு வகையான மிளகாய் இன்று ரூ.95-க்கு விற்பனையானது. நேற்று இதன் விலை ரூ.135-க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.40 வரை குறைந்துள்ளது. அதேபோல் நேற்று 30 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.2,900 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.2,500 ஆக குறைந்துள்ளது என்றார்.
பாளை மார்க்கெட்
அதே நேரத்தில் பாளை மார்க்கெட்டில் இன்று தக்காளி, மிளகாய் கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், தக்காளி மொத்த வியாபாரிகளுக்கு ரூ.90 முதல் ரூ.100 வரையும், சில்லறைக்கு ரூ.110-க்கும் விற்பனை ஆகிறது.
இஞ்சி விலை ெமாத்த வியாபாரிகளுக்கு கிலோ ரூ.200 ஆகவும், சில்லறைக்கு ரூ.220 வரையும் விற்கப்படுகிறது. இதேபோல பீன்ஸ், அவரைக்காய் கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது என்றார்.
- ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
- ஒருவருக்கு அரை கிலோ தக்காளி மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
நாடு முழுவதும் தக்காளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை உச்சத்தில் காணப்படுகிறது. கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்படுகிறது. விளைச்சல் பாதிப்பு மற்றும் வரத்து குறைவால் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி இன்று தமிழகத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் முதற்கட்டமாக 15 ரேஷன் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை தொடங்கியுள்ளது. தஞ்சையில் 8 கடைகளிலும், கும்பகோணத்தில் 7 கடைகளிலும் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடைக்கும் 15 கிலோ வழங்கப்பட்டு ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் ஒருவருக்கு அரை கிலோ தக்காளி மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இனி அடுத்த கட்டமாக மாவட்டத்தில் பல்வேறு ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 2 ஆண்டுகளாக ஓமலூர் வட்டாரத்தில் பெய்த மழை காரணமாக நீர் நிலைகளில் போதுமான தண்ணீர் உள்ளது.
- தோட்டங்களில் விளையும் தக்காளியை அறுவடை செய்து, மொத்தமாக வாகனங்களில் கொண்டு வந்து, 2 கிலோ தக்காளி ரூ.150 என விற்பனை செய்கின்றனர்.
ஓமலூர்:
ஓமலூர்,காடையாம் பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டார கிராமங்களில் காய்கறி சாகுபடி அதிகள வில் செய்யப்படும். கடந்த 2 ஆண்டுகளாக ஓமலூர் வட்டாரத்தில் பெய்த மழை
காரணமாக நீர் நிலைகளில் போதுமான தண்ணீர் உள்ளது. அதனால், பெரும்பா லான விவசாயிகள் குறு கிய கால பயிர்களை தவிர்த்து நெல், கரும்பு, வாழை, மஞ்சள் போன்ற பயிர்களை சாகுபடி செய்து காய்கறி வருகின்றனர்.
இந்த நிலையில் குறைந்த நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் மட்டும் காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து இருந்ததால் விவசாயிகள் தக்காளி அதிகளவில் பயிரிடுவதை தவிர்த்து வந்தனர். சில விவசாயிகள் மட்டும் தக்காளி சாகுபடி செய்திருந்தனர். அதனால், சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது.
கடந்த மாதம் தக்காளி விலை பன்மடங்கு உயர்ந்து தற்போது கிலோ ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனையாகி வருகிறது. அதனால் மக்கள் குறைந்த அளவிலேயே தக்காளியை வாங்குகின்றனர்.
இந்த நிலையில் தற்போது ஓமலூர் வட்டாரத்தில் 2 கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் சாகுபடி செய்துள்ள நாட்டு தக்காளி தற்போது நல்ல விளைச்சல் கொடுத்து வருகிறது. இந்த தக்காளி அளவில் சிறியதாக இருப்பதாலும், 4,5 நாட்கள் வரை மட்டுமே வைத்து பயன்படுத்த முடியும் என்பதாலும் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். தோட்டங்களில் விளையும் தக்காளியை அறுவடை செய்து, மொத்தமாக வாகனங்களில் கொண்டு வந்து, 2 கிலோ தக்காளி ரூ.150 என விற்பனை செய்கின்றனர்.
விலை குறைவு மற்றும் நாட்டு தக்காளி என்பதால் மக்கள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.
- தக்காளி விலை அதிகமாக இருந்தால், மக்கள வீட்டிலேயே தக்காளி செடியை வளர்க்க வேண்டும்.
- தக்காளி விலையேற்றத்துக்கு தீர்வு இருக்கிறது.
நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தக்காளி விலை உயர்ந்தால், அவற்றை வீட்டில் வளர்க்கவும் அல்லது சாப்பிடுவதை நிறுத்தவும் என்று உத்தரபிரதேச மாநில பெண்கள் மேம்பாடு மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து அமைச்சர் பிரதீபா சுக்லா மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
உ.பி.அரசு சார்பில் நடைபெற்ற பாரம்பரிய மரம் நடும் திட்டத்தின் கீழ் தோட்ட இயக்கத்தில் கலந்து கொண்ட அமைச்சர் சுக்லா மரக்கன்றுகளை நட்டார்.
பின்னர் அமைச்சர் சுக்லா கூறியதாவது:-
தக்காளி விலை அதிகமாக இருந்தால், மக்கள வீட்டிலேயே தக்காளி செடியை வளர்க்க வேண்டும். தக்காளிக்கு பதிலாக எலுமிச்சையும் பயன்படுத்தலாம். தக்காளியை யாரும் சாப்பிடாமல் இருந்தால் விலை தானாக குறைந்துவிடும். எது விலை அதிகமாக இருந்தாலும் அதை நிராகரிக்கவும். அது தானாகவே மலிவாகிவிடும்.
அசாஹி கிராமத்தில் சத்துணவுத் தோட்டம் செய்துள்ளோம். கிராமத்தில் உள்ள பெண்கள் சத்துணவுத் தோட்டத்தை அமைத்துள்ளார்கள். அதில் தக்காளியும் நடலாம். இந்த விலையேற்றத்துக்கு தீர்வு இருக்கிறது. தக்காளி எப்பொழுதும் விலை உயர்ந்தது. தக்காளி விலை உயர்வது புதிதல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக தக்காளி விலை குறையாமல் ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- கள்ளிமந்தையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தக்காளி பயிரிட்டு நல்ல லாபம் கிடைத்துள்ளதாக தெரிவித்தனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக தக்காளி விலை குறையாமல் ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உழவர் சந்தை, மொத்த மார்க்கெட்டுகளில் விலை குறையாததால் சில்லரை விற்பனையிலும் மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ள ப்பட்டனர்.
வரத்து குறைவு மற்றும் வெளி மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தக்காளி விலை உயர்ந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இடைய கோட்டை, கள்ளிமந்தையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கடந்த சித்திரை மாதம் தக்காளி நடவு செய்தனர். அதை 70 நாளில் அறுவடை செய்து மார்க்கெட்டுக்கு விற்பனை செய்தபோது அதிக வரத்தால் மிகக்குறைந்த விலைக்கு வியாபாரிகள் வாங்கியதால் போக்குவரத்து செலவிற்கு கூட கட்டுபடியாகாததால் விவசாயிகள் தக்காளியை பறித்து சாலை ஓரங்களில் கொட்டிய காலம் ஏற்பட்டது.
சரியான நேரத்தில் பருவமழை பெய்யாதது, மாறுபட்ட சிதோஷண நிலை, திடீரென தக்காளி விளைச்சல் வரும் நேரத்தில் பெய்த மழை, வெயில் உள்ளிட்ட பருவ நிலை மாறுபாட்டால் விளைச்சல் பாதிக்கப்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்ததால் பலரும் தக்காளியை பயிரிட விரும்பவில்லை. இதனால் தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அதன்பிறகு தக்காளி பயிரை அழித்து மாற்று விவசாயத்திற்கு விவசாயி கள் சென்று விட்டனர். வரத்து குறைந்ததால் தக்காளி விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நகரத்திற்கு ஏற்ற வகையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 கிலோவில் 10 முதல் 15 தக்காளிகள் வரை இருக்கும். இன்றைய விலையை கணக்கு பார்த்தால் ஒரு தக்காளி ரூ.13 என்ற விலையில் உள்ளது.
கடந்த 70 நாட்களுக்கு முன்பு நடவு செய்து தற்போது பறித்து விற்ப னைக்கு அனுப்பி வரும் கள்ளிமந்தையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது.
இது குறித்து விவசாயி செல்வராஜ் கூறுகையில், பக்கத்து தோட்டத்தில் தக்காளி பயிரிட்டதால் அதை பார்த்து மற்ற அனைத்து விவசாயிகளும் தக்காளியையே பயிரிடுவ தால் வரத்து அதிகரிக்கு ம்போது விலை கிடைப்ப தில்லை.
இதனையடுத்து விவசாயி கள் மற்ற விவசாயத்திற்கு மாறிய நேரத்தில் நான் 2 ஏக்கர் அளவில் தக்காளி நடவு செய்து கவனத்தோடு முறையாக பராமரித்து வந்ததால் தற்போது 3 நாளைக்கு ஒரு முறை 14 கிலோ கொண்ட பெட்டியில் 30 பெட்டிகள் வரை தக்காளி கிடைக்கிறது.
வரத்து குறைந்த நேரத்தில் தக்காளியை பறித்து ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு சென்றால் 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.900 முதல் ரூ.1300 வரை வியா பாரிகள் வாங்குகி றார்கள்.
வியாபாரிகளிடம் இருந்து சில்லரை வியாபாரி கள் வாங்கி அதை ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனை செய்கின்றனர். இதனால் இந்த முறை தக்காளி சாகுபடி எங்களுக்கு நல்ல பலனை கொடுத்துள்ளது என்றார்.
- சேலம் மார்க்கெட்டுகள் மற்றும் உழவர் சந்தைகளுக்கு விளைச்சல் குறைவால் தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளது.
- சேலம் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய்க்கும், வெளி மார்க்கெட்களில் 120 ரூபாய் வரையும் விற்பனையாகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 11 உழவர் சந்தைகள் மற்றும் பல காய்கறி மார்க்கெட்கள் உள்ளன. இங்கு சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விற்பனைக்கு காய்கறிகள் அதிக அளவில் கொண்டு வரப்படுகின்றன. இந்த காய்கறிகளை சேலம் மற்றும் அண்டை மாவட்டங் களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வாங்கி செல்கிறார்கள்.
தக்காளி
ரூ.120 ஆக நீடிப்பு
சமீப காலமாக சேலம் மார்க்கெட்டுகள் மற்றும் உழவர் சந்தைகளுக்கு விளைச்சல் குறைவால் தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளது.
இதனால் அதன் விலை படிப்படியாக உயர்ந்தது. தொடர்ந்து அதே விலை நீடித்து வருகிறது. சேலம் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய்க்கும், வெளி மார்க்கெட்களில் 120 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் 70 முதல் 90 ரூபாய் வரையும் விற்பனையாகிறது .
பீன்ஸ் ரூ. 105
உழவர் சந்தைகளில் மற்ற காய்கறிகளின் விலை விவரம் வருமாறு, உருளை கிழங்கு 34, பெரிய வெங்காயம் 25-30, பச்சை மிளகாய் 70-75, கத்திரி 30-36, வெண்டைக்காய் 30-32, முருங்கைக்காய் 30-40, பீர்க்கங்காய் 40-44, சுரக்காய் 20-25, புடலங்காய் 24-26, பாகற்காய் 50-55, தேங்காய் 20-28, முள்ளங்கி 18-20, பீன்ஸ் 95-105, அவரை 50-55, கேரட் 56-62, மாங்காய் 25-30, வாழைப்பழம் 30-55, கீரைகள் 20-24, பப்பாளி 20-24, கொய்யா 30-45, மாம்பழம் 40-60, ஆப்பிள் 180, சாத்துக்குடி 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
- இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.140 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
- வழக்கத்தை விட குறைவான அளவிலே தக்காளி லோடுகள் வருகின்றன.
தஞ்சாவூர்:
நாடு முழுவதும் தக்காளியின் விலை தொடர்ந்து உச்சத்தில் காணப்படுகிறது. ஒரு மாதத்திற்கும் மேலாகவே ஏறுமுகத்தில் தக்காளியின் விலை உள்ளது. இடையில் சற்று விலை குறைந்தது. இதனால் தக்காளி விலை படிப்படியாக குறையும் என எண்ணி பொதுமக்கள் தக்காளிகளை அதிக அளவில் வாங்கி சென்றனர்.
இருந்தாலும் அந்த விலை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. மீண்டும் தற்போது தக்காளி விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.
தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.140 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ரூ.100-க்கு தக்காளி விற்கப்பட்டது. ஆனால் தற்போது கிலோவுக்கு ரூ.40 வரை உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் வழக்கத்தை விட குறைந்த அளவிலேயே தக்காளிகளை வாங்கி செல்கின்றன. சமையலில் தக்காளிக்கு பதில் வேறு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகளை பயன்படுத்தும் நிலையில் உள்ளனர்.
தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்து வரும் தக்காளியின் விலை உயர்வு இல்லத்தரசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறும்போது :-
வெளியூரில் இருந்து தஞ்சைக்கு வழக்கத்தை விட குறைவான அளவிலே தக்காளி லோடுகள் வருகின்றன. விளைச்சல் பாதிப்பால் வரத்து பெருமளவில் குறைந்துள்ளது. தொடர்ந்து வரத்து இதேபோல் குறைந்தால் தக்காளி விலை இதைவிட அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் விளைச்சல் அதிகரித்து வரத்தும் அதிகரித்தால் மட்டுமே தக்காளியின் விலை குறையும் என்றனர்.