என் மலர்
நீங்கள் தேடியது "tomorrow"
- அதனை தொடர்ந்து 15 ஆம் தேதி காலை திருவிழா திருப்பலி நிறைவேற்றப்படும் .
- அதேபோல பூண்டி மாதா பேராலயமும் அதிநவீன விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ள பூலோகம் போற்றும் பூண்டி மாதா பேராலயத்திபூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா தொடக்கமான கொடியேற்று நிகழ்ச்சியில் அந்தமான் போர்ட் பிளேயர் மறை மாவட்ட பிஷப் விசுவாசம் செல்வராஜ் கலந்துகொண்டு கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றி பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டு திருவிழாவை தொடங்கி வைத்தார்.
நவநாட்கள் எனப்படும் திருவிழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பர பவனியும் பல்வேறு அருட்தந்தையர்களால் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
திருவிழாவில் ஏழாவது நாளான இன்று மாலை மரியா-பாவிகளின் அடைக்கலம் என்ற பொருளில் கோயம்புத்தூர் மதுரை மாவட்ட முதன்மை ஜான் ஜோசப் ஸ்டெனிஸ் திருப்பலி நிறைவேற்றுகிறார்.
விழாவின் 8வது நாளான நாளை மாலை மரியா -மன்னிப்பின் சிகரம் என்ற பொருளில் செங்கல்பட்டு மறை மாவட்ட முதன்மை குரு ஜான்போஸ்கோ திருப்பலி நிறைவேற்றுகிறார்.
பூலோகம் போற்றும் பூண்டி மாதாவின் திருவிழா நாளான நாளை மறுநாள் 14 ஆம் தேதி காலை பூண்டி மாதா பேராலயத்தில் அருட்தந்தையர்களாக பணியாற்றி மறைந்த லூர்து சேவியர் மற்றும் ராயப்பர் அடிகளார் நினைவு திருப்பலி நிறைவேற்ற ப்படுகிறது.
மாலை 6 மணிக்கு கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி மரியா -அருளின் ஊற்று என்ற தலைப்பில் திருப்பலி நிறைவேற்றுகிறார்.
இதில் பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன்,துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ் ,ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இரவு 9.30மணி அளவில் மல்லிகை மலர்களாலும், அதிநவீன மின் விளக்கு அலங்காரத்தில் பூண்டி மாதாவின் தேர்பவனியை கும்பகோணம் பிஷப் அந்தோணிசாமி அடிகளார் தொடங்கி வைக்கிறார்.
அப்போது சிறப்பு வாணவே டிக்கை நடைபெறும் .
அதனை தொடர்ந்து 15 ஆம் தேதி காலை திருவிழா திருப்பலி நிறைவேற்றப்படும் .அன்று மாலை கொடி இறக்கத்துடன் பூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா நிறைவு பெறும் .
பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பேராலய வளாகம் முழுவதும் வண்ண விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல பூண்டி மாதா பேராலயமும் அதிநவீன விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
அலங்கார தேர்ப்பவனி காண்பதற்காக நாடெங்கிலும் இருந்த பக்தர்கள் பூண்டி மாதா பேராலயத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் விரிவான ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய நிர்வாகம் செய்து வருகிறது.
- ராமநாதபுரம், ரெகுநாதபுரம், பெரியபட்டிணம் பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
- ஆர். எஸ்.மடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மின்சார உதவி செயற்பொறியாளர் (நகர்) பாலமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
ஆர். எஸ்.மடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுவதால் சக்கரக்கோட்டை, சின்னக்கடை, புலிக்கா ரத்தெரு, பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், கேணிக்கரை சுற்றியுள்ள பகுதிகள், தாயுமான சாமி கோவில் தெரு, வண்டிக்காரத்தெரு, தங்கப்பா நகர், அண்ணா நகர், அரசு மருத்துவமனை, அரண் மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றியுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையார்வலசை, சிவன்கோவில் மறறும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக்கள் விதி, கே. கே. நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு சிங்காரதோப்பு, பெரியார் நகர், லாந்தை, அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பயோனீயர் சுற்று பகுதிகள், கோட்டை மேடு, எட்டிவயல் மற்றும் ரெகுநாதபுரம் தெற்கு காட்டூர் தெற்குவாணிவீதி படைவெட்டிவலசை, பூசாரி வலசை, ராமன்வ லசை, கும்பரம், இருட்டூ ரணி, வெள்ளரி ஓடை, சேதுநகர், காரான், முத்துப்பேட்டை, பெரிய பட்டிணம், தினைக்குளம், வள்ளி மாடன்வலசை, வண்ணாண்குண்டு, பத்ராதரவை, நயினா மரைக்கான், சேது நகர், பிச்சாவலசை, வள்ளி மாடன்வலசை உத்தரவை, தாதனேந்தல் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- கலந்–தாய்–வில் இடங்–களை தேர்வு செய்–தி–ருக்–கும் முத–லாம் ஆண்டு மாணவ-மாண–வி–க–ளுக்–கான வகுப்–பு–கள் நாளை (வியா–ழக்–கி–ழமை) தொடங்க உள்–ளன.
- அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை திறக்கப்பட உள்ளதையொட்டி கல்லூரி வளாகங்கள் சீரமைக்கப்பட்டு, வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
சேலம்:
தமிழ்–நாட்–டில் உள்ள 164 அரசு கலை மற்–றும் அறி–வி–யல் கல்–லூ–ரி–களில் உள்ள பல்–வேறு பாடப்–பி–ரி–வு–களில் சேரு–வ–தற்–கான மாண–வர் சேர்க்கை கலந்–தாய்–வுக்கு விண்–ணப்–பிக்க அறி–வு–றுத்–தப்–பட்–டது. அதன்–படி, 164 கல்–லூ–ரி–களில் பல்–வேறு பாடப்–பி–ரி–வு–களில் இருக்–கும் 1 லட்–சத்து 7 ஆயி–ரத்து 299 இடங்–க–ளுக்கு 2 லட்–சத்து 46 ஆயி–ரத்து 295 பேர் விண்–ணப்–பங்–கள் பெறப்–பட்டு இருந்–தன.
விண்–ணப்–பித்–த–வர்–க–ளுக்–கான தர–வ–ரிசை பட்–டி–யல் கடந்த மாதம் (மே) 25-ந் தேதி வெளி–யி–டப்–பட்–டது. அத–னைத் தொடர்ந்து முதல்–கட்ட கலந்–தாய்வு கடந்த 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடந்து முடிந்–தது.
முதல்–கட்ட கலந்–தாய்வு நிறைவு பெற்ற நிலை–யில், ஒரு நாள் இடை–வெ–ளிக்கு பிறகு, கடந்த 12-ந் தேதி முதல் 20-ந் தேதி (நேற்று) வரை 2-ம் கட்ட கலந்–தாய்வு நடத்தி முடிக்–கப்–பட்டு இருக்–கிறது.
முத–லாம் ஆண்டு வகுப்–பு–கள்
அந்த வகை–யில் 164 அரசு கலை மற்–றும் அறி–வி–யல் கல்–லூ–ரி–களில் சேரு–வ–தற்கு நடத்–தப்–பட்ட இந்த 2 கட்ட கலந்–தாய்வு முடி–வில், 31 ஆயி–ரத்து 621 மாண–வர்–கள், 44 ஆயி–ரத்து 190 மாண–வி–கள் என மொத்–தம் 75 ஆயி–ரத்து 811 பேர் இடங்–களை தேர்வு செய்து இருக்–கின்–ற–னர். இவர்–களில் அரசு பள்ளி மாண–வி–கள் 21 ஆயி–ரம் பேர் வரு–கின்–ற–னர். அவர்–க–ளுக்கு அர–சின் புது–மைப் பெண் திட்–டத்–தின் கீழ் ஒவ்–வொரு மாத–மும் ரூ.1,000 நிதி–யு–தவி கிடைக்–கும்.
மொத்–தம் உள்ள 1 லட்–சத்து 7 ஆயி–ரத்து 299 இடங்–களில், 75 ஆயி–ரத்து 811 இடங்–கள் நிரம்–பி–யுள்ள நிலை–யில், மீத–முள்ள இடங்–கள் நிரம்–பும் வரை கலந்–தாய்வு நடத்–தப்–படும் என கல்–லூரி கல்வி இயக்–க–கம் அறி–வித்–துள்–ளது.
இந்த நிலை–யில் கலந்–தாய்–வில் இடங்–களை தேர்வு செய்–தி–ருக்–கும் முத–லாம் ஆண்டு மாணவ-மாண–வி–க–ளுக்–கான வகுப்–பு–கள் நாளை (வியா–ழக்–கி–ழமை) தொடங்க உள்–ளன.
சேலம் கருப்பூரில் உள்ள அரசு பெரியார் பல்கலைக் கழகத்தின் மேற்பார்வையில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 22 அரசு கல்லூரிகள், 4 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 91 சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 117 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில் அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை திறக்கப்பட உள்ளதையொட்டி கல்லூரி வளாகங்கள் சீரமைக்கப்பட்டு, வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை கல்லூரி முதல்வர்கள் செய்து வருகிறார்கள்.
- நாடார் மகாஜன சங்கம் சார்பில் கல்வி திருவிழா நாளை நடக்கிறது.
- மண்டல செயலாளர் பி.சேகர்பாண்டியன் தலைமை தாங்குகிறார்.
மதுரை
மதுரை நாடார் மகாஜன சங்கம் (என்.எம்.எஸ்.) சார்பில் கல்வித்திருவிழா- 2023 நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. தெற்குவாசல் நாடார் வித்தியா சாலை மேல்நிலைப்பள்ளியில் மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த விழாவில் மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
நாடார் மகாஜன சங்க மதுரை மண்டல செயலாளர் பி.சேகர்பாண்டியன் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். நாடார் மகாஜன சங்க மதுரை மாவட்டத்தலைவர் சரவணன் என்ற சரவ ணபவ, ராஜேஷ்கண்ணன், தெற்கு வாசல் நாடார் வித்தியாபிவிருத்தி சங்க தலைவர் கணபதி, செயலா ளர் மயில்ராஜன், நாடார் வித்தியாசாலை பள்ளிகள் செயலாளர் குணசேகரன், நாடார் மகாஜன சங்க பொருளாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மேயர் இந்திராணி, பூமிநாதன் எம்.எல்.ஏ., துணை மேயர் நாகராஜன், முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, கூடுதல் அரசு வக்கீல் முரளி, மாநகராட்சி தெற்கு மண்டலத்தலைவர் முகேஷ் சர்மா, கவுன்சிலர் அருண்குமார் ஆகியோர் பரிசு வழங்குகிறார்கள்.
நாடார் வித்தியாசாலை பள்ளிகள் தலைவர் ஆர்.பார்த்திபன் ஏழை மாணவர் களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குகிறார். மதுரை மாவட்ட செயலாளர் சக்திவேல்ராஜ் நன்றி கூறுகிறார்.
- பா.ஜ.க. மாநில இளைஞரணி துணைத்தலைவர் பாண்டித்துரை இல்ல திருமண விழா நடக்கிறது.
- நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் காரைக்குடி பி.எல்.பி பேலஸ் திருமண மகாலில் நடக்கிறது.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் வேலங்குடி சோலைமலையான் வீட்டை சேர்ந்த சோ.கரு.துரைராஜ்-சுசீலா தம்பதியரின் இளைய மகனும், பாரதீய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி துணை தலைவர், தொழிலபதிபர் து.பாண்டித்துரையின் சகோதரருமான சோ.கரு.து.கார்த்திகேயன் மணமகனுக்கும், பள்ளத்தூர் கோடியான் வீடு கோ.வெ.சபாரெத்தினம்-சாந்தி தம்பதியரின் மகளுமான ச.தாரணி மணமகளுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப் பட்டது.
இவர்களது திருமணம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் காரைக்குடி பி.எல்.பி பேலஸ் திருமண மகாலில் நடக்கிறது. பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
இதில் முன்னாள் தேசிய செய லாளர் எச்.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய மகளிரணி தலைவி வானதிசீனிவாசன், மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா, மாநில பொதுச்செய லாளர்கள் அ.பி.முருகா னந்தம், ராம சீனிவாசன், எம்.முருகானந்தம், பொன்.வி.பாலகணபதி, மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
திருமண விழாவில் மாநிலம் முழுவதும் இருந்து மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், மகளிரணியினர், தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். திரும ணத்திற்கான ஏற்பாடுகளை து.பாண்டித்துரை, கோட்டையூர் பேரூராட்சி கவன்சிலர் பா.திவ்யா தம்பதியினர் மற்றும் பள்ளத்தூர் சபா ரெத்தினம்-சாந்தி தம்பதி யினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும்.
- மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம், கீழக்கரை துணை மின் நிலையத்திற்குட்பட்ட திருஉத்தரகோசமங்கை பீடரில் நாளை (13-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பட்டினம்காத்தான், உச்சிப்புளி, பனைக்குளம், உச்சிப்புளி, கீழ நாகாச்சி, செம்படையார்குளம், தாமரைக்குளம், இரட்டையூரணி, புதுமடம், இருமேனி, பிரப்பன்வலசை, மானாங்குடி, நொச்சியூரணி. எஸ்.கே.வலசை, பெருங்குளம், வழுதூர், வாலாந்தரவை, குயவன்குடி. ஏந்தல், மொட்டையன் வலசை, வாணியங்குளம், பெருங்குளம் இந்திராநகர் அதனை சுற்றியுள்ள பகுதிகளும், பனைக்குளம், ஆற்றாங்கரை, தேர்போகி, புதுவலசை, அழகன்குளம், பட்டினம்காத்தான், வாணி, காரிகூட்டம், சாத்தான் குளம், கழுகூரனி, குடிசைமாற்று குடியிருப்பு, ஏ.ஆர். குடியிருப்பு, ஆர். எஸ். மடை, ஆதம் நகர், திருஉத்தரகோசமங்கை, களரி, வெள்ளா, வேளானூர், குளபதம், மோர்க் குளம், நல்லாங்குடி, எக்ககுடி, மேலச்சீத்தை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
- மீனவர்களிடையே குறை களைக் கேட்டறிந்து விழிப்பு ணர்வு ஏற்படுத்துகிறார்.
- பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் கலந்து கொள்கின்றனர்.
கடலூர்:
கடலூர் பாதுகாப்பு குழுமம் சார்பில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்தில் நாளை (18 ந்தேதி) ஆய்வு கூட்டம் மற்றும் மீனவர்களிடையே உள்ள குறை கேட்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு ஏ.டி.ஜி.பி.சந்திப் மிட்டல் கலந்து கொண்டு ஆய்வு செய்து , மீனவர்களிடையே குறை களைக் கேட்டறிந்து விழிப்பு ணர்வு ஏற்படுத்துகிறார்.
இக்கூட்டத்தில் கடலூர், விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநி லத்திலிருந்து கடலோர காவல் படை அதிகாரிகள், கியூ பிரிவு போலீசார், மீன்வளத்துறை அதிகாரி கள் மற்றும் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மீனவப் பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் கலந்து கொள்கின்றனர். இதனைத் தொடர்ந்து கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி கிராமத்தில் அதன் முக்கியஸ்தர்கள் மற்றும் மீனவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மீனவ கிராமங்களில் நடைபெறும் பிரச்சினைகள், அவர்களுக்கான குறைகள் கேட்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் அதிகாரி கள் எடுத்துள்ள நட வடிக்கை களும் பொது மக்கள் இடையே ஏற்படுத்தி உள்ள விழிப்புணர்வு தொடர்பாக ஆய்வு நடை பெற உள்ளது.
- விருதுநகர் மாவட்டத்தில் நாளை மறுநாள் அண்ணாமலை நடை பயணம் செல்கிறார்.
- தகவலை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன் தெரிவித்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 10 மணிக்கு காரியாப்பட்டியில் நடை பயணத்தை தொடங்குகிறார்.
இதனைதொடர்ந்து திருச்சுழியில் ரமண மகரிஷி இல்லத்தை பார்வையிடுகிறார். பின்னர் மாலையில் அருப்புக்கோட்டையில் நடை பயணம் மேற்கொள்கிறார்.
10-ந் தேதி காலை 10 மணிக்கு விருதுநகரில் பாண்டியன் நகரில் நடைபயணத்தை தொடங்கும் அவர் விருதுநகர்-சாத்தூர் ரோடு சந்திப்பில் மக்களிடையே பேசுகிறார். பின்னர் மாலையில் சிவகாசியில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
11-ந் தேதி காலை சாத்தூரில் நடை பயணத்தை தொடரும் அவர் தூத்துக்குடி மாவட்டம் செல்கிறார். இதனை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் நடைபயணத்தை நிறைவு செய்த பின்னர் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்வார்.
இந்த தகவலை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன் தெரிவித்தார்.
- சேலம் மின்னாம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (19-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
- இந்த தகவலை மின் செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.
சேலம்:
சேலம் மின்னாம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கூட்டாத்துபட்டி விளாம்பட்டி,ஏரிபுதூர், நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, எஸ்.என். மங்கலம், ஏ.என்.மங்கலம், ஜலகண்டாபுரம், அனுப்பூர்,பூசாரிப்பட்டி, பாலப்பட்டி, தேங்கல்பாளையம், குள்ளம்பட்டி, காட்டூர், வலசையூர்,குப்பனூர், தாதனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, வெள்ளியம்பட்டி, கத்திரிப்பட்டி, பூவனூர் ஆகிய பகுதிகளில் நாளை (19-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின் செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.
- ஆரியபாளையம் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளது.
- பொதுப்பணித்துறை பொது சுகாதாரக்கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி வில்லியனூர் குடிநீர் பிரிவு ஆரியபாளையம் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (23-ந் தேதி) மதியம் 12 மணி முதல் 2 மணி வரை ஆரிய பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும் என்று பொதுப்பணித்துறை பொது சுகாதாரக்கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- புதுவை மரப்பாலம் துணை மின் நிலையத்தில் வருடாந்திர மின் உபகரண சோதனை பணிகள் நடைபெற உள்ளது.
- நீடராஜப்பய்யர் வீதி முதல் சுப்பய்யா சாலை வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை மரப்பாலம் துணை மின் நிலையத்தில் வருடாந்திர மின் உபகரண சோதனை பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிமுதல் மதியம் 2 மணிவரை வம்பா கீரப்பாளையம், திப்புராயப்பேட்டை கோவிந்த சாலை, மற்றும் அண்ணா சாலை முதல் கடற்கரை சாலை வரையும், நீடராஜப்பய்யர் வீதி முதல் சுப்பய்யா சாலை வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுபோல் தொண்டமாநத்தம்- தேத்தாம்பாக்கம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை துத்திப்பட்டு கிராமம் உயர்மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படு கிறது.
- லிங்கா ரெட்டிப்பாளையம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
புதுச்சேரி:
லிங்கா ரெட்டிப்பாளையம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரை காட்டேரிகுப்பம் ஒரு பகுதி, புது நகர், ராசன்குளம், லட்சுமி நகர், தேத்தாம்பாக்கம், மயிலம் பாதை, உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.