என் மலர்
நீங்கள் தேடியது "trekking"
- www.trektamilnadu.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து 'டிரெக்கிங்' செல்லும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கியது.
- TrekTamilnadu மலையேற்ற முகாம் திட்டத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், வனங்களில், அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் www.trektamilnadu.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து 'டிரெக்கிங்' எனப்படும் மலையேற்ற நடைபயண திட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு தொடங்கியது.
நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள 40 இடங்களில் இந்த திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது காட்டு தீ போன்ற அபாயங்கள் ஏற்படும் என்பதால், இந்த மலையேற்ற நடைபயணத்துக்கு வருகிற ஏப்ரல் 15-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், Trek TamilNadu இணையதளம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "TrekTamilNadu என்பது சாகசத்தை விட மேலானது. 3 மாதங்களில், 4,792 மலையேற்றப் பயணிகள் சாகச பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன்மூலம் அரசுக்கு ரூ. 63.43 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. அதில், ரூ. 49.51 லட்சம் பயணிகளை அழைத்து சென்ற பழங்குடி இளைஞர்களுக்கு கிடைத்துள்ளது. சுற்றுலா பழங்குடி மக்களுக்கு பயனுள்ளதாக மாறியுள்ளது.
காட்டுத்தீ சீசன் முடிந்தவுடன் ஏப்ரல் மாதத்தில் பாதைகள் மீண்டும் திறக்கப்படும். மலையேறுபவர்களை இயற்கை எழிலுடன் வரவேற்க தமிழ்நாடு தயாராக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
- மரண மண்டலம் என்று அழைக்கப்படும், 8000 மீட்டர் உயரமுள்ள மலைப் பகுதியில் கென்னிசன் இறந்துள்ளார்.
- எவரெஸ்ட் மலையேற்றத்துக்கான இந்த சீசனில் இது பத்தாவது மரணம் என்று கூறப்படுகிறது.
பெர்த்:
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்தவர் ஜேசன் பெர்னார்ட் கென்னிசன் (வயது 40). மலையேற்ற வீரரான இவர், சமீபத்தில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். 8849 மீட்டர் உயரம் கொண்ட சிகரத்தை வெற்றிகரமாக அடைந்த அவர், அங்கிருந்து கீழே இறங்கும்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டிகள் துணையுடன் முகாம் நோக்கி வந்தார். ஆனால் கடுமையான காற்று வீசியதால் முகாமிற்கு திரும்ப முடியவில்லை. சிறிது நேரத்திற்குள் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
எவரெஸ்ட் சிகரம் ஏறும் மலையேற்ற வீரர்களால் பொதுவாக 'மரண மண்டலம்' என்று அழைக்கப்படும், 8000 மீட்டர் உயரமுள்ள மலைப் பகுதியில் கென்னிசன் இறந்துள்ளார். அவரது உடல் இன்னும் மலையிலேயே உள்ளது. உடலை மீட்டு கீழே கொண்டு வரும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கென்னிசனின் மரணம் குறித்த செய்தி அறிந்து அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர். மிகவும் தைரியமான கென்னிசன் சிகரத்தை அடைய வேண்டும் என்ற தனது இலக்கை அடைந்தார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக வீட்டிற்கு திரும்பவில்லை, என அவரது குடும்பத்தினர் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஹிமாலயன் டைம்ஸ் செய்திக்கு வழிகாட்டி ஒருவர் அளித்த பேட்டியில், 'சிகரத்தில் இருந்து கீழே இறங்கும் போது கென்னிசன் அசாதாரணமாக இருப்பதை கவனித்தோம். அவருடன் இருந்த இரண்டு ஷெர்பா வழிகாட்டிகள், கடல் மட்டத்தில் இருந்து 8,400மீ உயரத்தில் உள்ள பால்கனி பகுதிக்கு இறங்க உதவினார்கள்' என்றார்.
எவரெஸ்ட் மலையேற்றத்துக்கான இந்த சீசனில் இது பத்தாவது மரணம் என்று கூறப்படுகிறது. நேபாள சுற்றுலாத் துறையின் தகவலின்படி, இந்த சீசனில் இதுவரை 450 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளனர்.
- மதுரையில் அண்ணாமலை 4 நாட்கள் நடைபயணம் செல்ல இருக்கிறார்.
- அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
மதுரை
தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற நடைபயணத்தை ராமேசுவரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது அவர் நடைபயணம் செய்து வருகிறார்.
ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்த னர். அதே போன்று குழந்தைகளுடன் செல்பி எடுத்தும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றும் வந்தார்.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் நாளை மறுதினம் (5-ந்தேதி) முதல் 4 நாட்கள் மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபயணம் செல்ல உள்ளார். இந்த நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க மதுரை பா.ஜனதா கட்சியினர் தயாராகி வருகின்றனர்.
மதுரை ரிசர்வ் லைன் பகுதி ராமகிருஷ்ணா மடத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை பழைய நத்தம் ரோடு, போலீஸ் குடியிருப்பு, சொக்கிகுளம், கிருஷ்ணா புரம் காலனி, மாவட்ட பா,ஜனதா கட்சி அலுவல கம், உழவர் சந்தை, பி.பி. குளம் சந்திப்பு, லேடி டோக் கல்லூரி, செல்லூர் 50 அடி ரோடு வந்தடைகிறார்.
5-ந் தேதி மாலை 4 மணிக்கு பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலையில் இருந்து நேதாஜி ரோடு, கட்ராபாளையம், ஜான்சி ராணி பூங்கா, நேதாஜி சிலை, நகைக்கடை பஜார், கிழக்கு மாசி வீதி, கீழவாசல், முனிச்சாலை ரோடு, காமராஜர் சாலை, கீழச்சந்தை பேட்டை, குருவிகாரன்சாலை பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
7-ந் தேதி மாலை 4 மணிக்கு ஆரப்பாளையம் ரவுண்டானா பகுதியில் இருந்து ஆரப்பாளையம் பஸ் நிலையம், ஏ.ஏ.ரோடு, தமிழ்நாடு வேதாகம கல்லூரி, காளவாசல், சம்மட்டிபுரம், சொக்கலிங்க நகர் வழியாக பழங்காநத்தம் வரை நடைபயணம் செல்கிறார். பழங்காநத்தம் பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
8-ந் தேதி காலை 9 மணிக்கு திருநகரில் இருந்து திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நுழைவாயில், ஹார்விப்பட்டி, திருப்பரங்குன்றம் பஸ் நிறுத்தம், 16 கால் மண்டபம், மற்றும் சன்னதி தெரு ஆகிய பகுதிகளில் நடைபயணம் செல்கிறார்.
இந்த நிலையில் அண்ணாமலை நடைபயணம் செல்லும் பகுதிகளில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பா.ஜனதா கட்சியினர் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
- விருதுநகரில் இன்று அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.
- ஒரு தனியார் அரங்கத்தில் பட்டாசு ஆலை அதிபர்கள், தொழிலதிபர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.
விருதுநகர்
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்தும் முயற்சியாக மாநில தலைவர் அண்ணா–மலை கடந்த மாதம் 28-ந்தேதி ராமேசுவ–ரத்தில் நடைபயணம் தொடங்கி–னார். நேற்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபய–ணத்தை ஆரம்பித்த அவர் இன்று காலை விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியில் பாதயாத்திரை சென்றார்.
அப்போது வழிநெடுகி–லும் திரண்டு நின்ற பொது–மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். பா.ஜ.க. தொண்டர்கள் அவர் மீது மலர்களை தூவினர். அப் போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ராஜ–பாண்டியும் அண்ணாம–லையை வரவேற்றார்.
தொடர்ந்து அவர் ராம–மூர்த்தி ரோடு, ரெயில்வே பீடர் ரோடு, பழைய பஸ் நிலையம், வெயிலுகந்தம்மன் கோவில், மாரியம்மன் கோவில், மெயின் பஜார் தெரு, நகராட்சி சாலை, இன்னாசியார் தேவாலயம் வழியாக சாத்தூர் ரோடு சந்திப்பு பகுதிக்கு வந்தார். அங்கு திரண்டிருந்த பொது–மக்கள் மத்தியில் பேசினார். முன்னதாக அவர் பாண்டி–யன் நகர் பகுதியில் அமைந் துள்ள முத்துராம–லிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து இன்று மாலை அண்ணாமலை சிவகாசிக்கு செல்கிறார். அங்குள்ள ஒரு தனியார் அரங்கத்தில் பட்டாசு ஆலை அதிபர்கள், தொழிலதிபர் களை சந்தித்து கலந்துரையா–டுகிறார்.
- சாஸ்திரா நதியானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 15,000 அடி உயரத்தில் கர்வால் பகுதியில் உள்ளது.
- சாஸ்திரா நதிக்கு சென்றுகொண்டிருந்த 22 டிரக்கர்கள் மோசமான வானிலையில் வழியிலேயே சிக்கிக்கொண்டனர்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சாஸ்திரா தல் நதியானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 15,000 அடி உயரத்தில் கர்வால் பகுதியில் உள்ளது. இங்கு மலையேற்றத்தை விரும்பும் டிரக்கர்கள் பயணிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று மலையேற்றத்தில் ஈடுபட்ட 9 டிரக்கர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று சாஸ்திரா தல் நதிக்கு சென்றுகொண்டிருந்த 22 டிரக்கர்கள் மோசமான வானிலையில் வழியிலேயே தொலைந்த நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்புப் படை தீவிரமாக ஈடுபட்டிருந்தது. மோசமான வானிலை காரணமாக அந்த பகுதிகளில் ஹெலிகாப்டர் செல்வதற்கு வழி இல்லாததால் மீட்டுப்பணியில் தொய்வு ஏற்பட்டது.
சிக்கிய 22 பேரில் 18 பேர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஆவர். ஒருவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். மற்ற மூவர் உள்ளூர் வழிகாட்டிகள் ஆவர். இந்நிலையில் காட்டு இலாகா அதிகாரிகளுடன் நேற்று முதல் மாநில மீட்புப்படையினர் நடத்திவந்த தேடுதலில் 9 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 13 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

- 62 வயதான ஃபேப்ரிசியோ லாங்கோ கடந்த 2013 முதல் இத்தாலியில் உள்ள ஆடி கார் யூனிட்டுக்கு தலைவராகச் செயல்பட்டு வந்தவர் ஆவார்.
- அடமெல்லோ மலைத்தொடரில் அமைந்துள்ள Cima Payer சிகரத்தை நோக்கி மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தார்.
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி [Audi] நிறுவனத்தின் இத்தாலி யூனிட்டின் தலைவர் ஃபேப்ரிசியோ லாங்கோ [Fabrizio Longo] மலையேற்றத்தில் போது 10,000 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 62 வயதான ஃபேப்ரிசியோ லாங்கோ கடந்த 2013 முதல் இத்தாலியில் உள்ள ஆடி கார் யூனிட்டுக்கு தலைவராகச் செயல்பட்டு வந்தவர் ஆவார்.

மலையேற்றத்தில் ஆர்வம் கொண்ட லாங்கோ இத்தாலி-சுவிஸ் எல்லைக்கு சில மைல் தூரத்தில் உள்ள அடமெல்லோ மலைத்தொடரில் [Adamello mountains] அமைந்துள்ள Cima Payer சிகரத்தை நோக்கி மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தார். கேபிள்கள், பாதுகாப்பு உபகரணங்கள் என அனைத்தும் இருந்தும் துரதிருஷ்டவசமாகச் சிகரத்தின் அருகில் செல்வதற்கு முன்னர் 10,000 ஆதி உயரத்திலிருந்து தவறி விழுந்துள்ளார்.

அவருடன் சென்ற மற்றொரு மலையேற்ற வீரர் உடனே மீட்புக்குழுவுக்குத் தகவல் தெரிவித்த நிலையில் ஹெலிகாப்டர் உதவியுடன் 700 அடி பள்ளத்தாக்கிலிருந்து அவரது உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஃபேப்ரிசியோ லாங்கோ மறைவுக்கு ஆடி நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது.
- இதயத்துக்கு சிறந்த உடற்பயிற்சியாக அமையும்.
- ரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவும்.
இயற்கையை நேசிப்பவர்கள் நிச்சயம் மலையேற்றம் செய்வதற்கு ஆசைப்படுவார்கள். அடர்ந்த மரங்கள் சூழ்ந்த வனப்பகுதி வழியே நடந்தபடி, சுத்தமான காற்றை சுவாசித்தபடி, இயற்கை அழகை ரசித்தபடி மலை மீது ஏறும் அந்த பயணம் ஆனந்த அனுபவத்தை கொடுக்கும். கூடவே உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏராளமான நன்மைகளை பெற்றுத்தரும். அவற்றுள் சில...

1. இதய ஆரோக்கியம்
'ஹைகிங்' எனப்படும் மலையேற்றம் செய்வது இதயத்துக்கு சிறந்த உடற்பயிற்சியாக அமையும். குறிப்பாக இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும். ரத்த ஓட்டம் சீராக நடைபெறவும், உடல் முழுவதும் ஆக்சிஜன் சென்றடைவதையும் மேம்படுத்தும். இதய நோய் அபாயத்தையும், ரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.
2. தசை
மலையேற்றத்தின்போது பயணிக்கும் நிலப்பரப்பின் தன்மையை பொறுத்து தசைகளுக்கு கிடைக்கும் நன்மை மாறுபடும். மலையின் உச்சிப்பகுதியை நோக்கி ஏறும்போது தொடையின் தசை பகுதிகள், முழங்கால்களின் பின் பகுதி தசைகள், இடுப்பின் பின் பகுதி தசைகள் வலுவடையும். மலையில் இருந்து கீழ் நோக்கி இறங்கும்போது இடுப்பு, முழங்கால்கள், முதுகு பகுதிகள் ஒட்டுமொத்தமாக வலுப்பெறும்.
3. எடை மேலாண்மை
கலோரிகளை எரிக்கவும், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் மலையேற்றம் சிறந்த வழிமுறையாக அமையும். எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கையானது மலையேறும் பாதையில் எதிர்கொள்ளும் சிரமம் மற்றும் மலையேறுபவரின் உடல் எடையை பொறுத்து மாறுபடும்.

4. எலும்பு அடர்த்தி
மலையேற்றம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது எலும்புகளை பராமரிக்கவும் உதவும். உயரமான, தாழ்வான, மேடான, பள்ளமான என பல்வேறு நிலப்பரப்புகளில் நடப்பதால் ஏற்படும் அழுத்தமும், நெகிழ்வுத்தன்மையும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவிடும். எலும்பு வளர்ச்சியையும் தூண்டும். ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு அடர்த்தி பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.
5. மனநலம்
இயற்கையுடன் நேரத்தை செலவிடுவது மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வை குறைக்கும். மலைப்பிரதேசங்களில் நடந்தபடி நேரத்தை செலவிடுவதும், அங்கு நிலவும் அமைதியான சூழலும் எண்டோர்பின் ஹார்மோன்களை வெளியிட தூண்டும். இந்த ஹார்மோன் ஒட்டுமொத்த மன நலனை மேம்படுத்த வழிவகுக்கும்.

6. சமநிலை
மலைப்பகுதி போன்ற சீரற்ற நிலப்பரப்புகளில் நடப்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சமநிலையை பேண உதவிடும். திறன்களை மேம்படுத்துவதற்கும் உதவிடும்.
குறிப்பாக வயதானவர்களுக்கு அதிக பலனை கொடுக்கும்.
7. சுத்தமான காற்று
இயற்கையுடன் நேரத்தை செலவிடுவதும், உடல் ரீதியான செயல்பாடுகளில் ஈடுபடுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். அதிலும் மலையேற்றம் செய்யும் வழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பது வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
இது உடலில் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட உதவும். புதிய, சுத்தமான காற்றை சுவாசிக்கவும், சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி கிடைப்பதற்கும் துணை புரியும். வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க இது அவசியம்.
- தமிழ்நாட்டில் உள்ள 40 அழகிய, மலையேற்ற வழித்தடங்களை உள்ளடக்கிய 'தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
- 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மலையேற்றத்திற்கான முன்பதிவு மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
சென்னை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டில் உள்ள 40 அழகிய, மலையேற்ற வழித்தடங்களை உள்ளடக்கிய 'தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
மேலும் இத்திட்டத்தின் இலச்சினையினை வெளியிட்டு, இணையவழி முன்பதிவிற்காக www.trektamilnadu.com என்ற பிரத்யோக வலைதளத்தையும் தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் தமிழ்நாட்டின் வனம் மற்றும் வன உயிரினப் பகுதிகளில் நிலையான முறையில் மலையேற்றம் மேற்கொள்வதை ஒரு நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு வன அனுபவக் கழகம் மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் கூட்டு முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டு உள்ளது.
18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மலையேற்றத்திற்கான முன்பதிவு மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். 18 வயதிற்குட்பட்டவர்கள் பெற்றோர் / பாதுகாவலரின் ஒப்புதல் கடிதத்துடன் மலையேற்றம் மேற்கொள்ளலாம். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் (எளிதான மலையேற்ற பாதைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்) பெற்றோர் அல்லது பாதுகாவலரின் துணையோடு மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
- நான் ஸ்கேனர் வழியாக சோதனைக்கு என் கார்மின் இன்ரீச்சை ட்ரேயில் வைத்தேன்
- தனது நாட்டு தூதரகத்தையும் தொடர்புகொண்டதாக அவர் அதில் தெரிவித்தார்.
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஜிபிஎஸ் கருவியை எடுத்துச் சென்றதற்காக ஸ்காட்லாந்தை சேர்ந்த மலையேறுபவர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிஷிகேஷ் நோக்கிச் சென்ற ஹீதர், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் இருந்து கார்மின் இன்ரீச் ஜிபிஎஸ் ஒன்று மீட்கப்பட்டது. கைது செய்யப்படுவதற்கு முந்தைய தனது இன்ஸ்டாகிராமில் பதிவில், ஹீதர் நடந்ததை விவரித்தார்.

என்ன நடந்தது?
"நான் ஸ்கேனர் வழியாக சோதனைக்கு என் கார்மின் இன்ரீச்சை ட்ரேயில் வைத்தேன், அந்த நேரத்தில் நான் உடனடியாக அதிகாரிகளால் ஓரமாக காத்திருக்க வைக்கப்பட்டேன்.
என்ன நடக்கிறது என்று யோசித்துக்கொண்டு காத்திருந்தேன். கார்மின்[ஜிபிஎஸ்] இங்கே சட்டவிரோதமானது என்றும் அவர்கள் என்னை காவல்துறையிடம் ஒப்படைக்கிறார்கள் என்றும் எனக்கு இறுதியில் சொல்லப்பட்டது என்று ஹீதர் விவரிக்கிறார்.மேலும் தனது நாட்டு தூதரகத்தையும் தொடர்புகொண்டதாக அவர் அதில் தெரிவித்தார்.
கார்மின் இன் ரீச்
இந்த கார்மின் இன்ரீச் கருவியை சுவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 1885 ஆம் ஆண்டின் இந்திய தந்தி சட்டம் மற்றும் 1933 ஆம் ஆண்டின் வயர்லெஸ் டெலிகிராபி சட்டம் ஆகியவற்றின் கீழ் அரசாங்கத்தின் முன் அனுமதியின்றி, கார்மின் இன்ரீச் போன்ற செயற்கைக்கோள் தகவல் தொடர்பு [ஜிபிஎஸ்] சாதனங்களைப் பயன்படுத்துவதை இந்தியா தடை செய்துள்ளது.
இந்த பழைய விதிமுறைகள் 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் போது வலுப்படுத்தப்பட்டன.
பாதுகாப்பு அபாயங்கள் மற்றும், உளவு பார்த்தலை தடுக்கவும், செயற்கைக்கோள் தொடர்பு தொழில்நுட்பத்தை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதை தடுக்கவும் இந்த தடையானது விதிக்கப்படுகிறது.

இந்தியா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், கியூபா, ஜார்ஜியா, ஈரான், வட கொரியா, மியான்மர், சூடான், சிரியா, தாய்லாந்து, வியட்நாம், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய 14 நாடுகளால் இந்த கருவி தடை செய்யப்பட்டுள்ளது.
- மகா சிவராத்திரி அடுத்த மாதம் 26-ந்தேதி வருகிறது.
- போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகின்றனர்.
கோவை:
கோவையை அடுத்த மேற்குத்தொடர்ச்சிமலை பூண்டியில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இது தென்கயிலாயம் என்று பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது.
இந்த கோவிலின் அடிவாரத்தில் இருந்து செங்குத்தாக உள்ள 7 மலைகளை கடந்து அங்கு சுயம்புவடிவில் காட்சி தரும் சிவனை தரிசிக்க, ஆண்டுதோறும் பக்தர்கள் மலையேறி செல்வது வழக்கம்.
வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து மே மாதம் இறுதி வாரம் வரையிலும் வனத்துறையினர் அனுமதி அளிப்பார்கள்.
மேலும் மகாசிவராத்திரி மற்றும் சித்ராபவுர்ணமி நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்து, 7 மலைகளில் ஏறி சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்தாண்டுக்கான மகா சிவராத்திரி அடுத்த மாதம் 26-ந்தேதி வருகிறது. இதனையொட்டி வெள்ளியங்கிரி மலையேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக, வனத்துறையினர் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.
இதில் வருகிற பிப்ரவரி மாதம் 1-ந்தேதி முதல் மே மாதம் இறுதிவரையிலும் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேறலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வெள்ளியங்கிரி ஆண்டவரை வழிபட மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல அனுமதி இல்லை. எனவே அதுபோன்ற பொருட்களை கொண்டு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
வெள்ளியங்கிரி கோவில் மற்றும் மலையேறும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கோவில் நிர்வாகம், வனத்துறை மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகின்றனர்.
- பிரதமர் மோடி, உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள கங்கை தேவியின் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
- உத்தரகாண்ட் மாநிலத்தின் பொருளாதாரம் பெருமளவில் சுற்றுலாவை சார்ந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வருகை புரிதிந்த்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள கங்கை தேவியின் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
பின்னர் உத்தரகாண்ட் மாநிலம் ஹர்சிலில் ஜீப் டிரெக்கிங் மற்றும் பைக் பேரணியை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் கலந்து கொண்டார்.
உத்தரகண்ட் மாநிலத்தின் சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக இந்த பேரணி நடத்தப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தின் பொருளாதாரம் பெருமளவில் சுற்றுலாவை சார்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- விக்கிரவாண்டியில் ஏரி-குளம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
- பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கி மாணவர்களின் மாரத்தான் ஓட்டத்தையும், மாணவிகளின் சைக்கிள் பிரச்சாரத்தையும் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டியில் ஏரி, குளம் பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகளின் மாரத்தான் மற்றும் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கி மாணவர்களின் மாரத்தான் ஓட்டத்தையும், மாணவிகளின் சைக்கிள் பிரச்சாரத்தையும் தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை , துணை தலைவர் பாலாஜி, கவுன்சிலர் சுதாபாக்கியராஜ், துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம், தி.மு.க., மாணவரணி அமைப்பாளர் யுவராஜ், பேரூராட்சி உதவியாளர் தீனா,பள்ளி மாணவ-மாணவிகள்,பணியாளர்கள் பங்கேற்றனர். விக்கிரவாண்டி பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலத்தை சேர்மன் அப்துல் சலாம் துவக்கி வைத்தார். அருகில் செயல் அலுவலர் அண்ணாதுரை மற்றும் பலர் பங்கேற்றனர்.