என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "twins"

    • 1992ம் ஆண்டில் உறைய வைக்கப்பட்ட கரு முட்டை பயன்படுத்தப்பட்டது.
    • அமெரிக்க தம்பதியினருக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளன.

    அமெரிக்காவின் மேற்கு பகுதியை சேர்ந்த ஒரேகான் மாகாணத்தில் வசிக்கும் பிலிப் - ரேச்சல் தம்பதியினருக்கு செயற்கை முறை கருத்தரித்தல் மூலம் கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி இரட்டை குழந்தை பிறந்துள்ளது. ஆனால் இதில் உள்ள அதிசயம், இந்த குழந்தைகள் 30 வருடங்களுக்கு முன்பு அதாவது 1992ம் ஆண்டில் கிரையோபிரிசர்வ் முறையில் உறைய வைக்கப்பட்ட கரு முட்டை மூலம் பிறந்துள்ளன.

    பிலிப்- ரேச்சல் தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகளும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளன. இந்த நிலையில் கரு மூட்டையை தானமாக பெற்று செயற்கை கருத்தரிப்பு மூலம் மேலும் குழந்தை பெற முடிவு செய்த அவர்கள், அதற்காக அமெரிக்காவில் உள்ள தேசிய கருமுட்டை மையத்தை நாடினர்.


    அந்த மையத்தில் 1992ம் ஆண்டில் இருந்து திரவ நைட்ரஜனில் பூஜ்ஜியத்திற்குக் கீழே 200 டிகிரி மைனஸ் வெப்ப நிலையில் உறைய வைக்கப்பட்ட கரு முட்டை அவர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது. இந்த கருமுட்டையை பயன்படுத்தி செயற்கை கரூவூட்டல் மூலம் உருவான இரட்டை குழந்தைகள் தற்போது பிறந்துள்ளது.

    மருத்துவ உலகத்தில் இது புதிய சாதனையாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு 27 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்டிருந்த கருமுட்டையிலிருந்து கடந்த 2020ம் ஆண்டு பிறந்த மோலி கிப்சனின் சாதனையை இந்த குழந்தைகள் தற்போது முறியடித்துள்ளன.

    ஆண் குழந்தைக்கு திமோத்தி என்றும், பெண் குழந்தைக்கு லிடியா என பெயர் சூட்டியுள்ள இரட்டை குழந்தைகளின் தந்தை பிலிப், நாங்கள் பெற விரும்பும் குழந்தைகளின் எண்ணிக்கையை மனதில் வைத்திருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். 


    கடவுள் நமக்குக் கொடுக்க விரும்பும் அளவுக்கு எங்களிடம் குழந்தைகள் இருக்க வேண்டும் என்று நாங்கள் எப்போதுமே நினைத்ததாக அவர் கூறினார். மேலும் கரு தத்தெடுப்பு பற்றி கேள்விப்பட்டபோது, ​​நாங்கள் அதை செய்ய விரும்பினோம், எங்களுக்கு ஏற்கனவே குழந்தைகள் இருந்தாலும் இவர்கள்தான் எங்களுடைய மூத்த குழந்தைகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் 1992ம் ஆண்டிலிருந்து உறைய வைக்கப்பட்ட கருமுட்டை மூலம் பிறந்துள்ளதால், திமோத்தியும், லிடியாவும் தற்போது உலகிலேயே வயதான குழந்தைகளாக கருதப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மண்ணாங்கட்டி. இவரது மகன்கள் யுவநாதன், (22) யுவராஜ், (22) இரட்டையர்கள். இவர்கள், நேற்று மாலை ஒரு ஏ. டி. எம்., மையத்தில் பணம் எடுக்க சென்றனர்.
    • இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதிக பணம் வந்துள்ளதை கண்ட இரட்டையர்கள்.திண்டிவனம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்,

    விழுப்புரம்:

    ஏ. டி. எம்., இயந்திரத்தில் கூடுதலாக வந்த பணத்தை நேர்மையாக ஒப்படைத்த சகோதரர்களை போலீசார் பாராட்டினர்விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஆட்சிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி. இவரது மகன்கள் யுவநாதன், (22) யுவராஜ், (22) இரட்டையர்கள். இவர்கள், நேற்று மாலை திண்டிவனம் புறவழிச்சாலை அருகே, தனியார் ஓட்டல் எதிரே உள்ள ஒரு ஏ. டி. எம்., மையத்தில் பணம் எடுக்க சென்றனர். யுவராஜ் வங்கி கணக்கில் ரூ. 3, 500 இருந்துள்ளது. அதில் இருந்து 500 ரூபாய் எடுக்க பட்டனை அழுத்தினார்.

    ஆனால் யுவராஜ் வங்கி கணக்கில் ரூ. 3, 500 இருந்துள்ளது. அதில் இருந்து 500 ரூபாய் எடுக்க பட்டனை அழுத்தினார். ஆனால், 500 ரூபாய்க்கு பதில் ரூ. 10 ஆயிரம் வந்துள்ளதுயுவராஜ் மொபைல் போனுக்கு ரூ. 500 எடுத்ததாக குறுந்தகவல் வந்துள்ளது. ஏ.டி.எம்., இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதிக பணம் வந்துள்ளதாக கருதிய சகோதரர்கள், திண்டிவனம் போலீசில் 9 ஆயிரத்து 500 ரூபாயை ஒப்படைத்தனர். பணத்தை நேர்மையாக ஒப்படைத்த சகோதரர்களை போலீசார் பாராட்டினர்.

    • திருச்சி பாலக்கரை பகுதியிலும் இரட்டைப் பிள்ளையார் அருள்புரிகிறார்.
    • செவ்வாய்க்கிழமைகளில் விநாயகரை வழிபட்டால் நாக தோஷம் விலகும்.

    ஒரு சமயம் சிவபெருமானை பிரிந்து பார்வதிதேவி தனியாக தவம் செய்ய நேரிட்டது. அப்போது விநாயகர் தன்னைப் போலவே ஒரு வடிவத்தை தன்னருகே உருவாக்கி, அந்த திருவுருவத்தையே, அதாவது தன்னையே சங்கல்பம் செய்து கொண்டு, பிரிந்த தன் பெற்றோர் விரைவில் ஒன்று சேர பிரார்த்தித்தாராம்.

    இதன் அடிப்படையில் மயிலாடுதுறை அருகில் உள்ள திருவேள்விக்குடி திருத்தலத்தில், சங்கல்ப (இரட்டை) விநாயகர் என்ற பெயரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். 'ஆதி இரட்டை விநாயகர்' என்று போற்றப்படுபவரும் இவரே.

    அதுபோலவே திருச்சி பாலக்கரை பகுதியிலும் இரட்டைப் பிள்ளையார் அருள்புரிகிறார். பிள்ளையாருக்கு உரிய தேய்பிறை சதுர்த்தி திதி மட்டுமின்றி திருவோணம், திருவாதிரை, விசாக நட்சத்திரங்களும் திதிகளில் பஞ்சமியும் இவருக்குரியதாக கருதப்படுகிறது.

    தேய்பிறை சதுர்த்தியில் இவருக்கு அருகம்புல் மாலை அணிவித்து அர்ச்சித்து வழிபட்டால், செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலகும். மேலும் கார் அரிசியில் மோதகம் (கொழுக் கட்டை) செய்து நிவேதனம் செய்தால் சந்திரனால் ஏற்படும் தோஷம் விலகும்.

    திருவோண நட்சத்திரத்தில் இந்த இரட்டைப் பிள்ளையாருக்கு மாம்பழங்கள் நிவேதனம் செய்து ஏழைத் தம்பதிகளுக்கு அளித்தால், கணவன்-மனைவி உறவு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். திருவாதிரையன்று வில்வத்தால் மாலை தொடுத்து இவரை வழிபட்டால் நோய் நொடிகள் குணமாகும். ஆரோக்கியமாக வாழலாம். பஞ்சமி திதியில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் பிரச்சினைகள் தீரும். செல்வ வளம் பெருகும்.

    விசாக நட்சத்திரத்தன்று இரட்டை விநாயகருக்கு பூக்களால் தொடுத்த போர்வை போன்ற மலர் ஆடை அணிவித்தால் குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி நிறை வேறும்.

    பொதுவாக, செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டால் நாக தோஷம் விலகும். சனிக்கிழமைகளில் கனி வர்க்கத்தில் ஏதாவது ஒன்றைச் சமர்ப்பித்து வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும்.

    இத்திருக்கோவில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

    இதேபோல், தஞ்சை திருவையாறு ஐயானரப்பன் கோவிலில் அருள்பாலிக்கிறார் இரட்டைப்பிள்ளையார். இவர் சன்னதிமுன் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

    திருமணமாகாத பெண்கள் சந்தனாபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். கணவன்-மனைவி ஒற்றுமை பலப்பட சங்கடஹர சதுர்த்தியில் அருகம்புல் மாலை அணிவித்து, மோதகங்கள் படைத்து வழிபட்டால், குடும்பத்தில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நிறைவேறும்.

    மேலும், ஸ்ரீரங்கத்திற்கு அருகில் உள்ள உத்தமர் கோவில், திருச்சி உய்யகொண்டான் திருமலை சிவன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சேலம் மாவட்டம் ஆத்தூர் தலை வாசலை அடுத்த ஆறகலூரில் இருக்கும் கோவில், ஊட்டி பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள விநாயகர் கோவில் போன்ற இடங்களிலும் இரட்டை விநாயகர் சந்நிதி உள்ளது. இரட்டை விநாயகரை ஒரே சன்னதியில் வழிபட்டால் இரு மடங்கு பலன்கள் கிடைக்கும் என்பார்கள்.

    • அரசு உயர்நிலை பள்ளியில் வரலாறு காணாத வகையில் நிறைய இரட்டையர்கள் படித்து வருகிறார்கள்.
    • சரியான நபரை அடையாளம் காண்பதில் தினமும் திணறுகிறார்கள்.

    கர்நாடக மாநிலம் பந்துவால் தாலுகாவில் உள்ள ஒரு அரசு உயர்நிலை பள்ளியில் வரலாறு காணாத வகையில் நிறைய இரட்டையர்கள் படித்து வருகிறார்கள்.

    தற்போது அந்த பள்ளியில் 9-ம் வகுப்பில் 5 இரட்டையர்கள் உள்ளனர். அந்த 5 இரட்டையர்களும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    பார்ப்பதற்கு அச்சு அசல் ஒரே மாதிரி காட்சி அளிக்கும் அந்த இரட்டையர்கள் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு கடும் சவாலாக உள்ளனர். அவர்களது பெயர்களை ஆசிரியர்கள் நினைவு வைத்திருந்தாலும், சரியான நபரை அடையாளம் காண்பதில் தினமும் திணறுகிறார்கள். இது பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் இன்று வைரலாக பரவியது.

    • நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஈவ் பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த மாதம் 31-ந்தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • குழந்தைகளுக்கு எஸ்ரா, எசேக்கியேல் என அவர்களின் பெற்றோர் பெயர் சூட்டி உள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த தம்பதி பில்லி ஹம்ப்ரே-ஈவ். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஈவ் பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த மாதம் 31-ந்தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து இரவு 11.48 மணிக்கு அவர் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

    பின்னர் 40 நிமிட இடைவெளியில் அவருக்கு மற்றொரு ஆண் குழந்தை பிறந்தது. அடுத்தடுத்த ஆண்டில் இரட்டை குழந்தைகள் பிறந்த சம்பவம் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த குழந்தைகளுக்கு எஸ்ரா, எசேக்கியேல் என அவர்களின் பெற்றோர் பெயர் சூட்டி உள்ளனர்.

    இதேபோன்ற சுவாரசியமான சம்பவம் குரேஷியா நாட்டிலும் அரங்கேறி உள்ளது. அங்கு ஒரு பெண்ணுக்கு டிசம்பர் 31-ந்தேதி இரவு 11.59 மணிக்கு ஒரு பெண் குழந்தையும், 2 நிமிடம் கழித்து ஜனவரி 1-ந்தேதி 12.01 மணிக்கு மற்றொரு பெண் குழந்தையும் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

    • பிரிந்துபோன உறவுகள், நண்பர்களை மீண்டும் சந்திக்க சமூக வலைதளங்கள் உதவுகின்றன.
    • 2002-ம் ஆண்டு ஜூன் 20-ந்தேதி இரட்டையர்களின் தாயாரான ஆஷாசோனி இவர்களை பெற்றெடுத்துள்ளார்.

    சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதால் பலரும் சிக்கல்களை சந்திப்பதாக பொதுவாக குற்றச்சாட்டுகள் இருந்தாலும் சமூக வலைதளங்கள் மூலம் ஏராளமான நன்மைகளும் ஏற்படுகின்றன.

    குறிப்பாக உலகெங்கிலும் உள்ள மக்களை எளிதில் தொடர்பு கொள்ள சமூக வலைதளங்கள் வரமாக அமைந்துள்ளன. தனி நபர்கள் தொழில்முறையாக பல தொடர்புகளையும், நண்பர்களையும் உருவாக்க சமூக வலைதளங்கள் பாலம் அமைத்து தருகின்றன.

    அதேபோல பிரிந்துபோன உறவுகள், நண்பர்களை மீண்டும் சந்திக்க சமூக வலைதளங்கள் உதவுகின்றன. அந்த வகையில் ஜார்ஜியாவை சேர்ந்த ஒரே மாதிரியான இரட்டையர்கள் பிறக்கும்போதே பிரிந்த நிலையில் 19 வருடங்களுக்கு பிறகு டிக்டாக் மூலம் மீண்டும் அவர்கள் இணைந்துள்ளனர்.

    இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-

    கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஜார்ஜியாவை சேர்ந்தவர் அனோசர்தானியா. இவர் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் தனது நண்பர் ஒருவரிடம் இருந்து டிக்டாக் வீடியோவை பெற்றார். அந்த வீடியோவில் சர்தானியாவை போன்றே நீல நிற முடியுடன் ஒரு பெண் விளையாடும் காட்சி இருந்தது.


    முதலில் அந்த வீடியோவில் இருக்கும் பெண்ணை சர்தானியா என்று கருதிய அவரது நண்பர் ஆர்வத்தின் காரணமாக புதிதாக சாயம் பூசப்பட்ட நீல நிற முடியை பற்றி விசாரித்தார். அப்போதுதான் அந்த வீடியோவில் இருக்கும் பெண் சர்தானியா இல்லை என்பது தெரியவந்தது.

    மேலும் அந்த வீடியோவில் இருக்கும் பெண் குறித்து சர்தானியா சமூக வலைதளங்களில் பதிவிட்டு விசாரித்தபோது, அதில் இருக்கும் பெண் எமி க்விட்டியா என்பதும், அனோ சர்தானியாவும், எமியும் இரட்டையர்கள் என்பதும் பிறக்கும்போதே அவர்கள் பிரிந்ததும் தெரியவந்தது. அதாவது, 2002-ம் ஆண்டு ஜூன் 20-ந்தேதி இரட்டையர்களின் தாயாரான ஆஷாசோனி இவர்களை பெற்றெடுத்துள்ளார்.

    அப்போது அவரது உடல்நிலை கோமா நிலைக்கு செல்லவே இரட்டையர்களின் தந்தையான கோச்சா ககாரியா அனோவையும், எமியையும் தனிதனி குடும்பங்களுக்கு விற்றுவிட்டார்.

    இதனால் அனோ ஜார்ஜியாவின் தலைநகரான திபிலிசி பகுதியிலும், எமி அங்கிருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜூக்டி பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியிடமும் தனித்தனியாக வளர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் டிக்டாக் வீடியோ மூலம் சுமார் 19 ஆண்டுகள் கழித்து இரட்டையர்களான அவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர்.

    • 30 சதவீத மூளையை பகிர்ந்தவாறு பிறந்த இவர்கள் உயிர்பிழைப்பது கடினம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
    • இருவரும் பட்டப்படிப்பு படித்து வெவ்வேறு துறைகளில் வேலை பார்த்தவர்கள்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்தவர்கள் லோரி மற்றும் டோரி என்கிற ஜார்ஜ் (வயது 62). கடந்த 1961-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி அன்று பென்சில்வேனியா மாகாணத்தில் இரட்டை சகோதரிகளாக ஒட்டிபிறந்தனர்.

    பகுதியளவு இணைந்த மண்டை ஓடுகள், முக்கிய ரத்த நாளங்கள் மற்றும் 30 சதவீத மூளையை பகிர்ந்தவாறு பிறந்த இவர்கள் உயிர்பிழைப்பது கடினம் என டாக்டர்கள் தெரிவித்தனர். இருப்பினும் 62 ஆண்டுகள் வாழ்ந்த இவர்கள் உடல்நிலை கோளாறு காரணமாக தற்போது உயிரிழந்தனர்.

    இருவரும் பட்டப்படிப்பு படித்து வெவ்வேறு துறைகளில் வேலை பார்த்தவர்கள். மேலும் கடந்த 2007-ம் ஆண்டில் உலகின் மிக வயதான ஒட்டிபிறந்த இரட்டை சகோதரிகள் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரர்களானார்கள். இவர்களுடைய இறப்புக்கு கின்னஸ் நிறுவனம் உள்பட உலக அமைப்புகள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

    • கொஞ்சம் திட்டமிடல் மற்றும் உதவியுடன், இதற்கு நீங்கள் நல்ல முறையில் தயாராகலாம். இது ஒன்றும் அத்தனை மோசமானதல்ல.
    • குடும்பத்தினரிடம் இருந்து உணர்வு நோக்கிலான மற்றும் உடல்ரீதியிலான உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்

    ஒரு குழந்தையை வளர்ப்பதே பெரிய விஷயம் தான். அப்படி இருக்க இரண்டு மூன்று குழந்தைகளை வளர்ப்பது என்றால் எப்படி இருக்கும்? உங்களுக்கு பிறக்க இருப்பது இரட்டைக்குழந்தை என தெரிய வந்திருந்தால் காத்திருக்கும் சவாலை சமாளிக்கும் வழிகளை பார்ப்போம்.

    இரட்டை குழந்தைகள் அல்லது மூன்று குழந்தைகள் இரு மடங்கு மற்றும் மும்மடங்கு மகிழ்ச்சியை அளிக்கும் என சொல்லப்படுவது உண்மைதான் என்றாலும், சவால்களும் பல மடங்கு இருக்கும். ஒரே நேரத்தில் ஒரு குழந்தைக்கு மேல் வளர்க்கும் நிலைக்கு தயாராவது கடினம் என்றாலும், இந்த நிலையை எதிர்பார்த்தால் முதலில் அமைதியாக யோசியுங்கள். கொஞ்சம் திட்டமிடல் மற்றும் உதவியுடன், இதற்கு நீங்கள் நல்ல முறையில் தயாராகலாம். இது ஒன்றும் அத்தனை மோசமானதல்ல. இரட்டையர்கள் அல்லது மூன்று குழந்தைகள் வளர்வதை பார்ப்பது மற்றும் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வது அற்புதமானது. வாழ்நாள் முழுவதும் இருக்க கூடிய விஷேச பந்தத்தை அவர்கள் பெற்றிருப்பார்கள்.


    இரட்டைக்குழந்தை பிறக்க இருப்பதை அறிந்தவுடன் மனைவியும், கணவரும் முதலில் உற்சாகம் அடைந்தாலும் துவக்கத்தில் இருந்தே கடினமாக இருக்கும். "பிரசவத்தில் இருந்து இது துவங்கியது. இரட்டை குழந்தைகளை சீக்கரமே பிரசவம் பார்க்க வேண்டும். உங்கள் சுரப்பிகளும் உச்சத்தில் இருக்கும். இரட்டைக்குழந்தைகள் பிறந்தவுடன் தூக்கமே இருக்காது. ஆர்ம்ப காலத்தில், குறிப்பாக பால் கொடுப்பது சவாலாக இருக்கும். ஒரு குழந்தைக்கு பால் கொடுத்த பின் இன்னொரு குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு தொடர்ந்து கொண்டே இருக்கும். உதவிக்கு அம்மா அல்லது கணவர் உடன் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

    வேலைக்கு செல்வதில் சிரமம் ஏற்படும். ஒரு குழந்தைக்கு மேல் பாலூட்டி வளர்க்க வேண்டிய நிலைக்கு ஏற்ப அம்மா தன்னை உடல்ரீதியாக தயார் செய்து கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளைக் கையாளுவதற்கு சகிப்புத்தன்மையும் பொறுமையும் தேவை.

    புதிய பொறுப்புக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள முயற்சிக்கும் போது ஒரு அம்மாவுக்கு மனநிலை மாற்றங்களும், உடல் ரீதியிலான சவால்களும் உண்டாகும். ஒரு குழந்தைக்கு மேல் இருக்கும் போது இது இன்னமும் சிக்கலாகும். குடும்பத்தினரிடம் இருந்து உணர்வு நோக்கிலான மற்றும் உடல்ரீதியிலான உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள். குற்ற உணர்வு கொள்ள வேண்டாம். முதல் சில மாதங்களில் பயிற்சி பெற நர்ஸ்கள் அல்லது ஆயாக்கள் இருப்பது மிகவும் உதவியாக இருக்கும். நிதி விஷயங்கள், உதவி அமைப்புகள் மற்றும் பணி சார்ந்த பிரச்சனைகளை முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம் இவற்றால் பின்னர் மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கலாம். குழந்தை பிறந்த பிறகு முதல் இரண்டு ஆண்டுகள் தான் உண்மையில் சவாலானது. சில நேரங்களில் வளர்ச்சி சார்ந்த பிரச்சனைகள் உருவாகலாம் என்பதால் இரட்டையர் அல்லது மூன்று குழந்தைகளுக்கு அதிக கவனம் தேவை. இந்த நேரத்தில் தான் குழந்தைகள் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி கொள்வதோடு, சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டு, சுவையும் வளர்த்துக்கொள்கின்றனர். ஏதேனுன் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மன அழுத்தம் உண்டாகலாம். பல நேரங்களில் புதிய நோய்த்தொற்றுகள் தானாகவே சரியாகிவிடக்கூடும். ஆனால் நல்ல குழந்தை நல மருத்துவரை அறிந்து வைத்திருப்பது அவசியம்.


    இதேபோல் குழந்தைகள் ஓரளவு வளர்ந்த பிறகு அவர்களை மிகவும் பொறுமையாக கையாள வேண்டும். குறிப்பாக இரட்டைக் குழந்தைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது ஆரோக்கியமான பழக்கம் அல்ல. இது அவர்களின் ஆரோக்கியம் மற்றும் மூளையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். வளரும் செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒப்பிடப்பட்ட இரட்டையர்கள் ஒருவருக்கொருவர் எதிர்மறையான எண்ணங்களை உருவாக்குகிறார்கள், இது அவர்களின் பிணைப்பு மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். பல இரட்டையர்கள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர் மற்றும் தொடர்ச்சியான ஒப்பீடுகளின் காரணமாக மற்ற இரட்டையர்களிடமிருந்து வெறுப்பு உணர்வை வளர்த்துக் கொள்கிறார்கள். எனவே குழந்தைகளின் உணர்வைக் கேட்டு அதற்கேற்ப அவர்களை ஊக்குவிக்கவும். 

    • கடந்த கல்வியாண்டில் வெவ்வேறு வகுப்புகளில் 4 ஜோடி இரட்டை குழந்தைகள் பயின்றனர்.
    • சுவாரஸ்யம் என்னவென்றால் 8 ஜோடி இரட்டையர்களில் ஒரு ஜோடி தலைமை ஆசிரியரின் குழந்தைகள் ஆவார்கள்.

    மிசோராம் மாநிலத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் 8 ஜோடி இரட்டை குழந்தைகள் புதிதாக சேர்ந்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    அங்குள்ள ஐஸ் வால் பகுதியில் ஒரு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தான் புதிதாக 8 ஜோடி இரட்டை குழந்தைகள் சேர்ந்துள்ளனர். இதுதொடர்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் லால்வென்ட் லுங்கா கூறுகையில், எங்கள் பள்ளியில் கடந்த ஆண்டுகளிலும் பல இரட்டை குழந்தைகள் சேர்ந்து பயின்றுள்ளனர்.

    கடந்த கல்வியாண்டில் வெவ்வேறு வகுப்புகளில் 4 ஜோடி இரட்டை குழந்தைகள் பயின்றனர். ஆனால் இந்த ஆண்டு அதிக அளவாக 8 ஜோடி இரட்டையர்கள் சேர்ந்து சாதனை படைத்துள்ளது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இதில் 4 ஜோடி பெண் குழந்தைகளும், 3 ஜோடி ஆண் குழந்தைகளும் அடங்குவர் என்றார்.

    இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் 8 ஜோடி இரட்டையர்களில் ஒரு ஜோடி தலைமை ஆசிரியரின் குழந்தைகள் ஆவார்கள். அவரது மகன் ரெம்ருதிகா, மகள் லால்சார்ஜோவி ஆகியோர் எல்.கே.ஜி.யில் சேர்ந்துள்ளனர். அவர்கள் ஜூலை 21-ந் தேதி 5 வயதை எட்டுகிறார்கள்.

    • இந்தோனேசியாவில் அரிதினும் அரிதாக 4 கைகள் 3 கால்கள் மற்றும் ஒரே ஆண்குறியுடன் இரட்டைக் குழந்தைகள் ஒட்டிப் பிறந்துள்ளனர்.
    • உடலின் மேல்புறத்தில் அல்லாமல் கீழ்ப்புறத்திலும் ஒட்டிப் பிறந்துள்ள இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பது மிகவும் சிக்கலானது.

    இந்தோனேசியாவில் அரிதினும் அரிதாக 4 கைகள் 3 கால்கள் மற்றும் ஒரே ஆண்குறியுடன் இரட்டைக் குழந்தைகள் ஒட்டிப் பிறந்துள்ளனர். 2 மில்லயனில் 1 முறையே இதுபோன்ற குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வகை இரட்டையர்களுக்கு இசோபேகஸ் த்ரிபஸ் (Ischiopagus Tripus) என்று மருத்துவப் பெயர் உள்ளது. இந்த வகை இரட்டையர்களை 'சிலந்தி இரட்டையர்கள்' என்றும் அழைக்கின்றனர்.

    இந்தோனேசியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் அமெரிக்க மருத்துவ இதழ் இவர்களைக் குறித்து தற்போது வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பிறகே இந்த அரிய வகை இரட்டையர்களின் பிறப்பு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும் அந்த இதழில் குறிப்பிட்டுள்ளபடி, உடலின் மேல்புறத்தில் அல்லாமல் கீழ்ப்புறத்திலும் ஒட்டிப் பிறந்துள்ள இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பது மிகவும் சிக்கலானது. இந்த வகை இரட்டையர்களில் ஏதேனும் ஒரு குழந்தை உயிரிழப்பதற்கே 60 சதவீதம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனால் அதிசயிக்கத்தக்க வகையில் இந்த இரட்டையர்கள் இன்னும் நலமுடன் இருக்கின்றனர். இருப்பினும், அவர்களது உடல் அமைப்பின் காரணமாக முதல் 3 வருடங்களுக்கு அவர்களால் உட்கார முடியாத சூழல் இருந்ததால் அவர்கள் படுத்தே இருக்கும் நிலை ஏற்பட்டது. அதன்பின்னர் மருத்துவர்கள் செய்த சிறிய அறுவை சிகிச்சை காரணமாக தற்போது அவர்களால் அமர முடிகிறது என்று மருத்துவ இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

    • பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆட்டிச குறைபாடு கொண்ட இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
    • ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடுதானே ஒழிய, நோயல்ல.

    பெங்களூரில் தனது ஆட்டிஸ குறைபாடு கொண்ட மூன்றரை மாத பெண் குழந்தையை தாய் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு போலீசில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆட்டிச குறைபாடு கொண்ட இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. ஒரு குழந்தைக்கு லேசான ஆட்டிச பாதிப்பு உள்ள நிலையில் மற்றோரு குழந்தை முழுமையாக ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

     

    பெண்ணின் கணவன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் குழந்தைகளுடன் தனியாக அப்பெண் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வியாழனன்று தனது ஆட்டிச பாதிப்பு முழுமையாக உள்ள குழந்தையை கழுத்தை நெரித்து தாய் கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்துள்ளார். இதனைதொடர்ந்து அவரிடம் போலீஸ் விசாரணை நடத்தியதில், ஆட்டிச பாதிப்புடன் தனது குழந்தையின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்ற கவலையில் அவளைக் கொல்ல முடிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் கடந்த சில மாதங்களாகவே அதிக மன அழுத்தத்தில் தான் இருந்ததால் விரக்தியில் எனது மகளை கொலை செய்தேன் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

    தந்தை வெளிநாட்டில் இருந்து இன்னும் வராததால் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரட்டைக் குழந்தைகளில் மற்றொரு குழந்தையின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது

    நரம்பியல் வளர்ச்சிக் கோளாறான ஆட்டிசம் என்பது மூளை, தகவல்களைப் பயன்படுத்திப் புரிந்துகொள்ளும் திறனைத் தடுக்கும் ஒரு குறைபாடு ஆகும். இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களைச் சரியாகப் பயன்படுத்துவதில் சிரமம்.

     

    ஆனால் ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடுதானே ஒழிய, நோயல்ல. ஆட்டிசம் உள்ள குழந்தைகள் அதிக புத்திசாலிகளாக இருக்கவும் அதிக வாய்ப்புண்டு. ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்கள் அறிவியல் உட்பட பல்வேறு துறைகளில் சாதனையாளர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

     

    • ஜம்மு காஷ்மீரில் இரட்டை குழந்தைகள் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டன.
    • குழந்தைகளின் தந்தையை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளின் கழுத்து அறுக்கப்பட்ட உடல்கள் ஒரு வீட்டில் இருந்துமீட்கப்பட்டன. தகவலறிந்து வந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து, குழந்தைகளின் தந்தையை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று காவலில் வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சஜ்லா-கேயானி கிராமத்தில் முகமது குர்ஷித் வீட்டில் இரட்டை பெண் குழந்தைகளின் உடல்கள் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது. இருவரது உடல்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இரட்டைக் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர்.

    விசாரணையில், வெளியூரில் வேலை செய்யும் கணவன் மூன்று மாதத்துக்கு முன் சொந்த ஊர் திரும்பியுள்ளான். இரட்டை பெண் குழந்தைகள் தனக்கு பிறக்கவில்லை எனவும், கள்ளத்தொடர்பால் குழந்தைகள் பிறந்தது என கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய், மன வேதனையில் இரட்டை குழந்தைகளை கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனக்கு பிறக்கவில்லை என தந்தை கூறியதால் மனவேதனை அடைந்த தாய் இரட்டை பெண் குழந்தைகளைகொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×