என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "uniform"

    • பள்ளி மாணவர்களுக்கு சீருடை, பேனா வழங்கப்பட்டது.
    • ரோட்டரி சங்க பட்டய தலைவர் அலாவுதீன், ரோட்டரி சங்க தலைவர் சுல்தான் சம்சுல் கபீர், செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

    கீழக்கரை

    கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாணவிகள் 32 பேருக்கு சீருடையும், மாணவ, மாணவிகள் 500 பேருக்கு பேனா வழங்கும் நிகழ்ச்சியும் தாளாளர் அப்துல் மத்தீன் தலைமையில் நடந்தது.

    ரோட்டரி சங்க பட்டய தலைவர் அலாவுதீன், ரோட்டரி சங்க தலைவர் சுல்தான் சம்சுல் கபீர், செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

    தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் வரவேற்றார். பள்ளி நிர்வாகிகள் ரமீஸ், அஜ்ஹர், ஆசிரியர்கள், ரோட்டரி உறுப்பினர்கள் பொருளாளர் சிவகார்த்திக், மருத்துவர் செய்யது ராசிக்தீன், தர்மராஜ், சுந்தரம், சபிர், செய்யது மிதாஹிதின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விபத்து ஒன்றில் இவரது வலது காலில் முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் ஆட்டோ ஓட்ட முடியாமல் போனது.
    • பல்வேறு இடங்களில் தனக்கு வேலை வாய்ப்பு வேண்டி சென்றும் வேலை கிடைக்கவில்லை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் சிக்கல் அருகே மஞ்சகொள்ளை பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ். ஆட்டோ டிரைவர். இவருக்கு சுபா என்ற மனைவியும் 4 பிள்ளைகளும் உள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த விபத்து ஒன்றில் இவரது வலது காலில் முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் ஆட்டோ ஓட்ட முடியாமல் போனது. இவர் பல்வேறு இடங்களில் தனக்கு வேலை வாய்ப்பு வேண்டி சென்றுள்ளார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.

    மேலும் தனக்கோ அல்லது மனைவிக்கோ அரசு வேலை வழங்க கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்துள்ளார். பிள்ளைகளுக்கு சீருடை மற்றும் தினம்தோறும் உணவுக்கு வழியில்லாமல் வாழ்ந்து வருவதாகவும், அரசோ அல்லது தனியார் நிறுவனங்களோ தனக்கு வேலை வாய்ப்பு வழங்கி உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    • பள்ளி வளாகத்தில் மாணவ- மாணவிகள் தமிழ்நாடு வாழ்க என்ற வாசகத்தின் வடிவில் அமர்ந்தும் நின்றும் கொண்டாடினர்.
    • மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் இயங்கி வரும் குருஞானசம்பந்தர் மிஷன் வி.தி.பி. நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு உதயமான தினம் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மாணவ- மாணவிகள் தமிழ்நாடு வாழ்க என்ற வாசகத்தின் வடிவில் அமர்ந்தும் நின்றும் கொண்டாடினர். தருமபுரம் ஆதீனம் 27- வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாசியுடன் நடைபெற்ற விழாவிற்கு பள்ளியின் செயலர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். தலைமைஆசிரியர் தனராஜ் முன்னிலை வகித்தார். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும், சீருடையும் வழங்கப்பட்டது.
    • உதவி ஆளுநர் ஜெயக்குமார் புதிய உறுப்பினர்களை இணைத்து வைத்தார்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி பூக்கொல்லை ரோட்டில் அமைந்துள்ள மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை வளாகத்தில் மன்னை மிட்டவுன் ரோட்டரி 13-வது ஆண்டு பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

    அதில் புதிய தலைவராக டி.ரெங்கைய்யன், செயலராக வி.கோபால–கிருஷ்ணன், பொருளாளராக டி.அன்பழகன் பதவி ஏற்றுக்கொண்டனர். சங்க இயக்குனர்களாக விக்டர் வீ.பாலகிருஷ்ணன், ஆர்.பாலமுருகன், எம்.நடராஜன், கே.திருநாவுக்கரசு, ஏ.கே.பாலகுணசேகரன்,ஜீ.சிவ க்கொழுந்து, ஜீ.மனோ கரன், என்.சாந்த–குமார், கே.மோகனசுந்தரம், பி.ரமேஷ், ஆர்.மாரியப்பன், சி.குருசாமி, டாக்டர்.என்.விஜயகுமார் ஆகியோர் பதவியேற்றனர்.

    இதில் முன்மைவிருந்தி னராக மாவட்ட ஆளுநர் (23-24) மேஜர் டோனார் ஜீ.செங்குட்டுவன் சிறப்புரையாற்றினார். உதவி ஆளுநர் டி.ஜெயக்குமார் புதிய உறுப்பினர்களை இணைத்து வைத்தார். ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும், சீருடையும் வழங்கப்பட்டது. ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். டி.ரெங்கையன் தலைமை தாங்கி பேசினர். சீ.குருசாமி வரவேற்றார். முடிவில் வீ.கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார். புதிய உறுப்பினர்களாக மதிவாணன், கனகராஜ், சுந்தர்ராசு, அருள்செல்வன், முருகானந்தம் ஆகியோர் மிட்டவுன் ரோட்டரியில் உறுப்பினராக இணை ந்தனர்.

    • ராஜபாளையம் சேக்கிழார் மன்ற அறக்கட்டளையின் சார்பில் சொற்பொழிவுக் கூட்டம் மறக்கண்ணுச் செட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
    • மன்றத்தலைவர் பூமிநாதன் தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சேக்கிழார் மன்ற அறக்கட்டளையின் சார்பில் சொற்பொழிவுக் கூட்டம் மறக்கண்ணுச் செட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மன்றத்தலைவர் பூமிநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் கல்யாணவெங்கட்ராமன் வரவேற்றார். சுதா, தீபா ஆகியோர் தேவார பண்ணிசை பாடல் பாடினர்.

    நெல்லை சிவ காந்தி "திருமுறைத்தமிழ்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட சிவனடியார் திருக்கூட்டத் தலைவர் சிவசங்கர் வாழ்த்துரை வழங்கினார். ஏழை-எளிய மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன. சிவனடியார்கள், இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    மன்றத்தின் துணைத்தலைவர் சங்கரலிங்கம் நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை இணைச்செயலர்கள் முத்தையா, கணேசன் உட்பட மன்ற உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • மாதானம் பகுதியில் ஆய்வு செய்த பொழுது செங்கல் சூளையில் 13 வயதுடைய சுபஸ்ரீ என்ற மாணவி பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாக கூறினர்.
    • பள்ளியில் 8-ஆம் வகுப்பு சேர்க்கப்பட்டு புத்தகம்,சீருடை மற்றும் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஒன்றி யத்தில் வட்டார வளமை யத்தின் சார்பாக பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்று திறன் படைத்த மாணவர்களை கண்டறியும் பணி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா உத்தரவின் படி நடைபெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி ஆசிரியர் பயிற்றுநர் ஐசக்ஞானராஜ் ஆகியோர் மாதானம் பகுதியில் ஆய்வு செய்த பொழுது செங்கல் சூலையில் 13 வயதுடைய சுபஸ்ரீ பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாகவும் கூறினார். காலை மாதானம் செங்கல் சூளைக்கு சென்ற பொழுது மாணவி சுபஸ்ரீ பள்ளிக்கு செல்லாமல் இருப்பது தெரிய வந்தது பெற்றோர்களிடம் விசாரி த்த பொழுது கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியம் கல்பூண்டியில் 4 ஆம் வகுப்பு படித்தாகவும் தாரபுரம் கடலூர் கேரளா போன்ற இடங்களுக்கு. சென்று கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டதால் படிக்க வைக்க முடிய வில்லை என்று பெற்றோர்கள் கூறினார்கள்.

    பெற்றோர்களுடன் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும் மாவட்டஉதவி. திட்ட அலுவலர் ஞானசே கரன் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் திருசங்கு மற்றும் ஜெய்கிருஷ்ணன் ஆலோசனையின் படி மாணவி அருகில் உள்ள சிவானந்த உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு சேர்க்க ப்பட்டு புத்தகம்மற்றும் சிருடை மற்றும் விலையி ல்லா பொருட்கள வழங்க ப்பட்டது. அப்பொழுது பள்ளியின் தலைமை ஆசிரியர் பவானி ஆசிரி யர்கள் மணிமாறன் மற்றும் சேகர் ஆகியோர் இருந்தனர்.

    அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் ஆகியவற்றின் சார்பில் கல்வித்துறை வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    புதுச்சேரி:

    அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் ஆகியவற்றின் சார்பில் கல்வித்துறை வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் பெருமன்ற மாநில தலைவர் ராமராஜா தலைமை தாங்கினார். இளைஞர் பெருமன்ற துணை செயலாளர் லூதியர், துணைத்தலைவர்கள் பெருமாள், முரளி, பல்கலைக் கழக பொறுப்பாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில செயலாளர் அந்தோணி நோக்கவுரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மாணவர் பெருமன்ற மாநில செயலாளர் எழிலன் மற்றும் இளைஞர், மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி தொடங்கி 4 மாதமாக வழங்கப்படாத சீருடைகளை உடனடியாக வழங்க வேண்டும். கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

    அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    சீருடை அணிவதிலும் விதிமுறையை அரசு பஸ் டிரைவர் ஒருவர் கடைபிடித்து வருகிறார்.
    மானாமதுரை:

    அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு காக்கி நிற சீருடையும், 15வருட அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நீல நிற சீருடையும் வழங்கப்படுகிறது. மேலும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வருடத்திற்கு 2செட் சீருடைகள் மற்றும் காலணிகள் வழங்கப்படுகிறது. சீருடைக்கு தேவையான துணிகள் வழங்கப்படும் ஊழியர்கள் அதனை வேண்டிய அளவிற்கு தையல்கலைஞர்களிடம் கொடுத்து அவர்களின் அளவிற்கு ஏற்ப தைத்து கொள்வார்கள்.

    போக்குவரத்து கழக ஊழியர்கள் வாகனங்களை இயக்கும் போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்ற பேட்ஜ், சட்டை பையில் பெயர் பேட்ஜ், சட்டை பட்டன்கள் போக்குவரத்து கழக அடையாளம் உள்ளிட்டவைகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது நடைமுறையில் பல ஊழியர்கள் அதனை பின்பற்றுவது கிடையாது, காக்கி சட்டையும் பேன்ட்டும் அணிந்தே அரசு பஸ்களை இயக்கி வருகின்றனர்.

    மேலும் தனியார் பஸ் டிரைவர்களும் இதையே அணிந்து பஸ்களை இயக்கி வருவதால் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் தனியார் பஸ் எந்தவித வித்தியாசமும் தெரிவதில்லை. ஆனால் ராமேசுவரம் கிளை பணிமனையில் பணிபுரியும் மீனாட்சிசுந்தரம்(வயது42) என்பவர் தமிழக அரசின் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி பஸ்சை இயக்கி வருகிறார்.

    அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் அணியும் சீருடையை பணியில் சேர்ந்தது முதல் இன்று வரை முறையாக அணிந்து வாகனங்களை இயக்குகிறார். சக ஊழியர்கள் கேலி செய்தாலும் அதனை பொருட்படுத்தாமல் அவர்களையும் இதே போல சீருடை அணிவதற்கு மீனாட்சிசுந்தரம் வலியுறுத்தி வருகிறார். 
    திண்டுக்கல்லில் இன்று காலை சீருடை வழங்காததை கண்டித்து அரசு பஸ் முன்பு டிரைவர் தர்ணா செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள வத்தலக்குண்டு ஊர்காலன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழகம் கிளை 3-ல் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    இன்று காலை திண்டுக்கல்லில் இருந்து குமுளிக்கு செல்வதற்காக பஸ்சை எடுத்தார். அப்போது அவர் சீருடை அணியவில்லை. இதனை அறிந்த போக்குவரத்து பணிமனை உதவி பொறியாளர் தினகரன் விரைந்து வந்து சுரேசை பஸ்சை எடுக்க விடாமல் தடுத்தார்.

    இதனால் டிரைவருக்கும், உதவி பொறியாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த டிரைவர் சுரேஷ் பஸ் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது சீருடை வழங்காததை கண்டித்து கோ‌ஷம் போட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து நான் நிரந்தர பணியாளராக பணியாற்றுகிறேன். ஆண்டுக்கு 2 செட் சீருடை (2 பேண்ட், 2 சட்டை) வழங்க வேண்டும். ஆனால் இது கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.

    கடந்த 2014-ம் ஆண்டு முதல் சீருடை தைப்பதற்கான தையல் கூலியும் வழங்கவில்லை. இது குறித்து கிளை மேலாளர் மூலம் மதுரை பொது மேலாளருக்கு மனு கொடுத்துள்ளேன். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    சீருடை வழங்காததை கண்டித்து கம்பம் யூனிட் 2-ல் பாலகிருஷ்ணன் என்பவரும் போராட்டம் செய்துள்ளார். இது போன்ற நிலை திண்டுக்கல் கோட்டம் முழுவதும் உள்ளது. எனவே அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  #Tamilnews
    ×