என் மலர்
நீங்கள் தேடியது "Vaccination Camp"
- தாளவாடி சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் பெரியம்மை நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
- இந்த முகாமில் விவசாயிகள் தங்கள் மாடுகளை கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
தாளவாடி:
தமிழகம் முழுவதும் தற்பொழுது கால் நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்கி வருகிறது. அதேபோல தாளவாடி மலைப்பகுதியிலும் கால் நடைகளுக்கு பெரியம்மை தாக்கம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தாளவாடி சுற்று வட்டார பகுதியில் உள்ள கல்மண்டி புரம், சோளகர்தொட்டி, எரகணஹள்ள, தமிழ்புரம், மாதஹள்ளி, ஜோராஒசூர், காமையன்புரம், தொட்ட காஜனூர், தர்மாபுரம் மற்றும் பசப்பன்தொட்டி கிராமங்களில் பெரியம்மை நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
இந்த முகாமில் விவசாயிகள் தங்கள் மாடுகளை கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். முகாமில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாடுகளுக்கு பெரியம்மை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
- இந்த முகாமில் கால்நடை மருத்துவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
- மாட்டு தொழுவங்களில் சாணம், மழை நீர் தேங்காமல் வைப்பதன் மூலம் நோயை கட்டுக்குள் வைக்கலாம்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி மலையம் பாளையம் கிராமத்தில், கால்நடை தோல் கட்டி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிக்கு கணபதிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் தலைமை வகித்தார்.கால்நடை பராமரிப்புத் துறை திருப்பூர் கோட்ட உதவி இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் கால்நடை மருத்துவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
இது குறித்து கால்நடை பராமரிப்புத் துறையினர் கூறியதாவது:-
கால்நடைகளுக்கு கேப்ரிபாக்ஸ் என்ற வைரசால் தோல் கட்டி நோய் பாதிப்பு வேகமாக பரவி வருகின்றது. இந்த நோய் மழைக்காலங்களில் ஈக்களின் மூலமாக பரவுகின்றது .நோய் பாதிப்பின் அறிகுறிகளாக கால்நடைகள் தீவனம் உண்ணாமல் இருத்தல், கண் மற்றும் மூக்குகளில் இருந்து சளி போன்ற நீர் தென்படுதல், காய்ச்சல், பால் கறக்கும் மாடுகளில் திடீரென பால் குறைதல், உடம்பு முழுவதும் கட்டிகள் தென்படுதல், கால் வீக்கம், கழிச்சல் போன்றவை காணப்படும்.
இந்த நோயை கட்டுப்படுத்த, நோய் வாய்ப்பட்ட, கால்நடைகளை இடம் விட்டு இடமாற்றாமல் இருக்க வேண்டும். தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்தலாம். மாடுகளின் மேல் ஈ மற்றும் கொசு அமராமல் வைத்திருக்கவேண்டும்.மாட்டு தொழுவங்களில் சாணம், மழை நீர் தேங்காமல் வைப்பதன் மூலம் நோயை கட்டுக்குள் வைக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த முகாமில், கால்நடை மருத்துவர்கள், மலையம்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஜெயபால், செயலாளர் கௌதம் மற்றும் கால்நடை வளர்ப்போர் கலந்து கொண்டனர்.
- புருசெல்லோசிஸ் எனும் கன்று வீச்சு நோய் பாக்டீரியா கிருமிகளால் கால்நடைகளுக்கு ஏற்படும் ஒரு நோயாகும்.
- இந்நோய் மாடு, ஆடு போன்ற பிராணிகள், நாய், குதிரைகளிலும் ஏற்படும்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புருசெல்லோசிஸ் எனும் கன்று வீச்சு நோய் பாக்டீரியா கிருமிகளால் கால்நடைகளுக்கு ஏற்படும் ஒரு நோயாகும். இந்நோய் மாடு, ஆடு போன்ற பிராணிகள், நாய், குதிரைகளிலும் ஏற்படும். இறந்த நிலையில் கன்று அல்லது குட்டி பிறத்தல், நலிந்த கன்றுகள், நச்சுக்கொடி விழாமல் தங்குதல், பால்உற்பத்தி குறைதல் போன்ற அறிகுறிகள் ஏற்படுத்தும்.
காளைகள் மற்றும் ஆட்டுக்கிடாக்களில் விரைவீக்கம், மூட்டு அழற்சி மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும். நாய்களிலும் கருச்சிதைவு, மூட்டு அழற்சி ஏற்படுத்தும்.நாட்டின மாடுகளில் கருச்சிதைவு ஏற்பட்டு விரைந்து தொற்றும் தன்மை கொண்டது.இந்நோய் கால்நடைகளிலிருந்து மனிதர்களுக்கும் தொற்றும் நோயாகும். கால்நடைகளோடு நெருங்கி பழகும் விவசாயிகள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் துறைப்பணியாளர்கள், இறைச்சி கடைகளில் பணிபுரிவோர், ஆராய்ச்சி பணியாளர்கள் மற்றும் கால்நடைகள் மூலம் கிடைக்கும் பால் மற்றும் இறைச்சி நுகர்வோர்களை தாக்கும் அபாயம் உள்ளது.
இந்நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் சுத்திகரிக்கப்படாத பால் மற்றும் இறைச்சி பொருட்களை உட்கொள்வதாலும், நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளின் சுரப்புகள் மற்றும் உயிர்கழிவுகளோடு தொடர்பு ஏற்படும் போது நோய் பரவிடும் வாய்ப்பு உள்ளது.
இந்நோய் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு குறைவு. மனிதர்களில் இந்நோய் எலும்பு மற்றும் மூட்டு அழற்சி, தண்டுவட எலும்புகளில் அழற்சி, கல்லீரல் நோய், வயிறு மற்றும் குடல்களில் அழற்சி, இனப்பெருக்க உறுப்புகளில் அழற்சியை ஏற்படுத்தும். சில நேரங்களில் இந்நோய் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு, கண்கள் மற்றும் இதயத்திலும் பாதிப்பு ஏற்படுத்தும். சில நேரங்களில் இறப்பும் ஏற்படும்.
கால்நடைகளில் இந்நோய் தடுப்பதற்காக மருந்துகள் 1,80,000 டோஸ்கள் வரப்பெற்று சேலம் கால்நடை பராமரிப்புத்துறையில் இருப்பில் உள்ளது. சேலம் மாவட்டத்தில் 01.02.2023 முதல் 28.02.2023 முடிய தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளது.
இதில் 4 மாத வயது முதல் 8 மாத வயது முடியவுள்ள கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி போடப்படுகின்றது. தடுப்பூசி போடப்படும் கிடேரி கன்றுகளுக்கு அடையாள காதுவில்லைகள் பொருத்தப்படும். இந்த தடுப்பூசி ஒருமுறை போடப்பட்டால் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்புத்திறன் வெளிப்படுத்தும்.
எனவே, கால்நடை வளர்ப்போர் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி தங்களிடம் உள்ள 4 முதல் 8 மாத வயதுள்ள கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டு தங்கள் மாடுகளை நோயிலிருந்து பாதுகாத்து கொள்வதுடன் மனிதர்களுக்கு இந்நோய் ஏற்படாமல் தடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- முதுகுளத்தூரில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
- கால்நடை உதவி மருத்துவர்கள் வினிதா, சுந்தரமூர்த்தி, கால்நடை ஆய்வாளர் வீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முதுகுளத்துார்
முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெறிநோய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடந்தது. பேரூராட்சி சேர்மன் ஷாஜகான் தலைமை தாங்கினார்.
கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் இளங்கோவன், உதவி இயக்குநர் சிவக்குமார், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் நேருகுமார், தலைமையாசிரியர் சந்தனவேல், என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் மங்களநாதன் முன்னிலை வகித்தனர்.முகாமில் மாணவர்களிடம் வெறிநோய் மற்றும் தடுப்பூசியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. கால்நடை உதவி மருத்துவர்கள் வினிதா, சுந்தரமூர்த்தி, கால்நடை ஆய்வாளர் வீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- 1-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது
- கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கால்நடைகளில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் கோமாரிநோய் வராமல் தடுக்கும் வகையில் கோமாரிநோய் தடுப்பூசிப் பணி ஆண்டிற்கு 2 முறை இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் தற்போது கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி பணி 3-வது சுற்று வருகிற 1-ந் தேதி (புதன்கிழமை) முதல் 21-ந் தேதி வரை தடுப்பூசி பணி இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது.
அனைத்து கிராமங்க ளிலும் இத்தடுப்பூசி போடப்படும் நாட்களில் பொதுமக்கள் தங்கள் கால்நடைகளுக்கு தவறாமல் கோமாரிநோய் தடுப்பூசி போட்டு பயன்பெறலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 சதவீதம் பணி முடித்து தடுப்பூசி போடாத மாடுகளே இல்லை என்ற நிலையை உருவாக்கி கோமாரி நோயை அறவே வராமல் தடுக்கவும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கால்நடைகள் மூலமாக ஏற்படும் பொருளாதார இழப்பை தடுத்து கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
- 1-ந்தேதி தொடங்குகிறது
- கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் மாடுகளுக்கு தேசிய நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வருகிற 1-ந் தேதி முதல் தொடர்ச்சியாக 21-ந் தேதி வரை அனைத்து ஊராட்சிக ளிலும் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால் கால்நடை வளர்ப்போர்கள் தங்களிடம் உள்ள மாடுகள் அனைத்திற் கும் சினைமாடுகள், கன்றுகள் உள்பட தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். மேலும், கிடேரி கன்றுகளின் உரிமை யாளர், பெயர் விலாசம், தடுப் பூசி போடப்பட்ட விவரம், கால்நடைகளின் இனம் ஆகிய விவரங்களை உடனடி யாக இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்பட்டு, கால் நடை நிலையங்களில் உள்ள பதிவேட்டிலும் பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் கால்நடைவளர்ப்போருக்கு அரசால்
அறிவிக்கப்படும் கால்நடைகள் சம்பந்தப்பட்ட திட்டபயன்கள் எளிதில் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டி யன் தெரிவித்துள்ளார்.
- வேலம்பட்டி கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
- மாா்ச் 1-ந் தேதி முதல் மாா்ச் 21ந் தேதி வரை நடைபெறுகிறது.
திருப்பூர் :
பொங்கலூா் ஒன்றியம் வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சி வேலம்பட்டி கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தொடங்கி வைத்து கலெக்டர் வினீத் பேசியதாவது:-
தேசிய கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் திருப்பூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கோமாரி நோய் தடுப்பூசி மாா்ச் 1-ந் தேதி முதல் மாா்ச் 21ந் தேதி வரை நடைபெறுகிறது.கோமாரி நோய் தாக்காமல் இருக்க 6 மாதங்களுக்கு ஒருமுறை அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் இந்த முகாம் நடத்தப்படுகிறது. எனவே விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போா் இந்த முகாமில் தங்கள் கால்நடைகளுக்கு தவறாமல் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தி கொள்ள கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.அதைத்தொடா்ந்து மேய்க்கால் நில புனரமைப்பு திட்டத்தின் கீழ் தீவன மரம் மற்றும் தீவனப்பயிா் நடும் பணியினை கலெக்டர் தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் (பொறுப்பு) குமாரரத்தினம், வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சி மன்றத்தலைவா் நடராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
- கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது.
- இதில் 136 பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் காயல்குடி பேரூராட்சியில் சேர்மன் மாரியப்பன் தலைைமையில் செயல் அலுவலர் சேகர் முன்னிலையில் செல்ல பிராணிகளுக்கு பேரூராட்சி அலுவலகம் முன்பு தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் 136 பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
பேரூராட்சி தலைவர் மாரியப்பன், கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் டாக்டர் சிவகுமார், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் டாக்டர் நேரு குமார், கால்நடை மருத்துவர் அரவிந்தன், மணி, கால்நடை ஆய்வாளர்கள் இளமதி, கோதை நாயகி கால்நடை பராமரிப்பு உதவியாளர் கண்ணதாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- துணை சுகாதார மையம் மூலம் நடந்தது
- அதிகாரி பார்வையிட்டார்
வாணியம்பாடி:
கிராமங்களில் உள்ள துணை சுகாதார மையம் மூலம் குழந் தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி வாணியம்பாடி அடுத்த அம்பலூர் துணை சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில் தொடங்கி வைத்து பார்வையிட்டார். வட்டார மருத்துவ அலுவலர் செல்லமுத்து, ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி.முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதே போல் ஆலங்காயம் துணை சுகாதார நிலையத்தின் மூலம் நிம்மியம்பட்டு வெள்ளைகுட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இப்பணிகளை வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி பார்வையிட்டார்.
- சுமார் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களை நாய் கடித்ததால் அருகில் உள்ள அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்றனர்.
- செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கோளப்பாறை கிராமத்தில் நேற்று தெருவில் சுற்றித் திரிந்த சில நாய்கள் திடீரென பொதுமக்களை கடித்துக் குதற ஆரம்பித்தது. சுமார் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களை நாய் கடித்ததால் அருகில் உள்ள அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்றனர். அதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர் சுகுமார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக கோளப்பாறை கிராமத்தில் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் முகாமை ஏற்பாடு செய்தார். அதன்படி கோளப்பாறை கிராமத்தில் உள்ள ஊராட்சி அலுவலகம் அருகில் வெறி நோய் விழிப்புணர்வு மற்றும் செல்லப்பி ராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது.
கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் சுகுமார் தலைமையில் டாக்டர் மகேஸ்ராம், டாக்டர் ஆலமரத்தான் மற்றும் குழுவினர் கிராமத்தில் சுற்றித்திரிந்த மற்றும் பொதுமக்கள் வீட்டில் வளர்த்து வந்த செல்லப்பிராணிகளுக்கும் தெரு நாய்களுக்கும் வெறி நோய் தடுப்பூசி போட்டனர் . அத்துடன் கோளப்பாறை கிராம பொதுமக்களுக்கு வெறிநோய் அறிகுறிகள், தடுப்பூசியின் அவசியம் ,மற்றும் நோய் தடுப்பு முறைகள் பற்றி விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட டாக்டர்களுக்கும் கால்நடை பராமரிப்புத் துறை யினருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் நன்றி கூறினார். மேலும் விழுப்புரம் கா ல்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரனின் அறிவுரைப்படி கோள ப்பாறை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கால்நடை உதவி டாக்டர்கள் தலைமை யில் குழுக்கள் அமைத்து தினசரி தொடர் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
- மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- 56 பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதுடன் முழு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
திருப்பூா் :
தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும்முழு உடல் பரிசோதனை செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு மாவட்டத் தலைநகரங்களில் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்டத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான தடுப்பூசி முகாம் அவிநாசி சாலையில் பங்களா பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள தாய் சேய் நல விடுதியில் தொடங்கியது.
திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மருத்துவா் ஜெகதீஷ்குமாா் மேற்பாா்வையில் இந்த முகாம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற 56 பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதுடன், சா்க்கரை அளவு, ரத்த அழுத்தம், ரத்தப் பரிசோதனை, ஈ.சி.ஜி, எக்ஸ்ரே உள்ளிட்ட முழு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. செவ்வாய்க்கிழமை நடைபெறும் இரண்டாம் நாள் முகாமில் 62 பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு ஹஜ் சா்வீஸ் சொசைட்டியின் திருப்பூா் மாவட்ட உறுப்பினா்கள் சபியுல்லா, சையது ஆதில், சைபுதீன், முகமது ஆரிப் உள்ளிடடோா் செய்திருந்தனா்.
- பழைய நீடாமங்கலம் துணை சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் நடை பெற்றது.
- வருகிற 12-ந்தேதி வரை நடக்கிறது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் கோவில்வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பழைய நீடாமங்கலம் துணை சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமை வட்டார மருத்துவ அலுவலர் ராணி முத்துலட்சுமி ெதாடங்கி வைத்தார்.
முகாமில் 5 வயதிற்கு கீழ் உள்ள விடுபட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இந்த தடுப்பூசி பணியை கிராம சுகாதார செவிலியர் மரியம்மாள் மேற்கொண்டார்.
இந்த முகாம் நேற்று தொடங்கி வருகிற 12-ந்தேதி வரை நடக்கிறது.
எனவே முகாமை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவ அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.