என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "victim"

    • வெங்க டேசன் மனைவி பத்மாவதி ஆண் குழந்தை பிறந்தது. வீட்டிற்கு சென்ற பிறகு வயிறு பகுதியில் அதிக வலியின் காரணமாக அதே கடலூர் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • பரிசோதனை செய்த போது பத்மாவதியின் குடல், கர்ப்பவாய் இரண்டையும் சேர்த்து தையல் போடப்பட்டிருந்தது,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் சிறுவத்தூர் கிராமம் வெங்க டேசன் மனைவி பத்மாவதி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டு ஆண் குழந்தை பிறந்தது.வீட்டிற்கு சென்ற பிறகு வயிறு பகுதியில் அதிக வலியின் காரணமாக அதே கடலூர் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார்.அங்கு பரிசோதனை செய்த போது பத்மாவதியின் குடல், கர்ப்பவாய் இரண்டையும் சேர்த்து தையல் போட்டுள்ளதை ஜிப்மர் டாக்டர்கள் கண்டறிந்தனர்

    இது தொடர்பாக கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் 5 முறை மனு கொடுத்துள்ளனர். இதன் மீது கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட்டும், தங்களை எந்த விசாரணைக்கும் அழைக்கவில்லை என்று கூறி பத்மாவதியிpf உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இன்று காலை திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தைநடத்தினர்.பின்னர் அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • அதிகாரிப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தியா (வயது 23) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
    • கதவை திறந்து வெளியே வந்த சந்தியா, வாந்தி எடுத்த நிலையில் அருகில் இருந்த சாக்கடை கால்வாய் தவறி விழுந்தார்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை அதிகாரிப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தியா (வயது 23) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    தற்போது சந்தியா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு வாந்தியுடன், தலை சுற்றல் ஏற்பட்டது. கதவை திறந்து வெளியே வந்த சந்தியா, வாந்தி எடுத்த நிலையில் அருகில் இருந்த சாக்கடை கால்வாய் தவறி விழுந்தார்.

    இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்தியா பரிதாபமாக இருந்தார். தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    சாக்கடை கால்வாயில் கர்ப்பிணி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சந்தியாவின் உடலை பார்த்து அவரது கணவர், உறவினர்கள் கதறி அழுதது காண்போர் கண்களை குளமாக்கியது.

    • மோகனூரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு மொபட்டில் சென்றார். அவருடன் உறவினர்கள் ஆகியோரும் சென்றனர்.
    • சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த கார் சரவணன் சென்ற மொபட் மீது மோதியது. இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூர் கல்லாங்குத்து பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 50). இவர் சிமெண்ட் தொட்டி, சிமெண்ட் குழாய், சிமெண்ட் தூண்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்று வந்தார்.

    குலதெய்வம் கோவில்

    இன்று காலையில், சரவணன் மோகனூரில் உள்ள குலதெய்வம் கோவி லுக்கு மொபட்டில் சென்றார். அவருடன் உறவி னரான முத்து (39), இவரது மகன் சாய்பாலமித்திரன் (4) ஆகியோரும் சென்றனர்.

    சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த கார் சரவணன் சென்ற மொபட் மீது மோதியது.

    2 பேர் பலி

    இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் பலத்த காயம் அடைந்த முத்து மற்றும் அவரது குழந்தை இருவரும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், சாய்பால மித்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். முத்துவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீஸ் விசாரணை

    உயிரிழந்த சரவணனின் உடல் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியிலும், சாய் பாலமித்திரனின் உடல் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியிலும் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குலதெய்வம் கோவிலுக்கு சென்றபோது, விபத்துக்குள்ளாகி குழந்தை உள்பட 2 பேர் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குமாரபாளையம்

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் முதலியார் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 50). விசைத்தறி உரிமையாளர். இவருடைய மனைவி நிர்மலா. இவர்களுடைய மகள் சிவ நந்தினி (17), மகன் அனிருத் (15). இதில் சிவ நந்தினி குமாரபாளையம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது தான் பொதுத்தேர்வு எழுதி முடித்து உள்ளார். அனிருத் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    ஈரோடு மாவட்டம் அந்தி யூரில் உள்ள குலதெய்வ கோவிலான பத்ரகாளி யம்மன் கோவிலுக்கு கந்தசாமி, நிர்மலா, சிவ நந்தினி ஆகியோர் மோட்டார்சைக்கிளில் நேற்று சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் மோட்டார்சைக்கி ளில் குமாரபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    பவானியை அடுத்த காடையாம்பட்டி அருகே சென்றபோது மோட்டார்சைக்கிள் திடீரென நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

    தந்தை- மகள் சாவு

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கந்தசாமி படுகாயம் அடைந்து உயிரிழந்தார். நிர்மலா, சிவ நந்தினி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு நிர்மலாவும், சிவ நந்தினியும் கொண்டு செல்லப்பட்டனர். இதில் செல்லும் வழியிலேயே சிவ நந்தினி பரிதாபமாக இறந்தார்.

    நிர்மலா ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இறந்த கந்தசாமி, சிவ நந்தினி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுஉள்ளன. கோவிலில் காவடி ஊர்வலத்தில் பங்கேற்றதால் கந்தசாமி களைப்புடன் காணப்பட்டதாக தெரிகிறது. அந்தியூரில் இருந்து திரும்பும் போது தனக்கு தூக்கம் வருவதாக மனைவியிடம் தெரி வித்துள்ளார். இதனால் வழி யில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி 3 பேரும் டீ குடித்துவிட்டு பின்னர் மீண்டும் புறப்பட்டனர்.

    எனினும் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் கந்தசாமி இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டே தூங்கியதால் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி உயிரிழந்தது விசா ரணையில் தெரியவந்தது.

    இதுகுறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    • வாலிபர்-முதியவர் பலியாகினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே போடுரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் ராமானுஜன் (வயது 22). இவர் மது போதைக்கு அடிமையாகி கடந்த ஒரு ஆண்டாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படு கிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ராமானுஜம் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் வல்சாபுரத்தில் உள்ள தனது சித்தி சித்ரா வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றார். இந்த நிலையில் நேற்று காலை துலுக்கன்குறிச்சி அருகில் ரோட்டோரம் நெற்றில் காயத்துடன் ராமானுஜம் இறந்து கிடந்துள்ளார்.

    இதனை கண்ட மாரிச்சாமி என்பவர் ராமானுஜத்தின் தந்தை வரதராஜிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வரதராஜ் சம்பவ இடத்திற்கு சென்று ராமானுஜம் உடலை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதில், ராமானுஜம் மோட்டார் சைக்கிளில் ஓட்டிச் சென்றபோது விபத்தில் சிக்கி இறந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி அருகே கீழ இடையன்குளம் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (52). இவர் சென்ற மோட்டார் சைக்கிள் திடீ ெரன பழுதாகி விட்டது. அவர் சாலையோரமாக நின்றபோது அந்த வழியாக வந்த லாரி மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவலறிந்த அவரது மகள் திவ்யா முனீஸ்வரி நரிக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட்டின் அருகே‌ நேற்று இரவு சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் அந்த வழியாக நடந்து சென்றார்.
    • அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் அந்த நபர் மீது மோதியது.

    கடலூர்:

    வேப்பூர் அருகே சென்னையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட்டின் அருகே நேற்று இரவு சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் அந்த வழியாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் அந்த நபர் மீது மோதியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த வேப்பூர் போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் இறந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும் இவர் மீது காரை மோதி விபத்துக்குள்ளாக்கிய காரை ஓட்டி வந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் குப்புசாமி இறந்தார்.
    • பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் சயனைடு கலந்த மதுவை வாங்கி குடித்ததால் இறந்தது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் படைவெட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 68) மீன் வியாபாரி. கீழவாசல் பூமால்ராவுத்தன் கோவில் தெருவை சேர்ந்தவர் விவேக் (36) கார் டிரைவர்.

    இவர்கள் நேற்று மதியம் கீழவாசல் தற்காலிக மீன் மார்க்கெட் எதிரே உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் மது வாங்கி குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் குப்புசாமி இறந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி விவேக் இறந்தார்.

    இவர்கள் இருவரது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் சயனைடு கலந்த மதுவை வாங்கி குடித்ததால் இறந்தது தெரியவந்தது. இவர்கள் ஒருவர் குடித்த மதுவை மற்றொருவர் குடித்ததால் இரண்டு பேரும் பலியாகினர்.

    தற்கொலையா ? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே டாஸ்மாக் பார் உரிமையாளர் செந்தில் நா.பழனிவேல், ஊழியர் காமராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் வேலை பார்த்த மேற்பார்வையாளர் முருகன், விற்பனையாளர்கள் 3 பேர் என மொத்தம் 4 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன் உத்தரவிட்டார்.

    • சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
    • உத்தண்ணா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம் ராய் சோட்டி, பசவலாவாண்ட்ல பள்ளியை சேர்ந்தவர் உத்தண்ணா (வயது 40).

    இவர் ஏற்கனவே வழக்கு ஒன்றில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த வாரம் வெளியே வந்தார். அங்குள்ள ஒரு வீட்டில் பெற்றோர் வேலைக்கு சென்றதால் 14 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்தார்.

    இதனை அறிந்த உத்தண்ணா அவரது வீட்டிள் நுழைந்தார். சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். இதனை சற்றும் எதிர்பாராத சிறுமி கத்தி கூச்சலிட்டார்.

    சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உத்தண்ணா சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றதை கண்டு ஆத்திரம் அடைந்தனர்.

    பொதுமக்கள் உத்தண்ணாவை மடக்கி பிடிக்க முயன்றனர். அவர்களை தாக்கி விட்டு உத்தண்ணா தப்பி ஓடினார். இருப்பினும் அவரை விரட்டிச் சென்ற பொதுமக்கள் முத்தண்ணா மீது சரமாலியாக கற்களை வீசி தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ராய் சோட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். உத்தண்ணா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் அருகே ஆனங்கூர் ரெயில் நிலையத்துக்கும் காவேரி ஆர்.எஸ். க்கும் இடையே ரெயிலில் அடி பட்டு 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்த கிடந்தார்.
    • உடல் முழுவதும் சிதைந்த நிலையில் உள்ளதால் அடை யாளம் தெரியவில்லை.

    சேலம்:

    சேலம் அருகே ஆனங்கூர் ரெயில் நிலையத்துக்கும் காவேரி ஆர்.எஸ். க்கும் இடையே ரெயிலில் அடி பட்டு 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்த கிடந்தார். உடல் முழுவதும் சிதைந்த நிலையில் உள்ளதால் அடை யாளம் தெரியவில்லை.

    மாநிறத்தில் உள்ள அவர் கருப்பு கலர் லுங்கி, காப்பி கலரில் முழுக்கை சட்டை அணிந்து உள்ளார். வலது பக்க இடுப்பில் கருப்பு மச்சம், வலது மார்பு பகுதி யின் கீழே மச்சம் உள்ளன.

    அவர் இறந்து கிடந்த இடம் ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டதாகும். எனவே இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வட்டூர் கிராமம், பெத்தாம்பட்டி வண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் கிஷோர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.இ., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
    • மோர்பாளையம், தனியார் வே-பிரிட்ஜ் அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில், கிஷோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வட்டூர் கிராமம், பெத்தாம்பட்டி வண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 55). இவரது மகன் கிஷோர் (19). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.இ., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்னர், பக்ரீத் பண்டிகை விடுமுறைக்காக கிஷோர் ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் மாலை கிஷோர், தனது பாட்டியை வைகுந்தத்தில் உள்ள அவரது வீட்டில் விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் பெத்தாம்பட்டி கிராமத்திற்கு திரும்பி கொண்டிருந்தார்.

    மோர்பாளையம், தனியார் வே-பிரிட்ஜ் அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில், கிஷோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள், கிஷோர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ராமு லாரி லோடுமேனாக வேலை செய்துவந்தார்.
    • விழுந்த இடத்தில், கம்பி கேட் இருந்ததால், அந்த கம்பி குத்தி ராமு உயிருக்கு போராடினார்.

    புதுச்சேரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி மகுடஞ்சாவடி எர்ணாபுரம் பகுதியைச்சேர்ந்தவர் ராமு (வயது48). இவர், கேராளாவிற்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் சென்று, அங்கேயே லாரி லோடுமேனாக வேலை செய்துவந்தார். இவரது தம்பி லட்சுமணன். இவரும் லோடுமேனாக சேலத்தில் வேலை செய்து வந்தார். ராமு, அடிக்கடி சேலம் வந்து தம்பி லட்சுமணனை பார்த்து செல்வது வழக்கம். அதேபோல், கடந்த 6-ந் தேதி சேலம் வந்த ராமு, தம்பி லட்சுமணன் மற்றும் சிலருடன், நாகை மாவட்டம் பூந்தோட்டத்தில் பஞ்சு ஏற்று வதற்காக சென்றார். பின்னர், அங்கிருந்து, காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் சென்றனர்.

    அங்கு வேலை முடிந்ததும், இரவு, அங்குள்ள மதுக்கடையில் அனைவரும் மது அருந்திவிட்டு, லாரி மேலே ராமுவும், லாரியின் கீழே தம்பி லட்சுமணன் உள்ளிட்ட சிலரும் தூங்கி னர். லாரி மேலே தூங்கிய ராமு, தூக்ககலக்கத்தில், லாரியில் இருந்து கீழே விழுந்தார். அவர் விழுந்த இடத்தில், கம்பி கேட் இருந்ததால், அந்த கம்பி குத்தி ராமு உயிருக்கு போராடினார். தொடர்ந்து, லட்சுமணன் உள்ளிட்ட சிலர் ராமுவை, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு பரிசோ தித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து, லட்சுமணன் திருநள்ளாறு போலீசில் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பிரகாஷ் தனியார் அடகு கடையில் வேலை செய்து வருகிறார்.
    • டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.

    புதுச்சேரி:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் திருகொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 41) இவர் காரைக்கால் அடுத்த சேத்தூர் தனியார் அடகு கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜான்சிராணி 8 மாத கர்ப்பிணி. காரைக்கால் அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய் தொடர்பாக சிகிச்சையில் உள்ளார். நேற்று இரவு மனைவிக்கு இரவு உணவு வழங்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் பிரகாஷ் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திருநள்ளாறு சாலையில் வந்த போது மற்றொரு மோட்டார் சைக்கிள், பிரகாஷ் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பிரகாஷ் தலைக்குப்புற சாலையில் விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் இளங்கோவன் (46) அவரது மனைவி மற்றும் மகன்கள் இருந்தனர்.

    இதில் அவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. 4 பேரையும் தனித்தனி வாகனங்களில் ஏற்றி அங்கிருந்தவர்கள் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் பிரகாசை சோதித்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து பிரகாஷின் சகோதரர் லட்சுமணன் காரைக்கால் போக்குவர த்துக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் இளங்கோ மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளங்கோவின் மனைவி மற்றும் மகன்கள் முதலுதவி பெற்று வீடு திரும்பினார். இளங்கோ தொடர் சிகிச்சையில் உள்ளார்.

    • சந்தோஷ் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கடை வீதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
    • பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் மேல்புவனகிரியை சேர்ந்தவர் சிவசங்கர் மகன் சந்தோஷ் (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் இன்று காலை வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கடை வீதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். இவர் மேல்புவனகிரி ராகவேந்திரா வீதியில் வந்த போது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறு கீழே விழுந்த சந்தோஷ் மீது, டிப்பர் லாரி ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பிளஸ்-1 மாணவன், உடல் நசுங்கி உயிரிழந்தான்.

    இதனைக் கண்ட டிப்பர் லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த புவனகிரி போலீசார், மாணவன் சந்தோஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சித ம்பரம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுபபிவைத்தனர். லாரி மோதி பள்ளி மாணவன் இறந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே ேசாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×