என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Villagers"

    நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றகிராம மக்கள் கலெக்டரிடம் மனு,

    கடலூர்:

    காட்டுமன்னார்கோவில் பூர்த்தங்குடி, தெ.நெடுஞ்சேரி ஊர் பொதுமக்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த னர். அந்த மனுவில் கூறியி ருப்பதாவது   காட்டுமன்னார்கோயில் பெட்ரோல் பங்க் அரு காமையிலும், காட்டு மன்னார்கோயில் நெடுஞ்சாலை ஒரத்திலும் டாஸ்மாக் கடை மற்றும் பார் அமைந்துள்ளது. இங்கு வரும் மதுபான பிரியர்கள் சாலையிலேேய வாகனங்களை நிறுத்தி விடு கின்றனர். மேலும், குடித்து விட்டு மது போதையில் கூச்சலிடுகின்றனர்.  இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அருகாமையில் உள்ள குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் மாணவ, மாணவியர்கள் பெரிதும் பாதிப்படை கின்றனர். இதனால் டி.நெடுஞ்சேரி முதல் கந்தகுமாரன் வரை அதிகளவில் வாகன விபத்துக்கள் நடக்கின்றன. இந்த மதுபான கடை டி.நெடுஞ்சேரி ஊராட்சி எல்லைக்கு உட்பட்டது. இடப்பற்றாகுறை காரண மாக பூர்த்தங்குடி ஊராட்சி யில் முறை கேடாக இயங்கி வருகின்றது. இந்த டாஸ்மாக் கடையை நிரந் தரமாக எங்கள் ஊராட்சியில் இருந்து இட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    • 1௦௦-க்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகின்றனர்.
    • வீடுகளை காலி செய்ய வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே துத்தாரிபாளையம் என்ற பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் அங்கு குடியிருப்பவர்களிடம் இந்த இடம் நீரோடை பகுதியாக உள்ளது. எனவே வீடுகளை காலி செய்ய வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை சிறை பிடித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற பல்லடம் தாசில்தார் நந்தகோபால், காம நாயக்கன்பாளையம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கிராம அலுவலரை மீட்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 6 ஆண்டுகளுக்கு முன்பாக அண்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் இருந்த தரை பாலம் சேதமடைந்தது.
    • அவர்களது சொந்த பணத்தில் பாலத்தை கட்ட முடிவு செய்தனர்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அண்டப்பட்டு கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக அண்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் இருந்த தரை பாலம் சேதமடைந்தது. இதையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், பி.டி.ஒ. அலுவலகங்களில் பல முறை புகார் தெரிவித்தனர். சேதம் அடைந்த பாலத்தை சரி செய்யவில்லை என கூறப்படுகிறது.மேலும், இந்த பாலம் வழியாக சென்ற 20-க்கும் மேற்பட்டோர் பாலத்தில் விழுந்து காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் ஒன்றிய கவுன்சிலர் எழிலரசனிடம் இதுகுறித்து மனு அளித்தனர். இதையடுத்து கீழ்கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஈச்சேரி சேகர், கவுன்சிலர் எழிலரசன் ஆகியோர் அவர்களது சொந்த பணத்தில் பாலத்தை கட்ட முடிவு செய்தனர்.அதன்படி ரூ.12 லட்சம் செலவில் பாலத்தை கட்டும் பணியை கீழ்கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ஆகியோர் தொடங்கினர். இதையறிந்து அங்கு வந்த அதிகாரிகள் பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினார். இதனால் அப்பகுதி கிராம மக்கள் அங்கு திரண்டு அதிகாரி களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய மறுக்கின்றனர்.
    • இடத்தின் மீது கடன் வாங்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.

    உடுமலை:

    குடிமங்கலம் அருகே பத்திரப்பதிவு மேற்கொள்ள முடியாமல் 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க குடிமங்கலம் ஒன்றிய கமிட்டி செயலாளர் ஸ்ரீதர் கூறியதாவது:-குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட புதுப்பாளையம்,அடிவள்ளி உள்ளிட்ட 13 க்கும் மேற்பட்ட கிராமங்கள் கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலக வரம்பில் வருகிறது.இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பரிவர்த்தனைகள் மேற்கொண்டு வந்தனர்.இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த கிராம குடியிருப்புகளில் காலி இடம்,வீடுகள் விற்பனை செய்யும்போது கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய மறுக்கின்றனர்.இதற்காக உரிய காரணமும் தெரிவிக்க மறுக்கின்றனர்.இதனால் இந்த கிராமங்களில் காலி இடங்களை வாங்கியவர்கள் பத்திரப் பதிவு செய்ய முடியாமலும்,இடத்தின் மீது கடன் வாங்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.எனவே பத்திரப் பதிவுத்துறை உரிய விளக்கம் அளிக்கவும்,பிரச்சினைக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

    • அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றாமல் பஞ்சாயத்து தலைவர் புறக்கணித்து வருவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
    • கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து 50 அடி தூரத்திற்கு தடுப்பு அமைத்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்தனர்.

    வாயில் துணி கட்டி...

    பாளை யூனியன் ராமையன்பட்டி பஞ்சாயத்து 4-வது வார்டு உறுப்பினர் மாரியப்பபாண்டியன் பொதுமக்களுடன் வாயில் வெள்ளை துணி கட்டி வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    4-வது வார்டுக்குட்பட்ட அரசு புதுக்காலனி, சிவாஜிநகர், சைமன்நகர், பாலாஜிநகர், காவேரி கார்டன், வேப்பன்குளம், மணிநகர் உள்ளிட்ட பணிகளில் 165 தெருக்கள் உள்ளது. ஆனால் எங்கள் 4-வது வார்டு முழுவதும் எந்த அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றாமல் பஞ்சாயத்து தலைவர் புறக்கணித்து வருகிறார்.

    இதுதொடர்பாக பலமுறை மனுகொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    மற்றொரு மனு

    தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் அம்பை தாலுகாவுக்கு உட்பட்ட பொன்மாநகர் பகுதி மக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில், அம்பை தாலுகா அலுவலகத்தில் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் அளிக்கும் அடிப்படை வசதிகள் தொடர்பான புகார் மனுக்களை நிராகரித்து வருகின்றனர். எனவே அத்தகைய அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தெற்கு கல்லிடைக்குறிச்சி கிராமம் பகுதி மக்கள், வரைமுறை பட்டா கேட்டு கடந்த ஆண்டு விண்ணப்பித்தும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிப்பு போன்ற தற்கொலை சம்பவங்களை தடுக்கும் வகையில் பொதுமக்கள் யாரும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து நுழைவு வாயிலில் இருந்து 50 அடி தூரத்திற்கு தடுப்பு அமைத்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஆனால் ஒரு சில போலீசார் ஆஜராக்கிரதையாக செயல்பட்டு செல்போனில் பேசியபடி சோதனை செய்து வருகிறார்கள். இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டதால் இன்று கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் மனுக்கள் கொடுத்த பொதுமக்களுக்கு ரசீது வழங்கும் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் வரிசையில் நின்று ரசீது பெற்று சென்றனர்.

    • இந்த பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது.
    • பொதுமக்கள் இறந்த விட்டால் பறவையாற்றில் இறங்கிதான் சடலத்தை சுமந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வடக்குபொய்கை நல்லூரில் காந்திமகான் தெரு, உழவர் தெரு, சிவன்கோயில் தெரு, சுனாமி குடியிருப்பு ஆகியவை உள்ளது.

    இந்த பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது.

    இவர்களுக்கு தனி சுடுகாடு இல்லை. தனி சுடுகாடு அமைத்து தர வேண்டும் என்று கோரி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள்.

    இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இறந்த விட்டால் பறவையாற்றில் இறங்கிதான் சடலத்தை சுமந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

    பறவையாற்றில் கடல் நீர் ஏறினால் ஆள் உயரத்திற்கு தண்ணீர் ஓடும். எனவே சடலத்தை கொண்டு செல்ல இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    பல ஆண்டு காலம் கோரிக்கையை முன் வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த விபத்தில் உயிரிழந்த ராணி என்பவர் சடலத்தை ஆற்றைக் கடந்து சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.

    மேலும் இறந்தவர்களுக்கு சடங்குகள் செய்யவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    எனவே நிரந்தரமாக பாலம் அமைத்து சுடுகாடு கூரை அமைத்து தர வேண்டுமென அது கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் கோரிக்கையை அரசு செவிசாய்க்காவிட்டால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 50 ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர்.
    • இதனால் கிராம மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கட்டப்பெட்டு அருகில் உள்ள பில்லிக்கம்பை சக்தி நகர் கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்து வருகிறது.

    கோத்தகிரி கட்டப்பெட்டு அருகில் உள்ளது பில்லிக்கம்பை சக்தி நகர் கிராமம். இங்கு 200 -க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் கடந்த 50 ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர். இவர்களது அடிப்படை தேவையான சாலை வசதி மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. அந்த கிராமத்துக்கு செல்லும் சாலை பயன்படுத்த முடியாத வகையில் கரடுமுரடாக காட்சி அளிக்கிறது.

    இவர்கள் பல முறை பல அதிகாரிகளிடமும், அரசியல் பிரமுகர்களிடமும் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவர்களது கிராமம் பிரதான சாலையில் இருந்து வனப்பகுதியில் 4 கிலோமீட்டர் செல்வதால் காலை வேளையில் குழந்தைகளை பள்ளி வாகனங்களுக்கு கூட இந்த தொலைவை கடந்து வந்து அவர்களே ஏற்றி விட வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

    மேலும் அவசர தேவைகளான மருத்துவம் உதவிக்காக அவசரஊர்தி வந்து செல்வதற்கு ஏற்றவாறு சாலை இல்லை என்பதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி அவர்களை தொட்டில் கட்டி தூக்கி வரும் சூழ்நிலை நிலவுகிறது. இதனால் கிராம மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

    மேலும் இவர்களுக்கான சிறந்த குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் சரியான முறையில் கிடைப்பதில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.

    • குட்டை தெருவில் ஒரு மின்கம்பம் தாழ்வாகவும், ஒரு மின்கம்பம் ஆறு தடவைக்கு மேல் அறுந்தும் விழுந்து உள்ளது
    • இந்த மின் கம்பம் மற்றும் மின்கம்பிகளில் மோதி உரசி விபத்துகளும் உயிரிழப்பு ஏற்படும்

    விழுப்புரம்:

    திருவெண்ணெநல்லூர் அருகே உள்ள அரசூர் ஊராட்சியில் குட்டை தெருவில் ஒரு மின்கம்பம் தாழ்வாகவும், ஒரு மின்கம்பம் ஆறு தடவைக்கு மேல் அறுந்தும் விழுந்து உள்ளது. இதனை சீரமைக்க வேண்டி பொதுமக்கள் பல தடவை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்க ளுக்கு அச்சம் ஏற்படுவதா கவும் திரௌ பதியம்மன் கோவில் திருவிழா நடைபெ றுவதால் சாமி வீதி உலா தேர் வீதி உலா வரும்பொழுது இந்த மின் கம்பம் மற்றும் மின்கம்பிகளில் மோதி உரசி விபத்துகளும் உயிரிழப்பு ஏற்படும் எனக்கூறி அரசூர் மின்வாரிய அலுவலகத்தை அரசூர் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் கிராம பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். அப்போது திருவெ ண்ணெநல்லூர் உதவி செயற் பொறியாளர் பாக்கியராஜ், உதவி மின் பொறியாளர் மீனலோச்சனி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாழ்வாக உள்ள மின்கம்பத்தினை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்வதாகவும் அடிக்கடி அறுந்து விடும் மின்கம்பிகளை மாற்றி புதிய மின்கம்பி அமைத்து தருவதாகவும் கூறினார்

    அதன் பேரில் போரா ட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். அதன் பிறகு உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்

    • 23 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் உருக்காலை உரிமம் முடிவடைந்த நிலையில் அதனை புதுப்பிக்க கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த17ந் தேதி முதல் கடந்த 23 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே காத்திருப்பு போராட்ட பந்தலில், அப்பகுதி மக்கள் 21 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரதத்தை அனுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார், வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதற்கிடையே நேற்று மாலை உண்ணாவிரத பந்தலுக்கு வந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வாழ்த்தினார்.

    • வண்டியை அவர் திருடி கொண்டு வந்துவிட்டதாக தவறாக கருதி, அசோக்குமாரை சரமாரியாக தாக்கினர்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அசோக்குமாரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    கடத்தூர்:

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் ராமியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனி-மேகலா தம்பதியின் மகன் அசோக்குமார் (வயது25).

    இவர் அடிக்கடி குடித்து விட்டு எந்தவேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் அசோக்குமார் சம்பவத்தன்று பி.அய்யம்பட்டியில் உள்ள அவரது உறவினர் கலா வீட்டிற்கு சென்றார். அங்கு கலாவின் மாமனார் குழந்தைவேல் என்பவருடன் சேர்ந்து ஊருக்கு வெளியே சென்று ஒன்றாக மதுக்குடித்துள்ளனர்.

    அப்போது குழந்தைவேலின் வண்டியில் பெட்ரோல் இல்லை என்பது தெரியவந்தது. எனவே, வண்டியை எடுத்து கொண்டு பங்கில் பெட்ரோல் போட்டு வருமாறு அவர் அசோக்குமாரிடம் கூறினார். உடனே தருமபுரி-கடத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் வண்டிக்கு பெட்ரோல் போட்டு கொண்டு அசோக்குமார் மீண்டும் குழந்தைவேல் இருக்கும் இடத்திற்கு திரும்பி சென்றார்.

    அப்போது அவர் மதுபோதையில் இருந்ததால் வண்டியை சரிவர ஓட்ட முடியாமல் நிலைத்தடுமாறி மயங்கி கீழே விழுந்து கிடந்தார்.

    இதனை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் சிலர் பார்த்தபோது அசோக்குமார் எடுத்து சென்ற வண்டி குழந்தைவேலுடையது என்றும், அந்த வண்டியை அவர் திருடி கொண்டு வந்துவிட்டதாக தவறாக கருதி, அசோக்குமாரை சரமாரியாக தாக்கினர்.

    இதுகுறித்து குழந்தைவேலுக்கும் கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். உடனே அவர் அங்கு விரைந்து வந்து பார்த்தபோது கிராம மக்கள் திருடன் என நினைத்து அடித்து உதைத்த வாலிபர் தன்னுடைய உறவினர் என்றும், தான்தன் வண்டியை பெட்ரோல் போட கொடுத்ததாகவும் அவர் கூறினார். இதையடுத்து அங்கிருந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    இதற்கிடையே வெளியே சென்ற தனது மகன் நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் கலாவிடம் விசாரித்தபோது அசோக்குமார் அப்போது வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார் என்று தெரிவித்தார். ஆனால், தனது மகன் மீண்டும் வீடுதிரும்பி வராததால் அவர் மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து தாய் மேகலா கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அசோக்குமாரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    திருடன் என தவறாக நினைத்து கிராம மக்கள் வாலிபரை அடித்து உதைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திருவிடையார்பட்டியில் கிராம மக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருவிடையார்பட்டி பள்ளி அருகே சுகாதாரத்துறை சார்பில் தேசிய டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திருப்பத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர் சகாய ஜெரால்டுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் நல்ல தண்ணீர், மழை நீர் எங்கு எங்கு தேங்குகிறதோ அதில் ஏடீஸ் கொசுக்கள் உற்பத்தியாகி அதன்மூலம் மக்களுக்கு டெங்கு பரவுகிறது. பொது மக்கள் வீட்டில் உடைந்த குடங்கள், டயர்கள், மண்பானைகள், தேங்காய் கொட்டாச்சி ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு தண்ணீர் தேங்கினால் அதில் கொசுக்கள் உற்பத்தி யாகும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    டெங்கு காய்ச்சல் வந்தால் மூட்டுவலி, கை கால் வலி தலைபாரம் போன்றவைகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி பரிசோதனை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.

    • 3 குல தெய்வ கோவில்களில் கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.
    • 31-ந் தேதி தங்களது சொந்த கிராமங்களை சென்றடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவகாசி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அகத்தாரிருப்பை தலைமை யாக கொண்ட 56 கிராமங் களை சேர்ந்த ஒரே சமு தாயத்தை சேர்ந்த மக்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது குல தெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வதை வழக்க மாக கொண்டுள்ளனர்.

    கடந்த 16-ந்தேதி 215 மாட்டுவண்டி களில் குல தெய்வ வழிபாட்டுக்கு புறப்பட்டு சென்ற கிராம மக்கள் சிவ காசி அருகே எம்.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள கூட முடையார்அய்யனார் கோவிலுக்கும், சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள மல்லி வீரகாளியம்மன் கோவிலுக்கும், ராஜபாளை யம் அருகே கீழராஜகுல ராமன் கிராமத்தில் உள்ள பொன் இருளப்பசுவாமி கோவிலுக்கும் 3 பிரிவுகளாக பிரிந்து சென்று சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.

    56 கிராம மக்களும் குல தெய்வ தரிசனத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் வருகிற 27-ந்தேதி ஒரே இடத்தில் சந்தித்து அங்கு கிடா வெட்டி விருந்து வைத்து சாப்பிட்டு விட்டு செல்வார்கள்.

    அதனை தொடர்ந்து 28-ந் தேதி தாங்கள் சென்ற மாட்டு வண்டிகள் மற்றும் வாகனங்களில் சிவகாசியில் இருந்து புறப்பட்டு வருகிற 31-ந் தேதி தங்களது சொந்த கிராமங்களை சென்றடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×