என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vote"

    • 25 பாராளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 454 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
    • 34 ஆயிரத்து 651 வாக்குவா சாவடி மையங்களில் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கண்காணிக்கபட உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திராவில் மொத்தம் 25 பாராளுமன்ற தொகுதிகளும், 175 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    பாராளுமன்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பா.ஜ.க., தெலுங்கு தேசம் ஜனசேனா கூட்டணி, காங்கிரஸ் இடையே மும்முனை நிலவுகிறது.

    ஆந்திராவில் நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இறுதி நாளில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கர்னூல் மற்றும் சித்தூரில் பிரசாரம் செய்தார். கொட்டும் மழையிலும் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண், அவர் போட்டியிடும் பிதாபுரம் தொகுதியிலும், காக்கிநாடா தொகுதியிலும் பிரசாரம் செய்தார்.

    பா.ஜ.க. தலைவர் ஜேபி நட்டா திருப்பதியில் பிரசாரம் மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராகுல் காந்தி,ஒய்.எஸ். சர்மிளாவுடன் இணைந்து கடப்பாவில் பிரசாரத்தில் ஈடுபட்டார். மந்திரி ரோஜா, நகரி தொகுதியில் பிரசாரம் செய்தார்.

    25 பாராளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 454 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 417 ஆண் வேட்பாளர்களும் 37 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர் .இதேபோல் 175 சட்டமன்ற தொகுதிக்கு 2,387 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் இதில் 2154 ஆண் வேட்பாளர்களும் 231 பெண் வேட்பாளர்களும் உள்ளனர்.

    ஆந்திராவில் உள்ள 26 மாவட்டங்களில் 46 ஆயிரத்து 389 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 12,438 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

    தேர்தல் பணியில் 5 லட்சத்து 26 ஆயிரத்து 10 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 34 ஆயிரத்து 651 வாக்குவா சாவடி மையங்களில் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கண்காணிக்கபட உள்ளது.

    ஆந்திராவில் 4 கோடியே 14, 187 வாக்காளர்கள் உள்ளனர். துணை ராணுவம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தெலுங்கானாவில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு காங்கிரஸ், பா.ஜ.க., பி.ஆர்.எஸ். கட்சி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    535 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 475 ஆண் வேட்பாளர்களும் 50 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். 35 ஆயிரத்து 88 வாக்குச்சாவடி மையங்கள் தேர்தல் பணியில் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் பணியமத்தப்பட்டுள்ளனர்.

    மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள 13 தொகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் துணை ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டனர். இங்கு மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறுத்தப்படுகிறது. தெலுங்கானாவில் 3 கோடியே 32 லட்சத்து 32 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

    ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள மது கடைகள் மதுபான கூடங்கள் நேற்று முதல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நாளை வரை 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன

    இதேபோல் ஆந்திர எல்லையை ஒட்டி உள்ள தமிழக டாஸ்மாக் கடைகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • கோவிட் தொற்று காலத்திற்கு பிறகு ஒரு முறை கூட தனது தொகுதிக்குச் செல்லவில்லை.
    • ஜார்கண்ட் இதுபோன்ற குடும்பம் சார்ந்த கட்சிகளிடம் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்.

    ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்ஷத்பூரில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

    அப்போது, சோனியா காந்தி ரேபரேலியில் தேர்தல் பேரணியில் உரையாற்றிபோது தனது மகனை (ராகுல் காந்தியை) தனது தொகுதி மக்களிடம் ஒப்படைப்பதாக கூறியதற்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:-

    சோனியா காந்தி பிரச்சாரத்திற்காக ரேபரேலிக்கு சென்று தனது மகனை அவர்களிடம் ஒப்படைப்பதாக கூறினார். ரேபரேலியில் நீண்ட காலமாக பணியாற்றிய ஒரு கட்சிக்காரரையாவது அவர் பார்த்திருப்பாரா?

    அவர், கோவிட் தொற்று காலத்திற்கு பிறகு ஒரு முறை கூட தனது தொகுதிக்குச் செல்லவில்லை. இப்போது அவர் தனது மகனுக்காக வாக்குகளைக் கேட்கிறார். அவர்கள் அந்த இடத்தை தங்கள் குடும்பச் சொத்தாக நினைக்கிறார்கள்.

    காங்கிரஸ் இளவரசர் தேர்தலில் போட்டியிட வயநாட்டில் இருந்து ரேபரேலிக்கு ஓடிவிட்டார். இது என் அம்மாவின் தொகுதி என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு திரிகிறார்.

    எட்டு வயசுக் குழந்தை படிக்கப் போனாலும், அப்பாவே அந்த பள்ளியில் படித்திருந்தாலும் அதை அப்பாவின் பள்ளி என்று சொல்வதில்லை.

    இந்த குடும்பம் சார்ந்தவர்கள் பாராளுமன்ற ஆசனங்களின் உயிலை எழுதுகிறார்கள். ஜார்கண்ட் இதுபோன்ற குடும்பம் சார்ந்த கட்சிகளிடம் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் வாக்களித்து வருகின்றனர்.
    • பிரபல நடிகர் சையிப் அலி கான் மற்றும் நடிகை கரீனா கபூர் ஆகியோர் வாக்களித்தனர்.

    பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து வருகிறது.

    5-ம் கட்டமாக இன்று நடைபெற்று வரும் தேர்தல் இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

    அதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வாக்களிப்பு மையத்தில் நடிகர் அமிதாப் பச்சான் மற்றும் அவரது மனைவியும் எம்.பி.,மான ஜெயா பச்சன் ஆகியோர் வாக்களித்தனர்.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீதா அம்பானி ஆகியோர் தனது மகனுடன் வந்து வாக்களித்தனர்.

    பாலிவுட் நடிகர்களான சாரா அலி கான் மற்றும் அம்ரிதா சிங் ஆகியோர் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

    பிரபல பாவுட் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர்.

    இதேபோல், பிரபல நடிகர் சையிப் அலி கான் மற்றும் நடிகை கரீனா கபூர் ஆகியோர் வாக்களித்தனர்.

    தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளின் பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் தனது குடும்பத்துடன் வாக்களித்துள்ளனர்.

    நடிகை சோனாக்ஷி சன்ஹா அவரது தாய் பூனம் சின்ஹாவுடன் வந்து மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

    நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

    நடிகை அனன்யா பாண்டே, சுங்கி பாண்டே மற்றும் பாவனா பாண்டே ஆகியோர் மும்பை வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

    ஆதித்யா பிர்லா குழுவின் தலைவர் குமார் மங்களம் பிர்லாவும், அவரது மகள் அனன்யா பிர்லாவும் வாக்களித்தனர்.

    நடிகர் அமீர் கான், ரன்பீர் கபூர் ஆகியோர் தனது வாக்கினை செலுத்தினார்.

    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜூன் டெண்டுல்கருடன் வந்து வாக்களித்தார்.

    நடிகை தமன்னா மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பிறகு அவர் கூறுகையில், " அனைவரும் வாக்களிப்பதில் ஆர்வகமாக உள்ளனர். வாக்குச்சாவடிகளில் அதிகளவில் மக்களவை பார்க்க முடிகிறது. வாக்களிப்பது நமது கடமை" என்றார்.

    • பிரபல பாவுட் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர்.
    • பிரபல நடிகர் சையிப் அலிகான் மற்றும் நடிகை கரீனா கபூர் ஆகியோர் வாக்களித்தனர்.

    பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து முடிந்தது.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடிகர் அமிதாப் பச்சான் மற்றும் அவரது மனைவியும் எம்.பி.,மான ஜெயா பச்சன் ஆகியோர் வாக்களித்தனர்.

    பாலிவுட் நடிகர்களான சாரா அலிகான் மற்றும் அம்ரிதா சிங் ஆகியோர் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

    பிரபல பாவுட் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர்.

    இதேபோல், பிரபல நடிகர் சையிப் அலிகான் மற்றும் நடிகை கரீனா கபூர் ஆகியோர் வாக்களித்தனர்.

    இந்நிலையில் இந்திய குடியுரிமை இல்லாததால் பல பாலிவுட் பிரபலங்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை.

    பிரிட்டிஷ் குடியுரிமை காரணமாக நடிகைகள் ஆலியா பட், கத்ரீனா கைஃப் மற்றும் அமெரிக்கா குடியுரிமை காரணமாக நடிகர் இம்ரான் கான், சன்னி லியோன் மற்றும் இலங்கை குடியுரிமை காரணமாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் போர்த்துகீசிய குடியுரிமை காரணமாக இலியானா ஆகியோர் வாக்களிக்க வில்லை.

    • பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பும் குறைக்கப்படுகிறது.
    • அரசியல் கட்சிகள் தேர்தலின் போது 4-ல் ஒரு பங்கு அல்லது 3-ல் ஒரு பங்கு இளைஞர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்.

    டாக்கா:

    வங்காள தேசத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இட ஒதுக்கீடு தொடர்பாக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    இதையடுத்து வங்காள தேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வங்காள தேசத்தில் ஓட்டு போடும் வயதை குறைக்க இடைக்கால அரசு முடிவு செய்து

    உள்ளது. தற்போது அங்கு வாக்காளர்களின் குறைந்த பட்ச வயது 18- ஆக உள்ளது. இந்த வயதை 18-ல் இருந்து 17 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக முகமது யூனுஸ் தெரிவித்து உள்ளார்.

    அடுத்த நடைபெறும் பொதுத்தேர்தலின் போது இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதே போல பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பும் குறைக்கப்படுகிறது.

    தற்போது அங்கு எம்.பி. தேர்தலில் போட்டியிடும் வயது 25- ஆக இருக்கிறது. இந்த வயதை 21- ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    இது தொடர்பாக அந்த நாட்டின் அரசியலமைப்பு சீர்திருத்த ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் அலி ரியாஸ் கூறும்போது 21 வயது இளைஞர் எம்.பி. ஆவதை சாத்தியமாக்கும் ஒரு தீவிரமான மாற்றத்தை குழு சிந்தித்து வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தலின் போது 4-ல் ஒரு பங்கு அல்லது 3-ல் ஒரு பங்கு இளைஞர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

    • ஜனநாயக முறைப்படி வாக்களித்தற்காக முதியோர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
    • தஞ்சாவூர் மாவட்டத்தில் 20 முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    தொடர்ந்து சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற முதியோர்களுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.

    மேலும் 80 வயதுக்கு ேமற்பட்ட முதியோர்கள் ஜனநாயக முறைப்படி வாக்களித்தற்காக தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

    இதையடுத்து "இந்திய குடிமகன் குடிமகளாகிய நான், முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மனோரீதியாகவும் உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

    பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கெதிரான கொடுஞ்செயல்கள், வன்மு றைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதனை தடுத்திட பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன்."

    என்ற உறுதிமொழி வாசிக்க அனைத்து அரசு அலுவலர்களும் அதனை பின் தொடர்ந்து வாசித்தனர்.

    பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரி வித்ததாவது:-

    தமிழ்நாட்டில் அதிக ரித்து வரும் ஆதரவற்ற முதியோர்களின் எண்ணிக்கையினை கருத்தில் கொண்டு அவர்களின் நலன் காக்க சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் ஆதரவற்ற முதியோர்களுக்கான இல்லங்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 20 முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. இதுவரை 19 முதியோர் இல்லங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1 முதியோர் இல்லம் பதிவு செய்யப்பட நடவடிக்கையில் உள்ளது.

    அனைத்து முதியோர் இல்லங்களில் உள்ள முதியவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2007ன் கீழ் 187 மனுக்கள் பெறப்பட்டு, 182 மனுக்கள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி சுதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இஸ்லாமிய மக்களின் ஒவ்வொரு உரிமைகளையும் பறித்து வருகிறது.
    • 2024 தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு வங்கியை இவர்கள் கெடுத்து விடுவார்கள்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நிருபர்களை சந்தித்த ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஹைதர் அலி கூறியதாவது,

    இந்திய தேசம் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் சென்று கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

    இந்திரா காந்தி அவசரகால சட்டம் கொண்டு வந்த போது கூட சில அடக்குமுறைகளை செய்தாலும் பல்வேறு நல்ல விஷயங்கள் நடைபெற்றது.

    ஆனால் இன்று அது போன்ற அவசர கால சட்டம் இல்லாமல் பல்வேறு அடக்குமுறைகளை பார்த்து வருகிறோம்.

    இந்தியா முழுவதும் 17 மாநிலங்களில் இயங்கி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்கிற இஸ்லாமிய வெகுஜன அமைப்பை பா.ஜனதா அரசு தடை செய்துள்ளது.

    தொடர்ந்து இஸ்லாமிய மக்களின் ஒவ்வொரு உரிமைகளையும் பறித்து வருகிறது. குறிப்பாக காஷ்மீரில் அந்த மக்களுக்கு இருந்த தனி அந்தஸ்து என்கிற சட்டத்தை நீக்கியது.

    பிஎப்ஐ பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்துள்ளது.

    குறிப்பாக கொரோனா காலங்களிலும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சேவைகளை செய்துள்ளனர்.

    இவர்களைத்தான் தேச விரோத சக்திகள் என ஒன்றிய அரசு கூறி தடை செய்துள்ளது அதேபோல் இஸ்லாமியர்களை பழிவாங்கும் விதமாக சி.ஏ.ஏ என்.சி.ஆர் உள்ளிட்ட கருப்பு சட்டங்களை ஒன்றிய அரசு இயற்றியது.

    அதனை எதிர்த்து இந்தியா முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை பி.எப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளும் வெற்றிகரமாக செய்து முடித்தது என்பதை கருத்தில் கொண்டு 2024 தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு வங்கியை இவர்கள் கெடுத்து விடுவார்கள்.

    பாசிச ஆட்சிக்கு எதிராக முஸ்லிம்கள் வாக்கு திரும்பிவிடும் என்பதாலேயே பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்கிற இந்த அமைப்பை வீண்பழி சுமத்தி தேச விரோதிகள் எனக்கூறி தடை செய்துள்ளனர்.

    இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

    காந்தி ஜெயந்திக்கும் ஆர்எஸ்எஸுக்கும் என்ன தொடர்பு உள்ளது? காந்தியையும் காந்தி கொள்கையையும் விமர்சித்தவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியை ஆதரித்தவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இவர்கள் காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்திலே பேரணி நடத்த உள்ளார்கள்.

    இதற்கு நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது.

    தமிழக அரசு இதில் என்ன செய்யப் போகிறது.

    ஆகவே உடனடியாக தமிழக அரசு மேல்முறையீடு செய்து இந்த பேரணியை தடுத்து நிறுத்த வேண்டும்.

    இதனால் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படும்.

    எடப்பாடி ஆட்சியில் கூட அனுமதி கிடைக்கவில்லை.

    ஆனால் தற்போது அனுமதி கிடைக்கும் என்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    அப்போது மாநிலத் துணைத் தலைவர் முசாஹூதீன், மாவட்டத் தலைவர் முதியுதீன், மாவட்ட செயலாளர் ஹாஜா மொய்தீன், மாவட்ட துணை செயலாளர் முகமது மசாயிக், மாநில ஊடக அணி துணை செயலாளர் ப ஷிர் அகமது, நகர தலைவர் ரபீர் ஆகிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • 2003ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
    • 6 நீர் மேலாண்மை திட்டங்கள் பரிந்துரைக்கு எடுக்கப்பட்டுள்ளது

    திருப்பூர் :

    மக்களின் சமூக மேம்பாட்டுக்கு பயன்தரும் வகையில், நாடு முழுக்க செயல்பட்டு வரும் தனி நபர்கள், பொது மற்றும் அரசுத்துறை நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றில் அவரவர் துறை சார்ந்து சிறப்பாக செயல்படுபவர்களுக்கு ஸ்கோச் என்ற அமைப்பு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

    கடந்த 2003ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. பல துறைகளை சேர்ந்த வல்லுனர்களை தேர்வாளர்களாக கொண்டுள்ள இந்த விருதுக்குழு தற்போது சிறந்த நீர் மேலாண்மை திட்டத்தை தேர்வு செய்து வருகிறது. இதற்கான போட்டி கடந்த 12ந் தேதி துவங்கியது. தமிழக அளவில் 6 நீர் மேலாண்மை திட்டங்கள் பரிந்துரைக்கு எடுக்கப்பட்டுள்ளது.இதில் கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி, 1,752 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டமும் இடம் பிடித்துள்ளது.

    மேலும் தாமிரபரணி- நம்பியாறு - கருமேனியாறு இணைப்பு திட்டம், மேட்டூர் - சரபங்கா நீரேற்று திட்டம்,திருச்சி முக்கொம்பு கதவணை திட்டம், நாகபட்டினம், ஆதனூர் -குமாரமங்கலம் கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டும் திட்டம், கரூர் அருகே காவிரியாற்றில் தடுப்பணை கட்டும் திட்டம் உள்ளிட்ட 5 திட்டங்களும் போட்டிக்கான பரிந்துரை பட்டியலில் உள்ளன.முதற்கட்டமாக இத்திட்டங்கள் சார்ந்த விரிவான அறிக்கையை நீர்வளத்துறை அதிகாரிகள், விருது கமிட்டியிடம் சமர்பித்துள்ளனர். இரண்டாம் கட்டமாக இத்திட்டங்களுக்கு பொதுமக்களின் ஆதரவை அறிந்துகொள்ளும் வகையில் இணைய வழி ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது.இன்று வரை ஓட்டளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இடைத்தேர்தலில் 9 ஆயிரத்து 510 வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள்.
    • வாக்குச்சாவடி பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியல் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழகத்தில் காலியாக உள்ள 510 ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கான இடைத்தேர்தல் இன்று தொடங்கியது. காலியாக உள்ள 498 ஊரக உள்ளாட்சி பதவியிடங்கள், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் 9 ஆயிரத்து 510 வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து பொருட்களும் நேற்று மாலை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்தனர். இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியல் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வரும் 12-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 4 மாநிலங்களில் உள்ள 16 மாநிலங்களவை இடத்துக்கு 22 பேர் போட்டியிடுவதால் தேர்தல் நடைபெறுகிறது.
    • ஏற்கனவே தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் போட்டியின்றி 41 எம்பிக்கள் தேர்வாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இன்று மாலை 4 மணி வரை நடைபெற உள்ள தேர்தலில் எம்எல்ஏக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

    மகாராஷ்டிராவில் 6, கர்நாடகா, ராஜஸ்தானில் தலா 4, ஹரியானாவில் 2 எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 4 மாநிலங்களில் உள்ள 16 மாநிலங்களவை இடத்துக்கு 22 பேர் போட்டியிடுவதால் தேர்தல் நடைபெறுகிறது.

    மகாராஷ்டிராவில் 6 இடங்களில் பாஜகவுக்கு 2, காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரசிற்கு தலா ஒரு இடமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் எஞ்சிய ஒரு இடத்திற்கு கடும் போட்டி நிலவுவதால் மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது.

    இதேபோல், கர்நாடகாவில் 4 இடத்துக்கு பாஜகவில் 3, காங்கிரஸில் 2, மஜதவில் ஒருவர் என 6 பேர் போட்டியிடுகின்றனர். ராஜஸ்தானில் 4 இடத்துக்கு காங்கிரஸில் 3 பேர், பாஜகவில் ஒருவர், பாஜக ஆதரவுடன் சுயேச்சை என 5 பேர் போட்டியிடுகின்றனர். அரியானாவில் 2 இடங்களுக்கு பாஜக, காங்கிரஸில் தலா ஒருவர், பாஜக ஆதரவுடன் சுயேச்சை என 3 பேர் போட்டியிடுகின்றனர்.

    ஏற்கனவே தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் போட்டியின்றி 41 எம்பிக்கள் தேர்வாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது ஒரு சவால் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், இந்த தேர்தல் பணிகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த தேர்தலை சிறப்பாக நடத்தியதற்கு, தேர்தல் பணியாற்றிய அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் அளித்த பயிற்சி ஒரு காரணமாக இருந்தது. நாங்கள் அளித்த பயிற்சி, கீழ்நிலை பணியாளர்கள் வரை சென்று, தேர்தலை நல்லபடியாக நடத்த உதவியது. பயிற்சிக்கு மேல் பயிற்சி அளித்தால் எந்தத் தவறும் இல்லாமல் தேர்தலை நடத்திவிட முடியும் என்பதுதான் நான் கண்ட உண்மை.

    அரசியல் வட்டாரத்தில் இருந்து குற்றச்சாட்டுகள் வந்தாலும் அதில் உண்மை இருக்கிறதா? என்று பார்ப்பேன். குற்றச்சாட்டுகளை சாதகமாக எடுத்துக்கொண்டேன். இந்த தேர்தல் மூலம் பல விஷயங்களை புதிதாக படித்தேன். பத்திரிகையாளர்களின் அறிவுரைகளும் கிடைத்தன.

    சமூக வலைதளங்களில் என் மீது வரும் விமர்சனங்களைப் படிப்பதற்கு எனக்கு நேரம் கிடைக்கவில்லை. 12 மணி நேரம் வேலையில் ஈடுபட வேண்டியிருந்தது. எனவே விமர்சனங்களை எல்லாம் ஒரு பிரச்சினையாக பார்க்கவில்லை.

    தேர்தல்களின்போது ஓட்டுக்கு பணப்பட்டுவாடாவை தடுப்பது எங்களுக்கு ஒரு சவால்தான். சமுதாயத்தை நான் ஒருவரே திருத்திவிட முடியாது. சமுதாயத்தில் இருந்து எழும் பிரச்சினைகளுக்கு அந்த சமுதாயமே தீர்வு காணவேண்டும். பணப்பட்டுவாடாவை தவிர்க்க புதிய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகங்கள், பத்திரிகைகள் போன்றவை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    என்னிடம் தரப்பட்ட புகார்களை விசாரிக்க நான் காலம் தாழ்த்தவில்லை. உடனடி நடவடிக்கைக்கு நாங்கள் ஏற்பாடு செய்தோம். எல்லா நிகழ்வையும் நாங்கள் உன்னிப்பாக கவனித்தோம். எதையும் இலகுவாக விட்டுவிடவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஈரான் அரசின் அணு உற்பத்தி திட்டங்கள் தொடர வேண்டுமா? என்பது தொடர்பாக மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.
    டெஹ்ரான்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் தங்கள் நாட்டின் மீதான நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்தார்.

    அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு யூரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளதாகவும் தெரிவித்த ரவுகானி, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம். எங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், இஸ்லாமிய நன்முறைகளையும் பாதுக்காக்க ஒருநாளும் தவற மாட்டோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    சில இடங்களில் ஈரான் அரசு ரகசியமாக அணு உலைகளை அமைத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை குற்றம்சாட்டி வருகிறது. 

    இதற்கிடையில், அமெரிக்காவுடன் நான் செய்த ஒப்பந்தத்தை ஒழுங்கான முறையில் நிறைவேற்ற ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தவறி விட்டதாக அந்நாட்டின் முதுபெரும் தலைவரான ஹயாத்துல்லா கமேனி சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    ஹயாத்துல்லா கமேனி

    இந்நிலையில், தலைநகர் டெஹ்ரானில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, 'கடந்த 2004-ம் ஆண்டுவாக்கில் அமெரிக்க அரசுடன் அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையொப்பமிடுவதற்கு முன்னதாகவே இவ்விவகாரம் தொடர்பாக நமது நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என நான் வலியுறுத்தி இருந்தேன். அதற்கு ஹயாத்துல்லா கமேனியும் சம்மதம் தெரிவித்தார்.

    ஆனால், அப்போது பொது வாக்கெடுப்பு நடத்தப்படாவிட்டாலும் இதைப்போன்ற ஒரு பொது வாக்கெடுப்பு என்பது எந்நேரத்திலும் நமக்கு சிறந்த தீர்வை அளிக்கக் கூடியதாக அமையும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    ×