என் மலர்
நீங்கள் தேடியது "voters"
+2
- வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட கட்சி பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.
- மாவட்டத்தின் மொத்தம் உள்ள 5 தொகுதிகளிலும் 13,51,178 வாக்காளர்கள் உள்ளனர்.
நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார்.
கலெக்டர் வெளியிட்டார்
மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகம்மது சபீர் ஆலம், பயிற்சி கலெக்டர் கோகுல், தேர்தல் தாசில்தார் கந்தப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் தி.மு.க. சார்பில் தகவல் தொழில்நுட்ப அணி காசி மணி, இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் சங்கர், அ.தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர் சிந்து முருகன், காங்கிரஸ் சார்பில் சொக்கலிங்க குமார், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் முத்துக்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிதாக 7,722 பேர் சேர்ப்பு
5.1.2022-ன் படி நெல்லை மாவட்டத்தில் 13,86,140 வாக்காளர்கள் இருந்தனர். அதன் பிறகு நெல்லை தொகுதியில் 1,374 பேரும், அம்பையில் 1,241 பேரும், பாளையில் 2,059 பேரும், நாங்குநேரியில் 1,779 பேரும், ராதாபுரத்தில் 1,269 பேரும் என புதிதாக 7,722 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதே போல் 42 ஆயிரத்து 684 பேர் நீக்கப்பட்டும், 5,283 பேர் திருத்தம் செய்யப்பட்டும், 1,006 பேர் முகவரி மாற்றமும் செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி மாவட்டத்தின் மொத்தம் உள்ள 5 தொகுதிகளிலும் 13,51,178 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 6,61,503 பேர் ஆவர். பெண்கள் 6,89,557 பேர் ஆவர். 3-ம் பாலினத்தவர் 118 பேர் ஆவர்.
வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின் கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-
சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். இதனை பார்த்து பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றை ஆன்-லைன் மூலமாகவும், நேரடியாகவும் செய்து கொள்ளலாம்.
இதற்காக இந்த மாதம் 12,13,26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும். நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை 51.76 சதவீதம் பேர் இணைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்றது.
- 290 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பல்லடம் :
பல்லடம் சட்டமன்ற தொகுதி 9.11.22ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி 1லட்சத்து90 ஆயிரத்து379 ஆண்களும், 1லட்சத்து94ஆயிரத்து38 பெண்களும், 69 திருநங்கைகளும் ஆக மொத்தம் 3லட்சத்து 84 ஆயிரத்து486 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த 2 நாள் முகாம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்றது. அதில் நேரடியாகவும் மற்றும் இணையதளம் மூலமாகவும் 1841 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.
அதே போல் 290 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருத்தம் மற்றும் குடிமாற்றத்திற்காக 816 பேர் விண்ணப்பித்துள்ளனர். முகாமில் நேரடியாக 2218 விண்ணப்பங்களும், இணையதளம் மூலமாக 729 விண்ணப்பங்களும் ஆக மொத்தம் 2947 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்று பல்லடம் தாசில்தார் நந்தகோபால் தெரிவித்தார்.
மேலும் வரைவு வாக்காளர் பட்டியிலில் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம், பெயர் நீக்கம் ஆகியவற்றிற்கு வருகிற 8.12.22 வரை அனைத்து வாக்குப்பதிவு மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். வருகிற 26-ந் தேதி மற்றும் 27-ந் தேதி ஆகிய 2 நாட்களும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 5.1.23 அன்று வெளியிடப்பட உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதற்கிடையே பல்லடம் நகராட்சி பகுதியில் 253 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கவும், ஒருவர் நீக்கத்திற்கும்,திருத்தம் மற்றும் குடிமாற்றத்திற்காக 65 பேரும் ஆக மொத்தம் 319 பேர் விண்ணப்பித்துள்ளனர்.மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த முகாமில் தங்களது ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்தார்.
- கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டார்.
- மேட்டுப்பாளையம் தொகுதியில் மொத்தம் 3,00,553 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவை,
கடந்த ஜனவரி 1- ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி கோவை மாவட்டத்தில் அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான விண்ண்பங்கள் பெறப்பட்டு அதன் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டார்.
வாக்காளர் பட்டியலில் கோவை மாவட்டத்தில் 14,96,770 ஆண் வாக்காளர்கள், 15,51,665 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 569 என மொத்தம் 30,49,004 வாக்காளர்கள் உள்ளனர்.
சட்டமன்றத் தொகுதி வாரியான வாக்காளர் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
மேட்டுப்பாளையம் தொகுதியில் 1,44,937 ஆண் வாக்காளர்கள், 1,55,569 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 47 பேர் என மொத்தம் 3,00,553 வாக்காளர்கள் உள்ளனர். சூலூர் சட்டமன்ற தொகுதியில் 1,54,788 ஆண் வாக்காளர்கள், 1,63,157 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 73 பேர் என மொத்தம் 3,18,018 வாக்காளர்கள் உள்ளனர்.
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 2,26,790 ஆண் வாக்காளர்கள், 2,28,583 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 114 பேர் என மொத்தம் 4,55,492 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் 1,65,671 ஆண் வாக்கா ளர்கள், 1,64,827 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 39 பேர் என மொத்தம் 3,30,537 வாக்காளர்கள் உள்ளனர்.
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,61,736 ஆண் வாக்காளர்கள், 1,66,097 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 131 பேர் என மொத்தம் 3,27,964 வாக்காளர்கள் உள்ளனர். கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் 1,20,480 ஆண் வாக்காளர்கள், 121641 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 32 பேர் என மொத்தம் 242153 வாக்காளர்கள் உள்ளனர்.
சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 1,60,653 ஆண் வாக்காளர்கள், 1,64,126 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 30 பேர் என மொத்தம் 3,24,803 வாக்காளர்கள் உள்ளனர்.
கிணத்துக்கடவு சட்டம ன்ற தொகுதியில்1,61,826 ஆண் வாக்காளர்கள், 1,68,853 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 42 பேர் என மொத்தம் 3,30,720 வாக்காளர்கள் உள்ளனர்.
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் 1,07,016 ஆண் வாக்காளர்கள், 1,16,772 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 41 பேர் என மொத்தம் 2,23,829 வாக்காளர்கள் உள்ளனர்.
வால்பாறை சட்டமன்ற தொகுதியில் 92873 ஆண் வாக்காளர்கள் 102040 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 20 பேர் என மொத்தம் 1,94,935 வாக்காளர்கள் உள்ளனர்.
- மாவட்டத்தில் 10,25,988 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
- 4 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் இன்று ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிக ளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலானது இன்று காலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரக வளாக கூட்ட அரங்கில் தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் வெளியிட்டார். அக்டோபர் 2023 வரை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டு, உரிய திருத்தங்கள் மற்றும் நீக்கம் ஆகியவை மேற்கொள்ள ப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்ப ட்டுள்ளது.
தற்போது வெளியிடப்ப ட்டுள்ள வரைவு வாக்களார் பட்டியலின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 974896 ஆண் வாக்காளர்களும், 10,25,988 பெண் வாக்காளர்களும், 156 இதர பாலினத்தவரிகள் உட்பட மொத்த வாக்காளர்கள் 2001040 உள்ளனர்.
சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் விவரம் வருமாறு :-
திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் 1,27,433 ஆண் வாக்காள ர்களும், 1,30011 பெண் வாக்காளர்கள் மற்றும் 12 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,57,456 வாக்காளர்கள் உள்ளனர். கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் 1,28,382 ஆண் வாக்காளர்களும், 1,34,913 பெண் வாக்காளர்கள் மற்றும் 14 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,63,309 வாக்காளர்கள் உள்ளனர். (3) பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் 1,25,520 ஆண் வாக்காளர்களும், 1,31,058 பெண் வாக்காளர்கள் மற்றும் 18 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,56,596 வாக்காளர்கள் உள்ளனர். திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் 1,28,764 ஆண் வாக்காளர்களும், 1,34,869 பெண் வாக்காளர்கள் மற்றும் 20 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,63,653 வாக்காளர்கள் உள்ளனர். தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் 1,29,254 ஆண் வாக்காளர்களும், 1,40,860 பெண் வாக்காளர்கள் மற்றும் 57 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,70:171 வாக்காளர்கள் உள்ளனர். ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 1,17,411 ஆண் வாக்காளர்களும், 1,24,146 பெண் வாக்காளர்கள் மற்றும் 3 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,41.560 வாக்காளர்கள் உள்ளனர். பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 1,14,504 ஆண் வாக்காளர்களும், 1,24,053 பெண் வாக்காளர்கள் மற்றும் 24 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,38,581 வாக்காளர்கள் உள்ளனர். பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் 1,03,628 ஆண் வாக்காளர்களும், 1,06,078 பெண் வாக்காளர்கள் மற்றும் 8 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,09,714 வாக்காளர்கள் உள்ளனர்.கடந்த 05.01.2023 முதல் 26.10.2023 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களில் தகுதியான நபர்களின் படிவங்கள் ஏற்கப்பட்டு 14.313 நபர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இறந்த, இடம்பெயர்ந்த வாக்கா ளர்கள் நீக்கப்பட்டுள்ளது. 56,389 நபர்களின் பெயர்களை விசாரணை அடிப்படையில்
வெளியிடப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலின் நகல், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து வட்டா ட்சியர் அலுவலகங்களிலும், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும் பொது மக்களின் பார்வைக்காக வருகிற 26.12.2023 வரை வைக்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தி லுள்ள பொது மக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் பிழையின்றி இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். மேலும், எதிர்வரும் 04.11.2023 (சனிக்கிழமை), 05.11.2023 (ஞாயிற்றுக் கிழமை) மற்றும் 18.11.2023 (சனிக்கிழமை), 19.11.2023 (ஞாயிற்றுக் கிழமை) ஆகிய நான்கு நாட்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது மற்றும் திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக அனைத்து வாக்குச்சா வடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க சார்பில் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ அண்ணாதுரை , தஞ்சை மத்திய மாவட்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி, ஆற்காடு புண்ணியமூர்த்தி, அ.தி.மு.க சார்பில் மாநகர செயலாளர் சரவணன், காங்கிரஸ் சார்பில் பழனிவேல், தே.மு.தி.க. சார்பில் சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், மாநகர துணை செயலாளர் முத்துக்குமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- நெல்லை சட்டமன்ற தொகுதியில் 1,46,532 ஆண் வாக்காளர்கள் உள்ளனர்.
- நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,87,476 வாக்காளர்கள் உள்ளனர்.
நெல்லை:
1. 1.2024 -ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் தொடர் சுருக்கமுறைத் திருத்தப்பணியில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருமான கார்த்திகேயன் அங்கீகரிக்கப்ட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.
அதன்படி நெல்லை சட்டமன்ற தொகுதியில் 1,46,532 ஆண் வாக்காளர்களும், 1,53,843 பெண் வாக்காளர்களும், 65 மூன்றாம் பாலின வாக்கா ளர்கள் ஆக மொத்தம் 3,00,440 வாக்காளர்கள் உள்ளனர். அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் 1,20,602 ஆண் வாக்காளர்களும், 1,28347 பெண் வாக்காளர்களும், 9 மூன்றாம் பாலின வாக்கா ளர்கள் ஆக மொத்தம் 2,48958 வாக்காளர்கள் உள்ளனர். பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1,32,654 ஆண் வாக்காளர்களும், 1,37,923 பெண் வாக்காளர்களும், 29 மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஆக மொத்தம் 2,70,606 வாக்காளர்கள் உள்ளனர். நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 1,40,922 ஆண் வாக்காளர்களும், 1,46,541 பெண் வாக்காளர்களும், 13 மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஆக மொத்தம் 2,87,476 வாக்காளர்கள் உள்ளனர். ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 1,28,780 ஆண் வாக்காளர்களும், 1,32,442 பெண் வாக்காளர்களும், 16 மூன்றாம் பாலின 5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 6,69,490 ஆண் வாக்காளர்களும், 6,99,096 பெண் வாக்காளர்களும், 132 மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஆக மொத்தம் 13லட்சத்து 68 ஆயிரத்து 718 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் இம்மாவட்டத்தில் மொத்தம் 6960 பேர் உள்ளனர்.
- சிறப்பு முகாம்கள் இம்மாதம் 4,5, 18,19 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெற உள்ளது.
- முகாம்களில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை கண்டறிந்து பட்டியலில் இணைப்பதில் ஆர்வம் காட்டிட வேண்டும்.
தென்காசி:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெய பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் கடந்த மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டது. இதைத்தொடர்ந்து வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், பெயர் பிழை திருத்தம்,முகவரி மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்வதற் காக இம்மாதம் 4,5,18,19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெற உள்ளது. எனவே தென்காசி தெற்கு மாவட்ட பகுதிக்குட் பட்ட தென்காசி, ஆலங்குளம், கடையநல் லூர் சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் இம் முகாம்களில் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், கிளை செயலாளர்கள், பாக முகவர்கள், பாக பொறுப் பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு, பெயர் நீக்கம், பிழை திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றில் ஈடுபடுவதுடன். 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை கண்டறிந்து பட்டியலில் இணைப்பதில் ஆர்வம் காட்டிட வேண்டும். குறிப்பாக இளைஞர்களை அதிகளவில் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- காலை 10 மணி முதல் மாலை 5 வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
- புதிய வாக்காளர்கள் படிவம் 6-யை பெற்று தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி சிறப்பு சுருக்க திருத்தம் 2024- ன் படி தென்காசி மாவட்டத்தில் 1.1.2024-ந் தேதிக்குள் 18 வயது பூர்த்தியடைந்த அதாவது 31.12.2005 அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி திருத்தம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளை பெறும் வகையில் வரும் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிறுக்கிழமை) மற்றும் வருகிற 18, 19-ந் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 10 மணி முதல் மாலை 5 வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் தற்போது படிவம் 6-யை பெற்று தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம். இறப்பு வாக்காளர்கள் சார்பில் உறவினர் எவரேனும் இறப்பு சான்று நகலுடன் படிவம் 7-யை பூர்த்தி செய்து பெயரை நீக்கம் செய்யலாம். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு உள்ளேயோ அல்லது தொகுதிக்கு வெளியிலோ புலம் பெயர்ந்த வாக்காளர்கள் படிவம் 8-யை பூர்த்தி செய்து வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. அனைத்து வாக்குச்சாவடி அமைவிடத்திற்கு சென்று இந்த வாக்காளர்களும் தங்களது சேவைகளைப் பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 2 ஆயிரத்து 308 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது.
- வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் இணைக்காதவர்கள் படிவத்தை நிறைவு செய்து வழங்கலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்துதல் தொடா்பான சிறப்பு முகாம்கள் இன்று தொடங்கின.
இந்த முகாம் நாளை வரை நடைபெறுகிறது.
தஞ்சாவூா் மாவட்டத்துக்கு உள்பட்ட 2 ஆயிரத்து 308 வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது.
இச்சிறப்பு முகாமில் 17 வயது நிறைவடைந்தவா்கள் அடுத்துவரும் நான்கு காலாண்டுகளின் மைய தகுதி நாளில் (ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபா் 1) தொடா்புடைய காலாண்டின் தகுதி நாளில் 18 வயது நிறைவடைந்து வாக்காளா் பட்டியலில் இடம் பெறாமல் உள்ள வாக்காளா்கள் தங்கள் பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்க, படிவம் எண் 6-ஐ அருகிலுள்ள வாக்குச் சாவடியில் பெற்று நிறைவு செய்து அதனுடன் வயது மற்றும் இருப்பிடத்துக்கான ஆவண நகல்களை இணைத்து தங்கள் பாஸ்போா்ட் அளவு புகைப்படத்தைப் படிவத்தில் ஒட்டி அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் வழங்கலாம்.
மேலும் இறப்பு, நிரந்தரமாக இடம் பெயா்ந்தவா்கள், இரட்டை பதிவு போன்ற காரணங்களின் அடிப்படையில் பெயா் நீக்கம் செய்வதற்கு படிவம் 7-ஐ நிறைவு செய்தும், அனைத்து வகையான பிழை திருத்தங்கள் மேற்கொள்ள, தொகுதி மாற்றம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, பெயா், உறவு முறை, புகைப்படம் மாற்றம் செய்ய படிவம் 8-ஐ நிறைவு செய்தும், இதுவரை வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் இணைக்காத வாக்காளா்கள் படிவம் 6 பி-ஐ நிறைவு செய்தும் இச்சிறப்பு முகாமில் வழங்கலாம் என்று தெரிவிககப்பட்டு உள்ளது.
- முகாமில் புதிதாக விண்ணப்பிக்க வந்த வாக்காளர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
- புதிய வாக்காளர்களுக்கு காமராஜ் எம்.எல்.ஏ. வாழ்த்துகளை தெரிவித்தார்.
திருவாரூர்:
நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பனங்குடி, மாப்பிள்ளைக்குப்பம், ஆணைக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை முகாம் தொடர்பாக அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகளின் செயல்பாடுகளை கட்சியின் மாவட்டச்செயலாளரான முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது 1.1.2024 இல் 18 வயது நிரம்புகின்ற இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு வாக்காளர் சேர்க்கை முகாம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறதா என்பதை கட்சியினரிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.
மேலும் வாக்காளர் சேர்க்கை முகாமில் புதிதாக விண்ணப்பிக்க வந்த இளம் வாக்காளர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
புதிய வாக்காளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது நன்னிலம் ஒன்றியச் செயலாளர் இராம. குணசேகரன், நன்னிலம் நகரச் செயலாளர் பக்கிரிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- கோவை தொகுதியில் 2,048 ஓட்டு சாவடிகளும் அமைக்கப்பட உள்ளதாக தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
- தேர்தல்பிரிவினர் கூறுகையில், ஓட்டுச் சாவடிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன.
கோவை:
கோவை மாவட்டத்தில் கடந்த 22-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த பட்டியலில் புதிததாக 85 ஆயிரம் புதுவாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதேபோல் 53 ஆயிரத்து 90 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 950 வாக்காளர்கள், 2 லட்சத்து 32 ஆயிரத்து 538 பெண் வாக்காளர்கள், 124 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 4 லட்சத்து 62 ஆயிரத்து 612 வாக்காளர்களுடன் கவுண்டம்பாளையம் தொகுதி கோவை மாவட்டத்திலேயே மிகப்பெரிய தொகுதியாக உள்ளது. தமிழகத்திலேயே 2-வது பெரிய தொகுதியாகவும் இந்த தொகுதி உள்ளது.
மாவட்ட அளவில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 503 வாக்காளர்களுடன் வால்பாறை தொகுதி சிறிய தொகுதியாக உள்ளது. இங்கு 93 ஆயிரத்து 443 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 38 பெண் வாக்காளர்கள், 22 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.
கோவை வடக்கு தொகுதியில் மட்டும் ஆண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். இங்கு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 865 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 168 பெண் வாக்காளர்கள் இருக்கின்றனர். 697 ஆண் வாக்காளர்கள் அதிகமாக இருக்கின்றனர். மற்ற 9 தொகுதிகளிலும் பெண் வாக்காளர்களே அதிகம்.
கடந்த ஆண்டு அக்டோபர் 27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பின் கடந்த டிசம்பர் 9 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.
40 ஆயிரத்து 469 ஆண் வாக்காளர்கள், 45 ஆயிரத்து 159 பெண் வாக்காளர்கள், 52 மூன்றாம் பாலினத்தவர்கள் என 85 ஆயிரத்து 680 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் 27 ஆயிரத்து 333 ஆண் வாக்காளர்கள், 25 ஆயிரத்து 731 பெண் வாக்காளர்கள் 26 மூன்றாம் பாலினத்தவர்கள் என 53 ஆயிரத்து 90 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலுக்கு கோவை தொகுதியில் 2,048 ஓட்டு சாவடிகளும் அமைக்கப்பட உள்ளதாக தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கோவை பாராளுமன்ற தொகுதியில் கோவை தெற்கு, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், சூலூர், சிங்காநல்லூர், பல்லடம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது அப்போதிருந்த வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்ப 2,045 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தற்போது 20.83 லட்சமாக வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஓட்டுச்சாவடி எண்ணிக்கையும் 2,048 என கூடுதலாக்கப்பட்டுள்ளது. இதில் சூலூர் தொகுதியில் 329, கவுண்டம்பாளையம் 435, கோவை வடக்கு 298, கோவை தெற்கு 251, சிங்காநல்லூர் 323, பல்லடம் 412 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தேர்தல்பிரிவினர் கூறுகையில், ஓட்டுச் சாவடிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன.
தேர்தல் தேதி அறிவித்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு செய்து தேவையான வசதிகள் இருக்கிறதா என பார்வையிட்டு அவற்றினை உறுதி செய்வார்கள் என தெரிவித்தனர்.
- இளம் தலைமுறை வாக்காளர்கள் 2 கோடி பேர் உள்ளனர்.
- 2024 தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையோர் எண்ணிக்கை 6 சதவீதம் உயர்வு.
2024 மக்களவை தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டின் மக்களவை தேர்தலை விட 2024 தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையோர் எண்ணிக்கை 6 சதவீதம் உயர்ந்துள்ளது.

18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறை வாக்காளர்கள் 2 கோடி பேர் உள்ளனர்.
இதில், ஆண் வாக்காளர்கள்- 49.72 கோடி பேர், பெண் வாக்காளர்கள்- 47.15 கோடி பேர் உள்ளனர்.
- தமிழகத்தில் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் நடக்கலாம் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
- சுழற்சி முறையில் ஊழியர்கள் பணியாற்றும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையையும் வருமான வரித்துறை அமைத்துள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு இந்த தடவை மிகப்பெரிய அளவில் பணப்பட்டுவாடா நடக்கும் என்று தெரிகிறது. தமிழகத்தில் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் நடக்கலாம் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வாக்காளர்களுக்கு நேரடி யாக பணம் கொடுப் பதை தவிர ஜிபே, போன்பே மூலமாகவும் பணம் கொடுக் கப்படலாம் என்று கருதப் படுகிறது. இதையடுத்து டிஜிட்டல் பணப்பரிவர்த்த னைகளை கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
குறிப்பாக டிஜிட்டல் மூலம் மிகப்பெரிய அளவில் பணப்பரிமாற்றம் நடந்தால் அதுபற்றி விரிவாக விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இதற்காக அவர்கள் தனித்தனி குழுக்களையும் உருவாக்கி இருக்கிறார்கள்.
டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை கண்காணிக்க சுழற்சி முறையில் ஊழியர்கள் பணியாற்றும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையையும் வருமான வரித்துறை அமைத்துள்ளது. அதுபோல மதுபானங்கள், பரிசுப் பொருட்கள் வினியோகத்தை தடுப்பதற்கு ஜிஎஸ்டி துறை சார்பில் தனித்தனி குழுக்கள் மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.