என் மலர்
நீங்கள் தேடியது "Woman killed"
- வாகன விபத்தில் பெண் என்ஜினீயர் பலியானார்.
- பணிக்கு சென்ற போது நடந்த சம்பவம்
திருச்சி:
திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பர்மா காலனி, 15-வது தெருவில் வசித்து வருபவர் குமாரமங்கலம் மகள் காயத்ரி (வயது25) இவர் பி.இ. பட்டதாரியான இவர், தனியார் கம்பெனியில் பணி செய்து வந்தார்.
இன்று காலை வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்றார். ஆர்டிஓ ஆபீஸ் அருகே சென்ற பொழுது அவ்வழியே சென்ற மற்றொரு டூவீலர் வாகனம் மற்றும் ஐடி பார்க் கம்பெனி ஊழியர்கள் பணிக்கு செல்லும் பஸ் சென்றுள்ளது. இந்த இரண்டு வாகனங்களில் எந்த வாகனம் இவர் மீது மோதியது என்று தெரியவில்லை.
அப்போது நிலை தடுமாறி காயத்திரி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. டூஇதனை பார்த்த பஸ்ஸில் பயணித்த சக ஊழியர்கள் உடனடியாக இவரை மீட்டு நவல்பட்டு பர்மா காலனியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நவல்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- தன் சொந்த கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்
- அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் வண்ண பூபால் பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம்:
மேல்மலையனூர் அருகே குந்தலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. அவரது மனைவி வண்ணபூபால். இவர் அவலூர்பேட்டையிலிருந்து தன் சொந்த கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் வண்ண பூபால் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புவனகிரி அருகே நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.
- இதில் பின்னால் இருந்த வெற்றிச்செல்வி நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.
கடலூர்:
புவனகிரி அருகே திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் உமா மகே ஸ்வரன். இவரது மனைவி வெற்றிச்செல்வி .(வயது 50) இந்நிலையில் உமா மகேஸ்வரன் மனைவி வெற்றிச்செல்வி உடன் தனது மோட்டார் சைக்கி ளில் புவனகிரி கடைவீதிக்கு சென்றனர். அப்போது தனியார் பெட்ரோல் பங்க் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடியது. இதை எதிர்பாராத உமா மகேஸ்வரன் நாய் மீது மோதினார்.
இதில் பின்னால் இருந்த வெற்றிச்செல்வி நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். மேல்சிகிச்சைக்காக புதுவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு வெற்றிச்செல்வி உயிரிழந்தார். இது குறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக போத்தனூர் ெரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
- பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
கோவை,
கோவை இருகூர்-போத்தனூருக்கு இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ஒண்டிப்புதூர் மேம்பாலத்திற்கு அருகே பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக போத்தனூர் ெரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். தொடர்ந்து அவர் யார்? ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
- அரசு பஸ் மோதி பெண் பலியானார்.
- திருமங்கலத்தில் இருந்து டி.கல்லுப்பட்டி சென்ற அரசு பஸ் சாலையை கடக்க முயன்ற சைக்கிள் மீது மோதியது.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி சந்திரா(50). இவர்களுடைய பேரன் கார்த்திக்(வயது9). பாண்டி சைக்கிளில் மனைவியையும், பேரனையும் அமர வைத்து ஆலம்பட்டியில் உள்ள பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். திருமங்கலத்தில் இருந்து டி.கல்லுப்பட்டி சென்ற அரசு பஸ் சாலையை கடக்க முயன்ற சைக்கிள் மீது மோதியது. இதில் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருந்த சந்திரா படுகாயம் அடைந்தார். பாண்டிக்கும், பேரனுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 108 ஆம்புலன்சு மூலம் காயமடைந்தவர்களை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த சந்திரா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பல்லடம்- பொள்ளாச்சி ரோட்டில் சென்றனர்.
- பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள அம்பராம்பாளையத்தை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவரது மனைவி பரிதா பானு (வயது 47). சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பல்லடம்- பொள்ளாச்சி ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் கட்டுப்பாட்டை இழந்து 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் பரிதா பானு பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரை அவரது உறவினர் மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிதா பானுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சம்பவத்தன்று மேரி பாக்கியமணி மாடுகளுக்கு வைக்கோல் போடுவதற்காக, வைக்கோல் படப்புக்கு சென்றார்.
- அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மேரி பாக்கியமணி பரிதாபமாக இறந்தார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள பெருமாள்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் தோமஸ் (வயது57). இவரது மனைவி மேரி பாக்கியமணி (53). இவர்கள் மாடுகள் வளர்த்து வருகின்றனர்.
இதற்காக வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் வைக்கோல் படப்பு வைத்து ள்ளனர். சம்பவத்தன்று மேரி பாக்கியமணி மாடுகளுக்கு வைக்கோல் போடுவதற்காக, வைக்கோல் படப்புக்கு சென்றார். அப்போது அவரை பாம்பு கடித்தது.
இதனைதொடர்ந்து அவரை சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மேரி பாக்கியமணி பரிதாப மாக இறந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீ விபத்தில் கடந்த 9-ந்தேதி பலியாகினர்.
- தாயார் செல்வி (50) மேல் சிகிச்சைக்காபலனின்றி இன்று அதிகாலை செல்வி பரிதாபமாக இறந்துவிட்டார்.
கடலூர்.:
கடலூர் முதுநகர் செல்லாங்குப்பத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீ விபத்தில் கடந்த 9-ந்தேதி பலியாகினர். தற்கொலைக்கு முயன்ற தங்கையின் கணவரை தடுக்க சென்ற தமிழரசி, அவரது 4 மாத மகள் ஹாசினி, தனலட்சுமியின் 4 மாத பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே தீயில் கருகி இறந்து போனர்.
மேலும், இதில் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கணவன், மனைவியான சற்குரு, தனலட்சுமி ஆகியோரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதில் இறந்து போன தமிழரசி, தனலட்சுமியின் தாயார் செல்வி (50) மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை செல்வி பரிதாபமாக இறந்துவிட்டார். இதனால் தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 6 பேராக உயர்ந்துள்ளது. தாய், 2 மகள்கள், ஒரு மருமகன், 2 குழந்தைகள் என ஒரே குடும்பத்தில் 6 பேர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடேயே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- காட்டுபன்றிகள்அழித்து சேதப்படுத்துவதால், அதனை தடுக்கமின்வேலி அமைத்திருந்தார்.
- மின்வேலியில் சிக்கி பரிதாபமாகஉயிரிழந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல் அருங்குணம்கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்புராயன். இவர்இவரதுநிலத்தில் மணிலா பயிரிட்டுள்ளார். மணிலா பயிர்களை காட்டுபன்றிகள்அழித்து சேதப்படுத்துவதால், அதனை தடுக்கமின்வேலி அமைத்திருந்தார். இந்த நிலத்தில்மணிலா அறுவடை பணிக்காக மணம்தவழ்ந்த புத்தூர்காலனியை சேர்ந்த சேட்டுமனைவி தனலட்சுமி (வயது 65) வந்தார்.அவர் அங்கிருந்த மின்வேலியில் சிக்கி பரிதாபமாகஉயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ்சூப்பிரண்டுசபியுல்லா,புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி விவசாயி சுப்புராயனை கைது செய்துகோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
- ஆறுமுகம் (வயது 48 )மனைவி கோமதி (40 ). குலதெய்வம் கோவிலுக்கு சென்றுவீட்டிற்கு திரும்பிய போதுடிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து.
- இதில் கோமதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே உள்ள கீழ்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வி கூட்ரோடு விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்து பெண் ஒருவர் பலியானார். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 48 )மனைவி கோமதி (40 ).இவர்களின் உறவினர்கள் வினோதினி (34), நாராயணன் (52) காரை ஓட்டிய விக்னேஷ் (30) ஆகியோர் காரில் கடலூர் மாவட்டம் நந்தி மங்கலத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து முடித்த பிறகு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர் அப்பொழுது விருத்தாசலம் வி. கூட்ரோடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெல்டன் தனியார் பள்ளி அருகே சென்றபோது முன்னாள் சென்ற கரும்பு டிராக்டரை கார் முந்தி சென்றுள்ளது. அப்பொழுது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து. இதில் கோமதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். 4 பேர் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் இறந்த கோமதியின் உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் காயம் அடைந்த 4 பேரும் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சாயல்குடி அருகே மின்கம்பத்தில் மோதி பெண் பலியானார்.
- இது குறித்த புகாரின்பேரில் சாயல்குடி இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சாயல்குடி
சாயல்குடி அருகே உள்ள எஸ்.கீரந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் களஞ்சியம். இவரது மனைவி கலைச்செல்வி (வயது35). இவர் குளிப்பதற்காக துணிகளை வட்டையில் எடுத்துக்கொண்டு நடந்து சென்றார். அவருக்கு பின்னால் குடிநீர் கொண்டு சென்ற டிராக்டரின் டேங்கர் கலைச்செல்வி துணி கொண்டு சென்ற வட்டையில் உரசியதில் தடுமாறி எதிரில் இருந்த மின்கம்பத்தில் மோதினார்.
இதில் படுகாயமடைந்த கலைச்செல்வியை மீட்டு கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின்பேரில் சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- வீரலட்சுமி அங்குள்ள ஸ்விட்ச் போடும் போது மின் கசிவு ஏற்பட்டதில் வீரலட்சுமி தூக்கி வீசப்பட்டார்.
- மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வீரலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர்:
கடலூர் ஓட்டேரி சேர்ந்தவர் மதன் (வயது 36). இவரது மனைவி வீரலட்சுமி (35). இவர்கள் 2 பேரும் ஓட்டேரி பகுதியில் உள்ள மாட்டு பண்ணையில் கூலி வேலை செய்து வந்தனர். இன்று காலை வீரலட்சுமி அங்குள்ள ஸ்விட்ச் போடும் போது மின் கசிவு ஏற்பட்டதில் வீரலட்சுமி தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் வீரலட்சுமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் வீரலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.