என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman murder"

    • பெண் தொழிலாளி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வாலிபரிடம் வற்புறுத்தினார்.
    • வாலிபருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளதால் திருமணம் செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்தார்.

    திருப்பதி:

    மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஜில் பிகர் அலி (வயது 43). இவர் தெலுங்கானா மாநிலம், சந்திராயங் குட்டாவில் தங்கி இருந்து கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த பெண் கட்டிட தொழிலாளியான கேதாவாத் புஜ்ஜி என்பவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக இருவரும் கணவன், மனைவி போல வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் பெண் தொழிலாளி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஜில் பிகர் அலியிடம் வற்புறுத்தினார்.

    ஜில் பிகர் அலிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளதால் திருமணம் செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்தார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜில்பிகர் அலி கள்ள உறவுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக வீட்டில் இருந்த கத்தியை எடுத்து காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

    பின்னர் அவரது உடலை படுக்கையில் போட்டு தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்றார். வீட்டில் இருந்து புகை வந்ததால் அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கேதாவாத் புஜ்ஜி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜில் பிகர் அலியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • பெண்ணின் கழுத்தில் இருந்த நகைகளை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்துள்ள ஜிஞ்சேப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடப்பன் (வயது50). மாற்றுத்திறனாளியான இவரது மனைவி பாப்பம்மா (45). இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் பாப்பம்மா ஆடுகளை தினமும் காலை 7 மணிக்கு காட்டுக்குள் மேய்ச்சலுக்கு அழைத்து சென்று மதியம் 2 மணிக்கு வீடு திரும்புவார்.

    நேற்றும் வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு காட்டுக்குள் அவர் அழைத்து சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிபோன குடும்பத்தினர் காட்டுக்குள் சென்று தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    இன்றுகாலை பெரியஏரி காட்டுப்பகுதியில் பாப்பம்மா இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரை உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.

    இது குறித்து ராயக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதம்பி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    அப்போது ஆடை இல்லாமல் நிர்வாண நிலையில் பாப்பம்மா இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தது. அப்பெண்ணின் கழுத்தில் இருந்த நகைகளை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர். அதனால் மர்ம நபர்கள் நகைக்காக பெண்ணை கழுத்தை இறுக்கி கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

    இதையடுத்து அவரை உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால், கொலை நடந்து 4 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என போலீசார் கருதினர்.
    • பெண் உடலை பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள இளங்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தம்பதியர் வாடகைக்கு குடி வந்தனர்.

    அவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராம்பகதூர்-லட்சுமி என வீட்டு உரிமையாளரிடம் கூறி உள்ளனர். ஆனால் முகவரிக்கான ஆவணங்கள் எதையும் கொடுக்கவில்லை.

    இந்த நிலையில் அந்த வீட்டில் இருந்து சம்பவத்தன்று இரவு துர்நாற்றம் வீசியது. இது குறித்து போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர்.

    இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு இளம்பெண் உடல் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது. போலீசார் உடலைக் கைப்பற்றிய போது, கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    மேலும் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால், கொலை நடந்து 4 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என போலீசார் கருதினர். பெண் உடலை பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    பெண்ணுடன் தங்கி இருந்தவர் தலைமறைவாகி உள்ளார். எனவே அவர் தான் பெண்ணை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர்கள் கொடுத்த முகவரி போலியானது என தெரியவந்துள்ளது.

    எனவே தலைமறைவானவர் சிக்கினால் தான் உண்மையான முகவரி தெரிய வரும். அவர் எங்கு சென்றார்? கொலை செய்யப்பட்ட பெண் அவரது மனைவி தானா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வள்ளியம்மாள் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த சைக்கிளை அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்ற வாலிபர் தாக்கி கொண்டிருந்தார்.
    • வள்ளியம்மாள் அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேசன், வள்ளியம்மாளை அவதூறாக பேசியுள்ளார்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் அனந்தநம்பிக்குறிச்சி வடக்கூரை சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயி. இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது65). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 7-ந்தேதி வள்ளியம்மாள் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை முடித்து விட்டு மாலை வீடு திரும்பி உள்ளார்.

    அப்போது வள்ளியம்மாள் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த சைக்கிளை அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்ற வாலிபர் தாக்கி கொண்டிருந்தார். இதைப் பார்த்த வள்ளியம்மாள் அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேசன், வள்ளியம்மாளை அவதூறாக பேசியுள்ளார்.

    மேலும் கத்தியுடன் கூடிய துணிப்பை வைத்து தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த வள்ளியம்மாளை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் இன்று காலை வள்ளியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அதனை கொலை வழக்காக மாற்றிய முறப்பநாடு போலீசார் கணேசனை கைது செய்தனர்.

    • கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகராறில் பாண்டியம்மாள் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
    • பாண்டியம்மாளின் கள்ளக்காதலன் செல்வம் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி பாண்டியம்மாள் (வயது 43). இவர் மேல அனுப்பானடி தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள மாவு மில்லில் பணியாற்றி வந்தார்.

    அப்போது இவருக்கும், அங்கு வேலை பார்த்த சிந்தாமணி கங்காநகரை சேர்ந்த செல்வம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பாண்டியம்மாள், செல்வம் வீட்டுக்கு சென்றுள்ளார். இன்று காலை அவர் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். பாண்டியம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தது குறித்து கீரைத்துறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாண்டியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாண்டியம்மாளை கொலை செய்தது யார்? என்பது உடனடியாக தெரியவில்லை.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாண்டியம்மாளின் கள்ளக்காதலன் செல்வம் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கடந்த 11-ந்தேதி இரவு செல்வத்திடம் வாங்கிய பணத்தை கொடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு, பாண்டியம்மாள் தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார்.
    • நள்ளிரவு ஆகியும் பாண்டியம்மாள் வீட்டுக்கு திரும்பி வராததால் மகன் கண்ணன் அவரை தேடி செல்வத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    மதுரை:

    மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர் அண்ணாமலையார் வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா. இவரது மனைவி பாண்டியம்மாள் (43). இவர்களுக்கு கண்ணன் (27) என்ற மகன் உள்ளார். பாண்டியம்மாள் மேலஅனுப்பானடி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள மாவு மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    அப்போது அவருக்கும், அதே மில்லில் வேலை பார்த்த அனுப்பானடி பூம்புகார் நகரை சேர்ந்த செல்வம் (57) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த 11-ந்தேதி இரவு செல்வத்திடம் வாங்கிய பணத்தை கொடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு, பாண்டியம்மாள் தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். நள்ளிரவு ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வராததால் மகன் கண்ணன் அவரை தேடி செல்வத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது அவரது வீடு உள்பக்கமாக பூட்டி கிடந்துள்ளது. வீட்டினுள் பார்த்தபோது பாண்டியம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கீரைத்துறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த பாண்டியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் பிணமாக கிடந்த வீட்டில் வசித்து வந்த செல்வத்தை காணவில்லை.

    அவர் தான் பாண்டியம்மாளை கொன்றுவிட்டு தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் ஆகியோரின் உத்தரவின்பேரில் தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தலைமறைவாகிய செல்வத்தை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் பாண்டியம்மாளை கொன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    பாண்டியம்மாளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும், அது தொடர்பாக கேட்டபோது தங்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும், அதில் ஆத்திரம் அடைந்து கத்தியால் கழுத்தை அறுத்து அவரை கொன்று விட்டதாகவும் செல்வம் கூறியிருக்கிறார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு உடுமலை அருகே மாடுகளை மேய்க்க சென்ற பெண் கொலை செய்யப்பட்டார்.
    • மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை புக்குளம் சாலை பஸ் நிறுத்தத்தில் இன்று காலை 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக உடுமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து உடுமலை டி.எஸ்.பி., தேன்மொழி வேல், இன்ஸ்பெக்டர் ராஜ்கண்ணா, மகளிர் இன்ஸ்பெக்டர் கவிதா, கிராம நிர்வாக அதிகாரி அருள்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பெண்ணின் தலை, கழுத்து பகுதியில் காயம் இருந்தது. இதனால் அவரை மர்மநபர்கள் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இறந்து கிடந்த பெண்ணின் பெயர் விவரம் குறித்து விசாரிக்கும் போது அவர் உடுமலை காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி தனலட்சுமி என்பது தெரியவந்தது. மனநிலை பாதிக்கப்பட்ட அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்தநிலையில் அவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு உடுமலை அருகே மாடுகளை மேய்க்க சென்ற பெண் கொலை செய்யப்பட்டார். தற்போது மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தாய் பிணமாக கிடப்பதை பார்த்ததும் சுரேஷ்குமார் கதறி அழுதார்.
    • சுரேஷ்குமாரின் அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை ஜடையம்பாளையம்புதூரை சேர்ந்தவர் முருகையன் (60). விவசாயி. இவரது மனைவி சரோஜா (55).

    இவர்களுக்கு சுரேஷ்குமார் (37) என்ற மகனும், நித்யாபிரியா (33) என்ற மகளும் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது.

    சுரேஷ்குமார் தனது மனைவி மற்றும் மகளுடன் மேட்டுப்பாளையம் பாயப்பனூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இதனால் முருகையனும், அவரது மனைவியும் தோட்டம் அருகே உள்ள வீட்டில், தனியாக வசித்து வந்தனர்.

    சுரேஷ்குமார், தோட்டத்திற்கு வந்து விட்டு, பெற்றோரை பார்த்து செல்வது வழக்கம். நேற்று வேலை காரணமாக சுரேஷ்குமார் தோட்டத்திற்கு வரவில்லை. அவரது தந்தை முருகையன் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். வீட்டில் சரோஜா மட்டும் தனியாக இருந்தார்.

    இந்த நிலையில் காலையில் வராததால் மாலையில் தனது அம்மாவை பார்க்க சுரேஷ்குமார் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

    இதனால் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கு அவரது தாய் சரோஜா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த நகைகளும் மாயமாகி இருந்தது.

    தாய் பிணமாக கிடப்பதை பார்த்ததும் சுரேஷ்குமார் கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் அங்கு ஓடி வந்தனர்.

    அவர்கள் இறந்து கிடந்த சரோஜாவின் உடலை பார்த்தனர். மேலும் சம்பவம் குறித்து சிறுமுகை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதயரேகா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, செல்வ விநாயகம், முருகதாசன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி. பாலாஜி ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்வையிட்டு ஏதாவது தடயங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்தனர். மேலும் இந்த சம்பவம் எப்போது எப்படி நடந்தது என்பது குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர்.

    மேலும் கோவையில் இருந்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று மர்மநபர் 18 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதற்கிடையே கொலை நடந்த வீட்டில் வாசல் மற்றும் அங்குள்ள தெருவில் ரத்தக்கறையாக உள்ளது. கொள்ளையன் மூதாட்டியை கொன்று நகையை எடுத்து கொண்ட பின் ரத்தக்கறையுடன் அங்கு சுற்றி திரிந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக 3 தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் சரோஜாவின் கணவர், மகன் மற்றும் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என பலரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • முத்துமாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது.
    • முத்துமாரியின் உடலில் பல்வேறு இடங்ளில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள நேருஜிநகரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது37). கூலி தொழிலாளி.

    இவருக்கும் தாளமுத்துநகரை சேர்ந்த முத்துமாரி (32) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது.

    இந்நிலையில் முத்துமாரியை உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருப்பசாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

    அப்போது முத்துமாரி தற்கொலை செய்து கொண்டதாக அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் முதற்கட்டமாக தற்கொலை வழக்குப்பதிவு செய்தனர். எனினும் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே முத்துமாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் முத்துமாரியின் உடலில் பல்வேறு இடங்ளில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கருப்பசாமியை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் முத்துமாரியை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவர் தற்கொலை செய்ததாக நாடகம் ஆடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை கொலை வழக்காக மாற்றிய போலீசார் கருப்பசாமியை கைது செய்தனர். தொடர்ந்து அவர் ஏன்? முத்துமாரியை கொலை செய்தார் என விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஆனந்தன் மாமியார் சாந்தியின் கழுத்தை நெரித்து, தலையில் தாக்கி கொலை செய்தார்.
    • ஆனந்தனின் அக்காள் மகனான 15 வயது சிறுவன் கொலைக்கு உடந்தையாக இருந்தான்.

    திருக்கழுக்குன்றம்:

    திருக்கழுக்குன்றம் அருகே, வாயலூர் கிராமம் அருகில் உள்ள தடுப்பணையில் அழுகிய நிலையில் பெண் பிணம் கிடந்தது. அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கூவத்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    இறந்து போன பெண்ணின் பெயர் சாந்தி(50) நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர். கணவரை இழந்த சாந்திக்கு மஞ்சு( 33) என்ற மகள் உள்ளார். இவரது கணவர் ஆனந்தன் (37) இவர் மரக்காணம் அருகே உள்ள புதுபாக்கம் பகுதியை சேர்ந்தவர்.

    சில மாதங்களுக்கு முன்னர் மஞ்சு மரக்காணம் -புதுபாக்கம் பகுதியை சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, ஆனந்தனை விட்டுபிரிந்து சென்று விட்டார். சாந்தி தனது மகள் மஞ்சு, ஆனந்தனுடன் வாழாத நிலையில் மாமியார் சாந்தி தனது மகள் பெயரில் உள்ள சொத்தை கேட்டு ஆனந்திடம் பலமுறை கேட்டார்.

    அதற்கு ஆனந்தன் சொத்தை கேட்டால் கொன்று விடுவேன் என மிரட்டி உள்ளார்.

    இந்த நிலையில் சாந்தி தனது உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மதுராந்தகம் சென்றார். அதனை அறிந்த மருமகன் ஆனந்தன் துக்க நிகழ்ச்சியில் மாமியார் சாந்தியிடம் ஊரில் உங்கள் பேரப்பிள்ளைகள் உங்களை பார்க்க வேண்டும் என கூறுகின்றனர்.

    ஒரு முறை வந்து உங்கள் பேரபிள்ளைகளை பார்த்து விட்டு செல்லுங்கள் என நைசாக பேசினார். பேரப்பிள்ளைகள் மீது பாசம் கொண்டு சாந்தியும் பார்க்க சென்றுள்ளார்.

    அந்த நேரத்தில் ஆனந்தன் மாமியார் சாந்தியின் கழுத்தை நெரித்து, தலையில் தாக்கி கொலை செய்தார். இதற்கு ஆனந்தனின் அக்காள் மகனான 15 வயது சிறுவன் உடந்தையாக இருந்தான். பின்னர் காரில் ஏற்றி வாயலூர் தடுப்பனை அருகே உடலை வீசி விட்டு சென்று விட்டனர். பின்னர் மறுநாள் சாந்தியின் விட்டிற்கு சென்று சாந்தி வளர்த்து வந்த ஆடு, மற்றும் மாடுகளை ஏற்றி வந்து விட்டனர்.

    நத்தேடு கிராமமக்கள் சிலர் சந்தேகப்பட்டு, கூவத்தூர் போலீசாரிடம் தெரிவித்த தகவலின் படி மருமகன் ஆனந்தன் மற்றும் அவரது சகோதரி மகன் 15 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் விசாரித்ததில் மாமியாரை கொலை செய்ததை ஆனந்தன் ஒப்புக்கொண்டார். பின்னர் ஆனந்தனை செங்கல்பட்டு சிறையிலும், சிறுவனை சீர்திருத்தப்பள்ளியிலும் போலீசார் அடைத்தனர்.

    • சொத்து பிரச்சினையில் தாயை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • கொலை குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மேலக்குயில்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பம்பையா. இவரது மனைவி சிந்தாமணி(வயது 75). இவர் தனது 2 மகன்கள் மற்றும் 3 மகள்களுடன் வசித்து வந்தார்.

    சிந்தாமணியின் 2-வது மகன் வேந்தன்(50). இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் தனது தாய் சிந்தாமணி வீட்டிலேயே வசித்து வந்தார். அவர் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் வேந்தனுக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். அவரை சிந்தாமணி கண்டித்து வந்தார். சிந்தாமணிக்கு பூர்வீக சொத்துக்கள் உள்ளது. அதனை பிரித்து தரும்படி வேந்தன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    வழக்கம்போல் நேற்று இரவும் வேந்தன் தாய் சிந்தாமணியிடம் சொத்தை பிரித்து தரும்படி கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது அவர் உனக்கு சொத்து தரமுடியாது என்று கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த வேந்தன் விறகு கட்டையை எடுத்து வந்து சிந்தாமணியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடினார். இதனைகண்ட வேந்தன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

    இதுபற்றி அறிந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் சிந்தாமணியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். இதுபற்றி நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் பதுங்கியிருந்த வேந்தனை பிடித்து கைது செய்தனர். சொத்து பிரச்சினையில் தாயை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆலங்குளம் அருகே சாலைபுதூர் பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.
    • சுமதி கள்ளத்தொடர்பை கைவிடும்படி கண்டித்ததோடு அடிக்கடி சண்டை போடுவார்.

    நெல்லை:

    ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). லாரி டிரைவர். இவருடைய மனைவி சுமதி (40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    கண்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு சுமதியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆலங்குளம் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள முத்தாரம்மன் கோவிலுக்கு சுமதி நேற்று மாலை சாமி கும்பிட வந்துள்ளார். சிறிது நேரத்தில் கணவர் கண்ணனும் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் வளாகத்தினுள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன் அருகில் கிடந்த ஊஞ்சல் கம்பியை எடுத்து சுமதியின் தலையில் பலமாக தாக்கியதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கண்ணனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் வாக்குமூலமாக கூறியதாவது:-

    நானும், எனது மனைவியும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில் எனக்கு ஆலங்குளம் அருகே சாலைபுதூர் பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த சுமதி, என்னிடம் கள்ளத்தொடர்பை கைவிடும்படி கண்டித்ததோடு, அடிக்கடி என்னிடம் சண்டை போடுவார்.

    ஆனால் நான் அதற்கு மறுத்துவிட்டேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. நேற்று மாலை என்னுடன் வீட்டில் வைத்து சண்டை போட்டுவிட்டு சுமதி கோவிலுக்கு சென்றாள். அங்கு நானும் சென்று வாக்குவாதம் செய்தேன். அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் நான் அவரை கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×