என் மலர்
நீங்கள் தேடியது "Womens Protest"
- வீ.கே.புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட சுரண்டை அருகே உள்ள அதிசயபுரம் கிராமத்தில் மது கடை திறக்க இருப்பதாகவும்,நேற்று இரவு கடைக்கு மது பாட்டில் வருவதாகவும் தகவல் வந்ததாக கூறி அதிசயபுரம் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் இரவு நேரத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போலீசார் மக்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
சுரண்டை:
வீ.கே.புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட சுரண்டை அருகே உள்ள அதிசயபுரம் கிராமத்தில் மது கடை திறக்க இருப்பதாகவும்,நேற்று இரவு கடைக்கு மது பாட்டில் வருவதாகவும் தகவல் வந்ததாக கூறி அதிசயபுரம் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் இரவு நேரத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீ.கே.புதூர் போலீசார் மக்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கண்டிப்பாக மதுக்கடை திறக்கப்படாது என போலீசார் அவர்களிடம் உறுதி அளித்தனர்.
- ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார் தலைமை வகித்தார்.
- ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
புதுச்சேரி:
மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து புதுவை மாநில தி.மு.க. மகளிரணி சார்பில் சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார் தலைமை வகித்தார்.
எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், பொதுக்குழு உறுப்பி னர்கள் அருட்செல்வி, அமுதாகுமார், நர்கீஸ், மாநில மகளிர் அணி நிர்வாகிகள் காயத்ரி, புஷ்பலதா, ஜான்சிராணி, அல்போன்சா, சந்திரகலா, சூர்யா, ரமா, சுமித்ரா, தனலட்சுமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தை மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதில் மாநில துணை அமைப்பாளர்கள் குமார், தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சண்.குமரவேல், லோகை யன், ஆறுமுகம், காந்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சோமசுந்தரம், செல்வநாதன், தர்மராஜன், சக்திவேல், தங்கவேலு, கோபால், கார்த்திகேயன், வேலவன், சண்முகம், கோகுல், ரவீந்திரன், செந்தில்வேலன், இளம்ப ரிதி, பழநி, மு. பிரபாகரன், செந்தில்கு மார், மாறன், கோபாலகிருஷ்ணன், தொகுதி செயலாளர்கள் திராவிடமணி, சக்திவேல், சீத்தாராமன், பாண்டு அரிகிருஷ்ணன், நடராஜன், சவுரிராஜன், தியாகராஜன், சிவக்குமார், ஆறுமுகம், வடிவேல், மோகன், ரவிச்சந்திரன், சக்திவேல், ராஜாராமன், பார்த்திபன், இளஞ்செழியபாண்டியன், கலிய. கார்த்திகேயன், ராதா கிருஷ்ணன், கலைவாணன், அசோக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- நகராட்சி அலுவலகம் முன்பு காலிக் குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- பெண்கள் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பழனி:
பழனி நகராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இன்று இப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் பழனி நகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.
தொடர்ந்து அதிகாரிகள் யாரும் இல்லாததால் நகராட்சி அலுவலகம் முன்பு காலிக் குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலைமறியல் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி டவுன் போலீசார் பெண்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது கடந்த 2 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில்லை என்றும் நிலத்தடி நீர் குழாயும் பழுதடைந்து சரிசெய்யப்படவில்லை என்றும் இது குறித்து பலமுறை வார்டு கவுன்சிலர் மற்றும் நகராட்சி அதிகாரி களிடம் முறையிட்டும் நடவடிக்கையும் எடுக்காத தால் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து குடிநீர்குழாய் உடைப்பை சரி செய்து விநியோகம் தொடங்கியுள்ளதாகவும், இன்று மாலை 5வதுவார்டு பகுதிக்கு குடிநீர் வரும் என தெரிவித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பெண்கள் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- தண்ணீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
- வீடுகள் முன்பு தேங்கிய தண்ணீரை அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பலத்த மழை இல்லாவிட்டாலும் விட்டு விட்டு பெய்து வருவதால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி வருகிறது.
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 17-வது வார்டு ஹரே ராம் நகர் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து தேங்கி நிற்கிறது. கடந்த ஒரு மாதத்துக்கு மேல் வீடுகள் முன்பு தேங்கி நிற்கும் இந்த தண்ணீரால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது. தற்போது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்த தண்ணீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் வீடுகள் முன்பு தேங்கிய தண்ணீரை அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அவ்வழியே செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
இந்த நிலையில் தெருக்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி பெண்கள் அதில் நாற்று நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''பலத்த மழை பெய்யும் போது கழிவுநீருடன் மழைநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. தற்போது சிறிய மழைக்கே தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தேங்கிய தண்ணீரில் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருக்களில் தேங்கிய தண்ணீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- பொதுமக்கள் அரியலூர்-தா.பழூர் சாலையில் கீழ மைக்கேல்பட்டி கிராமத்தில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- சாலை மறியலால் அரியலூர்-தா.பழூர் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழ மைக்கேல் பட்டி தெற்கு தெரு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் குழாய், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடைந்துள்ளது. இதனால் காரைக்குறிச்சி ஊராட்சி சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் தற்காலிகமாக இணைப்பு வழங்கி தண்ணீர் வழங்கி வந்துள்ளார்.
ஆனால் இந்த இணைப்பின் மூலம் வரும் தண்ணீர் 200 குடியிருப்பிற்கு போதுமானதாக இல்லை என்றும், உடனடியாக தங்களுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என கூறி, அப்பகுதி பொதுமக்கள் அரியலூர்-தா.பழூர் சாலையில் கீழ மைக்கேல்பட்டி கிராமத்தில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த தா.பழூர் போலீசார், காரைக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுத்து போதிய அளவில் தண்ணீர் தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
இந்த சாலை மறியலால் அரியலூர்-தா.பழூர் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- பா.ஜ.க. போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளது.
- 7 பேர் கையில் தீச்சட்டி ஏந்தி கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர்.
மதுரை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஈடுபட்ட ஞானசேக ரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ள னர். இதுதொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை நிய மித்து ஐகோர்ட்டு உத்தர விட்டுள்ளது. அதேபோல் தேசிய மகளிர் ஆணையமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. குறிப்பாக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று யார் அந்த சார்? என்ற கேள்விக்கு விடை காண போராட்டங்கள் நடத்தப்படுகிறது.
மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கோஷமும் வலுத்துள்ளது. எனவே பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுத்து சட்டம்-ஒழுங்கை பாது காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பா.ஜ.க. போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டி பா.ஜ.க. மகளிரணி சார்பில் நீதி யாத்திைர பேரணி நடத்தப்படும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையை கண்டித்தும், குற்றவாளி தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதால் முழு உண்மையையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க தி.மு.க. அரசு முயற்சியை செய்வதை கண்டித்தும், தமிழ்நாடு பா.ஜ.க. மகளி ரணி சார்பில் மாநில தலைவர் உமாரதி தலைமை யில் மதுரையில் இருந்து சென்னை வரை பேரணி நடைபெறும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து பேரணிக்கு அனுமதி கேட்டு மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் திலகர் திடல் போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. ஆனால் மாநகர காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இருந்தபோதிலும் தடையை மீறி பேரணி நடைபெறும் என்று சென்னையில் மகளிரணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதன்படி மதுரை சிம்மக்கல் பகுதியில் இருந்து இன்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது. முன்னதாக அங்குள்ள செல்லத்தம்மன் கோவிலில் மதுரை மாவட்ட பா.ஜ.க. மகளிரணி தலைவி ஓம்சக்தி தனலட்சுமி தலைமையில் மகளிரணியை சேர்ந்த 7 பேர் கையில் தீச்சட்டி ஏந்தி கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர்.

மேலும் கண்ணகி நீதி கேட்டு போராடியபோது அம்மனுக்கு மிளகாய் வற்றல் அரைத்து பூசிய நிகழ்வை எடுத்துரைக்கும் வகையில் மகளிர் அணியினர் மிளகாய் வற்றல் அரைத்தனர். அதேபோல் நிர்வாகிகள் கண்ணகி நீதி கேட்டு போராடியை நினைவூட்டும் வகையில் கையில் சிலம்பு ஏந்தி வந்தனர்.

தொடர்ந்து டிராக்டரில் தொடங்கிய பேரணிக்கு மாநில மகளிரணி தலைவர் உமாரதி ராஜன் தலைமை தாங்கினார். பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு பேரணியை தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்க ணக்கான மகளிரணி நிர்வா கிகள் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக பேரணி தொடங்குவதாக அறி விக்கப்பட்ட சிம்மக்கல் செல்லத்தம்மன் கோவில் பகுதியில் தடுப்புகள் போடப்பட்டு ஏராளமான பெண் போலீசார் குவிக்கப்பட்டனர்.
- மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும். அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பெண்கள் தெரிவித்தனர்.
திருத்தணி:
திருத்தணி அருகே உள்ள காசிநாதபுரம் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடை, குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும். அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பெண்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருத்தணி தாசில்தார் வெண்ணிலா தெரிவித்தார். மேலும் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அனுமதி வந்தவுடன் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதாகவும், அதுவரை மதுக்கடையை மூடவும் உத்தவிட்டார்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பருவமழை கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சனை விசுவரூபம் எடுத்துள்ளது.
ஏரி-குளங்களில் நீர் மட்டம் குறைந்ததால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலும் தண்ணீர் பிரச்சனை அதிகரித்து வருகிறது. தினந்தோறும் பல்வேறு இடங்களில் பொது மக்கள் குடிநீர் கேட்டு மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருத்தணி பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் கேட்டு தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
திருத்தணியை அடுத்த கோதண்டராமபுரம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் தண்ணீர் கிடைக்காமல் கிராம மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதுபற்றி திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை குடிநீர் கேட்டு திருத்தணி - நல்லாத்தூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
கனகம்மாசத்திரம் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கிராம மக்களின் இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரியபாளையம் அருகே உள்ள மெய்யூர் ஊராட்சியில் மேட்டுக்காலனி, முஸ்லிம் நகர், புதிய காலனி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இன்று காலை பெரியபாளையம் - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மேட்டு காலனி பகுதியில் காலிகுடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். குடிநீர் பிரச்சனைக்கு இன்னும் இரண்டு நாட்களில் நிரந்தர தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் லீ பஜார் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடையை மூடக்கோரி இன்று காலை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் கையில் மதுபாட்டில்களுடன் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த மறியலால் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்டனமல்லி கிராமத்தில் கடந்த 12-ந்தேதி அரசு மதுக்கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனை அறிந்த அந்த பகுதி பெண்கள் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து மதுக்கடை திறப்பது கை விடப்பட்டது.
ஆனால் கடந்த 17-ந்தேதி அந்த மதுக்கடை திறக்கப்பட்டது. கிராம பெண்கள் கடையை திறக்க கூடாது என முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் மதுக்கடை மூடப்பட்டது.
ஆனால் சில ஆண்கள் குடியிருப்புகள் இல்லாத இடத்தில் மதுக்கடையை திறக்க வேண்டும் என்று அங்கு வந்து கோஷம் போட்டனர். தங்களது கோரிக்கையை நிறைவேற்றகோரி கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இந்த நிலையில், மதுக்கடை வேண்டாம் என்று போராட்டம் நடத்திய பெண்கள், மதுக்கடை வேண்டும் என கோரிக்கை வைத்த ஆண்கள் என இரு தரப்பினருக்கான சமாதானப்பேச்சு வார்த்தைக்கூட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது.
தாசில்தார் சுரேஷ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்துக்கு மண்டல துணை தாசில்தார் உமா சங்கரி முன்னிலை வகித்தார். இந்த பேச்சுவார்த்தையின்போது அரசாங்க விதிகளின்படி அமைக்கபட்டுள்ள மதுக்கடையை திறப்பதால் எந்த வித பிரச்சினையும் ஏற்படாது என்று தாசில்தார் தெரிவித்தார்.
இதனைக்கேட்ட பெண்கள், அந்த வழியாக பள்ளி மாணவர்களும், பெண்களும் செல்கிறார்கள். எனவே, மதுக்கடையை அந்த பகுதியை விட்டு வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என கோஷம் போட்டனர்.
இதைகேட்ட ஆண்கள் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் கூட மதுக்கடையை வைக்க முடியாவிட்டால் வேறு எங்கு வைப்பது? நாங்கள் எங்கு சென்று குடிப்பது? என கேள்வி எழுப்பினர். இரு தரப்பினர்களும் ஆளுக்கொரு பேச்சாக பேசியவாறு கோஷம் போட்டதால் சமாதானக்கூட்டத்தில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து மதுக்கடை அமைப்பது தொடர்பான சமாதானக்கூட்டத்தை தாசில்தார் ஒத்தி வைத்தார். இது தொடர்பான முடிவை பொன்னேரி கோட்டாட்சியர் எடுப்பார். அதுவரை மதுக்கடை திறக்கப்படாது எனவும் தாசில்தார் உறுதி அளித்தார். இதை தொடர்ந்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். போலீஸ் பாதுகாப்புடன் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. #tamilnews
காசிமேடு ஜீவரத்தினம் சாலையில் தனியார் சார்பில் ஆட்டோ கியாஸ் பங்க் அமைக்கப்படுகிறது.
இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த பங்க் அகற்றப்பட வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால் அந்த பங்க் நேற்று திறக்கப்பட்டது.
பங்க் அமைப்பதற்கு எதிராக ஏற்கனவே பல போராட்டங்களை நடத்தி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காசிமேடு ஜீவரத்தினம் சாலையில் போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான பொது மக்கள் பங்கேற்றனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.
இன்று 2-வது நாளாக மீண்டும் போராட்டம் நடந்தது. இதில் ஒய்.எம்.சி.ஏ. குப்பம், சி.ஜி.காலனி, விநாயகர்புரம், அமராஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
அவர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு அனுமதி அளித்த மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கியாஸ் பங்க்குக்கு எதிராகவும் கோஷமிட்டனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
கோவை இடிகரை பேரூராட்சிக்கு உட்பட்டது மணியக்காரம்பாளையம். இங்குள்ள சங்கர் நகர் 7-வது வார்டில் நேற்று டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இது அந்த பகுதி பெண்களுக்கு நேற்று தெரியவில்லை.
கூட்டம் அதிகமாக இருப்பதை அறிந்தபின்னரே அவர்களுக்கு தெரியவந்தது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு போராடி தடுத்து நிறுத்தப்பட்ட இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டதை அறிந்த பெண்கள் இன்று காலை டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பெண்கள் கூறும்போது, மேட்டுப்பாளையம்- அன்னூரை இணைக்கும் முக்கிய சாலையில் உள்ள இந்த டாஸ்மாக் கடையால் ஏற்கனவே நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டோம். பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் இந்த வழியாகத்தான் செல்லவேண்டும். எனவே உடனே டாஸ்மாக் மதுக்கடையை மூடவேண்டும் என்று கூறினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். #tamilnews