என் மலர்
நீங்கள் தேடியது "கால்பந்து"
- ஜூன் 1-ம் தேதி முதல் திருநங்கைகள் இனி பெண்கள் கால்பந்தில் பங்கேற்க முடியாது.
- இங்கிலாந்து, ஸ்காட்லாந்து நாடுகள் இந்த தடையை விதித்துள்ளன.
லண்டன்:
சமீபத்தில் இங்கிலாந்து உச்சநீதிமன்றம் ஒரு பெண்ணின் சட்ட வரையறை உயிரியல் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டது என கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்நிலையில், வரும் ஜூன் 1-ம் தேதி முதல் திருநங்கைகள் இனி பெண்கள் கால்பந்தில் பங்கேற்க முடியாது என இங்கிலாந்து கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.
இதனால் இங்கிலாந்தில் பதிவு செய்துள்ள 20-க்கும் மேற்பட்ட திருநங்கை வீராங்கனைகள் பாதிக்கப்படுவார்கள் என கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.
திருநங்கைகள் தங்கள் டெஸ்டோஸ்டெரோன் அளவு 12 மாதங்களுக்கு குறைவாக இருந்தால் பெண்கள் அணியில் விளையாட அனுமதி இருந்தது. தற்போதைய சட்ட மாற்றத்தால் இந்தக் கொள்கை திரும்பப் பெற காரணமாகியுள்ளது.
இதேபோல், ஸ்காட்லாந்து கால்பந்து சங்கமும் சமீபத்தில் அதே விதியை அறிவித்துள்ளது.
- ஆசிய கோப்பைக்கான தகுதிச் சுற்றில் இந்தியா டி பிரிவில் இடம் பிடித்துள்ளது.
- இந்தியாவுடன் மியான்மர், இந்தோனேசியா, துர்க்மெனிஸ்தான் நாடுகளும் இடம் பிடித்துள்ளன.
20 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் ஆசிய கால்பந்து தொடர் அடுத்த வரும் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்க போட்டியை நடத்தும் அணியைத் தவிர மற்ற அணிகள் அனைத்தும் தகுதிச் சுற்றில் விளையாட வேண்டும். அதன்அடிப்படையில் தகுதிச் சுற்று அடிப்படையில் 11 அணிகள் தகுதி பெறும்.
இந்த நிலையில் தகுதிச் சுற்றுக்கான பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா டி பிரிவியில் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் மியான்மர், இந்தோனேசியா, துர்க்மெனிஸ்தான் நாடுகள் இடம் பிடித்துள்ளன.
டி பிரிவு தகுதிச் சுற்றுகள் ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மியான்மரில் நடைபெறுகிறது. டி பிரிவில் உள்ள ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.
மொத்தம் 33 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் மட்டும் ஐந்து அணிகள் இடம் பிடித்துள்ளன. மற்ற பிரிவுகளில் 7 அணிகள் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணிகளும், அதன்பின் சிறந்த 3 அணிகளும் என 11 அணிகள் மற்றும் போட்டியை நடத்தும் தாய்லாந்து என 12 அணிகள் பெண்கள் ஆசிய கால்பந்து தொடரில் பங்கேற்க தகுதி பெறும்.
பெண்கள் ஆசிய கால்பந்து தொடர் அடுத்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்த தொடரில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணிகள் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக் கோப்பை தொடரில் விளையாட அனுமதி பெறும்.
- சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பகான் அணிக்கு ரூ.6 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
- 2-வது இடம் பிடித்த பெங்களூரு அணிக்கு ரூ.3 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
11வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் மற்றும் பெங்களூரு எப்.சி. அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. இறுதிப்போட்டியின் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல்களுடன் சமநிலையில் இருந்தன. இதனால் கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அப்போது மோகன் பகான் அணி ஒரு கோல் அடித்தது. இதன் மூலம் மோகன் பகான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பகான் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடித்த பெங்களூரு அணிக்கு ரூ.3 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் அணிக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா தான் கன் பகான் சூப்பர் ஜெயன்ட் அணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 13 போட்டிகளில் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துள்ளது.
- இந்த சீசனில் கோகுலம் கேரளா அணியிடம் மட்டுமே தோல்வியடைந்துள்ளது.
இந்திய பெண்கள் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மேற்கு வங்கம் மாநிலத்தில் நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் ஒடிசா எஃப்.சி.- ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஈஸ்ட் பெங்கால் அணி 1-0 என வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடித்து சாம்பியன் படத்தை உறுதி செய்துள்ளது.
67ஆவது நிமிடத்தில் சவுமியா குகுலோத் கோல் அடித்தார். இந்த கோல் வெற்றி கோலாகவும், சாம்பியன் பட்டத்தை உறுதி செய்வதற்குமான கோலாகவும் அமைந்தது.
ஆண்களுக்கான கால்பந்து தொடர் இந்தியன் லீக்காக (I-League) நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக தேசிய கால்பந்து லீக்காக நடைபெற்றது. அப்போது 2003-04-ல் ஈஸ்ட் பெங்கால் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2003-ல் ஏசியன் கிளப் சாம்பியன்ஷிப்பை வென்றது.
அதற்குப் பிறகு தற்போதுதான் 21 வருடத்திற்குப் பிறகு ஈஸ்ட் பெங்கால் அணி (ஆண்கள் மற்றும் பெண்கள்) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இந்த சீசனில் ஈஸ்ட் பெங்கால் அணி கோகுலம் கேரளா அணியைத் தவிர மற்ற அனைத்தும் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் ஒரு போட்டியில் மட்டும் விளையாட வேண்டியுள்ளது. இதில் தோற்றாலும், டிரா செய்தாலும் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றும்.
- இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐ.எம்.விஜயன் கேப்டனாக இருந்தார்.
- பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோ நடிகர் அஜித்-ன் மகன் ஆத்விக்கை சந்தித்து ஊக்கப்படுத்தினார்.
பிரேசில் லெஜண்ட்ஸ், இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிகள் இடையேயான நட்சத்திர கால்பந்து போட்டி சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐ.எம்.விஜயனும், பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கு ரொனால்டினோவும் கேப்டன்களாக இருந்தனர்.
போட்டியின் முடிவில் பிரேசில் லெஜண்ட்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியைக் காண திரண்டு வந்த கால்பந்து ரசிகர்கள் மைதானத்தில் தங்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.
பிரேசில் லெஜெண்ட்ஸ் vs இந்தியா ஆல் ஸ்டார்ஸ் கால்பந்து போட்டியை நடிகை ஷாலினி அஜித்குமார் பார்த்து ரசித்தார். பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டினோ நடிகர் அஜித்-ன் மகன் ஆத்விக்கை சந்தித்து ஊக்கப்படுத்தினார்.
- முதல் பாதி நேரத்தில் அர்ஜென்டினா 3-1 என முன்னிலைப் பெற்றிருந்தது.
- 2-வது பாதி நேர ஆட்டத்தில் அர்ஜென்டினா மேலும் ஒரு கோல் அடிக்க 4-1 என வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா- பிரேசில் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. காயம் காரணமாக அர்ஜென்டினா அணியில் மெஸ்சி இடம்பெறவில்லை.
ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் ஜூலியன் அல்வாரஸ் முதல் கோலை பதிவு செய்தார். 17-வது நிமிடத்தில் அர்ஜென்டினா மேலும் ஒரு கோல் அடித்தது. இந்த கோலை என்ஜோ பெர்னாண்டஸ் அடித்தார். 26-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் மேத்யூஸ் குன்ஹா கோல் அடித்தார். இதனால் அர்ஜென்டினா 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது.
37-வது நிமிடத்தில் அலெக்சிஸ் மெக் அலிஸ்டர் கோல் அடிக்க முதல் பாதி நேர ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-0 என முன்னிலைப் பெற்றது.
2-வது பாதி நேர ஆட்டத்திலும் அர்ஜென்டினா அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. 71-வது நிமிடத்தில் கியுலியானோ சிமியோன் கோல் அடிக்க அர்ஜென்டினா 4-1 என முன்னிலைப் பெற்றது. பின்னர் ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் அர்ஜென்டினா 4-1 என வெற்றி பெற்றது.
தென்அமெரிக்கா கண்டத்தில் உள்ள அணிகள் தகுதிச்சுற்றில் விளையாடி வருகிறது. இதன் புள்ளிகள் பட்டியலில் அர்ஜென்டினா 14 போட்டிகளில் 10-ல் வெற்றி, ஒரு டிரா, 3 தோல்வியுடன் 31 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. பிரேசில் 6 வெற்றி, 3 டிரா, 5 தோல்வியுடன் 21 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
- சிறிய காயம் காரணமாக ஓய்வு தேவைப்படுகிறது. அதனால் என்னால் விளையாட முடியாது.
- மற்ற ரசிசகர்கள் போல் அணிக்கு ஆதரவு அளிப்பதுடன், அணியை உற்சாகப்படுத்துவேன்- மெஸ்சி
உலகக் கோப்பைக்கான கால்பந்து தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அர்ஜென்டினா அடுத்த இரண்டு போட்டிகளில் உருகுவே, பிரேசில் அணிகளை சந்திக்க இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் அர்ஜென்டினா அணிக்காக மெஸ்சி விளையாட இருந்தார்.
இந்த நிலையில் "உருகுவே, பிரேசில் ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிரான முக்கிய போட்டியில் விளையாட முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. உண்மையிலேயே இரண்டு போட்டிகளிலும் விளையாட விரும்பினேன். சிறிய காயம் காரணமாக ஓய்வு தேவைப்படுகிறது. அதனால் என்னால் விளையாட முடியாது. மற்ற ரசிசகர்கள் போல் அணிக்கு ஆதரவு அளிப்பதுடன், அணியை உற்சாகப்படுத்துவேன்" என மெஸ்சி தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினா வருகிற 22-ந்தேதி உருகுவே அணியையும், 26-ந்தேதி பிரேசில் அணியையும் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டங்கள் இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு தொடங்கும்.
- பிபா விளையாட்டுக்காக விளையாட்டு சார்ந்த உடைகள் கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
- திருப்பூரில் இருந்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு 75 சதவீத ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
திருப்பூர் :
கத்தார் நாட்டில் பிபா உலகக்கோப்பை- 2022 தொடர் கடந்த 20ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 32 அணிகள் 8 வெவ்வேறு பிரிவுகளில் பங்கேற்று விளையாடி வருகின்றன. வளைகுடா நாடுகளில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெறுவது இதுவே முதல்முறை.
இதன்மூலம் கத்தார் நாட்டின் வர்த்தகம், சுற்றுலா, பொருளாதாரம் எனப் பல்வேறு விஷயங்கள் வளர்ச்சி அடையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த 2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இம்முறை இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், பிபா உலகக்கோப்பை போட்டிக்காக கத்தாருக்கு விளையாட்டு சார் உடைகளை ஏற்றுமதி செய்து திருப்பூர் உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும் வருமானம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் அது சார்ந்த சாயமிடுதல், பிரின்டிங்க், எம்ராய்டரி, நூல் மில்கள் உள்ளிட்ட உப தொழில்கள்,ஜாப் ஒர்க் நிறுவனங்களில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடி வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.
மேலும் தொழிலாளர் கள் சார்ந்து ஏராளமானோர் மறைமுக வேலை யினையும் பலர் பெற்று வருகின்றனர். திருப்பூரில் இருந்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு 75 சதவீத ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் சுமார் 35 ஆயிரம் கோடி அளவுக்கு அந்நிய செலாவணி ஈட்டித்தரும் நகராக திருப்பூர் உள்ளது.
ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிலில் சர்வதேச அளவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ள திருப்பூரில் இருந்து பிபா விளையாட்டுக்காக விளையாட்டு சார்ந்த உடைகள் கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதற்காக திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள் கொச்சின் விமான நிலையம் வாயிலாக கத்தார் தலைநகர் தோஹாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்ட விளையாட்டு சார்ந்த உடைகள் சுமார் 17 சரக்கு தொகுப்புகள் கொச்சி விமான நிலையம் வாயிலாக கத்தாருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திருப்பூரை சேர்ந்த ஜவுளி நிறுவனங்கள் நல்ல வருமானம் ஈட்டியுள்ளதாகவும் தெரிகிறது.
இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் வாயிலாக ஆர்டர்களை பெற்று ஏற்றுமதி வழி வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை கைப்பற்றுவதற்கு அரசும் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே திருப்பூர் ஜவுளித் துறையினரின் கோரிக்கையாக உள்ளது.
- பாடல்களுக்கும் கிடைக்காத சிறப்பு நம் தமிழர்கள் உருவாக்கிய இந்த பாடலுக்கு கிடைத்திருப்பது கத்தார் வாழ் தமிழர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
- தீம் பாடல் மட்டுமில்லாமல் கத்தாரில் வசிக்கும் பல்வேறு நாட்டை சேர்ந்த ரசிகர்களும் தங்கள் சார்பாக தீம் பாடல்களை வெளியிட்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சம்சூதீன்சாதிக்பாஷா தலைமையில் சாம்ஜோசப் பாடலை எழுதி இசை அமைத்து உலக அளவில் நல் வரவேற்பை பெற்றுள்ளது. மத்திய கிழக்கு நாடான கத்தார் உலகளாவிய கால் பந்து போட்டியை மிக நேர்த்தியாகவும் அனைவரும் பிரமிக்கும் அளவிலும் நடத்திக்கொண்டு வருகிறது.
உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் கத்தார் தோகாவை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.கத்தாரில் அனைத்து நாட்டின் மக்களும் வசித்துவரிக்கின்றனர், பெரும்பான்மையாக தமிழர்களும், மலையா ளிகளும் உள்ளனர். அவர்கள் கால்பந்து போட்டியை மிக விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
கால்பந்து போட்டிக்கான பீபா அங்கீகரிக்கப்பட்ட தீம் பாடல் மட்டுமில்லாமல் கத்தாரில் வசிக்கும் பல்வேறு நாட்டை சேர்ந்த ரசிகர்களும் தங்கள் சார்பாக தீம் பாடல்களை வெளியிட்டனர்.
கத்தார்-உலக கால் பந்து போட்டி க்காக கத்தார் தமிழர்கள் கலாச்சார பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குன் ஷாகிரான் என்ற ஆங்கில தீம் பாடலை கத்தார் அரசு ஆதரித்து இசைவெளிட்டு விழா நடைபெற்றது.
அனைத்து நாட்டை சேர்ந்தவர்களும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. அனைத்து பாடல்களுக்கும் கிடைக்காத சிறப்பு நம் தமிழர்கள் உருவாக்கிய இந்த பாடலுக்கு கிடைத்திருப்பது கத்தார் வாழ் தமிழர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தப்பாடலை தமிழ் மகன் அவார்ட்ஸ்-ன் நிறுவனர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த சாதிக் பாட்ஷா இயக்கி உள்ளார். சாம் ஜோசப் இசை அமைக்க, பாடகர்.ஆனந்த் அரவிந்தாக்சன் பாடலுக்கு உயிரோட்டம் கொடுத்துள்ளார்.
தமிழர்கள் உருவாக்கிய குன் ஷாகிரான் பாடலை அங்கீகரிக்கும் விதமாக கத்தார் மீடியா கார்பரேஷன் கத்தார் நாட்டின் பெருமைக்குரிய தேசிய கத்தார் தொலைக்காட்சி மற்றும் பிரெஞ்சு, ஆங்கில, ஸ்பானிஷ் மற்றும் உருது மொழி வானொலிகளிலும் ஒளிபரப்பி வருவது தமிழர்களை பெருமை படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
- மாற்றுத் திறனாளி களுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி, சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
- இதில், 1-0 என்ற கோல் கணக்கில், தேனி அணி வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றது. 2-ம் இடம் பிடித்த சேலம் அணிக்கு வெள்ளி பதக்கமும், 3-ம் இடம் பிடித்த தஞ்சாவூர் அணிக்கு வெண்கல பதக்கமும் வழங்கப்பட்டது.
சேலம்:
உலக மாற்றுத்திற னாளிகள் தினத்தை முன்னிட்டு, செரிபரல் பால்சி ஸ்போர்ட்ஸ் அசோ
சியேஷன் ஆப் தமிழ்நாடு சார்பில், மாற்றுத் திறனாளி களுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி, சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சேர்மன் உமாராணி தலைமை வகித்தார். தலைவர் பரணிதரன், செயலாளர் சித்தேஸ்வரன், பொருளாளர் காருண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சேலம், தர்மபுரி, சென்னை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், மதுரை உள்பட 15 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடின. அணிக்கு 7 பேர் அடிப்படையில் லீக் சுற்று போட்டிகளாக நடத்தப்பட்டது. இறுதிப் போட்டியில் சேலம்-தேனி அணிகள் மோதின.
இதில், 1-0 என்ற கோல் கணக்கில், தேனி அணி வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றது. 2-ம் இடம் பிடித்த சேலம் அணிக்கு வெள்ளி பதக்கமும், 3-ம் இடம் பிடித்த தஞ்சாவூர் அணிக்கு வெண்கல பதக்கமும் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு அஸ்தம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமிப்பிரியா, பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) 21.12.2022 முதல் 3.1.2023 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
- பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டணமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் 'விளையாடு இந்தியா' திட்ட நிதி உதவியில் துவக்க நிலை கால்பந்து பயிற்சிக்கான 'விளையாடு இந்தியா மாவட்ட மையம்' கன் னியாகுமரி மாவட்டம் அறிஞர் அண்ணா விளை யாட்டரங்கத்தில் அமைக் கப்பட உள்ளது.
இம்மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர் வீராங்கனைகள் சேர்க்கப் பட்டு அவர்களுக்கு தின சரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட, தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதுக்குட்பட்ட கால்பந்து வீரர்/வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். விண்ணப்பதாரர் குறைந்தது 5 ஆண்டுகளா கவும், தற்போது கன்னியா குமரி மாவட்டத்தில் வசிப் பவராகவும் இருக்க வேண் டும்.
சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவி லான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங் களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேசப் போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும். தேர்ந் தெடுக்கப்படும். பயிற்சி யாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டண மாக ரூ.18 ஆயிரம் வழங் கப்படும்.
இது நிரந்தரப்பணி அல்ல. முற்றிலும் தற்கா லிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப் பணியோ கோர இயலாது. இதற்குரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) 21.12.2022 முதல் 3.1.2023 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். பிற வழிகளில் வரும் விண் ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நாகர்கோ வில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும்.
உடற்தகுதி, விளை யாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகிய வற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தேர்வு தேதி மற்றும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
- இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாநில கால்பந்து போட்டி நடந்தது.
- 4-க்கு 3 என்ற கோல் கணக்கில் திருச்சி யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை பயணத்தை முன்னிட்டு மாநில அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.
இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் செங்கை.எஸ்.விக்னேசுவரன் ஏற்பாட்டில் ராஜா பள்ளி மைதானத்தில் இந்த போட்டி நடந்தது. இதில்பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 22 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
திருச்சி அணியும், சென்னை அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. பரபரப்பாக நடந்த இறுதி ஆட்டத்தில் பெனால்டி கிக்கில் 4-க்கு 3 என்ற கோல் கணக்கில் திருச்சி யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.
இதன் பரிசளிப்பு விழாவில் கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர். செல்லக்குமார், ராமநாதபுரம் ராஜா நாகேந்திர சேதுபதி ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினர். மாநில ஆராய்ச்சி குழு தலைவர் மாணிக்கவாசகம், மாவட்ட பொறுப்பு குழு தலைவர் மலேசியா பாண்டியன், மாவட்ட பொறுப்பாளர்கள், நகர் மன்ற உறுப்பினர் ராஜாராம் பாண்டியன், ரமேஷ்பாபு, தெய்வேந்திரன், கோட்டை முத்து, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வேலுச்சாமி, சோ.பா. ரங்கநாதன், ஆனந்தகுமார், ஜோதி பாலன், துல்கிப், கிருஷ்ணராஜ், வட்டார தலைவர்கள் சேதுபாண்டியன், காருகுடி சேகர், செல்லச்சாமி, அன்வர், அல்அமின், ஒன்றிய கவுன்சிலர் திருமுருகன், கபிர், வாணி செய்யது இப்ராகிம் ஆகியோர் கலந்து கொண்டனர். நகர் தலைவர் கோபி நன்றி கூறினார்.
முன்னதாக மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா படத்திற்கு டாக்டர். செல்லக்குமார் எம்.பி. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.