search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொகுசு கார் விபத்து"

    • 17 வயது சிறுவன் மதுபோதையில் ஓட்டி வந்த சொகுசு கார் மோதியதில் இரண்டு ஐ.டி. ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • இந்த விபத்தில் அந்த சிறுவனை காப்பாற்ற மறைமுக வேலைகள் நடைபெற்றன.

    மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 17 வயது சிறுவன் மதுபோதையில் ஓட்டி வந்த சொகுசு கார் மோதியதில் இரண்டு ஐ.டி. ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து வழக்கில் சிறுவன் குற்றம் சாட்டப்பட்டவர், அவர் ஜாமினில் வெளிவந்திருந்தார். இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்த விபத்தில் அந்த சிறுவனை காப்பாற்ற மறைமுக வேலைகள் நடைபெற்றன. ஆனால் பொதுமக்கள், ஊடகங்கள் கடுமையாக எதிர்த்ததன் விளைவாக அந்த சிறுவனின் ஜாமின் ரத்து செய்யப்பட்டு சிறார் முகாமில் அடைக்கப்பட்டுள்ளான். அவரது தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காவல் அதிகாரிகள் இருவர் கடமை தவறியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் அந்த சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டார். கார் டிரைவர்தான் இந்த விபத்தை ஏற்படுத்தினார் என இந்த வழக்கை திசைதிருப்ப அந்த சிறுவனின் குடும்பத்தினர் சதி செய்துள்ளனர். இது தொடர்பாக டிரைவரின் குடும்பத்தினர் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    இதனையடுத்து புனே சொகுசு கார் விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை கண்காணிப்பு இல்லத்தில் தொடர்வது சட்டவிரோதமானது என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த சிறுவனின் காவலை அவரது தந்தை வழி அத்தையிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், புனே சொகுசு கார் விபத்தில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட சிறுவனின் தந்தை மற்றும் தாத்தா இருவருக்கும் புனே நீதிமன்றம் ஜாமினில் வழங்கியுள்ளது.

    • சொகுசு கார் மோதியதில் இரண்டு ஐ.டி. ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • சிறுவனை காப்பாற்ற மறைமுக வேலைகள் நடைபெற்றன.

    மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 17 வயது சிறுவன் மதுபோதையில் ஓட்டி வந்த சொகுசு கார் மோதியதில் இரண்டு ஐ.டி. ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து வழக்கில் சிறுவன் குற்றம் சாட்டப்பட்டவர், அவர் ஜாமினில் வெளிவந்திருந்தார். இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்த விபத்தில் அந்த சிறுவனை காப்பாற்ற மறைமுக வேலைகள் நடைபெற்றன.

    ஆனால் பொதுமக்கள், ஊடகங்கள் கடுமையாக எதிர்த்ததன் விளைவாக அந்த சிறுவனின் ஜாமின் ரத்து செய்யப்பட்டு சிறார் முகாமில் அடைக்கப்பட்டுள்ளான்.

    இந்நிலையில் புனே சொகுசு கார் விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை கண்காணிப்பு இல்லத்தில் தொடர்வது சட்டவிரோதமானது என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த சிறுவனின் காவலை அவரது தந்தை வழி அத்தையிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இருந்து சேலம் நோக்கி இன்று அதிகாலை சொகுசு கார் சென்று கொண்டிருந்தது.
    • கார் முன்னால் சென்ற ஒரு கண்டெய்னர் லாரியில் உரசி தலை குப்புற கவிழ்ந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இருந்து சேலம் நோக்கி இன்று அதிகாலை சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. சேலம் எருமாபாளையம் அருகே பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே வந்தபோது, கார் முன்னால் சென்ற ஒரு கண்டெய்னர் லாரியில் உரசி தலை குப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், காருக்குள் சிக்கியவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். காரில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக லேசான சிராய்ப்புகளுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்த தகவலின் பேரில், கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலையில் கவிழ்ந்து கிடந்த காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    மேலும் போலீசாரின் விசாரணையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயா (வயது 54) என்பவர் பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    நேற்று இரவு உறவினர்களான ரவிச்சந்திரன் (55), மாணிக்கம் (36), ஹரிசங்கர் (33) மற்றும் எடப்பாடி குள்ளம்பட்டி பகுதியை சேர்ந்த முருகன் (36) ஆகியோர், விஜயாவை பாண்டிச்சேரியில் இருந்து அழைத்துக் கொண்டு சொந்த ஊருக்கு திரும்பும் போது கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. டிரைவரின் தூக்க கலக்கத்தால் நடந்த இந்த விபத்து குறித்து யாரும் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×