search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கண்டெய்னர் லாரி மீது மோதியதில் சொகுசு கார் தலைக்குப்புற கவிழ்ந்தது
    X

    கண்டெய்னர் லாரி மீது மோதியதில் சொகுசு கார் தலைக்குப்புற கவிழ்ந்தது

    • சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இருந்து சேலம் நோக்கி இன்று அதிகாலை சொகுசு கார் சென்று கொண்டிருந்தது.
    • கார் முன்னால் சென்ற ஒரு கண்டெய்னர் லாரியில் உரசி தலை குப்புற கவிழ்ந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இருந்து சேலம் நோக்கி இன்று அதிகாலை சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. சேலம் எருமாபாளையம் அருகே பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே வந்தபோது, கார் முன்னால் சென்ற ஒரு கண்டெய்னர் லாரியில் உரசி தலை குப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், காருக்குள் சிக்கியவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். காரில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக லேசான சிராய்ப்புகளுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்த தகவலின் பேரில், கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலையில் கவிழ்ந்து கிடந்த காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    மேலும் போலீசாரின் விசாரணையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயா (வயது 54) என்பவர் பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    நேற்று இரவு உறவினர்களான ரவிச்சந்திரன் (55), மாணிக்கம் (36), ஹரிசங்கர் (33) மற்றும் எடப்பாடி குள்ளம்பட்டி பகுதியை சேர்ந்த முருகன் (36) ஆகியோர், விஜயாவை பாண்டிச்சேரியில் இருந்து அழைத்துக் கொண்டு சொந்த ஊருக்கு திரும்பும் போது கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. டிரைவரின் தூக்க கலக்கத்தால் நடந்த இந்த விபத்து குறித்து யாரும் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×