சினிமா

தந்தை மரணத்தால் பட ரிலீசை தள்ளி வைத்த சந்தானம்

Published On 2016-06-15 14:24 GMT   |   Update On 2016-06-15 14:24 GMT
சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ‘தில்லுக்கு துட்டு’ படம், தந்தை மறைவால் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சந்தானம். இவர் கதாநாயகனாக நடித்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இனிமேல் இப்படித்தான்’ ஆகிய படங்கள் வெற்றி பெறவே பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது ‘தில்லுக்கு துட்டு’ என்ற படம் உருவாகியுள்ளது.

இப்படம் ஜூலை 1ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு சந்தானத்தின் தந்தை நீலமேகம் திடீரென மரணம் அடைந்தார். இதனால் சந்தானம் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதால் ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் இசை வெளியீடு மற்றும் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கும்படியும் இந்த படத்தை ரிலீஸ் செய்யும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் சந்தானம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

இதனால், ‘தில்லுக்கு துட்டு’ படம் ஜூலை 1ம் தேதி ரிலீஸ் ஆகாது என்று கூறப்படுகிறது. எனவே ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் 'தில்லுக்கு துட்டு' படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த திரையரங்குகளில் சிபிராஜ் நடித்துள்ள ‘ஜாக்சன் துரை’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

‘ஜாக்சன் துரை’ படத்தின் ரிலீஸ் உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News